Search

RITES நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.1,40,000/- || கல்வி தகுதி, வயது குறித்த முழு விவரங்களுடன்!

 RITES நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.1,40,000/- || கல்வி தகுதி, வயது குறித்த முழு விவரங்களுடன்!

RITES நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Engineer, Ju+++++++++++++nior Manager, Senior Assistant பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

RITES காலிப்பணியிடங்கள்:

RITES வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Engineer, Junior Manager, Senior Assistant பணிக்கென காலியாக உள்ள 42 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Senior Assistant கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Chartered Accountant / Cost Accountant / Bachelor’s Degree Engineering / Master’s Degree / Diploma என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RITES வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Senior Assistant ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.26,000/- முதல் ரூ.1,40,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

RITES விண்ணப்ப கட்டணம்:

General/OBC – ரூ.600/-

EWS/ SC/ST/ PWD – ரூ.300/-

Senior Assistant தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் மற்றும் முன் அனுபவத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.07.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF 1

Download Notification PDF 2

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் மாதம் ரூ.15,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு!

 

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் மாதம் ரூ.15,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு!

Central Bank of India ஆனது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், Supervisor பணிக்கென 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Central Bank of India காலிப்பணியிடங்கள்:

Central Bank of India தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Supervisor பணிக்கென 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CBI வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 60 முதல் 65 வரை இருக்க வேண்டும்.

Central Bank of India கல்வித் தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் M. Sc. (IT)/ BE (IT)/ MCA/MBA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Central Bank of India ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.12,000/- முதல் ரூ.15,000/- வரை ஊதியமாக வழங்கப்படும்.

Central Bank of India தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Central Bank of India விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு இறுதி நாளுக்குள் (27.06.2023) அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

SSC Group A வேலைவாய்ப்பு 2023 – Level-12ன் படி ஊதியம்!

 

SSC Group A வேலைவாய்ப்பு 2023 – Level-12ன் படி ஊதியம்!

மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் ஆனது Joint Director, Deputy Director மற்றும் Finance & Budget Officer பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 6 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

SSC காலிப்பணியிடங்கள்:
  • Joint Director (Examination Reforms) – 01 பணியிடம்
  • Joint Director (Research & Analysis) – 01 பணியிடம்
  • Deputy Director (Research & Analysis) – 01 பணியிடம்
  • Deputy Director (Electronic Data Processing) – 02 பணியிடங்கள்
  • Finance & Budget Officer – 01 பணியிடம்
Group A கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்ட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து எதாவது ஒரு துறையில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:
  • Joint Director (Examination Reforms) – Level-12 (Pre-revised pay scale PB-3GP- Rs. 7600)
  • Joint Director (Research & Analysis) – Level-12 (Pre-revised pay scale PB-3GP- Rs. 7600)
  • Deputy Director (Research & Analysis) – Level-11 (Pre-revised pay scale PB-3+ GP Rs. 6600)
  • Deputy Director (Electronic Data Processing) – Level-11 (Pre-revised pay scale PB-3+ GP Rs. 6600)
  • Finance & Budget Officer – Level-10 (Pre-revised pay scale PB-3+ GP – Rs. 5400)
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு https://ssc.nic.in என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification PDF


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

தமிழ்நாடு மீன்வளத்துறை பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.20,000/-

 

தமிழ்நாடு மீன்வளத்துறை பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.20,000/-

தமிழ்நாடு டாக்டர் ஜெ.எம்.ஜெயலலிதா மீன்வளத்துறை பல்கலைக்கழகம் ஆனது Junior Research Fellow பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பல்கலைக்கழக பணிக்கு என 01 பணியிடம் காலியாக உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNJFU காலிப்பணியிடங்கள்:

இப்பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

மீன்வளத்துறை பல்கலைக்கழக கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Bachelor’s/Master’s degree in Fisheries Science or M.Sc degree in Life Science/Biotechnology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TNJFU சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.20,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆன்லைன் நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வம் உள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 24.06.2023 க்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification Pdf


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

BHEL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – ரூ.23,000/- ஊதியம்!

 

BHEL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – ரூ.23,000/- ஊதியம்!

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Lead Consultant/ Advisor or Senior Consultant பணிகளுக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

BHEL காலிப்பணியிடங்கள்:

BHEL நிறுவனத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Lead Consultant / Advisor or Senior Consultant பணிகளுக்கு என 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BHEL வயது வரம்பு:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 63 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

BHEL கல்வித் தகுதி:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelors or Master பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தமிழ்நாடு மீன்வளத்துறை பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.20,000/-

BHEL ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.23,000/- ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

BHEL தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பிக்கும் நபர்கள் Committee/ Interaction மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

BHEL விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள www.careers.bhel.in இணையதளம் மூலம் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் Online ல் (03.07.2023) இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

BOAT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ.25,500/- ஊதியம் !

 

BOAT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ.25,500/- ஊதியம் !

BOAT நிறுவனமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Lower Division Clerk, Stenographer, Multi-Tasking Staff பணிகளுக்கென 11 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ள நபர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

BOAT காலிப்பணியிடங்கள்:

BOAT நிறுவனத்தில் தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி Lower Division Clerk, Stenographer, Multi-Tasking Staff பணிக்கென 11 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BOAT கல்வி தகுதி:

பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

BOAT ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.18,000/- முதல் ரூ.25,500/- வரை ஊதியம் வழங்கப்படும்.

BOAT தேர்வு செய்யப்படும் முறை :

பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் Skill test / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

BOAT விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

Amazon நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- விண்ணப்பிப்பது எப்படி?

 

Amazon நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- விண்ணப்பிப்பது எப்படி?

முன்னணி தனியார் நிறுவனமான Amazon நிறுவனத்தில் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் Software Development Engineer பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Amazon காலிப்பணியிடங்கள்:

Amazon நிறுவனத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Software Development Engineer பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Amazon கல்வி தகுதி:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelor’s degree பெற்றிருக்க வேண்டும் என.

Amazon ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கேற்ப மாதம் ஊதியம் வழங்கப்படும்.

Amazon தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Amazon விண்ணப்பிக்கும் முறை:

Amazon நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இறுதி நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என அறிவித்துள்ளது.



 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

இதயத்தை பற்றி உங்களுக்கு என்னவெல்லாம் தெரியும்..?

 மனித உடலில் இதயம் மிக முக்கியமான உறுப்பு. உண்மையில், இது உடலின் மிகவும் ஆற்றல் மற்றும் கடினமாக உழைக்கும் உறுப்பு ஆகும். ரத்த நாளங்கள் வழியாக உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ரத்தத்தை கொண்டு செல்வது தான் இருதயத்தின் முக்கிய வேலை. உடலில் ஓய்வின்றி எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும் உறுப்பும் இதுவாகும்.

இதய ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது என்பதை மறுப்பதற்கில்லை. சரியான உணவுகளைத் தேர்ந்தெடுப்பதால் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு, ரத்த அழுத்தம் ஆகியவற்றை நம்மால் பாதுகாப்பான வரம்பிற்குள் வைத்திருக்க முடியும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல உணவுகள் உள்ளன.

இந்த வேளையில், இதயத்தை குறித்த சில முக்கிய தகவல்களை அறிந்து வைத்திருப்பது அவசியம். இதில் கூறப்படும் சிலத் தகவல்கள் உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.

இதயத்தின் எடை : 

ஒரு ஆண் இதயத்தின் சராசரி எடை 300 கிராம் முதல் 350 கிராம் வரை இருக்கும். அதுவே, ஒரு பெண் இதயத்தின் சராசரி எடை 250 கிராம் முதல் 300 கிராம் வரை இருக்கும்.

இதயத் துடிப்பு :

சராசரியாக வளர்ந்த நபரின் இதயம் நிமிடத்திற்கு 70 முதல் 80 தடவை துடிக்கும். பொதுவாக, வளர்ந்தோரில் 60 முதல் 100 வரை இயல்பான துடிப்பு எனக் கருதப்படுகின்றது.

இதயம் நன்றாகச் செயல்பட்டு ஆக்ஸிஜன், ரத்தம், தாதுப் பொருட்களை உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு செல்லக் கூடிய வேலையை இயல்பான இருதயத் துடிப்பு உணர்த்துகிறது.

ரத்த பரிமாற்றம் :

இதயம் என்பது நுரையீரலுக்கு இடையில், மார்பின் நடுவில், மையத்துக்குச் சற்று இடதுபுறமாக அமைந்திருக்கும். ஒவ்வொரு நாளும் இதயம் சுமார் 100,000 முறை துடிக்கிறது. மேலும், 7,570 லிட்டர் ரத்தத்தை உடலின் பிற பகுதிகளுக்கு அனுப்பும் வேலையை செய்கிறது.

இதயம் குறித்து மேலும் சில சுவாரஸ்யமான தகவல்கள் : 

  • அதிகமான மகிழ்ச்சி, அதிகம் சிரிப்பவர்களின் ரத்த நாளங்கள் சரியாக வேலை செய்யும். மற்றவரை விட இவர்களின் உடலில் 20% அதிக ரத்தத்தை இதயம் பம்ப் செய்கிறது.
  • அதிகளவில் உடலுறவு கொள்வது இதயத்திற்கு நல்லதாக பார்க்கப்படுகிறது. அதிக உடலுறவு கொள்பவர்களுக்கு இதயம் சார்ந்த நோய்களுக்கான வாய்ப்புகள் குறைவு என மருத்துவ ஆய்வுகள் தெளிவுப்படுத்துகின்றன.
  • ஒரு வாகனத்தை நிலாவிற்கு கொண்டு சென்று, பின் பூமிக்கு கொண்டு வருவதற்கு தேவைப்படும் ஆற்றலை, ஒரு நபரின் இதயம் தனது ஆயுள்காலத்தில் உருவாக்குகிறது.
  • சாகும் வரை ஒரு விநாடி கூட ஓய்வில்லாமல் உழைப்பது இதயம் தான்.
  • பொதுவாக, திங்கள்கிழமைகளில் தான் அதிகமான நபர்களுக்கு நெஞ்சுவலி ஏற்படுகிறது என பகுப்பாய்வு முடிவுகளின் தரவுகள் கூறுகின்றன.
  • ஒரு வீட்டில் உள்ள மின்சார வயரிங் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு உடலில் முக்கியமாக திகழ்கிறது இருதயம். இதன் வேலையை நிறுத்திவிட்டால், மனிதனால் உயிர்வாழ முடியாது.

பப்பாளியை விட அதன் விதைகளில் அதிக நன்மை உள்ளது என்றால் நம்ப முடிகிறதா..? மிஸ் பண்ணிடாதீங்க.!

 ஆரோக்கியமான உடல் ஆரோக்கியம் வேண்டுமெனில் அதற்கு அடிப்படையாக நாம் கவனித்துக்கொள்ள வேண்டியது செரிமான அமைப்பைதான். அது சீராக இருந்தாலே நம் ஆரோக்கியத்தை பற்றி கவலையே பட வேண்டாம். எனவே செரிமானத்தை மேம்படுத்த நாம் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களுமே போதுமானது. அந்த வகையில் செரிமானத்தை மேம்படுத்துவதில் பப்பாளி பழத்தை காட்டிலும் அதன் விதைகள் சிறந்த ஆற்றல் மிக்கவை என்று சொன்னால் நம்ப முடிகிறதா..?

ஆம்.. பப்பாளியைப் போலவே அதன் விதைகளும் மிகவும் நன்மை பயக்கும். இந்த விதைகள் மோசமான செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகின்றன. அதோடு நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடும் பண்புகளும் அவற்றில் உள்ளன. ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நார்ச்சத்து நிறைந்த பப்பாளி விதைகளில் காணப்படுகின்றன. ஊட்டச்சத்து நிறைந்த பப்பாளி விதைகள் சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்துகிறது. ஹெல்த்லைன் செய்தியின்படி, பப்பாளி விதைகளில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. மேலும் பல நன்மைகளை தெரிந்து கொள்வோம்.

ஊட்டச்சத்து நிறைந்தது - பப்பாளியைப் போலவே, பப்பாளி விதைகளும் மிகவும் நன்மை பயக்கும். ஊட்டச்சத்து நிறைந்த பப்பாளி விதைகளில் பாலிபினால்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளன. இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. இந்த விதைகளில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களும் உள்ளன, அவை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். பப்பாளி விதைகளிலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது.

நோய்த்தொற்று தடுப்பு - பப்பாளி விதைகளில் உடலில் ஏற்படும் தொற்றுகளுக்கு எதிராக போராடும் கூறுகள் உள்ளன . சிறப்பு வகை பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணிகளை அழிக்க பப்பாளி விதைகள் உதவிகரமாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இருப்பினும், இது தொடர்பாக மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

செரிமானத்தை மேம்படுத்துகிறது - பப்பாளி விதையில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது. பப்பாளி விதைகளை தொடர்ந்து உட்கொள்வது செரிமானத்தை மேம்படுத்தும்.

சிறுநீரக செயல்பாட்டைப் பாதுகாத்தல் - நல்ல ஆரோக்கியத்தை பராமரிப்பதில் சிறுநீரகங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. உடலில் உள்ள அதிகப்படியான திரவம் மற்றும் கழிவுகளை வெளியேற்றும் வேலையை சிறுநீரகம் செய்கிறது. பப்பாளி விதைகளை சாப்பிடுவது சிறுநீரக செயல்பாடு மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இருப்பினும், இது குறித்து மேலும் ஆய்வுகள் தேவை.

புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் - பப்பாளி விதையில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. சில ஆய்வுகளில் பப்பாளி விதையில் புற்றுநோயை தடுக்கும் பண்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. பப்பாளி விதைகளை உட்கொள்வது உடலுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும். ஒரு ஆய்வில் பப்பாளி விதைகள் வீக்கம் மற்றும் புற்றுநோய் வளர்ச்சியிலிருந்து பாதுகாக்க உதவுகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தனுமா..? இந்த சுவாசப் பயிற்சிகளை செய்து பாருங்கள்..!

 தினம் தினம் நம் இரத்த அழுத்த நிலையானது ஏற்ற இறக்கத்தில் செல்ல தொடங்குகிறது. நாம் செய்யும் வேலைக்கு ஏற்ப இது மாறுகிறது. உயர் இரத்த அழுத்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களைத் தவிர பெரும்பாலான நேரங்களில் இது கட்டுப்பாட்டில் உள்ளது. தீவிர உடற்பயிற்சி, மன அழுத்தம், பதட்டம், அதிக ஆல்கஹால் உட்கொள்வது என பல விஷயங்கள் உயர் இரத்த அழுத்தத்தைக் கையாளும் நபர்களிடையே காணப்படுகின்றன. இது பக்கவாதம், மாரடைப்பு மற்றும் மரணத்திற்கு கூட வழிவகுக்கும். இதுபோன்ற எந்தவொரு நிகழ்வையும் தடுக்க, இரத்த அழுத்த அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். மருந்துகள், வீட்டு வைத்தியம் மற்றும் உடற்பயிற்சி ஆகியவை உங்கள் இரத்த அழுத்த அளவை கட்டுப்படுத்த உதவும் சில எளிய வழிகள் ஆகும்.

இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் சில குறிப்பிட்ட சுவாச பயிற்சிகள் உள்ளன. இந்த ஆழமான சுவாச பயிற்சிகள் பாராசிம்பெடிக் நரம்பு மண்டலத்தை செயல்படுத்துகிறது. இது இதயத் துடிப்பை திறம்பட நிர்வகித்து இரத்த நாளங்களை நீர்த்துப்போகச் செய்வதால் உங்கள் ஒட்டுமொத்த இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. மன அழுத்த சூழ்நிலைகளில் ஆழ்ந்த சுவாசத்தை கடைப்பிடிப்பதன் மூலம், எந்தவொரு சவாலான சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் போது அமைதியான முறையில் செயல்பட உங்களை நீங்களே பயிற்றுவிக்கலாம். நீங்கள் செய்ய வேண்டிய 3 எளிதான சுவாச பயிற்சிகள் இங்கே…

சமமான சுவாச பயிற்சி: அமைதியான இடத்தில் உட்கார்ந்து கொள்ளுங்கள். கண்களை மூடிக்கொண்டு தசைகளை தளர்த்திக் கொள்ளுங்கள். உங்கள் மூக்கு வழியே சுவாசத்தை நான்கு விநாடிகள் உள்ளிழுக்கவும் உங்கள் நுரையீரலுக்கு காற்று செல்லும்வரை சில விநாடிகள் இடைநிறுத்தவும். மீண்டும் உங்கள் மூக்கு வழியாக நான்கு விநாடிகள் சுவாசத்தை வெளியேற்றவும். இதே போல் 5-10 முறை செய்யவும்.

30 விநாடி சுவாச பயிற்சி: உயர் இரத்த அழுத்தம் மற்றும் சாதாரண இரத்த அழுத்தத்தைக் கையாளும் 20,000 ஜப்பானிய நபர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்படி, 30 ஆழ்ந்த சுவாசங்களை மேற்கொள்வது இரத்த அழுத்த அளவை நிர்வகிக்க உதவுகிறது. 30 விநாடிகளுக்குள் 6 ஆழமான சுவாசங்களை மேற்கொள்வது சிஸ்டாலிக் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் என்று ஆய்வு கூறுகிறது. அமைதியான இடத்தில் முதலில் உட்கார்ந்து கொள்ளுங்கள். உங்கள் முதுகெலும்பை நிமிர்ந்து வைத்து கண்களை மூடிக்கொள்ளவும். 30 விநாடிகளுக்கு ஒரு டைமரை அமைத்து, இந்த நேரத்தில் 6 ஆழமான சுவாசங்களை மேற்கொள்ளுங்கள். மீண்டும் அதனை செய்யவும்.

உதரவிதான சுவாசம்: உங்கள் முழங்கால்கள் மற்றும் தலைக்கு கீழே ஒரு தலையணையுடன் தட்டையாக படுக்கவும். பின்னர் ஒரு கையை தொப்புளின் மேலேயும், மற்றொரு கையை மார்பிலும் வைக்கவும். உங்கள் மூக்கு வழியாக 2 விநாடிகள் சுவாசத்தை உள்ளிழுக்கவும் உங்கள் வயிற்று தசைகளில் ஈடுபடுவதன் மூலம் உங்கள் வாயின் வழியாக மெதுவாக சுவாசத்தை வெளியேற்றவும். எல்லா காற்றையும் வயிற்றில் இருந்து வெளியேற்றவும். இந்த பயிற்சியை ஒரு நாளைக்கு 10 முறை செய்ய வேண்டும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip