Search

புதுச்சேரி கடற்கரையில் இத்தனை ஸ்பெஷல் இருக்கா? மிஸ்பண்ணாம என்ஜாய் பண்ணுங்க!

 புதுச்சேரி

 என்றாலே மினி கோவா என்று வெளிநாட்டினர் மற்றும் சுற்றுலா பயணிகளால் அழைக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது மினி கோவாவுக்கு ஏற்றது போல், பாண்டி பெண்ணா கடற்கரை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாண்டி மெரினாகடற்கரை வம்பாகீரை பாளையம் பகுதியில் உள்ள கலங்கரை விளக்கத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளது.

Ads by 

இது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பகுதியாகும். இது புதுவை அரசாங்கத்தால் தீம் அடிப்படையிலான கடற்கரை திட்டங்களின் கீழ் உருவாக்கப்பட்டது. மேலும், "பாண்டி மெரினா" கடற்கரை உணவு அடிப்படையிலான திட்டங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கடற்கரையில் பல்வேறு விதமான உணவு அரங்குகள், சுற்றுலா குடில்கள்அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கடற்கரையின் அழகை ரசித்தபடியே உணவருந்த பிரம்மாண்ட கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், அதற்கும் ஒரு படி மேலாக, குழந்தைகளை மகிழ்விக்க டாய் ரயில், பவுன்சிங் கேன்சல், செயற்கை மழை நடனம் போன்ற விளையாட்டு சாதனங்கள் உள்ளன. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகைஅதிகரித்துள்ளது. இவ்வாறு, பாண்டி மெரினா பீச்சிற்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழகமும் களம் இறங்கியுள்ளது.மேலும், சென்னை மெரினா கடற்கரை போல் புதுச்சேரியிலும் குதிரை சவாரி, ஒட்டக சவாரி, சிறப்பு நான்கு சக்கர வாகன சவாரி, ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் உள்நாட்டு உணவு முதல், அயல் நாட்டு உணவுகள் வரை இங்கு அனைத்து விதமான உணவுகளும் கிடைக்க வழி வகுத்துள்ளது சுற்றுலாத்துறை. அதேபோல் கடற்கரை அழகை ரசித்துக் கொண்டே மது பிரியர்களுக்கு ஏற்றது போல் அரசு அனுமதியுடன் ஒரு தனியார் மதுபான கூடமும் அமைக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பொதுமக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

பார்க்கும் இடமெல்லாம் ஓவியம்.. நகரம் முழுவதும் கலைநயம்.. ராஜஸ்தானில் இப்படி ஒரு இடமா?

 கலை என்பது எந்த வடிவத்தில் இருந்தாலும் அது பெரும் எண்ணிக்கையிலான மக்களை ஈர்க்கும். சாதாரண இடத்தை கூட அசத்தலாக மாற்றும்   இருக்கிறது. ஒரு வெள்ளை சுவரின் மீது ஓவியம் வரைந்த பின்னர் அந்த சுவரின் தோற்றமே முற்றிலும் மாறிவிடும். ஒரு சுவருக்கே இப்படி என்றால் ஒரு நகரமே கலைநயத்துடன் இருந்தால் எப்படி இருக்கும்.

அப்படி ஒரு அழகிய நகரம் நம் நாட்டில் உள்ளது. ராஜபோக வாழ்க்கை முறைகளை பார்க்க விரும்பினால் அதற்கு தீனி போடும் பல இடங்களைக்கொண்டது தான் ராஜஸ்தான். அந்த ராஜஸ்தானின் மையப்பகுதியில் உள்ள ஷேகாவதி நகரம் தான், இந்தியாவின் வளமான கடந்த காலத்திற்கும் கலைத் திறமைக்கும் சான்றாக விளங்குகிறது. அதன் அலங்கரிக்கப்பட்ட ஹவேலிகள் மற்றும் அழகான சுவரோவியங்களுக்காக குறிப்பிடத்தக்கது. 

ராஜஸ்தானின் இந்த பிரமிக்க வைக்கும் ஷேகாவதி பகுதிக்குள் காலடி எடுத்து வைக்கும் போது  வரலாறு, கலை, கலாச்சாரம் மற்றும் வண்ணம் ஆகியவை ஒன்றிணைந்து ஒரே இடத்தில் இருப்பதைக் காணலாம். இது போன்ற ஒரு கலவை வேறு எங்கு என்று தெரியாது. அப்படி ஒரு அற்புதமான காட்சியாக இருக்கும்.

ஷேகாவதி , உலகின் மிகப்பெரிய திறந்தவெளி கலைக்கூடம் என்று அழைக்கப்படுகிறது . இந்த  முழுப் பகுதியும் விசித்திரமான நகரங்கள் மற்றும் குக்கிராமங்களால் சூழப்பட்டுள்ளது. இங்குள்ள  எல்லா இடங்களுக்கும் தனக்கென அதனை கலை மரபு உண்டு. ஷேகாவதியில் உள்ள ஹவேலிகள் அல்லது மாளிகைகள் அழகிய சுவரோவியங்கள் மற்றும் சுவரோவியங்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும்.

அவை கடந்த காலத்தின் கலை நுணுக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நிற்கின்றன . இந்த பகுதியில் உள்ள முக்கிய நகரங்கள் என்று தேடும் போது  மாண்டவா, நவல்கர் மற்றும் ஃபதேபூர் ஆகியவை அதில் முதன்மையான இடத்தை பிடிக்கும். நகரத்தின் எந்த பக்கம் திரும்பினாலும் ஓவியம், நுணுக்கமான கட்டிடக்கலை, வித்தியாசமான கட்டிட வேலைப்பாடுகள் என்று எல்லாவற்றையும் பார்க்கலாம்.

ஷெகாவதியின் அலங்கரிக்கப்பட்ட ஹவேலிகள் அவற்றின் விரிவான ஓவியங்கள் மற்றும் அற்புதமான முற்றங்களால் வரையறுக்கப்பட்டுள்ளன. 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில், ஷெகாவதி பணக்கார வணிகர்களின் தாயகமாக இருந்தது. இந்த மாளிகைகள் அந்த வணிகர்களால் கட்டப்பட்டது, அவர்கள் அவற்றை அழகுபடுத்துவதற்கு நிறைய பணம் செலவழித்தனர்.

ஒவ்வொரு மாளிகையும்  இந்திய புராணங்களின் காட்சிகளை சித்தரிக்கும் ஓவியங்களால் சூழப்பட்டிருப்பதை பார்க்க முடியும்.  ஓவியங்களின் வண்ணங்கள் இயற்கையான நிறமிகளைக் கொண்டு திறமையான கைவினைஞர்களால் செய்யப்பட்டு வரையப்பட்டுள்ளது. இன்றும், ஷேகாவதி கலை மற்றும் கலைஞர்களின் மையமாக உள்ளது.  இந்த ஹவேலிகள்  கலைக்கூடங்கள் மற்றும் அருங்காட்சியகங்களாக மாற்றப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும், ஷெகாவதி பல கலை விழாக்கள் மற்றும் கலை கற்றல் பட்டறைகள் நடத்தப்படுகிறது. இது உலகளாவிய கலைஞர்களை தங்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கிறது. ஷேகாவதியின் ஒவ்வொரு மூலைமுடுக்கும் ராஜஸ்தானின் செழுமையான கடந்த காலத்தின் சாரத்துடன் வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

ஃபேட்டி லிவர் நோயை விரட்டும் ஜப்பானிய உணவுமுறையை டிரை பண்ணி பாருங்க..!

 எப்போதும் ஒரே விதமான டயட் பிளான் ஃபாலோ செய்வதால் போர் அடித்து விட்டதா? நீங்க ஏன் ஜப்பானிய டயட்டை பின்பற்றக் கூடாது? இது உங்கள் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை அளிப்பதோடு, உங்கள் ஆயுளையும் அதிகரிக்க கூடும். அது மட்டுமல்லாமல் இது கொழுப்பு மிகு ஈரல் (Fatty Liver) ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் தடுக்கிறது. இந்த பதிவில் ஜப்பானிய உணவு முறை குறித்து விரிவாக பார்க்கலாம்.

பொதுவாக ஜப்பானிய மக்களுக்கு நீண்ட ஆயுள் இருப்பதாகவும், அவர்கள் கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் (Fatty Liver Disease, FLD) உட்பட எந்த ஒரு நாள்பட்ட நோய்களாலும் குறைவாகவே பாதிக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது உணவு முறைதான். கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேமிக்கப்பட்டு அதன் காரணமாக ஏற்படும் வீக்கம் கொழுப்பு மிகு ஈரல் நோய் என்று அழைக்கப்படுகிறது. இது கல்லீரலை மோசமாக பாதிக்கும் ஒரு நோயாகும். இப்பொழுது உங்கள் கல்லீரலை பாதுகாக்கவும், உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளவும் ஜப்பானிய உணவு முறை எவ்வாறு உதவுகிறது என்பதை புரிந்து கொள்வோம்.

ஜப்பானிய உணவு முறை என்றால் என்ன, அதன் பலன்கள் யாவை? நல்ல ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளைத் தரும் உணவுகளை சாப்பிடும் ஒரு உணவு முறையே ஜப்பானிய டயட். இது அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த ஒரு பேலன்ஸ்டு டயட், மைண்ட்ஃபுல் ஈட்டிங் மற்றும் அந்தந்த பருவத்தில் கிடைக்கும் உணவுகளை சாப்பிடுவதை உள்ளடக்கியது. ஜப்பானிய உணவு முறையை பின்பற்றுவதன் மூலமாக கொழுப்பு மிகு கல்லீரல் நோய் உட்பட பலவிதமான நாள்பட்ட நோய்கள் ஏற்படுவது குறைந்து இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றது.

கல்லீரலில் ஏற்படும் வீக்கத்தை தடுக்கவும், அது சேதமடைவதில் இருந்து பாதுகாக்கவும் போதுமான நார்ச்சத்து, ஆன்டிஆக்சிடென்ட்கள் மற்றும் பிற பைட்டோ நியூட்ரியன்ட்கள் நிறைந்த காய்கறிகள், பழங்கள் முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் போன்றவை இந்த உணவு முறையில் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. வீக்கத்தை எதிர்த்து போராடக்கூடிய பண்புகள் மற்றும் இதயத்தை பாதுகாக்க கூடிய நன்மைகள் அடங்கிய ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்களின் சிறந்த ஆதாரமாக விளங்கக்கூடிய மீன் மற்றும் கடல் சார்ந்த உணவுகளும் இந்த உணவு முறையில் பின்பற்றப்படுகிறது.

"வயிறு 80 சதவீதம் முழுமையாகும் வரை மட்டுமே சாப்பிடுதல்" :  ஜப்பானிய உணவு முறையின் மற்றொரு சிறப்பு அம்சம். இது நாம் உட்கொள்ளும் கலோரிகள் அளவை குறைத்து, எடை இழப்பை ஊக்குவிக்கிறது. மேலும் மைண்ட்ஃபுல் ஈட்டிங் பயிற்சியை மேற்கொள்வதன் மூலமாக அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது தவிர்க்கப்பட்டு, உடல் பருமன் மற்றும் செரிமான கோளாறுகள் தவிர்க்கப்படுகிறது.

கொழுப்பு மிகு கல்லீரல் நோயைத் தவிர்க்க ஜப்பானிய உணவு முறை எவ்வாறு உதவுகிறது? சிவப்பு இறைச்சி, பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை போன்றவற்றை தவிர்த்து தாவரம் சார்ந்த உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் ஜப்பானிய உணவு முறை கல்லீரலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி, அது சேதமடைவதை தடுக்க உதவுகிறது. இவ்வாறு கொழுப்பு மிகு கல்லீரல் நோயிலிருந்து நமது கல்லீரல் பாதுகாக்கப்படுகிறது.

மேலும் ஜப்பானிய உணவு முறையில் பின்பற்றப்படும் ரைஸ் மற்றும் நூடுல்ஸ் போன்ற உணவுகளில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்டுகள் காணப்படுகிறது. இவை குறைந்த கிளைசிமிக் இன்டெக்ஸ் அளவுகளை கொண்டுள்ளன. இவ்வாறு இருக்கும் பொழுது செரிமானம் பொறுமையாக நிகழ்த்தப்பட்டு, ரத்த சர்க்கரை அளவுகள் சீராக பராமரிக்கப்படுகிறது. இதன் விளைவாக கொழுப்பு மிகு கல்லீரல் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறைகிறது. ஜப்பானிய உணவு முறையில் என்னென்ன உணவுகள் பின்பற்றப்படுகிறது?

1. காய்கறிகள்: ஜப்பானிய உணவு முறையை பொறுத்தவரை, காய்கறிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. காய்கறிகளை பச்சையாகவோ, ஊறுகாயாகவோ அல்லது பாதி அளவு சமைத்தோ சாப்பிடலாம். முள்ளங்கி, கத்திரிக்காய், பீன்ஸ், காளான் போன்ற பெரும்பாலான உணவுகள் ஜப்பானிய உணவு முறையில் பின்பற்றப்படுகிறது.

2. பழங்கள்: காய்கறிகளைப் போலவே பழங்களும் ஜப்பானிய உணவு முறையில் ஒரு முக்கிய பகுதி வகிக்கிறது. ஸ்ட்ராபெர்ரி, பீச், கிரேப்ஸ் போன்ற பருவநிலை பழங்கள் அதிகமாக சேர்க்கப்படுகிறது.

3. முழு தானியங்கள்: ஜப்பானிய உணவு முறையில் அரிசி, பார்லி, நூடுல்ஸ் மற்றும் சிறுதானியங்கள் போன்ற முழு தானியங்கள் அடங்கும்.

4. கடல் சார்ந்த உணவுகள்: மீன் மற்றும் பிற கடல் சார்ந்த உணவுகள் ஜப்பானிய உணவு முறையின் முக்கிய பகுதி. கானாங்கெளுத்தி, மத்தி மற்றும் வஞ்சரம் போன்ற மீன்கள் இந்த உணவு முறையில் அதிகமாக சேர்க்கப்படுகிறது.

5. பருப்பு வகைகள் :  புரதச்சத்து நிறைந்த சோயா பீன்ஸ், டோஃபு போன்ற பருப்பு வகைகளும் ஜப்பானிய உணவு முறையில் முக்கிய பங்கு வகிக்கிறது.

6. புளிக்க வைக்கப்பட்ட உணவுகள்: மீசோ, சோயா சாஸ் மற்றும் நட்டோ போன்ற செரிமான ஆரோக்கியத்திற்கு அவசியமான நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை கொண்ட உணவுகள் இதில் அடங்கும்.

7. கிரீன் டீ: கிரீன் டீ என்பது ஜப்பானில் ஒரு பாரம்பரிய பானமாகும். இது பெரும்பாலும் நாள் முழுவதும் பருகப்படுகிறது. கிரீன் டீயில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் நமது ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை அளிக்கும்.

8. தின்பண்டங்கள்: ரைஸ் கிராக்கர்ஸ், உலர்ந்த கடற்பாசி மற்றும் நொச்சி என்று சொல்லப்படக்கூடிய ரைஸ் கேக் போன்ற பாரம்பரிய ஜப்பானிய தின்பண்டங்கள் மிதமான அளவில் சாப்பிடப்படுகிறது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

தண்ணீருக்கு பதிலாக டீ, காபி குடித்தால் உடலுக்கு நீரேற்றம் கிடைத்துவிடுமா..?

 

"நீரின்றி அமையாது உலகு" என்ற பொன் மொழியை நாம் அனைவரும் கேட்டிருக்க வேண்டும். அந்த வகையில் ஆக்ஸிஜனுக்கு அடுத்தபடியாக மிகவும் முக்கியமாக கருதப்படுவது தண்ணீர்.

நமது உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்குவதில் தண்ணீர் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. மனிதர்கள் உயிர் வாழ தண்ணீர் ஆரோக்கியமான பானங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. நமது உடல் 50 முதல் 70 சதவீதம் நீரால் ஆனது. இதிலிருந்து நாம் உயிர் வாழ நீர் எத்தனை அவசியம் என்பது புரிந்திருக்கும். எனினும் இது தண்ணீர் குடிக்க பிடிக்காதவர்களுக்கும், அடிக்கடி சிறுநீர் கழிப்பதை வெறுப்பவர்களுக்கும் ஒரு பிரச்சினையாக அமைகிறது.

நம் உடலை நீரேற்றமாக வைப்பது சோஷியல் மீடியா யூஸர்களிடையே இடையே ஒரு பெருமையாக தற்போது கருதப்படுகிறது. நம் உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கும், சருமத்தின் பளபளப்பிற்கும் நீரின் முக்கியத்துவத்தை பலர் எடுத்துரைத்து வருகின்றனர். தினமும் குறைந்தபட்சம் 2 - 3 லிட்டர் தண்ணீராவது குடிப்பது அவசியம். இது ஒரு பொதுவான அளவு என்றாலும் கூட, ஒவ்வொருவரின் உடல் வகையை பொருத்து நீரின் தேவை மாறுபடும்.

கடந்த 2016-ஆம் ஆண்டு ஸ்டெர்லிங் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அந்த ஆய்வில் பங்கேற்ற மாணவர்கள் பல்வேறு விதமான பானங்கள் கொடுக்கப்பட்டு, அவர்களின் நீரேற்ற அளவுகள் ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கும் கணக்கிடப்பட்டது. ஒரு லிட்டர் இன்ஸ்டன்ட் காபி மற்றும் பீரில், நீரில் இருப்பது போன்ற அதே அளவு ஈரப்பதம் இருப்பது இதன் மூலம் தெரியவந்தது. எனினும், பால் குடிப்பதன் மூலமாக நீரேற்ற அளவுகள் அதிகபட்சமாக இருப்பது ஆச்சரியத்தை அளித்தது.

தண்ணீருக்கு எந்த ஒரு பானமும் ஈடாகாது என்பதை இந்த ஆய்வில் பங்கேற்ற டாக்டர் ரிச்சன் தெரிவித்தார். டீ மற்றும் காபி ஆகியவை நீரிழப்பை ஏற்படுத்தக்கூடிய டையுரிட்டிக்காக கருதப்படுகின்றன. பொதுவாக டீ, காபி குடித்த உடனே அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான தேவையை நீங்கள் உணர்ந்து இருக்கலாம். Fizzy ட்ரிங்க்ஸ் மற்றும் ஜூஸ்கள் நமக்கு நீரேற்றத்தை அளித்தாலும் அதில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவு காரணமாக வேறு விதமான ஆரோக்கிய கேடுகள் ஏற்படலாம்.

காபின் கலந்த பானங்களை காட்டிலும் பழச்சாறுகள் சிறந்தவை என்றாலும் கூட, அவை ஒரு நபரின் ரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதன் மூலமாக நீரிழப்பை ஏற்படுத்த கூடும் என்பதையும் ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே, நீர்ச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் பல நோய்களைத் தடுக்க தினமும் போதுமான அளவு தண்ணீர் பருகுங்கள். அதோடு டீ, காபி போன்றவற்றை மிதமான அளவு குடிப்பது நல்லது.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

மலச்சிக்கல் பிரச்சனைக்கு ஒரு வாழைப்பழம் போதுமா..? உங்க பிரச்சனைக்கான பலன்..!

 மலச்சிக்கல் என்பது இன்றைய காலத்தில் பலரையும் தொந்தரவு செய்யும் பிரச்சனையாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், மாறிவிட்ட வாழ்க்கை முறை, சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளாமை மற்றும் போதுமான அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ளாதது. உணவை அவசரமாக முடிப்பது, தொடர்ந்து எரிச்சல், கோபம் உள்ளிட்ட தீவிர மன உளைச்சலின் விளைவாக மலச்சிக்கல் இன்று பெரும் பிரச்சனையாக உள்ளது.

மலச்சிக்கல்: நம் வாழ்க்கை முறைதான் நாம் யார் என்பதை தீர்மானிக்கிறது. அந்த வகையில் பரபரப்பான வாழ்க்கை முறையில் ஆரோக்கியமான உணவை பெறுவது என்பதே அரிதான விஷயமாகிவிட்டது. இதனாலேயே செரிமானக்கோளாறு, வயிற்று பிரச்சனை, மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகள் உண்டாகின்றன. குறிப்பாக மலச்சிக்கல் என்பது பலருக்கும் வரக்கூடிய தொந்தரவாக மாறிவிட்டது. இதனால் மூலம் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.

பொதுவாக இந்தப் பிரச்சனையைப் பற்றி மற்றவர்களிடம் பேசக்கூட பலர் வெட்கப்படுகிறார்கள். மருத்துவரிடம் செல்லக்கூட வெட்கப்படுகிறார்கள். ஆனால் இப்படி மலச்சிக்கல் பிரச்சனை அடிக்கடி இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. அந்த வகையில் உங்கள் மலச்சிக்கலைக் குறைக்க வாழைப்பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


இந்தப் பிரச்சனையைப் பற்றி மற்றவர்களிடம் பேசக்கூட பலர் வெட்கப்படுகிறார்கள். மேலும் பலர் மருத்துவரிடம் செல்லக்கூட வெட்கப்படுகிறார்கள். ஆனால் கோப்புகளின் பிரச்சனை அடிக்கடி இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. குவியல்களை குறைக்க வாழைப்பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் அதிக நார்ச்சத்து, பைல்ஸ் பிரச்சனைக்கு நல்ல தீர்வைக் காட்டுகிறது. அதனால்தான் வாழைப்பழம் மலச்சிக்கலுக்கு உகந்த பழமாகக் கருதப்படுகிறது. இப்போது வாழைப்பழத்தை எப்படி, எப்போது சாப்பிட வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வோம்.

வாழைப்பழத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது ஆரோக்கியமான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது. நார்ச்சத்து மலம் வெளியேற்றத்தை மென்மையாக்க உதவுகிறது. குடல் இயக்கத்தின் போது அழுத்தத்தை குறைக்கிறது. குறிப்பாக இந்த பிரச்சனை மோசமடையும் அபாயத்தைக் குறைக்கிறது. வாழைப்பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை செரிமானத்தை மேம்படுத்துகின்றன.

வாழைப்பழத்தை பைல்ஸ் வராமல் சாப்பிட வேண்டுமானால், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எப்போதும் முழுமையாக பழுத்த வாழைப்பழங்களைத் தேர்ந்தெடுக்கவும். லேசாக பழுத்த வாழைப்பழத்தை விட நன்கு கணிந்த வாழைப்பழம் ஜீரணிக்க எளிதாக இருக்கும்.

எளிதாக செரிமானம் மற்றும் சரியான ஊட்டச்சத்துக்காக முழுமையாக பழுத்த வாழைப்பழங்களை சாப்பிடுங்கள். புதிய வாழைப்பழங்களை சாப்பிடுவது மிகவும் முக்கியம். மேலும் வாழைப்பழத்தை மற்ற உணவுகளுடன் சேர்த்து அல்லது கலந்து சாப்பிடாமல் தனியே பழமாக சாப்பிட்டால் அதன் பலன்களை முழுமையாக பெறலாம். சாப்பிடும் போது நன்றாக மென்று சாப்பிடுங்கள்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

எட்டாம் வகுப்பு முடித்தவரா? ரூ.20,000/- சம்பளத்தில் காத்திருக்கும் அரசு வேலை!

 

எட்டாம் வகுப்பு முடித்தவரா? ரூ.20,000/- சம்பளத்தில் காத்திருக்கும் அரசு வேலை!

கோயம்புத்தூர் மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்தில் காலியாக உள்ள சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் அமைப்பின் அலுவலகத்தில் பணிபுரிய ஒப்பந்த அடிப்படையில் துணை ஊழியர்களை ஈடுபடுத்துவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு என 5 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 05.06.2023 முதல் 16.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கோயம்புத்தூர் மாவட்ட காலிப்பணியிடங்கள்:
  • Office Assistant/Clerks – 2 பணியிடங்கள்
  • Receptionist – cum- Data Entry Operator (Typist) – 01 பணியிடம்
  • Office Peon (Mushi/Attendant) – 01 பணியிடம்

என மொத்தம் 5 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து எட்டாம் வகுப்பு அல்லது டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

LADCS சம்பள விவரம்:
  • Office Assistant/Clerks – ரூ.20,000/-
  • Receptionist – cum- Data Entry Operator (Typist) – ரூ.20,000/-
  • Office Peon (Mushi/Attendant) – ரூ.14,000/-
தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் தகுதிகள், திறன்கள், பயிற்சி மற்றும் அனுபவம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து CHAIRMAN/PRINCIPAL DISTRICT JUDGE, District Legal Services Authority, ADR Building, District Court Campus, Coimbatore – 641018 என்ற முகவரிக்கு 1.06.2023 க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

RITES நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க விரையுங்கள்!

 

RITES நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க விரையுங்கள்!

RITES நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Project director/ Project team lead பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேவையான முழு விவரங்களையும் தொகுத்து வழங்கியுள்ளோம். விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

RITES காலிப்பணியிடங்கள்:

RITES நிறுவனத்தில் தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியானது, அதில் Project director/ Project team lead பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

RITES வயது வரம்பு:

விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது 63 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

RITES கல்வித் தகுதி:

பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Graduate degree பெற்றவராக இருக்க வேண்டும்.

RITES ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் நிறுவன விதிமுறை படி ஊதியம் வழங்கப்படும்.

RITES தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் written test / interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

RITES விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து , ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், மேலும் ஒரு நகலை அறிவிப்பில் கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் horc.project@rites.com மூலம் விரைவாக அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

BEL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி போதும் || உடனே விண்ணப்பியுங்கள்!

 

BEL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – டிகிரி தேர்ச்சி போதும் || உடனே விண்ணப்பியுங்கள்!

BEL நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Apprenticeship Training (Non-engineering graduate) பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.12,500/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

BEL காலிப்பணியிடங்கள்:

BEL நிறுவனத்தில் Apprenticeship Training (Non-engineering graduate) பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Apprenticeship கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Com / BBA தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

BEL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 25 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Apprenticeship ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.12,500/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BEL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் மதிப்பெண்களின் அடிப்படையில் (Merit) தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 14.06.2023ம் தேதி அதிகாரப்பூர்வ முகவரிக்கு நேரில் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

IDBI வங்கி 1036 Executive காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க ஜூன் 7 கடைசி நாள்!

 

IDBI வங்கி 1036 Executive காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க ஜூன் 7 கடைசி நாள்!

Executive பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை IDBI வங்கி சமீபத்தில் வெளியிட்டது. இந்த வங்கி பணிக்கு என மொத்தம் 1036 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த வங்கி பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஜூன் 7 கடைசி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

IDBI வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Executive பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் 1036 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 25 க்குள் இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர்கள் மே 2, 1998 முதல் மே 1, 2003க்குள் பிறந்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து எதாவது ஒரு துறையில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    விண்ணப்பதாரர்கள் Online Test (OT), Document Verification (DV) மற்றும் Pre Recruitment Medical Test (PRMT) ஆகிய தேர்வு செயல் முறைகள் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:

வங்கி துறையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு வரும் ஜூன் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 Download Notification 2023 Pdf

Apply Online


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

வட்டார கல்வி அலுவலர் பணியிடங்கள்: ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

 தொடக்கக் கல்வித் துறையின் கீழ் வரும் 33 வட்டார கல்வி அலுவலர் காலி பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் இளநிலை பட்டப்படிப்பு மற்றும் தொடர்புடைய இளங்கலை கல்வியியல் பட்டம் பெற்றிருக்க (Any Degree with B.Ed. Degree ) வேண்டும்.

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 1.7. 2023 அன்று  40 வயதுக்குள் இருக்க வேண்டும்.  பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர் (5 ஆண்டுகள்), இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்  நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் 5 ஆண்டுகள் வரை வயது வரம்புச் சலுகை அளிக்கப்படும்.

மாத சம்பளம்: 36,900-1,16,600 வரை

முக்கியமான நாட்கள்: 

ஆள்சேர்க்கை அறிவிக்கை வெளியிடப்பட்ட நாள்: 05.06.2023

இணைய வழியில் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள்: 06-06-2023 முதல் 05.07.2023  வரை

தேர்வு நடைபெறும் நாள் : 10.09.2023

இதற்கான விண்ணப்பங்களை trb.tn.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணமாக ரூபாய் 600/-நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் எஸ்.சி.எஸ்.டி, வகுப்பினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மட்டும் ரூ.300-ஐ விண்ணப்பக்  கட்டணமாக செலுத்த வேண்டும்.காலியிடங்கள், வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பில் (ரெக்ரூட்மெண்ட் நோட்டிஸ்) தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அதனை, பதிவிறக்கம்செய்து வாசிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news