Search

Hr. Sec HM Panel to Submit - DSE Proceedings

 IMG_20240701_205252

மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியுடையோர் பட்டியலை மாவட்ட வாரியாக ஒப்படைக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

 பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி , 01.01.2024 நிலவரப்படி , அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கானத் தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்து 02.06.2024 க்குள் சமர்ப்பிக்க அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் விரிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.


 அதன்படி கோரப்பட்ட விவரங்களை கீழ்கண்டுள்ளவாறு , மாவட்டம் வாரியாக பட்டியலிடப்பட்டுள்ள நாளில் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலக பிரிவு எழுத்தர் வழியாக நேரில் மடிக்கணினியுடன் வருகைபுரிந்து One Hard Copy Signed by CEO and CD Soft Copy  . உடன் W1 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

26054-2024 Hr. Sec HM Panel to Submit - Proceedings👇👇👇

Download here




🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

School Calendar - July 2024

 
2024 ஜூலை மாதம் "ஆசிரியர் டைரி"


01.07.2024 திங்கள் கிழமை

DEE கலந்தாய்வு தொடக்கம்..


06.07.2024 - சனிக்கிழமை

*BEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்


08.07.24 திங்கள் கிழமை

*ஹிஜிரி வருடபிறப்பு- RL

இஸ்லாமியர் புத்தாண்டு


13.07.2024 - சனிக்கிழமை பள்ளி வேலை நாள்

*DEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்*

*இயக்க நிறுவனர்

மாஸ்டர்.வா.இராமுண்ணி பிறந்தநாள்


15.07.2024 - திங்கள் கிழமை

*காமராஜர் பிறந்த நாள் (கல்வி வளர்ச்சி நாள்)_


17.07.2024 - புதன் கிழமை

*மொகரம் பண்டிகை

அரசு விடுமுறை


20.07.2024- சனிக்கிழமை

* CEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்


31.07.2024  புதன் கிழமை

*DEE கலந்தாய்வு முடிவு..


School Calendar - July 2024 Pdf 👇👇👇
Download here


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

INSPIRE AWARD APPLY 2024-25

 INSPIRE AWARD APPLY 2024-25 ACADEMIC YEAR 01-07-24 TO 15-09-24.


The online nominations for 2024-25 , will resume from 01st July , 2024. The schools will be able to submit their online nominations till 15th September , 2024 .

IMG-20240702-WA0004


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

ITK - இல்லம் தேடிக் கல்வி 2.0 இன்று முதல் தொடக்கம்!!!

 

IMG_20240702_111712

இல்லம் தேடிக் கல்வி 2.0


அனைத்து தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு... 


 இல்லம் தேடிக் கல்வி திட்டம், முதல் கட்ட பணிகள் நிறைவடைந்து_ ,  இரண்டாம் கட்ட பணிகள், இன்று முதல் துவங்கப்படுகிறது.


இரண்டாம் கட்டத்தில்bஉயர்தொடக்க நிலை ( Upper Primary)வகுப்புகள் செயல்படாது. 

# நிதி உதவி பெறும் பள்ளிகள் ( Aided schools ) உள்ள குடியிருப்புகளில், மையங்கள் செயல்படாது.


# தொடக்கநிலை வகுப்புகள் மட்டுமே நடைபெறும்.


# ஒரு தன்னார்வலருக்கு 20 மாணவர்கள் என்ற விகிதத்தில் மையங்கள் நடத்தப்படும்.


 முதல் கட்டத்தில் பணிபுரிந்த தன்னார்வலர்களில், அவரவர் ITK Appல் ,  பதிவு செய்த, மைய செயல்பாட்டு அறிக்கையின் அடிப்படையிலும், _கடந்த மாதங்களில் ITK Appல்_ , மாணவர்கள் வருகையை பதிவு செய்ததன் அடிப்படையிலும்,

சிறப்பாக செயல்பட்ட தன்னார்வலர்களுக்கு மட்டும், _இரண்டாம் கட்டத்தில் பணிபுரிய_ , மாநில தலைமை மூலம் வாய்ப்பு வழங்கப்படுகிறது.


 தொடக்கநிலை வகுப்புகள் மட்டுமே செயல்பட உள்ள நிலையில், இன்று ( 02.07.2024 ) மாலை , உங்கள் பள்ளிக்குட்பட்ட, குடியிருப்புகளில், இல்லம் தேடி கல்வி மையங்கள் தொடங்கப்பட வேண்டும்.


 தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தன்னார்வலர்களின்  பட்டியல், உங்களுக்கு விரைவில் அனுப்பப்படும்.


 அந்த தன்னார்வலர்களுக்கு மட்டும், தகவல் தெரிவித்து, இன்று மையங்களை  துவங்கிடுமாறு தகவல் தெரிவிக்கப்படுகிறது.


 ஒரு சில குடியிருப்புகள் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.


 அந்த குடியிருப்புகளுக்கு, விரைவில் மையங்கள் அறிவிக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 உங்கள் பள்ளிக்குட்பட்ட குடியிருப்புகளில் உள்ள, அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் , மையங்களின் எண்ணிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.


# சிறப்பாக செயல்பட்ட உயர்தொடக்க நிலை தன்னார்வலர்களும், இரண்டாம் கட்டத்தில் ( 2.0 ) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் பெயர்களும் பட்டியலில் உள்ளதால், இன்று முதல் அவர்கள், தொடக்க நிலை மையங்களை நடத்துவார்கள்.



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

பொதுத்துறை வங்கிகளில் 665 காலி பணியிடங்கள்... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழுவிவரம் இதோ

பொதுத்துறை வங்கிகளில், தமிழ்நாட்டில் காலியாக உள்ள 665 கிளர்க் பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள எஸ்பிஐ தவிர்த்த 11 பொதுத்துறை வங்கிகளுக்கான காலி பணியிடங்கள் IBPS நடத்தும் தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில், நடப்பாண்டு 11 பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள கிளர்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பொதுத்துறை வங்கிகளில் எழுத்தர் பணிக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது 2025 - 2026ஆம் ஆண்டுக்கான பணியிடங்களை நிரப்ப தேர்வு நடைபெறவுள்ளது.

இந்த தேர்வு ஆகஸ்ட் மாதம் மற்றும் அக்டோபர் மாதத்தில் நடைபெறவுள்ளதால், விருப்பமுள்ளவர்கள் www.ipbs.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். இதனை தொடர்ந்து நீங்கள் தகுதியானவர்கள் என்றால் உங்களுக்கு அடுத்த நோட்டிபிக்கேஷன் வரப்படும். அதனை தொடர்ந்து உங்களுக்கு 2 கட்டங்களாக, அதாவது ப்ரீ தேர்வு, மெயின் தேர்வு என 2 தேர்வுகள் நடைபெறும். முதல்நிலைத் தேர்வு அடுத்த மாதமும், இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வு அக்டோபர் மாதமும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடைபெறும் இத்தேர்வை ஆங்கிலப்பாடம் தவிர மற்றவைகளை தமிழிலும் எழுத முடியும்.

News18

இதில் பேங்க் ஆப் பரோடா, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யுசிஓ வங்கி, பேங்க் ஆப் இந்தியா, செண்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா. பேங்க் ஆப் மகாராஷ்டிரா, இந்தியன் வங்கி, பஞ்சாப் அண்ட் சிந்து பேங் உள்ளிட்ட வங்கிகள் பங்கேற்றுள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் இதில் ஒரு வங்கியில் தேர்வு செய்யப்படுவார்கள்.

தகுதி:

இந்திய, நேபால், பூட்டான் குடிமகனமாக இருக்க வேண்டும். நீங்கள் ஒரு திபெத்தியன் அகதியாக இருக்கும் பட்சத்தில் அதற்கான சான்றுகள் வைத்திருந்தால் நீங்களும் விண்ணப்பிக்கலாம். மேலும், 20 வயது முதல் 28 வயதுள்ள நபர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 1996ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதிக்கு பிறகு பிறந்தவர்களும், 2004 ஜூலை 1ஆம் தேதிக்கு முன் பிறந்தவர்கள் வரை மட்டுமே அப்ளை செய்ய முடியும்.

விண்ணப்ப கட்டணம்:

எஸ்சி, எஸ்டி உள்ளிட்டவர்களுக்கு ரூ.175, மற்றவர்களுக்கு ரூ.850 தேர்வு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

News18

எப்படி அப்ளை பண்ணுவது?

விண்ணப்பதாரர்கள் official இணையதளமான CRP CLERKS என்ற இணையதளத்திற்குள் சென்றால் அதில் Apply online என்ற ஆப்ஷன் குறிப்பிடப்பட்டிருக்கும். அதற்குள் சென்றால் CLICK HERE FOR NEW REGISTRATION என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். பிறகு உங்களது பெயர் உள்ளிட்டவற்றை சமர்ப்பித்தால் உங்களது மெயில் ஐடிக்கு ரெஜிட்ரேஷன் நம்பரும், பாஸ்வோர்டும் கொடுக்கப்படும். இந்த பாஸ்வேர்டை நீங்கள் வேண்டுமென்றால் எடிட் செய்து கொள்ளலாம்.

பிறகு இந்த நம்பரையும், பாஸ்வேர்டையும் கொண்டு எளிதில் தேர்வுக்கு விண்ணபிக்க முடியும். தேர்வுக்கு அப்ளை செய்வதுக்கு முன்பு உங்களிடம் உங்களது பாஸ்போர்ட் அளவு போட்டோ, கையெழுத்து, இடது கை பதிவு ரேகை உள்ளிட்டவைகளை எடுத்து வைத்து கொள்ளவும். மேலும் தகவலுக்கு www.ibps.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த தேர்வு மும்பையில் நடைபெறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று நாட்களுக்கு உணவை தவிர்த்தால் என்ன ஆகும் தெரியுமா..? உடலில் நடக்கும் மாற்றங்கள் என்ன..?

 மனித உடல் ஒரு இயந்திரம் போன்றது. தினமும் அதன் வேலைகளை அது சரியாக செய்து கொண்டிருக்கும். இருப்பினும் நீண்ட நாள் உணவு உட்கொள்ளாமல் இருந்தால் நமது உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? உண்ணாவிரதம் இருப்பது இந்திய பாரம்பரியத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும் மற்றும் பழங்காலத்திலிருந்தே இது கடைப்பிடிக்கப்படுகிறது. இதுகுறித்து விளக்கும் டாக்டர் பல்லேட்டி சிவா கார்த்திக் ரெட்டி, மூன்று நாட்களுக்கு நாம் எதுவும் சாப்பிடாமல் இருந்தால் என்ன நடக்கும் என்பதை விவரித்துள்ளார்.

அதில் “நீங்கள் 3 நாள் உண்ணாவிரதத்தை மேற்கொள்ளும்போது, ​​உங்கள் உடல் பல உடலியல் மாற்றங்களுக்கு உட்படுகிறது. ஆரம்பத்தில், உங்கள் உடல் எனர்ஜிக்காக சேமிக்கப்பட்ட குளுக்கோஸைப் பயன்படுத்துகிறது. முதல் 24 மணி நேரத்திற்குள், இந்த கிளைகோஜன் குறைந்து, உங்கள் உடல் குளுக்கோனோஜெனீசிஸை உற்பத்தி செய்ய தொடங்குகிறது. உடலில் உள்ள அமினோ அமிலங்கள் போன்ற கார்போஹைட்ரேட் அல்லாத மூலங்களிலிருந்து இந்த குளுக்கோஸை உருவாக்குகிறது.

இரண்டாவது நாளில், உங்கள் உடல் கெட்டோசிஸைத் (ketosis) தொடங்குகிறது, அதாவது சேமித்த கொழுப்புகளை கீட்டோன்களாக மாற்றி உடல் அதனை எனர்ஜியாக பயன்படுத்துகிறது, குறிப்பாக மூளைக்கு இந்த எனர்ஜி தேவைப்படும். இந்த வளர்சிதை மாற்றம் தசை திசுக்களைப் பாதுகாக்க உதவுகிறது.

News18

உடலின் வளர்சிதை மாற்றம் எவ்வாறு ஒத்துப்போகிறது?

உங்கள் வளர்சிதை மாற்றம் இன்சுலின் அளவைக் குறைப்பதன் மூலமும், நார்பைன்ப்ரைன் அளவை அதிகரிப்பதன் மூலமும் ஒத்துப்போகிறது. இது உடலில் உள்ள கொழுப்பு எரிப்பதை அதிகரிக்கும். மேலும் இது சிறுநீரகங்களில் இருந்து அதிகப்படியான உப்பு மற்றும் தண்ணீரை வெளியேற்ற உதவுகிறது. இந்த சமயத்தில் நீரிழப்பு அதிகரிக்கும் என்பதால் உடல் எடை குறைய தொடங்கும்.

மூன்று நாட்களில் நோர்பைன்ப்ரைன் அளவு அதிகரிப்பதன் காரணமாக உங்கள் உடலில் வளர்சிதை மாற்றம் தற்காலிகமாக அதிகரிக்கலாம், ஆனால் உணவு உட்கொள்ளும் பற்றாக்குறையை உடல் சரிசெய்வதால், எனர்ஜியை பாதுகாக்க வளர்சிதை மாற்றம் பின்னர் மெதுவாகிவிடும்.

72 மணிநேர உண்ணாவிரதம் அதாவது 3 நாட்களுள் எந்த உணவையும் சாப்பிடாமல் இருப்பதால் பல நன்மைகள் மற்றும் ஆபத்துகளும் வரும் என டாக்டர் ரெட்டி விளக்கியுள்ளார்.

நன்மைகள் :

  • உண்ணாவிரதம் இருப்பதால் நமது உடலில் உள்ள சேதமடைந்த செல்களை அகற்றி ஆரோக்கியமான புதிய செல்கள் வளர ஊக்குவிக்கிறது.

  • உண்ணாவிரதம் இருப்பதால் இன்சுலின் அளவு மேம்படும் இதனால் டைப் 2 நீரிழிவு நோய் உண்டாகும் அபாயம் குறைகிறது.

  • உண்ணாவிரதம் இருக்கும் போது உண்டாகும் கெட்டோசிஸின் போது மூளையில் இருந்து பெறப்பட்ட நியூரோட்ரோபிக் காரணி (BDNF) உற்பத்தி அதிகரிப்பதன் காரணமாக நமது மனத்தில் தெளிவு அதிகரிக்கும்.

  • உண்ணாவிரதம் இருப்பதால் நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறைந்த உடல் எடை குறையும்.
    அபாயங்கள் :

    • உண்ணாவிரதம் இருக்கும் போது நமது உடலில் நீரிழப்பு ஏற்படுகிறது. இதனால் போதுமான அளவு தண்ணீர் அருந்துவது அவசியம்.

    • உண்ணாவிரதம் இருப்பதால் சோடியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய எலக்ட்ரோலைட்டுகளின் சமநிலையின்மைக்கு வழிவகுக்கும். இதனால் நமது உடலில் பாதிப்புகள் உண்டாகும்.

    • தொடர்ந்து எதுவும் சாப்பிடாமல் இருக்கும் போது இரத்தச் சர்க்கரைக் குறைந்து தலைச்சுற்றல், தலைவலி மற்றும் மயக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தும்.

    • வளர்சிதை மாற்ற மாற்றங்கள், பசி காரணமாக வயிற்று வலி, சோர்வு மற்றும் எரிச்சல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

1 கி.மீ வாக்கிங் சென்றால் உடலில் இருந்து எவ்வளவு கலோரி குறையும் தெரியுமா?

 வாக்கிங் செல்வது என்பது அனைவருக்கும் பிடித்தமான உடற்பயிற்சியாக இருக்கிறது. வாக்கிங் சென்று உடலை சுறுசுறுப்பாக வைத்திருப்பதன் மூலம் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம். ஆனால் உடலில் இருக்கும் கலோரிகளை எரிக்க நடைப்பயிற்சி மட்டுமே போதாது என்று சிலர் கூறுகின்றனர்.

நீங்கள் உங்கள் உடலில் இருக்கும் கலோரிகளை எரித்து எடையை குறைக்க வாக்கிங்கை பின்பற்றுபவரா? அப்படி என்றால் ஒரு கிலோமீட்டர் நடந்தால் எத்தனை கலோரிகள் எரிக்கப்படும் என்பதை பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

1 கிமீ தூரம் நடக்கும் போது எத்தனை கலோரிகள் எரிக்கப்படும்?

நாம் ஏற்கனவே குறிப்பிட்டப்படி உடற்பயிற்சியின் எளிய மற்றும் மிகவும் பயனுள்ள வடிவங்களில் ஒன்றாக வாக்கிங் இருக்கிறது. இதயத்தை அரோக்கியமாக் வைப்பது முதல் சுவாச மண்டலத்தை கட்டுக்குள் வைத்திருப்பது வரை வாக்கிங் மூலம் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. 1 கிலோ மீட்டர் வாக்கிங் சென்றால் ஒருவரின் உடலில் இருந்து எத்தனை கலோரிகள் எரிக்கப்படும் என்ற கேள்விக்கு உண்மையான பதில் என்னவென்றால் நபருக்கு நபர் மாறுபடும் என்பதே. ஆம், இந்த விஷயம் ஒருவரின் எடை மற்றும் நடையின் வேகத்தைப் பொறுத்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். வாக்கிங் செல்லும் போது கலோரிகளை எரிப்பதை பாதிக்கும் காரணிகள் சிலவற்றை இனி பார்க்கலாம்.

எடை:

வாக்கிங்கின் போது கலோரி எரிக்க ஒரு நபரின் எடை கணிசமான பங்கு வகிக்கிறது. பொதுவாக உடல் பருமனான நபர்கள் நடைபயிற்சியின் போது அதிக கலோரிகளை எரிக்க முடியும். ஏனெனில் அவர்கள் நடக்க அதிக ஆற்றலை செலவழிக்க வேண்டும். உதாரணமாக, 90 கிலோ எடையுள்ள ஒருவருடன் ஒப்பிடும்போது, ​​70 கிலோ எடையுள்ள ஒருவர் 1 கிலோமீட்டர் நடக்கும் போது குறைவான கலோரிகளையே எரிக்கிறார்.

வேகம்:

ஒருவர் தன்னுடைய நடைபயிற்சியின் போது எவ்வளவு வேகமாக நடக்கிறார் என்பதும் அவர் எவ்வளவு கலோரிகளை எரிக்க முடியும் என்பதற்கு பங்களிக்கிறது. அதாவது, ஒரு மணி நேரத்திற்கு 3-4 கிமீ நடப்பதைக் காட்டிலும், ஒரே மணி நேரத்தில் 5 கிமீ முதல் 6 கிமீ நடந்தால் அதிக கலோரிகள் எரிக்கப்படும். வாக்கிங்கின் போது வேகமாக நடப்பது இதய துடிப்பு மற்றும் ஆற்றல் செலவை அதிகரிக்கிறது. இது உடலில் இருக்கும் அதிக கலோரியை எரிக்க வழிவகுக்கிறது.

நடக்கும் இடம்:

நடைப்பயிற்சிக்காக நாம் நடந்து செல்லும் இடத்தின் நிலப்பரப்பும் கூட கலோரி செலவழிக்கும் அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. downhill terrain-ல் நடப்பதை விட, hilly terrain நிலப்பரப்பில் நடப்பது அதிக விளைவுகளை ஏற்படுத்தி அதிக கலோரி செலவாகிறது.

வயது:

வயதுக்கு ஏற்ப வளர்சிதை மாற்றம் குறைகிறது, எனவே வாக்கிங் செல்லும் வயதானவர்களை விட இளம் வயதில் இருப்பவர்கள் கலோரிகளை அதிகமாக எரிக்க முடியும். தவிர பொதுவாக பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு அதிக muscle mass உள்ளன, இதன் காரணமாக வாக்கிங் செல்லும் போது ஆண்களின் உடலில் இருந்து சற்று அதிக கலோரி எரிக்கப்படும்.

கலோரி எரிப்பு தொடர்பாக மதிப்பிடப்பட்ட தகவல்கள்:

  • சுமார் 55 கிலோ எடையுள்ள நபர் ஒரு மணி நேரத்திற்கு 5 கிமீ மிதமான வேகத்தில் நடப்பதால், ஒரு கிலோ மீட்டருக்கு சுமார் 50-60 கலோரிகளை எரிக்க முடியும்.

  • அதே நேரம் 70 கிலோ எடையுள்ள நபர் ஒரு கிலோ மீட்டர் வாக்கிங் சென்றால் சுமார் 60-75 கலோரிகளை எரிக்க முடியும்.

  • அதுவே 90 கிலோ எடையுள்ள ஒருவர் மிதமான வேகத்தில் 1 கிலோ மீட்டர் நடப்பதன் மூலம் 80-100 கலோரிகளை எரிக்க முடியும்.

அதிக கலோரிகளை எரிப்பது எப்படி?

வாக்கிங் செல்லும் போது அதிக கலோரிகளை எரிக்க ஒரு சிறந்த விறுவிறுப்பாக நடந்து செல்வது. சற்று அதிகமான வேகத்தில் சுறுசுறுப்பாக நடந்து செல்வதால் இதயத் துடிப்பு அதிகரிக்கிறது, இது அதிக கலோரி செலவாக உதவும். வேகமான நடைப்பயிற்சி அல்லது வாக்கிங் செல்லும் போது இடையில் சில நிமிடங்கள் ஓடுவது அதிக கலோரிகளை எரிக்க உதவும். கரடுமுரடான மற்றும் சீரற்ற நிலப்பரப்பு கொண்ட மலை பாதை போன்றவற்றில் நடக்கலாம். தவிர உங்களது தினசரி வாக்கிங் தொலைவில் கூடுதல் கிலோ மீட்டர்களை சேர்க்கவும். இது உங்கள் ஒட்டுமொத்த கலோரி செலவை அதிகரிக்க சிறந்த வழியாக இருக்கும்.

நடைப்பயிற்சி அளிக்கும் ஆரோக்கிய நன்மைகள்:

தினசரி வழக்கமான அடிப்படையில் நடைபயிற்சி செல்வது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, தசைகளை பலப்படுத்துகிறது, மனநிலையை சிறப்பாக வைக்கிறது மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை உறுதிப்படுத்துகிறது. எல்லா வயதினரும் அடிப்படையாக செய்ய கூடிய எளிதான உடற்பயிற்சி இது. மேலும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிக்க சிறந்த தேர்வாகவும் அமைகிறது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

உங்களுக்கு 100 வயசு வரை வாழ ஆசையா..? அப்போ இந்த 5 ரொம்ப முக்கியம்..!

 நம்முடைய சரிவிகித டயட்டின் ஒரு பகுதியாக சில குறிப்பிட்ட வைட்டமின்களை எடுத்துக்கொள்வதன் மூலம் நீண்ட ஆயுளோடும், ஆரோக்கியத்தோடும் வாழ முடியும். இந்த வைட்டமின்களை மருந்து மாத்திரைகள் மூலம் எடுத்துக்கொள்ள வழி இருந்தாலும், இதை பல்வேறு வகையான உணவுகளின் மூலம் பெறுவது நம் ஒட்டுமொத்த உடல் நலனையும் மேம்படுத்தும். நம் ஆயுளை நீட்டிக்கக் கூடிய 5 வைட்டமின்கள் இதுதான்.

வைட்டமின் டி 

சூரிய ஒளி வைட்டமின் என அழைக்கப்படும் வைட்டமின் டி, நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி சிறப்பாக செயல்படுவதற்கும், எலும்புகள் ஆரோக்கியமாக இருப்பதற்கும், மனநிலையை கட்டுப்படுத்தவும் மிகவும் அவசியமாகும். உடலில் போதுமான அளவு வைட்டமின் டி இல்லையென்றால், ஆட்டோ இம்முயூன் கோளாறுகள், புற்றுநோய் மற்றும் இதய நோய் வரும் ஆபத்து அதிகமாகும். உடலில் சூரிய வெளிச்சம் படுவது, கொழுப்பு நிறைந்த மீன்கள் மற்றும் வலுவூட்டப்பட்ட தானியங்கள் மூலம் வைட்டமின் டி-யை பெற முடியும்.

News18

வைட்டமின் சி 

ஆண்டி ஆக்ஸிடெண்ட் பண்புகள் நிறைந்த வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி ஃப்ரீ ரேடிக்கல்ஸிடமிருந்து செல்கள் பாதிக்கப்படாமல் தற்காத்துக் கொள்கிறது. மேலும் நம் உடலில் கொலஜன் உற்பத்தியவதற்கும் காயங்களை குணப்படுத்தவும் இரும்புச்சத்தை உறிஞ்சவும் இது உதவியாக இருக்கிறது. வைட்டமின் சி உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் பல்வேறு வகையான புற்றுநோய்கள், இதய நோய்கள் வராமல் தடுக்க முடியும் என ஆய்வுகள் கூறுகின்றன. ப்ரோகோலி, குடை மிளகாய், கிவி பழம், சிட்ரஸ் பழங்கள், பெர்ரி பழங்கள் ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது.

வைட்டமின் இ

ஆண்டி ஆக்ஸிடெண்ட் பண்புகள் நிறைந்த வைட்டமின் இ, ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் மற்றும் வீக்கத்திலிருந்து நமது செல்களை காக்கிறது. இந்த இரண்டும்தான் நாள்பட்ட நோய்களுக்கும் முதுமைக்கும் காரணமாக இருக்கிறது. வைட்டமின் இ நமது சருமத்தை ஆரோக்கியமாக்குவதோடு நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. வயது சார்ந்த அறிவாற்றல் குறைபாடு மற்றும் அல்சைமர் நோய் வரும் ஆபத்தை வைட்டமின் இ குறைக்கிறது. நட்ஸ், விதைகள், கீரைகள், காய்கறி எண்ணெய் மற்றும் வலுவூட்டப்பட்ட தானியங்கள் மூலம் நமக்கு தேவையான வைட்டமின் இ கிடைக்கிறது.

வைட்டமின் பி12

நமக்கு வயதாகும் போது சிவப்பு ரத்த அனுக்கள் உருவாவதற்கும் டின்ஏ சிந்தெஸிஸ் ஆவதற்கும், நரம்புகளின் செயல்பாடுகளுக்கும் வைட்டமின் பி12 அவசியம் தேவைப்படுகிறது. வைட்டமின் பி12-யை போதுமான அளவு எடுத்துக்கொள்வதன் மூலம் ரத்தசோகை, இதய நோய்கள், அறிவாற்றல் குறைபாடு போன்ற ஆபத்துகள் வராமல் தற்காத்துக் கொள்ள முடியும். இறைச்சி, கடல் உணவுகள் முட்டைகள், பால் பொருட்கள், வலுவூட்டப்பட்ட தானியங்களில் வைட்டமின் பி12 அதிகளவு உள்ளது. வீகன் மற்றும் சைவ உணவுப் பிரியர்கள் இந்த வகை வைட்டமின் குறைபாட்டால் பெரிதும் அவதிப்படுவார்கள். ஆகவே அவர்கள் மருந்து வடிவத்தில் இதை எடுத்துக்கொள்வது நல்லது.

வைட்டமின் கே2

இதய ஆரோக்கியம், எலும்புகள், ரத்தம் உறைதல் ஆகியவற்றுக்கு வைட்டமின் கே2 அவசியமாகும். நமது தமனி மற்றும் திசுக்களில் சேகரமாகும் கால்சியத்தை பற்களுக்கும் எலும்புகளுக்கும் அளித்து, எலும்புப்புரை மற்றும் இதய நோய் வரும் ஆபத்தைக் குறைக்கிறது வைட்டமின் கே2. சீஸ், முட்டையின் மஞ்சள் கரு, நொதித்த உணவுகள், புற்களில் வளர்க்கப்பட்ட விலங்கின் பொருட்களில் இந்த வைட்டமின் கே2 அதிகமாக இருக்கிறது.

நாம் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டுமென்றால், அதற்கு நம்முடைய வாழ்க்கைமுறை தெரிவுகளான மன அழுத்தம் இல்லாமல் இருப்பது, சீரான உடற்பயிற்சி, நல்ல தூக்கம், புகையிலை மற்றும் குடிப்பழக்கம் இல்லாமை, ஆரோக்கியமான எடையை பராமரித்தல் போன்றவையும் முக்கிய பங்காற்றுகிறது.




Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip