Search

உடலின் நச்சுக்களை வெளியேற்ற உதவும் டிடாக்ஸ் முறை.. நீங்கள் பின்பற்ற வேண்டிய டிப்ஸ்..!

 தற்போது டிடாக்ஸ் என்ற வார்த்தை பிரபலமடைந்து வருகிறது. பலர் இன்று டிடாக்ஸ் செயல்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். உடலில் உள்ள நச்சுகளை அகற்றுவது மிகவும் முக்கியமான காரியம் ஆகும். உடலில் காணப்படும் தேவையற்ற நச்சுப்பொருட்களை அகற்றும் இந்த செயல்முறை டிடாக்சிஃபிகேஷன் (Detoxification) என்று ஆங்கிலத்தில் கூறப்படுகிறது.

நொறுக்கு தீனிகள், ஃபாஸ்ட் ஃபுட் போன்றவற்றை ஆசைக்காக சாப்பிட்டு விட்டு, பின்னர் வருத்தப்படுவது பலரது வழக்கம். எனினும், இதனை எளிதில் எதிர்கொள்ள உதவும் ஒரு எளிமையான வழியே டிடாக்ஸ் ஆகும்.

டிடாக்ஸ் என்பது அவ்வளவு கடினமான காரியம் அல்ல. இந்த செயல்முறையின் போது நீங்கள் ஒரு சில பானங்களை பருக வேண்டும் மற்றும் உங்கள் வாழ்க்கை முறையில் ஒரு சில மாற்றங்களை செய்ய வேண்டும்.

உடலில் உள்ள நச்சுகளை அவ்வப்போது அகற்றினால் தான் உடலானது இயற்கையான முறையில் செயல்பட ஆரம்பிக்கும். டிடாக்சிஃபிகேஷன் என்பது ஒரு பழைமையான மற்றும் இயற்கையான செயல்முறை ஆகும். இந்த செயல்முறையின் போது உடலில் உள்ள கழிவுகள், பழைய மற்றும் இறந்த செல்கள் அனைத்தும் அகற்றப்பட்டு, உடலின் செயல்பாடானது மீட்டமைக்கப்படுகிறது.

டிடாக்சிஃபிகேஷன் செயல்முறையை மேற்கொள்ளும்போது, இரசாயனங்கள், சுத்திகரிக்கப்பட்ட உணவுகள், வெள்ளை சர்க்கரை, காபின், புகையிலை போன்றவற்றை அகற்ற வேண்டும். அதே சமயம், அதிகப்படியான தண்ணீர், நார்ச்சத்து நிறைந்த உணவுகளான பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தும் டிடாக்ஸ் செயல்முறையை எளிதாக்கும்.

இயற்கையான முறையில் உடலில் உள்ள நச்சுகளை அகற்ற உதவும் 7 டிப்ஸ்:-

அமிலத்தை உருவாக்கக்கூடிய கொழுப்பு நிறைந்த உணவுகளான பால் சார்ந்த பொருட்கள், பிரெட், பேக் செய்யப்பட்ட உணவுகள், இறைச்சி மற்றும் குறிப்பாக சுத்திகரிப்பு செய்யப்பட்ட சர்க்கரை மற்றும் பொரித்த கார்ப்போஹைட்ரேட் நிறைந்த உணவுப் பொருட்களை தவிர்க்கவும்.
காரத்தன்மை நிறைந்த உணவுகள், முழு சைவ உணவுகள் போன்றவற்றை அதிக அளவில் எடுத்துக் கொள்ளவும். இவை உடலை சுத்தப்படுத்த உதவக்கூடும்.
காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளவும். இலைக் காய்கறிகள் நச்சுகளை அகற்ற சிறந்தவை. இது இரைப்பை குடல் மற்றும் ஒட்டுமொத்த உடலையும் நச்சுகள் இல்லாமல் வைக்க உதவுகிறது.
பூண்டு, சிவப்பு நிற கிராம்பு, மற்றும் காய்கறி சாறு போன்றவையும் உடலில் உள்ள நச்சுகளை அகற்ற உதவுகின்றன. மேலும் கோதுமைப்புல் சாறு, புதினா கொத்தமல்லி சாறு, மற்றும் தக்காளி கீரை சாறு போன்றவற்றையும் நீங்கள் கருதலாம்.
உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற வியர்த்தல் என்பது ஒரு முக்கியமான செயல்முறை ஆகும். ஆகையால் நச்சுகளை நீக்குவதற்கு தேவையான வியர்த்தல் செயல்முறையைத் தொடங்க உடல் சார்ந்த செயல்பாடுகள் மற்றும் உடற்பயிற்சி போன்றவை முக்கியமானதாக கருதப்படுகிறது.
டிடாக்ஸ் பானங்கள் மற்றும் மூலிகை பானங்களை அதிக அளவில் எடுத்துக் கொள்ள ஆரம்பியுங்கள்.
மது பானங்கள் குடிப்பது மற்றும் புகைப்பிடித்தல் போன்றவற்றை கட்டுப்படுத்திக் கொள்ளவும். முடிந்த வரை அவற்றை தவிர்ப்பது நல்லது.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip


குறிப்பிட்ட நபரை அனைவருக்கும் பிடிக்க என்ன காரணம் தெரியுமா..? இந்த குணங்கள் இருப்பதுதான்..!

 மற்றவர்களுக்கு உங்கள் மீது ஒரு மரியாதை ஏற்பட்டு விட்டாலே அதன் பிறகு அவர்கள் உங்களை பார்க்கும்போதெல்லாம் ஒரு உயர்ந்த மனிதராகவும் நேர்மறை எண்ணம் கொண்டவராகவுமே பார்ப்பார்கள். மேலும் உங்களது பழக்கவழக்கங்களின் மூலம் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் சமுதாயத்தில் ஒரு முன்மாதிரியாகவும் நீங்கள் திகழ்வீர்கள்.. பெரும்பாலும் இப்படி சமுதாயத்தால் மிகவும் மதிக்கப்படும் மனிதர்கள் பலருமே பொதுவான சில உயரிய குணங்களைக் கொண்டுள்ளனர். இரக்கத்தன்மை, பொறுமை, அமைதி போன்றவை இவர்களிடம் இயற்கையாகவே காணப்படும்.

மேலும் தனக்கு மட்டும் நன்மை தரக்கூடிய விஷயங்களை செய்யாமல் தம்மை சுற்றியுள்ள அனைவருக்கும் நன்மையை தரும் வகையில் முடிவுகளை எடுப்பார்கள். இயற்கையாகவே இவர்கள் தலைமை பண்பை கொண்டவராகவும் தன்னை சுற்றி இருக்கும் நபர்களை மிக எளிதாக கட்டுப்படுத்தும் பண்பையும் கொண்டிருப்பார்கள். அந்த வகையில் இது போன்ற மதிப்பு மிக்க மனிதர்களிடம் பொதுவாக காணப்படும் சில பகுதிகளை பற்றி போது பார்ப்போம்.

கவனித்தல் : இவர்கள் பெரும்பாலுமே அதிகம் பேசுவதை விட மற்றவர்கள் பேசுவதை காது கொடுத்து கேட்பதை விரும்புவார்கள். மனதை அலைபாய விட்டுக் கொண்டிருக்காமல் நிகழ்காலத்தில் மனதை வைத்து தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை புரிந்து கவனித்துக் கொண்டிருப்பார்கள். மேலும் மற்றவர்கள் பேசும் போது குறுக்கே பேசாமல் முழுவதுமாக அவர்களை பேச விட்டு அதன் பிறகு தன்னுடைய பதிலை கூறுவார்கள்.

அனுதாபிகளாக இருப்பார்கள் : இவர்கள் பெரும்பாலுமே அனுதாபிகளாகவே இருப்பார்கள். மற்றவர்களின் கோணத்திலிருந்து அவர்களது பிரச்சினையை பார்த்து அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள். அதே சமயத்தில் இரக்க குணம் கொண்டவராகவும், மற்றவர்களை அன்போடு நடத்துவதற்கும் அதிகம் விரும்புவார்கள். இதனால்தான் இவர்களுக்கு மற்றவர்களிடம் அதிக மதிப்பும் மரியாதையும் கிடைக்கிறது.

பணிவு : இவர்கள் எப்போதுமே மிகவும் பணிவுடன் நடந்து கொள்வார்கள். வாழ்வில் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் தான் மற்றொருவர்களை விட உயர்ந்தவர் என்ற தலைகனத்தைக் கொண்டிருக்காமல், எப்போதுமே ஒரே விதமாகவே நடந்து கொள்வார்கள். மேலும் மற்றவர்களிடமிருந்தும் நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுவார்கள். தனக்கு அனைத்தும் தெரியும் என்ற எண்ணம் கொண்டிருக்காமல் தனக்கு ஏதேனும் தெரியவில்லை எனில் அதனை ஒப்புக் கொள்வார்கள்.

நம்பகத்தன்மை : இவர்களிடம் நம்பகத்தன்மை அதிகமாக இருக்கும். இவர்களை சுற்றியுள்ள நபர்கள் பலருமே இவர்களை சார்ந்து இருப்பார்கள். அந்த அளவிற்கு மற்றவரை பாதுகாப்பாகவும் உணர வைப்பதுடன் நம்பகத்தன்மை மிக்கவராக இருப்பார்கள். ஒருவருக்கு சத்தியம் செய்தால் அதனை காப்பாற்றுவதில் இவர்களுக்கு நிகர் இவர்கள்தான். மேலும் எப்போதுமே அனைவருக்கும் உதவ தயாராக இருப்பார்கள்.

மரியாதையான பேச்சு : இவர்கள் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் போதும், பேசும் போதும் எப்போதும் மரியாதையுடனே இருப்பார்கள். மிகவும் பணிவாகவும் மற்றவர்கள் விரும்பும் வகையிலும் இவர்களது பேச்சு இருக்கும். மேலும் உடன் இருப்பவரின் கருத்தை நிராகரிக்கும் போதும் கூட அவர்கள் மனம் புண்படாதபடி நிராகரிப்பார்கள்.


சென்னைக்கு அருகே குறைந்த பட்ஜெட்டில் செல்ல ஒரு அட்டகாசமான அருவி.. வெயிலை சமாளிக்க சூப்பர் ஸ்பாட்..!

சென்னையில் இருந்து 70கிமீ தொலைவில் ஆந்திர பகுதியில் அடர்ந்த காடுகள், தெளிந்த நீரோடை, அள்ளித்தெளிக்கும் நீர்வீச்சி என்று இயற்கையின் மடியில் சுகமாக உலாவர ஏற்ற இடமாக நாகலாபுரம் உள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த இடத்தில அழகிய ஆரே நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.

நாகலாபுரம் பகுதியில் மொத்தம் 3 நீர்வீழ்ச்சிகள் உள்ளன. இந்த நீர்வீழ்ச்சிகளுக்கு கடந்த 2018ஆம் ஆண்டு சுற்றுலா சென்ற சிலர் நீர்வீழ்ச்சியில் சிக்கி மரணமடைந்தனர். மக்கள் நீர்வீழ்ச்சியில் குளிக்க போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால்,  அனைத்தும் மூடப்பட்டது. அதன் பின்னர் தற்போது பாதுகாத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு  வனத்துறையினர் உதவியோடு நீர்வீழ்ச்சி கடந்த பிப்ரவரி மாதம் மீண்டும் புதுப்பொலிவுடன் திறக்கப்பட்டுள்ளது.நாள்தோறும் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் ஒரே குறை என்னவென்றால் இந்த இடத்திற்கு பொதுப் போக்குவரத்து வசதி எதுவும் இல்லை. தனியார் வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும். பைக், கார் பார்க்கிங் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு வாகனத்துக்கு ரூ.200 முதல் ரூ.300 வரை அனுமதி கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அது போக நுழைவுக்கட்டணமாக  ரூ.50  வசூலிக்கப்படுகிறது. ஆனால் காலை முதல் மாலை வரை குடும்பத்துடன் கொண்டாட ஏற்ற ஸ்பாட்டாக இது இருக்கும்.
ட்ரெக்கிங் செல்ல விரும்புபவர்களும் இந்த ஸ்பாட்டை தேர்ந்தெடுக்கலாம் ஏனென்றால் பார்க்கிங் முதல் நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுமார் 1 முதல் ஒன்றரை கிலோமீட்டர் நடந்தே பயணம் செல்ல வேண்டும்.

இந்த நாகலாபுரம் அருவியில் மொத்தம் 3 நீர்வீழ்ச்சிகள் உள்ளது. பாதுகாப்பு கருதி முதல் நீர்வீழ்ச்சிக்கு மட்டுமே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். 2 மற்றும் 3ஆவது நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக நீரில் விளையாட லைப் ஜாக்கெட்டும் வழங்கப்படுகிறது. இதற்கு ஒரு நபருக்கு ரூ.100 வசூலிக்கப்படுகிறது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

இந்த விடுமுறைக்கு ஏற்ற பட்ஜெட் ஸ்பாட்... கிருஷ்ணகிரியின் வற்றாத அங்குத்தி அருவி..!

 வெயில் காலம் வந்துவிட்டால் சின்ன பறவை முதல் மனிதர்கள் வரை எல்லாருக்கும் தண்ணீர் என்பது எப்போதும் தேவைப்படும் ஒன்றாக மாறி விடுகிறது. குடிக்கவும் குளிக்கவும் தண்ணீர் எப்போது கிடைக்கும் என்ற தேடல் இருந்து கொண்டே இருக்கும். இப்படியான நேரத்தில் ஒரு அருவியைக் கண்டாலே காகங்கள் அலறுகின்ற விசயம் உங்களுக்குத் தெரியுமா ?

ஆமாங்க, அந்த அருவிக்கு மேல காகம் பறக்கவே பயந்து நடுங்குதுன்னா பாருங்களேன். இதற்குக் காரணம் பஞ்ச பாண்டவர்களில் ஒருவர் விட்ட சாபமே என்கின்றனர் சிலர். சரி அந்த அருவி எங்க இருக்கு, என்னவென்ன மர்மங்களையெல்லாம் கொண்டுள்ளது என்று தெரிந்துகொள்வோம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்து கெடகானூர் கிராமம் உள்ளது. இங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் சென்றால் இயற்கை எழில் நிறைந்த அங்குத்தி அருவி பொங்கி வழிகிறது. வெயில் காலத்தில் பொதுவாக ஏரி, குளம், சுனை எல்லாம் வைத்தும் நேரத்தில் கூட  வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் எல்லையில் பரவியுள்ள ஜவ்வாது மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது இந்த அங்குத்தி சுனை வற்றுவதில்லை.

பூமியில் இருந்து தண்ணீர் ஊற்றெடுத்து வரும் இடத்தை தான் சுனை என்று கூறுவோம். அப்படி தண்ணீர் ஊறும்  5  நீர் நிலைகள் இங்கு உள்ளது. இங்கு பஞ்ச பாண்டவர்கள் சிறிது காலம் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இதனாலேயே ஐந்து நீர்வீழ்ச்சிக்கு பாண்டவர்களின் பெயர்களான தர்மன், அர்ச்சுனன், பீமன், நகுலன், சகாதேவன் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த 5 அருவிகளில் ஒன்றான பீமன் அருவியில்தான் பீமன் வனவாசத்தின்போது முட்டி போட்டு தண்ணீர் குடித்ததாக சொல்லப்படுகிறது.அதே போல பாண்டவர்களின் தாயான குந்தி, மோர் கடைந்த இடமும் இந்த அருவியின் அருகேயே உள்ளது என்று இங்குள்ள மக்கள் கூறுகின்றனர். பாண்டவர்களின் பாதம், அருவியின் மேல் உள்ள பாறையில் உள்ளதாகவும் சிலர் கூறுகின்றனர்.

அதுமட்டும் இல்லாமல் இங்குள்ள பாறையின் மீது ஒரு பெரிய பாம்பின் படிமம் உள்ளது.  புறநா கதைகளின் படி ஒரு நாள் பாண்டவர்கள் ஐவரும் தூங்கிக் கொண்டிருந்த போது அவர்களைக் கொல்ல பெரிய பாம்பு வந்தது. தூக்கத்தில் ஐவரும் பாம்பின் மீது புரண்டதால் பாம்பின் வடிவம் பாறையில் பதிந்துள்ளது என்று கூறுகின்றனர். இதன் உண்மை தன்மை எந்த அளவு என்று தெரியாது.

சரி முதலில் சொன்ன காகத்தின் கதைக்கு வருவோம். ஒரு முறை பாண்டவர்களில் ஒருவரான பீமன் தவத்தில் ஈடுபட்டிருந்த போது, அவரது பூணூலை காகம் ஒன்று தீண்ட முயன்றுள்ளது. தவம் கலைந்த பீமன், காக்கைக்கு சாபம் கொடுத்தார். அந்த சாபத்தின் காரணத்தினாலேயே அங்குத்தி அருவி மீது காகம் பறக்கவும், அருவி நீரை குடிக்கவும் அஞ்சுகிறது என்கிறார்கள்.

கிருஷ்ணகிரியில் இருந்து மதூர், சாமல்பட்டி, ஊத்தங்கரை வழியாக சுமார் 61 கிலோ மீட்டர் பயணித்தால் அங்குத்தி அருவியை அடையலாம். ஊத்தங்கரையில் இருந்து மாரம்பட்டி, கோவிந்தாபுரம், கெடகானூர் சென்று காட்டு வழியில் நடந்து சென்றால் அங்குத்தி அருவியை அடையலாம். அருவி மட்டும் அல்லாமல்,  இங்கே 1000 ஆண்டுகள் பழமையான ஒரு திரௌபதி அம்மன் கோவிலும் உள்ளது.

ஜவ்வாது மலையில் மூலிகை மரங்கள் இடையே ஊடுருவி வரும் இந்த நீர் நோய்களை தீர்க்கும் தன்மைகளைக் கொண்டுள்ளது. அதோடு கோடையிலும் வற்றாமல் ஓடும் இந்த அறிவிக்கும் சுனைக்கும் ஆண்டு முழுவதும் மக்கள் வந்து செல்கின்றனர். இங்குள்ள பாறைகள் மெது தண்ணீர் படந்துகொண்டே இருப்பதால் பாசம் பிடித்து இருக்கும். நடக்கும்போது கவனம் தேவை.இங்கே வரும் பார்வையாளர்களிடம் ரூ.30 நுழைவுக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் தமிழக வனத் துறையும் இந்த இடத்திற்கு ரூ.300 ஒரு நாள் பேக்கேஜ்களை அறிவித்துள்ளது. அதில் ட்ரெக்கிங், பறவைகளைப் பார்ப்பது, நீர்வீழ்ச்சியில் குளிப்பது ஆகியவை அடங்கும். அந்த பேக்கேஜைப் பெற https://www.forests.tn.gov.in/pages/view/anguthai-jonal-fals இந்த இணையத்தளத்தை பார்வையிடவும்.

கோடை விடுமுறையில் வர இறுதி சுற்றுலாவிற்கு குழந்தைகளை அழைத்துச்செல்ல ஏற்ற இடமாக இது நிச்சயம் இருக்கும். சென்னையில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த அருவிக்கு செல்ல 5 மணி நேரம் ஆகும். அதற்கு ஏற்றார்போல் உங்கள் பயண திட்டத்தை அமைத்துக்கொள்ளுங்கள்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

பார்க்கின்சன் நோய் எப்படி உருவாகிறது..? இதற்கு என்ன காரணம்..?

 பார்க்கின்சன் நோய் என்பது நமது நரம்பு அமைப்பினை பாதிக்கக்கூடிய ஒரு உடல்நலக்கோளாறு ஆகும். இதன் காரணமாக இது நரம்புகளால் கட்டுப்படுத்தப்படும் உடல் உறுப்புகளை மெதுவாக சேதப்படுத்த ஆரம்பிக்கும். இதற்கான அறிகுறிகள் ஆரம்ப கட்டத்தில் மிகக்குறைவாகவே காணப்படும். ஒரு கைகளில் மட்டும் நடுக்கத்தை ஒருவர் உணரலாம். நாளாக நாளாக உடலின் ஒட்டுமொத்த செயல்பாட்டிலும் பின்னடைவு ஏற்படுகிறது. இந்த பதிவில் பார்க்கின்சன் நோயின் அறிகுறிகள், ஆபத்துக் காரணிகள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து பார்க்கலாம்.

அறிகுறிகள்:

பார்க்கின்சன் நோய்க்கான அறிகுறிகள் ஆரம்ப காலத்தில் மிகவும் மிதமாக இருப்பதால் அவற்றை கண்டறிய முடியாமல் போகலாம். உடலின் ஒரு புறத்தில் மட்டுமே தெரிய ஆரம்பிக்கும் இந்த அறிகுறிகள் காலப்போக்கில் இருபுறமும் உணரப்படுகிறது. பார்க்கின்சன் நோய்க்கான அறிகுறிகள் பின்வருமாறு..

*நடுக்கம்: எந்த வேலையும் செய்யாமல் இருந்தாலும் கூட கைகளில் நடுக்கம் ஏற்படும். ஏதேனும் வேலை செய்யும் போது இந்த நடுக்கம் குறையலாம். கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரலை தேய்க்க வேண்டும் போன்ற உணர்வு ஏற்படும்.

*உடல் இயக்கத்தில் தோய்வு: நீங்கள் சாதாரணமாக செய்து கொண்டிருந்த வேலை கூட இப்போது கடினமாக தோன்றலாம். நடப்பது, சேரில் இருந்து எழுந்திப்பது போன்ற சிறு சிறு விஷயங்கள் கூட உங்களுக்கு சிரமத்தை அளிக்கலாம்.

*இறுக்கமான தசைகள்: தசைகளில் ஒரு வித இறுக்க உணர்வு ஏற்படும். இது வலியை உண்டாக்கும்.

*தோரணை மற்றும் உடலை பேலன்ஸ் செய்வதில் சிக்கல்:

நேரான உடல் தோரணை மாறி கூன் விழுந்த தோரணை ஒருவருக்கு ஏற்படலாம். உடலை பேலன்ஸ் செய்ய முடியாமல் கீழே விழ நேரலாம்.

*தன்னியக்க செயல்பாடுகளை செய்ய முடியாமல் போதல்:

சிமிட்டுதல், சிரிப்பது மற்றும் நடக்கும் போது கைகளை வீசுவது போன்ற செயல்பாடுகளை செய்வதில் சிக்கல் எழலாம்.

*பேசுவதில் பிரச்சினை:

ஒருவர் வழக்கத்தை விட மெதுவாக பேச ஆரம்பிக்கலாம் அல்லது பேசுவதற்கு தயங்கலாம்.

*எழுதுவதில் சிக்கல்:

பேனா பிடித்து எழுவது சிரமமாக தோன்றும். மேலும் எழுத்துக்கள் முன்பை விட சிறியதாக இருக்கும்.

மருத்துவரை எப்போது அணுக வேண்டும்?

பார்க்கின்சன் நோயுடன் தொடர்புடை ஏதேனும் அறிகுறிகள் உங்களுக்கு இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

பார்க்கின்சன் நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்:

பார்க்கின்சன் நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் பின்வரும் சில விஷயங்கள் இந்த நோயுடன் தொடர்புடையதாக இருப்பது தெரிய வந்துள்ளது.

*மரபணுக்கள்: மரபணுவில் ஏற்படும் ஒரு சில மாற்றங்கள் பார்க்கின்சன் நோய்க்கு வழிவகுக்கலாம்.

*சுற்றுச்சூழல் தூண்டுதல்கள்: ஒரு சில நச்சுகள் அல்லது சுற்றுச்சூழல் காரணிகள் பார்க்கின்சன் நோயுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

ஆபத்துக் காரணிகள்:

பார்க்கின்சன் நோயுடன் தொடர்புடைய ஒரு சில ஆபத்துக் காரணிகள் பின்வருமாறு..

*வயது: இந்த நோய் பெரும்பாலும் 60 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட நபர்களை பாதிக்கிறது. இள வயதில் பார்க்கின்சன் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகக்குறைவு.

*மரபுவழி: உங்கள் நெருங்கிய சொந்தத்திற்குள் இருக்கும் யாராவது இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருந்தால் உங்களுக்கும் இது ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் இதற்கான சாத்தியம் மிகக்குறைவு.

*பாலினம்: பெண்களைக் காட்டிலும் ஆண்கள் அதிக அளவில் பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

*நச்சுக்களிடம் வெளிப்படுவது: பூச்சி கொல்லிகள் போன்றவற்றின் வெளிப்பாடு பார்க்கின்சன் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

தடுப்புமுறை:

பார்க்கின்சன் நோய் ஏற்படுவதற்கான காரணம் இன்னும் அறியப்படாததால் இதற்கான தடுப்பு முறையும் ஒரு புதிராகவே உள்ளது. எனினும், காபி, டீ, கிரீன் டீ, கோலா போன்ற காபின் கலந்த பானங்களை குடிப்பது பார்க்கின்சன் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கும் என்று ஒரு சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆயினும் இதனை நிரூபிக்க எந்த ஒரு ஆதாரமும் இல்லை.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

அழகப்பா பல்கலைக்கழகத்தில் நேர்காணல் நடக்கப்போகுதாம்!

 Alagappa University Notification 2023-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது MSc. தமிழ்நாடு அரசு வேலையில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 05.04.2023 முதல் 11.04.2023 வரை Alagappa University Jobs அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் Karaikudi-யில் பணியமர்த்தப்படுவார்கள். 

இந்த Alagappa University Job Vacancy 2023-க்கு, நேர்காணல் (Walk-in) முறையில் விண்ணப்பதாரர்களை Alagappa University ஆட்சேர்ப்பு செய்கிறது. இந்த Alagappa University நிறுவனத்தை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் அதன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் (www.alagappauniversity.ac.in) அறிந்து கொள்ளலாம். 

நிறுவனத்தின் பெயர்அழகப்பா பல்கலைக்கழகம் – (Alagappa University)
அதிகாரப்பூர்வ இணையதளம்www.alagappauniversity.ac.in

RecruitmentAlagappa University Recruitment 2023
Alagappa University AddressAlagappa Puram, Karaikudi, Tamil Nadu 630003

ALAGAPPAUNIVERSITY.AC.IN RECRUITMENT 2023 FULL DETAILS:

பதவிProject Fellow
காலியிடங்கள்15 பணியிடங்களை வெளியிட்டுள்ளது
கல்வித்தகுதிMSc
சம்பளம்மாதாந்திர சம்பளமாக ரூ.12,000 வழங்கப்படும்
வயது வரம்புகுறிப்பிடவில்லை
பணியிடம்Jobs in Karaikudi – Tamil Nadu
தேர்வு செய்யப்படும் முறைநேர்காணல் (Walk-in)
விண்ணப்பக் கட்டணம்இல்லை
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல் (Walk-in)

ALAGAPPA UNIVERSITY RECRUITMENT 2023 PDF IMPORTANT DATES & NOTIFICATION DETAILS:


அறிவிப்பு தேதி: 05 ஏப்ரல் 2023
கடைசி தேதி: 11 ஏப்ரல் 2023
Alagappa University Recruitment 2023 Official Notification

ALAGAPPA UNIVERSITY CAREERS 2023 விண்ணப்பிக்கும் முறை என்ன?


  • அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.alagappauniversity.ac.in -க்கு செல்லவும். Alagappa University Jobs 2023 பற்றிய முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டும்.
  • மேற்கூறிய இணைப்பிலிருந்தோ (Alagappa University Recruitment 2023 Notification pdf) அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பிலிருந்தோ Alagappa University Recruitment 2023 விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, படிவத்தை நிரப்பவும்.
  • Alagappa University Vacancy 2023 பற்றிய அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும். தேவையான அனைத்து ஆவணங்களையும் (ID proof, Educational Qualification, Recent Photograph, Resume, if any Experience etc,.) பதிவேற்றவும்.
  • அழகப்பா பல்கலைக்கழக அதிகாரிகள் உங்களை தொடர்புகொள்ள சரியான மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை (Email ID and Mobile Number) விண்ணப்பத்தில் குறிப்பிடவும்.
  • தேவைப்பட்டால் Alagappa University Recruitment 2023 விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துங்கள்.
  • Alagappa University Vacancy 2023 அனைத்து தகவல்களையும் முடித்த பிறகு, விவரங்கள் சரியானதா என்று ஒரு முறை சரிபார்க்கவும். உங்கள் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

எஸ்எஸ்சி: காலி பணியிடங்களை நிரப்ப ஜூலையில் தேர்வு

 மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: எஸ்எஸ்சி-யின் ஒருங்கிணைந்த பட்டதாரிப் பணியிடங்களுக்கான முதல்கட்டத் தேர்வு ஜூலை மாதம் கணினி வழியில் நடத்தப்பட உள்ளது.

தகுதியான பட்டதாரிகள் இணையம் வழியாக மே 3 வரை விண்ணப்பிக்கலாம். உதவி ஆய்வாளர், உதவி பிரிவு அதிகாரி (ஏஎஸ்ஓ) உள்ளிட்ட பதவிகளுக்காக இத்தேர்வு நடத்தப்படுகிறது. கூடுதல் விவரங்களை ssc.nic.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

மத்திய அரசில் 1.30 லட்சம் காவலர் பணியிடங்கள்... வெளியானது முக்கிய அறிவிப்பு..!

 இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வரும் மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) கான்ஸ்டபிள் (General Duty) பதவிக்கான  ஆட்சேர்ப்பு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த ஆள்சேர்க்கை விதிமுறையின்  கீழ் 2023ல், 1.30 லட்சம் கான்ஸ்டபிள் பதவிகள் நிரப்பப்பட இருக்கின்றன. இதில் 10% இடங்கள் அக்னி வீரர்களுக்கு  ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி  வாரியத்தில் 10, +2 அல்லது சமமான தேர்வில் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும் என்று விதிமுறையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பதாரரின் வயது வரம்பு 18- 23க்குள் கீழ் இருக்க வேண்டும் என்றும், பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல்  5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்வில் பங்கேற்பவர்களின் வயது வரம்பை தீர்மானிக்கும் தேதியை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கும் என்றும், அக்னிபத் திட்டம் மூலம் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்த முதல் குழுவினருக்கு (First Batch of Ex- Agniveers)  நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல்  5 ஆண்டு வரை வயது சலுகை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கான்ஸ்டபிள் பதவிக்கு மாதம் ரூ.21,700 முதல் ரூ. 69,100 வரை  சம்பளம் கணக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துத் தேர்வு, உடற் திறன் தேர்வு (Physical Efficiency Test) மூலம் நியமன முறை இருக்கும் என்றும், முன்னாள் அக்னி வீரர்களுக்கு  உடற் திறன் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு ((ரெக்ரூட்மெண்ட் நோட்டிஸ்) விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அறிவிப்பில்,  காலியிடங்களின் முழு விவரம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை தெளிவாகக் கொடுக்கப்படும்.  

இது, இந்த ஆண்டின் மிகப்பெரிய ஆள் சேர்க்கையாக கருதப்படுகிறது. எனவே, காவலர் வேலையை கனவாக கொண்ட  இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். எனவே, அவ்வப்போதைய நிலவரங்களை தெரிந்து கொள்ள மத்திய ரிசர்வ் காவல் படை இணையதளத்தை தொடர்ந்து பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.        

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

எலும்புகளுக்கு நன்மை அளிக்கும் உணவுகள்... தீமை தரும் உணவுகள் - எவை எவை?

 Good And Bad Foods For Bones: வயது வந்தோருக்கு அவர்களின் எலும்புகளை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருக்க ஒரு நாளைக்கு குறைந்தது 1000 மி.கி கால்சியம் தேவைப்படுகிறது என ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சலி முகர்ஜி கூறினார். நம் உடலில் கால்சியம் உறிஞ்சப்படுவதற்கு மெக்னீசியம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி போன்ற பிற ஊட்டச்சத்துக்கள் தேவை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

மோசமான எலும்பு ஆரோக்கியம் ரிக்கெட்ஸ் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். மேலும், பிற்கால வாழ்க்கையில், எலும்பு முறிவு அபாயத்தை அதிகரிக்கும். ஆரோக்கியமான எலும்புகளுக்கு பால் மட்டும் தீர்வு அல்ல. நமது தினசரி உணவில் போதுமான அளவு கால்சியம் சத்தை வழங்குவதற்கு, எலும்புகளை வலுப்படுத்தும் சில உணவுகளும் தேவை. அதன் பின்வரும் பட்டியல் காணலாம்.

நம் உடலை பலப்படுத்தும் உணவுகள்:

- தினமும் 50 கிராம் கீரையுடன், 6 கேரட்களை சேர்த்து ஜூஸாக அடித்து ஒரு கிளாஸ் அருந்தவும். இதில் தோராயமாக 300 மி.கி கால்சியம் உள்ளது மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பியுள்ளது. இது சருமத்திற்கும் நன்மை பயக்கும்.
- ராஜ்மா, காபூலி சனா, கருப்பட்டி, குலீத் போன்ற முழு பருப்பு வகைகளிலும், 100 கிராம் பருப்பில் 200 முதல் 250 கிராம் வரை கால்சியம் உள்ளது.

- தினமும் 2-3 தேக்கரண்டி வெள்ளை மற்றும் கருப்பு எள் சாப்பிடுங்கள்.
- கீரை, கோஸ், ப்ரோக்கோலி போன்ற பச்சை இலை காய்கறிகளில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து இருப்பதால் எலும்புகளுக்கு மிகவும் நல்லது.
- போதுமான புரதங்களை உட்கொள்வதும் அவசியம். முட்டை, நட்ஸ் ஆகியவற்றில் புரதச்சத்து நிறைந்தவை.
- சிட்ரஸ் நிறைந்த உணவு, உங்கள் உணவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டிய மற்றொரு முக்கிய அம்சமாகும். பெர்ரி, ஆரஞ்சு திராட்சைகளில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.

எலும்புகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துபவை:

- அதிக சோடியம் உள்ள உணவுகள்
- சர்க்கரை அதிகம் உள்ள தின்பண்டங்கள்
- கார்பனேற்றப்பட்ட பானங்கள்: அவை சர்க்கரை மற்றும் காஃபின் நிறைந்தவை மற்றும் எலும்பு அடர்த்தியை அதிகரிக்கும் பாஸ்போரிக் அமிலத்தைக் கொண்டிருக்கின்றன.
- இறைச்சியின் புரதத்தை அதிகமாக உட்கொள்வதும் நல்லதல்ல.
- அதிக காஃபின் உள்ளடக்கம் அல்லது அதிகப்படியான காபி, தேநீர் குடிப்பதாலும் எலும்புகளில் இருந்து கால்சியம் இழப்பு ஏற்படலாம். 
- புகைபிடித்தல் மற்றும் புகையிலை நுகர்வு கால்சியம் குறைவதற்கு வழிவகுக்கிறது. 

எலும்புகள் முக்கியமாக கால்சியத்தால் ஆனவை மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகளை ஒருவர் தினமும் தங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம். இவை தவிர, உட்கார்ந்தே இருக்கும் வாழ்க்கை முறையும் எலும்பு அடர்த்தியை பாதிக்கும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip


இதய செயலிழப்புக்கான ஆரம்ப அறிகுறிகள்..! இந்த 5 விஷயங்களை புறக்கணிக்காதீர்கள்

 உங்கள் மோசமான வாழ்க்கை முறையால் இதய செயலிழப்பு ஏற்படுகிறது. உணவு முதல் அன்றாட பழக்கவழக்கங்கள் வரை அனைத்தும் இதய செயலிழப்புக்கான காரணமாக சுட்டிக் காட்டப்படுகின்றன. அதிகப்படியான குடிப்பழக்கம், புகைபிடித்தல், உடல் உழைப்பு இல்லாமை மற்றும் அதிகரித்த மன அழுத்தம் ஆகியவை இதய நோய்க்கு வழிவகுக்கும். எனவே நீங்கள் சரியான நேரத்தில் கவனித்துக் கொள்ள வேண்டும்.

இதய நோய் உலகம் முழுவதும் ஒரு பொது சுகாதார பிரச்சனையாக மாறி வருகிறது. சுமார் 6.4 கோடி பேர் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் வயது வந்தோரில் 1 சதவீதத்திற்கும் அதிகமானோர் இன்னும் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதய நோயால் ஏற்படும் இறப்பு விகிதம் நம் நாட்டில் மிக அதிகமாக இருப்பதாக பல ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன. நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 18 லட்சத்துக்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.

இதய செயலிழப்பு ஒரு தீவிர பிரச்சனையாக மாறி வருகிறது. இதில் இதய உறுப்புகள் பலவீனமடைகின்றன. இதயம் அதன் இயல்பான வேலையைச் செய்ய முடியாது. இதய நோய்க்கு நீண்டகாலமாக ஏதேனும் ஒரு மரபணு நோய், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், சில ஆபத்தான மருந்துகளின் பயன்பாடு, நரம்பியல் நோய்கள் போன்ற பல காரணங்கள் இருக்கலாம்.

இதய செயலிழப்பு அறிகுறிகள் நோயாளிகளுக்கு ஆரம்பத்தில் சோர்வு, மூச்சுத் திணறல், மார்பு வலி, வயிற்று அசௌகரியம் மற்றும் வியர்வை போன்ற ஆரம்ப அறிகுறிகள் இருக்கலாம். இந்த நோய் சரியான நேரத்தில் கண்டறியப்படாவிட்டால், அது உயிருக்கு ஆபத்தானது. இதய நோயைக் கருத்தில் கொள்ளும்போது, ​​ஒரு நபரின் வயது, நிலை மற்றும் தொற்று ஆகியவை இதய நோயின் அறிகுறிகளில் வேறுபடலாம்.

மூச்சுத் திணறல் - இதய நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. இதில், பெரும்பாலான நோயாளிகள் இரவில் தூங்கும் போது அதிக ஓய்வில் உள்ளனர். இந்த அறிகுறி தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்ளுங்கள். இது ஒரு தீவிர நிலையின் அறிகுறியாக இருக்கலாம்.

வீக்கம் - இதய நோய் நோயாளிகளுக்கு வீக்கம் பொதுவானது. இந்த வீக்கம் ஒரு மூட்டு அல்லது காலில் மட்டுமல்ல, உடல் முழுவதும் காணப்படுகிறது.

வயிறு பிரச்சனைகள் - இதய செயலிழப்பு காரணமாக, நோயாளிகள் வயிற்று பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இந்தப் பிரச்சனைகளில் வயிற்றுப் புண், வாந்தி அல்லது வயிற்று வலி ஆகியவை அடங்கும்.

மார்பு வலி - இதய நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அடிக்கடி மார்பு வலியை அனுபவிக்கிறார்கள்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip