Search

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் ரூ.18,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

 

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் ரூ.18,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

மெட்ராஸ் பல்கலைக்கழகம் ஆனது அதன் காலிப்பணியிடங்களை அவ்வப்போது நிரப்பி வருகிறது. தற்போது Project Fellow பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

University of Madras காலிப்பணியிடங்கள்:

Project Fellow பணிக்கென காலியாக உள்ள ஒரே ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Project Fellow கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc., Biophysics/ Bioinformatics / Biotechnology/ Life Sciences தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

University of Madras வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Project Fellow ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.18,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

University of Madras தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 09.05.2023ம் தேதிக்குள் drgugank@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ஆன்லைன் மூலம் கற்றுத்தரப்படுகிறது.. மாண்டிசோரி கல்வி முறை குறித்து பெண்களுக்கு பயிற்சி..

 

ஆன்லைன் மூலம் மாண்டிசோரி கல்வி முறை குறித்து பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக கோவையில் தேசிய குழந்தைகள் மேம்பாட்டு கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோயம்புத்தூரில் தேசிய குழந்தைகள் மேம்பாட்டு கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் ஆனந்தி கூறியதாவது, “இந்தியாவின் முன்னணி குழந்தைகள் நல அமைப்பான தேசிய குழந்தைகள் மேம்பாட்டு கவுன்சில் புதிய ஆன்லைன் வகுப்புகளை துவங்கியுள்ளது. இதில் மாண்டிசோரி கல்வி முறை குறித்து பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதில் கல்வியை எளிய முறையில் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தல், உபகரணங்களை பயன்படுத்தி குழந்தைகளுக்கு கல்வி பயிற்றுவித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகிறது. 10ம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு என வெவ்வேறு வகையில் பயிற்சி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பயிற்சியும் ஒருவருட காலத்திற்கு நடைபெறும்.

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு சான்றிதழ் படிப்பும், சர்வதேச மாண்டிசோரி கல்வியில் (Montessori education) டிப்ளமோ பயில்வதற்கு பிளஸ் டூ தேர்வு பெற்றிருக்க வேண்டும். சர்வதேச மாண்டிசோரி கல்வியில் முதுகலை டிப்ளமோ படிக்க ஏதேனும் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தினமும் இணையம் மூலமாக இந்த வகுப்புகள் நடைபெறுகின்றன. இதுகுறித்து விவரங்களுக்கு https://ncdconline.org/ என்ற இணையத்தை பார்வையிடலாம். அல்லது 9288026146 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்” இவ்வாறு ஆனந்தி கூறினார்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

இலவச தையல் கலை பயிற்சி பெண்கள் பங்கேற்க அழைப்பு...

ஈரோடு: கனரா வங்கி கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், பெண்களுக்கான இலவச தையற்கலை பயிற்சி வரும், 10ல் துவங்குகிறது.

ஜூன் 13 வரை 30 நாட்கள் நடக்கிறது.பயிற்சி, சீருடை, உணவு இலவசம். பயிற்சி முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். ஈரோடு மாவட்ட கிராம பஞ்சாயத்துக்களை சேர்ந்த, 18 முதல், 45 வயதுக்குட்பட்ட பெண்கள் மட்டும் பயிற்சியில் சேர அனுமதிக்கப்படுவர்.வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் அல்லது 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் இருப்பவர்கள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பயிற்சியில் சேரலாம். 

பயிற்சியில் சேர முன் பதிவு அவசியம். ஈரோடு கொல்லம்பாளையம், பைபாஸ் ரோடு ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலை பள்ளி வளாகத்தில் உள்ள கனரா வங்கி கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. சேர விரும்புவோர், 8778323213, 7200650604, 0424 - 2400338 என்ற எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.



சுருக்கெழுத்து பயின்றால் இவ்வளவு வேலை வாய்ப்புகளா? நெல்லை சுருக்கெழுத்து பயிற்றுனர் விளக்கம்!

 சுருக்கெழுத்து பயின்றால் எண்ணற்ற வேலை வாய்ப்புகள் உள்ளதாக நெல்லை சுருக்கெழுத்து பயிற்றுனர் இளங்கோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர்,  சுருக்கெழுத்தில் 5 நிலைகள் உள்ளன. தமிழ்நாடு அரசு வருடத்திற்கு இரண்டு முறை தேர்வுகள் நடத்தில் சான்றிதழ்களை வழங்குகின்றன. 

நீதிமன்றங்களில் சுருக்கெழுத்துப் பணி, பிரபல நிறுவனங்களில் அதன் தலைமை அதிகாரிக்கு குறிப்பெடுக்கும் பணி என்று வேலை வாய்ப்புகள், மிகப் பெரிய வழக்கறிஞர்கள் தனக்கென்று ஒரு சுருக்கெழுத்தாளரைப் பணியில் வைத்திருப்பார்கள். 

நீதிபதிகள் தீர்ப்புகளை தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ சொல்வதை சுருக்கெழுத்தில் எழுதி தட்டச்சு செய்வார்கள். பெரிய அதிகாரிகள் தான் பேச வேண்டிய கூட்டத்தில் பேசவேண்டியதை கூற சுருக்கெழுத்தாளர்கள் எழுதி தட்டச்சு செய்து கொடுப்பார்கள். எனவே இதுகுறித்து தெரியாத மாணவர்களும் இனி சுருக்கெழுத்து பயில அருகே உள்ள பயிற்சி நிலையத்தை நாட வேண்டும்.

சுருக்கெழுத்து தேர்வு எழுத குறைந்தது 10ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். 9ஆம் வகுப்பு படிக்கும் போதே சுருக்கெழுத்து பயில ஆர்வம் உள்ள மாணவர்கள் வந்துவிடுகிறார்கள். இதனை படிக்க வயது என்பது தடை கிடையாது. சுருக்கெழுத்து ஆங்கிலம் படிக்க பிட்மேன் முறையும் தமிழுக்கு ஸ்ரீனிவாசராவ் முறை மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

மாதம் ரூ.58 ஆயிரம் வரை சம்பளம் : திருச்சி ஜம்புகேஸ்வரர் கோயிலில் பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

 திருச்சி மாவட்டம், திருவானைக்காவல், அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் 7 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு இந்து மதத்தைச்சார்ந்த தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். நேரடி நேர்காணல் மூலம் தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 11.05.2023 மாலை வரை விண்ணப்பங்களை அனுப்பலாம்.

பணி விவரம்

பணி விவரம்காலிப்பணியிடங்கள்சம்பளம்
தட்டச்சர்118,500-58,600
உதவி மின்பணியாளர்116,600-52,400
காவலர்415,900-50,400
பெருக்குபவர்115,900-50,400

வயது

விண்ணப்பதாரர் 01.07.2023-ம் தேதி அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். https://hrce.tn.gov.in/resources/docs/templescroll_doc/25706/1313/document_1.pdf

விண்ணப்பத்தோடு இணைக்கப்பட வேண்டியவை..

1.பிறந்த தேதியை சரிபார்க்க பள்ளி சான்று நகல்

2.ஆதார் அட்டை நகல்

3.இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதை நிரூபிக்க சாதி சான்று நகல்

4.கல்வி சான்று நகல்

5.நன்னடத்தைச்சான்று

6.அனுபவ சான்று நகல்

7.சுயவிலாசமிட்ட ரூ.25/- மதிப்புள்ள அஞ்சல் தலை ஒட்டிய அஞ்சல் 8.உறை ஒன்று.

விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்ப படிவத்தில் கேட்டுள்ள விவரங்களை சரியாக பூர்த்தி செய்யவும்.

3  மேலே குறிப்பிட்டுள்ள சான்றுகளை இணைக்கவும்.

முழுமையான விண்ணப்பத்தை உரிய சான்றுகளுடன் அஞ்சல் உறையில் பணியிடை வரிசை எண் மற்றும் எந்த பணியிடத்திற்கான விண்ணப்பம் என தெளிவாக குறிப்பிட்டு கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

உதவி ஆணையர்/செயல் அலுவலர்,

அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில், திருவானைக்காவல், திருவரங்கம் வட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 620005

விண்ணப்பிக்க கடைசி நாள்:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 11.5.2023 அன்று மாலை 5.45 மணிக்குள் மேற்கண்ட முகவரியை வந்தடைய வேண்டும்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ஆவின் நிறுவனத்தில் வேலை.. ரூ.43,000 வரை சம்பளம் - வெளியான சூப்பர் அறிவிப்பு

 Aavin Jobs 2023: கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் காலியாக உள்ள கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவி: கால்நடை மருத்துவ ஆலோசகர்

காலியிடங்கள் எண்ணிக்கை: 1

கல்வியறிவு: கால்நடை மருத்துவ படிப்பு B.V.SC & A.H, கணினி அறிவு இருக்க வேண்டும். கண்டிப்பாக இருசக்கர ஓட்டுனர் உரிமம் கொண்டிருக்க வேண்டும். கணினி செயல்திறன் அறிவு பெற்றிருக்க வேண்டும். கிராமப் புற பால் பண்ணைகளில் பணி செய்ததற்கான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் எதிர்வரும் மே மாதம்  17ம் தேதி காலை 11 மணி அளவில் படிப்பு (B.V.SC & A.H ), ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களுடன் நேரடி நியமனத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

நேரடி தேர்வு நடைபெறும் இடம்:  The Kanyakumari District Cooperative Milk Producers Union Ltd., K.P.Road,

Nagercoil – 629 003. , Tamil Nadu .

Email : aavinkk@gmail.com

Tel : 04652 - 230356

Fax: 04652-230785 ஆகும்.

இந்த பணி முழுக்க முழுக்க ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும் பணி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு: ரூ. 1 லட்சம் வரை மாதச் சம்பளம்

 தமிழ்நாடு தடயவியல் அறிவியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய  இளநிலை அறிவியல் அலுவலர் பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையயம் வெளியிட்டுள்ளது. விண்ணப்பங்கள் சமர்பிப்பதற்குறிய கடைசி நாள் 26.05.2023 ஆகும்.

காலியிடங்கள் எண்ணிக்கை: 31

வயது வரம்பு: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் பொது பிரிவு விண்ணப்பதாரர், 01.07.2023 அன்று 18 -32 வயதுக்குள் இருக்க வேண்டும். ஏனைய பிரிவினருக்கும், அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பு இல்லை.

கல்வித் தகுதி: தடவியல் அறிவியல்  படிப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்

(அல்லது)

இயற்பியல், வேதியியல், உயிரியியல், இயற்பியல் & வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.36,900 – 1,35,100/-(நிலை-18)

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் மற்றும் வாய்மொழித் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், பணியிட ஒதுக்கீடு விதி ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு முறை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கான பாடத்திட்டம் :

விண்ணப்பம் செய்வது எப்படி: விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.inwww.tnpscexams.in ஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முன்பு ஆதார் எண் மூலம்ஒருமுறைப்பதிவு எனப்படும் நிரந்தரப்பதிவு (OTR) மற்றும் தன்விவரப்பக்கம் (Dashboard) ஆகியன கட்டாயமாகும். விண்ணப்பதாரர்கள் நிரந்தர பதிவு மூலம் பதிவுக்கட்டணமாக ரூ.150/- ஐ செலுத்தி, பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஒருமுறைப்பதிவு, பதிவு செய்த நாள் முதல் ஐந்தாண்டுகள் வரை நடைமுறையிலிருக்கும், தங்களுக்குரிய ஒரு முறைப் பதிவு கணக்கு (One Time Registration ID) மற்றும் கடவுச் சொல் மூலமாக மட்டுமே விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

தொழில் தொடங்க திட்டமிடுகிறீர்களா? அரசின் இந்த செய்தி உங்களுக்குத் தான்

 தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், பொருட்கள் சேவை மற்றும் வரி மற்றும் மின் வழிச் சீட்டு  (GST and E-way Billing (Advance) குறித்து இணையவழி பயிற்சி வழங்க உள்ளது.

இப்பயிற்சியில் பொருட்கள் சேவை மற்றும் வரி மற்றும் மின் வழிச் சீட்டு , அடிப்படை கணக்குகள் விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள் போன்றவை பயிற்றுவிக்கப்படும். மேலும். இப்பயிற்சியில் அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விவாதிக்கப்படும்.

03.05.2023 தேதி முதல் 05.05.2023-ம் தேதி வரை  3 நாட்கள் இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சிக்கு முன்பதிவு அவசியம் என்பதால் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில்(திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள்: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை பார்த்தசாரதி கோயில் தெரு, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை- 600032 ஆகும்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

குழந்தைகள் உயரமாக வளர வேண்டுமா... ‘இந்த’ உணவுகளை டயட்டில் சேர்க்கவும்!

 

குழந்தைகள் உயரமாக வளர வேண்டுமா... ‘இந்த’ உணவுகளை டயட்டில் சேர்க்கவும்!

குழந்தை பிறந்தது முதலே பெற்றோர்கள் அவர்களுக்கு சரியான நேரத்தில் உணவை கொடுத்து பசியாற்ற வேண்டும் என்பது பற்றி அதிக அக்கறை காட்டுகின்றனர் என்பது உண்மை தான். ஆனால் குழந்தைக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்கிறதா என்பதிலும் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் . உணவில் ஊட்டச்சத்து மதிப்பு இல்லை என்றால், குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சி சாத்தியமில்லை. குழந்தைகளின் வளர்ச்சியில் ஏற்படும் பாதிப்பு அல்லது குறைபாடு என்பது அவர்களது உடல் நலத்தில் மட்டுமல்ல, மன நலன் மற்றும் தன்னம்பிக்கையை பாதிக்கும் என்பதை பெற்றோர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

குழந்தைகள் உடல் எடை கூடுவதை போல் அவர்கள் உயரமும் அதிகரிக்க வேண்டும். 2-10 வயதுக்கு இடையில், குழந்தைகள் சீரான வேகத்தில் வளர்கிறார்கள், ஆனால் குழந்தைகள் வளர வளர உயரமாக ஆவதன் வேகம் குறைகிறது. 15 - 18 வயது வரை வளர்ச்சி என்பது சிறிது குறைவாகவே இருக்கும். பிறந்த குழந்தையின் மாதாந்திர வளர்ச்சியைக் கண்காணிப்பது எந்தளவுக்கு முக்கியமோ, அதேபோல குழந்தைகள் வளர வளர அவர்களின் வளர்ச்சியைக் கண்காணிப்பதும் அவசியம். 

இப்போதெல்லாம் குழந்தைகள் ஃபாஸ்ட் மற்றும் ஜங்க் ஃபுட்களை அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை அவை நல்லதல்ல. எனவே குழந்தைகளின் உயரம் அதிகரிக்க உதவும் உணவுகளை உண்பதன் மூலம் அவர்கள் உயரத்திலும் நன்றாக வலர்வார்கள்.

குழந்தைகளின் உயரம் அதிகரிக்கும் சில உணவுகள்!

1. பால்

ஏறக்குறைய அனைத்து வகையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் இதில் காணப்படுவதால், பால் ஒரு முழுமையான உணவு என்பதில் சந்தேகமில்லை. இதில் உள்ள கால்சியம் மற்றும் புரோட்டீன் குழந்தைகளின் எலும்புகள் மற்றும் தசைகளின் வளர்ச்சிக்கு கணிசமாக பங்களிக்கின்றன, எனவே உங்கள் குழந்தைகளுக்கு காலையிலும் மாலையிலும் பால் கொடுங்கள். இதனால் குழந்தைகளின் வளர்ச்சியும் சீராக அதிகரிக்கிறது.

2. பச்சை இலை காய்கறிகள்

சில குழந்தைகள் பச்சை இலைக் காய்கறிகளை சாப்பிட விரும்ப மாட்டார்கள். மாறாக அவர்கள் எண்ணெய் அல்லது நொறுக்குத் தீனிகளை விரும்புகிறார்கள், ஆனால் இரும்பு, மெக்னீசியம், நார்ச்சத்து, ஃபோலேட், பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் ஏ ஆகியவற்றைக் கொண்டிருப்பதால், பச்சைக் காய்கறிகளை உண்ணும்படி பெற்றோர்கள் குழந்தைகளை வற்புறுத்துவது முக்கியம். இதிலுள்ள வைட்டமின் சி, வைட்டமின் கே ஆகியவை குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்க உதவும். முட்டைகோஸ், பிராக்கோலி மற்றும் கீரைகள் ஆகிய பச்சை இலைக் காய்கறிகளில் காணப்படும் கால்சியம் குழந்தைகளின் எலும்பு மறு உருவாக்கம், எலும்பு திசுக்கள் உருவாக்கத்திற்கு உதவுகிறது.

3. பழங்கள்

அனைத்து வயதினரும் பழங்களை சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள், ஏனெனில் அவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். வளர்ச்சிக்கு உதவும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களுக்கு பற்றாக்குறை இல்லை என்று நீங்கள் விரும்பினால், இன்றிலிருந்து குழந்தைகளுக்கு பழங்களை ஊட்டத் தொடங்குங்கள். சீசனில் கிடைக்கும் பழங்களை கொடுப்பது மிகவும் சிறந்தது. ஏனேனில் சீசனில் கிடைக்கும் அந்தந்த பழங்களை உட்கொள்வதன் மூலம் அதன் ஊட்ட சத்துக்களை முழுமையாக பெறலாம்.

4. முட்டை

முட்டை புரதத்தின் வளமான ஆதாரமாக அறியப்படுகிறது. காலை உணவில் உங்கள் குழந்தைகளுக்கு வேகவைத்த முட்டைகளை கொடுக்க வேண்டும். புரதம் தவிர, இதில் கார்போஹைட்ரேட் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. இது உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் சாதகமான விளைவை ஏற்படுத்தும். சூப்பர் புட் என கருதப்படும் முட்டையின் வெள்ளைக் கருவில் குளோரின், மெக்னீஷியம், பொட்டாஷியம், சோடியம், சல்பர், துத்தநாகம் ஆகிய ஊட்டச்சத்துக்களும், மஞ்சள் கருவில் டி, பி 12, ஏ, இ, கே, பி 6 போன்ற வைட்டமின்களும் அடங்கியுள்ளன. இவை குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவும்.

5. பருப்பு வகைகள்

பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளில் அதிக அளவு நார்ச்சத்து, புரதம், வைட்டமின் பி போன்ற முக்கியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ள. அவை உங்கள் குழந்தையின் வளர்ச்சி மற்றும் உயரத்தை அதிகரிக்க உதவுகிறது. எனவே குழந்தைகளுக்கான உணவுகளில் தினமும் பருப்புகளை சேர்க்க வேண்டும். இது குழந்தைகளின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு உதவும். 


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

பிரிட்ஜ் தண்ணீருக்கு NO சொல்லுங்க..! பானை தண்ணீரின் நன்மைகள் இதோ..!

 இந்த ஆண்டு வழக்கத்தை விட எல்லா பகுதிகளிலும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. காலை 10 மணிக்கெல்லாம் வெளியிலின் கடுமை அதிகரித்து மாலை 5 மணி வரை நீடிக்கிறது. சூரிய கதிர்கள் வெளியில் செல்வோரை குத்துகின்றன. இந்த நேரத்தில் அனைவரும் தற்காத்துக் கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் ஆரோக்கிய சிக்கலை எதிர்கொள்ள நேரிடும். குறிப்பாக அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். 

உடலில் நீர் சத்தை தக்க வைக்க அவரவர் உடலுக்கு ஏற்ப போதுமான அளவு தண்ணீரை பருக வேண்டும். அதேநேரத்தில் சூட்டை தணிக்க பலரும் பிரிட்ஜ் தண்ணீருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதனைவிட பானை நீரில் பல ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. இதனை தெரிந்து கொண்டீர்கள் என்றால் நீங்களும் பானை தண்ணீருக்கு மாறிவிடுவீர்கள். 

குளிர்ந்த நீர்

பொதுவாக, வெயிலின் காரணமாக நாக்கு அடிக்கடி வறண்டு போய் காணப்படும். இதனால், அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால், வெயிலின் காரணமாக பிளாஸ்டிக் வாட்டர்பாட்டில், குடம் உள்ளிட்டவற்றில் இருக்கும் போது அதனுடன் சேர்ந்து, நீரும் சூடாகி விடும். இந்த சூடான நீரைக் குடிக்கும் போது, நமக்கு தாகம் அடங்காமல் இருக்கும். எனவே, தாகம் தணிய குளிர்ந்த நீரைப் பருகலாம்.

ஃபிரிட்ஜ் நீரைக் குடிக்கலாமா.?

தற்போதைய கால கட்டங்களில் குளிர்ந்த நீர் என்றால் எல்லோருக்கும் முதலில் ஞாபகத்திற்கு வருவது குளிர்சாதனப்பெட்டி தான். ஆனால், நாம் வெயிலில் சென்று வந்து உடனே குளிர்சாதனப் பெட்டியில் உள்ள நீரைப் பருகும் போது உடல் சூடு அதிகமாவதை உணரலாம். அதே சமயம், இந்த குளிர்ச்சி இருமல், சளி உள்ளிட்டவற்றை வரவைக்கலாம். எனவே, பெரும்பாலும் ஃபிரிட்ஜ் நீரைப் பருகாமல் இருப்பது நல்லது.

பானை தண்ணீர்

ஃபிரிட்ஜ் நீர் வேண்டாம் என்றால், வேறு எந்த நீர் குளிர்ச்சியாக இருக்கும். நம் முதியோர்களின் நடைமுறையாக விளங்கிய பானைத் தண்ணீர் உடலுக்கு மிக அதிக நன்மைகள் அளிக்கிறது. அதே சமயம், நோய் தடுப்பானாகவும் உதவுகிறது. களிமண்ணால் செய்யப்பட்ட களிமண் பானை இயற்கையான முறையில் தண்ணீரை சேமிக்கும் சிறந்த வழியாகும். இதிலிருந்து தண்ணீர் குடிப்பதால், நாம் பல்வேறு விதமான நன்மைகளைப் பெறலாம்.

மண்பானை நீரின் நன்மைகள்

இயற்கையான குளிர்ச்சி

களிமண் பானையில் சேமித்து வைக்கப்படும் நீர் சரியான வெப்பநிலையில் இருக்கும். எனவே, இது குளிர்ச்சியை அளிக்கிறது. அதே சமயம், தொண்டை இதமாகவும், மென்மையாகவும் இருக்கும்.

பக்கவாதம் வராது

பொதுவாக, கோடைக் காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது, சூரியக் கதிர்களால் பக்கவாதம் ஏற்படும். மண் பானையில் சேமித்து வைக்கப்பட்ட நீரைப் பருகும் போது, அதிலுள்ள தாதுக்கள், வைட்டமின்கள் போன்றவை நம் உடலைக் குளிரூட்டுவதுடன், குளுக்கோஸின் அளவைப் பராமரிக்கிறது. இது சன் ஸ்ட்ரோக் எனப்படும் சூரியக் கதிர்களால் ஏற்படும் பக்கவாதத்தைக் குறைக்கிறது.

நச்சுத்தன்மை இல்லாதது

களிமண் பானையில் உள்ள தண்ணீரில் எந்த வித நச்சு இரசாயனங்களும் இருக்காது. எனவே, இந்த தண்ணீர் குடிப்பது உடலுக்கு நன்மை தரும்.

பருவகால நோய்களை சரிசெய்ய

கோடை வெப்பத்தால், சரும நோய், அம்மை உள்ளிட்ட உடல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம். மண் பானை நீரில் இருக்கக் கூடிய கனிம சத்துக்கள் இந்த பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.

மெட்டபாலிசம் அதிகரிப்பு

சாதாரண நீரை விட, களிமண் பானையில் சேமித்து வைக்கும் நீரைக் குடிப்பதன் மூலம், உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு சமன் செய்யப்படுகிறது. இது உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip