Search

வெயிலில் இருந்து தப்பிக்க என்ன வழி...? மருத்துவர் சொல்லும் டிப்ஸ் இதோ...!

 தமிழ்நாடு முழுவதும் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றும் பட்சத்தில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்று மருத்துவர் சரவணன் பாரதி தெரிவித்துள்ளார். 

1. வெயில் காலத்தில் பருத்தி உடைகளை உடுத்த வேண்டும்.

2. உடலை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணிய கூடாது.

3. வெயில் நேரத்தில் வெளியே சென்றால் குடை எடுத்து செல்லலாம்.

4. வெயிலில் வேலை பார்க்கும் நேரத்தை குறைக்க வேண்டும்.

5. நாள்தோறும் ஆண்கள் 4 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.

6. பெண்கள் 3 லிட்டர் வரை தண்ணீர் பருக வேண்டும்.

7. பெண்கள் ஜீன்ஸ் போன்ற ஆடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும்.

8. ஏசி அறையில் இருப்பவர்கள் நீர் பருகாவிட்டால் உடல் சோர்வு ஏற்படும்.

9. நீச்சல் குளங்களுக்கு செல்லும் போதும் தண்ணீர் பருக வேண்டும்.

10. குளிர் பானங்களில் சர்க்கரை அதிகமாக இருக்கும்.

11. பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட குளிர் பானங்களை தவிர்க்கலாம்.

12. குழந்தைகளை மதியம் 12 முதல் 4 மணி வரை வெளியே அனுமதிக்க கூடாது.

13. குழந்தைகள் வீடு திரும்பியதும் கை, கால்களை கழுவி விட வேண்டும்.

14. பெரியவர்களுக்கு நீர் ஆதாரங்களை அதிகளவில் தர வேண்டும்.

15. நீர் சத்து உள்ள பழங்கள், இளநீர், நுங்கு சாப்பிடுவது அவசியம்.


 Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

எப்பவும் வேலை வேலைன்னு இருக்காம உங்களையும் கொஞ்சம் கவனித்துக்கொள்ள இதை ஃபாலோ பண்ணுங்க..!

 எப்பொழுதும் வீடு, அலுவலகம், குழந்தைகள், கணவன் என்று அனைவரையும் கவனித்துக் கொண்டிருக்கும் பெண்கள் தங்களை பார்த்துக் கொள்ள மறந்து விடுகிறார்கள். பெண்கள் தங்களின் ஆரோக்கியத்தை காட்டிலும் தங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

பெரும்பாலான பெண்கள் இந்த தவறை தான் செய்கிறார்கள். நேரத்திற்கு சாப்பிடாமல், ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் ஏனோ தானோ என்று தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.

இது பெண்களின் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் கேடு விளைவிக்கும். குறிப்பாக பெண்கள் தங்கள் உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் ஆண்களின் உடலைக் காட்டிலும் பெண்களின் உடல் பல மாற்றங்களுக்கு உட்படுகிறது. எனவே பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். ஒரு வேலை நீங்களும் எல்லா நேரமும் பிசியாக இருந்து, உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாத ஒரு பெண்ணாக இருந்தால் இந்த பதிவில் உங்களுக்கான ஒரு சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை முறையாக பின்பற்றுவதன் மூலமாக நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக கவனித்துக் கொள்ளலாம்.

உணவுகளை சாப்பிடாமல் தவிர்ப்பது அல்லது போதுமான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடாதது பலவிதமான உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதுபோன்ற உடல்நல பிரச்சனைகளில் இருந்து உங்களை காத்துக் கொள்ள நீங்கள் பின்பற்ற வேண்டிய எட்டு விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பெரும்பாலும் பெண்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதற்கு அவர்களுக்கு சமச்சீரான மற்றும் ஆரோக்கியமான உணவு அவசியம் தேவை. பெண்கள் தங்கள் ஊட்டச்சத்து தேவைகளை கவனித்து ஆரோக்கியமாக இருக்க கட்டாயமாக ஒரு சில முயற்சிகளை எடுக்க வேண்டும்.

முதலில் ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுக்க பழகிக் கொள்ளுங்கள். புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். மேலும் சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை முடிந்தவரை தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
தினமும் கால்சியம் நிறைந்த உணவு பொருட்களை சாப்பிடுங்கள். ஒவ்வொரு பெண்ணும் தினமும் குறைந்தபட்சம் இரண்டு கால்சியம் நிறைந்த உணவுகளையாவது சாப்பிடுவது அவசியம்.
உங்கள் உணவுகளில் எலுமிச்சைகளை சேர்க்க முயற்சி செய்யுங்கள். எலுமிச்சை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
முந்தைய நாள் இரவு தூங்கும் பொழுது நான்கைந்து பாதாம் பருப்புகளை ஊற வைத்து விடுங்கள். அடுத்த நாள் காலையில் பாதாமை தோல் உரித்து அதனை சாப்பிடவும். இந்த பழக்கத்தை தினமும் கடைபிடிப்பது உங்கள் ஆரோக்கியத்தில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும்.
தினமும் முளைகட்டிய பயிர்களை சாப்பிடும் பழக்கத்திற்கு வாருங்கள்.
ஒரே நேரத்தில் அதிகப்படியான உணவை சாப்பிடுவதை தவிர்க்கவும். இது செரிமானத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். ஆகவே முடிந்தவரை உணவுகளை பிரித்து சிறிய அளவுகளாக சாப்பிடவும்.
உணவுகளை தவிர்த்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை சிற்றுண்டிகளை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் சிற்றுண்டிகள் பொறுத்தவரை ஆரோக்கியமான சிற்றுண்டிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். பழ வகைகள், நட்ஸ் மற்றும் விதைகள் போன்றவை ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் வகைகள் ஆகும். மேலும் உணவுகளை தவிர்ப்பது முற்றிலுமாக தவறு ஒருபோதும் அதனை செய்ய வேண்டாம்.
உங்கள் வேலை மற்றும் வாழ்க்கையாகிய இரண்டிற்கும் இடையில் சமநிலையை உருவாக்க கற்றுக் கொள்வதன் மூலமாக உங்களுக்கு இருக்கக்கூடிய மன அழுத்தத்தை நிர்வகிக்க தெரிந்து கொள்ளுங்கள். யோகா, தியானம், ஆடல், நடைப்பயிற்சி போன்றவற்றை செய்வது உங்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவும்.
உடற்பயிற்சி செய்வதற்காக நேரத்தை ஒதுக்குங்கள். இதனை தவறாமல் தினந்தோறும் செய்தல் வேண்டும்.



 Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

TNPSC, UPSC தேர்வுகளுக்கு உண்டு உறைவிட இலவசப் பயிற்சி

 TNPSC (Group-1), UPSC (IAS, IPS) தேர்வுகளை எழுத உள்ளவர்களுக்காக உண்டு உறைவிட இலவசப் பயிற்சியை சேவாபாரதி வழங்கி வருகிறது.


இது தொடர்பாக சேவாபாரதி தமிழ்நாடு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இயற்கை சீற்றங்களான சுனாமி, பெருமழை போன்ற காலங்களிலும் கொரானா பெருந்தொற்றுக் காலத்திலும் சேவாபாரதி தமிழ்நாடு அரும் சேவை புரிந்ததை அனைவரும் அறிவர். மேலும், பல அரிய சேவைகளை சேவாபாரதி வருடம் முழுவதும் வழங்கி வருகிறது. கல்விச் சேவையின் ஒரு பகுதியாக, சென்னை அண்ணா நகரில், பாரதி பயிலகம் எனும் மத்திய, மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு போட்டித் தேர்வு மையத்தை கடந்த 2021ல் துவக்கி சேவாபாரதி நடத்தி வருகிறது.

சேவாபாரதியின் இப்பணியில் பி.எல்.ராஜ் ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். அகடமி இணைந்து மாணவர்களுக்குப் பயிற்சியளித்து வருகிறது. பி.எல். ராஜ் ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். அகடமி கடந்த 16 ஆண்டுகளாக, இந்தப் பணியில் சிறப்பான சேவையைச் செய்து வருகிறது. கடந்தாண்டு, பாரதி பயிலகம் தமிழக அரசின் குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கும், குரூப் 2 முதன்மை தேர்வுக்கும் மாணவர்களை தயார் செய்தது.

மேலும் அதில் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் பிற மாணவர்களுக்கும் ஒரு புதிய திட்டத்தை பாரதி பயிலகம் அறிமுகப்படுத்த இருக்கிறது. வருகின்ற ஜூன் 2023 முதல், டி.என்.பி.எஸ்.சி. (குரூப்-1), யு.பி.எஸ்.சி (ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்)., தேர்வுகளுக்கு ஓராண்டிற்கு ஒருங்கிணைந்த பயிற்சி அளித்து மாணவர்கள் அரசுப் பணியில் சேரும் அரிய வாய்ப்பை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பின் தங்கிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கும், சமுதாயத்தில் / பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். இருபாலரும் விண்ணப்பிக்கலாம். பயிற்சியின் போது, ஓராண்டுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் பயிற்சி முற்றிலும் இலவசமாக அளிக்கப்படும்.

இதில் சேர மே-25க்குள், contactbharathi57@gmail.com என்ற இ-மெயில் ஐடியில், மாணவர்கள் தங்கள் முழுவிவரத்துடன் (Bio-Data) விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பித்தவர்களுக்கு நுழைவுத் தேர்வும், நேர்முகத் தேர்வும் நடத்தி, சேவாபாரதி, பாரதி பயிலகம், பி.எல்.ராஜ் ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். அகடமியின் குழுவால் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண். 9003242208" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.43,000 வரை சம்பளம்... ஆவின் நிறுவனத்தில் வேலை : வெளியானது முக்கிய அறிவிப்பு

 Aavin Recruitment 2023: கன்னியாகுமரிநேரடி தேர்வு நடைபெறும் இடம்: கன்னியாகுமரி  மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலகம், நாகோர்கோயில் - 629 003, மின்னஞ்சல் முகவரி: aavinkk@gmail.com, தொலைபேசி எண். 04652 - 230356 ஆகும்.

இந்த பணி முழுக்க முழுக்க ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும் பணியாகும். பணியின் காலம் ஓராண்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் காலியாக உள்ள கால்நடை மருத்துவ ஆலோசகர் (Veterinary Consultant) பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலியிட விவரங்கள்:

பதவியின் பெயர்:கால்நடை மருத்துவ ஆலோசகர் பணி (Veterinary consultant)
காலியிடங்கள் எண்ணிக்கை1
கல்வித் தகுதிகால்நடை மருத்துவ படிப்புB.V.SC & A.H with Computer Knowledge
பணி காலம்ஓராண்டு
கூடுதல் நிபந்தனைகள்கண்டிப்பாக இருசக்கர ஓட்டுனர் உரிமம் கொண்டிருக்க வேண்டும்
சம்பளம்ரூ. 43,000

ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் எதிர்வரும் மே மாதம் 17ம் தேதி காலை 11.30 மணி அளவில் படிப்பு (B.V.SC & A.H ), ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களுடன் நேரடி நியமனத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.


மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை: உடனே விண்ணப்பியுங்கள்

 Pudukkottai District Job Alerts: புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் வழியாக திட்டங்கள் மற்றும் நிர்வாக உதவியாளர் (Program cum Administrative Assistant) பணியிடம் புதிதாக தோற்றுவிக்கப்பட்டு உள்ளது.

அப்பணியிடத்தை ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்காலிக ஊழியரை பணியமர்த்த தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது எனவும், வரும் காலங்களில் பணிநிரந்தரம் செய்யப்படாது என்று தெரிவிக்கப்படுகிறது.

ஊதியம்:  ஒப்பந்த மாத ஊதியமாக ரூ.12,000- வழங்கப்படும்.

அடிப்படைத் தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகங்களில் இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

முன் அனுபவம்: தேசிய நலக்குழுமம் மற்றும் சுகாதார திட்டங்கள் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக MS Office மென்பொருளில் சரளமாக பணியாற்றுவதற்கான ஓராண்டு முன்அனுபயம் பெற்றிருக்க வேண்டும்.

கணக்குப்பதிவியல் மற்றும் கடித வரைவுகளில் நல்ல திறமைகள் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரருக்கு 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், புதுக்கோட்டை மாவட்ட அலுவலகத்தில் 15.05.2023 முதல் 20.05.2023 மாலை 5.00 மணி வரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

NHRC-ல் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || முழு விவரங்களுடன்!

 NHRC-ல் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || முழு விவரங்களுடன்!

National Development Corporation Limited எனப்படும் NHRC ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Sr. Manager, Company Secretary, Junior Officer பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.20,000/- முதல் ரூ.200000/- வரை ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Sr. Manager, Company Secretary, Junior Officer பணிக்கென காலியாக உள்ள 14 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree in Law, Degree, Chartered Accountant, MBA தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.20,000/- முதல் ரூ.200000/- வரையிலான ஊதியம் வழங்கப்படும்.
  • தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பதாரர்கள் Interview, Typewriting test & Group Discussion மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பிக்கும் முறை:

    ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 15.05.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    Download Notification PDF 

     Click here for latest employment news

     Click here to join WhatsApp group for Daily employment news

BECIL ஆணையத்தில் Junior Technical Officer காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

 BECIL ஆணையத்தில் Junior Technical Officer காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

Junior Technical Officer, MTS, Heavy Motor Vehicle Driver, DEO மற்றும் பல்வேறு பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை BECIL ஆணையம் ஆனது சமீபத்தில் வெளியிட்டது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் 12ம் வகுப்பு / BUMS / BAMS / Graduation / MBA/ Masters Degree / M.D / LLB / B.Tech /B.E. / MCA தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Junior Technical Officer, MTS, Heavy Motor Vehicle Driver, DEO மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 25 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
  • அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் 12ம் வகுப்பு / BUMS / BAMS / Graduation / MBA/ Masters Degree / M.D / LLB / B.Tech /B.E. / MCA தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.18,000/- முதல் ரூ.1.2 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
  • விண்ணப்பிக்கும் முறை:

    ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 15.05.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

     

     Click here for latest employment news

     Click here to join WhatsApp group for Daily employment news


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

 தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் General Manager (Legal), Deputy General Manager (Technical) பணிக்கென காலியாக உள்ள 42 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree in Law தேர்ச்சியுடன் 14 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • General Manager (Legal), Deputy General Manager (Technical) பணிக்கென காலியாக உள்ள 42 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree in Law தேர்ச்சியுடன் 14 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • 56 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு Level 12 மற்றும் 13 அளவிலான ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் Deputation மற்றும் Promotion அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 15.05.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

HDFC வங்கியில் காத்திருக்கும் சூப்பர் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

 

HDFC வங்கியில் காத்திருக்கும் சூப்பர் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

HDFC வங்கி ஆனது Sales Mgr, Customer Care Executive பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

HDFC காலிப்பணியிடங்கள்:

Sales Mgr, Customer Care Executive பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Customer Care Executive கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

HDFC வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Customer Care Executive முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 30 ஆண்டுகள் வரையிலான முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

HDFC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


Indigo Airlines-ல் Ground staff காலிப்பணியிடங்கள் – டிகிரி தேர்ச்சி போதும் || உடனே விண்ணப்பியுங்கள்!

 

Indigo Airlines-ல் Ground staff காலிப்பணியிடங்கள் – டிகிரி தேர்ச்சி போதும் || உடனே விண்ணப்பியுங்கள்!

Ground staff பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை Indigo Airlines தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Indigo Airlines காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Ground staff பணிக்கென பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Ground staff கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு Degree தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Indigo Airlines வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Ground staff முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 1 முதல் 5 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

Indigo ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு Indigo Airlines-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

Ground staff தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 18.05.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news