Search

வெயில் கொளுத்த தொடங்கிடுச்சு.. தினமும் இந்த 8 உணவுகளை கட்டாயம் எடுத்துக்கோங்க.!

 கோடைக்காலம் வந்தாலே வெயிலின் தாக்கம் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கும். அதிலும் இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக கடுமையான உஷ்ண அலையுடன் கூட வெப்பம் அதிகமாகவுள்ளது. இந்த நாட்களில் உங்களது உடலை எப்போதும் நீரேற்றமாக வைத்துக்கொள்வது அவசியம். இதனால் அதிகளவு தண்ணீர் குடிப்பது, நீர்ச்சத்து நிறைந்த பழங்களை அதிகம் உட்கொள்வது போன்ற விஷயங்களை நீங்கள் மேற்கொள்வீர்கள்.

இவ்வாறு உங்களது உடலை நீரேற்றமாக நீங்கள் வைத்துக்கொள்வது ஒருபுறம் இருந்தாலும், உங்கள் வயிற்றையும் நீங்கள் ஆரோக்கியத்துடன் வைத்திருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம் அதிக வெப்பம் உங்களது செரிமான அமைப்பில் பல பிரச்சனைகளை ஏற்படும். உடலில் அதிக நீரிழப்பு, மலச்சிக்கல், வயிறு வீக்கம் மற்றும் இரைப்பை போன்ற குடல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. எனவே இதுப் போன்ற பிரச்சனைகளைத் தடுக்க வேண்டும் என்றால் கோடைக்காலத்தில் சில உணவுகளை கட்டாயம் நீங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதோ என்னென்ன? என்று இங்கே அறிந்துக்கொள்வோம். உங்கள் வயிற்றை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் உணவுகள்:

தர்பூசணி : அதிக நீர்ச்சத்து பழமான தர்பூசணியை நம்முடைய உணவில் சேர்த்துக்கொள்ளும் போது, வெப்பத்தை எதிர்த்துப்போராடி உடலை குளிர்ச்சியாக மற்றும் நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகிறது. எனவே கோடையில் நீங்கள் அதிகமாக நீங்கள் சாப்பிடும் போது, உடலில் அதிக நீர் இருக்கும். இதனால் உங்களை நீரேற்றமாக வைத்திருப்பதோடு மலச்சிக்கலுக்குத் தீர்வாக அமைகிறது. தர்பூசணியில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் வழக்கமான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது. மேலும், ஆரோக்கியமான வயிற்றைப் பாதுகாக்க முக்கியமான வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகியவை இந்தப் பழத்தில் ஏராளமாக உள்ளன.

வெள்ளரிக்காய் : கோடையில் அதிகளவில் நிலவும் வெப்ப அலையால், உங்கள் வயிற்றை எளிதாக வைத்திருக்க உதவுகிறது. இதில் அதிகளவு நீர்ச்சத்து உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடலை பாதுகாப்பாக வைத்திருக்க உதவியாக உள்ளது.

இளநீர் : கோடை வெயிலை சமாளிக்க இளநீர் ஒரு சிறந்த பானம். வெப்ப அலையின் போது உடலை நீரேற்றமாக இருக்க உதவும் எலக்ட்ரோலைட்டுகள் இதில் அதிகளவில் உள்ளது. மேலும் இதில் பொட்டாசியம் வழக்கமான குடல் இயக்கத்தை பராமரிக்கவும், மலச்சிக்கலைத் தவிர்க்கவும் உதவுகிறது. லாரிக் அமிலம், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் உங்கள் வயிற்றின் ஆரோக்கியத்தை ஆதரிக்க உதவுகிறது.

தயிர் : தயிர் போன்ற புரோபயாடிக் நிறைந்த உணவுப் பொருள்கள் அதிக வெப்ப அலையின் போது குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கும். புரோபயாடிக்குகள் எனப்படும் நல்ல பாக்டீரியாக்கள் உங்கள் வயிற்றில் இருப்பதால் செரிமானத்திற்கு உதவுகிறது. கூடுதலாக, தயிரில் நிறைய கால்சியம் உள்ளதால் குடல் இயக்கங்களை அதிகரிக்கிறது.

மோர் : கோடை காலத்தில் உங்கள் குடலை எரிச்சலின்றி வைத்திருக்க விரும்பினால், உங்கள் தினசரி வழக்கத்தில் மோர் சேர்க்க வேண்டும். இது உங்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் செரிமான பிரச்சனைகளைத் தீர்வாக அமைகிறது. மேலும் இதில் புரோபயாடிக்குகள் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளதால், உடலின் வெப்பநிலையை இயல்பு நிலைக்குத் திரும்ப உதவியாக உள்ளது.

இஞ்சி : நமக்கு ஏற்படும் பெரும்பாலான வயிற்றுப் பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைவது இஞ்சி தான். இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், வெப்ப அலையின் போது உங்களுக்கு ஏற்படும் வயிற்று வலியை சரிசெய்ய உதவியாக உள்ளது. மேலும் செரிமான பிரச்சனைக்குத் தீர்வாகவும் உள்ளது. எனவே இஞ்சியை நீங்கள் உங்களது உணவில் பல வழிகளில் சேர்த்துக்கொள்ளலாம்.

பப்பாளி : உங்களது செரிமான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உதவும் பழங்களில் ஒன்றாக உள்ளது பப்பாளி. பாப்பைன் மற்றும் சைமோபாபைன் போன்ற புரதங்கள் உள்ளது. இதில் நார்ச்சத்து உள்ளது, இது வழக்கமான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கிறது.

இதுப்போன்று முலாம்பழம், வெந்தயம் களி போன்றவற்றையும் உங்களது உணவில் சேர்த்துக்கொள்ளவும். நிச்சயம் கோடையில் உங்களது உடலை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க முடியும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

ஏசி இல்லாம உங்க வீடு குளிர்ச்சி ஆகணுமா...? செலவே தேவையில்லை.. இதை ட்ரை பண்ணுங்க...!

 

வாட்டும் வெயிலில் ஏசி இல்லாமல் இருப்பது உங்களுக்கு கடினமாக இருக்கலாம். ஒருவேளை இருந்தாலும், இந்த காலநிலையில் மின் கட்டணம் எகிறும். ஆனால் செலவே இல்லாமல் உங்களையும், உங்கள் அறையையும் குளிர்ச்சியாக வைத்திருக்க, சில டிப்ஸ்களை இங்கே தருகிறோம்.

கோடை காலத்தில் மின்விசிறி இல்லாமல் அறையை குளிரவைப்பது எப்படி? மின்விசிறியின் முன் ஐஸ் கட்டிகளை வைப்பதன் மூலமோ அல்லது ஈரமான துணியை தொங்கவிடுவதன் மூலமோ அறையை குளிரூட்டும் திறனை கணிசமாக அதிகரிக்க முடியும். விசிறிகள் வியர்வையை முழுவதுமாக உறிஞ்சாமல் இருக்கலாம், ஆனால் ஏர் கண்டிஷனிங்குடன் ஒப்பிடும்போது, அவை மின்சாரத்தைச் சேமிக்கும் மற்றும் கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வைக் குறைக்கும்.

நிறைய தண்ணீர் குடியுங்கள். வியர்வை மூலம் இழந்த அனைத்து நீர் மற்றும் அத்தியாவசிய தாதுக்களையும் நிரப்ப இது தான் முக்கிய வழி. நீரிழப்பைத் தடுக்க அதிக நீர்ச்சத்து கொண்ட கோடைகால பழங்கள் மற்றும் கோடைகால காய்கறிகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். தண்ணீர் அருந்துவது போரடித்தால் மோர், மாம்பழச் சாறு மற்றும் சர்க்கரைகள் சேர்க்காத மில்க் ஷேக் ஆகியவற்றை பருகுங்கள். பயணத்தின்போது உங்களை ஹைட்ரேட் செய்ய இளநீர் ஒரு சிறந்த தேர்வு.

காரமான மற்றும் வறுத்த உணவுகளை தவிர்க்கவும். குறைந்த எண்ணெய்யில் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகளை சாப்பிடவும். வெள்ளரி, வெங்காயம், தக்காளி, உப்பு மற்றும் மிளகு சேர்த்த சாலட்கள், தயிர் வடை மற்றும் தயிர் சார்ந்த சுவையூட்டிகள். அதிக நீர்ச்சத்து கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடவும்.

வாட்டர் மிஸ்ட்களை பயன்படுத்தி ஏசி இல்லாமல் அறையை குளிர்விக்கலாம். இது குளிரூட்டும் தொழில்நுட்பத்திற்கு ஒரு வரப்பிரசாதம். அதனுடன் அறையில் உள்ள பிரகாசமான விளக்குகளை அணைக்கவும்.

கோடையில் சாடின், பட்டு மற்றும் பாலிஸ்டர் துணிகளை தவிர்க்கவும். இது  இரவு உடைக்கும் பொருந்தும். காட்டன் உடை போதுமான அளவு வியர்வையை உறிஞ்சி, உங்களை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

ஏசி இல்லாமலேயே அறையை குளிரூட்டுவது உங்கள் வீட்டிலும் வாழ்க்கை முறையிலும் சில சிறிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் சாத்தியமாகும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

வெற்றி பெற்ற மனிதர்கள் பின்பற்றும் 5 காலை பழக்கங்கள்.. இதுதான் அவர்களின் ரகசியம்.!

 நாம் அன்றாடம் கடைப்பிடிக்கும் ஒரு சில காலை நேர பழக்க வழக்கங்களை சரி செய்தாலே நமக்கு வெற்றி கிட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதற்கு சான்றாக சில வெற்றி பெற்ற மனிதர்கள் விளங்குகின்றனர்.

வெற்றி என்பது நாம் அனைவரும் அனுபவிக்க ஆசைப்படும் ஒன்றாகும். சிறு விஷயங்களில் இருந்து பெரும் நிகழ்வுகள் வரை அனைத்திலும் நாம் அனைவரும் வெற்றி பெறவே விரும்புவோம். ஆனால், வெற்றி அவ்வளவு எளிதாக ஒருவருக்கு கிடைப்பதில்லை. வெற்றி ஒருவருக்கு எட்டாக் கனி ஒன்றும் இல்லை. வெற்றியின் இரகசியத்தில் ஒன்று கடின உழைப்பு என்றாலும், நாம் அன்றாடம் கடைப்பிடிக்கும் ஒரு சில காலை நேர பழக்க வழக்கங்களை சரி செய்தாலே நமக்கு வெற்றி கிட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதற்கு சான்றாக சில வெற்றி பெற்ற மனிதர்கள் விளங்குகின்றனர்.

வெற்றி பெற்ற மனிதர்கள் தங்கள் நாளை சரியாகத் தொடங்க தங்கள் அன்றாட காலை நேர வழக்கங்களை நன்கு திட்டமிட்டே செய்வார்கள். அதற்கென அவர்கள் ஒரு சில பழக்க வழக்கங்களை வகுத்து வைத்திருப்பார்கள். அவர்களின் வாழ்க்கை அனுபவம், நாம் நம் நாளை சரியாக திட்டமிட கண்டிப்பாக உதவியாக இருக்கும். குறிப்பாக அவர்களைப் போன்று நம் காலை நேர பழக்க வழக்கங்களை வெற்றியை நோக்கிய பாதைக்கு வழிவகுக்கும் விதத்தில் வகுத்துக் கொள்ள வேண்டும். வெற்றி பெற்ற மனிதர்கள் தினமும் காலை நேரத்தில் வழக்கமாக செய்யக் கூடிய சில வெற்றிக்கான வித்திடும் செயல்கள்.

இயற்கை கடிகாரம் : பொதுவாக நாம் அனைவரும் காலையில் எழுந்திருக்க அலாரம் வைப்பது வழக்கம். அலாரம் அடித்தாலும், அதனை ஆஃப் செய்துவிட்டு தூங்கி விடவும் கூடும். ஆனால், வெற்றி பெற்றவர்கள் காலையில் சரியான நேரத்தில் தாங்களாகவே எழுந்திருக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டு இருப்பார்கள். அது மட்டும் அல்ல, அவர்கள் தினமும் குறைந்தது 8 மணி நேரம் தூங்குவதை உறுதி செய்து கொள்வார்கள்.

காலையில் காபி குடிப்பதை தவிர்த்தல் : வெற்றி பெற்றவர்கள் காலையில் காபி குடிப்பதை தவிர்த்துவிட்டு முதலில் தண்ணீர் தான் குடிப்பார்கள்.

உடற்பயிற்சி : பெரும்பாலான வெற்றி பெற்ற மனிதர்கள் தினமும் காலை உடற் பயிற்சிக்கென சிறிது நேரத்தை ஒதுக்கி விடுவார்கள். உடற் பயிற்சிக்கு தங்கள் அன்றாட காலை நேர வழக்கத்தில் முன்னுரிமை கொடுப்பார்கள்.

வாசித்தல் : அதே போல் அவர்கள் தினமும் காலையில் வாசிப்பதற்கென நேரம் ஒதுக்கி நாளிதழ் போன்றவற்றை தினமும் வாசிப்பது வழக்கம்.

முடிவெடுத்தல் : அவர்கள் பெரும்பாலும் காலையில் முடிவெடுப்பதை தவிர்த்து விடுவார்கள். ஏனென்றால், காலையில் தொடர்ச்சியாக முடிவு எடுப்பது ஒருவரின் புத்துணர்ச்சியை குறைத்து விடக்கூடும்.

நீங்கள் இது போன்ற பழக்க வழக்கங்களை பின்பற்றினால், அது கண்டிப்பாக வெற்றிக்கு ஒரு பாலமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே, இத்தகைய பழக்க வழக்கங்களை உங்கள் காலை நேர வழக்கத்தில் புகுத்தி வெற்றிக்கான உங்கள் பயணத்தின் முதல் படியை இனிதே தொடங்குங்கள். வாழ்த்துக்கள்!


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி... தஞ்சாவூர் மக்களே மிஸ் பண்ணிடாதீங்க!

 பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தேர்வுக்கு தஞ்சை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நாளை நடக்கிறது.

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பணியாளர் தேர்வு வாரியத்தால் (எஸ்.எஸ்.சி), ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு தரம் (சி.ஜி.எல்.) தேர்விற்கு 7,500-க்கு மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்விற்கான வயது வரம்பு 19 வயது முதல் 30 வயதுவரை ஆகும். மேலும் வயது வரம்பு பணியிடத்திற்கு ஏற்ப மாறுபடும். இந்த தேர்விற்கு அடுத்த மாதம் (மே) 3-ந்தேதிக்குள் ssc.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

தஞ்சை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக மேற்கண்ட தேர்விற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நாளை (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை, தேர்விற்கான பாடத்திட்டம், தேர்வுக்கு தயார் செய்யும் விதம் மற்றும் பாடக்குறிப்புகள் உள்ளிட்ட விளக்க வகுப்பு நடைபெறும்.

தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் தங்களது பெயர் மற்றும் கல்வித்தகுதியை குறிப்பிட்டு 8110919990 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தகவல் அனுப்பி தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் தொடர்புக்கு அலுவலக தொலைபேசி எண் 04362-237037 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை... அரசு முக்கிய அறிவிப்பு

 தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களில் பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றவருக்கு மாதம் ரூ.200ம், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300ம், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டிற்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்தொகை நேரடியாக மனுதாரர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருத்தல் வேண்டும். தொடர்ந்து பதிவினை புதுப்பித்து இருக்க வேண்டும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/- (எழுபத்தி இரண்டாயிரம்) மிகாமல் இருக்க வேண்டும். அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பயிலும் மாணவ/மாணவியருக்கு மற்றும் ஏற்கனவே உதவித்தொகை பெற்றவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி மற்றும் அதற்கும் கீழ் படித்தவர்களுக்கு மாதம் ரூ.600ம், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் 10 ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து ஓராண்டுகள் நிறைவு பெற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகள் வேறு எந்த ஒரு திட்டத்திலும் உதவித்தொகை பெறுபவராக இருக்கக் கூடாது.

இந்த உதவித்தொகை பெறுவதற்கு தகுதிகள் உள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அனைத்துக் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்கள் அனைத்து வேலை நாட்களிலும் வருடம் முழுவதும் வழங்கப்படும்.

மேலும், இந்த உதவித்தொகை பெறுபவர்களின் அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது எனவும் உதவித்தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு பரிந்துரைத்தலுக்கு எவ்வித தடையும் ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளார்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

அடிவயிற்று தொப்பையை குறைக்க நீங்கள் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?

 ஒருவரது சிறப்பான ஆரோக்கியத்திற்கு தூக்கம் முக்கியமானது, இரவில் போதுமான அளவு தூக்கத்தை பெறுபவர்களின் ஆரோக்கியத்தில் பெரும்பாலும் எவ்வித குறையும் இருக்காது என்று கூறப்படுகிறது.  அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 18 முதல் 59 வயதுக்குட்பட்ட பெரியவர்களிடையே 

உடல் கொழுப்பு விநியோகத்தை தீர்மானிப்பதில் தூக்கத்தின் அளவு முக்கிய பங்கு வகிக்கிறது என்பது தெரியவந்துள்ளது.  அதாவது தெளிவாக சொல்ல வேண்டுமானால் குறைந்த அளவிலான தூக்கத்தை பெரும் பெரியவர்களின் உடலில் கொழுப்பின் அளவு அதிகமாக காணப்படுகிறது.  ஆனால் இந்த கொழுப்புகள் கைகள், கால்கள் மற்றும் அடிவயிறு போன்ற எந்த உறுப்பில் சேரும் என்பது பற்றி எவ்வித தெளிவான தகவலும் கண்டறியப்படவில்லை.  அதிக எடையுடன் இருப்பது பெரும்பாலான உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். 

பெரியவர்களில் 66%க்கும் அதிகமானோர் உடல் பருமன் கொண்டவர்களாக இருக்கின்றனர்.  ஒரு நாளைக்கு எட்டு அல்லது அதற்கு மேற்பட்ட மணிநேரம் தூங்குவது ஆரோக்கியமான உடல் கொழுப்பை பராமரிப்பதில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் ஆராய்ச்சியின் முடிவுகள் தெரிவிக்கிறது.  

உடலில் அதிகளவு கொழுப்புகள் இருப்பது இன்சுலின் எதிர்ப்பு மற்றும் டைப் 2 நீரிழிவு போன்ற நோய்களை ஏற்படுத்தும்.  இதுதவிர அதிக கொழுப்புகள் வளர்சிதை மாற்றக் கோளாறுகள், எண்டோடெலியல் மற்றும் கார்டியோமெடபாலிக் செயலிழப்புகளின் அபாயத்தை அதிகரிக்கிறது என்று ஆய்வறிக்கைகள் தெரிவிக்கிறது.  

இரவில் சரியாக தூங்கவில்லையென்றால் உடலில் கொழுப்பு அதிகரித்து உடல் பருமனுக்கு வழிவகுக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு போதுமான அளவில் தூக்கத்தை பெற பரிந்துரைக்கப்படுகிறது.

இந்த கண்டுபிடிப்புகள் உடல் கொழுப்பைக் கட்டுப்படுத்துவதில் தூக்கம் எவ்வாறு முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவும், ஆரோக்கியமான உடல் அமைப்பைப் பராமரிப்பதற்கான வழிமுறையாக தூக்கத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டவும் உதவும்.

வெயில் காலத்தில் தேங்காய் சாப்பிடுவது இவ்வுளவு நல்லதா?

 Coconut Summer Tips: கோடையில் ஆரோக்கியமாகவும், உடற்தகுதியுடனும் இருக்க மக்கள் பெரும்பாலும் தேங்காய் குடிப்பார்கள். ஆனால் தேங்காய் உங்களின் பல பிரச்சனைகளை நீக்கவும் உதவுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? இதற்குக் காரணம் இது குளிர்விக்கும் தன்மை கொண்டது. 

அதனால் தான் கோடை காலத்தில் தேங்காய் சாப்பிடுவது நல்லது என கூறப்படுகிறது. செரிமானம் சரியாகும், எலும்புகளும் வலுவாக இருக்கும். அதே நேரத்தில், இதய நோய்களைக் குணப்படுத்தவும் தேங்காய் உதவுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?. 

தேங்காய் எல்லா காலங்களிலும் சாப்பிடக்கூடிய சத்து நிறைந்த. ஆனால் கோடையில் கண்டிப்பாக இதனை சாப்பிட வேண்டும். வெயில் காலத்தில், தேங்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இங்கு காணலாம்.

கோடையில் தேங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

செரிமானம் சிறப்பாக இருக்கும்

கோடை காலத்தில் வயிறு குளிர்ச்சியாக இருக்க வேண்டுமானால், தேங்காயை சாப்பிடுங்கள். தேங்காயில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் குடலை வலுவாக வைத்து, செரிமானம் சிறப்பாக இருக்கும். அதனால்தான் கோடை காலத்தில் தேங்காய் சாப்பிட வேண்டும் என கூறுகிறார்கள். 

வயிறு குளிர்ச்சியாக இருக்கும் 

கோடை காலத்தில் வயிற்றில் எரியும் உணர்வால் மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் கவலைப்படத் தேவையில்லை, ஆனால் நீங்கள் தேங்காய் சாப்பிட வேண்டும். தேங்காய் மிகவும் குளிர்ச்சியானது. மறுபுறம், நீங்கள் கோடை காலத்தில் தேங்காய் உட்கொள்வதனால் வயிற்றை குளிர்ச்சியாக வைத்திருக்கும். இதனுடன் தினமும் காலையில் காய்ந்த தேங்காய் சாப்பிடலாம்.

வெப்பத்தில் இருந்து நிவாரணம் 

கோடை காலத்தில், ஒவ்வொரு நபரும் சூரியன் மற்றும் அனல் காற்றால் சிரமப்படுகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், பலருக்கு வெப்ப முடக்குவாதம் ஏற்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் கவலைப்படத் தேவையில்லை, ஆனால் நீங்கள் தேங்காய் சாப்பிட வேண்டும்.

 Click here to join whatsapp group for daily health tip

கோடையில் உடலை குளிரவைக்கும் பெருஞ்சீரகம்

 கோடை காலத்தில் நிலவும் வெயிலின் தாக்கத்தால் உடல் வெப்பம் அதிகரிக்கும். உடல் வெப்பத்தை குறைத்து, உடலை குளிரவைக்கும் உணவுப் பொருளை நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தி வருகிறோம். அதுதான் பெருஞ்சீரகம். இதனை பயன்படுத்தி கோடை காலத்தில் புத்துணர்வூட்டும் பானங்களை தயார் செய்து பருகலாம். 


செலினியம், துத்தநாகம் போன்ற முக்கிய கனிமங்கள் இதில் நிரம்பி இருக்கிறது. அதனால் ஹார்மோன் சமநிலையை பராமரிப்பதிலும், மாதவிடாயை ஒழுங்குபடுத்துவதிலும் பெருஞ்சீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் பெருஞ்சீரகத்தில் இருக்கும் ஆன்டிஸ்ப்ராஸ்மோடிக் என்னும் வேதிப்பொருள் மாதவிடாய் கோளாறுகளை சீரமைக்க உதவுகிறது. 


வழக்கமாக பருகும் டீ, காபிக்கு பதிலாக பெருஞ்சீரக டீ பருகலாம். இது கோடை காலத்தில் ஏற்படும் செரிமான கோளாறு மற்றும் வயிறு உபாதை சார்ந்த பிரச்சினைகளையும் போக்கும். சாப்பிட்ட பிறகு சிறிதளவு பெருஞ்சீரகத்தை மெல்வது வாய்க்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். 


வாயு தொல்லை மற்றும் வயிறு சார்ந்த பிரச்சினைகளில் இருந்தும் பாதுகாக்கும். பல்வேறு உணவுகள், பானங்களில் பெருஞ்சீரகத்தை பொடித்து சேர்த்துக்கொள்ளலாம். கோடை காலத்தில் பாலுடன் பெருஞ்சீரகத்தை பொடித்து சேர்த்து பருகி வர, பல்வேறு உடல் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம். பெருஞ்சீரகத்தை நீரில் காய்ச்சியும் பருகி வரலாம். இது இரைப்பை பிரச்சினைகளை தடுத்து செரிமானத்தை மேம்படுத்தும். 

காலை பொழுதை உற்சாகத்துடன் தொடங்குவதற்கும் வழிவகுக்கும். அகன்ற பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீரை ஊற்றி சிறுதீயில் கொதிக்க விடவும். அதில் 2 டேபிள்ஸ்பூன் பெருஞ்சீரகத்தை போட்டு 10 நிமிடங்கள் கொதிக்கவைத்து இறக்கவும். அந்த நீரை வடிகட்டி குளிரவைத்து, அதனுடன் சிறிதளவு தேன் கலந்து பருகலாம். தினமும் 2 கப் பருகுவது நல்ல பலனை கொடுக்கும். கோடை காலத்தில் பிரிட்ஜில் வைத்தும் பருகி வரலாம்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

பாகற்காய் கசக்கும், அதன் நன்மைகள் இனிக்கும்...

 கசக்கும் காய் என்றாலும் பாகற்காயை சமையலில் சேர்த்துக் கொள்வதில் இருந்தே இதன் முக்கியத்துவம் புரியும். அதிலுள்ள சத்துக்களை பட்டியலிடுவோம்...

* பாகற்காயின் அறிவியல் பெயர் மொமோர்டிகா சாரன்டியா. தெற்கு ஆசியாவை தாயகமாகக் கொண்டவை. தற்போது ஆசிய நாடுகள் முழுமையும் பரவலாக விளைகிறது. ஆண்டு முழுவதும் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும். 

* குறைந்த ஆற்றல் வழங்குபவை பாகற்காய்கள். 100 கிராம் பாகற்காயில் 17 கலோரி ஆற்றலே உடலுக்கு கிடைக்கிறது. 

* 'பாலிபெப்டைடு-பி' எனப்படும் குறிப்பிடத்தக்க சத்துப்பொருள் பாகற்காயில் காணப்படுகிறது. இதனை தாவரங்களின் 'இன்சுலின்' என்று கருதுகிறார்கள். ஏனெனில் தாவரங்களில் சர்க்கரை மிகுதியாகாமல் கட்டுப்படுத்துவது இதுதான்.

* சிறந்த நோய் எதிர்ப்பு பொருளான வைட்டமின்-சி, பாகற்காயில் மிகுதியாக உள்ளது. 100 கிராம் பாகல் விதையில் 84 மில்லிகிராம் வைட்டமின்-சி உள்ளது. இயற்கை நோய் எதிர்ப்பு பொருளான இது, தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டியடிக்கும். 

* பீட்டா கரோட்டின், ஆல்பா கரோட்டின், லுடின், ஸி-சாந்தின் போன்ற பிளோவனாய்டுகள் இதில் உள்ளன. அத்துடன் வைட்டமின்-ஏ அதிகஅளவில் உள்ளது. இவை புற்றுநோயை உருவாக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டுவதோடு, வயது மூப்படைவதில் இருந்தும், வியாதிகள் தாக்காதவாறும் பாதுகாக்கும். 

* ஜீரண சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் பாகற்காய்க்கு உண்டு. மலச்சிக்கல் மற்றும் அஜீரணத்தை போக்கும். 

* வைட்டமின்-பி 3, வைட்டமின் பி-5, வைட்டமின்-பி6 போன்ற அத்தியாவசிய வைட்டமின்களும், இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் மக்னீசியம் போன்ற முக்கியத் தாதுக்களும் பாகற்காயில் இருந்து உடலுக்கு கிடைக்கிறது. பாகற்காயின் விதைகள் எளிதில் ஜீரணமாகும் நார்ப்பொருட்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள், நோய் எதிர்ப்பு பொருட்களைக் கொண்டது.

 Click here to join whatsapp group for daily health tip

கரும்பு ஜூஸ் ஏன் பருக வேண்டும்?

 கரும்பு சாற்றில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள் ஏ, பி மற்றும் சி மற்றும் ஆன்டி ஆக்சிடெண்டுகள் நிறைந்துள்ளது. இவை உடலுக்கு தேவையான ஆற்றலை அளித்து ஆரோக்கியத்தை பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தாகத்தை தணிப்பதற்கு சிறந்த பானமாகவும் கரும்பு சாறு விளங்குகிறது. கரும்பு சாற்றை ஏன் பருக வேண்டும் என்பதற்கான பிற காரணங்கள் குறித்து பார்ப்போம். 

மஞ்சள் காமாலைக்கு தீர்வளிக்கும்: ஆயுர்வேதத்தின் படி, கரும்பு இயற்கையான குளிர்ச்சித்தன்மை கொண்ட பொருளாகும். இது கல்லீரலை வலுப்படுத்தக்கூடியது. மஞ்சள் காமாலை நோய் நெருக்கவிடாமல் பாதுகாக்கும் ஆற்றல் கொண்டது. மஞ்சள் காமாலை நோய் பாதிப்புக்குள்ளானவர்கள் விரைவில் குணமாகுவதற்கும் துணைபுரியக்கூடியது. எந்தவகை நோய்பாதிப்பின்போதும் இழந்த புரதங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை ஈடு செய்வதற்கு கரும்பு சாறு உதவக்கூடியது.


நோய்த்தொற்றுகளை தடுக்கும்: கரும்பு சாறு டையூரிடிக் பண்புகளை கொண்டது என்பதால் உடலில் இருந்து நச்சுகள் மற்றும் தொற்றுகளை அகற்ற உதவுகிறது. தொடர்ந்து கரும்பு சாறு பருகுவதன் மூலம் சிறுநீர் பாதையில் நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் உணர்வையும் கரும்புச்சாறு போக்கும். கரும்பு சாறில் கொலஸ்ட்ரால் துளியும் இல்லை. 

சோடியமும் குறைவாகவே இருக்கிறது. சிறுநீரகங்களை பாதுகாப்பதில் கரும்பு சாறுக்கு முக்கிய பங்கு உண்டு. செரிமானத்தை மேம்படுத்தும்: செரிமான மண்டலம் சீராக இயங்கவும், வயிற்றில் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கவும் கரும்பு சாறு உதவும். மலச்சிக்கல் பிரச்சினைக்கும் தீர்வளிக்கும்.

எலும்புகளை வலுவாக்கும்: கரும்புச் சாற்றில் உள்ளடங்கி இருக்கும் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு மற்றும் பொட்டாசியம் போன்றவை எலும்புகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்கவும் முடியும். வயது அதிகரிக்கும்போது ஏற்படும் எலும்பு பலவீனத்தை போக்கி, எலும்புகளை வலுவாக வைத்திருக்க மருத்துவரிடம் ஆலோசனை பெற்று தினமும் ஒரு டம்ளர் கரும்புச்சாறு பருகி வரலாம். 

நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்: கரும்பு சாற்றை தவறாமல் உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும். குறிப்பாக கோடை கால மாதங்களில் நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமடையும். அதனை சரிபடுத்த தினமும் ஒரு டம்ளர் கரும்பு ஜூஸ் பருகுவது நல்லது. மேலும் கரும்பு சாறில் ஆன்டி ஆக்சிடெண்டுகள் மற்றும் வைட்டமின் சி நிறைந்திருப்பதால் செரிமான கோளாறுகள், கல்லீரல் நோய்கள் மற்றும் சுவாசம் சார்ந்த நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவும்.


 Click here to join whatsapp group for daily health tip