Search

அரசு பழங்குடியினர் பள்ளிகளில் 38,800 காலியிடங்கள்: முக்கிய அறிவிப்பு இதோ


பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஏகலவ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளிகளில் ((Eklavya Model Residential Schools) காலியாக உள்ள 38,800 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் இல்லாத  பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை விதிமுறைகளை பழங்குடி மாணவர்களுக்கான தேசிய கல்விச்சங்கம் (national education for tribal students) வெளியிட்டுள்ளது.

பழங்குடியின மாணவர்களுக்காக 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான குடியிருப்புப் பள்ளிகளை அமைப்பதற்காக இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 275(1)-ன் கீழ்மத்திய அரசு நிதியை வெளியிட்டு வருகிறது.

Ads by 

2018-19ம் ஆண்டு இதற்கென தனித் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ், 50 சதவீதத்திற்கு மேல் பழங்குடியின மக்கள் தொகை உள்ள வட்டங்களிலும், அல்லது குறைந்தபட்சம் 20 ஆயிரம் பழங்குடியினர் உள்ள ஒவ்வொரு வட்டத்திற்கும் ஏகலவ்யா மாதிரி உறைவிடப் பள்ளிகளை அமைக்க கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேற்கூறிய மக்கள் எண்ணிக்கை அடிப்படையில், நாடு முழுவதும் 740 வட்டங்கள் கண்டறியப்பட்டன. தற்போது வரை, நாடு முழுவதும் 394 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. கிட்டத்தட்ட 1,05,463 பழங்குடியின மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றன.

இந்த பள்ளிகளில் ஆயிரக்கணக்கான ஆசிரியர் மற்றும் ஆசிரியர் இல்லாத பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாக பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகியிருந்தது.  இதைத் தொடர்ந்து, மத்திய அரசின் 2023-24 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தி பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடு முழுவதும் அடுத்த 3 ஆண்டுகளில் ஏகலவ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளிகளில் காலியாக உள்ள 38,800 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத  பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், மேற்கூறிய காலிப் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு விதிமுறைகளை ( Recruitment Rules) பழங்குடி மாணவர்களுக்கான தேசிய கல்விச்சங்கம்  வெளியிட்டது. இதில், பதவியின் பெயர், பணியிடம், பணியின் வகைப்பாடு, ஊதிய விகிதம், பணி நிபந்தனை காலம், கல்வித் தகுதி முதலான நிலைகளில் பின்பற்ற வேண்டிய பொறுப்புகள் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளன.  இந்த புதிய விதிமுறையின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு பணிகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, ஏகலவ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளி ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வப்போதைய, விவரங்களைத் தெரிந்து கொள்ள emrs.tribal.gov.in என்ற இணையதளத்தை பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

உடனே அப்ளை பண்ணுங்க..! நெல்லை சுந்தரனார் பல்கலை கல்லூரிகளில் தற்காலிக முதல்வர் பணி..!

 திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளில் தற்காலிக முதல்வர் பணியிடங்களுக்கு வரும் ஜுன் 14ம் தேதி காலை 11:00 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்தில் நேர்முகத்தேர்வு நடைபெற உள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் நாகம்பட்டி, திசையன்விளை, சங்கரன்கோவில், பணகுடி ஆகிய இடங்களில் இயங்கி வரும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளில் தற்காலிக முதல்வர் பணிக்கான நேர்முகத் தேர்வு 14ம் தேதி காலை 11 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது.

Ads by 

15 ஆண்டுகள் பணி அனுபவம் ஏதேனும் பாடப்பிரிவில் முனைவர் பட்டம், மாநில தகுதித் தேர்வு ,தேசிய தகுதித் தேர்வு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தகுதி பெற்றவர்கள் நேர்காணலில் கலந்து கொள்ள தகுதியானவர்கள். மேலும் விண்ணப்ப படிவத்தை பல்கலைக்கழக இணையத்தில் இருந்து www.msuniv.ac.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தை செயலாக கட்டணம் ரூபாய் 500க்கான (இந்தியன் வங்கி கணக்கு எண் 925398635) செலுத்திய சீட்டுடன் பதிவாளர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அபிஷேகப்பட்டி, திருநெல்வேலி என்ற முகவரிக்கு வரும் 10ம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்” என அதில் தெரிவித்துள்ளார்.



 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

படித்துக்கொண்டே ரூ.2 லட்சம் சம்பாதிக்கலாம்..! சூப்பர் அறிவிப்பு வெளியிட்ட தென்காசி கலெக்டர்..!

 

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக 2023 மற்றும் 2024ம் ஆண்டுகளில் 12ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்களுக்கு எச்.சி.எல் நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு சேர்ந்து படிக்க வாய்ப்பு என மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன்அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலமாக 2023 மற்றும் 2024ம் ஆண்டுகளில் 12ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு எச்.சி.எல் நிறுவனத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு B.Sc.(Computer Designing) B.Com, BCA & BBA சேர்ந்து படிக்க வழி வகை செய்யப்படும்.

Ads by 

12ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு HCL Technologies-ல் வேலைவாய்ப்புடன் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள புகழ் வாய்ந்த பிட்ஸ்பிலானி கல்லூரியில் B.Sc (Computer Designing பட்டப்படிப்பு அமிட்டி பல்கலைக்கழகத்தில் BCA/BBA/B.Com மற்றும் நாக்பூரிலுள்ள ஐஐஎம் பல்கலைகழகத்தில் Integrated Management பட்டப்படிப்பு சேர்ந்து படித்திடவும், வாய்ப்பும் பெற்று தரப்படும்.

இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். 12ம் வகுப்பில் 2022ம் ஆண்டுகளில் முடித்தவர்கள் 60 சதவீதம் மற்றும் 2023ம் ஆண்டுகளில் முடித்தவர்கள் 75 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எச்.சி.எல் மூலம் நடத்தப்படும் Entrance examination தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படும் இப்படிப்பிற்கான செலவீனம் தாட்கோவால் ஏற்கப்படும்.

இத்திட்டத்தின் வருடாந்திர ஊதியமாக ரூ.1,70,000/ முதல் ரூ.2,20,000/ வரை பெறலாம். மேலும் திறமைக்கேற்றவாறு பதவி உயர்வின் அடிப்படையில் ஊதிய உயர்வும் பெறலாம். இப்பயிற்சியில் சேர தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் புகைப்படம் மற்றும் ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை பதிவு செய்ய வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் வட்டாட்சியர் அலுவலகம், 2வது தளம், தென்காசி, என்ற அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது அலுவலக தொலைபேசி எண் : 04633-214487 மற்றும் அலைபேசி எண் : 7448828513 மூலமாக விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம்” என தெரிவித்துள்ளார்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

IRCTC பேக்கேஜ் : ரூ.8000க்கு ஊட்டி, முதுமலை, குன்னூர் 5 நாள் சுற்றுலா செல்ல ரெடியா..? அப்ளை செய்ய டிப்ஸ்

 இந்திய ரயில்வே துறையின் கிளை நிறுவனமான IRCTC நிறுவனம் இந்தியா முழுக்க சுற்றி பார்க்க விரும்பும் மக்களுக்கு ஏற்ப மலிவு விலையில் பல சுற்றுலா பயண திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்தியா மட்டும் அல்லாது நேபாளம், இலங்கை, வங்கதேசம், துபாய் வரை ரயில் மற்றும் விமானத்தின் மூலம் சென்று வரும் திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

அந்த வகையில் இப்போது சீசனில் உள்ள  மலைகளின் அரசி ஊட்டி - புலிகள் அதிகம் இருக்கும்  முதுமலை - குளிர்ச்சி கொஞ்சும் குன்னூர் என்று மூன்று இடங்களுக்கு அழைத்து செல்லும் 5 நாள்  ரயில் பயண பேக்கேஜை IRCTC நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 

பள்ளி விடுமுறைகள் மேலும் சில நாள் தள்ளி போடப்பட்டுள்ள நிலையில் இந்த விடுமுறை முடியும் முன்னர் சென்று வர ஏற்ற பயணமாக இருக்கும். தனியாக பயணிக்கும் ஆகும் செலவை விட குறைந்த விலையில் இந்த பேக்கேஜ் இருக்கும்.  இந்த பயண  விபரங்களை விரிவாக சொல்கிறோம்.

பயண விபரங்கள்: 

நாள் 01:- பயணத்தின் முதல் நாள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ரயில் எண்: 12671, நீலகிரி எக்ஸ்பிரஸ் மூலம் 21.05 மணிக்கு பயணம் தொடங்கும்.

நாள் 02 :- காலை 06.15 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றதும் சாலை வழியாக ஊட்டியில் உள்ள ஹோட்டளுக்கு அழைத்துச்செல்லப்பட்டு தங்க வைக்கப்படுவர். அங்கிருந்து,  தொட்டபெட்டா சிகரம், தேயிலை அருங்காட்சியகம்,  ஊட்டி ஏரி மற்றும் தாவரவியல் பூங்காவைப் பார்வையிடலாம்.

நாள் 03:- காலை படப்பிடிப்பு நடக்கும் இடங்கள், பைக்காரா நீர்வீழ்ச்சி மற்றும் ஏரி போன்றவற்றைப் பார்வையிட அழைத்து செல்லப்படுவர். பின்னர் முதுமலை வனவிலங்கு சரணாலயம்,  யானைகள் முகாம், ஜங்கிள் சவாரி ஆகியவற்றைப் பார்வையிடலாம்.

நாள் 04:- காலை அவர்கள் சொந்தமாக ஊட்டியை சுற்றிப் பார்க்கஅனுமதிக்கப்படுவர். அதோடு சிம்ஸ் பூங்கா, லாம்ப்ஸ் ராக் மற்றும் டால்பின்ஸ் நோஸ் ஆகியவற்றைப் பார்வையிட குன்னூருக்கு அளித்துச்செல்லப்படுவர். பின்னர் சாலை வழியாக மேட்டுப்பாளையம் வந்து 21.20 மணிக்கு ரயில் எண். 12672 - நீலகிரி விரைவு வண்டியில்  மூலம் மீண்டும் சென்னைக்கு கிளம்பலாம்.

நாள் 05:- சென்னை சென்ட்ரல் 06.20 மணிக்கு வந்தடையும். அதோடு ஊட்டி- முதுமலை- குன்னூர் பயணம் நிறைவுபெறும்.

இது குழந்தைகள் பெரியவர்கள் என்று அனைவரும் மகிழ்ச்சியாக நேரத்தை செலவழிக்க ஏற்ற பயண திட்டமாக இருக்கும்.

பேக்கேஜின் விலை:

5 இரவுகள் 4 நாட்கள் பேக்கேஜின் விலையானது, இருவர் மற்றும் மூவர் தாங்கும் வசதியுள்ள பேக்கேஜ் ₹ 7900 முதல் தொடங்குகிறது, மேலும் ஒற்றை ஆக்கிரமிப்பு அறைகளுக்கு, பேக்கேஜின் விலை ₹20750 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. படுக்கையுடன் கூடிய குழந்தைக்கு, பேக்கேஜ் விலை ₹4550 மற்றும் படுக்கையில்லாத குழந்தைகளுக்கு ₹3700 என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதோடு உணவு, தண்ணீர், போக்குவரத்து, வழிகாட்டிகள், ஆகியவற்றுக்கான செலவுகள் பேக்கேஜுக்குள் அடங்கும். உணவு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட உணவுதான் பரிமாறப்படும். விருப்பத்தின்படி வழங்கப்படாது. வேறு உணவு சாப்பிட விரும்பினால் அது தனிப்பட்ட செலவில் சேரும்.

இந்த பயணம் ஒவ்வொரு வியாழன் அன்றும் சென்னையில் இருந்து தொடங்குகிறது. நீங்கள்  இந்த பயணத்தை மேற்கொள்ள விரும்பினால், https://www.irctctourism.com/pacakage_description?packageCode=SMR007 என்ற இணைய முகவரியில் பதிவு செய்து கொள்ளுங்கள். வாழ்க்கை ஒருமுறை தானே. உலகின் அழகை ரசித்துவிட்டு போவோமே.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip