Search

மழைக்காலத்தில் இந்தியாவிற்குள் செல்லக்கூடிய பாதுகாப்பான சுற்றுலா தளங்கள்!

 இந்தியாவில் பல்வேறு விதமான நிலப்பரப்புகள் உள்ளன. ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்ற இடங்களைத் தேடி அங்கு பயணம் செய்யலாம். வெளிக்காலத்தில் செல்லவேண்டிய இடங்கள், பனி பொழியும்போது செல்லவேண்டிய இடங்கள், சாரல்களை ரசிக்கவேண்டிய இடங்கள் என்று நிறைய உள்ளது.

மழை காலம் கடந்த ஜூனில் தொடங்கி இப்பொது இந்தியாவின் வடக்கு பகுதியில் மழை கொட்டித் தீர்த்துக்கொண்டு இருக்கிறது. குலு, மணாலி போன்ற ஹிமாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு  பகுதிகளில் நிலச்சரிவுகள், வெள்ளம் சூழ்ந்த வருகிறது. இது போன்ற மழை காலத்தில் செல்லக்கூடிய பாதுகாப்பான சுற்றுலா தளங்களை பற்றி தான் இப்போது சொல்ல இருக்கிறோம்.

ஷில்லாங், மேகாலயா: மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங் "கிழக்கின் ஸ்காட்லாந்து" என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது ஸ்காட்டிஷ் ஹைலேண்ட்ஸை ஒத்திருக்கிறது. மழைக்காலத்தில், இந்த அழகிய மலைவாசஸ்தலம் நிறைய மழையைப் பெறுகிறது, இதன் விளைவாக ஏராளமான நீர்வீழ்ச்சிகள், பசுமையான புல்வெளிகள் மற்றும் சுத்தமான ஏரிகள் உள்ளன. வெள்ளம் வெறும் அபாயங்கள் இங்கு பெரிதாக இல்லை.

பூக்களின் பள்ளத்தாக்கு, உத்தரகாண்ட் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான உத்தரகாண்டில் உள்ள பூக்களின் பள்ளத்தாக்கு, மழைக்காலத்தில் உயிர்ப்புடன் இருக்கிறது.  கர்வால் இமயமலையில் அமைந்துள்ள இந்த வண்ணமயமான பள்ளத்தாக்கில் ஏராளமான பசுமையான புல்வெளிகளுக்கு மத்தியில்  பூத்துக் குலுங்கும் ஆல்பைன் மலர்கள் கண்களுக்கும் ஆன்மாவுக்கும் விருந்தாக இருக்கும். பனி மூடிய சிகரங்கள் மற்றும் பாய்ந்து செல்லும் நீரோடைகள் நிறைந்த இடத்தை பார்க்க = ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் சிறந்த நேரம்.

மூணாறு, கேரள பகுதியில்  மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள இது மழைக்காலத்தில் பசுமையான புகலிடமாக மாறும். தென்மேற்கு பருவக்காற்று வீசும் நேரத்தில் மூடுபனி மூடிய மலைகள், தேயிலைத் தோட்டங்கள், மற்றும் நீர்வீழ்ச்சிகள் ஆகியவை நிரம்பிய  மயக்கும் நிலப்பரப்பாக மாறுகிறது.

கூர்க், கர்நாடகா "இந்தியாவின் ஸ்காட்லாந்து" என்று அழைக்கப்படும் கூர்க், கர்நாடகாவில் அமைந்துள்ள மற்றொரு பருவமழைத் தலமாகும். மழை சாரலுக்கு நடுவே ட்ரெக்கிங் செல்வது, பெருக்கெடுக்கும் காவிரி பார்ப்பது, சாகச பயணங்கள் செய்வது என்று பலவற்றை செய்யலாம், சாரல் வீசும்  மலை உச்சிகளில் கேம்பிங் கூட செய்யலாம்.

சிரபுஞ்சி, மேகாலயா : உலகின் மிக அதிக மழைப்பொழிவு இருக்கும் இடங்களில் மேகாலயாவின் சிரபுஞ்சியம் உள்ளது. இது பூமியின் ஈரமான இடம் என்று அழைக்கப்படுகிறது. அதன் எண்ணற்ற நீர்வீழ்ச்சிகள், வாழும் ரூட் பாலங்கள் மற்றும் அழகிய  இயற்கைக்காட்சிகளுடன், மழைக்காலம் இந்த பகுதியின் உண்மையான சிறப்பை வெளிப்படுத்துகிறது. அதிக மழை பெய்தாலும், பருவமழையின் விளைவுகளைச் சமாளிக்க சமூகத்தின் உள்கட்டமைப்பு தயாராக இருப்பதால், சிரபுஞ்சி பயணிகளுக்கு பாதுகாப்பானது.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

மன அழுத்தத்தை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது எப்படி?

 இன்றைய நவீன யுகத்தில் ஒவ்வொருவரும் தனக்கான கடமைகளை செய்து முடிக்கவும், தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யவும் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் பொறுப்புகள் இருந்தாலுமே எந்த அளவிற்கு தங்களது கடமைகளில் கவனம் செலுத்துகிறோமோ அதே அளவிற்கு நம்முடைய உடல் நலத்தின் மீதும் அதிக அக்கறை செலுத்த வேண்டியது அவசியமாகிறது.

உடலை நன்றாக பேணி பாதுகாத்து, தேவையான நேரத்தில் ஓய்வு கொடுத்து, தேவையற்ற மன அழுத்தங்களை தவிர்த்து வந்தாலே நம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளை நம்மால் தவிர்க்க முடியும். ஆனால் இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் இவை அனைவருக்கும் சாத்தியமற்றதாகும்.

சமீபத்தில் கிடைத்த ஆய்வுகளின் அடிப்படையில் மன அழுத்தத்தினால் ஒருவருக்கு இதய கோளாறுகள், அதிக ரத்த அழுத்தம், உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்புக்களின் அளவு குறைதல், உடல் பருமனுக்கான உணர்திறன் அதிகரித்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.எனவே ஒருவர் தன்னுடைய இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டுமெனில் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் காரணிகளை கண்டறிந்து அவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும்.இதற்கு சில வழிமுறைகளை பின்பற்றினாலே போதுமானது. தினசரி வாழ்வில் எவ்வாறு மன அழுத்தத்தை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது என்பதை பற்றி இப்போது பார்ப்போம்.

சுய அக்கறைக்கு முன்னுரிமை: ஒருவர் எப்போதுமே தன்னுடைய உடல் நலனிற்கும் மனநலத்திற்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். மற்றவர்களுக்காக இல்லாமல் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயங்களை செய்வது, மனதை ரிலாக்ஸாக வைத்திருக்க முயற்சி செய்வது, உங்களை அமைதிப்படுத்தும் சூழ்நிலையில் இருப்பது ஆகியவற்றை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். முடிந்த அளவு இயற்கையோடு நேரம் செலவிடுவது, தியானம், நல்ல புத்தகங்களை படிப்பது ஆகியவை ஒட்டுமொத்தமாக மன அழுத்தத்தை குறைக்க உதவும்.

ஆரோக்கியமான உறவு: எப்போதும் நமக்கு மிகவும் பிடித்தவர்களோடும் அன்பானவர்களோடும் இருக்கும் போது மன அழுத்தம் இருந்தாலும் கூட அவை மிக எளிதில் குறைந்து விடும். முடிந்த அளவு உங்களுக்கு பிடித்தவரோடும், யாரோடு இருந்தால் மகிழ்ச்சியாக இருப்பீர்களோ, யார் உங்களை ஊக்கப்படுத்தியும் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்களோ அவர்களோடு இருக்க முயற்சி செய்யுங்கள். இது மன அழுத்தத்தை குறைத்து இதய சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை மெதுவாக குறைக்கும்.

மன அழுத்த மேலாண்மை உத்திகள்: இணையத்தில் மன அழுத்தத்தை எவ்வாறு குறைப்பது என்பதை விவரிக்கும் பல்வேறுவித வழிமுறைகள் கொட்டி கிடைக்கின்றன. அதில் உங்களுக்கு ஏற்ற ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். ஆழ்ந்த சுவாசப் பயிற்சி, தசைகளை ரிலாக்ஸாக வைத்துக் கொள்வது, யோகாசனம் செய்வது, நடைப்பயிற்சி ஆகியவை பொதுவாக மன அழுத்தத்தை குறைக்கவும் மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் பின்பற்றப்படும் வழிமுறைகள் ஆகும்:

நிம்மதியான உறக்கம்: தூக்கம் என்பது ஒருவரின் மனதிற்கும் உடலுக்கும் மிகவும் முக்கியமான ஒன்றாகும். தூங்குவதற்கு சரியான நேர மேலாண்மையை பின்பற்றுவது, தூங்குவதற்கு ஏற்ற சூழ்நிலையை உண்டாக்கிக் கொள்வது, தூங்குவதற்கு முன் மொபைல் மற்றும் கணினி ஆகியவற்றை பயன்படுத்துவதை தவிர்ப்பது ஆகியவை ஆரோக்கிய உறக்கத்திற்கு வழிவகுக்கும். ஒருவர் தினசரி ஆரோக்கியமான உறக்கத்தை மேற்கொள்ளும் போது மன அழுத்தம் குறைவது மட்டுமல்லாமல் அவரது இதயத்தின் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

வாழ்க்கை முறையை மாற்றி அமைத்து கொள்ள வேண்டும்: இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாமல் ஒருவர் தப்பிக்க வேண்டுமெனில், முடிந்த அளவு இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் வகையில் தனது வாழ்க்கை முறையை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். சத்துக்கள் அதிகம் நிறைந்த பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வது, காய்கறிகள், தானியங்கள், குறைந்த அளவு உப்பு மற்றும் சர்க்கரை ஆகியவை இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். மேலும் நீச்சல் அடிப்பது, சைக்கிள் ஓட்டுவது, நடனம் ஆகியவையும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. லேசான அளவில் உடற்பயிற்சி செய்யும் போது செய்வதினால் இதயத்தின் ஆரோக்கியம் மேம்படும்..

இவை அனைத்தையும் தாண்டி உங்களால் மன அழுத்தத்தை சமாளிக்க முடியவில்லை என்ற உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

இந்த 5 பொருட்களை உங்கள் உணவில் சேர்த்தாலே போதும்... மழைக்கால நோய்களை பற்றி கவலை வேண்டாம்...

 நாடு முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் பருவ வெளுத்து வாங்கி வருகிறது. கோடை வெயில் கொளுத்தி எடுத்த நிலையில் தற்போது பெய்து வரும் தொடர் மழை பலருக்கு மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்தி இருக்கிறது. சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து நிவாரணம் அளித்தாலும் இந்த பருவமழையானது, மழைக்கால நோய்களையும் கூடவே கொண்டு வருகிறது. பருவமழையானது சளி, காய்ச்சல், டெங்கு, காலரா, மலேரியா போன்ற பல நோய்கள் ஏற்பட வழிவகுக்கும்.

இது போன்ற பருவகால தீவிர நோய்கள் நம்மை மற்றும் நம் குழந்தைகளை பாதிக்காமல் தற்காத்து கொள்ள சில அடிப்படை தடுப்பு நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும். நம்முடைய பாரம்பரிய மருத்துவ முறையான ஆயுர்வேதம் பல முக்கிய நோய்கள் மற்றும் தொற்றுகளுக்கு எதிர்க்க நம்மை பாதுகாத்து கொள்ள சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் உதவுகிறது. பிரபல ஊட்டச்சத்து நிபுணரான லோவ்னீத் பத்ரா, மழைக்கால நோய்களைத் தடுக்க சில ஆயுர்வேத மூலிகைகளின் பட்டியலை தனது சமீபத்திய இன்ஸ்டா போஸ்ட் ஒன்றில் ஷேர் செய்திருக்கிறார்.

இந்த போஸ்ட்டிற்கு " பருவமழை முழு வீச்சில் பெரிது வருகிறது. மழைக்காலங்களில் நம் டயட்டில் இயற்கையான மூலிகைகளை சேர்த்து கொள்ள வேண்டிய நேரம் இது. உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இது உதவும்" என கேப்ஷன் கொடுத்து உள்ளார். மழைக்கால நோய்களை தடுக்கும் ஆயுர்வேத மூலிகைகளின் பட்டியல் இங்கே...

அஷ்வகந்தா: இது பல மருத்துவ குணங்கள் கொண்ட அற்புத மூலிகையாகும். இது மன அழுத்தம், சோர்வு, வலி மற்றும் கவலை உள்ளிட்டவற்றை குறைக்கும் சக்தி வாய்ந்த ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. தவிர இந்த மூலிகையில் இருக்கும் immune-modulating பண்புகள் நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவும். அஷ்வகந்தாவை ஒரு சப்ளிமென்ட்டாக எடுத்து கொள்வது மழைக்காலத்தில் நம் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும். இது சோர்வு, ஜலதோஷம் போன்ற பிற பருவகால நோய்களை விரட்டும்.

வேப்பிலை: வேப்பிலையில் உள்ள நிம்பிடின் (Nimbidin) மற்றும் நிம்போலைடு (Nimbolide) ஆகியவை பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கின்றன. மழைக்காலத்தில் வேம்பு டீ குடிப்பது அல்லது வேப்ப இலைகளை மென்று சாப்பிடுவது நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். இதிலிருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், கிருமி நாசினிகள், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளிட்டவை நம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.

லெமன் கிராஸ் : எலுமிச்சை புல் அலல்து வாசனை புல் என லெமன் கிராஸ் குறிப்பிடப்படுகிறது. இது வலி மற்றும் வீக்கத்திலிருந்து நிவாரணம், கொலஸ்ட்ரால் லெவலை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. Journal of Agriculture and Food Chemistry இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில், லெமன் கிராஸில் பல ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்கள் உள்ளன. இவை நம் உடலில் இருக்கும் நோயை உண்டாக்க கூடிய ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களை அகற்ற உதவுகின்றன. லெமன்கிராஸ் டீ அல்லது சூப்பில் இதனை சேர்த்து கொள்வது நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி, மழைக்கால நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுவதாக நிபுணர் லோவ்னீத் கூறுகிறார்.

சீந்தில்: Giloy என குறிப்பிடப்படும் இதய வடிவில் இருக்கும் சீந்தில், ஆயுர்வேதத்தில் இன்றியமையாத மூலிகையாகும். இது சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்களின் மூலமாகும். எனவே இந்த மூலிகை உடலில் இருந்தும் சருமத்தில் இருந்தும் நச்சுகளை வெளியேற்ற, சரும அமைப்பை மேம்படுத்த உதவுகிறது. தவிர இது காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க, ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த மற்றும் செரிமானத்தை மேம்படுத்தவும் பயனுள்ளதாக இருக்கிறது. சீந்திலை டிகாஷனாகவோ அல்லது பவுடர் வடிவிலோ எடுத்து கொள்வது மழைக்காலத்தில் நம் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த உதவும்.

இஞ்சி: இஞ்சியில் காணப்படும் முக்கிய பயோஆக்டிவ் உட்பொருளான Gingerol அழற்சி எதிர்ப்பு, ஆன்டிவைரல், ஆன்டிட்யூமர், ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டிபாக்டீரியல் என பலவற்றை கொண்டிருக்கிறது. தவிர டயட்டில் இஞ்சி சேர்த்து கொள்வது மலச்சிக்கல் மற்றும் அழற்சி, வாயு போன்ற பிற சிக்கல்களை குறைக்கும். இஞ்சியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் அதிகம் உள்ளன. மழைக்காலத்தில் இஞ்சி டீ குடிப்பது அல்லது சூப்கள், ஸ்டவ்ஸ் அல்லது ஸ்டிர்-ஃப்ரைஸ் உள்ளிட்டவற்றில் இஞ்சி சேர்ப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் என்கிறார் லோவ்னீத்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்குமோ என சந்தேகமாக உள்ளதா..? இந்த அறிகுறிகளை கவனியுங்கள்..!

 ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் பொழுது நீரிழிவு நோய் அபாயம் ஏற்படுகிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருந்துகள், உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு உள்ளிட்டவை மூலம் ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸ் அளவை கட்டுபாட்டில் வைத்திருக்க வேண்டும். நீரிழிவு ஏற்படுவதற்கான ஒரு சில அறிகுறிகள் இருக்கிறது. அதே போல நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் என்னதான் உணவு கட்டுப்பாடு மருந்துகள் என்று சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க முயற்சித்தாலும் ஒரு சில நேரங்களில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கலாம். நீரிழிவு நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கிறது என்பதை பின்வரும் ஐந்து அறிகுறிகளின் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

மந்தமாக உணர்வது : எவ்வளவு விழிப்போடு சுறுசுறுப்பாக இருக்க முயற்சித்தாலும் சாதாரண விஷயம் கூட சரியாக புரிந்து கொள்ள முடியாமல், ஏனோ தானோவென்று மந்தமாக இருப்பது ஒரு அறிகுறியாகும். ஆங்கிலத்தில் இதை brain fog என்று குறிப்பிடுவார்கள். எதுவும் சரியாக தோன்றாத ஒரு குழப்பமான மனநிலையை, சோர்வான மனநிலையை இது குறிக்கிறது. ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிப்பதால் மூளைக்கு சிக்னல்களை எடுத்து செல்லும் நியூரோ டிரான்ஸ்மிட்டர்களில் இது தாக்கத்தை எற்படுத்துகிறது. இதனால் ரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு, ரத்த ஓட்டத்தில் குறைபாடு ஏற்படுவதால், மூளை மந்தமாகி இந்த அறிகுறி தோன்றுகிறது.

நீண்ட நேரம் பசி : ரத்தத்தில் சர்க்கரை அளவு ஏற்ற இறக்கமாக இருப்பதால் எப்போதும் பசித்துக்கொண்டே இருப்பது போன்ற உணர்வு நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும். அதிகமான இன்சுலின், ரத்தத்தில் உயரும் குளுக்கோஸ் அளவு இரண்டுமே பசி சார்ந்த ஹார்மோனை பாதிக்கும். இதனால்தான் நீரிழிவு நோயாளிகளை பொதுவாகவே உணவுகளை பிரித்து, நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

எக்சீமா என்ற தோல் பிரச்சனை : எக்ஸிமா என்பது ஒரு தோல் நோயாகும். நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு தொடர்ந்து அதிகமாக இருந்தால் அதாவது சர்க்கரை அளவை அவர்களால் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியவில்லை என்றால் அது தொழில் சின்ன சின்ன வெடிப்புகளாகவும் கட்டிகளாகவும் வெளிப்படும். மற்றவர்களை விட, நீரிழிவு நோயாளிகளுக்கு எக்சீமா அதிகம் ஏற்படும் அபாயம் இருக்கிறது.

பெண்களுக்கு முடி உதிர்வு : பெண்களுக்கு நீரிழிவு நோய் பாதிப்பு இருந்து, அவர்களுக்கு ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகமாக இருக்கும் பட்சத்தில் அது டெஸ்டோஸ்டிரோன் அளவையும் அதிகரிக்கும். இதனால் முடி உதிர்வு பிரச்சனையை எதிர்கொள்வார்கள். செல்களுக்கு செல்லும் பொதுவான ரத்த ஓட்டம் குறைவதால், ஆக்சிஜன் ஓட்டமும் குறைகிறது. எனவே, இது முடி வளர்ச்சியை பாதிக்கிறது, முடி உதிர்வை அதிகரிக்கிறது.

படபடக்கும் இதயத்துடிப்பு : திடீரென்று ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தால், அதை குளுக்கோஸ் சர்ஜ் அல்லது கிராஷ் என்று கூறுவார்கள். இதன் காரணமாக இதயம் வேகமாக துடிக்கும். உதாரணமாக, ஹெவியான டின்னர் அல்லது விருந்துக்குப் பிறகு, இதயத்துடிப்பு அதிகரிக்கும். இதைத் தவிர்க்க, அடுத்த வேளை உணவு அல்லது அடுத்த நாள் காலை உணவை குறைவான GI கொண்ட உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

ரத்தத்தில் சர்க்கரை அளவு சரியாக இருப்பதை உறுதி செய்ய எவையெல்லாம் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கும் என்பதைப் பற்றிய சரியான புரிதல் இருக்க வேண்டும். தினமும் சாப்பிடுவதற்கு முன்பு சர்க்கரை அளவை பரிசோதித்து பார்க்க வேண்டும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

பாலுடன் இந்த 5 உணவுகளை ஒரு போதும் சேர்த்து சாப்பிடாதீங்க.. மீறினால் ஆபத்து..!

 பால் ஒரு முழு உணவு அதை தினமும் எடுத்துக்கொள்வது நல்லது என்றாலும்,  வெறும் பால் குடிப்பது என்பது நம்மில் பெரும்பாலோருக்கு பிடிக்காத  ஒன்றாக இருக்கும். பாலோடு டீ, காபி, அல்லது வேறு சுவை சேர்க்கும் எதாவது ஒன்றை கலந்து தான் குடிப்போம். ஆனால் பாலுடன் நீங்கள் சேர்க்கக் கூடாத சில உணவுகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? இப்போது தெரிந்துகொள்ளுங்க..

இயற்கையாகவே புரோட்டீன் அளவை அதிகரிக்க வாழைப்பழ மில்க் ஷேக் மூலம் சத்தியம் என்பது பலரது கருத்து. ஆனால் இதை சேர்த்து சாப்பிடுவது உங்களது உடலை பாதிக்கலாம். வாழைப்பழத்தை பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் ஜீரணமாக அதிக நேரம் எடுக்கும். வயிற்று பிரச்சனைகள் வரலாம். இந்த இரண்டு புரதச்சத்து நிறைந்த உணவுகளையும் தனித்தனியாக சாப்பிடுவது சிறந்தது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

மீன் மற்றும் பால் என்று இரண்டு வகையான புரதங்களை இணைப்பது ஒரு மோசமான கலவையாகும்.மீன் ஒரு தனித்துவமான சுவை கொண்டது, இது பொதுவாக பாலின் கிரீமி அமைப்புடன் நன்றாக கலக்காது. பாலுடன் மீன் மற்றும் எந்த வகையான இறைச்சியையும் சாப்பிடுவது செரிமான பிரச்சனைகள் மற்றும் கனமான உணர்வுகளுக்கு வழிவகுக்கும்.

புளிப்பு மற்றும் சிட்ரஸ் பழங்கள் அல்லது பொருட்களுடன் பால் கலந்து சாப்பிடுவது  தவிர்க்க வேண்டியது. ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை போன்ற புளிப்பு உணவுகளில் வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் இருப்பதால், பாலுடன் இணைந்தால் உறைந்து அமில வீச்சு, நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு, ஒவ்வாமை, மார்பு நெரிசல் மற்றும் சளி இருமல் ஆகியவை ஏற்படலாம்.

முள்ளங்கி சாப்பிட்ட உடனேயே பால் குடிப்பது உடலில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும், ஏனெனில் முள்ளங்கி உடலுக்கு  வெப்பத்தைத் தருகிறது மற்றும் பாலுடன் சேர்ந்தால் நெஞ்செரிச்சல், அமில ரிஃப்ளக்ஸ் மற்றும் வயிற்று வலியைத் தூண்டும். எனவே, இந்த இரண்டு உணவுகளையும் சாப்பிடுவதற்கு இடையே சில மணிநேர இடைவெளியை வைத்திருப்பது நல்லது.

கடைகளில் முலாம்பழ ஜூஸ் என்று கேட்டால் பல் ஊற்றி தான் அடித்து தருவார்கள் ஆனால் இது உங்கள் உடலுக்கு நகத்தன்மையைக் கொண்டுவரும். முலாம்பழங்களில் டையூரிடிக் பண்புகள் இருப்பதால், பாலில் உள்ள மலமிளக்கிகள் மற்றும் கொழுப்புகளுடன் இணைந்தால், அமைப்பில் நச்சுகள் உருவாகும். ஒவ்வாமையைத் தூண்டுவதோடு வயிற்றுப்போக்கையும் ஏற்படுத்தும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

Anxiety Disorders: பதறிய காரியம் சிதறும்.. ப்ளீஸ் வேண்டாம் அதிக பதற்றம் ஆகாது மக்களே!

heal 

கவலையில் இருக்கும் போது மனம் முழுமையை நாடுகிறது ஆனால் ஆர்வம் இல்லாமல் இருக்கும். இதனால் நிறைய நேரம் வீணாகிறது. ஒரு பணியில் எவ்வளவு நேரம் செலவிடுகிறோமோ, அந்த அளவுக்கு நம்மை நாமே விமர்சிக்கிறோம். இது ஆற்றல் விரயமாவது மட்டுமின்றி உற்பத்தித்திறனையும் பாதிக்கிறது.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதோ ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு விதத்தில் கவலை ஏற்படுவது இயல்பு. ஆனால், இந்த கவலை உங்கள் சக்தியையும் விலைமதிப்பற்ற நேரத்தையும் வீணாக்குகிறது. மேலும் உங்கள் உடல்நலத்தையும் பாதிக்கம் அபாயம் உள்ளது.

இன்று இயந்திர உலகில் பலர் எதிர்கொள்ளும் பொதுவான மனப் பிரச்சனைகளில் ஒன்று கவலை. சில சமயங்களில் நீங்கள் கவலைப்படுவதற்கான காரணங்கள் கூட உங்களுக்குத் தெரியாது. ஆனால், இந்த சூழ்நிலையிலிருந்து வெளியேறுவது மிகவும் முக்கியம். உங்கள் அச்சங்களில் கவனம் செலுத்த வேண்டும். நினைவாற்றல், மன அழுத்த மேலாண்மை, போன்ற பிரச்சனையின் போது நிபுணர் ஆலோசனை மூலம் கவலையிலிருந்து விடுபட முயற்சிக்க வேண்டும்

அதிக சிந்தனை: மன அழுத்த சூழ்நிலைகளை அதிகமாகப் பகுப்பாய்வு செய்வதும், அதிகமாகச் சிந்திப்பதும் மனதை சோர்வடையச் செய்யும். மேலும், இது நமது சக்தி மற்றும் நேரத்தை வீணடிக்கிறது. அதிக கவலை முடிவுகளை எடுப்பதில் பெரும் சிரமத்திற்கு வழிவகுக்கிறது.

குழப்பமான நிபந்தனை: சிலர் அதிக கவலையுடன் இருக்கும் போது, ​​வீட்டுப் பூட்டுகள், உபகரணங்கள், மின்னஞ்சல்கள், செய்திகள் போன்றவற்றைத் திரும்பத் திரும்பச் சரிபார்ப்பதைக் காணலாம். தேவையில்லாமல் குழப்பம் அடைவீர்கள். அது உங்கள் நேரத்தை வீணடிக்கும்.

தள்ளிப்போடுதல்: கவலை சில நேரங்களில் தவிர்க்கும் நடத்தையை ஊக்குவிக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் வேலையில் ஆர்வமில்லாமல் இருப்பார்கள் அல்லது தள்ளிப்போடுவார்கள். இதனால் காலக்கெடு நெருங்கும்போது மன அழுத்தமும் அதிகரிக்கிறது.

பரிபூரணம்: கவலையில் இருக்கும் போது மனம் முழுமையை நாடுகிறது ஆனால் ஆர்வம் இல்லாமல் இருக்கும். இதனால் நிறைய நேரம் வீணாகிறது. ஒரு பணியில் எவ்வளவு நேரம் செலவிடுகிறோமோ, அந்த அளவுக்கு நம்மை நாமே விமர்சிக்கிறோம். இது ஆற்றல் விரயமாவது மட்டுமின்றி உற்பத்தித்திறனையும் பாதிக்கிறது.

உங்கள் கவலை உங்கள் தனிப்பட்ட வளர்ச்சியைத் தடுக்கலாம். இது உங்களுக்கு வாய்ப்புகளை இழக்க வழிவகுக்கிறது, அத்துடன் சமூக மற்றும் தொழில் வளர்ச்சியைத் தடுக்கிறது. எனவே எப்பொழுதும் கவலைப்படாமல் எதிலும் நிதானமாக இருக்க முயற்சி செய்யுங்கள்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

Weight Loss: ஊளைச்சதையை விரைவில் குறைக்கும் துடிப்பான உடற்பயிற்சிகள்

 

ஊளைச்சதையை விரைவில் குறைக்கும் துடிப்பான உடற்பயிற்சிகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

தொப்பை கொழுப்பைக் குறைக்க, நீங்கள் உட்கொள்ளும் கலோரிகளை குறைக்க வேண்டும் அல்லது ஒவ்வொரு நாளும் நீங்கள் எரிக்கக்கூடிய கலோரிகளின் அளவை மட்டுமே உட்கொள்ள வேண்டும். இதற்கு, நீங்கள் கலோரி உட்கொள்ளல் மற்றும் அதிக கலோரிகளை எரிக்க வழக்கமான உடற்பயிற்சியை தொடர்ந்து சரிபார்க்க வேண்டும்.

தொப்பையைக் குறைப்பது என்பது பலரைத் தொந்தரவு செய்யும் பிரச்னை. தொப்பை கொழுப்பு என்பது உங்கள் இடுப்பைச் சுற்றி இருக்கும் கொழுப்பு. அதிகப்படியான தொப்பை கொழுப்பு உங்கள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இது உயர் ரத்த சர்க்கரை, அதிக கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் பல இதய நோய்கள் போன்ற சில தீவிர நோய்களுக்கு வழிவகுக்கும். எனவே, தொப்பை கொழுப்பை கரைக்க வேண்டியது அவசியம்.

தொப்பை கொழுப்பைக் குறைக்க, நீங்கள் உட்கொள்ளும் கலோரிகளை குறைக்க வேண்டும் அல்லது ஒவ்வொரு நாளும் நீங்கள் எரிக்கக்கூடிய கலோரிகளின் அளவை மட்டுமே உட்கொள்ள வேண்டும். இதற்கு, ஆரோக்கியமான சமச்சீரான உணவு, வயிற்று கொழுப்பை வேகமாக கரைக்க பயனுள்ளதாக இருக்கும்.

1. க்ரஞ்சஸ்:

வயிற்று கொழுப்பை எரிக்க மிகவும் பயனுள்ள உடற்பயிற்சி க்ரஞ்சஸ் ஆகும். கொழுப்பை எரிக்கும் பயிற்சிகளைப் பற்றி பேசும்போது க்ரஞ்ச்ஸ் முதலிடம் வகிக்கிறது. உங்கள் முழங்கால்களை வளைத்து, உங்கள் கால்களை தரையில் படும்படி படுத்துக் கொண்டு தொடங்கலாம். உங்கள் கைகளை உயர்த்தி, பின்னர் அவற்றை தலைக்கு பின்னால் வைக்கவும். நீங்கள் அவற்றை மார்பில் குறுக்காக வைத்திருக்கலாம். உங்கள் சுவாச முறையை சரிபார்க்கவும். வயிற்றில் உள்ள கொழுப்பை கரைக்கும் போது வயிற்றை உருவாக்கவும் இந்த உடற்பயிற்சி உதவும்.

2. நடைபயிற்சி:

மிகவும் எளிமையான கார்டியோ உடற்பயிற்சி, இது தொப்பை கொழுப்பைக் குறைத்து ஃபிட்டாக இருக்க உதவுகிறது. நீங்கள் கூடுதல் கிலோவைக் குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், சீரான உணவுடன் நடப்பது அதிசயங்களைச் செய்யலாம். புதிய காற்றில் முப்பது நிமிடங்கள் கூட வேகமாக நடப்பது வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பைக் குறைக்க உதவும். கூடுதலாக, இது உங்கள் வளர்சிதை மாற்றம் மற்றும் இதய துடிப்பு ஆகியவற்றில் நேர்மறையான விளைவைக் கொண்டுள்ளது. ஓடுவது கூட கொழுப்பை எரிப்பதற்கு நன்மை பயக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த பயிற்சிக்கு உங்களுக்கு எந்த உபகரணமும் தேவையில்லை. இது உடலின் மற்ற பகுதிகளில் உள்ள கொழுப்பை வெளியேற்றவும் உதவுகிறது.

3. ஜூம்பா:

உடற்பயிற்சிகள் ஒரு தண்டனை அல்ல, எனவே சில வேடிக்கையான உடற்பயிற்சிகளும் உங்கள் ஆரோக்கியத்திற்கு அதிசயங்களைச் செய்யலாம். ஜூம்பா உடற்பயிற்சிகள் அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சி ஆகும். இது மேம்பட்ட இருதய ஆரோக்கியத்திற்கும், கொழுப்பைக் குறைப்பதற்கும், இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதற்கும், தொப்பை கொழுப்பை விரைவாகக் கரைப்பதற்கும் உதவுகிறது. எனவே, கொஞ்சம் இசையை கேட்டபடி இப்போதே ஜூம்பா வொர்க்அவுட்டைத் தொடங்குங்கள்!

4. செங்குத்து கால் பயிற்சிகள்:

கால்களை உயர்த்துவது உங்கள் வயிறு மற்றும் சாய்ந்த பகுதிகளுக்கு சிறந்தது. இது வலுவான வயிற்றை உருவாக்கவும், நிலைத்தன்மை மற்றும் வலிமையை அதிகரிக்கவும், தொப்பை கொழுப்பை கரைக்கவும், உங்கள் உடலை தொனிக்கவும் உதவுகிறது. கால்களை உயர்த்துவது மலக்குடல் வயிற்று தசையை முற்றிலும் தனிமைப்படுத்துகிறது, இது உங்கள் வயிற்றை டன் செய்ய உதவுகிறது. உங்கள் உள்ளங்கைகளை உங்கள் இடுப்புக்கு கீழே வைத்து உங்கள் முதுகில் படுத்துக் கொள்ளுங்கள். பின்னர் மெதுவாக உங்கள் கால்களை 90 டிகிரி கோணத்தில் உயர்த்தவும். உங்கள் முழங்கால்களை நேராகவும், கால்களை கூரையை சுட்டிக்காட்டவும் வைக்கவும். ஒரு கணம் இடைநிறுத்தி, மூச்சை வெளியேற்றும் போது உங்கள் கால்களை கீழே இறக்கவும். இந்த சூப்பர் பயனுள்ள பயிற்சியை விரைந்து முயற்சிக்கவும்!

5. சைக்கிள் ஓட்டுதல்:

வயிற்று கொழுப்பை எரிக்க சைக்கிள் ஓட்டுதல் ஒரு சிறந்த வழியாகும். சைக்கிள் ஓட்டுதல் உங்கள் இதயத் துடிப்பை அதிகரிக்க உதவுகிறது மற்றும் கணிசமான எண்ணிக்கையிலான கலோரிகளை எரிக்கும் திறனையும் கொண்டுள்ளது. சைக்கிள் ஓட்டுதல் உங்கள் தொடைகள் மற்றும் இடுப்பில் எடை குறைக்க உதவுகிறது. எனவே அருகிலுள்ள இடங்களுக்கு உங்கள் பைக்குடன் பயணிக்கத் தொடங்குங்கள். தவறாமல் இருங்கள் மற்றும் இந்த உடற்பயிற்சி தொப்பை கொழுப்பைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

6. ஏரோபிக்ஸ்:

நீங்கள் ஜிம்முக்குச் செல்லாமல் தொப்பையைக் குறைக்க விரும்பினால், நீங்கள் அதிக தீவிரம் கொண்ட ஏரோபிக் உடற்பயிற்சிகளை செய்யலாம். இந்த உடற்பயிற்சிகள் பயனுள்ளவை, எளிமையானவை, வேடிக்கையானவை மற்றும் அதிகபட்ச கலோரிகளை எரிப்பதற்கு சிறந்தவை.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip


Harmful Diet: உங்கள் உடல் ஆரோக்கியத்தை மோசமாக்கும் 3 டயட்கள்

 

உங்கள் உடல் ஆரோக்கியத்தை மோசமாக்கும் 3 டயட்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்ற தேடலில், நாம் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் பல போக்குகள் மற்றும் உதவிக்குறிப்புகளை அடிக்கடி சந்திக்கிறோம். இருப்பினும், நாம் கேட்கும் மற்றும் படிக்கும் அனைத்தும் உண்மையில் நம் ஆரோக்கியத்துக்கு பயனுள்ளதாக இல்லை என்பதை நினைவில் கொள்வது அவசியம்.

நல்ல ஆரோக்கியத்தை அடைவதற்கும் பராமரிப்பதற்கும் சரியான ஊட்டச்சத்தை மையமாகக் கொண்ட ஒரு சமநிலையான அணுகுமுறை தேவைப்படுகிறது. ஊட்டச்சத்து நிபுணர் சூர்யா மாணிக்கவேல் சமீபத்தில் ஒரு இன்ஸ்டாகிராம் ரீல் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். வீடியோவில், அவர் மூன்று வெவ்வேறு உணவு சுகாதார கெடுதல்கள் பற்றி பேசினார். அவை:

1. நிறைய பழங்கள் சாப்பிடுவது நல்லதல்ல

ஒரே நேரத்தில் 100 கிராமுக்கு மேல் பழங்களை உட்கொள்வது சர்க்கரையின் அளவை விரைவாக அதிகரிக்க வழிவகுக்கும். பழங்கள் சத்தானவை என்றாலும், நீங்கள் உட்கொள்ளும் அளவைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அதிகப்படியான பழங்கள் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், பிடிவாதமான எடை, அதிக இன்சுலின் தேவை அல்லது சினைக்குழாய் நீர்க்கட்டிகள் போன்ற பிரச்னைகளை தூண்டி விடும். நீங்கள் வழக்கமான தீவிர உடற்பயிற்சிகளில் ஈடுபடாவிட்டால் அல்லது அதிக சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை வழிநடத்தாவிட்டால், தேவையானதை விட அதிகமான பழங்களை உட்கொள்வது அதிகப்படியான சர்க்கரையை வழங்கக்கூடும். பழ உட்கொள்ளல் மற்றும் உங்கள் தினசரி ஆற்றல் செலவினங்களுக்கு இடையே சரியான சமநிலையைக் கண்டறிவது முக்கியம்.

2. முகப்பரு உள்ள சருமத்துக்கு பால் நல்லதல்ல

பல நபர்களுக்கு, பால் அருந்துவதால் அதிக முகப்பருக்கள் ஏற்படும். கலக்கவில்லை. பால் பொருட்களில் உள்ள வளர்ச்சி ஹார்மோன்கள் வீக்கம், அடைபட்ட துளைகள் மற்றும் முகப்பரு வெடிப்புகளுக்கு வழிவகுக்கும். பால் நுகர்வு குறைப்பது, குறிப்பாக செயற்கை ஹார்மோன்கள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் கொண்ட தயாரிப்புகள், முகப்பருவுக்கு பங்களிக்கும் குடல் பிரச்சினைகளைப் போக்க உதவும்.

3. ஜீரோ கொழுப்பு, குறைந்த கொழுப்பு உணவுகளை தவிர்க்கவும்

உண்ணத் தயாராக இருக்கும் உணவுகளில் பெரும்பாலும் ஆரோக்கியமற்ற சேர்க்கைகள் இருக்கும். உணவில் நல்ல கொழுப்புகளைச் சேர்ப்பது ஆரோக்கியமான சருமம், நிலையான இரத்த சர்க்கரை அளவு மற்றும் வலுவான மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தகவலறிந்த தேர்வுகளைச் செய்ய, கொழுப்புகளின் அளவு மற்றும் தரத்துக்கான ஊட்டச்சத்து லேபிள்களைச் சரிபார்க்கவும்.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

Exercise: அடடே இது தெரியாம போச்சே! உடற்பயிற்சி செய்வதால் இவ்வளவு நன்மைகளா?

உடற்பயிற்சி செய்யும் பொழுது நாம் வலிமையாகிறோம். உடற்பயிற்சி செய்யும் பொழுது நமது ரத்த ஓட்டம் அன்றைய நாளில் ஆக்டிவேட் செய்யப்படுகிறது.

வாழ்க்கையில் உங்களுக்கு மூன்று டாக்டர்கள் தான் தேவை.

  1. நல்ல ஊட்டச் சத்தான உணவுகள்.

2. உடற்பயிற்சி.

3. நல்ல தூக்கம்.

இந்த மூன்று டாக்டர்கள் உங்களுடன் இருந்தால் உங்களுக்கு பிரத்யேகமாக எந்த மருத்துவர்களும் தேவைப்படமாட்டார்கள்

அந்த வகையில் இதில் உடற்பயிற்சி என்பது மிக மிக முக்கியமான டாக்டராக இருக்கிறார். முதலில் உடற்பயிற்சி என்றாலே அது எடை குறைப்புக்கானதாக பார்க்கப்படுகிறது. நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள்.. பயிற்சிக்கும் எடை குறைப்புக்கும் மிக மிக சின்ன தொடர்பு தான் இருக்கிறது.

ஆனால் குறைவாக சாப்பிடுவதற்கும் எடை குறைப்புக்கும் பெரிய தொடர்பு இருக்கிறது. முதலில் உடற்பயிற்சியை ஏன் நாம் செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

உடற்பயிற்சி செய்யும் பொழுது நாம் வலிமையாகிறோம். இரண்டாவது உடற்பயிற்சி செய்யும் பொழுது நமது ரத்த ஓட்டம் அன்றைய நாளில் ஆக்டிவேட் செய்யப்படுகிறது. இதயம் வேகமாக துடிக்கும் பொழுது ரத்த ஓட்டம் எல்லா உடல் உறுப்புகளுக்கும் சென்று சேரும்.

நமது உடலில் பயிற்சி செய்யும் பொழுது சில ஹார்மோன்கள் ரிலீஸ் ஆகும். அதே போல உடற்பயிற்சி செய்யும் போது எண்டார்ஃபின் என்ற ஹார்மோன் வெளிப்படும். இது உண்மையில் நமது உடலே நமக்கு தரக்கூடிய வலி மாத்திரை என்று சொல்லலாம். இது நாம் உடற்பயிற்சி செய்யும் போது தான் நமக்கு கிடைக்கிறது.  ஆகவே நாம் உடற்பயிற்சி செய்யும் போது நமக்குத் தேவைப்படுகின்ற வலி மாத்திரைகள் குறைகின்றன. 

உடற்பயிற்சி செய்யும் பொழுது நமது உடலில் உள்ள தசைகள் வளர்கிறது.இந்த வளர்ச்சி நமக்கு வயதானாலும் நம்மை இளமையாக காட்டும். உடற்பயிற்சி செய்யும் பொழுது நமது மூளையில் உள்ள செல்கள் சாகாமல் இருக்கும். ஆகவே உடற்பயிற்சி செய்யுங்கள்!


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

Women Health : எச்சரிக்கை! நீங்கள் உபயோகிக்கும் நாப்கின் அல்லது டாம்பான் காலாவதியானதா? அதில் உள்ள ஆபத்துக்கள் என்ன?

 

Women Health : நீங்கள் அதிகளவிலான சானிட்டரி நாப்கின்கள் அல்லது டாம்பான்களை வாங்கி விட்டீர்களா? அவற்றை பயன்படுத்த முடியவில்லையா? உங்களின் சானிட்டரி பொருட்கள் காலாவதியாகிவிட்டதா? எனில் அவற்றை பயன்படுத்தாமல் இருப்பதே சிறந்தது.

காலாவதியான மாதவிடாய் பொருட்களை பயன்படுத்துவது உங்கள் உடலுக்கு ஆரோக்கிய சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.

சரும பராமரிப்பு அல்லது மேக் அப் பொருட்கள் என எதுவாக இருந்தாலும் காலாவதியாகும் தேதிக்கு முன்னர், உபயேகப்படுத்த வேண்டும். காலாவதியாகிவிட்டால் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். சிலர் அதை உபயோகிப்பார்கள். ஆனால் பக்கவிளைவுகள் ஏற்பட்டு அவதிப்படுவார்கள். 

அதேபோல் சிலர் அதிகளவிலான சானிட்டரி பொருட்களை வாங்கி குவித்துவிடுவார்கள். ஆனால் மாதம் ஒருமுறைதான் மாதவிடாய் வரும். அதுவும் 3 முதல் 5 நாட்களுக்குத்தான் இருக்கும். இது வழக்கமான அளவு. ஆனால், ஒரு சிலருக்கு ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் அதிகம் தேவைப்படும். எனவே அதிகளவு நீங்கள் பயன்படுத்த முடியாது. எனவே நீங்கள் அளவுக்கு அதிகமாக வாங்கி வைத்திருந்தீர்கள் என்றால் அவை காலாவதியாகிவிடும். காலாவதியான மாதவிடாய் பொருட்களை உபயோகிப்பதும் பாதுகாப்பனதல்ல.

மாதவிடாய்க்கு பயன்படுத்தப்படும் சானிடரி நாப்கீன்களும், டாம்பான்களும் 5 ஆண்டுகள் வரை உபயோகப்படுத்தலாம். மென்ஸ்ட்ரூவல் கப்பை கூடுதலாக சில ஆண்டுகள் பயன்படுத்த முடியும். ஆனாலும் மென்ஸ்ட்ரூவல் கப்பை 1 அல்லது 2 ஆண்டுகளில் மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதில் ஓட்டை அல்லது கிழிந்துவிட்டால் உடனடியாக மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே எந்த பொருளுக்கு காலாவதியான தேதியை பார்த்து உபயோகிப்பதுபோல், இதற்கும் அந்த தேதியை பார்த்துவிடுவது நல்லது. 

அவ்வாறு காலாவதியாகும் பொருட்களை நீங்கள் உபயோகித்துக்கொண்டிருந்தால் அது உங்களுக்கு நிச்சயம் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். மேலும் அப்படி காலாவதியானால் அவை முறையாக செயல்படாது. அது மாதவிடாயின்போது கறையை ஆடைகளில் ஏற்படுத்துவதுடன், அசௌகரியமாக இருக்கும். மேலும் காலாவதியான மாதவிடாய் பொருட்களில் குருதி இருக்கும். அதன்மூலம் உங்களுக்கு பாக்டீரியா தொற்றுக்களை அந்தரங்க உறுப்புக்களில் ஏற்படுத்தும்.

காலாவதியான பொருட்களை பயன்படுத்தும்போது அது கட்டியை ஏற்படுத்துகிறது. டாம்பான்களிலும், சானிடரி நாப்கீன்களிலும் உள்ள வேதிப்பொருட்கள் உங்கள் தோல்களில் தடிப்புகளை ஏற்படுத்துகிறது.

பிறப்புறுப்புகளில் இருந்து அசாதாரணமான வெளியேற்றம் இருக்கலாம். அது மாதவிடாய் ரத்தம் அல்லது வெள்ளைபடுதலை அதிகரிக்கலாம். காலாவதியான மாதவிடாய் பொருட்களை உபயோகிக்கும்போது, பூஞ்சை தொற்று ஏற்படலாம். பெண்ணுறுப்பைச்சுற்றி தொற்று ஏற்படுத்தும்.

தோல் அலர்ஜி

தோல்களில் அலர்ஜி ஏற்படுவதும் மற்றொரு ஆபத்து. இதனால் நீங்கள் சரும நிபுணர்களிடம் மருத்துவத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

டாக்சிக் ஷாக் சிண்ட்ரோம்

காலாவதியான டாம்பான்களை உபயோகிக்கும்போது, பாக்டீரியாக்கள் தொற்று உங்கள் ரத்த ஓட்டத்தில் கலந்துவிடுகிறது.

பாத்ரூம்களில் உங்கள் சானிட்டரி பொருட்களை வைக்காதீர்கள். பாத்ரூம்கள் எப்போதும் காயாமல் ஈரத்தன்மையுடனே இருப்பதால் நீங்கள் அந்தரங்க உறுப்புகளில் பயன்படுத்தும் பொருட்களில் பாக்டீரியா உருவாக வழிவகுக்கும். அவற்றை எப்போதும் உலர்வான இடத்தில் வைத்திருங்கள். அவற்றை அதற்கான பாக்கெட்களில் போட்டுவைத்திருங்கள். வேறு எதிலும் அடைத்து வைக்காதீர்கள். கொஞ்சம் காற்றோட்டமாக இருக்கட்டும்.

டாம்பான்களோ சானிட்டரி நாப்கீன்களோ அவற்றை சரியான இடைவெளியில் மாற்றுங்கள், மென்ஸ்ட்ரூவல் கப்களை பயன்படுத்தும்போது அவற்றை நீங்கள் ஒவ்வொரு 3 அல்லது 4 மணி நேரத்திலும் மாற்ற வேண்டிய தேவையில்லை. அதுவே சானிட்டரி நாப்கீன்கள் அல்லது டாம்பான்கள் எனில், அவற்றை ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கும் மாற்றிக்கொண்டேயிருக்க வேண்டும். 

அப்போதுதான் அந்தரங்க உறுப்பில் தொற்றுகளை ஏற்படுத்தாது. மாதவிடாய் துவங்கும்போது, உங்கள் உடல் சூடு மற்றும் ரத்தத்தில் பாக்டீரியா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும். பாக்டீரியா வளர்ந்து உங்கள் உடலில் தேவையற்ற தடிப்பு, அரிப்பு, தோல் எரிச்சல், தொற்று ஆகியவற்றை ஏற்படுத்தும்.

உங்கள் பெண்ணுறுப்பை நன்றாக அலசுங்கள்

மாதவிடாய் காலத்தில் நீங்கள் உபயோகிக்கும் கப், நாப்கின் மற்றும் டாம்பான்களை அகற்றியதும் நன்றாக அந்த இடத்தை கழுவுங்கள். இல்லாவிட்டால் பாக்டீரியா தொற்று ஏற்படும். சூடான நீரில் பெண்ணுறுப்பை கழுவுங்கள், பின்னர் உங்கள் பெண்ணுறுப்பே அதை சுத்தம் செய்துகொள்ளும்.

ஏதேனும் ஒரு முறையை பின்பற்றுங்கள்

திடீரென ஏற்படும் உதிரப்போக்கின்போது நீங்கள் ஏதேனும் ஒரு முறையை மட்டுமே பின்பற்றுங்கள். ஏனெனில் சிலர் மூன்றையும் ஒவ்வொன்றாக முயற்சிப்பார்கள் அல்லது இரண்டு நாப்கீன்கள் வைப்பார்கள். அவ்வாறு வைக்கும்போது, அதிக உதிரப்போக்கால், ஆபத்தான பாக்டீரியாக்கள் உருவாகும். 

எனவே ஒன்றை மட்டும் வைதுதுக்கொண்டு அவ்வப்போது மாற்றிக்கொண்டேயிருங்கள். இந்த டிப்ஸ்களை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். தேவையற்ற பிரச்னைகளை உருவாக்கிக்கொள்ளாதீர்கள்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip