Search

திண்டுக்கல்லில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்.. இளைஞர்களே தவற விடாதீங்க!

 திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் வெள்ளியன்று (16.06.2023) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

வேலைவாய்ப்புத் துறையால், படித்த வேலைவாய்ப்பற்ற பதிவுதாரர்களை தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யும் பொருட்டு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமையும் நடைபெற்று வருகிறது.

அதன்படி ஜுன்-2023-ஆம் மாதத்திற்குரிய தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 16.06.2023 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30-மணிக்கு நடத்தப்படவுள்ளது. இம்முகாமில் பல முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவையான நபர்களைத் தேர்வு செய்யவுள்ளனர். இதில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் தங்களின் சுயவிபரக் குறிப்புகளுடன் கூடிய விண்ணப்பம், அனைத்து கல்விச்சான்றுகள் மற்றும் ஒளிநகல் (ஜெராக்ஸ்)-களுடன் நேரில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

மேலும் இம்முகாமில் மத்திய மற்றும் மாநில அரசின் திறன் மேம்பாட்டுக்கழகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு இலவச திறன் எய்தும் பயிற்சிக்கும் பதிவு செய்து கொள்ளலாம்.

இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார்துறை வேலையளிப்பவர்கள் தங்களுக்குத் தேவைப்படும் பணியாளர்களின் விபரத்தினையும், தொழிற்பழகுநர் பயிற்சிக்குத் தேவைப்படும் பணியாளர்களின் விபரத்தினையும் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

வேலை இல்லா இளைஞர்களுக்கு குட்நியூஸ்.. மதுரையில் தொழில்நுட்ப பயிற்சிக்கு அப்ளை பண்ணலாம்!

 மதுரை கோ.புதூர் பகுதியில் உணவு, ரசாயன தொழில்நுட்ப பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று கோ புதூர் தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்கம் மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை புதுார் தொழிற்பேட்டை எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையம் சார்பில் கட்டணத்துடன் கூடிய உணவு தொழில்நுட்ப பயிற்சி மற்றும் ரசாயன பொருட்கள் தயாரிப்பு அளிக்கப்படுகிறது.

சிறுதானியம், பழங்கள், காய்கறி, தக்காளி, நெல்லிக்காயில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், அடை மிக்ஸ், உடனடி மசாலா மிக்ஸ் , பொடி வகைகள், ஊறுகாய், ஜூஸ் தயாரிப்பு மற்றும் லேபிள் தயாரிப்பு, சந்தை விற்பனை குறித்து ஜூன் 19 முதல் 23 வரை காலை 10:00 மணி முதல் மதியம் ஒரு மணி வரை பயிற்சி அளிக்கப்படும்.

கம்ப்யூட்டர் சாம்பிரணி, பாத்திரம் விளக்கும் பவுடர், வாஷிங் பவுடர், கிளினிங் பவுடர், சுத்தம் செய்யும் திரவம், ரோஸ் வாட்டர், ஓமவாட்டர், வினிகர், வலிநிவாரண மருந்து தயாரிப்பு குறித்து ஜூன் 26 முதல் 30 வரை, காலை 10:00 மணி முதல் மதியம் ஒரு மணி வரை பயிற்சி அளிக்கப்படும். திருமங்கலம் குன்னனம்பட்டி கோகிலா சித்த மருத்துவமனை ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

குறைந்தது பத்தாம் வகுப்பு முடித்த 18 வயது பூர்த்தி அடைந்த ஆண், பெண் பயிற்சியில் இலவசமாக பங்கேற்கலாம். கல்விச்சான்றிதழ் நகல், போட்டோ, ஆதார் அட்டை அகல், எஸ்.சி.,எஸ்.டி., பிரிவினராக இருந்தால் ஜாதி சான்றிதழ் நகலுடன் பதிவு செய்ய வேண்டும்.எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப வளர்ச்சி அலுவலக விரிவாக்க மையம், தொழிற்பேட்டை 3வது நுழைவு வாயில், மாட்டுத்தாவணி, மதுரை. என்ற முகவரிக்கு கொரியர் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் இந்த எண்ணிற்கு 82200 06872, 86670 65048 தொடர்புக்கு கொண்டு அணுகலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

தொங்கும் தொப்பையை குறைக்கணுமா? அப்போ இந்த டிப்ஸ் கட்டாயம் பயன் தரும்

 தொப்பை கொழுப்பை அகற்றுவது எப்படி: தற்போது பெரும்பாலானோர் தொங்கும் தொப்பையால் அவதிப்படுகின்றனர். வயிற்றில் படிந்துள்ள கொழுப்பை வெளியேற்ற அனைவரும் விரும்புகின்றனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில், சிலர் ஜிம், உடற்பயிற்சி செய்து தொப்பையை குறைக்க முயற்ச்சிக்கின்றனர், இருப்பினும் நினைத்த பலனை பெறுவதில்லை. எனவே வாருங்கள், தொப்பையை குறைக்க அனைவரும் பின்பற்ற வேண்டிய சில டிப்ஸ்களை இன்று கொண்டுவந்துள்ளோம், இதன் மூலம் நீங்கள் விருபியா பலனை பெற முடியும்.

தொப்பை கொழுப்பை போக்க இந்த குறிப்புகளை பின்பற்றவும்

இடைவெளி எடுத்து உணவை உண்ணுங்கள்
பெரும்பாலான மக்கள் ஒரு நாளைக்கு 3 முறை உணவு சாப்பிடுகிறார்கள். இதில் காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு ஆகும். ஆனால் நீங்கள் உங்கள் தொப்பையை குறைக்க விரும்பினால், ஒரு நாளைக்கு 3 முறைக்கு மேல் சாப்பிடுவதற்கு பதிலாக, சிறிய சிறிய இடைவெளியில் உணவை பிரித்துக்கொண்டு, அதாவது 6 முறை சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தொப்பை கொழுப்பை குறைக்க முடியும்.

குறைந்தது 30 நிமிட உடற்பயிற்சி
தொப்பையை குறைக்க, தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதற்கு, நீங்கள் ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தொப்பையை போக்கலாம்.

உணவு உண்ணும் முன் தண்ணீர் குடிக்கவும்
பலருக்கு உணவு உண்ணும் போது தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளது, ஆனால் அப்படி செய்வது தவறு, ஏனெனில் அவ்வாறு செய்வது செரிமான செயல்முறையை கெடுக்கும். அதனால் தான் உணவு உண்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன் தண்ணீர் குடிக்க வேண்டும். இதை செய்வதன் மூலம் தொப்பை கொழுப்பை போக்கலாம்.

போதுமான அளவு தூங்குங்கள்

தூக்கமின்மை பெரும்பாலும் தொப்பை கொழுப்பை இழக்கச்செய்யும் உங்கள் செயல்முறையை தடுக்கிறது. மக்களில் மோசமான தரமான தூக்கம் அதிக எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். இதனால் தொப்பை கொழுப்பைக் குறைப்பது கடினமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. மிகக் குறைந்த தூக்கம் மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும் மற்றும் உங்கள் கார்டிசோல் அதிகரிக்கும். அதிக கலோரி உணவுகளுக்கான உங்கள் பசியையும் அதிகரிக்கும். எனவே, நீங்கள் தினமும் குறைந்தது 7-8 மணிநேரம் தூங்குவதை உறுதிசெய்து உங்கள் மன அழுத்தத்தை திறம்பட நிர்வகிக்க வேண்டும்.

புரதம் நிறைந்த உணவு
புரதச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வது பசியின் உணர்வைக் குறைக்க உதவுகிறது மற்றும் அதிகப்படியான உணவைஎடுத்துக்கொள்ள தவிர்க்கிறது. அதனால்தான் புரதம் நிறைந்த உணவை நமது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உணவை மெதுவாக மென்று சாப்பிட வேண்டும்
உங்கள் தொப்பையை கட்டுக்குள் வைத்திருக்க விரும்பினால், அதிக அளவு உணவை வேகமாக சாப்பிட வேண்டாம். நீங்கள் சாப்பிடும் போதெல்லாம், மெதுவாக சாப்பிடவும். உங்கள் உணவை சரியாக மென்று சாப்பிட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது வயிற்றில் உங்கள் உணவை நொதிக்க உதவுகிறது. இதனால் உணவு வயிற்றில் எளிதில் ஜீரணமாகும். கூடுதலாக, சிறந்த செரிமானம் நீண்ட காலத்திற்கு சிறந்த திருப்தியை உறுதி செய்கிறது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

உடல் எடை குறைய வேண்டுமா? அடிக்கடி சாப்பிடுங்கள், ஆரோக்கியமாக சாப்பிடுங்கள்!

 உடல் எடை அதிகமாக இருந்தால் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகரிக்கிறது. உடல் பருமனால், பக்கவாதம் மற்றும் சில வகையான புற்றுநோய்களும் ஏற்படுகின்றன. ஒருவரது உடல் எடையை அதிகரிப்பதற்கு அடிப்படை நாம் உண்ணும் உணவில் இருக்கும் கலோரிகள் தான்.

கலோரிகள் என்பது நமது உடலுக்கு கிடைக்கும் சக்தியை அளவிடும் ஒரு முறை ஆகும். உணவுகளில் எவ்வளவு சக்தி உள்ளது என்பதை அளக்க நாம் கலோரி என்ற அலகை பயன்படுத்துகிறோம். நாள் ஒன்றுக்கு ஒருவருக்கு எவ்வளவு சக்தி தேவை என்பதை அளக்கவும் கலோரி பயன்படுகிறது.  

கலோரி வகைப்பாடு

உதாரணமாக, 1 கிராம் கார்போஹைட்ரேட்டில் 4 கலோரிகள் உள்ளது. 1 கிராம் கொழுப்பில் 9 கலோரிகள் உண்டு. 1 கிராம் புரதச் சத்தில் 4 கலோரிகள் உண்டு. இவ்வாறு, நாம் சத்துக்களில் இருந்து கலோரிகளை அளக்கலாம்.

குறைந்த கலோரி உணவுகள்

குறைந்த கலோரி உணவுகள், நமது உடல் எடையை பராமரிக்க உதவும். அதுமட்டுமல்ல, அவற்றை உண்டால், உங்களை நாள் முழுவதும் முழுதாக உணர வைக்கும்

ஒட்டுமொத்தமாக, ஆரோக்கியமான உணவைப் பராமரிக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், உங்கள் கலோரி உட்கொள்ளலைக் கவனித்து, கூடுதல் கிலோவைக் குறைக்கவும். எனவே, அடுத்த முறை நீங்கள் மளிகைக் கடைக்குச் செல்லும் போது, இந்த 5 சிறந்த குறைந்த கலோரி உணவுகளை கண்டிப்பாக வாங்கவும்.  நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும் இந்த உணவுகள் நமக்கு நன்மை செய்யும்..

அடிக்கடி சாப்பிடுங்கள், ஆரோக்கியமாக சாப்பிடுங்கள்
ஆரோக்கியப் பயணத்தில் இருப்பதால், நீங்கள் இந்த உணவுகளை உண்ண வேண்டும், உடல் பருமனை கட்டுக்குள் வைப்பதற்காக பசியுடன் இருக்க வேண்டிய அவசியமில்லை. பல உணவுகளில், குறைந்த கலோரி, சுவையான, ஊட்டச்சத்து மற்றும் திருப்திகரமான சுவை என அனைத்துமே இருக்கும். அவற்றில் சில.

முட்டை 
முட்டை புரதம் மற்றும் கொழுப்பு இரண்டின் களஞ்சியமாகும். கூடுதலாக, முட்டைகள் உங்களை மிகவும் நிறைவாகவும் ஆரோக்கியமாகவும் உணரவைக்கும். இந்த குறைந்த கலோரி உணவு காலை உணவிற்கு ஏற்றது. முட்டை எளிதான மற்றும் மிகவும் சத்தான காலை உணவு விருப்பங்களில் ஒன்றாகும்.

பெர்ரி
ராஸ்பெர்ரி, அவுரிநெல்லிகள், ப்ளாக்பெர்ரிகள் மற்றும் ஸ்ட்ராபெர்ரிகள் போன்ற பெர்ரிகள் சிறந்த குறைந்த கலோரி, பழ விருப்பங்களை நிரப்புகின்றன. அதிக நார்ச்சத்து மற்றும் நீர் உள்ளடக்கம் இருப்பதால், பல பழங்களை விட பெர்ரி இயற்கை சர்க்கரையில் குறைவாக உள்ளது. அவற்றில் வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம், அத்துடன் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.

குயினோவா
இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் துத்தநாகம் ஆகியவற்றுடன் கூடிய முழுமையான புரதம் நிறைந்த ஒரே முழு தானியம் குயினோவா ஆகும், இது தாவர அடிப்படையிலான உணவுகளுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது. அரை கப் சமைத்த குயினோவாவில் 100 கலோரிகள் மட்டுமே உள்ளது. தானியங்கள் மற்றும் சாலட்களில் இதை பயன்படுத்தினால், தரமான புரதம் உடலுக்கு கிடைக்கும்.  

அவகோடோ
அதிக கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் குறைந்த கொழுப்புகள் இந்த குறைந்த கலோரி பழத்தின் சரியான கலவையாகும். உங்கள் காலை சாலட்கள் அல்லது சிற்றுண்டி இடைவேளைகளில் சேர்ப்பதன் மூலம் பலன்களைப் பெறுங்கள். அவகோடா பழத்தில் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்தும் உள்ளது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

Flipkart நிறுவனத்தில் Senior Manager வேலைவாய்ப்பு 2023 – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

 

Flipkart நிறுவனத்தில் Senior Manager வேலைவாய்ப்பு 2023 – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

Flipkart நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Senior Manager I பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Flipkart பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Senior Manager I பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Senior Manager I கல்வித்தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையங்களில் MBA / PGDM / PGDBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Flipkart வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 8 முதல் 11 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

Senior Manager I ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Flipkart தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அல்லது skill test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.



 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

Amazon நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023- Onlineல் Apply பண்ணுங்க!

 

Amazon நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023- Onlineல் Apply பண்ணுங்க!

முன்னணி தனியார் நிறுவனமான Amazon நிறுவனத்தில் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் Digital Content Associate பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


Amazon காலிப்பணியிடங்கள்:

Amazon நிறுவனத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Digital Content Associate பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Digital Content Associate கல்வி தகுதி:

Digital Content Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பணி சார்ந்த ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Amazon ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கேற்ப மாதம் ஊதியம் வழங்கப்படும்.

Amazon தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


Amazon விண்ணப்பிக்கும் முறை:

Amazon நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இறுதி நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என அறிவித்துள்ளது.

Download Notification & Apply Online Linkem


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

AIIMS Madurai வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.17,7500/- ஊதியம் !

 

AIIMS Madurai வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.17,7500/- ஊதியம் !

AIIMS Madurai ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Registrar, Assistant controller of Examinations, Account Officer, Assistant Administrative Officer, Executive Assistant & others பணிகளுக்கென 09 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ள நபர்கள் இறுதி நாள்(24.07.2023) முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

AIIMS Madurai காலிப்பணியிடங்கள்:

AIIMS Madurai தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி Registrar, Assistant controller of Examinations, Account Officer, Assistant Administrative Officer, Executive Assistant & others பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

AIIMS Madurai கல்வி தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Post Graduate degree பெற்றிருக்க வேண்டும்.

AIIMS Madurai ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.25,500- 81100 முதல் ரூ.56,100- 177500/- வரை ஊதியம் வழங்கப்படும்.

AIIMS Madurai தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பிக்கும் நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

AIIMS Madurai விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் (31.08.2023) தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification 1 PDF


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

மாதந்தோறும் ரூ. 60,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

 

மாதந்தோறும் ரூ. 60,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

REC லிமிடெட் என்பது ஒரு மஹாரத்னா பொதுத்துறை நிறுவனமாகும். இங்கு Assistant Manager, Dy. General Manager மற்றும் Officer (F&A) பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு என அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

REC லிமிடெட் காலிப்பணியிடங்கள்:
  • Assistant Manager – 2 பணியிடங்கள்
  • Dy. General Manager (F&A) – 1 பணியிடம்
  • Officer (F&A) – 2 பணியிடங்கள்
  • Assistant Manager (IT) – 2 பணியிடங்கள்
வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 33 முதல் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Chartered Accountancy/Cost and Management Accountancy/ Bachelors in Engineering/ B. Tech/ MCA/ M.Tech./ MCS/ MSc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

REC சம்பள விவரம்:
  • Assistant Manager – ரூ. 60,000- 1,80,000
  • Dy. General Manager (F&A) – ரூ. 1,00,000- 2,60,000/-
  • Officer (F&A) – ரூ.50,000- -1,60,000/-
  • Assistant Manager (IT) – ரூ. 60,000- 1,80,000/-
  • தேர்வு செயல் முறை:

    இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    விண்ணப்பிக்கும் முறை:

    தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் http://www.recindia.nic.in/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் 01.07.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

     

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

SPMCIL Jr. Office Assistant வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.67390/-

 

SPMCIL Jr. Office Assistant வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.67390/-

இந்திய அரசு மிண்ட், மும்பை “செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்” (SPMCIL) இன் கீழ் உள்ள ஒன்பது அலகுகளில் ஒன்றாகும். இங்கு காலியாக உள்ள Junior Technician at W-1 in various trades , Jr. Office Assistant at B-3 level, Jr. Bullion Assistant ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அரசு பணிக்கு ஆன்லைன் மூலம் 15.06.2023 முதல் 15.07.2023 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

SPMCIL காலிப்பணியிடங்கள்:
  • Jr. Technician – 57 பணியிடங்கள்
  • Junior Office Assistant – 6 பணியிடங்கள்
  • Junior Bullion Assistant – 2 பணியிடங்கள்
கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் I.T.I./ Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

SPMCIL வயது வரம்பு:

15.07.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 25 முதல் 28 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:
  • Jr. Technician – ரூ.18780-67390 /-
  • Junior Office Assistant – ரூ.21540/- – 77160/-
  • Junior Bullion Assistant – ரூ.21540/- – 77160/-
தேர்வு செயல் முறை:
  1. computer based test
  2. Interview
விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் 15.07.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

NIEPMD நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.56,100 ஊதியம் !

 

NIEPMD நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.56,100 ஊதியம் !

National Institute for Empowerment of Persons with Multiple Disabilities நிறுவனத்தில் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் Deputy Registrar, lecturer in clinical psychology பணிக்கான 02 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

NIEPMD காலிப்பணியிடங்கள்:

National Institute for Empowerment of Persons with Multiple Disabilities நிறுவனத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Digital Content Associate பணிக்கு என 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NIEPMD கல்வி தகுதி:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பணி சார்ந்த துறையில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

NIEPMD ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.56,100- 1,77,500/- முதல் ரூ.67,700- ரூ2,08,700/- வரை ஊதியம் வழங்கப்படும்.

NIEPMD தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NIEPMD விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news