Search

கோடைக்காலத்தில் முலாம் பழம் அவசியம் சாப்பிடுங்க.. ஏன் தெரியுமா..?

 


கோடைக்காலம் வந்திடுச்சு, வெயில் வாட்டி வதைக்கிறது.. சிறிது தூரம் வெளியில் சென்று வந்தாலே நீர்ச்சத்து இன்றி உடல் சோர்வாக காணப்படும். இந்த நேரத்தில் நாம் எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது.

இதுப்போன்ற நேரத்தில் தான் நாம் தர்பூசணி, முலாம்பழம், கரும்பு சாறு, எலுமிச்சை ஜூஸ் போன்ற அதிக நீரேற்றம் உள்ள பழங்களைத் தான் தேர்வு செய்வோம். இப்படி கோடைக்காலத்திற்கு உடலை நீரேற்றத்துடன் வைக்கக்கூடிய முலாம்பழத்தில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. இதோ இதன் முழு விபரம் இங்கே..

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் : முலாம்பழத்தில் வைட்டமின் சி உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இவை நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமாவதைத் தடுக்கிறது. எனவே நீங்கள் தொடர்ச்சியாக இந்த கோடைக்காலத்தில் முலாம்பழங்களை சாப்பிடும் போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.



சிறுநீரக பிரச்சனைக்குத் தீர்வு : முலாம்பழத்தில் ஏராளாமான சைலோகைன்கள் உள்ளது. இவை சிறுநீரக கற்களைத் தடுக்கவும், நம்முடைய உடலில் சிறுநீரகங்களின் செயல்பாடு சீராக இருக்க உதவியாக உள்ளது.

மலச்சிக்கலுக்குத் தீர்வு : முலாம்பழத்தில் ஏராளமான நீர்ச்சத்துக்கள் உள்ளது போன்று அதிகளவில் நார்ச்சத்துக்களும் உள்ளது. இவற்றை நீங்கள் சாப்பிடும் போது இதில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக இயக்குவதோடு, மலச்சிக்கலையும் தடுக்க உதவுகிறது.

சரும ஆரோக்கியம் : முலாம்பழம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ள பழமாகும். ஏனெனில் அதன் சதை முதல் விதைகள் வரை பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இருந்தப் போதும் சரியான அளவில் நீங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளும் போது, பல்வேறு நோய்களில் இருந்து உடலை திறம்பட பாதுகாக்கும். மேலும் முலாம்பழத்தில் உள்ள விதைகள் மற்றும் பழத்திலிருந்து ஒரு பேஸ்டை தயாரிப்பதன் மூலம் இயற்கையான பேஸ் மாஸ்க் செய்ய முடியும். இந்த பேஸ்ட்டை நீங்கள் உபயோகிக்கும் போது, சருமம் தொடர்பான பிரச்சனைகளான வறட்சி மற்றும் கருந்தழும்புகள் போன்றவற்றைத் தடுக்க உதவியாக உள்ளது.



சரும ஆரோக்கியம் : முலாம்பழம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ள பழமாகும். ஏனெனில் அதன் சதை முதல் விதைகள் வரை பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இருந்தப் போதும் சரியான அளவில் நீங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளும் போது, பல்வேறு நோய்களில் இருந்து உடலை திறம்பட பாதுகாக்கும். மேலும் முலாம்பழத்தில் உள்ள விதைகள் மற்றும் பழத்திலிருந்து ஒரு பேஸ்டை தயாரிப்பதன் மூலம் இயற்கையான பேஸ் மாஸ்க் செய்ய முடியும். இந்த பேஸ்ட்டை நீங்கள் உபயோகிக்கும் போது, சருமம் தொடர்பான பிரச்சனைகளான வறட்சி மற்றும் கருந்தழும்புகள் போன்றவற்றைத் தடுக்க உதவியாக உள்ளது.

இது மட்டுமின்றி, முலாம்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ தலை முடி ஆரோக்கியத்திற்கும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகின்றது. மேலும் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல், உடல் எடைக்குறைப்பு, ஆரோக்கியமான தோல் வளர்ச்சி போன்றவற்றிற்கு உதவியாக உள்ளது. எனவே இந்த கோடைக்கால சீசனில் உங்களை உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க முலாம்பழத்தை மறக்காமல் டயட்டில் சேர்த்து கொள்ளுங்கள்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

போல்டான பெண்களிடம் இருக்கும் குணங்கள்.. உங்களிடம் இதெல்லாம் இருக்கா..?

 

உறுதியான பெண்களுக்கென சில குணாதிசியங்கள் உள்ளன. அத்தகைய குணாதிசியங்களைப் பற்றி இந்தப் பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம். பெண்கள் என்றாலே பொறுமை என்று முன்பெல்லாம் கூறுவது வழக்கம். அதே போல், பெண்களின் குணங்கள் என்று பார்த்தால் அதற்கு ஒரு பெரும் பட்டியலே இருக்கும். ஆனால், இந்தப் பதிவில் உறுதியான பெண்கள் என்னென்ன குணாதிசியங்கள் கொண்டிருப்பார்கள் என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.


நம்பிக்கை : பொதுவாக உறுதியான பெண்களுக்கு நம்பிக்கை தான் பக்க பலமாக இருக்கும். அவர்களிடத்தில் அசாதாரணமான குணங்கள் நிறைந்து இருக்கும். அவர்கள் எப்போதும் தங்களால் என்ன முடியும் என்பதை நன்கு அறிந்தே செயல்படுவார்கள். ஆம், நம்பிக்கையுடன் தங்கள் மதிப்பறிந்து செயல்படுவதே அவர்களின் பலம். நம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம்.


சுதந்திரம்: உறுதியான பெண்கள் எப்பொழுதும் சுதந்திரமாக செயல்படுவது வழக்கம். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற பழமொழியை போல தன்னிறைவு கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கென்று தனி இலக்குகள், விருப்பங்கள், மற்றும் லட்சியம் என அமைத்து, அதை நோக்கி நம்பிக்கையுடன் சுதந்திரமாக பயணிப்பதே அவர்களின் சிறப்பு.

சமத்துவம் : ஆண், பெண் என்ற வித்தியாசம் அல்லது பேதம் பார்க்காமல், தங்களை சமத்துவத்துவத்துடன் அனைவரும் பார்க்க வேண்டும் நடத்த வேண்டும் என்று எண்ணுவார்கள். சமமான மரியாதை அளிக்கப் பட வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பார்கள். எந்த விதமான பேதமோ, தவறான கையாளுதலோ இருந்தால், அதனை அவர்களால் சகித்துக் கொள்ள முடியாது.

தெளிவான தகவல் பரிமாற்றம் : எந்த ஒளிவு மறைவும் இல்லாத உண்மையான தகவல் பரிமாற்றத்தையே அவர்கள் விரும்புவார்கள். அவர்கள் தங்கள் எண்ணங்கள், உணர்ச்சிகள், தேவைகள் மற்றும் யோசனைகளை எந்த வித தயக்கமும் இன்றி தெளிவாக வெளிப்படுத்துவார்கள். அதே போல் அவர்களின் துணையும் வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

எல்லைகள் அறிந்து செயல்படுதல் : அவர்களின் எல்லைகள் குறித்து அவர்கள் நன்கு அறிந்திருப்பார்கள். தங்களை எப்படி கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும், அது அவர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்றும் அறிந்து அவர்கள் தங்கள் நல்வாழ்வு குறித்து விழிப்புடன் இருந்து அதற்கு முன்னுரிமை கொடுப்பார்கள். தங்களுக்கான நேரத்தை அமைத்து கொள்வார்கள். இது அவர்களது மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

இந்த குணங்கள் அத்தனையும் உங்களுக்கும் உள்ளதா? அப்படியென்றால் நீங்கள் ஒரு உறுதியான பெண். இந்த மன உறுதி கண்டிப்பாக நீங்கள் நினைத்ததை செய்து முடிக்க பக்க பலமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

தமிழில் எழுத படிக்கத் தெரிந்தால் போதும்: சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கொட்டிக் கிடக்கும் வேலை

 TNHRCE DEPARTMENT JOBS: திருப்பூர் மாவட்டம்,  காங்கயம் வட்டம் , சின்னமலை, அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுளளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்எண்ணிக்கைசம்பள விகிதம்கல்வித்தகுதி
வழக்கு எழுத்தர்118500 –58600 payMatrix-22பத்தாம் வகுப்பு தேர்ச்சி (அ) அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்;
சீட்டு விற்பனை எழுத்தர்218500 – 58600 payMatrix-22பத்தாம் வகுப்பு தேர்ச்சி (அ) அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்;
தட்டச்சர்118500 – 58600 payMatrix-22பத்தாம் வகுப்பு தேர்ச்சி (அ) அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்;அரசு தொழில்நுட்ப தட்டச்சர் தேர்வில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் ; தமிழிலில் இளநிலை கணினி பயன்பாடு மற்றும் Office Automation சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
காவலர்415900-50400 Pay Matrix-17தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்
தோட்டக்காரர்111600-36800 pay matrix-12தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்
திருவலகு215900-50400 Pay Matrix - 17தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்
கூர்க்கா115900 - 50400 Pay Matrix – 17தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்
உதவி மின் பணியாளர்116600-52400 Pay Matrix -18மின் கம்பிப் பணியாளர் தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மின் உரிமம் வழங்கல் வாரியத்திடம் இருந்து H சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். காவலர், தூய்மை பணியாளர் பணிகளுக்கு தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்

விண்ணப்பதாரர் 01.07.2022ம் தேதியன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். இந்து மதத்தைச் சேர்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும் இருத்தல் வேண்டும். ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் செய்வது எப்படி? இதற்கான விண்ணப்பப் படிவத்தை sivanmalaimurugan.hrce.tn.gov.in  மற்றும் hrce.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் பதிவிறக்கம் செய்ய வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி 17.05.2023 மாலை 5.45 மணி. விண்ணப்பங்களை நேரிலோ/ அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம். அனுப்ப வேண்டிய முகவரி: உதவி ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு சுப்ரமணியசுவாமி சுவாமி திருக்கோயில்,சிவன்மலை - 638701, காங்கயம் வட்டம், திருப்பூர் மாவட்டம்" என்ற முகவரிக்கு அனுப்பலாம்.விண்ணப்பத்துடன் கல்வித் தகுதிக்குரிய சான்றிதழ்கள் மற்றும் கூடுதல் கல்வித்தகுதிக்கான சான்றிதழ்கள் மற்றும் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை குடும்ப அட்டை போன்ற பிற ஆவணங்களுக்கு அரசிதழ் பதிவுபெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் (Attested Xerox copy only) பெற்று அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பதாரர் வயதிற்கான சான்று ஆவணம் அல்லது கல்வி நிலையத்தால் வழங்கப்பபட்ட மாற்று சான்றிதழ் (Transfer Certificate) நகல் இணைக்கப்பட வேண்டும். மேலும் , ரூ. 50/- மதிப்புள்ள தபால்தலை ஒட்டிய சுயவிலாசமிட்ட ஒப்புகை அட்டையுடனும் அஞ்சல் உறையுடனும் இணைத்து அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

காஞ்சிபுரத்தில் ஒருங்கிணைப்பாளர் பணிக்கான காலியிடங்கள் அறிவிப்பு - பெண்களே இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!

 காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் (Block Coordinator) பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM) என்பது கிராமப்புற வறுமையை போக்கவும் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கும் ஒரு முக்கிய திட்டமாகும்.காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மகளிர் திட்டம் அலுவலகம், வட்டார இயக்க மேலாண்மை அலகில் காலிப்பணியிடமாக உள்ள 5 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் (BC) பணியிடங்களுக்கு கீழ்கண்ட விவரங்கள் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கல்வித்தகுதி விவரம்:

1.கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். இவர்கள் ஆறு மாத காலம் கணினி பயிற்சி (MS Office) பெற்றிருக்க வேண்டும்.

2.வயது: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

3.முன் அனுபவம்: குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் மகளிர் மேம்பாட்டு திட்டம் தொடர்பான பணிகளில் முன் அனுபவம் பெற்று பணியாற்றி இருக்க வேண்டும்.

4.இருப்பிடம்: சம்மந்தப்பட்ட வட்டாரத்தை இருப்பிடமாக கொண்டு இருக்க வேண்டும்.

5.பாலினம்: பெண்

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள்-29.04.2023

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி-

இணை இயக்குநர்/ திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக்செய்க

எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, (மகளிர் திட்டம்) அலுவலகம், வட்டார இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள 5 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடத்திற்கு தகுதியுள்ள பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை 29.04.2023-க்குள் அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

8ம் வகுப்புத் தேர்ச்சி போதும்: அரசு நிறுவனத்தில் சூப்பர் வேலை

கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில்  காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

காலியிட விவரம்: 1 அலுவலக உதவியாளர்.

இனசுழற்சி அடிப்படையில் இந்த பதவிக்கு  மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் சீர்மரபினர் (non- priority) வகுப்பினர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 

கல்வித் தகுதி: குறைந்தபட்சம் 8ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 1.07.2023 அன்று விண்ணப்பதாரர் வயது வரம்பு 18-37க்குள் இருக்க வேண்டும்.

பணிக்கான ஊதிய விகிதம்: Basic Pay Rs.15,700/- + DA + HRA

முழுவதுமாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சுயவிலாசமிட்ட ரூ.50/-க்கான தபால் தலை ஒட்டப்பட்ட உறையுடன் பதிவுத் தபால் மூலமாக 10.5.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய இந்தஇணைப்பைக் கிளிக் செய்யவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்பி வைக்க வேண்டிய முகவரி;

தலைவர்,

மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்.

107/1, நவலடியாள் காம்பளக்ஸ் முதல் தளம்,

அண்ணா நகர், தான்தோன்றிமலை,

கரூர்- 639 005.

நேர்முகத் தேர்வு குறித்த தகவல் தபால் மற்றும் அலைபேசி எண் (அ) மின்னஞ்சல் (அ) வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கப்படும்

ஏதேனும் டிகிரி இருக்கா? சென்னையில் அலுவலக உதவியாளர் வேலை

 

சென்னையில் செயல்பட்டு வரும் தெற்கு மண்டலத்திற்கான தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதவி, முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக இதற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பதவி: அலுவலக உதவியாளர் (பணி காலம்: 3 மாதங்களுக்கு மட்டுமே)

எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) பெற்றிருக்க வேண்டும்; ஆங்கில தட்டச்சில் அனுபவம் இருக்க வேண்டும்; கணினி அறிவு இருத்தல் வேண்டும். நீதிமன்றம்/ தீர்பாயங்களில் முன்னனுபவம் இருத்தல் விரும்பத்தக்கது ஆகும்.

வயது வரம்பு: 21 - 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பப் படிவத்தை www.greentribunal.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். முழுவதுமாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவுத் தபால் மூலமாக 03.05.2023 அன்றைக்குள் Registrar, National Green Tribunal, Southern Zone Bench, kalas Mahal, PWD Estate, Chepauk, chennai - 600005 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

மத்திய அரசில் 2,674 சமூக நல அலுவலர் பதவி: விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

 Govt Jobs: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் காலியாக உள்ள 2,674 சமூக நல அலுவலர், 185 சுருக்கெழுத்தர் பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல்முறை நாளையுடன் முடிவடைகிறது. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், கடைசி நேரம் வரை காலம் தாழ்த்தாமல், போதிய கால இடைவெளி இருக்கும் போதே கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


காலியிடங்கள்: 2674 சமூக நல அலுவலர் பதவி (Social Security Assistant), 185 சுருக்கெழுத்தர் பணி (stenographer-Group C)

கல்வித் தகுதி: சமூக நல அலுவலர் பதவிக்கு ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்; அதேபோன்று, சுருக்கெழுத்தர் பதவிக்கு 12ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 2023, ஏப்ரல் 26 அன்று, விண்ணப்பதாரர் வயது வரம்பு 18- 27க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.

தேர்வு முறை: சமூக நல அலுவலர் பதவிக்கு எழுத்துத் தேர்வு (Written test), கணினி திறனறிவு தேர்வில் ( Computer Skill test ) பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும். சுருக்கெழுத்தர் பதவிக்கு எழுத்துத் தேர்வு (Written test), சுருக்கெழுத்தர் திறன் தேர்வில் ( Stenography Skill test ) பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்
இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.700 ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.04.2023 ஆகும்.

Apply Online - Social Security Assistant

Apply Online - Stenographer (Group C)

விண்ணப்பம் செய்வது எப்படி? recruitment.nta.nic.in என்ற இணையதளத்தில் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சித் துறையில் வேலை: பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்

 

பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம், வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேரமும் உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்கான நோக்கத்துடன் பெண்கள் உதவி மையத்தை அமைக்க ஒரு புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

அதில் ஒன்றான ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC), பெண்கள் உதவி மையம் (181) போன்ற பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் முக்கிய அம்சமாக மருத்துவ உதவி, ஆலோசனை, சட்டம், உளவியல் மற்றும் உணர்வியல் ரீதியான ஆதரவு வேண்டியுள்ள ஒவ்வொரு மகளிரும் பயனடையும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தொகுப்பூதிய / ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய கீழ்கண்ட தகுதிகள் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தகவல் தொழில்நுட்ப பணியாளர் (IT Administrator) (காலிப்பணியிடம் 1)

இளங்கலை பட்டப்படிப்பு (B.Tech., B.Sc) மற்றும் Diploma in computers/IT மற்றும் தர மேலாண்மையியல் (Data Management), செயல்முறை ஆவணங்கள் தயாரிப்பு (Process Documentation) மற்றும் வலை அடிப்படையிலான அறிக்கையிடல் வடிவங்கள் (Web based reporting formats)-ல் மாநில/மாவட்ட/தன்னார்வ தொண்டு நிறுவனம் இவைகளில் குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் தொழில்நுட்ப அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் தேவை.

ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

மாத ஊதியம் ரூ.18,000/- ஆகும்.

பதவி - வழக்குப் பணியாளர்(Case Worker); காலிபணியிடங்கள் -4 

வழக்குப் பணியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.

முதுநிலை சமூகப்பணி, வளர்ச்சிப்பணிகள், சமூகவியல் முதுநிலை சமூக உளவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பில் இரண்டு ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பெண் விண்ணப்பத்தாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ரூ.15,000/- மாத ஊதியம் வழங்கப்படும்

பாதுகாப்பாளர்: (Security Guard) (காலிப்பணியிடங்கள் 2):

மாத ஊதியம் ரூ.10,000/- ஆகும்.

அரசு அல்லது புகழ்பெற்ற நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளராக பணியாற்றிய அனுபவம் மற்றும் உள்ளூரைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.

ஆண், பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம்.

பன்முக உதவியாளர் (Multi Purpose Helper) (காலிப்பணியிடங்கள்  2):

ஏதாவது அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரருக்கு சமையல் தெரிந்திருக்க வேண்டும்.

உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.6400/- ஆகும்.

விண்ணப்பம் செய்வது எப்படி? 

விரும்பும் பதவிகளுக்கு https://chennai.nic.in/ என்னும் இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் உரிய சான்றிதழ்களுடன் 05.05.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம். 8-வது தளம். சிங்காரவேலர் மாளிகை, இராஜாஜி சாலை, சென்னை-01 என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது chndswosouth@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ விண்ணப்பம் செய்திடுமாறு சென்னை கேட்டுக்கொள்கிறார்.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ரெஸ்யூம் இப்படி இருந்தால் உங்களுக்கு வேலை நிச்சயம்..!

 

பெரிய வேலைகளுக்கும் சரி, சாதாரண ஒரு வேலைக்கும் சரி நமது விபரங்கள் அடங்கிய பயோ டேட்டா அவசியமாகிவிட்டது. ஆனால் ரெஸ்யூம் வலுவாக இருந்தால் வேலை வாய்ப்புகள் மேம்படும் என்கின்றனர் நிபுணர்கள். ஸ்ட்ராங்கான ரெஸ்யூம் என்றால் என்ன? அதில் சேர்க்க வேண்டிய விஷயங்கள் என்ன..? போன்ற விஷயங்களை இங்கே குறிப்பிடுகிறோம்.

ரெஸ்யூம் என்பது வேலைக்கு ஒருவர் தேவை என்று ஆட்சேர்ப்பு செய்பவருக்கு, நமது அனைத்து அம்சங்களையும் விளக்கும் ஒரு ஆவணமாகும். உங்கள் விண்ணப்பம் தீர்க்கமானதாகவும் சிறப்பானதாகவும் இருப்பதை உறுதிசெய்ய, இதில் சில விஷயங்களைச் சேர்க்க வேண்டும்.

1. உங்கள் திட்டங்கள் தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும். ஆனால் முக்கியத்துவத்தை மிகைப்படுத்தாதீர்கள். அவற்றை யதார்த்தமாக விவரிக்கவும்.

2. உங்கள் திறமைகளைக் குறிப்பிடவும். குறிப்பிட்ட நிகழ்வுகளின் மூலம் நீங்கள் தொழில்நுட்ப ரீதியாக எப்படி வளர்ந்தீர்கள் என்ற விவரங்களைச் சேர்க்கவும். பிரச்னைகளை தீர்க்கும் உங்கள் திறன்களை முன்னிலைப்படுத்தவும்.

3. ரெஸ்யூமில் பொய்யான தகவல்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். இப்படிச் செய்தால், வேலை கிடைத்தாலும் வருங்காலத்தில் சிரமங்களைச் சந்திக்க நேரிடும்.

ரெஸ்யூம் என்பது வேலைக்கான அணுகல் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் விண்ணப்பத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல ஆட்சேர்ப்பு நபருக்கு அதிகாரம் உள்ளது. எனவே திறமையான மற்றும் பயனுள்ள ரெஸ்யூமை தயார் செய்யவும். எடுத்துக்காட்டுகள் மற்றும் தரவுகளுடன் உங்கள் திறமைகளை முன்னிலைப்படுத்துவது நல்லது.

ஒரு நேர்காணலுக்கு நீங்கள் நல்ல ரெஸ்யூமுடன் வரும்போது, ​​​​பணியமர்த்துபவர் உங்களுடன் பேசுவது இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் அனைத்து முக்கிய அம்சங்களுடனும் நன்கு தயார் செய்யப்பட்ட ரெஸ்யூம், விண்ணப்பதாரரின் ஆளுமை, வேலைக்கான அர்ப்பணிப்பு, எதிர்கால வாழ்க்கைக்கான தயார்நிலை ஆகியவற்றை பிரதிபலிக்கிறது.

ரெஸ்யூமின் அடிப்படையில் நிறுவனத்திற்கு யார் தேவை, யார் ஒரு குறிப்பிட்ட வேலைக்கு ஏற்றவர் என்பதை பணியமர்த்தல் அலுவலர்கள் முடிவு செய்கிறார்கள். அதாவது இந்த காகிதம் அல்லது PDF தான் உங்கள் தலைவிதியை தீர்மானிக்கும். ஆனால் ரெஸ்யூமில் மிக முக்கியமான ஒரு விஷயம் இருக்கிறது. ரெஸ்யூம்களைப் பிரித்துப் பார்க்க அலுவலர்களுக்கு அதிக நேரம் இல்லாதபோது...

1. நேர்காணல் செய்பவர்கள் விண்ணப்பதாரரின் சிந்தனை தெளிவை மதிப்பிடுகிறார்கள். அடுத்த சுற்றுக்கு முன்னேறும் 43% விண்ணப்பதாரர்கள் அத்தகைய திறனை கொண்டிருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.

2. ஒரு விரிவான ரெஸ்யூம் விண்ணப்பதாரர் மேல் நம்பிக்கையை அதிகரிக்கிறது. அவரின் வெற்றி விகிதத்தை 71 சதவீதம் வரை அதிகரிக்கிறது.

3. நீங்கள் ஒரு மேலாளர் பதவிக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு மேலாண்மையில் அனுபவம் இருக்க வேண்டும். அதனை விபரமாக குறிப்பிட வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகளைக் குறிப்பிடுவது உங்கள் தேர்வுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

தகுதிக்கேற்ற வேலை : தென்காசியில் ஏப்.28-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!

 தென்காசி மாவட்டத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் 28-ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் துரை ரவிச்சந்திரன், தகவல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

தென்காசி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வருகின்ற 28.04.2028 அன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை அலுவலக வளாகத்திலேயே வைத்து நடைபெற இருக்கிறது.

இந்த முகாமில் பல்வேறு தனியார் துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது decksjoblar@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாகவோ அல்லது 04633-213179 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணி நியமனம் பெற்றவர்களது வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என மாவட்ட ஆட்சித்தலைவர் துரை ரவிச்சந்திரன், தெரிவித்துள்ளார்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news