Search

உங்கள் டயட்டில் சேர்க்க வேண்டிய ஆரோக்கியமான கொழுப்புகள்.. உணவுகளின் பட்டியல் இதோ.!

 ஆரோக்கியமான உணவு என்று வரும் போது கொழுப்பு குறைவாக உள்ள உணவுகள் பலரது டயட்டில் இடம்பெறுகின்றன. இருப்பினும் ரத்த அழுத்தத்தை சீராக வைக்க, குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க, ரத்த கொழுப்பின் அளவை மேம்படுத்த என பல காரணங்களுக்காக நம் டயட்டில் போதுமான அளவு கொழுப்புகள் சேர்க்கப்பட வேண்டும்.

இந்த சூழலில் தான் பல நிபுணர்கள் ஹெல்தி ஃபேட் எனப்படும் ஆரோக்கியமான கொழுப்புகள் அடங்கிய உணவுகளை டயட்டில் சேர்ப்பது, உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைக்க உதவும் மிகவும் இயற்கையான வழி என பரிந்துரைக்கிறார்கள். healthy fat கொண்ட உணவுகளை எடுத்து கொள்வது இதய நோயை உருவாகும் அபாயத்தை குறைக்கிறது மற்றும் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. இது போன்ற பல நன்மைகளை வழங்கும் ஆரோக்கியமான கொழுப்பு இருக்கும் சில உணவுகளை இங்கே பார்க்கலாம்.

சியா விதைகள்: சியா விதைகள் ஒமேகா -3-ன் சிறந்த தாவர அடிப்படையிலான ஆதாரங்களில் ஒன்றாக இருக்கிறது. இது அதிகமாக இருக்கும் ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு மற்றும் rheumatoid arthritis சிக்கலையும் இவை குறைக்கும்.

முட்டைகள்: முட்டைகள் ப்ரோட்டீனின் சிறந்த ஆதாரமாக இருப்பதோடு அதன் மஞ்சள் கருவில் நல்ல கொழுப்புகளையும் கொண்டுள்ளன. தவிர முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் டி இருப்பதோடு கல்லீரல், மூளை, நரம்புகள் மற்றும் தசைகளின் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் பி வைட்டமின் மற்றும் Choline உள்ளது.

அவகேடோ: அவகேடோ பழங்களில் ஒலிக் ஆசிட் (oleic acid) நிறைந்துள்ளது, இது ஒரு மோனோ அன்சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட் ஆகும். இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதாக கருதப்படுகிறது மற்றும் புற்றுநோயைத் தடுக்க உதவும் என கூறப்படுகிறது.

ஃபேட்டி ஃபிஷ் (Fatty fish​): Fatty fish மீன்களில் அன்சாச்சுரேட்டட் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஏராளமாக காணப்படுகிறது. இவை நம்முடைய இதயம் மற்றும் மூளை செயல்பாட்டிற்கு மிக முக்கியமானவையும் கூட.

ஆளிவிதைகள்: ஆளிவிதைகளில் நம் உடலுக்கு நன்மை பயக்கும் அளவிற்கு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் நார்ச்சத்து ஆகிய இரண்டும் உள்ளன. இவை ஹார்ட் ரிதம்-ஐ (rhythm) கட்டுப்படுத்துவது, கொலஸ்ட்ராலை குறைப்பது மற்றும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட நன்மைகளை வழங்குவதாக கூறப்படுகிறது.

டோஃபு: மோனோ அன்சாச்சுரேட்டட் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகளின் குறிப்பிடத்தக்க ஆதாரமாக இருக்கும் டோஃபு, ஒரு முழுமையான தாவர புரதத்தை (plant protein) நம் உடலுக்கு வழங்குகிறது.

டார்க் சாக்லேட்: டார்க் சாக்லேட்டில் கொழுப்புகளை ஃபிளாவனாய்டு ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ்கள் உள்ளன. இவை இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்திற்கு நன்மைகள் செய்கின்றன.

யோகர்ட்: கொழுப்பு சேர்க்கப்பட்ட யோகர்ட்டில் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நன்மை அளிக்கும் ப்ரோபயாடிக் நுண்ணுயிரிகள் (probiotic microorganisms) உள்ளன. மேலும் அடிக்கடி யோகர்ட் எடுத்து கொள்வது இதய நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்க கூடும்.

நட்ஸ்: முக்கியமான ஒரு ஆய்வானது நட்ஸ்களை அடிக்கடி எடுத்து கொள்பவர்களுக்கு எடை அதிகரிப்பு, அதிக எடை அல்லது உடல் பருமன் உள்ளிட்ட நீண்ட கால ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என வெளிப்படுத்தி உள்ளது.

ஆலிவ்கள்: ஆலிவ்களில் காணப்படும் கொழுப்பானது மோனோ அன்சாச்சுரேட்டட் (Monounsaturated) ஆகும். மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்பு என்பது ஒரு டயட்ரி ஃபேட் ஆகும். அதே போல ஆய்வுகளின்படி ஆலிவ்களில் காணப்படும் oleuropein-ஆனது நீரிழிவு நோயை தடுக்க உதவும்.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

காய்கறிகள் கூட உங்க சருமத்தை பளபளப்பாக மாத்தும்... அதுக்கு இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க..!

 நாம் உண்ணும் உணவுகள் தான் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது நாம் அனைவரும் அறிந்ததே. உடல் ஆரோக்கியத்தில் மட்டுமல்ல சரும ஆரோக்கியத்திற்கும் நாம் டயட்டில் சேர்த்து கொள்ளும் உணவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இன்னும் குறிப்பாக சொல்வதென்றால் நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பது நம் தோற்றத்தில் நேரடியாக எதிரொலிக்கும். உங்களுக்கு பளபளப்பான சருமம் வேண்டும் என்றால் பதப்படுத்தப்பட்ட உணவுகள் அல்லது அதிக சர்க்கரை மற்றும் கொழுப்பு அடங்கிய உணவுகளுக்கு பதில் சூப்பர் ஃபுட்களை டயட்டில் சேர்த்து கொள்ள வேண்டும். உங்கள் சருமத்தை பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைக்க உதவும் சிறந்த காய்கறிகளின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

கேரட்: பீட்டா கரோட்டின் நிறைந்திருக்கும் கேரட்டானது அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ்களை நமக்கு வழங்குவதன் மூலம் சருமத்தை ஆரோக்கியமாக வைக்கிறது மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களால் ஏற்படும் சேதத்திலிருந்து நம் சருமத்தை பாதுகாக்கிறது.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு: சர்க்கரை வள்ளிக்கிழங்கில் பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளது. இதனை நம் உடல் வைட்டமின் ஏ-வாக மாற்றி கொள்கிறது. சரும ஆரோக்கியத்தை மற்றும் சருமத்தின் இளமை தோற்றத்தை பராமரிக்கவும் வைட்டமின் ஏ உதவுகிறது.

குடை மிளகாய்: வைட்டமின் சி-யின் சிறந்த மூலமாக இருக்கின்றன குடை மிளகாய்கள். டயட்டில் அடிக்கடி குடை மிளகாய் சேர்த்து கொள்வது கொலாஜன் உற்பத்திக்கு உதவுவதோடு, நம் சருமத்திற்கு வலிமை மற்றும் எலாஸ்டிக்சிட்டியை அளிக்கிறது.

தக்காளி: தக்காளியில் இருக்கும் லைகோபீன் (lycopene) ஒரு சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகும். இது சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது. மேலும் இளமை தோற்றத்தை பராமரிப்பதிலும் லைகோபீன் முக்கிய பங்கு வகிக்கிறது.

வெள்ளரி: ஹை வாட்டர் கன்டென்ட் கொண்ட வெள்ளரிகளை டயட்டில் சேர்ப்பது நம் சருமத்தை ஹைட்ரேட்டாக வைக்க பெரிதும் உதவுகின்றன. சரும வீக்கத்தையும் குறைக்கின்றன. மேலும் வெள்ளரியில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் கே ஆகியவை சருமத்தை பிரகாசமாக்க உதவுகின்றன.

காலே: இந்த ஆரோக்கியமான காயில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே, அத்துடன் தாமிரம் மற்றும் இரும்பு போன்ற பல மினரல்ஸ் நிரம்பியுள்ளன. இவை அனைத்தும் நம் சருமத்தை இளமையாக மற்றும் ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது. காலேவில் உள்ள வைட்டமின் சி சருமத்தின் கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது.

ப்ரோக்கோலி: வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்த ப்ரோக்கோலி கொலாஜன் உற்பத்தியை சப்போர்ட் செய்கிறது மற்றும் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரஸ்ஸிலிருந்து சருமத்தை பாதுகாக்க உதவுகிறது.

அவகேடோ: அவகேடோ பழங்களில் ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின் ஈ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்கள் நிறைந்துள்ளன. இதில் அடங்கியிருக்கும் சத்துக்கள் சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது மற்றும் இயற்கையான பளபளப்பை அளிக்கிறது.

பூசணி: பூசணிக்காயில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது, இது cell turnover-ஐ ஊக்குவிக்கிறது மற்றும் சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. தவிர ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களை எதிர்த்துப் போராடும் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்களும் பூசணிக்காயில் உள்ளன.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

NHSRC வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.60,000/- ஊதியம்!

 

NHSRC வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.60,000/- ஊதியம்!

NHSRC ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Consultant பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

NHSRC காலிப்பணியிடங்கள்:

NHSRC நிறுவனம் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Area Manager பணிக்கென 01 காலிப் பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NHSRC வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NHSRC கல்வித் தகுதி:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBBS / BDS / Post graduate Diploma / Master Degree முடித்திருக்க வேண்டும்.

NHSRC ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.60,000/- முதல் ரூ. 1,20,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

NHSRC தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NHSRC விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

NCRTC போக்குவரத்து கழகத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – ரூ.24.73 லட்சம் ஆண்டு ஊதியம் || உடனே விண்ணப்பியுங்கள்!

 NCRTC போக்குவரத்து கழகத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – ரூ.24.73 லட்சம் ஆண்டு ஊதியம் || உடனே விண்ணப்பியுங்கள்!

National Capital Region Transport Corporation எனப்படும் NCRTC ஆனது Deputy General Manager (IT / Architect), Associate Architect பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. 45 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.24.73 லட்சம் வரை ஆண்டு ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 15.07.2023 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

NCRTC காலிப்பணியிடங்கள்:

Deputy General Manager (IT / Architect) பணிக்கென காலியாக உள்ள 4 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Deputy General Manager கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Arch / B.E./ B. Tech (CS/IT) / MCA என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

NCRTC வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 மற்றும் 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Deputy General Manager ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.24.73லட்சம் வரை ஆண்டு ஊதியம் வழங்கப்படும்.

NCRTC தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.07.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF 1

Download Notification PDF 2


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

தமிழக அரசில் ரூ.20,000/- தொகுப்பூதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

 தமிழக அரசில் ரூ.20,000/- தொகுப்பூதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

புதுக்கோட்டை மாவட்ட சமூக நல அலுவலகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Senior Counsellor, Case Worker, Watchman பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

One Stop Centre காலிப்பணியிடங்கள்:

Senior Counsellor, Case Worker, Watchman பணிக்கென காலியாக உள்ள 4 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Senior Counsellor கல்வி தகுதி:

Masters Degree, Law தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

One Stop Centre வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Senior Counsellor ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.

Senior Counsellor – ரூ. 20,000/-

Case Worker – ரூ. 15,000/-

Watchman – ரூ. 10,000/-

One Stop Centre தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 05.07.2023ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

முகவரி:

மாவட்ட சமூக நல அலுவலர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
புதுக்கோட்டை-622001.

Download Notification PDF

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

NIELIT ஆணையத்தில் ரூ.35,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

 NIELIT ஆணையத்தில் ரூ.35,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி (NIELIT) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Assistant Faculty, Associate Faculty, Front Office Councilor பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

NIELIT காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Assistant Faculty, Associate Faculty, Front Office Councilor பணிக்கென 11 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Assistant Faculty கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduate / Post Graduate / Ph.D என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

NIELIT வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Assistant Faculty ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.35,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NIELIT தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 26.06.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் நேரில் சென்று கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Official Announcement 


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

IIT Madras- ல் Senior Project Engineer காலிப்பணியிடங்கள் – ரூ.90,000 சம்பளம் || முழு விவரங்களுடன்!

 IIT Madras- ல் Senior Project Engineer காலிப்பணியிடங்கள் – ரூ.90,000 சம்பளம் || முழு விவரங்களுடன்!

IIT Madras ஆனது Senior Project Engineer பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B. Tech / M.E / M. Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

IIT Madras காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Senior Project Engineer பணிக்கென காலியாக உள்ள 2 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Senior Project Engineer கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B. Tech / M.E / M. Tech தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

IIT Madras வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Senior Project Engineer ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000/- முதல் ரூ.90,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

IIT Madras தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Shortlisted செய்யப்பட்டு written / skill test / interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 13.07.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

TNHRCE ராமநாதபுர வேலைவாய்ப்பு 2023 – தமிழ் தெரிந்தால் போதும் || சம்பளம்: ரூ.41800/-

 

TNHRCE ராமநாதபுர வேலைவாய்ப்பு 2023 – தமிழ் தெரிந்தால் போதும் || சம்பளம்: ரூ.41800/-

இராமநாதபுரம்‌ மாவட்டத்தில் உள்ள அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வராள்‌ மற்றும்‌ முத்தாலம்மன்‌ திருக்கோயிலில்‌ காலியாக உள்ள ஓதுவார்‌ பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பணிக்கு இந்து மதத்தை சார்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 20.07.2023 மாலை 5:45 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

திருக்கோயில்‌ காலிப்பணியிடங்கள்:

ஓதுவார் பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

ஓதுவார் கல்வி தகுதி:

தமிழில்‌ எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்‌. சமய நிறுவனத்தில் நடத்தப்படும் தேவார பாடசாலையில்‌ மூன்று ஆண்டுகள்‌ பயின்றமைக்கான சான்றிதழ்‌ பெற்றிருக்க வேண்டும்‌.

சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.13200-41800/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை உரிய சுய சான்றொப்பமிடப்பட்ட அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு 20.07.2023 அன்று அல்லது அதற்கு முன் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

BEL நிறுவனத்தில் ரூ.55,000/- சம்பளத்தில் வேலை – 200+ காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!

 

BEL நிறுவனத்தில் ரூ.55,000/- சம்பளத்தில் வேலை – 200+ காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Trainee Engineer -I & Project Engineer – I பணிக்கென காலியாக உள்ள 205 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

காலிப்பணியிடங்கள்:
  • Trainee Engineer -I & Project Engineer – I பணிக்கென காலியாக உள்ள 205 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc (Engg.)/B.E/B. Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 மற்றும் 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.55,000/- ஊதியம் வழங்கப்படும்.
  • தகுதியானவர்களில் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 24.06.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification 2023 Pdf
 Apply Online

 Click here to join WhatsApp group for Daily employment news

தொடர்ந்து ஒரு மாசம் சர்க்கரை சாப்பிடாம இருந்தா இவ்வளவு நன்மைகள் கிடைக்குதா..? டிரை பண்ணி பாருங்க..!

 நம்மில் பலருக்கு சர்க்கரை இல்லாத ஒரு நாளை நிச்சயமாக நினைத்து கூட பார்க்க முடியாது. சர்க்கரை சேர்க்கப்படாத காபி, டீ, திண்பண்டங்கள் போன்றவை நம்மை வருத்தம் அடைய செய்து விடும். சாக்லேட், பிஸ்கட் மற்றும் பிற தின்பண்டங்களையாவது தவிர்த்து விடலாம். ஆனால் காபி மற்றும் டீயில் பாதியளவு சர்க்கரையாவது இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஏராளம்.

ஆனால் அதிக அளவு சர்க்கரை சாப்பிடுவது உடல் பருமன், நீரிழிவு, இதய நோய் மற்றும் பல நாள்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கிறது. சர்க்கரை சாப்பிடுவதால் என்னென்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதை உணர்ந்து சர்க்கரை அளவை குறைத்துக் கொள்வது நமது ஆரோக்கியத்திற்கு நல்லது. அந்த வகையில் ஒரு மாதம் சர்க்கரையை சாப்பிடாமல் இருப்பதால் நம் உடலில் என்னென்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்பதை தெரிந்து கொண்டால் நிச்சயமாக நீங்களும் அதனை பின்பற்றுவீர்கள்.

சீரான ரத்த சர்க்கரை அளவு: சர்க்கரையை முழுவதுமாக தவிர்ப்பது நமது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவுகளை சீராக பராமரிக்க உதவும். இது சர்க்கரை அளவில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை குறைத்து நமது ஆற்றல் மற்றும் மனநிலையை மேம்படுத்துகிறது.

உடல் எடை இழப்பு: சர்க்கரை நமது கலோரி அளவுகளை அதிகரிக்க கூடிய ஒரு பொருளாகும். இதனை தவிர்த்து விடுவது உங்களுக்கு எடை இழப்பை ஏற்படுத்தும். ஆகவே நீங்கள் சர்க்கரை நிறைந்த உணவுகள் மற்றும் பானங்களை சாப்பிட்டு வருகிறீர்கள் என்றால் அதனை முழுவதுமாக நிறுத்தி விடுவது உங்களுக்கு உங்கள் உடல் எடையை குறைக்க உதவும்.

சர்க்கரைக்கான குறைந்த ஏக்கம்: ஒரு சிலர் சர்க்கரைக்கு அடிமையாக இருப்பார்கள். ஆனால் நமது உணவில் இருந்து அதனை முழுவதுமாக அகற்றும்போது நாளுக்கு நாள் சர்க்கரைக்கான ஏக்கம் குறைவதை நாம் கவனிக்கலாம்.

அதிக ஆற்றல்: நமது ஆற்றல் அளவை அதிகரிக்க சர்க்கரை சாராத உணவுகளை நாம் எடுக்கும்போது, நமக்கு நாள் முழுவதும் போதுமான ஆற்றல் கிடைக்கிறது.

வாய் ஆரோக்கியம்:  சொத்தைப்பல் ஏற்படுவதற்கு சர்க்கரை ஒரு முக்கிய காரணமாகும். ஆகவே சர்க்கரையை அகற்றி விடுவது நமது வாயின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளும்.

சரும ஆரோக்கியத்தில் முன்னேற்றம்: சர்க்கரையை தவிர்ப்பது தெளிவான சருமத்தையும், முகப்பருவையும் குறைக்கும் என கூறப்படுகிறது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip