Search

நெல்லிக்காய் ஜூஸ் ஏன் ஆரோக்கியத்திற்கு நல்லது.? இந்த 4 காரணங்களை தெரிஞ்சுக்கோங்க..!

 உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க அன்றாட வாழ்வில் சிறந்த உணவு முறையை பின்பற்றுகிறோம். அந்த ஆரோக்கியத்தை முழுமையான பெற பழங்கள், காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொண்டால் மட்டும் போதாது, அதனை எப்படி சாப்பிட வேண்டும் என்றும் எதனுடன் சாப்பிட வேண்டும் என்பதும் முக்கியமாக உள்ளது. அந்த வகையில் உடலுக்கு அதிக அளவிலான ஆரோக்கியத்தை தரும் ஆம்லா அர்ஜுனா ஜூஸ் எனப்படும் நெல்லிக்காய் மற்றும் மருத மரப்பட்டைகளை பயன்படுத்தி செய்யப்படும் ஜூஸ் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை என்று தான் கூற வேண்டும். இந்த ஜூஸை எவ்வாறு தயாரிப்பது என்பதை பற்றியும் அதன் நன்மைகளைப் பற்றியும் இந்த பதிவில் பார்ப்போம்.

இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்துகிறது :  நெல்லிக்காய் மற்றும் மருத மரப்பட்டைகளை பயன்படுத்தி செய்யப்படும் இந்த ஜூஸ் நமது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பல வழிகளில் உதவுகிறது. ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைப்பதில் இருந்து உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை நீக்குவது வரை பலவித நன்மைகளை செய்கிறது. இதில் உள்ள அர்ஜுன்ஜெனின், அர்ஜுனாலிக் அமிலம் மற்றும் பாலி பெனால்ஸ் ஆகியவை இதய தசைகளை வலுப்படுத்துகின்றன. இதன் மூலம் உடல் உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் அதிகரிப்பதோடு, உடலுக்கு கெடுதல் செய்யும் கொழுப்புக்களையும் குறைக்க உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: இந்த அர்ஜுன் ஆம்லா ஜூஸில் உள்ள நெல்லிக்காய்  சாறு இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை உடையது. இதில் அதிகப்படியாக உள்ள வைட்டமின் சி உடலை வலுவாக்குவதற்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்களுக்கு அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் மிகுந்த பயனுள்ளதாக உள்ளது.

செரிமானத்திற்கு உதவுகிறது: செரிமான கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும், அசிடிட்டி மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளால் அவதிப்படுபவர்களுக்கும் ஆம்லா அர்ஜுன் ஜூஸ் மிகவும் உதவியாக இருக்கும். வீட்டிலேயே இந்த ஜூஸை தயாரித்து சேமித்து வைத்து பிறகு பயன்படுத்திக் கொள்ளலாம். பாட்டில் அடைக்கப்பட்ட ஜூசை பயன்படுத்தினால் 30எம்எல் அளவில் ஒரு கிளாசில் ஊற்றிக் கொண்டு, பிறகு அதன் மீதமுள்ள முக்கால் பகுதியில் மிதமாக சூடாக்கப்பட்ட நீரை ஊற்றி வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

சரும ஆரோக்கியத்திற்கு உதவுகிறது: இந்த ஜூஸை தினசரி குடிப்பதால் நம்முடைய சருமத்தை மிகவும் பளபளப்பாகவும், தெளிவாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும் அழற்சி எதிர்ப்பு விளைவுகளினால் உண்டாகும் பாதிப்புகளை சரி செய்யவும் நெல்லிக்காய் ஜூஸ் உதவுகிறது.

ஆம்லா அர்ஜுன் ஜூஸ் முறை : தேவையான பொருட்கள்: நெல்லிக்காய் - ஒரு கப், மருத மரப்பட்டை - ஒரு துண்டு, தேன் - ஒரு டீஸ்பூன், தண்ணீர் - இரண்டு கப். செய்முறை: முதலில் நெல்லிக்காயை நன்றாக கழுவி அதனை துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனை நன்றாக அரைத்து ஒரு மஸ்லின் துணியை எடுத்து ஜூஸை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் 20 மில்லி லிட்டர் அளவிலான ஜூஸ் ஆவது வரும் வரை நீங்கள் அதனை பிழிய வேண்டும்.

பிறகு இரண்டு கப் அளவில் நீரை எடுத்து கொண்டு அடுப்பின் தீயை அதிகமாக வைத்து சூடாக்க வேண்டும். இப்போது அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள மருத மர பட்டைகளையும் சேர்த்து நீரானது பாதி அளவு குறையும் வரை கொதிக்க வைக்க வேண்டும். இப்போது அந்த நீரை எடுத்து நம் ஏற்கனவே சேகரித்து வைத்துள்ள நெல்லிக்காய் ஜூஸுடன் சேர்த்து கலக்க வேண்டும். அதனோடு தேனையும் கலந்து ஆறவிட்டபின் பருகலாம். இதனை மிதமான சூட்டுடைய நீருடன் கலந்து குடிப்பது இன்னும் அதிக நன்மைகளை கொடுக்கும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

பன்னீர் அல்லது சிக்கன்... இரண்டில் எது சிறப்பானது?

 பன்னீர் மற்றும் போன்லெஸ் சிக்கன் ஆகிய இரண்டையும் 65 செய்து அருகருகே வைத்துவிட்டு, சற்று தொலைவில் இருந்து பார்த்தால் இரண்டுக்கும் இடையே வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது. துண்டு, துண்டுகளாக வெட்டி சமைத்து விட்டால் இரண்டுக்குமான உருவ ஒற்றுமை ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆனால், பன்னீர் சைவ உணவு பிரியர்களின் விருப்பத்திற்குரிய உணவு. அதேபோல அசைவ உணவுப்  பிரியர்களின் விருப்பத்திற்குரிய தேர்வாக சிக்கன் உள்ளது.

தோற்றத்தில் ஒன்றுபோல இருந்தாலும் பன்னீர் மற்றும் சிக்கன் இடையே சுவை, மனம் உள்பட பல வகைகளில் வேறுபாடு உண்டு. பன்னீரில் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 ஃபேட்டி ஆசிட் நிறைந்துள்ளது. இதில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் தன்மை உண்டு. ஆஸ்த்துமா, இருமல், சளி போன்ற பிரச்சினை உள்ளவர்கள் பன்னீர் எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் சைவ பிரியர் என்றால் இது ஒன்றுதான் உங்களுக்கு சிறப்பான தேர்வு.

மெல்லிய இறைச்சியாக கருதப்படும் சிக்கனில் அமினோ அமிலங்கள் நிறைய இருக்கின்றன. சிக்கன் சாப்பிட்டால் நமது எலும்பு மற்றும் தசைகளை வலுவாக வைத்துக் கொள்ள முடியும். நீங்கள் அசைவ பிரியர் என்றால் பன்னீர் அல்லது சிக்கன் எது சிறப்பானது என்ற குழப்பம் உங்களுக்கு வரக் கூடும்.

புரதச்சத்து : உங்களுக்கு மிகுதியான புரதச்சத்து தேவைப்படும் பட்சத்தில் சிக்கனைத் தான் தேர்வு செய்ய வேண்டும். சிக்கன் சாப்பிடுவதன் மூலமாக எலும்புகளின் அடர்த்தி அதிகரிக்கும். அதே சமயம், பன்னீரிலும் புரதச்சத்து குறைவில்லாமல் இருக்கிறது. 100 கிராம் அளவு சிக்கனில் 31 கிராம் புரதமும், 100 கிராம் அளவு பன்னீரில் 20 கிராம் அளவு புரதமும் இருக்கிறது.

ஊட்டச்சத்துக்கள் : சிக்கனில் விட்டமின் பி12, நியசின், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை உள்ளன. பன்னீரில் கால்சியம் சத்து மிகுதியாக உள்ளது. எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் சத்து அவசியமாகும். அத்துடன் ரத்தக்கசிவு ஏற்படாமல் தடுக்கவும் கால்சியம் அவசியம். இதயத்துடிப்பை சீராக வைத்துக் கொள்ள கால்சியம் உதவுகிறது.

கலோரிகள் : உடல் எடையை குறைக்கும் முயற்சியில் கலோரி குறைவான உணவுகளை சாப்பிட்டு வருகிறீர்கள் என்றால் உங்களுக்கு சிக்கன் நல்ல தேர்வாக அமையும். 100 கிராம் அளவு சிக்கனில் 165 கலோரிகள் உள்ளன. ஆனால், 100 கிராம் அளவு பன்னீர் எடுத்துக் கொண்டால் அதில் 265 கலோரிகள் முதல் 320 கலோரிகள் வரை உள்ளன.

எது சிறப்பானது? ஃப்ரீசரில் வைத்த சிக்கனை வாங்கக் கூடாது. நீங்கள் வாங்கும் சிக்கன் அப்போது ஃபிரெஷ்ஷாக நறுக்கப்பட்டதாக இருக்க வேண்டும். மேலும் ஆண்டிபயாடிக் இல்லா சிக்கனை தேர்வு செய்ய வேண்டும். அதுவே பன்னீரை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் வாங்கி பயன்படுத்தலாம். உடனடி ருசிகர சமையலுக்கு பன்னீர் உதவியாக இருக்கும்.

எது ஆரோக்கியமானது? புரதச்சத்தை பொருத்தவரையில் இரண்டுமே நல்ல தேர்வு தான். கொழுப்பு குறைந்த உணவை தேர்வு செய்ய விரும்பினால் சிக்கனுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும். அதேசமயம், இரண்டு உணவுகளுமே உங்களுக்கு வயிறு நிரம்பிய உணர்வை தரும் மற்றும் பசியை கட்டுப்படுத்தும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

சுகர் நோயாளிகளுக்கு ஏற்றது.. நெல்லிக்காயில் இவ்வளவு ஊட்டச்சத்து இருக்கா?

 நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த, தொற்றுகளை கட்டுப்படுத்த மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது வைட்டமின் சி. இது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்க்கான நம் உடலின் அன்றாடத் தேவையை இயற்கையாக எப்படிப் பூர்த்தி செய்வது என்பது பலருக்கும் தெரிவதில்லை.

வைட்டமின் சி என்றதுமே நம் நினைவுக்கு வருவது எலுமிச்சை அல்லது ஆரஞ்சு தான். இருப்பினும் நம்முடைய இந்த பிரபலமான நம்பிக்கைக்கு மாறாக அதாவது ஆரஞ்சு அல்லது எலுமிச்சைக்கு பதிலாக நெல்லிக்காயும் கூட நம்முடைய அன்றாட வைட்டமின் சி தேவைகளை பூர்த்தி செய்கிறது. இதுபற்றி பிரபல டயட்டீஷியன் Mac Singh தன்னுடைய இன்ஸ்டாவில் கூறியிருக்கிறார். இன்ஸ்டாவில் இவர் கூறியிருப்பதாவது, ஆராய்ச்சிகளின் படி, 100 கிராம் எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு இரண்டிலும் கிட்டத்தட்ட ஒரே அளவு அதாவது 53 மிகி வைட்டமின் சி உள்ளது.

ஆனால் 100 கிராம் அளவு நெல்லிக்காயில் சுமார் 450 மிகி வைட்டமின் சி அடங்கியுள்ளது. பெண்கள் ஒரு நாளைக்கு 75 மில்லி கிராம் மற்றும் ஆண்கள் ஒரு நாளைக்கு 90 மில்லி கிராம் வைட்டமின் சி எடுத்து கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. இந்த தினசரி அளவை இயற்கையாகவே பூர்த்தி செய்ய நாள்தோறும் சிறிதளவு நெல்லிக்காய் சாப்பிட்டால் போதுமானது என்கிறார் Mac Singh. மேலும் நெல்லிக்காயில் கலோரிகள், கொழுப்பு மற்றும் சர்க்கரை உள்ளிட்டவை குறைவாக உள்ளது. நெல்லிக்காயில் காணப்படும் பிற முக்கிய வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ்களில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், கரோட்டின், வைட்டமின் பி, ஈ மற்றும் ஏ உள்ளிட்டவை அடங்கும்! என குறிப்பிட்டுள்ளார்.

8 Amazing Benefits Of Amla Juice: When Bitter Is Better - NDTV Food

இதற்கிடையே மூத்த உணவு மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் சமீனா அன்சாரி பேசுகையில், வைட்டமின் சி-யின் சிறந்த மூலமாக இருக்கிறது நெல்லிக்காய். இது உங்கள் டயட்டில் சேர்த்து கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மற்றும் பல நோய்களிலிருந்து பாதுகாக்க உதவும். ஒரு பெரிய Amla fruit-ல் 600 மிகி வைட்டமின் சி உள்ளது, இது பரிந்துரைக்கப்பட்ட தினசரி உட்கொள்ளலை விட அதிகம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, செரிமானத்தை மேம்படுத்துவது, முடி மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, ரத்த சர்க்கரை அளவை சீராக்குவது உள்ளிட்ட பல ஆரோக்கிய நன்மைகளை நெல்லி கொண்டுள்ளது.

நெல்லிக்காயின் பல ஆரோக்கிய நன்மைகளை பற்றி பகிர்ந்துள்ளார் பிரபல மருத்துவர் Rutu Dhodapkar.

  • வைட்டமின் சி நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்றுகளிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
  • நெல்லிக்காயில் கேலிக் ஆசிட், எலாஜிக் ஆசிட் மற்றும் குர்செடின் போன்ற அழற்சி எதிர்ப்பு பைட்டோ கெமிக்கல்ஸ் உள்ளன. இவை உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்க உதவுகின்றன.
  • செரிமானத்தை மேம்படுத்துவதோடு மலச்சிக்கலையும் போக்கி, குடல் இயக்கத்தை சீராக்கி ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கிறது.
  • இதிலிருக்கும் வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தி மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. ஃப்ரீ ரேடிக்கல்ஸ் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்கள் இதில் உள்ளன.
  • இதிலிருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரஸிலிருந்து கண்களை பாதுகாக்க உதவுகிறது மற்றும் வயது தொடர்பான மாகுலர் சிதைவு மற்றும் கண்புரை உள்ளிட்டவற்றை தடுக்க உதவுகிறது.

நெல்லிக்காயை டயட்டில் எப்படி சேர்ப்பது?

நெல்லிக்காயை ஜூஸ், ட்ரைட் பவுடர், சட்னி போன்ற பல வடிவங்களில் உட்கொள்ளலாம். அதே நேரம் உணவாக தயார் செய்யும் போது ஊட்டச்சத்து மதிப்புகள் குறைய கூடும் என்பதால் நெல்லிக்காயை பச்சையாக சாப்பிட Mac Singh பரிந்துரைக்கிறார். நெல்லி ஊறுகாய், ஜூஸ் உட்கொள்ளலாம் என்றாலும், அம்லா முராப்பா மற்றும் மிட்டாய்களில் கூடுதல் சர்க்கரை சேர்க்கப்படுவதால் அவை ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்றார்.

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த நெல்லி சட்னி:

நெல்லி சட்னி ஆரோக்கியமானது ஒருநாளைக்கு 2 முறை உணவில் சேர்க்கலாம். ஃபிரிட்ஜில் காற்று புகாத கொள்கலனில் சேமித்து வைத்தால் 2 நாட்களுக்கு உட்கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகள், எலும்பு அறுவை சிகிச்சை நோயாளிகள், இதய நோயாளிகள் மற்றும் நுரையீரல் தொற்று உள்ளவர்கள் கூட சாப்பிடலாம் என்கிறார் நிபுணர் Dhodapkar.

Amla Chutney | Madhura's Recipe

தேவையான பொருட்கள்:

விதை நீக்கப்பட்ட நறுக்கிய நெல்லிக்காய் - 100 கிராம்

கொத்தமல்லி - 50 கிராம்

புதினா - 50 கிராம்

உப்பு - தேவையான அளவு

மேற்காணும் அனைத்து பொருட்களையும் மிக்சியில் போட்டு மென்மையான பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும்.

நெல்லியை உட்கொள்வது பொதுவாக பாதுகாப்பானது என்றாலும், Dhodapkar-ன் கூற்றுப்படி இதை டயட்டில் சேர்க்கும் போது சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

  • பெர்ரி அல்லது பிற பழங்களுக்கு அலர்ஜி உள்ளவர்கள் நெல்லி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது அலர்ஜிக் ரியாக்ஷனை தூண்டும்.
  • ரத்தத்தை மெலிக்கும் மருந்துகள் போன்ற சில மருந்துகளுடன் தொடர்பு கொண்டு நெல்லி வினைபுரியலாம். எனவே, நீங்கள் ஏதேனும் மருந்துகளை எடுத்து கொண்டால், நெல்லியை ஒரு சப்ளிமென்ட் பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.
  • ஆம்லா சப்ளிமெண்ட்ஸ் பவுடர், காப்ஸ்யூல்ஸ் மற்றும் ஜூஸ் வடிவங்களில் கிடைக்கின்றன. சப்ளிமென்ட் லேபிளில் உள்ள அல்லது மருத்துவர் கூறும் டோஸ் வழிமுறைகளை பின்பற்றுவது முக்கியம்.
  • நெல்லிக்காய் பொதுவாக பாதுகாப்பானது என்றாலும், அதை அதிகம் எடுப்பது வயிற்றுப்போக்கு, வீக்கம் மற்றும் வயிற்றுப் பிடிப்பு உள்ளிட்ட செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

சிறுநீரகத்தின் சக்தியை இரட்டிபாக்கும் ‘சில’ அற்புத மூலிகைகள்!

 சிறுநீரகம் உடலின் மிக முக்கியமான பாகங்களில் ஒன்றாகும். இது இரத்தத்தை வடிகட்டுகிறது. ஆனால் சிறுநீரகத்தை நோய் தாக்கினால், அதன் வடிகட்டும் சக்தி பலவீனமாகிறது. சிறுநீரகத்தின் வடிகட்டும் சக்தி குறைந்தாலோ அல்லது இல்லாமல் போனாலோ பல நோய்கள் தாக்க ஆரம்பிக்கின்றன. இது ஆரோக்கியமான மனிதரை கூட நோயாளியாக ஆக்குவதோடு மட்டுமல்லாமல், சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தானதாக ஆகும். மறுபுறம், நீரிழிவு நோயாளிகளுக்கு சிறுநீரக நோயின் ஆபத்து மிக அதிகமாக உள்ளது. ஆரம்பத்திலேயே இது கண்டறியப்படவில்லை சிக்கல் தான். ஏனென்றால் சிறுநீரக பாதிப்பு பிரச்சனை மூன்றாவது அல்லது கடைசி கட்டத்தை அடைந்தவுடன் தான் அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும்.

சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் 

இரத்த சோகை, சிறுநீர் கழிப்பதில் சிரமம், எரியும் உணர்வு, சிறுநீரில் இரத்தம், பலவீனம், சோர்வு, பசியின்மை, உயர் இரத்த அழுத்தம், கால் முதல் உறுப்புகள் வரை வீக்கம் ஆகியவை இதற்கான சில அறிகுறிகள் ஆகும். இது சிறுநீரக பாதிப்பை குறிக்கிறது. நல்ல வாழ்க்கை முறை, உணவு முறை மற்றும் சில மூலிகைகள் மூலம் உங்கள் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். இது மட்டுமின்றி, சில மூலிகைகளை வழக்கமான உட்கொள்ளவது, உங்கள் சிறுநீரக சக்தியை இரட்டிப்பாக்குகிறது. சிறுநீரகத்தின் வடிகட்டும் திறன் இரண்டு மடங்கு வேகமாக அதிகரிக்கிறது. இவற்றை உங்கள் சமையலறை அல்லது அருகிலுள்ள சந்தையில் எளிதாகக் காணலாம். இந்த மூலிகைகளை உட்கொள்ளும் முறை, அதிலுள்ள சத்துக்கள் மற்றும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

கிலோய்  (Giloy) 

கிலோய் அல்லது அமிழ்தவள்ளி எனும் சீந்தில் மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகைகளில் ஒன்றாகும். இது மிக எளிதாக கிடைக்கிறது. இது சிறுநீரகத்தை பாதுகாக்க வேலை செய்கிறது. கிலோய் சிறுநீரகங்களை அஃப்லாடாக்சின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆல்கலாய்டு ஃப்ரீ ரேடிக்கல்களை அழிக்கிறது. கிலோய் உட்கொள்வதால் சிறுநீரகங்கள் பாதிப்பில் இருந்து பாதுகாக்கலாம். சிறுநீரக ஆரோக்கியத்திற்கு இது மிகவும் நன்மை பயக்கும்.

திரிபலா பொடி

திரிபலா சூர்ணம், நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் என மூன்று பொருள்களையும் சேர்த்து தயாரிக்கப்படும் பொடிதான் திரிபலா சூரணம் என்றழைக்கப்படுகிறது. இது சிறுநீரகத்திற்கு மிகவும் பயனுள்ள சூர்ணம். சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க இது மிகவும் எளிதான வழியாகும். திரிபலா சிறுநீரகத்தின் திசுக்களை பலப்படுத்துகிறது. இது பிளாஸ்மா புரதம், கிரியேட்டின் ஆகியவற்றை மேம்படுத்துகிறது. இதன் மூலம் சிறுநீரகத்தின் வடிகட்டும் திறனை இரட்டிப்பாக்குகிறது.

மஞ்சள்

உணவின் சுவையை அதிகரிக்கும் மஞ்சளில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இதன் பயன்பாடு பிளாஸ்மா புரதத்தை மேம்படுத்துகிறது. டைப் 2 நீரிழிவு நோயாளிகளில், சீரம் யூரியா மற்றும் கிரியேட்டினின் அளவை சரிசெய்கிறது. இது சிறுநீரகத்தின் வேலை திறனை அதிகரிக்கிறது. 

இஞ்சி

சளி, தலைவலி  ஆகியவைற்றை  நொடியில் போக்கும் இஞ்சியை உட்கொள்வதால் சிறுநீரகத்தில் வீக்கம் மற்றும் வலி குறைகிறது. சிறுநீரகம் சரியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க, தினமும் குறிப்பிட்ட அளவு இஞ்சியை உட்கொள்ள வேண்டும்.

சீமைக் காட்டுமுள்ளங்கி (Dandelion) வேர்

சீமைக் காட்டுமுள்ளங்கி வேர் பற்றி வெகு சிலரே அறிந்திருப்பார்கள். இந்த வேர் மிக முக்கியமான மூலிகைகளில் ஒன்றாகும். இதன் டையூரிடிக் பண்புகள் சிறுநீரகத்தை சுத்தப்படுத்த உதவுகிறது. இது சிறுநீரகத்தின் வடிகட்டும் சக்தியை அதிகரிக்கிறது.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

கண்களில் எரிச்சல், வலியை குணமாக்கும் யோகா பயிற்சி

 யோகா என்பது பல கோணங்களில் உடலை சுருக்கி மனதையும் ஒருமுகப்படுத்தி செய்யும் பயிற்சி. இந்த பயிற்சியால் மனதையும் உடலையும் இணைத்து நீடித்த ஆரோக்கியத்தை பெறலாம். 

யோகாவை முறையாக பயிற்சி செய்தால் இரத்த அழுத்தம் சீராகும், மன அழுத்தம் குறையும், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புத் தன்மையை நீங்கும். அதிக நேரம் டிவி, மெபைல் போன், கம்ப்யூட்டர் பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு கண்களில் பல கோளாறுகள் வரும். 

கண்களில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் யோகாவில் தீர்வு உண்டு. வேலை பளு காரணமாக கண்களில் எரிச்சல், வலி போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கான யோகா பயிற்சியை இப்போது பார்க்கலாம்.

நிமிர்ந்து நேராக உட்கார வேண்டும். வலது கையில் கட்டை விரலைத் தவிர மற்ற விரல்களை மடக்கி, பார்வைக்கு நேராக உயர்த்தி, கட்டைவிரலைப் பார்க்க வேண்டும். நம் பார்வை, கட்டை விரலில் நிலைத்திருக்க வேண்டும். கையை மெதுவாக வலப்புறம் நகர்த்த வேண்டும். கையை நகர்த்தும்போது, விழிகள் மட்டும் கையோடு சேர்ந்து நகர வேண்டும். தலையைத் திருப்பக் கூடாது. கழுத்து, முதுகு, நேராக இருப்பது அவசியம். கட்டை விரலைத் தெளிவாகப் பார்க்கக்கூடிய தூரம் வரை மட்டுமே கையை நகர்த்தவும். சிறிது நேரம் அப்படியே வைத்திருக்கவும். பிறகு, கையை அப்படியே பழைய நிலைக்குக் கொண்டுவரவும். 
இதை, ஐந்து முறை செய்ய வேண்டும். பயிற்சி செய்யும்போது, கண்களைச் சிமிட்டக் கூடாது. இதேபோல கை பெருவிரலை இடது பக்கம் நகர்த்தி செய்ய வேண்டும். 
நேராக உட்கார்ந்து, மூக்கின் நுனியை உற்று நோக்கவும். கண்களோ, தலையோ வலிப்பது போன்று இருந்தால், கொஞ்சம் ஓய்வு எடுத்துவிட்டுத் தொடரலாம். பிறகு, கண்களை மூடி ஓய்வெடுக்கவும்.

 நிமிர்ந்து உட்கார்ந்து கண்களை 10 முதல் 20 முறை சிமிட்டவும். பிறகு, கண்களைத் திறந்து நேராகப் பார்க்கவும். இடது கண் விழியை வலது பக்கமும், வலது கண் விழியை இடது பக்கமும் கொண்டுவந்து பயிற்சி செய்யவும். அதன் பிறகு, கைகளை தேய்த்து கண்களில் வைத்துக்கொள்ளவும். மீண்டும் 10- 20 முறை கண்களைச் சிமிட்டவும்.

வீடு வாங்குவதற்கு முன்னர் சட்ட ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள்

 புதிய ஊர்களில் நிலம் அல்லது வீடு வாங்குவதற்கு முன்னர் சட்ட ரீதியாக கவனித்து அறிய வேண்டிய விஷயங்கள் குறித்து ஆவண எழுத்தர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் சட்ட ஆலோசகர்கள் தெரிவித்த தகவல்களை இங்கே காணலாம். 

* சொத்தின் உரிமையாளர் மனநிலை பாதிக்கப்பட்டவராகவோ, மைனராகவோ இருந்தால் நீதிமன்ற அனுமதியுடன் கிரய பத்திரத்தில் கார்டியன் கையெழுத்து வாங்க வேண்டும். 

* உரிமையாளர் நொடிப்பு நிலை அடைந்திருந்தால் அதிகார பூர்வமாக கோர்ட்டுஅறிவித்த சொத்து காப்பாளர் மூலம் எழுதி கொடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட சொத்து வழிபாட்டு தலங்களுடன் சம்பந்தப்பட்டிருந்தால் தக்க நிர்வாக குழுவிடம் அனுமதி பெற வேண்டும்.

* சொத்துக்களுக்கான விற்பனை உள்ளிட்ட பரிவர்த்தனை பத்திரங்களை எழுத அரசு உரிமம் உள்ள ஆவண எழுத்தர்களை அணுக வேண்டும். காரணம், சொத்துக்களுக்கான பத்திரங்களை எழுதுபவர் ஒரு வகையில் ஆவணத்திற்கான சாட்சி போன்றவர். 

* கூட்டு பங்கு நிறுவனத்தின் சொத்து என்றால் சொத்தை விற்க அனுமதி பெற்ற அனைத்து பங்குதாரர்களின் சம்மதம் அவசியம். மேலும், கம்பெனி சட்டப்படி கம்பெனி நிர்வாக குழு இயற்றிய தீர்மானப்படி சொத்து விற்கப்பட அனுமதி மற்றும் கையெழுத்து போட வரும் நபருக்கு தீர்மானம் மூலம் அதிகாரம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். 

* இந்தியாவை விட்டு வெளியேறியவர் மற்றும் குடிபெயர்ந்தவர் சொத்து என அறிவிக்கப்பட்டு இருந்தால், அரசு பாதுகாப்பாளர் மட்டுமே சொத்தை விற்க உரிமை பெற்றவர் ஆவார். மேலும், வாரிசு இல்லாமல் அரசால் கையகப்படுத்தப்பட்ட சொத்தை மாவட்ட நிர்வாகம் மட்டுமே விற்கலாம்.

* நிலம் அல்லது கட்டமைப்பில் பல காலம் குத்தகைதாரராக இருப்பவருக்கு சொத்தை வாங்கி கொள்ளும் உரிமை உண்டு. அதனால், சொத்தை விற்கும்போது குத்தகைதாரர் ஒப்புதல் வேண்டும். 

* சொத்தை எழுதி கொடுப்பவரின் பெயரும், இன்சியலும், அவரது அடையாள அட்டை, பட்டா, மின் இணைப்பு, தாய் பத்திரம் மற்றும் இதர ஆவணங்களில் உள்ளது போலவே பத்திரத்தில் உள்ளதா என்று பார்க்க வேண்டும். 

* சொத்துக்கான தாய்ப்பத்திரம் இல்லாதபோது சொத்தை எழுதிக் கொடுப்பவர்களால் காவல் நிலையத்தில் பத்திரம் காணாமல் போனதற்கான சான்றிதழ் பெறப்பட்டிருக்க வேண்டும். 

* கிரயம் எழுதி கொடுப்பவருக்கு, சொத்து எவ்வாறு கிடைத்தது என எழுதுவது மட்டும் இல்லாமல் அவருக்கு முன் கிரயம் பெற்றவருக்கு யார் மூலம் சொத்து கிடைத்தது என்பதற்கான அனைத்து லிங்க் பத்திரங்களையும் தற்போதைய கிரைய பத்திரத்தில் எழுதுவது பாதுகாப்பானது.

* கிரயம் எழுதி கொடுப்பவர், எழுதி வாங்குபவருக்கு சர்க்கார் வரி வகைகள், சொத்து சம்மந்தமான அசல் நகல் ஆவணங்கள் ஒப்படைப்பு, பின் வரும் காலங்களில் பத்திரத்தில் பிழைகள் இருப்பது, வேறு ஏதாவது பத்திரம் இந்த சொத்து பற்றி எழுதிக்கொடுப்பது ஆகியவற்றுக்கான உறுதியை அளித்திருப்பது நல்லது. 

* ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள ஆவணதாரர் முகவரி, சொத்துரிமை, சொத்து விவரங்கள் ஆகியவை ஆன்லைன் இன்டெக்ஸ் செய்யப்பட்டு, ஆவணத்தின் சுருக்க முன் வரைவில் உள்ள அனைத்து தகவல்களையும் சரி பார்த்த பின்பு பதிவுக்கு செல்லுவது மிக, மிக முக்கியம். 

* பொதுவாக பத்திரங்களை கம்ப்யூட்டர் டைப் செய்து பிரிண்டிங் செய்யும் முன்பு ஒரு டிராப்ட் மாதிரி எடுத்து அதில் பிழைகள் இல்லை என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம். பதிவு செய்த பின்பு பிழைகளை கண்டறியும் நிலையில், ஆவணங்களில் கையெழுத்திட்டவர்கள் நேரில் பத்திரப்பதிவு அலுவலகம் வந்து, பிழை திருத்தல் ஆவணங்களில் கையொப்பம் இடுவது என்பது மிகவும் சிக்கலான விஷயம் ஆகும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

வலைத்தளங்களில், அன்பை கவனமாக பகிருங்கள்..!

 

டென்மார்க்கில் உள்ள மகிழ்ச்சிக்கான ஆய்வு மையம், சமூக வலைத்தளங்களை அடிப்படையாக வைத்து ஒரு ஆய்வை நடத்தியது. அதில் சமூக ஊடகங்களில் வாழ்க்கைச் சம்பவங்கள் தொடர்பான படங்களைப் பகிர்ந்துகொள்ளும் பழக்கம் காதலர்கள், தம்பதிகளிடையே பெருகிவருவதாக கண்டறிந்துள்ளனர். இதுமட்டுமல்ல, பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்திருக்கின்றன.

 இதுபற்றிய ஆய்வு நடத்திய மார்ட்டீன் கூறுகையில்... ''சமூக வலைத்தளங்களில், தங்களது குடும்ப வாழ்க்கை பற்றியும், காதல் வாழ்க்கை பற்றியும் அதிகமாக பகிர்ந்து, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கிறோம் என்பதை வெளிகாட்டிக்கொள்ள இப்படியான படங்களை அவர்கள் பகிர்ந்துகொள்கிறார்கள்.

தங்களுடைய காதல் வாழ்க்கை, திருமண வாழ்க்கை போன்ற அந்தரங்கமான தருணங்களின்போது எடுக்கப்பட்ட படங்களை பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் பேரார்வத்துடன் பகிர்ந்துகொள்கிறார்கள். 

தங்களை மகிழ்ச்சியானவர்களாக சமூக ஊடகங்களில் காட்டிக்கொள்ளும் காதலர்களும், தம்பதிகளும் உண்மையில் மகிழ்ச்சியானவர்களாக இருக்கிறார்களா? 'இல்லை' என்றே பல உளவியல் ஆய்வுகள் சொல்கின்றன. ஏனென்றால், மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழும் காதலர்களும், தம்பதிகளும் தங்களுடைய உறவை வெளியுலகம் அங்கீகரிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை என்கின்றன ஆய்வு முடிவுகள்.

காதலர்கள் இப்படி தொடர்ந்து தங்களுடைய பரஸ்பர அன்பை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்திக்கொண்டிருப்பதற்கு முக்கியக் காரணம் தங்களுடைய உறவு வெற்றிகரமாக இருக்கிறது என்று மற்றவர்களை நம்ப வைப்பதற்குத்தான். மற்றவர்களை நம்பவைப்பதோடு மட்டுமல்லாமல் தங்களைத் தாங்களே மகிழ்ச்சியான, திருப்தியான உறவில் இருப்பதாக ஏமாற்றிக் கொள்கிறார்கள். 

மகிழ்ச்சியாக இருக்கும் காதலர்கள், தங்களுடைய உறவைப் பற்றி சமூக ஊடகங்களில் வாயே திறப்பதில்லையாம். மகிழ்ச்சியற்ற வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்தாம் வெளி உலகுக்கு தங்களை மகிழ்ச்சியானவர்களாகக் காட்டிக்கொள்கிறார்கள். குறிப்பாக சமூக ஊடகங்களில் தங்களுடைய மகிழ்ச்சியான உறவை பார்த்து மற்றவர்கள் பொறாமைப்பட வேண்டும் என்று நினைப்பவர்கள் அதிகரித்து வருகிறார்கள்'' என்று கூறினார். 

மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழும் காதலர்களும், தம்பதிகளும் தங்களுடைய உறவை வெளியுலகம் அங்கீகரிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலத்தில் வேலைவாய்ப்பு.. உடனே அப்ளை பண்ணுங்க!

 திருநெல்வேலி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் மாவட்ட வன பயிற்சிநர் (district resource person) திறன் வளர்ப்பு பயிற்சி பிரிவு (IB&CB)என்ற ஒரு தற்காலிக பணியிடத்திற்கு இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பணி முற்றிலும் தற்காலிகமானது இதன் மூலம் பணி நிரந்தரம் அல்லது வேறு சலுகைகள் முன்னுரிமை ஏதும் கோர இயலாது என்று தெரிவித்து, மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இதில் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Graduation, Master Degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கேற்ப மாதம் ஊதியம் வழங்கப்படும் . தகுதி இல்லாத மற்றும் காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.

மேலும், விவரங்களுக்கு https://tirunelveli.nic.in என்ற இணையதளத்தை பார்வையிடவும் விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ,தேவையான ஆவணங்களுடன் ஆன்லைனில் இறுதி நாளுக்குள் (10.04.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 4 கட் ஆஃப் மதிப்பெண்கள்... எந்த பதவிக்கு எவ்வளவு இருக்கும்?

 குரூப் 4ல் அடங்கிய பணிகளுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிப்பட்டுள்ள நிலையில், எந்த ரேங்க் வரை வேலை உறுதி செய்யப்படும் என்ற கேள்வி டிஎன்பிஎஸ்சி தேர்வர்களிடத்தில் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளது.

நடந்து முடிந்த குரூப் 4 தேர்வின் மூலம்,  கிராம நிர்வாக அலுவலர் (Village Administrative Officer) பணியில் 425 காலியிடங்களும், இளநிலை உதவியாளர் பணிகளில் 5,102 பணியிடகளும், வரித் தண்டலர் அடங்கிய பணிகளில் 69 பணியிடங்களும்,  பண்டக காப்பாளர் (Store keeper) பணியில் 1 இடமும், தட்டச்சர் (Typist) பணியில் 3,314 காலி இடங்களும், சுருக்கெழுத்தர் தட்டச்சர் (Steno Typist) பணியில் 1,186 காலி இடங்களும் நிரப்பப்பட உள்ளன.  முன்னதாக, கடந்த 2018 -2019 மற்றும் 2019 -2020 ஆண்டுகளுக்கு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் மொத்தம் 9,882 காலிஇடங்கள் நிரப்பப்பட்டன.

பணியிடங்கள்2018 -2020 குரூப் 4 தேர்வு (மொத்த காலியிடங்கள்  )2022 குரூப் 4 தேர்வு  (தற்போது அறிவிக்கப்பட்ட காலியிடங்கள் )
கிராம நிர்வாக அலுவலர்608425
இளநிலை உதவியாளர்48945,102
தட்டச்சர்28403,314
சுருக்கெழுத்தர் தட்டச்சர்10351,186
நில அளவையர்505 -

தமிழ்நாடு இடஒதுக்கீடு முறையின் கீழ், அறிவிக்கப்பட்ட காலியிடங்களில் 1% பழங்குடியினர் பிரிவுக்கும், 15% ஆதிதிராவிடர் பிரிவினருக்கும், 3% அருந்ததியர் பிரிவினருக்கும், 26.5% பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் (முஸ்லீம் அல்லாதோர்), 3.5% பிற்படுத்தப்பட்ட  முஸ்லிம் வகுப்பினருக்கும், 20% மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/ சீர் மரபினருக்கும் வழங்கப்படுகிறது. மீதமுள்ள 31% இடங்கள் பொது முறையின் கீழ் நிரப்பப்படுகிறது.

ஒவ்வொரு, இடஒதுக்கீடு பிரிவுகளிலும் அறிவிக்கப்பட்ட பணி இடங்களை விட இரண்டு மடங்கு பேர் மூலச் சான்றிதழ் மற்றும் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படுவர்.

கடந்தாண்டு, கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் மற்றும் நில அளவையர் என மூன்று பதவிகளையும் சேர்த்து  மொத்தம் 6,007 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இந்த 6,007 பணியிடங்களுக்கு, பொதுப் பிரிவு பட்டியலில் (Communal Rank)   2607 வரை ரேங்க் பெற்ற தேர்வர்களும், முஸ்லீம் அல்லாத  பிசி பிரிவில் முதல் 5,527 வரை ரேங்க் பெற்ற தேர்வர்களும், எம்பிசி பிரிவில் 9,057 வரை ரேங்க் பெற்ற தேர்வர்களும், பிசி முஸ்லீம் பிரிவில், 24,057 வரை ரேங்க் பெற்ற தேர்வர்களும், எஸ்சி பிரிவில் 12,992 வரை ரேங்க் பெற்ற தேர்வர்களும், எஸ்சி (அருந்ததியர்) பிரிவில் 17,393 வரை ரேங்க் பெற்ற தேர்வர்களும், பழங்குடியினர் பிரிவில் 31,927 வரை ரேங்க் பெற்ற தேர்வர்களும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர்.

இந்தாண்டு குரூப் 4 தேர்வில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் மற்றும் பண்டக காப்பாளர் என மூன்று பதவிகளையும் சேர்த்து மொத்தம்  5,596 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த மூன்று பதவிகளில், கடந்தாண்டை விட கிட்டத்தட்ட  411 பணியிடங்கள் மட்டுமே குறைவாக நிரப்பப்பட உள்ளன. எனவே, தற்போது கட் ஆஃப் சற்று அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், பல்வேறு காரணிகளை கருத்தில் கொண்டு பார்த்தால், கடந்தாண்டை போலவே இந்தாண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தட்டச்சர் பணியிடங்கள் கட் ஆஃப் :

கடந்தாண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வில் மொத்தம் 2,840 தட்டச்சர் பணியிடங்கள் நிரப்பப்பட்டது. தற்போது, 3,314 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு தட்டச்சர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு, பொதுப் பிரிவு பட்டியலில் (Communal Rank)  1,251 வரை ரேங்க் பெற்ற தேர்வர்களும், முஸ்லீம் அல்லாத  பிசி பிரிவில் முதல் 4,499 வரை ரேங்க் பெற்ற தேர்வர்களும், எம்பிசி பிரிவில் 4,130 வரை ரேங்க் பெற்ற தேர்வர்களும், பிசி முஸ்லீம் பிரிவில், 14,688 வரை ரேங்க் பெற்ற தேர்வர்களும், எஸ்சி பிரிவில் 6,366 வரை ரேங்க் பெற்ற தேர்வர்களும், எஸ்சி (அருந்ததியர்) பிரிவில் 10,831 வரை ரேங்க் பெற்ற தேர்வர்களும், பழங்குடியினர் பிரிவில் 15, 320வரை ரேங்க் பெற்ற தேர்வர்களும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். இந்தாண்டு, தட்டச்சர் பதவிக்கு 474 காலியிடங்கள் கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே, கடந்தாண்டை விட கட் ஆஃப் மதிப்பெண்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று, இந்தாண்டு சுருக்கெழுத்தர் தட்டச்சர் பணிக்கும்  கூடுதலாக 474 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கட் ஆஃப் மதிப்பெண்கள் சற்று கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சான்றிதழ் சரிபார்ப்பு: இன்னும் சில தினங்களில்,  எழுத்துத் தேர்வின் அடிப்படையில், இளநிலை உதவியாளர்/கிராம நிர்வாக உதவியாளர் (Junior Assistant/VAO), தட்டச்சர்(Typist) , சுருக்கெழுத்தர் (Steno Typist) ஆகிய பதவிகளுக்கு இணைய வழி சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வானவர்கள் பட்டியலை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் தனித்தனியாக வெளியிடும். இந்த தகுதி பட்டியலில் இடம்பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள், தங்கள் சான்றிதழ்களை இணைய வழியில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். உங்கள் தகுதியினை உறுதிப்படுத்தும் அனைத்து மூலச் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். இணையவழி சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின்னர், எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், மூலச்சான்றிதழ் மற்றும் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படுவர்.

தேர்வர்கள், அவ்வபோதைய நிலவரங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

நீங்கள் ஆரோக்கியமான உணவு என நினைத்து உண்ணும் இவை ஆரோக்கியமானது அல்ல.!

 இன்றைக்கு நாம் சாப்பிடும் உணவு முறைகள் தான் உடல் ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கிறது என்று சொல்ல வேண்டும். நவீன காலத்திற்கு ஏற்ப நம்முடைய வாழ்க்கை முறையை மாற்றுகிறோம் என்று, பெயர் தெரியாத உணவுகளை உட்கொள்வது, துரித உணவுகள் போன்றவற்றால் பல்வேறு உடல் நல பிரச்சனைகள் நமக்கு ஏற்படுகிறது.

எனவே தான் நம்முடைய வாழ்வில் ஆரோக்கியமான உணவுமுறைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். இதுவரை சர்க்கரை நிறைந்த தின்பண்டங்கள் மற்றும் துரித உணவுகள் தான் நம்முடைய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதை நம்மில் பலர் அறிந்திருந்தாலும், இதை விட மோசமான சில உணவுகள் உள்ளது என்றும், இதுப்போன்றவற்றை கட்டாயம் நம்முடைய வாழ்வில் தவிர்க்க வேண்டும் என்கின்றார் ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் டயட் இன்சைட் நிறுவனனருமான அமன் பூரி. ஆரோக்கியமான வாழ்விற்குத் தவிர்க்க வேண்டிய உணவுகளைப் பற்றி பார்க்கலாம்.

மார்கரின் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள் : (Margarine and Refined oils) இன்றைக்கு நாம் பயன்படுத்தும் பெரும்பாலான எண்ணெய்கள் பூஜ்ஜிய ஊட்டச்சத்துகளைக் கொண்டிருப்பதாக உள்ளது. இதனால் தேவையற்ற கொழுப்புகள் உடலில் படிந்து உடல் ஆரோக்கியத்திற்குத் தீங்காக அமைகிறது.

பாக்கெட் தின்பண்டங்கள் மற்றும் நொறுக்குத்தீனி : பிஸ்கட், குக்கீஸ், நம்கீன், தானியங்கள், மியூஸ்லி, சிப்ஸ், பேக்கரி போன்றவற்றில் பொதுவாக சுத்திகரிக்கப்பட்ட மாவு, சர்க்கரை மற்றும் எண்ணெய்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. எனவே இதை நம்முடைய அன்றாட உணவில் எடுத்துக்கொள்ளும் போது உடலில் தேவையற்ற கலோரிகள் சேர்கிறது. மற்றும் உடல் பருமனும் ஒருபுறம் அதிகரிக்கிறது.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் இறைச்சி பொருட்கள்: பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை நாம் அதிகளவில் பயன்படுத்தும் போது, பல உடல் நலப்பாதிப்புகள் நமக்கு ஏற்படுகிறது. குறிப்பாக பதப்பட்ட உணவுப்பொருள்களில் சோடியம் நைட்ரேட்டுகள் மற்றும் நைட்ரைட்கள் அதிகளவில் உள்ளதால், நாம் சாப்பிடும் போது நமக்கு சர்க்கரை நோய், தைராய்டு, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய் உள்பட நாள்பட உடல் நலப்பிரச்சனைகளை நமக்கு ஏற்படுத்துகிறது.

வெள்ளை சர்க்கரை : ஜாம், ஜெல்லி, இனிப்பு தின்பண்டங்கள் மற்றும் பேக்கரி பொருள்களில் அதிகளவு வெள்ளை சர்க்கரை சேர்க்கப்படுகிறது. இதில் எந்தவித ஊட்டச்சத்துகளும் இல்லை. எனவே இதற்கு மாற்றாக எலுமிச்சை, இளநீர், பழங்கள், அத்திப்பழங்கள், தேன், வெல்லம், திராட்சை, உலர்ந்த பாதாமி பழங்கள் போன்றவற்றை உங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்ளவும்.

மேலும் நிறைவுற்ற கொழுப்புகளை அதிகமாக உட்கொள்ளக்கூடாது மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மாவு அல்லது மைதா, சோடியம் உள்ள உணவுகளைத் தவிர்த்தல் போன்ற ஆரோக்கியம் இல்லாத உணவுகளை உங்களது உணவுமுறையில் நீங்கள் சேர்த்துக் கொள்ளக்கூடாது என எச்சரிக்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip