Search

Air India நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

 

Air India நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Air India நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை அதன் அதிகாரபூர்வ தளத்தில் தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Checklist Administrator பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள், தேர்வு செய்யப்படும் முறை குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Air India காலிப்பணியிடங்கள்:

Checklist Administrator பணிக்கென காலியாக உள்ள 2 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Checklist Administrator கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Air India வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Checklist Administrator ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

Air India தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


BECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.50,000/- ஊதியம்!

 

BECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.50,000/- ஊதியம்!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Tendering Professional, Finance Facilitation Professional, Senior Executive,Executive பணிகளுக்கென 18 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

BECIL காலிப்பணியிடங்கள்:

BECIL நிறுவனத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Tendering Professional, Finance Facilitation Professional, Senior Executive, Executive பணிகளுக்கு என 18 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BECIL  வயது வரம்பு :

விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது 50 ஆக  இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

BECIL கல்வித் தகுதி:

விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E/B.Tech. OR MBA/  ICWA/ B.Com பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

BECIL ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.50,000/-முதல் ரூ.1 லட்சம் வரை ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

BECIL தேர்வு செய்யப்படும் முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள்  Attending the test/ document verification / personal interaction மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

BECIL விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் மூலம் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைனில்  இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

TNSTC அரசு போக்குவரத்து கழகத்தில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

 

TNSTC அரசு போக்குவரத்து கழகத்தில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்ட அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள Electrician பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNSTC காலிப்பணியிடங்கள்:

Electrician பதவிக்கு என 25 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வித்தகுதி:

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம் :

தேர்வானவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.6,500/- முதல் அதிகபட்சம் ரூ.7,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


TNSTC விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து ஆன்லைன் மூலம் உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification Pdf

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.25,000/- சம்பளத்தில் வேலை – கல்வி தகுதி, வயது குறித்த முழு விவரங்களுடன்!

 

பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.25,000/- சம்பளத்தில் வேலை – கல்வி தகுதி, வயது குறித்த முழு விவரங்களுடன்!

பாரதியார் பல்கலைக்கழகமானது இதில் காலியாக உள்ள Guest Faculty பணிக்கான பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 30.06.2023ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Bharathiar University காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Guest Faculty பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Guest Faculty கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு சம்பந்தப்பட்ட பாட பிரிவில் Master Degree in Computer Science / Ph.D in computer Science/NET/SLET/SET/JRF தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரதியார் பல்கலைக்கழக வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Guest Faculty ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25,000/- ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bharathiar University தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.06.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி:

Dr.E.Chandra
Professor and Head
Department of Computer Science
Bharathiar University
Coimbatore – 641 046



 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

தமிழக அரசு அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2023 – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

 

தமிழக அரசு அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2023 – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி தேவஸ்தான ஆட்சேர்ப்பு அறிவிப்பின் படி, Medical Officer மற்றும் Staff Nurse பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு 6 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்களுக்கு மாதம் ரூ.6,000 முதல் ரூ.90,000 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் வயது வரம்பு, தேர்வு செய்யும் முறை, தகுதி, கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை என அனைத்து விவரங்களையும் கீழே அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

காலிப்பணியிடங்கள்:
  • Medical Officer – 2 பணியிடங்கள்
  • Staff Nurse – 2 பணியிடங்கள்
  • Multipurpose Hospital Worker – 2 பணியிடங்கள்

என மொத்தம் 6 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

01.07.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 முதல் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:
  • Medical Officer – MBBS
  • Staff Nurse – Diploma in General Nursing & Midwifery
  • Multipurpose Hospital Worker – எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
TNHRCE சம்பள விவரம்:
  • Medical Officer – ரூ.90,000/-
  • Staff Nurse – ரூ.14,000/-
  • Multipurpose Hospital Worker – ரூ.8000/-
விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 24.07.2023 மாலை 5.45 மணிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.




 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

108 ஆம்புலன்ஸில் வேலை..! கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு..!

 கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கான 108 அவசர ஊர்திக்கு ஆள் சேர்ப்பு முகாம் நாளை (24ம் தேதி) தக்கலை அரசு தலைமை மருத்துவமனை,108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் வைத்து நடைபெற இருக்கிறது.

தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் செயல்படுகிறது. இதில் பணிபுரிய மருத்துவ உதவியாளர்கள் மற்றும் ஓட்டுநர் பணிக்கான ஆள்சேர்ப்பு முகாம் நாளை (24ம் தேதி - சனிக்கிழமை) கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அரசு தலைமை மருத்துவமனை, 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

மருத்துவ உதவியாளருக்கு உண்டான தகுதிகள் பின்வருமாறு,

மருத்துவ உதவியாளருக்கான தகுதிகள் என்ன?

1. Bsc nursing, GNM , ANM,DMLT (12 ம் வகுப்பிற்குப் பிறகு 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) LIFE SCIENCE -- Bsc Zoology, Botany ,Bio Chemistry, Microbiology Biotechnology , Plant Biology இதில் ஏதோ ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

2. மாத ஊதியம் ரூபாய் 15,435 (மொத்த ஊதியம்) நேர்முக தேர்வு அன்று 19 வயதிற்கு மேலும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

3. தேர்வு முறையானது எழுத்து தேர்வு, மருத்துவ நேர்முகம், முதலுதவி, அடிப்படை செவிலியர் பணி தொடர்பானவை மற்றும்மனித வளத்துறையின் நேர்முகத் தேர்வு

4. இத்தேர்வுகளில் தேர்வு செய்யப்படுபவர்கள் 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி, மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும்.

ஓட்டுநருக்கான தகுதிகள் என்ன?

1. 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. மாத ஊதியம் ரூபாய் 15,235 (மொத்த ஊதியம்)

3. நேர்முகத் தேர்வு அன்று 24 வயதிற்கு மேலும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும் .

4. 162.5 cm குறையாமல் இருக்க வேண்டும் .

5. இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் மற்றும் Badge வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஒரு ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

6. ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை

1. எழுத்து தேர்வு

2. தொழில்நுட்ப தேர்வு

3. மனித வளத்துறை நேர்காணல்

4. கண் பார்வை சம்பந்தப்பட்ட தேர்வு

5. சாலை விதிகளுக்கான தேர்வு

இத்தேர்வுகளில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 10 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 7397724822, 7397724853, 7397724848 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

காரணமே இல்லாமல் சோகமா இருக்கீங்களா? இதை செய்தால் குஷியாகிடுவீங்க!

 ஒரு சில நாட்களில் காலை எழுந்திருக்கும் பொழுதே ஆற்றல் குறைவாகவும், சோகமாகவும் நாம் உணர்வோம். அதற்கான காரணம் கூட நமக்கு தெரியாது. ஹார்மோன்களில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு அல்லது டிராமா போன்றவை காரணமாக உண்டாகும் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தின் விளைவாக இந்த சோகமான மனநிலை ஏற்படலாம். எனினும், உங்கள் மனநிலையை மேம்படுத்தி உங்கள் ஆற்றல் அளவை அதிகரிக்க நீங்கள் முயற்சி செய்யக் கூடிய பல வழிகள் உள்ளது. இதனைச் செய்வதற்கு உங்கள் சோகத்திற்கான காரணம் தெரிய வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. அப்படி என்ன வழியாக இருக்கும்? தெரிந்து கொள்ள ஆசையாக உள்ளதா… வாருங்கள் பார்ப்போம்!

புதியதொரு நாளுக்கு நன்றி சொல்லுங்க: உங்களுக்கு மற்றுமொரு அற்புதமான நாள் பரிசாக கிடைத்துள்ளது. உங்களை சிறந்த முறையில் மேம்படுத்திக் கொள்ள உங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நாளை உங்களால் முடிந்தவரை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வதன் மூலம் இந்நாளுக்கு நன்றி தெரிவியுங்கள். உங்களுக்கு ஆதரவு தரக்கூடிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். உங்கள் மனது எதிர்மறையான எண்ணங்களை பற்றி சிந்திக்கும் பொழுது ஒரு நிமிடம் அப்படியே எதுவும் செய்யாமல் இருந்து, நன்றாக மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடவும். உங்கள் மனதை அமைதிப்படுத்த முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு காத்திருக்கும் வாய்ப்புகளை கற்பனை செய்து பாருங்கள். அமைதியான மனதால் மட்டுமே நன்மைகளை அடையாளம் காண முடியும். இன்றைய நாள் சிறப்பாக அமையப்போகிறது என்பதை உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள்.

நல்ல விஷயங்களில் கவனம் செலுத்தவும்: உங்களுக்கு என்னதான் கஷ்டங்கள் இருந்தாலும் நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டிய பல நன்மைகளும் உங்கள் வாழ்க்கையில் இருக்கும். அவை கட்டாயமாக உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களை காட்டிலும் அதிகமாகவே இருக்கும். அவற்றில் மட்டுமே உங்கள் கவனத்தை செலுத்துங்கள்.எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் அந்த பிரச்சனை மூலமாக உங்களுக்கு நிச்சயமாக ஒரு நன்மை கிடைக்கும் என்பதை ஆழமாக நம்புங்கள். உங்களுக்கு கிடைத்திருக்கக் கூடிய அனுபவங்கள், மக்கள், வாய்ப்புகள் மற்றும் சாதனைகளை நினைத்துப் பாருங்கள்.

எதிர்மறையான எண்ணங்களில் இருந்து விலகி இருக்கவும்: உங்கள் மனதை சீர்குலைக்க கூடிய கெட்ட எண்ணங்களில் இருந்து விலகி இருங்கள். அவற்றை வளர விடாமல் தடுப்பது உங்கள் வேலை. நம்மில் பெரும்பாலானோர் நமது உணர்வுகளை அடையாளம் கண்டு அதனுடன் மட்டுமே ஒன்றி செல்ல முயற்சி செய்கிறோம். எனினும், தற்போதைய தருணத்தில் கவனம் செலுத்தி, அதன் மீது அன்பு காட்ட முயற்சி செய்யுங்கள். இது உங்கள் பதட்டத்தை குறைத்து, மனதை அமைதிப்படுத்த உதவும்.

மகிழ்ச்சி தரக்கூடிய செயல்களில் ஈடுபடவும்: உங்களுக்கு அதிக மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் அள்ளித் தரக்கூடிய ஏதாவது ஒரு செயலை செய்ய முயற்சி செய்யுங்கள். நீங்கள் சோகமாகவோ அல்லது குறைந்த ஆற்றலுடன் இருக்கும்பொழுது இது போன்ற செயல்பாடுகளை செய்வது உடலில் ஹாப்பி ஹார்மோன்களை வெளியிட உதவும். இயற்கை வெளியில் அல்லது பூங்காவில் நடப்பது, ஸ்கிப்பிங் செய்வது, நீச்சல் குளத்தில் நீந்துவது அல்லது யோகா பயிற்சி செய்வது போன்றவை மன அழுத்தத்தை குறைக்க உதவும் ஒரு சில செயல்பாடுகள்.

அன்புக்குரியவர்களின் உதவியை நாடுங்கள்: தனிமையாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் நீங்கள் அதிகம் நம்பிக்கை வைத்துள்ள மற்றும் உங்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள உங்கள் நண்பர் அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவரிடம் பேசுவதன் மூலமாக உங்களது தற்போதைய மனநிலை மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது. அவர்களுடன் பேச ஆரம்பிக்கும் பொழுதே உங்களிடம் உள்ளது எதிர்மறையான எண்ணங்கள் மெல்ல மெல்ல மறைய தொடங்கும். எனவே உங்கள் நீங்கள் நினைப்பதை அப்படியே மனதில் பூட்டி வைக்காமல் பிறரிடம் உதவி கேட்க தயங்காதிர்கள்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

அழகழகான நீர் வீழ்ச்சிகள்.. கண்டிப்பாக பார்க்க வேண்டிய லிஸ்ட்!

 மலைகள், ஏரிகள், பள்ளத்தாக்குகள், ஆறுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் போன்ற அழகான இயற்கை வளங்களை இந்தியா கொண்டுள்ளது. குறிப்பாக  இங்குள்ள பல மலைவாசஸ்தலங்களின் முக்கிய நீர்வீழ்ச்சிகள் பெரும் அளவிலான மக்களை ஈர்த்து வருகிறது. பருவ தொடங்கியுள்ளதால் நீர் வரத்தும் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அருவிகள் தவிர்த்து அருகில் உள்ள மாநிலங்களில் உள்ள இடங்களைத் தேடுவோம். அப்படி நமது மாநிலத்திற்கு அருகே உள்ள மாநிலமான ஆந்திராவில் உள்ள அற்புதமான அருவிகளை பற்றி தான் இந்த செய்தித் தொகுப்பில் சொல்ல இருக்கிறோம்.  ஆந்திரா பக்கம் டூர் சென்றால் இதையெல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க

தலகோனா நீர்வீழ்ச்சி, திருப்பதி : சேஷாசல மலைகளின் நடுவில் அமைந்துள்ள அடர்ந்த காடுகளுக்கு இடையில் இருக்கும் இது திருப்பதியில்  இருந்து 45 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு 60 மீட்டர் உயரத்தில் இருந்து விழும் அருவிக்கு அருகே  ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்ட தாவரங்கள் உள்ளன. அதனால் இந்த அருவி தண்ணீருக்கு நோய் தீர்க்கும் சக்தி இருப்பதாக நம்புகின்றனர்.

கடிகா நீர்வீழ்ச்சி, விசாகப்பட்டினம்: கடிகி நீர்வீழ்ச்சி அருவி சுமார் 50 அடி உயரம் கொண்டது. இது போரா குகையிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது கோஸ்தானி ஆற்றில் இருந்து தொடங்குகிறது. மலையேற்றப் பிரியர்களுக்கு இந்தப் பகுதி மிகவும் ஏற்றது. மேலும், நடந்து செல்பவர்கள் இங்குள்ள இயற்கை அழகை கண்டு மயங்கும் வண்ணம் இருக்கும்.

ரம்பா நீர்வீழ்ச்சி, கிழக்கு கோதாவரி: இது ஆந்திராவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இந்த அருவியை அடைய 20 நிமிட மலையேற்றம் செய்யவேண்டும்.   ரம்பசோடவரத்திலிருந்து 10 கிமீ தொலைவிலும்,  ராஜமுந்திரியிலிருந்து 58 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் உள்ள இந்த அருவியில் குளிப்பது சிலிர்ப்பையும், புத்துணர்ச்சியையும் தரும்.

நாகலாபுரம் அருவி, சித்தூர் : திருப்பதியில் இருந்து 70 கி.மீ. நாகலாபுரம் மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி 'அருவிகளின் ராணி' என்று அழைக்கப்படுகிறது. இயற்கை அழகையும், அருவியையும் காண அதிகளவில் சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். கிழக்குத் தொடர்ச்சி மலையில் 'நாகலா மலையேற்றம்' மிகவும் பிரபலமான மலையேற்றமாகும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

ஒரு நாள் சுற்றுலா செல்லத் திட்டமா? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்..

 மாதக் கடைசியில் வேலை பார்க்கும் போது டென்ஷன் அதிகம் இருக்கும். மாதம் இறுதி என்பதால் பட்ஜெட்டும் குறைவாக இருக்கும் எப்படியாவது கடத்தி விடவேண்டும் என்றும் தோன்றும்.. வேலையில் இருந்து ஒரு பிரேக் எடுத்து 1 வாரம் ஊர் சுற்றலாம் என்று தோன்றும். ஆனால் அத்தனை நாட்கள் விடுமுறை கிடைக்காது.

கிடைக்கும் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாளில் தங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் அருகிலுள்ள சுற்றுலா இடத்திற்கு அல்லது ரிசார்ட் சென்று குதூகலமாக நேரத்தை செலவிட வேண்டும் என்பது தான் மனதில் ஓடும். ஒரு நாள் பயணம் சில நேரங்களில் முன்கூட்டியே திட்டமிடப்படும். சில நேரங்களில் அது தற்செயலாக நடக்கும். அதற்கான உதவி குறிப்புகளை தான் சொல்ல இருக்கிறோம்

சுற்றுலா செல்ல முடிவு செய்த பிறகு அருகில் உள்ள இடத்தை தேர்வு செய்வது பெரும் தலைவலி. ஒரே நாளில் போய்விட்டு திரும்ப வேண்டும். அதனால் உங்கள் இருப்பிடத்தில் இருந்து 60 முதல் நூறு கிலோமீட்டர் சுற்றத்திற்குள் இருக்கும் இடங்களை வடிகட்டி குறைத்துக்கொள்ளுங்கள். அதில் உங்கள் மனநிலைக்கும் சுற்றுலா செல்லும் ஆட்களுக்கும் ஏற்ற இடத்தைத் தேர்ந்தெடுத்து செல்லுங்கள்.

தொலைதூர இடத்தைத் தேர்ந்தெடுத்து, பயண நேரத்தை சாலையில் செலவழித்தால், அது பயணம் அல்ல. எனவே பயண நேரத்தை மிச்சப்படுத்த அருகில் உள்ள இடத்தை தேர்வு செய்யவும். 100 கிலோமீட்டர் என்றாலும் கூட 2 மணி நேரத்தில் சென்று விடலாம். பகலில் நேரம் செலவழித்து 2 மணி நேரத்தில் வீடு திரும்பி ஓய்வெடுக்கலாம்.

நீண்ட தூர பயணம் அல்லது நீண்ட நாள் பயணம் என்றால் பொது போக்குவரத்து தான் பெஸ்ட். நீண்ட தூரம் வாகனத்தை ஓட்டிசெல்லத் தேவை இல்லை. ஓய்வு கிடைக்கும். ஆனால் ஒரு நாள் பயணம் என்றால் உங்கள் சொந்த வாகனத்தை தேர்ந்தெடுப்பது நல்லது. அப்போது தான் நேரம் குறைவாக செலவாகும். பிடித்த இடத்தில் நின்று பார்ப்பது, குறைந்த நேரத்தில் அதிக இடங்களை பார்ப்பது எல்லாம் சாத்தியமாகும்

ஒரு நாள் பயணத்தில், செல்லும் போது பிடித்த இடத்திற்கு சென்று சாப்பிடும் வாய்ப்பு இருக்கும். அதே போல நடுவில் சாப்பிட சில சிற்றுண்டிகள் மற்றும் பானங்கள் எடுத்துச்செல்லவும் வசதியாக இருக்கும். வழியில் ஹோட்டல் அல்லது கடை இல்லை என்றால் இது பயனுள்ளதாக இருக்கும். கடைக்குச் சென்று காத்திருக்கும் நேரத்தையும் தவிர்த்து விட்டு பயணம் செய்யலாம்.

பயணம் செய்யும்போது வசதியான  ஆடைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். நாம் அணிந்திருக்கும் உடைகள் எரிச்சலூட்டுவதாக இருந்தால்,  பயணம் முழுவதும் அந்த உடையின் மீது தான் நமது கவனம் இருக்கும். முழுமையாக பயணத்தை ரசிக்க முடியாது. போகும் ஒரு நாளில் இப்படி இருந்தால் நன்றாக இருக்காது அல்லவா?

அதே போல நீர் உள்ள இடங்களுக்கு செல்லும் பொது நிச்சயம் குளிக்க ஆசை வரும். அப்போது மாற்றி கொள்வதற்கு சில மாற்று துணிகளையும் எடுத்து செல்வது நல்லது. அதற்காக பெரிய பேக் என்று ஆகாமல், எளிதாக இருக்கக்கூடிய துணிகளை எடுத்து செல்வது முக்கியம்.

அதே போல எந்த இடங்களுக்கு எல்லாம் செல்லத் திட்டமிடுகிறோமோ அவை எப்போது திறக்கப்படும், எப்போது மூடப்படும், சுற்றிப்பார்க்க எவ்வளவு நேரம் ஆகும், ஆடை கட்டுப்பாடுகள் உள்ளதா என்று அனைத்தையும் தெரிந்து வைத்துக்கொண்டால் அதற்கு ஏற்ப நேர மேலாண்மை செய்து கொள்ளலாம்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

செரிமானம் முதல் சிறுநீரக செயல்பாடு வரை.. பப்பாளி விதையின் பலவித நன்மைகள்.!

 பப்பாளி பழத்தில் பல நன்மைகள் உண்டு. பப்பாளி வயிற்றுக்கு சிறந்த பழம் என கூறலாம். இந்த பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் செரிமானத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. பழம் மட்டுமல்லாது அதன் விதைகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த விதைகள் மோசமான செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுவது மட்டுமல்லாது நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடும் பண்புகளும் அடங்கியுள்ளது.

நார்ச்சத்து நிறைந்த பப்பாளி விதைகளில் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்துகிறது அதுமட்டுமல்லாமல் ஹெல்த்லைன் செய்தியின்படி, பப்பாளி விதைகளில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளும் இருக்கலாம் என தெரிவித்துள்ளது பப்பாளியில் என்னென்ன பலன்கள் இருக்கிறது என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

சத்து நிறைந்தது : பப்பாளி பழத்தில் சத்து மட்டுமின்றி அதன் விதைகளும் பல மருத்துவ குணங்கள் நிறைந்தது. ஊட்டச்சத்து நிறைந்த பப்பாளி விதைகளில் பாலிபினால்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளன. இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. இந்த விதைகளில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களும் உள்ளதால் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். மேலும் பப்பாளி விதைகளில் நார்ச்சத்து நிரைந்துள்ளது.

நோய்த்தொற்று தடுப்பு  : பப்பாளி விதைகளில் உடலில் ஏற்படும் தொற்றுகளுக்கு எதிராக போராடி அவற்றைத் தடுக்க உதவும் பண்புகள் உள்ளது. சிறப்பு வகை பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணிகளை அழிக்க பப்பாளி விதைகள் உதவிகரமாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இருப்பினும், இது தொடர்பாக மேலும் சில ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சிறுநீரக செயல்பாட்டைப் பாதுகாத்தல் : நல்ல ஆரோக்கியத்தை பராமரிப்பதில் சிறுநீரகங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. உடலில் உள்ள அதிகப்படியான திரவம் மற்றும் கழிவுகளை வெளியேற்றும் வேலையை சிறுநீரகம் செய்கிறது. பப்பாளி விதைகளை சாப்பிடுவது சிறுநீரக செயல்பாடு மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இருப்பினும், இது குறித்து மேலும் சில ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் : பப்பாளி விதையில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. சில ஆய்வுகளில் பப்பாளி விதையில் புற்றுநோயை தடுக்கும் பண்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. பப்பாளி விதைகளை உட்கொள்வது உடலுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும். டெஸ்ட் டியூப் கொண்டு செய்யப்பட்ட ஓர் ஆய்வில் பப்பாளி விதைகள் வீக்கம் மற்றும் புற்றுநோய் வளர்ச்சியிலிருந்து பாதுகாக்க உதவுகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip