Search

வாழைப்பழம், முட்டை மட்டுமே சாப்பிட்டால் உடல் எடை குறையுமா..? ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்வது என்ன..?

 இன்றைக்கு மாறிவரும் உணவு பழக்கவழக்கங்களால் உலகில் பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது உடல் எடை அதிகரிப்பு தான். இதன் கூடவே பல உடல் நலப்பிரச்சனையும் சந்திக்கும் நிலை ஏற்படுவதால் எப்படியாவது அதிகரித்த எடைகை் குறைக்க வேண்டும் என்று பல முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.

குறிப்பாக டயட்டில் இருப்பது முதல் உடற்பயிற்சி செய்வது போன்ற பல விஷயங்களை தொடர்ச்சியாக கடைபிடித்துவருகின்றனர். இருந்த போதும் சில நேரங்களில் முயற்சியில் தோல்வியை சந்திக்கின்றனர். இந்த சூழலில் தான், மோனோ டயட் அல்லது மோனோட்ரோபிக் டயட் போன்ற புது விதமான டயட் முறையைப் பலர் பின்பற்ற தொடங்குகின்றனர். எனவே மோனா டயட் என்றால் என்ன..? இந்த டயட்டில் வாழைப்பழம் சாப்பிட்டால் மட்டும் உடல் எடை குறையுமா..? என்பது பற்றி இங்கே அறிந்து கொள்வோம்.

மோனோ டயட் என்றால் என்ன? உணவுக் கட்டுப்பாடுகளில் ஒரு வகை தான் மோனோடயட் அல்லது மோனோட்ரோபிக் டயட். இந்த உணவுக்கட்டுப்பாட்டில் நாம் ஏதாவது ஒரு உணவு அல்லது ஒரே விதமான உணவுப்பொருள்களை நீண்ட காலத்திற்கு எடுத்து கொள்கிறோம். அதாவது இந்த டயட்டைப் பின்பற்றக்கூடிய மக்கள், ஒரே வகை உணவுகளையே திரும்ப திரும்ப சாப்பிடுவதற்கு அறிவுறுத்தப்படுவதால் எடை இழப்பிற்கு நன்மை அளிப்பதாக உள்ளது.

பால், உணவு, பழங்கள், மாமிச உணவு மற்றும் முட்டை போன்ற எந்த உணவை வேண்டுமானாலும் உங்களது மோனோடயட்டில் எடுத்து கொள்ளலாம் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். இந்த டயட் முறையானது கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் பிரபலமாக உள்ளது.

மோனோடயட் நன்மை மற்றும் தீமைகள் : இந்த டயட் முறையைப் பின்பற்றி தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் மட்டும் உடல் எடையை குறைக்க முடியுமா? என்ற சந்தேகம் எழக்கூடும். மோனோ டயட் முறையானது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது என்பது உண்மை தான். ஆனால் இதன்படி நீங்கள் ஒரே உணவுகளை மட்டும் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவைான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், ஊட்டச்சத்து குறைபாட்டையும் நமக்கு ஏற்படுத்திவிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இதோடு மோனோ டயட்டில் நாம் ஆரோக்கியமான உணவுகள் எதையும் உட்கொள்ளவில்லை என்பதால், உடலுக்குக் கிடைக்ககூடிய பிற ஊட்டச்சத்துக்களும் கிடைப்பதில்லை . இதனால் நம் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையவும் வாய்ப்புள்ளது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். அதே சமயம் விரைவில் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த டயட் முறையைப் பின்பற்றலாம் என கூறுகின்றனர்.

மோனோ டயட் முறையைப் பின்பற்றுபவர்கள் விரைவாக மற்றும் எளிதாக உடல் எடையைக் குறைக்க முடியும். குறிப்பாக இந்த டயட்டில் குறைவான கலோரிகளை உட்கொள்வதால், குறுகிய காலத்தில் எடை இழப்பு பயணத்தை தொடங்க உதவியாக உள்ளது. மேலும் இதோடு சிலர் பல உடற்பயிற்சிகளைச் செய்வதன் மூலம் உடல் எடையை கணிசமாக குறைக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.

மோனாடயட்டில் வாழைப்பழம் சாப்பிட்டால் மட்டும் உடல் எடையைக் குறைந்தாலும், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை நாம் இழக்க நேரிடும். எனவே உங்களது உடல் நலத்திற்கு ஏற்ப இந்த டயட் முறையைப் பின்பற்றலாமா? என மருந்துவரிடம் கேட்டு பிறகு பின்பற்றுவது நல்லது.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

நடக்கவே நேரமில்லை என புலம்புகிறீர்களா..? இந்த 6 வழிகளை முயற்சி செய்து பாருங்கள்..!

 நடைபயிற்சி என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ள ஒரு பயிற்சியாகும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த நடைப்பயிற்சியானது பல வகையில் ஆரோக்கியத்தை தருகிறது. அதே போன்று, உடல் பருமன் அதிகமாக இருப்போருக்கும் இது சிறப்பாக உதவுகிறது.

மேலும், சர்க்கரை நோய், இதய நோய், மனநல பிரச்சினைகள் போன்ற நாள்பட்ட வியாதிகளுக்கும் நடைபயிற்சி நல்ல தீர்வாக அமைகிறது. பொதுவாக நடைபயிற்சியை காலை நேரத்தில் பயிற்சியாக செய்வது தான் பெரும்பாலோரின் வழக்கமாகும். ஆனால், இதை உங்களது தினசரி செயல்பாடுகளில் சில எளிமையான வழிகள் மூலம் சேர்த்து கொண்டால் பலன் அதிகம்.

அதாவது, உங்கள் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளில் சிறிய மாற்றங்கள் கொண்டு வருவதன் மூலம் இது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். இதற்கான 6 எளிய மாற்றங்கள் பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

படிக்கட்டுகளில் செல்லுங்கள்: பொதுவாக நம்மில் பலரும் லிஃப்ட் அல்லது எஸ்கலேட்டர்களில் செல்லும் பழக்கத்தை பின்பற்றி வருகிறோம். ஆனால், இதற்கு பதிலாக, முடிந்தவரை படிக்கட்டுகளில் செல்வதை பழக்கமாக்கி கொள்ளுங்கள். உங்களுக்கு வேலையாக இருந்தாலும் சரி, ஷாப்பிங் மாலில் இருந்தாலும் சரி அல்லது வீட்டில் இருந்தாலும் சரி, படிக்கட்டுகளை அதிகம் பயன்படுத்துவது என்பது உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. அதே போன்று, தினசரி ஸ்டெப்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இது ஒரு சிறந்த வழி.

இடைவேளையின் போது நடக்கவும்: இன்று அதிக மக்கள் நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்காரும் பழக்கம் கொண்டவர்களாக உள்ளனர். இது பல வகையில் உடல் மற்றும் மனதிற்கு பாதிப்புகளை தரும். எனவே, அவ்வப்போது இடைவேளைகளில் நடக்க செய்வது நல்லது. குறிப்பாக உங்கள் மதிய உணவு இடைவேளை அல்லது காபி இடைவேளையில் உட்கார்ந்திருப்பதை விட, விறுவிறுப்பாக ஒரு ரவுண்ட் நடக்கலாம். இது புதிய காற்றை சுவாசிக்கவும், உங்கள் ஸ்டெப்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், புத்துணர்வு பெறவும் வாய்ப்பாக இருக்கும். இடைவேளையின் போது உங்களுடன் வாக்கிங் வர நண்பர்களையும் துணைக்கு சேர்த்து கொள்ளலாம்.

தொலைவில் நிறுத்துங்கள்: வாகனங்களை நிறுத்துமிடத்தில் அருகிலுள்ள வாகன நிறுத்துமிடத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக, உங்கள் வாகனத்தை வேண்டுமென்றே சற்றுதொலைவில் நிறுத்துங்கள். இந்த எளிய மாற்றம் உங்கள் தினசரி நடையின் அளவை அதிகரிக்க உங்களுக்கு உதவும்.

முன்னதாக இறங்கவும்: நீங்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துபவராக இருந்தால், சில ஸ்டாப்பிங்கிற்கு முன்னதாகவே இறங்கி, மீதமுள்ள தூரம் நடந்து செல்ல முயற்சிக்கலாம். இந்த உத்தி உங்கள் தினசரி ஸ்டெப்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், புதிய பகுதிகளை உங்களுக்கு தெரிந்து கொள்ளவும், இயற்கைக்காட்சிகளை அனுபவிக்கவும், நாள் முழுவதும் கூடுதல் உடற்பயிற்சியில் ஈடுபடவும் வழி செய்கிறது.

இடைவேளை எடுத்துக் கொள்ளுங்கள்: நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்க கூடிய பணியில் நீங்கள் இருந்தால், அவ்வப்போது சிறு சிறு இடைவேளைகளை எடுத்து கொண்டு நடந்து வரலாம். இதற்கு உங்கள் மொபைலில் ஒரு நினைவூட்டலை வைத்து கொண்டோ, அல்லது டைமரைப் பயன்படுத்தி கொண்டோ ஒவ்வொரு மணி நேரமும் சில நிமிடங்கள் எழுந்து நடப்பதை வழக்கமாகி கொள்ளுங்கள்.

தினசரி நடைகள்: பெடோமீட்டர், ஃபிட்னஸ் டிராக்கர் அல்லது ஸ்மார்ட்போன் ஆகியவற்றின் மூலம் உங்களது தினசரி ஸ்டெப்களின் எண்ணிக்கையைப் பற்றிய தெளிவை பெறுங்கள். இந்தச் சாதனங்கள், இலக்குகளை நிர்ணயிக்கவும், உங்கள் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும் உங்களுக்கு உதவியாக இருக்கும். மேலும், ஒவ்வொரு வாரமும் படிப்படியாக உங்கள் ஸ்டெப்களின் எண்ணிக்கையை அதிகரித்து புதிய மைல்கற்களை அடைய இவை உதவும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

வயது வரம்பு இல்லை... கல்வி தகுதியும் தேவையில்லை... புதிய தொழில் முனைவோர்களுக்கு அசத்தல் வாய்ப்பு

 ஆர்வமுள்ள எஸ்சி/எஸ்டி தொழில் முனைவோர்கள் தமிழ்நாடு அரசின், 'அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்' திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயனடையலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்(SC/ST) தொழில்முனைவோர்கள் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் பிரத்யோக சிறப்பு திட்டமாக ’அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்’ செயல்படுத்தபடவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் ஆர்வமுள்ள புதிய தொழில் முனைவோர்களுக்கு உற்பத்தி, வணிகம், சேவை சார்ந்த அனைத்து வித தொழில் திட்டத்திற்கும் மற்றும் வணிக விரிவாக்கத்திற்கும் கடனுதவியோடு இணைந்த மானியம் வழங்கப்படவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், பயன்பெற விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு இல்லை மற்றும் கல்வி தகுதியும் தேவையில்லை. மொத்ததிட்ட மதிப்பில் 65% வங்கி கடனாக ஏற்பாடு செய்யப்பட்டு 35% அரசின் பங்காக மானியம் வழங்கப்படும். எனவே, பயனாளிகளுக்கு தம் பங்காக நிதிசெலுத்தவேண்டிய தேவை இருக்காது. இத்திட்டத்தில் 8% வட்டி மானியமும் வழங்கப்படும்.

மேலும், ஆர்வமுள்ள ஆதிதிராவிடர் பழங்குடியினர் (SC/ST) பிரிவு  தொழில்முனைவோர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழிகாட்டுதல், திட்ட அறிக்கை தயாரித்தல், விண்ணப்பித்தல் தொடர்பான அனைத்துவித உதவிகளும் அளிக்கப்படுவதுடன் தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி மற்றும் திட்டம் சார்ந்த சிறப்பு பயிற்சி இலவசமாக வழங்கப்படும்.

இத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் சென்னை மாவட்டஆட்சியர் அலுவலகத்திலுள்ள கூட்ட அரங்கில்  வருகிற 23.05.2023  (நாளை) அன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெறவுள்ளது. ஆர்வமுள்ள எஸ்.சி மற்றும் எஸ்டி (SCIST) பிரிவு தொழில்முனைவோர்கள் இக் கூட்டத்தில் பங்கேற்று பயன்பெறலாம்.

இத்திட்டத்தின் கீழ் பயன் பெற திட்ட அறிக்கை மற்றும் ஆவணங்களுடன் www.msmeonline.tn.gov.in என்ற இணையதள வழியாக விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டம் பற்றிய கூடுதல் விவரங்கள் மற்றும் விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டுதல்கள் பெற A-30,சிட்கோ தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-32 என்ற முகவரியில் அமைந்த தொழில் மற்றும் வணிக மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தினை நேரடியாகவோ அல்லது 90030 84476, 94441 14723 ஆகிய எண்களில் தொலைபேசி வழியாகவோ அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

10ம் வகுப்புத் தேர்ச்சி போதும்: அஞ்சல் துறையில் நேரடி முகவர்கள் வேலைவாய்ப்பு

 அஞ்சல் ஆயுள் காப்பீட்டு/ கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனைக்காக(Postal Life Insurance / Rural Postal Life Insurance products) புதிய நேரடி முகவர்களை (Direct Agents) ஈடுபடுத்த இருப்பதாக சென்னை மத்திய கோட்டத்தின் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ( Chennai City Central Division) ) தெரிவித்துள்ளார்.

கல்வி தகுதி: குறைந்தது பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18-லிருந்து 50 வரை

பிரிவுகள்: சுய தொழில் செய்யும் / வேலையில்லா இளைஞர்கள், ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்தில் பணி புரிந்த முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள்/ முகவர்கள், அங்கன்வாடி மற்றும் மஹிளா மண்டல் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதிகள்: ஆயுள் காப்பீடுகளை விற்பனை செய்வதில் முன் அனுபவம் உள்ளவர்கள், கணினிப் பயிற்சி உள்ளவர்கள் / சொந்தப் பகுதி பற்றி நன்கு அறிந்தவர்கள் மற்றும் சென்னை மாநகராட்சியை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். அதே சமயம், இதர ஆயுள் காப்பீட்டு அலுவலகத்தில் முகவர்களாக இருப்பவர்கள், அஞ்சல் அயுள் காப்பீட்டு முகவர்களாக விண்ணப்பிக்க தகுதியில்லை.

விருப்பமுள்ளவர்கள் எண் 2, சிவஞானம் சாலை, தியாகராய நகர், சென்னை 600017 இல் (பாண்டி பஜார் அருகில்) உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகத்தில் 26.05.2023 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளலாம். மூன்று புகைப்படம் (பாஸ்போர்ட் அளவு), அசல் மற்றும் இரண்டு நகல் -வயதுச்சான்று, முகவரிச்சான்று மற்றும் கல்விச்சான்றுடன் அணுகவும்.

நேர்காணலுக்கு பின் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஐந்தாயிரம் ரூபாய்க்கு தேசிய சேமிப்பு பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பத்திரத்தை (National Savings Certificate (NSC)/KisanVikasPatra (KVP) பணப் பாதுகாப்பு பத்திரமாக வழங்க வேண்டும்.

இந்த நேர்காணல் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை முகவர்கள் மூலம் விற்பனை செய்வதற்காக மட்டுமே நடத்தப்படுகிறது. இது, ஆள் சேர்க்கை அறிவிப்பு கிடையாது.

முகவர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பிடிக்கும் பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை/கமிஷன் மட்டுமே வழங்கப்படும் என்று சென்னை மத்திய கோட்ட முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ரயில்வேயில் ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு... 548 காலிப்பணியிடங்கள்..!

 இந்தியன் ரயில்வே உள்ள பணியிடங்களில் இளைஞர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களின் திறன்களை அதிகரிக்கும் வகையில் Trade Apprentices வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தென் கிழக்கு மத்திய ரயில்வேயில் உள்ள 548 Trade Apprentices பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கக் கல்வித்தகுதியாக 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

Carpenter, Copa, Draftsman, Electrician, Fitter, Machinist, Painter, Plumber, Mechanic, Sheet Metal work, Steno, Stenographer, Turner, Welder, Wireman, Gas Cutter மற்றும் Digital Photographer போன்ற பணிகளில் 548 காலிப்பணியிடங்கள் உள்ளன.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கக் குறைந்தபட்சம் 15 வயது கடந்திருக்க வேண்டும். அதிகப்படியாக 24 வயதாக இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்கள் வயது தளர்வு வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தேவையான சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பம் மே 5 ஆம் தேதி முதலே தொடங்கிய நிலையில், ஜூன் 3 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

மாதம் ரூ.60 ஆயிரம் வரை சம்பளம்: மருத்துவமனை தர மேலாளர் வேலை ... உடனே விண்ணப்பியுங்கள்

 நாகப்பட்டினம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவமனை தர மேலாளர் (Hospital Quality Manager) பதவியை தொகுப்பூதியம் அடிப்படையில் நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது வரம்பு: 45 ஆண்டுகள்

கல்வித் தகுதி: அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் மருத்துவமனை நிர்வாகத்தில் முதுநிலை பட்டப் படிப்பு மற்றும் மருத்துவமனை மேலாண்மை பட்ட படிப்பு (Masters in Hospital Administration / Health Management) மற்றும் பொது சுகாதார துறையில் முதுநிலை பட்ட படிப்பு (Master of Public Health) (Regular course Not Correspondence Course) / Two Years Experience in Public Health/ Hospital Administration முடித்துள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

அடிப்படைச் சம்பளம்: ரூ.60 ஆயிரம்

நிபந்தனைகள்:

இந்நியமனம் முற்றிலும் தற்காலிகமானது.

நிரந்தர பணி நியமனத்தில் எந்த விதமான முன்னுரிமையும் கோர முடியாது.

எந்த நிலையிலும் பணி நீக்கம் செய்யப்படலாம்.

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், ஆதார் அட்டை நகல் மற்றும் கல்வித் தகுதி சான்றிதழ் நகல்களுடன் சுய முகவரியுடன் தபால் மூலம் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பித்தினை சமர்ப்பிக்க கடைசி நாள் 31.05.2023 ஆகும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி முதல்வர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மணல்மேடு, ஒரத்தூர், நாகப்பட்டினம் மாவட்டம் - 611108 ஆகும். விண்ணப்ப அறிவிக்கையை இங்கேபதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

HCL Tech தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு..!

 தென்காசி மாவட்ட பள்ளிக் கல்வித்துறையும், தமிழ்நாடு அரசின் 'நான் முதல்வன்' திட்டமும், HCL நிறுவனமும் இணைந்து 12ம் வகுப்பு தேர்வில் 75 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வழங்கும் ஓர் அரிய வாய்ப்பை வழங்கியுள்ளது.

HCL நிறுவனம் TechBee திட்டத்தின் வாயிலாக 2023ம் ஆண்டு 12ம் வகுப்பு தேர்வில் 75 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்வில் தேர்ச்சி பெற்ற தனியார் பள்ளி மாணவர்களுக்கும் (Matric/CBSE/ICSE), அரசு /அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புடன் உயர்கல்வி பெறும் வாய்ப்பை அளிக்கிறது.

அதற்கான தேர்வு Onlineல் மே 27மற்றும் 28 ஆகிய தேதிகளில் காலை 9:30 மணி முதல் மாலை 5.30 மணி வரை S. வீராச்சாமி செட்டியார் பொறியியல் கல்லூரியில் (SVC Engineering College of Technology) நடைபெறுகிறது.

தேர்வு எழுத வரும் மாணவர்கள் 10th, 12th Mark sheet, Aadhaar card, Passport Photo-1, Android Mobile phone & மதிய உணவு எடுத்து வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நீங்கள் தேர்வு செய்யப்பட்டால், HCL -TechBee வழங்கும் பயிற்சி மற்றும் வேலையுடன் உயர் கல்வியை BITS Pilani/SASTRA/AMITY/KL University/IM Nagpur பல்கலைக்கழகத்தில் HCL வழங்கும் உதவித் தொகையோடு படிக்கலாம்.

Intenship பயிற்சியின்போது 7வது மாதம் முதல்  12வது மாதம் வரை உதவித் தொகை மாதம் 10,000 வழங்கப்படும். இத்தேர்வில் 2023ல் 75 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்ற அனைத்துப் பிரிவு அரசு/அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி மாணவர்கள் கலந்துகொள்ளலாம்.

இத்தேர்விற்கு வரும் மாணவர்கள் கீழ்க்கண்ட Linkல் பதிவு செய்துவிட்டு தேர்விற்கு வரவும், பதிவு செய்யாத மாணவர்களும் நேரடியாக தேர்விற்கு வரலாம். பதிவு செய்யவும். https://forms.office.com/r/q3vmdm7qdi மேலும் தொடர்புக்கு மு.செந்தில்குமார் - 9788156509, 6382998925 தொடர்ப்பு கொள்ளலாம்.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

இந்திய தபால் துறையில் 12,828 கிராம அஞ்சல் பணியிடங்கள்: 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் வேலை

1/ 6
 நாடு முழுவதும் வங்கிகள் இல்லாத பகுதிகளில் உள்ள கிளை அஞ்சல் நிலையங்களில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர் மற்றும் துணை போஸ்ட் மாஸ்டர் பணியிடங்களுக்கான ( Gramin Dak Sevaks (GDS) (Branch Postmaster(BPM)/Assistant Branch Postmaster ) அறிவிப்பை இந்திய தபால் துறை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம், 12,828 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எவ்வித எழுத்துத் தேர்வும், நேர்முகத் தேர்வும் இல்லாமல், 10ம் வகுப்புத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வானவர்கள் பட்டியல் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது




நாடு முழுவதும் வங்கிகள் இல்லாத பகுதிகளில் உள்ள கிளை அஞ்சல் நிலையங்களில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர் மற்றும் துணை போஸ்ட் மாஸ்டர் பணியிடங்களுக்கான ( Gramin Dak Sevaks (GDS) (Branch Postmaster(BPM)/Assistant Branch Postmaster ) அறிவிப்பை இந்திய தபால் துறை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம், 12,828 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எவ்வித எழுத்துத் தேர்வும், நேர்முகத் தேர்வும் இல்லாமல், 10ம் வகுப்புத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வானவர்கள் பட்டியல் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது


வயது வரம்பு: குறைந்தபட்ச வயது - 18 (விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட இறுதி நாளன்று பூர்த்தியடைத்திருக்க வேண்டும்) அதிகபட்ச வயது - 40 (விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட இறுதி நாளன்று பூர்த்தியடைத்திருக்க வேண்டும்)

விண்ணப்பதாரர்கள் https://indiapostgdsonline.gov.in என்ற முகவரியின் கீழ் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே, ஜனவரி மாதத்தில் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் நேரடியாக இரண்டாம் பாகத்தில் இருந்து விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் தாங்கள் பதிவு செய்யும் விவரங்களுக்கு ஆதாரமாக உரிய ஆவணங்களையும் (சாதி சான்றிதழ், கல்வித் தகுதி, மின்னஞ்சல், புகைப்படம், கையெழுத்து, தொலைபேசி எண்) பதிவேற்றம் செய்ய வேண்டும்.


கல்வி தகுதி: குறைந்தபட்ச பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கட்டாயமாக விண்ணப்பதாரர்கள் உள்ளூர் மொழியறிவு கொண்டிருக்க வேண்டும். 10ம் வகுப்பில் விண்ணப்பித்தில் குறிப்பிட இருக்கும் உள்ளூர் மொழியை 10ம் வகுப்பில் ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். அதேபோன்று, மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும்.


நாடு முழுவதும் : 12,828 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில், தமிழ் நாட்டில் உள்ள கிளை அஞ்சல் அலுவலகங்களில் 18 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. கோயம்பத்தூர், தருமபுரி, திண்டுக்கல், சேலம் கிழக்கு, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மண்டலங்களில் தலா 2 இடங்களும், தாம்பரம் மண்டலத்தில் 3 இடங்களும், விருத்தாச்சலம் மண்டலத்தில் 4 இடங்களும் நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தைத் தாண்டி, நாட்டின் எந்தவொரு அஞ்சல் வட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இருப்பினும், உள்ளூர் மொழியறிவு கொண்டிருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை: நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியில் (அதாவது 10ம் வகுப்பு) பெறப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்ட 30 நாட்களுக்குள் வாழ்வாதாரத்துக்கு வேறு வகைகளிலும் வருமானம் ஈட்டி வருவதற்கான விண்ணப்பத்தை Rule 3-A (iii) of GDS (Conduct and Engagement) Rules, 2020-ன் படி சமர்ப்பிக்க வேண்டும்.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news


ரூ. 75,000 வரை சம்பளம்: இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

 கோவை மாவட்டம், ஆனைமலை வட்டம் மற்றும் நகர், மாசாணியம்மன் திருக்கோயிலில் அமைக்கப்படவுள்ள மருத்துவ மையத்தில் மருத்துவ அலுவலர், செவிலியர் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் ஆகிய பணிகளுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடங்கள்:

பதவியின் பெயர்வயதுகல்வித்தகுதிஒப்பந்த ஊதியம்
மருத்துவ அலுவலர் (Medical Officer ) 2 பதவிகள்1.07.2023 அன்று 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்MBBSரூ.75,000/-
செவிலியர் (Staff Nurse) 2 பதவிகள்1.07.2023 அன்று 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்DGNM ( DiplomaIn General NursingMidwife )ரூ.14,000/-
பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள்(Multi Purpose hospital worker/ Attender)2 பதவிகள்1.07.2023 அன்று 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்8ம் வகுப்புத் தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்ரூ.6,000

மேற்கண்ட விவரப்படியான காலிப்பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்து சமயத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து 11.06.2023 மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அதற்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இதர விபரங்களை அலுவலகத்தில் அலுவலக நாட்களில் அலுவலக நேரங்களில் நேரில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் மற்றும் திருக்கோயில் இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

இந்த உணவுகளோடு ஒருபோதும் சர்க்கரையை சேர்க்காதீங்க.. ஒரு நாளைக்கு இவ்வளவுதான் சாப்பிடனும்..!

 பொதுவாகவே நாம் சில உணவுப் பொருட்களை உட்கொள்ளும் போது அவற்றின் சுவையை அதிகரிப்பதற்கும், அவரவர் விருப்பத்திற்கு ஏற்பவும் சில மசாலாக்களையோ அல்லது சுவையூட்டிகளையோ பயன்படுத்துவது வழக்கமானது தான். ஆனால் சில குறிப்பிட்ட உணவு வகைகளை உட்கொள்ளும் போது அவற்றில் சுவையூட்டிகளை பயன்படுத்துவது தவிர்ப்பது நல்லது.

குறிப்பாக நம்மில் பலரும் சில குறிப்பிட்ட உணவுப் பொருட்களோடு சர்க்கரை கலந்து பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். ஆனால் அவை உடலுக்கு தீங்கை விளைவிக்கலாம். அந்த வகையில் எந்தெந்த உணவு பொருட்களோடு சர்க்கரையை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

காலை உணவில் சேர்க்கப்படும் தானியங்கள்: பெரும்பாலும் காலை உணவாக நாம் உட்கொள்ளும் தானிய வகைகளோடு பாலை சேர்த்து உட்கொள்வதை நாம் வழக்கமாகக் கொண்டுள்ளோம். நாம் சேர்க்கும் பாலிலேயே மிக அதிக அளவில் சர்க்கரை ஏற்கனவே இருப்பதால் கூடுதலாக சர்க்கரை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.

பழ இனிப்புகள்: பழங்களை சேர்த்து தயாரிக்கும் இனிப்பு வகைகளை நீங்கள் விரும்பி உட்கொள்பவராக இருந்தால் முடிந்த அளவு அவற்றுடன் சுவைக்காக சர்க்கரை சேர்ப்பதை தவிர்ப்பது நல்லது. ஒருவேளை உங்களுக்கு அதிக அளவில் இனிப்பு சுவை தேவைப்படும் பட்சத்தில் அதிக அளவு பழங்களை பயன்படுத்துவதன் மூலம் உங்களுக்கு தேவையான இனிப்பு சுவையை பெற முடியும்.

காபி : பெரும்பாலான மக்கள் காபியுடன் சர்க்கரை சேர்த்து அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் சர்க்கரை சேர்க்காமல் காபி குடிக்கும் போது அது பல்வேறு வித நன்மைகளை கொடுக்கும்.

ஒரு நாளைக்கு எவ்வளவு சர்க்கரை எடுத்துக் கொள்ளலாம்: உங்களது உணவு பழக்க வழக்கம் மற்றும் உணவு கட்டுப்பாட்டின் அளவை பொறுத்து தினசரி எடுத்துக் கொள்ள வேண்டிய சர்க்கரையின் அளவானது மாறுபடும். “அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன்” பரிந்துரையின்படி ஒரு நபர் சராசரியாக ஒரு நாளைக்கு ஆறிலிருந்து ஒன்பது டீஸ்பூன் வரை சர்க்கரையை எடுத்துக் கொள்ளலாம்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip