Search

தினமும் பார்க்கும் இந்த காய்கறிகள் எல்லாம் இந்திய காய்கறி இல்லை..எங்கிருந்து வந்தது தெரியுமா..?

 தக்காளி இல்லாத சமையலை நினைத்து கூட பார்க்க முடியாது. அப்படி நாம் சமையலறையில் படுத்தும் நிறைய காய்கறிகளை நாம் ஊர் காய்கறி  என்று நினைத்துக்கொள்வோம். நம் ஊரில் விளைவிப்பதால் அது நம் ஊர் காய்கறி ஆகிவிடாது. நாம் இன்று பயன்படுத்தும் நிறைய காய்கறிகள் வெளிநாடுகளில் இருந்து இங்கு கொண்டு  வரப்பட்டு விளைவிக்கப்பட்டது. அப்படி தினமும் நாம் சாப்பிடும் காய்கறிகள் எந்த நாட்டில் இருந்து வந்தது என்று தெரிந்துகொள்வோம்.

தக்காளி முதன்முதலில் தென் அமெரிக்காவில் தான் சாப்பிடப்பட்டதாம். வரலாற்றுக்கு முந்தைய காலங்களில், அது  மெதுவாக மத்திய அமெரிக்கா மற்றும் மெக்சிகோவிற்கு குடிபெயர்ந்தது. கிறிஸ்டோபர் கொலம்பஸ் 1493 இல் தக்காளியை ருசித்ததாகக் கருதப்பட்டது, பின்னர் அது ஸ்பெயினுக்கு எடுத்து செல்லப்பட்டு விளைவிக்கப்பட்டுள்ளது.  நூறு ஆண்டுகளுக்குப் பிறகு மற்ற ஐரோப்பிய நாடுகளும் பரவி, அங்கிருந்து அவற்றின் அமெரிக்க காலனிகளும் பயிரிட்டு சாப்பிடத் தொடங்கின. அதேபோல தான் இந்தியாவிற்கும் காலனியாட்சி செய்த மக்களால் வந்தது.

முட்டைக்கோஸ் வட சீனாவில் 4000 ஆண்டுகளுக்கு முன்பும், வடக்கு ஐரோப்பாவில் 3000 ஆண்டுகளுக்கு முன்பும் வளர்க்கப்பட்டதாக கதைகள் சொல்கின்றன. கிமு நான்காம் நூற்றாண்டில், முட்டைக்கோஸ் எகிப்து, கிரீஸ் மற்றும் ரோமானியப் பேரரசு முழுவதும் காணப்பட்டுள்ளது. 16 ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சுக்காரர்களால் உலகம் முழுவதும் பரவியுள்ளது. ஐரோப்பாவில் இருந்து முதலில் ஏற்றுமதி செய்யப்பட்ட காய்கறிகளில் இதுவும் ஒன்றாகும். மாலுமிகள் அதிகம் விரும்பி உண்ட காய்கறியாம்.

தர்பூசணிகள் எகிப்திய ஹைரோகிளிஃபிக்ஸில் தோன்றின மற்றும் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய பாரோவின் கல்லறைகளில் பாதுகாக்கப்பட்டுள்ளன. முட்டைக்கோஸைப் போலவே, தர்பூசணிகளும் மாலுமிகளின் விருப்பமானவை. மத்தியதரைக் கடல் முழுவதும் கப்பல் மூலம் பரவியது, 10 ஆம் நூற்றாண்டில் சீனாவில் தரையிறங்கி 13 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பா முழுவதும் பரவியது.  ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய இரு நாடுகளிலிருந்தும் வட அமெரிக்காவின் கடற்கரைக்கு வந்து பின்னர் உலகம் முழுவதும் படர்ந்தது.


அதேபோல வெண்டைக்காய் என்றதும் நம் ஊர்த்தானங்க.. நாட்டு காய்கறி என்று நினைக்கலாம் ஆனால் இது உண்மையில் மேற்கு ஆப்பிரிக்க பகுதியில் தான் முத்தத்தில் தோன்றியதாம். அங்கிருந்து ஆசிய பகுதிக்கு கொஞ்சம் கொஞ்சமாக பரவி, எகிப்தில் இருந்து இந்தியாவிற்கு குடியேறிய பாண்டு பழங்குடியினரால் வெண்டைக்காய் இந்தியாவில் அறிமுகமானதாக கருதப்படுகிறது.

நாம் பயன்படுத்தும் மிளகாய் வகைகளும் நம்முடையது அல்ல. மெக்சிகோவில் தோன்றி இன்று உலகம் முழுவதும் பயிரிடப்படுகிறது. அதோடு பெருவில் அதிக மிளகாய் வகைகள் பயிரிடப்படுகிறது. கிறிஸ்டோபர் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தபோது இந்த மிளகாயை பார்த்து ஐரோப்பாவில் அப்போது பயன்படுத்தப்பட்ட ஆசிய மிளகுக்கு ஒத்த காரம் இருந்ததால் இதற்கு bell pepper  என்று பெயரிட்டார்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

கோவை தமிழ்நாடு வனத்துறையில் Data Entry Operator வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

 

கோவை தமிழ்நாடு வனத்துறையில் Data Entry Operator வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

கோவை வனப் பிரிவு, தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள Data Entry Operator (DEO) மற்றும் Technical Assistant ஆகிய பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு வனத்துறை காலிப்பணியிடங்கள்:

Data Entry Operator (DEO) மற்றும் Technical Assistant ஆகிய பதவிகளுக்கு தலா ஒரு பணியிடம் என மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Technical Assistant கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து B.Sc. Forestry / Agriculture அல்லது M.Sc. Wildlife Biology / Life Sciences / Botany / Zoology / Natural Sciences / அல்லது M.C.A தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

DEO கல்வி தகுதி:

Any Degree / Diploma in Computer Application / Computer Science அல்லது Any Degree / Diploma with Certificate in Computer Applications அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் certificate in Computer Applications தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

1. Short Listing

2. Physical Appearance

விண்ணப்பிக்கும் முறை:

மேற்படி ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கு தகுதியுள்ள தனியர்களிடமிருந்து விண்ணப்பம்‌ வரவேற்கப்படுகின்றன, விண்ணப்பத்தினை கீழ்கண்ட முகவரிக்கு 30.06.2023க்குள்‌ விருப்பமுள்ள தனியர்கள்‌ அனுப்பி வைக்க கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

Download Notification 2023 Pdf


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

Indian Navy நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.40,000/- ஊதியத்தில் !

 

Indian Navy நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.40,000/- ஊதியத்தில் !

Indian Navy ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Agniveer பணிக்கென 35 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். பணிபுரிய தகுதியான விண்ணப்பதாரர்கள் (02.07.2023) அன்று நடைபெறும் walk-in-interview கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Indian Navy காலிப்பணியிடங்கள்:

Indian Navy தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Agniveer பணிகளுக்கென 35 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indian Navy வயது வரம்பு:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் வயதானது 21 ஆக இருக்க வேண்டும்.

Indian Navy கல்வி தகுதி:

விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Indian Navy ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.30,000/- முதல் ரூ.40,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Indian Navy தேர்வு செய்யப்படும் முறை:

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Medical Examination, Screening, Merit List, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Indian Navy விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூரவ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் ஆன்லைனில் இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

மத்திய அரசில் ரூ.35,000/- சம்பளத்தில் வேலை – நேர்காணல் மூலம் தேர்வு || முழு விவரங்களுடன்!

மத்திய அரசில் ரூ.35,000/- சம்பளத்தில் வேலை – நேர்காணல் மூலம் தேர்வு || முழு விவரங்களுடன்!

ICAR – National Research Centre for Banana ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Ph.D. Fellow பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.35,000/- மாத ஊதியம் வழங்கப்படும். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.  

ICAR காலிப்பணியிடங்கள்:

Ph.D. Fellow பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளது.

Ph.D. Fellow கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc. (Agri.) / M.Sc. or M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICAR வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Ph.D. Fellow ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.35,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

ICAR தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் nrcbrecruitment@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 29.06.2023ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

DOT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!

 

DOT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!

தொலைத்தொடர்பு துறை ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Consultants பணிக்கென 04 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Department of Telecommunication காலிப்பணியிடங்கள்:

தொலைத்தொடர்பு துறை ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Consultants பணிக்கு என 04 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Department of Telecommunication வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது 64 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Department of Telecommunication கல்வி தகுதி:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Level 8/Level 7 of the 7th CPC அளவின் படி பணிபுரிந்து ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Department of Telecommunication ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் விதிமுறைப்படி ஊதியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

Department of Telecommunication தேர்வு செய்யப்படும் முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Department of Telecommunication விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, போதிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க!

 

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க!

அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆனது Junior Research Fellow, Project Assistant பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Annamalai University காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Junior Research Fellow, Project Assistant பணிக்கென மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Project Assistant கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc, M.Sc டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Annamalai University வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Project Assistant ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Annamalai University தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 23.06.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

சுகர் இருக்கவங்க பால் குடிக்கலாமா..? நிபுணர்களின் பதில்..!

 இந்தியாவில் 7 கோடிக்கும் மேற்பட்டோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக நீரிழிவு நோயின் தலைநகரம் என இந்தியா உலகளவில் அறியப்படுகிறது. ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு அதிகரித்து கார்போஹைடரேட்ஸ், புரதம் மற்றும் கொழுப்பின் மெட்டபாலிஸம் மாறுகிறது. இதன் காரணமாக இன்சுலின் சுரப்பதில் அல்லது இன்சுலின் செயல்பாட்டில் ஒழுங்கற்ற முறை காணப்படுகிறது. அதிகரிக்கும் நகரமயமாதல், அதிக கலோரி மற்றும் சுத்திகரிகப்பட்ட குறை நார்ச்சத்து உணவுகள், எந்த உடல் இயக்கமும் இன்றி உட்கார்ந்தே இருப்பது, அதிகமான உடல் எடை போன்ற காரணங்களால் இந்தியாவில் அதிகளவில் நீரிழிவு நோயாளிகள் இருக்கிறார்கள்.

ஆரோக்கியமான உணவு, நல்ல உடலியல் செயல்பாடு, புகையிலை மற்றும் மதுபானத்தை தவிர்த்தல் போன்றவைகளால் சர்க்கரை வியாதி வராமல் 80% தடுக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

நீரிழிவு நோயாளிகளுக்கு உணவில் மாற்றம் செய்யும் போது நாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை:

சீரான மற்றும் ஒரேப்போன்ற உணவு: நீரிழிவு நோய்க்காக இன்சுலின் அல்லது மாத்திரைகள் சாப்பிடுபவராக இருந்தால் சில விஷயங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும். முக்கியமாக, வழக்கத்தை விட குறைவாக உண்பது, நேரம் தவறி உணவை சாப்பிடுவது அல்லது சாப்பிடாமல் தவிர்ப்பதால் சர்க்கரை அளவு குறைந்து ஹைபோக்ளைசீமியா ஏற்படும். ஆகவே எப்போதும் போல் சாப்பிடுங்கள். சாப்பிடும் நேரத்தை மாற்றிக் கொள்ளாதீர்கள்.

உணவில் கார்போஹைடரேட்ஸ் அளவு : உணவில் கார்போஹைடரேட்ஸை எவ்வுளவு எடுத்துக் கொள்கிறோம் என்பதை வைத்துதான் சர்க்கரை அளவு மாறுபடும். ஆகவே தனிநபரின் தேவைகளைப் பொறுத்து கார்போஹைடரேட்ஸை உணவில் சேர்ப்பது முக்கியம். முழு தானியம், திணை போன்றவற்றோடு நார்ச்சத்து மிகுந்த காய்கறிகளை உணவில் சேர்த்தால் சர்க்கரை அளவு உயராமல் பார்த்துக் கொள்ளலாம்.

நீரிழிவு நோயாளிகள் பால் குடிக்கலாமா?

பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் உள்ள நன்மைகள்:

  • நம் உடல் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறது. இதில் முக்கியமான விட்டமிங்களும் கால்சியம், பாஸ்பரஸ் ரிபோஃபிளாவின் மற்றும் விட்டமின் பி12 போன்றவை அதிகளவில் உள்ளன.
  • எலும்பின் ஆரோக்கியத்திற்கும் உறுதிக்கும் பால் முக்கிய பங்காற்றுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு எலும்பின் உறுதித்தன்மை திடீரென்று குறையும். தொடர்ந்து பால் அருந்தி வரும் நபருக்கு இப்பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு குறைவு.
  • பால் அருந்துவதால் ரத்த அழுத்தம் குறையும், இதய நோய்கள் மற்றும் குடல் புற்றுநோய் வராமல் பாதுகாக்கும்.

பால் சாப்பிடுவதை வழக்கமாக்கி கொண்டால் டைப் 2 நீரிழிவு நோய் வரும் ஆபத்து குறையும் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம் பாலில் உள்ள புரதங்கள். இவை உடலில் உள்ள இன்சுலினை அதிகரித்து ரத்தத்தில் உள்ள குளுக்கோஸை குறைக்கிறது. ஆகவே ஆரோக்கியமான நபர்களும் நீரிழிவு நோயாளிகளும் பால் அருந்துவதில் எந்தப் பிரச்சனையுமில்லை.

எனினும் பாலில் லாக்டோஸ் உள்ளது. ஆகவே நாம் தினசரி உட்கொள்ளும் கார்போஹைடரேட்ஸ் அளவோடு இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். 100 மில்லி பசும் பாலில் 5 கிராம் கார்போஹைடரேட்ஸ் உள்ளது. அதுவே 100 மில்லி எருமை மாட்டு பாலில் 8 கிராம் கார்போஹைடரேட்ஸ் உள்ளது. ஆகவே நீரிழிவு நோயாளிகளின் தினசரி உணவில் பால் சேர்க்கும் போது இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மற்ற கார்போஹைடரேட்ஸ் பொருட்களில் இருப்பதை விட பால் மற்றும் தயிரின் க்ளைகோமிக் இண்டக்ஸ் (GI) மிகவும் குறைவே. பாலின் வகையை பொறுத்து இது 31-37 என்ற அளவுக்குள் இருக்கும். இவ்வுளவு குறைவான GI இருப்பதால், இதை உண்வைல் சேர்ப்பதால் அந்தளவிற்கு சர்ரக்கரை அளவு ஏறாது. ஆனால் சுவையேற்றப்பட்ட பால் சாப்பிடுவதை தவிருங்கள். ஏனென்றால் இதில் அதிகளவு சர்க்கரை இருப்பதால் நம் உடலின் குளுக்கோஸ் அளவு உயரக்கூடும்.

ஆரோக்கியமான வாழ்வுக்கு, பெரியவர்கள் என்றால் தினசரி 300மில்லி பால் அருந்த வேண்டும். நீரிழிவு நோயாளியாக இருந்தால், அவரின் தேவைகளை முதலில் கருத்தில் கொள்ள வேண்டும். அவருக்கு அதிக கொழுப்பு மற்றும் கலோரி தேவையா அல்லது எடை குறைப்பதற்காக பாலில் உள்ள புரதம் மட்டும் வேண்டுமா என்பதை பொறுத்தே அவர் எந்த வகையான பாலை (பசும் பால், எருமை பால், ஆடை நீக்கிய பால்) குடிக்கலாம் என்பதை முடிவு செய்ய முடியும்.

  • புரதம், விட்டமின், மினரல்கள் போன்றவை பாலில் அதிகமாக உள்ளன
  • பாலில் நம் உடலுக்கு தேவையான நிறைய நன்மைகள் உள்ளன. ஆகவே இதை நீரிழிவு நோயாளிகளும் தங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்
  • பாலில் குறைவான GI இருப்பதாலும், இதிலுள்ள புரதங்கள் சர்க்கரை அளவை குறைவாகவே உயர்த்தும் என்பதாலும் பாலின் மூலம் கிடைக்கும் கார்போஹைடரேட்ஸ் அளவையும் நாம் தினசரி உண்ணும் உணவின் கார்போஹைடரேட்ஸ் அளவோடு சேர்த்து கணக்கிட வேண்டும். அப்போதுதான் நிறைய கார்போ எடுத்துக்கொள்வதை தவிர்க்க முடியும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

உயர் இரத்த அழுத்தம் உள்ளவங்க வாழைப்பழம் சாப்பிட்டால் நல்லது... எப்படி தெரியுமா..?

 காலகட்டத்தில் அனைத்து வயதினரும் ரத்த அழுத்த பிரச்சனையால் போராடி வருகின்றனர். பெரும்பாலான மக்களுக்கு உயர் இரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளது. இரத்த அழுத்தம் அதிகமாகி, அதை தொடர்ந்து அலட்சியப்படுத்தினால், இதய நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளைத் தவிர, இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க சில வீட்டு வைத்தியங்களையும் முயற்சி செய்ய வேண்டும். அந்த வகையில் தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா..?

வாழைப்பழத்தைத் தவிர, கீரை, செலரி, ஓட்ஸ், வெண்ணெய், தர்பூசணி, ஆரஞ்சு, பீட், சூரியகாந்தி விதைகள் மற்றும் கேரட் போன்றவை உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் உதவியாக இருக்கும். இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் வாழைப்பழம் எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதை பார்க்கலாம்.

வாழைப்பழம் சாப்பிடுவது பலன் தருமா? TOI இன் அறிக்கையின்படி, தினமும் வாழைப்பழம் சாப்பிடுவது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இதய நோய் அபாயத்தைக் குறைக்கும். இதுவரை, வாழைப்பழத்தின் நன்மைகள் குறித்தும் பல ஆய்வுகள் வெளிவந்துள்ளன. ஆய்வுகளின்படி, பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாகவும், சோடியம் குறைவாகவும் உள்ளது.

இது உயர் இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும். உடலில் உள்ள அதிகப்படியான சோடியம் (உப்பு) இரத்த நாளங்களில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது மற்றும் நீர் சமநிலையை சீர்குலைக்கிறது. அப்படிப்பட்ட நிலையில் பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் சிறுநீரகத்தின் அழுத்தம் குறைந்து, உடலில் உள்ள அதிகப்படியான உப்பு, சிறுநீர் வழியாக வெளியேறுகிறது. பொட்டாசியம் உடலில் திரவம் மற்றும் எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் : எந்த உணவையும் குறிப்பிட்ட அளவில் உட்கொள்ள வேண்டும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதிகப்படியான நுகர்வு நன்மைக்கு பதிலாக தீங்கு விளைவிக்கும். ஆய்வின்படி, இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க, தினமும் இரண்டு வாழைப்பழங்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். இதனால் ரத்த அழுத்தத்தை 10 சதவீதம் வரை குறைக்கலாம்.

நீங்கள் நீரிழிவு அல்லது பிற தீவிர நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், வாழைப்பழத்தை சாப்பிடுவதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகவும். மீடியம் சைஸ் வாழைப்பழத்தில் 109 கலோரிகள், 18 கிராம் இயற்கை சர்க்கரை, 20 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 1 கிராம் புரதம், நார்ச்சத்து ஆகியவை உள்ளன.

இதில் வைட்டமின் சி, ஃபோலேட் மற்றும் வைட்டமின் ஏ ஆகியவையும் உள்ளன. வாழைப்பழம் பொட்டாசியத்தின் சிறந்த மூலமாகும். ஒரு சிறிய வாழைப்பழத்தில் 362 மில்லிகிராம், நடுத்தர அளவிலான வாழைப்பழத்தில் 422 மில்லிகிராம் மற்றும் பெரிய வாழைப்பழத்தில் 487 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளது. பொட்டாசியம் நம் உடலுக்கு இன்றியமையாத சத்து.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

நார்மலாக இரத்த அழுத்தம் எவ்வளவு இருக்க வேண்டும்..? எப்போது ஆபத்தாக மாறும்..?

 Normal BP range in men and women : காலையில் எழுந்தவுடன் உங்களுக்கு தலைசுற்றல் அல்லது சில சமயங்களில் மூக்கில் இரத்தம் வருமா..? இது தவிர, தொடர்ந்து தலைவலி அல்லது உணர்வின்மை போன்ற அறிகுறிகளை நீண்ட நாட்களாக அனுபவிக்கிறீர்கள் எனில், நிச்சயமாக உங்கள் இரத்த அழுத்தம் அசாதாரணமாக உள்ளது என்று அர்த்தம். உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ளவது அவசியம்.

உண்மையில், இன்று பெரும்பாலான மக்கள் இரத்த அழுத்த பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். WHO இன் கூற்றுப்படி, உலகளவில் சுமார் 1.28 பில்லியன் மக்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களில் 46 சதவிகிதத்தினருக்கு தங்களுக்கு இரத்த அழுத்த நோய் இருப்பதைக் கூட அறியாமல் இருக்கிறார்கள். வேறு சில பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெற சென்றபோது, ​​அவர்களுக்கு பிபி அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், சுமார் 70 கோடி பேர் பி.பி.க்கு சிகிச்சை கூட எடுக்காமல் இருக்கிறார்கள். இரத்த அழுத்தம் காரணமாக, இதயம், மூளை, சிறுநீரகம் மற்றும் பிற நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், ஒவ்வொரு நபரும் தனது நார்மல் இரத்த அழுத்த அளவு என்னவாக இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

பெண்களுக்கு இரத்த அழுத்தம் என்னவாக இருக்க வேண்டும் :

புகழ்பெற்ற சுகாதார வலைத்தளமான இமோஹாவின் கூற்றுப்படி, பெண்களுக்கு இரத்த அழுத்தம்  வந்தால் ஆரம்ப அறிகுறிகளை காட்டாது. அமைதியான அறிகுறியாகவே இருக்கும். அப்படி பெண்களுக்கு இரத்த அழுத்தம் இருக்கும்போது, ​​சில அறிகுறிகள் அரிதாகவே தெரியும். அதனால்தான் இது அமைதியான சமிக்ஞை என்று அழைக்கப்படுகிறது. அதுவே பெண்களுக்கு இரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது, சில அறிகுறிகள் தெரியும். அப்படி , இரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது, கண்களுக்கு அருகில் சிவப்பு புள்ளிகள், தலைச்சுற்றல் மற்றும் தோலில் தடிப்புகள் ஆகிய அறிகுறிகள் தென்படும்.

ஒரு ஆரோக்கியமான பெண்ணுக்கு 21 முதல் 25 வயதுக்குள் 115.5 முதல் 70.5 வரை இரத்த அழுத்தம் இருக்க வேண்டும், அதே சமயம் 31 முதல் 35 வயதிற்குள் இரத்த அழுத்தம் குறையத் தொடங்குகிறது. அதாவது இந்த வயதில், பெண்களின் இரத்த அழுத்தம் 110.5 மற்றும் 72.5 க்கு குறைவாக இருக்க வேண்டும்.

பெண்கள் மற்றும் ஆண்களின் வயதுக்கு ஏற்ப சரியான பிபி அளவு :

வயதுஆண்பெண்
18-39119/70110/68
40-59124/77122/74
60 வயதுக்கு மேல்133/69139/68

ஆண்களுக்கு எவ்வளவு பிபி இருக்க வேண்டும் :

பெண்களை விட ஆண்களில் இரத்த அழுத்தம் சற்று அதிகமாக உள்ளது. 31 முதல் 35 வயது வரையிலான ஆண்களுக்கு 114.5 முதல் 75.5 வரை இருக்க வேண்டும். ஆனால் 40 வயதிற்கு பிறகு, இரத்த அழுத்தம் அளவீடு சிறிது அதிகரிக்கிறது. 61 முதல் 65 வயது வரை உள்ள ஆண்களின் இரத்த அழுத்தம் 143 முதல் 76.5 வரை இருக்கலாம்.

இரத்த அழுத்தத்தை எவ்வாறு குறைப்பது..?

இரத்த அழுத்தம் அதிகரித்தால், இதயம் தொடர்பான பல ஆபத்து இங்கிருந்தே தொடங்குகிறது. எனவே, இரத்த அழுத்தம் அதிகரித்தால், உடனடியாக உங்கள் வாழ்க்கை முறையை கவனிக்கவும். அதாவது தினசரி உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவை உங்கள் தினசரி வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

சிகரெட், மது, பதப்படுத்தப்பட்ட உணவு, அதிக சர்க்கரை, அதிக உப்பு சாப்பிடுவதை தவிர்க்கவும். மன அழுத்தம் உங்களை துரத்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து உங்கள் மருத்துவரை சந்தித்து ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுங்கள். அவர் தரும் மாத்திரைகளை தவறாமல் உட்கொள்ளுங்கள்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

காலை நேர உடற்பயிற்சி ஆரோக்கியத்திற்கு எந்த அளவுக்கு முக்கியமானது தெரியுமா..?

 உடல் பருமன் மற்றும் உடல் இயக்கமற்ற சோம்பலான வாழ்க்கை முறை ஆகியவை தான் பல நோய்களுக்கு அடிப்படை காரணமாக அமைகிறது என்ற விழிப்புணர்வு பலரிடமும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உடற்பயிற்சி செய்தல் என்னும் தாரக மந்திரத்தை பலரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

அதிகப்படியான கொழுப்புகள் மற்றும் கலோரிகளை கரைக்க இது மிக, மிக அவசியமாகிறது. பொதுவாக காலை, மாலை வேளைகளில் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் தான் பரவலாக உள்ளது. அதே சமயம், முந்தைய நாளில் அதிகப்படியான வேலை செய்வதால் ஏற்படும் களைப்பு காரணமாகவும், நீண்ட நேரம் தூங்கி காலையில் தாமதமாக எழுவதாலும், அதன் பின் குளித்து தயாராகி உடனடியாக அலுவலகம் விரைவதை பலரும் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

மாலை அல்லது இரவு வேளைகளில் இவர்கள் உடற்பயிற்சிகளை செய்கின்றனர். காலை அல்லது மாலை என எந்த வேளைகளில் உடற்பயிற்சி செய்தாலும் அது உடல்நலனுக்கு நல்லதுதான் என்றாலும், காலையில் பயிற்சி செய்வது இன்னும் சிறப்பான பலன் கிடைக்க உதவியாக அமையும். குறிப்பாக காலையில் யோகா பயிற்சிகள் செய்வது மற்றும் உடலை வளைத்து, நெளித்து தயார்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

காலையில் உடற்பயிற்சிகளை செய்வதால் கிடைக்கும் பலன்கள்

  • காலையில் பயிற்சிகளை செய்வது சோம்பலை நீக்கி உங்களை சுறுசுறுப்பானவராக மாற்றுகிறது. அன்றைய நாள் முழுவதுக்கும் தேவையான ஆற்றல் கிடைக்கிறது.
  • உடற்பயிற்சி செய்வதன் மூலமாக மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கின்ற நிலையில், நாள் முழுவதும் உங்கள் முகம் களைப்பின்றி பொலிவுடன் காட்சியளிக்கும்.
  • உங்கள் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது என்பதால், காலையில் பயிற்சி செய்வதன் காரணமாக நீரிழிவு நோய்க்கான அபாயம் குறைகிறது. அதேபோல உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை கொண்டவர்கள் காலையில் பயிற்சி செய்யும்போது ரத்த அழுத்தம் கட்டுக்குள் வருகின்றது.
  • உங்கள் கவனத்திறனை மேம்படுத்துகிறது மற்றும் தெளிவான சிந்தனையை தருகிறது.
  • நாள் முழுவதும் மகிழ்ச்சியான சிந்தனையை மேம்படுத்துகிறது.
  • தூக்கமின்மை பிரச்சினையால் அவதி அடையும் நபர்களுக்கு இது நல்ல தீர்வை தருகிறது.
  • பசியை தூண்டுகின்ற ஹார்மோன்களை இது கட்டுப்படுத்துவதால் உங்கள் பசி உணர்வு குறைகிறது. இதன் எதிரொலியாக உடல் எடையை குறைப்பது எளிமையாகிறது.

  • என்னதான் இருந்தாலும் காலையில் உடற்பயிற்சி செய்ய எனக்கு நேரமே இல்லை அல்லது அதிகாலை நேர பணிக்குச் செல்பவர் என்ற நிலையில் நீங்கள் இருப்பின், பிற்பகல் அல்லது மாலை வேளைகளிலாவது உடற்பயிற்சி செய்வது நல்லது. உடற்பயிற்சி செய்த பின் நம் தசைகளுக்கு ஏற்படும் வலு இழப்பை சரி செய்ய புரதம் மிகுந்த உணவுகளை சிறிதளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip