Search

காஞ்சிபுரம் மகளிர் திட்ட அலுவலகத்தில் வேலை.. என்னென்ன தகுதிகள் வேண்டும்?

 காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் (Block Co-ordinator) பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன்வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM) என்பது கிராமப்புற வறுமையை போக்கவும் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கும் ஒரு முக்கிய திட்டமாகும்.

Ads by 

காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மகளிர் திட்டம் அலுவலகம், வட்டார இயக்க மேலாண்மை அலகில் காலிப்பணியிடமாக உள்ள 3 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் (BC) பணியிடங்களுக்கு கீழ்கண்ட விவரங்கள் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வி மற்றும் பிறதகுதிகள்

1.கல்வித்தகுதி : ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.6 மாத காலம் கணினி பயிற்சி (MS Office) பெற்றிருக்க வேண்டும்.

2.வயது : 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

3. முன் அனுபவம் : குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் மகளிர் மேம்பாட்டு திட்டம் தொடர்பான பணிகளில் முன் அனுபவம் பெற்று பணியாற்றி இருக்க வேண்டும்.

4.இருப்பிடம் : சம்மந்தப்பட்ட வட்டாரத்தை இருப்பிடமாக கொண்டு இருக்க வேண்டும்.

5.பாலினம் : பெண்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 15.06.2023

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி : இணை இயக்குநர்/திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்.

வட்டார இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள 3 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடத்திற்கு தகுதியுள்ள பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை 15.06.2023-க்குள் அனுப்பி பயன்பெறலாம்” என தெரிவித்துள்ளார்.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

8ம் வகுப்புத் தேர்ச்சியா..? நேர்காணல் மட்டுமே... தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு..!

 

திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

காலியிட விவரம் :  1 அலுவலக உதவியாளர்.

Ads by 

இனசுழற்சி அடிப்படையில் இந்த பதவிக்கு அனைத்து வகுப்பினரும் முன்னுரிமையுள்ளவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: குறைந்தபட்சம் 8ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 1.07.2023 அன்று விண்ணப்பதாரர் வயது வரம்பு 18-37க்குள் இருக்க வேண்டும்.

பணிக்கான ஊதிய விகிதம்: Basic Pay Rs.15,700/- + DA + HRA

முழுவதுமாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சுயவிலாசமிட்ட ரூ.50/-க்கான தபால் தலை ஒட்டப்பட்ட உறையுடன் பதிவுத் தபால் மூலமாக 21.6.2023 அன்று மாலை 5.30 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி;

தலைவர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், எண்: 52, குமரன்கோவில் தெரு, திருவாரூர்- 610 001

21.06.2023 அன்று மாலை 5.30 மணிக்கு மேல் வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். நேர்காணல் மூலமாக  காலியிடம் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news