Search

BECIL ஆணையத்தில் Data Entry Operator வேலை – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

BECIL ஆணையத்தில் Data Entry Operator வேலை – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

BECIL ஆனது Office Assistant, Data Entry Operator காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 26 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

BECIL காலிப்பணியிடங்கள்:

Office Assistant, Data Entry Operator பணிக்கென 26 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Office Assistant கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் 12ம் வகுப்பு / Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BECIL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 45 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Office Assistant ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு BECIL-ன் நிபந்தனைகளின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BECIL தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 21.05.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் 26.05.2023ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயனடையவும்.

Download Notification PDF 

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news


IDBI வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான 1036 காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.34,000/-

 

IDBI வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான 1036 காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.34,000/-

இந்திய தொழில்துறை மேம்பாட்டு வங்கி ஆனது தற்போது Executive பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 1036 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 24.04.2023 முதல் 07.06.2023 வரை விண்ணப்பிக்கலாம்.

IDBI வங்கி காலிப்பணியிடங்கள்:

ஒப்பந்த அடிப்படையில் Executive பதவிக்கு என மொத்தம் 1036 பணியிடங்கள் காலியாக உள்ளன.

IDBI Executive வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 25 க்குள் இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர்கள் மே 2, 1998 முதல் மே 1, 2003க்குள் பிறந்திருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து எதாவது ஒரு துறையில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வங்கி பணிக்கான சம்பள விவரம்:
  • 1 year – ரூ.29,000/-
  • 2nd year – ரூ.31,000/-
  • 3rd Year – ரூ.34,000/-
  • தேர்வு செயல் முறை:
    • Online Test (OT)
    • Document Verification (DV)
    • Pre Recruitment Medical Test (PRMT)
    விண்ணப்பிக்கும் முறை:
    • படி-I: IDBI இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை @idbibank.in கிளிக் செய்யவும்
    • படி-II: முகப்புப் பக்கத்தில், Careers >> Current Openings என்பதைக் கிளிக் செய்யவும்
    • படி-III: “Recruitment of Executive 2023-24” என்ற அறிவிப்பை கிளிக் செய்யவும்.
    • படி-IV: இப்போது “Apply Online” என்பதைக் கிளிக் செய்யவும்.
    • படி-V: விண்ணப்பப் படிவத்தில் உங்கள் தனிப்பட்ட மற்றும் கல்வி விவரங்களை சரியாக உள்ளிடவும்.
    • படி-VI: விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்க அணுகக்கூடிய விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்.
    • படி-VII: இறுதியாக விண்ணப்பத்தை சமர்ப்பித்து எதிர்கால குறிப்புக்காக பதிவிறக்கவும்.

    Download Notification 2023 Pdf
    Apply Online

B.com படித்தால் என்ன வேலை கிடைக்கும்? வணிகவியல் துறை தரும் வேலைவாய்ப்புகள் இதோ!

 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் கல்லூரியில் வணிகவியல் துறையை (Commerce)தேர்ந்தெடுத்து படித்தால் என்னென்ன வேலை வாய்ப்புகளை பெற முடியும்என்பதை விளக்குகிறார் கன்னியாகுமரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வணிகவியல் துறை பேராசிரியர் மற்றும் துறை தலைவர் முனைவர் ஏஞ்சலின் ஷீபா ஆல்பெர்ட்

“வணிகவியல் துறை என்பது பல்வேறு வாய்ப்புகளை உருவாக்குகிறது. இதை படித்த பின்னர் கணக்கியல், நிதி நிர்வாகம், வரி தொடர்பான விவரங்கள், தொழில் நிர்வாகம், மற்றும் தொழில் முனைவோராகவும் வர முடியும்.

இதனுடன் சேர்த்துவருமான வரி , தொழில் சட்டம் மற்றும் கம்பெனி சட்டம் ஆகிய பாடங்களையும் மாணவர்கள் பயில்வதன்மூலம் வணிகவியல் பயிலும் மாணவர்கள் நிறைய திறமைகளை பெறுகிறார்கள்.மேலும் பல துறைகளில் வாய்ப்பையும் பெறுகிறார்கள்.

மாணவர்கள் இந்த துறையின் மூலம் கணக்காளராக மற்றும் வங்கியில் வங்கி அதிகாரியாக மற்றும் நிதி நிறுவனங்களில் கணக்காளராக, ஆடிட்டராக, வரி ஆலோசகராக, நிதி ஆலோசகராக என பல வேலை வாய்ப்புகள் உள்ளன.


மேலும், மாணவர்கள் தொழில் மேலாண்மை என்னும் பாடமும் பயில்வதால் வேலை கிடைக்காத மாணவர்கள் சொந்த தொழிலை தொடங்கலாம். இல்லையெனில் அவர்கள் ஒரு தொழில் தொடங்கும் ஆலோசகராக பனி புரியலாம்.மேலும் அரசு வேலைக்கு செல்ல விரும்பும் மாணவர்கள் தேர்வுகள் எழுதி அக்கௌன்ட் அலுவலராக பணி புரியலாம்.

வணிகவியல் முடிக்கும் மாணவர்களுக்கு சிறந்த அடிப்படையை அவர்கள் வாழ்வில் அளிக்கிறது. மேலும், பணி புரிய நல்ல அடிப்படையையும் அளிக்கிறது என கூறினார்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

IT வேலை உங்கள் கனவா? Accenture நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை || முழு விவரங்களுடன்!

 

IT வேலை உங்கள் கனவா? Accenture நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை || முழு விவரங்களுடன்!

Accenture நிறுவனமானது அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Advertising Sales Rep Associate பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Accenture காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Advertising Sales Rep Associate பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Advertising Sales Rep Associate கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Accenture வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Advertising Sales Rep Associate முன் அனுபவம்:

1 முதல் 3 ஆண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் பணி புரிந்த முன் அனுபவம் கொண்ட விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Accenture ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

Advertising Sales Rep Associate தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news


மத்திய புலனாய்வுப் பணியகத்தில் புதிய வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || உடனே விண்ணப்பியுங்கள்!

 

மத்திய புலனாய்வுப் பணியகத்தில் புதிய வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || உடனே விண்ணப்பியுங்கள்!

Central Bureau of Investigation ஆனது Additional Legal Advisor பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

Central Bureau of Investigation ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Additional Legal Advisor பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Degree in Law தேர்ச்சி பெற்ற மத்திய அல்லது மாநில அரசு அதிகாரியாக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும். தகுதியானவர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப் படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 60 நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் உதவித்தொகையுடன் வேலை – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

 

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் உதவித்தொகையுடன் வேலை – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் ஆனது NAPS ன் கீழ் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Electrician பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

TNSTC காலிப்பணியிடங்கள்:

Electrician பணிக்கென காலியாக உள்ள 50 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Electrician கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

TNSTC வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Electrician ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.6,000/- முதல் ரூ.7,000/- வரை ஊதியமாக (உதவித்தொகை) வழங்கப்படும்.

TNSTC தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

வாட்டி வதைக்கும் வெயிலுக்கு நடுவே உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 5 உணவுகள்.!

 சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு மத்தியில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தோடு சேர்த்து, நம்முடைய செரிமான அமைப்பையும் ஆரோக்கியமாக பராமரிப்பதும் மிகவும் அவசியம். ஏனென்றால் கோடைகாலம் நம்முடைய குடல் ஆரோக்கியத்தை பாதிக்க கூடும்.

அடிக்கும் வெயிலுக்கு செயற்கை பொருட்கள் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் கொண்ட குளிர்ந்த உணவுகளை சாப்பிட பலரும் விரும்புவார்கள். ஆனால் இவை குடல் ஆரோக்கியத்திற்கு தீமைகளை ஏற்படுத்துகின்றன. எனவே இந்த ஹாட் சீசனில் நீங்கள் செய்ய வேண்டியது செயற்கை உணவு பொருட்கள் மற்றும் வழக்கமான தானியங்களுக்கு பதில் கோடை சீசனுக்கு ஏற்ற உணவுகளை டயட்டில் சேர்ப்பது தான்.

சரியான ப்ரோபயாடிக்ஸ், மோர் உள்ளிட்ட பலவற்றை டயட்டில் சேர்ப்பது குடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைக்கும். உங்கள் குடல் ஆரோக்கியத்தை இந்த கோடையில் சிறப்பாக வைக்க உதவும் சில எளிய உணவுகள் இங்கே...

முழு தானியங்கள்: வழக்கமாக நீங்கள் பருப்பு சேர்த்து செய்யும் உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்காது என்றாலும், கோடை காலத்தில் நீங்கள் வெப்பத்தை தணிக்க கூடிய உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அந்த வகையில் Whole grains எனப்படும் முழு தானியங்கள் உடலுக்கு மிகவும் தேவையான ஊட்டச்சத்தை அளிப்பதோடு, குடல் ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிக்க உதவும். பாரம்பரிய தானியங்களை விட உங்களது கோடை டயட்டில் பார்லி மற்றும் ராகி போன்றவற்றை சேர்க்கலாம். அதே போல முழு தானியங்கள் வீக்கத்தை குறைப்பது மட்டுமல்லாமல், நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.

வாழைப்பழங்கள்: அழற்சியை எதிர்த்து போராடுவதில் வாழைப்பழங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. தவிர குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துதில் வாழைப்பழங்கள் முக்கியமானவை. கூடுதலாக வயிற்றுப்போக்கு மற்றும் ஸ்டோமக் அப்செட் போன்ற பிரச்சனைகளை சமாளிக்க உதவுகிறது. அதே போல கோடையில் நன்கு பழுத்த பழுத்த வாழைப்பழங்களை சாப்பிடுவது அசிடிட்டி பிரச்சனையை தடுக்க சிறந்த வழி.

ஓட்ஸ் : ஓட்ஸில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. கோடை சீசனில் இதனை அடிக்கடி டயட்டில் சேர்ப்பதன் மூலம் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கலாம். ஆரோக்கியமான குடல் பாக்டீரியாவை மீட்டெடுக்கும் ஓட்ஸ், தேவையயற்ற நேரங்களில் ஏற்படும் பசியை மறக்கடிக்கும் வகையில் நீண்ட நேரத்திற்கு உங்களை முழுமையாக உணர வைக்கிறது.

மோர் : கோடையில் நம் குடலை குளிர்ச்சியாக மற்றும் ஆரோக்கியமாக வைத்திருக்க சிறந்த வழி தினசரியோ அல்லது அடிக்கடியோ 1 டம்ளர் மோர் குடிப்பதே. வீட்டிலிருக்கும் தயிரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து அதில் சுவைக்கு சிறிதளவு பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பருகுவது செரிமான சிக்கல், வீக்கம் மற்றும் மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சனைகளை தவிர்க்க அல்லது நிவாரணமளிக்க உதவுகிறது. ப்ரோபயாடிக்ஸ் நிறைந்த இந்த பானம் குறைவான கலோரிகளை கொண்டுள்ளதுடன் அத்தியாவசிய வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் நிறைந்தது.

தயிர் சாதம் : நல்ல வெயில் நேரத்தில் மதிய உணவாக தயிர் சாதம் சாப்பிடுவது குடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள மற்றும் செரிமான பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது. இதில் ப்ரோபயாடிக்ஸ் நிறைந்துள்ளது. தவிர கால்சியம் மற்றும் புரதத்தின் நல்ல ஆதாரமாக தயிர் சாதம் இருக்கிறது. இதனால் எலும்புகள் மற்றும் தசை ஆரோக்கியத்திற்கு சிறந்தது. உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த 1 கப் தயிர் சாதத்தை உங்கள் டயட்டில் சேருங்கள்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

தர்பூசணியை ஃப்ரிட்ஜில் வைக்கலாமா..? 2 நாட்கள் வரை ஃபிரெஷ்ஷாக வைக்க உதவும் டிப்ஸ்..

 கோடை காலத்தில் நம் தாகத்தை தணிக்க கூடிய சுவையான மற்றும் ஆரோக்கியமான பழங்களில் தர்பூசணி முக்கியமான ஒன்று. குளிர்ச்சி தரும் மற்றும் புத்துணர்ச்சியூட்டும் தர்பூசணியை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

சாலட்ஸ் மற்றும் ஸ்மூத்திஸ் தயாரிப்பது முதல் காக்டெய்ல் மற்றும் டெசர்ட்ஸ் வரை பலவற்றில் தர்பூசணி ஸ்லைஸ் பயன்படுத்துகின்றனர். வைட்டமின் ஏ, சி, பொட்டாசியம், தாமிரம் மற்றும் பல ஊட்டச்சத்துக்களையும் தர்பூசணி கொண்டுள்ளது. மேலும் இந்த பழத்தை மிதமான அளவில் சாப்பிடும் போது நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மைகளை அளிக்கும்.

ஆனால் அதே சமயம் இந்த தர்பூசணியை சரியான முறையில் ஸ்டோர் செய்து வைக்காவிட்டால் மிக விரைவாக கெட்டுவிடும் மற்றும் அதிலிருக்கும் ஊட்டச்சத்து மதிப்பும் வெகுவாக குறைந்தும் விடும். எனவே தர்பூசணியிலிருந்து கிடைக்கும் அனைத்து சத்துக்களையும் பெற அவற்றை சரியாக சேமித்து வைப்பது மிகவும் முக்கியமானது.

தர்பூசணியை ஃப்ரிட்ஜில் வைக்கலாமா..? தர்பூசணியை நிச்சயம் ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைக்கலாம். இருப்பினும் பழத்தில் இருக்கும் ஈரப்பதம் போவதை தடுக்க காற்று புகாத கொள்கலனில் ஸ்டோர் செய்து வைக்க வேண்டும். அதே நேரம் தர்பூசணியை ஃப்ரிட்ஜில் வைப்பது தீமை இல்லை என்றாலும், இந்த பழக்கம் தர்பூசணியின் ஊட்டச்சத்து மதிப்பை பாதிக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. எனவே தர்பூசணியால் கிடைக்கும் முழு நன்மைகளையும் பெற அதிக நாள் சேமித்து வைக்காமல் முடிந்த அளவு சீக்கிரம் சாப்பிட முயற்சிக்கலாம். தர்பூசணியை சரியான வழியில் ஸ்டோர் செய்து ஃரெஷ்ஷாக வைத்திருக்க உதவும் ஈஸி டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

அறை வெப்பநிலையில் சேமிக்கவும் : நீங்கள் தர்பூசணியை வாங்கியவுடன் சாப்பிடவில்லை என்றால் அதனை அறை வெப்பநிலையில் வைப்பது நல்லது. அறை வெப்பநிலையிலேயே சேமித்து வைக்கும் போது தர்பூசணியின் ஊட்டச்சத்து மதிப்பு பராமரிக்கப்படுகிறது மற்றும் பழம் முழுமையாக பழுக்காவிட்டால், அந்த பழத்தின் பழுக்கும் செயல்முறை வேகமாகிறது. மேலும் இந்த பழத்தை கூல் & டார்க் ப்ளேஸில் ஸ்டோர் செய்து வைக்க வேண்டும். நேரடியாக சூரிய ஒளிபடாதவாறு பாதுகாக்க வேண்டும்.

பிளாஸ்டிக்கில் சுற்றி வைக்கலாம்: தர்பூசணி வாங்கி சாப்பிட்டு விட்டு மீதி பழத்தை என்ன செய்வது இப்படி ஸ்டோர் செய்வது என யோசிக்கிறீர்களா..? மீதி தர்பூசணியை க்ளிங் ராப்பில் (Cling wrap) சுற்றி ஃப்ரிட்ஜில் வைத்தால் போதும். மறுபுறம் நீங்கள் தர்பூசணியை சிறிய பீஸ்களாக வெட்டி இருந்தால், அவற்றை காற்று புகாத கொள்கலனுக்கு மாற்றி ஃப்ரிட்ஜில் வைக்கலாம். இது பழம் ட்ரை-யாவதை தடுக்கிறது மற்றும் பழத்தின் ஈரப்பதத்தை பராமரிக்க உதவுகிறது.

தோலை அகற்றாதீர்கள்: தர்பூசணியை ஸ்டோர் செய்து வைக்க திட்டமிட்டால் நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கிய விஷயம், முழு பழத்தின் தோலையும் அகற்றி விடாதீர்கள். நீங்கள் சாப்பிட நினைக்கும் அளவிற்கான பழத்தின் தோலை மட்டும் அகற்றவும். ஏனென்றால் தர்பூசணியின் தோல் அதன் ஈரப்பதத்தை பாதுகாக்க மற்றும் உலர்வதை தடுக்க உதவுகிறது. இதோடு தர்பூசணியின் ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் சுவையை பராமரிக்கவும் அதன் தோல் உதவுகிறது.

ஆப்பிள்கள் & வாழைப்பழங்களுடன் சேர்த்து சேமிக்காதீர்கள்: ஆப்பிள்கள் மற்றும் வாழைப்பழங்களுடன் தர்பூசணியை எப்போதும் ஸ்டோர் செய்து வைக்க கூடாது. ஏனென்றால் இந்த 2 பழங்களும் எத்திலீன் வாயுவை வெளியிடுகின்றன. இந்த வாயு தர்பூசணி பழுக்கும் செயல்முறையை வேகப்படுத்தும். தர்பூசணியை பழுக்க வைத்து சாப்பிடுவது அனைவரும் விரும்புவது என்றாலும், ஒருவேளை தர்பூசணி அதிகம் பழுத்து விட்டால் அதன் ஆயுள் மற்றும் சுவையில் தாக்கம் ஏற்படுகிறது.

ஃப்ரீஸரில் வைக்கலாம் : தர்பூசணியை மிக நீண்ட காலம் ஸ்டோர் செய்ய விரும்பினால், அதை ஃப்ரீஸரில் ஸ்டோர் செய்து வைக்கலாம். இதற்கு தர்பூசணியின் தோலை நீக்கி மீடியம் சைஸ் க்யூப்ஸாக வெட்டி எடுத்து கொள்ளுங்கள். பின் இந்த பீஸ்களை ஏர்-டைட் கன்டெய்னரில் அல்லது plastic wrap-ல் சுற்றி ஃப்ரீஸர் பாக்சில் வைக்கலாம். சுமார் 6 - 8 மாதங்கள் வரை இது நீடிக்கும் என்றாலும் இந்த முறை பழத்தின்Texture- தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip


ஒரு பப்பாளி பழத்தில் இத்தனை நன்மைகளா..? மிஸ் பண்ணாம சாப்பிடுங்க..!

 பலவிதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்களில் பப்பாளியும் ஒன்று. பப்பாளி பழத்தில் அதிகளவில் ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. எனவே இப்பழத்தை கட்டாயம் சாப்பிட வேண்டும் கொள்ள வேண்டும். மேலும், இப்பழத்தில் புற்றுநோயை தடுக்கக்கூடிய பண்புகள் (பப்பாளியில் உள்ள லைகோபீன் புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது) உள்ளது. அது மட்டுமல்லாமல் நம்முடைய செரிமானத்திற்கும் உதவுகிறது, இதயத்தை பாதுகாக்கிறது, நல்ல கொழுப்பின் விளைவுகளை அதிகரிக்கிறது, உங்கள் சருமத்தை சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்கிறது. கூடுதலாக நீங்கள் டயட்டில் இருக்கிறீர்கள் என்றால், குறைந்த கலோரியும் அதிக நார்ச்சத்தும் கொண்ட பப்பாளி பழம் உங்களுக்கு ஏற்ற உணவுகளில் ஒன்று.

இத்தனை நன்மைகளை கொண்டுள்ள பப்பாளி பழத்தில் என்னென்ன ஊட்டச்சத்துகள் உள்ளது என பார்ப்போமா…

ஒரு பப்பாளி பழத்தில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்களின் பட்டியல் இங்கே.. சராசரி அளவு கொண்ட ஒரு பப்பாளி பழத்தில் (ஏறக்குறைய 152 கிராம்) இருக்கும் ஊட்டச்சத்துகள்:

  • கலோரி: 60
  • கார்போஹைட்ரேட்: 15 கிராம்
  • நார்ச்சத்து: 3 கிராம்
  • புரதச்சத்து: 1 கிராம்
  • கொழுப்பு: 0 கிராம்
  • விட்டமின் சி: பரிந்துரைக்கப்பட்ட தினசரி அளவில் 157% உள்ளது
  • விட்டமின் A: பரிந்துரைக்கப்பட்ட தினசரி அளவில் 33% உள்ளது
  • ஃபோலேட்: பரிந்துரைக்கப்பட்ட தினசரி அளவில் 14% உள்ளது
  • பொட்டாசியம்: பரிந்துரைக்கப்பட்ட தினசரி அளவில் 11 உள்ளது

ஹைதராபாத் நகரின் ஹைடெக் சிட்டியில் உள்ள கேர் மருத்துவமணையின் மூத்த டயட்டிசியன் மற்றும் ஊட்டச்சத்து நிபுணரான சமீனா அன்சாரி பப்பாளி பழத்தின் நன்மைகள் குறித்து பகிர்ந்தவை இங்கே:

  • ஊட்டச்சத்து நிறைந்தது: பப்பாளியில் விட்டமின் A மற்றும் C, ஃபோலேட், பொட்டாசியம் மிகுதியாக உள்ளது.
  • செரிமானத்திற்கு உதவுகிறது: பப்பாளி பழத்தில் உள்ள பப்பாய்ன் என்ற என்சைம் செரிமானத்திற்கு உதவுவதோடு மலச்சிக்கலை போக்குகிறது.
  • ஆன்டிஆக்ஸிடெண்ட் பண்புகள்: பப்பாளி பழத்தில் அதிகப்படியான ஆண்டி ஆக்ஸிடெண்ட் இருப்பதால், இது நம் மன அழுத்தத்தை குறைக்கவும் உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்கவும் உதவுகிறது.
  • நோய் எதிர்ப்பு சக்தி: பப்பாளி பழத்தில் அதிகளவில் விட்டமின் சி இருப்பதால் நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி சிறப்பாக செயல்பட இது துணை புரிகிறது..
  • பார்வை ஆரோக்கியம்: பப்பாளியில் விட்டமின் A மற்றும் இதர ஆண்டி ஆக்ஸிடண்ட் இருப்பதால் கண்கள் ஆரோக்கியமாகவும், பார்வை குறைபாட்டையும் தடுக்க உதவுகிறது.
  • சரும ஆரோக்கியம்: பப்பாளி பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடெண்ட் ஆரோக்கியமான சருமத்தைப் பெற உதவுவதோடு, காயத்தையும் விரைவில் குணமாக்குகிறது.
  • உடல் எடை குறைய உதவும் பப்பாளி : 

    பப்பாளி பழத்தில் குறைவான கலோரியும் அதிகமான நார்ச்சத்தும் உள்ளதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தங்கள் டயட்டில் இப்பழத்தை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். “இதில் அதிகமான நார்ச்சத்து இருப்பதால் கொஞ்சமாக சாப்பிட்டாலும் வயிறு நிறைய சாப்பிட்ட திருப்தியைக் கொடுக்கும். மேலும் இதிலுள்ள பப்பாய்ன் என்ற என்சைம் செரிமானத்திற்கும் ஆரோக்கியமான மெட்டபாலிஸத்திற்கும் உதவுகிறது” என கூறுகிறார் அன்சாரி.

    சர்க்கரை நோயாளிகள் பப்பாளி பழம் சாப்பிடலாமா?

    சர்க்கரை வியாதி இருக்கிறது என்பதற்காக பப்பாளி பழம் சாப்பிடுவதை முழுதாக தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் சாப்பிடுவதற்கு முன் உங்கள் சர்க்கரை அளவை சோதித்துப் பார்த்துக் கொள்வது அவசியமாகும். சரிவிகிதமான டயட்டிற்கு குறைந்த அளவே பழம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள். “சர்க்கரை நோயாளிகள் அளவாக பப்பாளி பழத்தை சாப்பிடுவது பாதுகாப்பானதே. எந்தவொரு பழத்திலும் இயற்கையாகவே சர்க்கரை இருக்கும். ஆகையால் எப்போதும் பழத்தை கொஞ்சமாக சாப்பிட வேண்டும். சர்க்கரை நோயாளிகள் தங்கள் டயட்டில் பப்பாளி பழத்தை எவ்வுளவு எடுத்துக் கொள்ளலாம் என மருத்துவரிடமோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட டயட்டிசியனிடமோ கேட்டுக் கொள்வது நல்லது” என மேலும் விளக்கினார்.

    கர்ப்பிணி பெண்களுக்கு பப்பாளி பழம் பாதுகாப்பானதா?

    கர்ப்பிணி பெண்கள் பப்பாளி பழம் சாப்பிடுவது பாதுகாப்பானதே. “எனினும் தங்கள் டயட்டில் புதிய உணவை சேர்ப்பதற்கு முன் மருத்துவரின் அறிவுரையை கேட்பது நல்லது” என்று மருத்துவர் கூறுகிறார்.

      கவனத்தில் கொள்ள வேண்டியவை:

      பப்பாளி பழம் சாப்பிடுவதற்கு முன் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என அன்சாரி கூறுகிறார். அவை,

      • அலர்ஜி: சிலருக்கு பப்பாளி பழம் ஒத்துக்கொள்ளாது. சாப்பிட்டால் அலர்ஜி ஆகிவிடும். பப்பாளி பழத்தை சாப்பிட்ட பிறகு ஏதாவது மோசமான எதிர்வினைகள் உங்களுக்கு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் செல்லுங்கள். அவரின் அறிவுரையை கேட்டு அதன்பிறகு உண்ணுங்கள்.
      • நன்கு பழுத்தவை: முழுதாக விளைந்த பப்பாளி பழத்தை சாப்பிடும் போது தான் அதன் முழு சுவையும் ஊட்டச்சத்தும் நமக்கு கிடைக்கும்.
      • பூச்சிக்கொல்லிகள்: பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தப்படாத இயற்கையாக விளைந்த பப்பாளி பழத்தையே எப்போதும் சாப்பிடுங்கள்.
      • பப்பாளி பழத்தில் என்சைம்கள் இருப்பதால் சில மருந்துகளோடு அவை கலப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக இரத்தம் உறைதல் தொடர்பான மருந்துகள். நீங்கள் ஏதாவது மருந்து உட்கொள்பவராக இருந்தால், இதன் விளைவுகள் குறித்து உங்கள் மருத்துவரிடம் ஆலோசனைப் பெறுதல் நலம்.
    • Click here for more Health Tip

       Click here to join whatsapp group for daily health tip


சத்து மாவு கஞ்சி குடிப்பதால் கிடைக்கும் 7 நம்பமுடியாத நன்மைகள்.. சம்மருக்கு ஏற்ற ட்ரிங்க்..!

 சத்து மாவு என்பது தானியங்கள் மற்றும் பருப்புகளின் கலவையிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு மாவு ஆகும். அதன் குளிர்ச்சியான குணங்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட இந்த பானம் பல வகையான ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. சத்து மாவின் ஆரோக்கிய நன்மைகள் உடலின் நிலைத்தன்மைக்குத் தேவையான அத்தியாவசிய தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துக்களுடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக வெறும் வயிற்றில் இதை உட்கொள்ளும் போது வயிற்று அசௌகரியத்தை நீக்கும் மற்றும் உடலின் தீங்கு விளைவிக்கும் நச்சுகளையும் நீக்கும். முன்னரே குறிப்பிட்டபடி சத்து மாவு உடலைக் குளிர்விக்கும் என்பதால் கோடை கால வெப்பத்திலிருந்து ஆறுதல் பெற இதுவொரு 'பெஸ்ட் ஆப்ஷன்' ஆகும். இப்படியாக கோடையில் சத்து மாவு பானத்தை குடிப்பதால் கிடைக்கும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

உடனடி ஆற்றலை வழங்கும் : சத்து மாவு பானம், கணிசமான அளவு தாதுக்கள் மற்றும் ஆற்றலைக் கொண்ட ஒரு எளிய பானமாகும். மேலும், இதை நம் உடலால் மிகவும் எளிதில் ஜீரணிக்க முடியும். தொடர்ந்து சத்து மாவு பணம் குடிப்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நல்லது.

எடை இழப்புக்கு உதவும் : சத்து மாவு பானத்தை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது ப்ளோட்டிங் ஏற்படுவது குறையும். மேலும், இது உங்கள் உடலின் மெட்டபால்ஸித்தை அதிகரிக்கிறது மற்றும் கூடுதல் கலோரிகளை சரியாக 'பர்ன்' செய்யவும் உதவுகிறது.

சருமத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்கும் : தொடர்ந்து சத்து மாவை உட்கொள்வது சருமத்திற்கு ஊட்டமளிக்கும் மற்றும் சருமத்தின் நீரேற்றத்தை பராமரிக்கும். மேலும் சருமத்தில் உள்ள செல்களில் ஏற்படும் தேய்மானத்தை தடுக்கும்.

பசியை அதிகரிக்கும் : சத்து மாவு, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இதை வெறும் வயிற்றில் உட்கொள்ளும் போது அது பசியை அதிகரிக்கும். மேலும் காலை உணவுக்கு முன் சத்து மாவு பானம் குடிப்பதன் மூலம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் போதுமான அளவு கிடைக்கும்.

நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தைத் தடுக்கும் : சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தைத் தடுப்பது சத்து மாவிப்பின் முக்கியமான ஆரோக்கிய நன்மைகளில் ஒன்றாகும். சத்து மாவு என்பது குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் கொண்ட கரும்பு சாறு போன்றதொரு பானமாகும். இதன் விளைவாக, நேச்சுரல் சுகர் படிப்படியாக வெளியிடப்படும்.

செரிமானத்தை மேம்படுத்தும் : உப்பு, இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து உள்ளதால், சத்து மாவு செரிமானப் பாதையின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது, இது வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் மேம்படுத்தும், சுத்தப்படுத்தும். வெறும் வயிற்றில், ஒரு கிளாஸ் சத்து மாவு பணம் குடித்துவர கண்கூட பலன் கிடைக்கும்.

பெண்களுக்கான ஒரு மூலிகை மருந்து : சத்து மாவு என்பது ஊட்டச்சத்து நிறைந்த ஒரு பானமாகும், இது பெண்களுக்கு கர்ப்பம் மற்றும் மாதவிடாய் காலத்தில் இழந்த ஊட்டச்சத்துக்களை மீண்டும் பெற உதவுகிறது மற்றும் ஆரோக்கியமாக இருக்க ஆற்றலையும் வழங்குகிறது. ஒட்டுமொத்தமாக சத்து மாவு பானம், கோடையில் குடிக்க வேண்டிய ஒரு சிறந்த ஆற்றல் நிறைந்த பானமாகும்

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip