Search

TANUVAS பல்கலைக்கழகத்தில் Senior Research Fellow வேலை – தேர்வு எழுத தேவையில்லை || நேர்காணல் மட்டுமே!

 


TANUVAS பல்கலைக்கழகத்தில் Senior Research Fellow வேலை – தேர்வு எழுத தேவையில்லை || நேர்காணல் மட்டுமே!

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் ஆனது Senior Research Fellow பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TANUVAS காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Senior Research Fellow பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Senior Research Fellow கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் PG Degree in Chemistry / Physics தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TANUVAS வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


Senior Research Fello ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.31,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TANUVAS தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 10.07.2024ம் தேதி நடைபெறும் நேர்காணலில் நேரில் சென்று கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news 

3 ஆண்டு ஒரே இடத்தில் பணிபுரியும் அலுவலர்களை கட்டாய இடமாறுதல் செய்ய திட்டம்: பள்ளிக்கல்வி துறை கணக்கெடுப்பு

 1274313

பள்ளிகள், அலுவலகங்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களை இடமாறுதல் செய்வதற்காக பள்ளிக்கல்வித் துறை கணக்கெடுத்து வருகிறது.


இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:


பள்ளிக்கல்வித் துறையில் அனைத்துவித இயக்குநரகங்கள், அலுவலகங்களின் நிர்வாகம் திறம்பட செயல்பட வேண்டியது அவசியமாகும். அதில் பணிபுரியும் பணியாளர்கள் 3 ஆண்டுகளுக்கு மேல் ஓரே அலுவலகத்தில், பணியிடத்தில் இல்லாமல் அவர்களை மாறுதல் செய்யவும்,விருப்ப மாறுதல் ஆண்டுதோறும் நடத்தவும் தமிழக அரசால் உத்தரவிடப்பட்டு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன.


அதன்படி பள்ளிக்கல்வி அலுவலகங்கள், ஆசிரியர் தேர்வு வாரியம், இயக்குநரகங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் கடந்த ஜூன் 30-ம் தேதி நிலவரப்படி 3 ஆண்டுகளுக்கு மேல் நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உட்பட பணியிடங்களில் வேலை செய்பவர்களின் பட்டியலை கணக்கெடுக்க வேண்டும்.


பட்டியல் தயாரிக்க உத்தரவு: அந்த விவரங்களை பட்டியலாக தயாரித்து நாளை (ஜூலை 5) மாலை 5 மணிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். எந்த விவரங்களும் விடுபடாமல் முழுமையான வகையில் அறிக்கையை சமர்பிக்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news 

புதிய மாற்றங்களுடன் இல்லம் தேடி கல்வி ( ITK ) செயலி

 .com/

ITK App Update கொடுக்கப்பட்டுள்ளது. கீழ்க்காணும் link - இல் உங்கள் ITK App - யை Update செய்து கொள்ளவும்.

Update link 👇

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.itk


Update செய்த பிறகு உள்நுழைந்தவுடன் இந்த கல்வியாண்டில் (2024-25)  மையம் தொடங்கி நாள் திரையில் கேட்கும் அதில் தேர்வு பெற்ற தன்னார்வலர்கள் மட்டும் 02-07-2024 என்று பதிவு செய்யவும்.

தேர்வு செய்யப்பட்ட தன்னார்வலர்களுக்கு மட்டும் மாணவர் வருகை பதிவு மற்றும் மாணவர்களை சேர்ப்பதற்கான Icon கொடுக்கப்பட்டிருக்கும். மற்றவர்களுக்கு இந்த Icon இருக்காது.

மாணவர் சேர்க்க Icon - னை பயன்படுத்தி இன்று (04-07-2024) முதல் உங்களிடம் வரும் மாணவர்களை சேர்த்து கொள்ளவும்.

இன்று (04-07-2024) முதல்  மாணவர் வருகை பதிவில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இந்த கல்வியாண்டில் மாணவர்களுக்கு கற்பிப்பதற்கான கட்டகம் App - இல் சேர்க்கப்பட்டுள்ளது.

இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் பணிபுரிந்ததற்கான சான்றிதழைகளை ITK App - இல் மூலமும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news 

General Teachers Transfer counseling - How To Challenge Seniority?

 

IMG_20240703_233148

GENERAL TRANSFER COUNSELING

மாறுதல் கலந்தாய்வு- அனைத்து பணியிடங்களுக்கான முன்னுரிமை பட்டியல் EMIS இணையத்தில் வெளியீடு.


முன்னுரிமை பட்டியலில் ஏதேனும் CHALLENGE  இருப்பின் அதனை எவ்வாறு EMIS - WEBSITE ல் CHALLENGE செய்வது என்பது குறித்த PDF வெளியீடு!


குறிப்பு : இடைநிலை ஆசிரியர்களுக்கான முன்னுரிமை பட்டியல் தற்போது வரை Update செய்யப்பட வில்லை.


2024-2025 General Teachers Transfer counseling seniority list in EMIS portal.

Candidates - Raise Challenge pdf👇

Download here


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news 

தேசிய நல்லாசிரியர் விருதுக்கான சுய பரிந்துரைகளை அனுப்பலாம் - தகுதி நிபந்தனைகள்

 தேசிய நல்லாசிரியர் விருதுக்கான சுய பரிந்துரைகளை ஜூலை 15 வரை அனுப்பலாம் என்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: "தேசிய நல்லாசிரியர் விருதுகள் 2024-க்கு தகுதியான ஆசிரியர்களிடமிருந்து ஆன்லைன் சுய பரிந்துரைகள் ஜூன் 27 தேதி முதல் கல்வி அமைச்சகத்தின் இணையதளத்தில் http://nationalawardstoteachers.education.gov.in வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆன்லைன் பரிந்துரைகளைப் பெறுவதற்கான கடைசி தேதி ஜூலை 15 ஆகும். இந்த ஆண்டு, மாவட்ட, மாநில, தேசிய அளவில், மூன்று கட்ட தேர்வு செயல்முறை மூலம், 50 நல்லாசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த விருது செப்டம்பர் 5-ம் தேதி புதுடெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவரால் வழங்கப்படும்.


கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினத்தன்று, அதாவது செப்டம்பர் 5-ம் தேதி வெளிப்படையான மற்றும் ஆன்லைன் தேர்வு செயல்முறை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டின் சிறந்த ஆசிரியர்களுக்கு தேசிய விருதுகளை வழங்கி வருகிறது. இதற்காக தேசிய அளவிலான ஒரு விழாவை ஆண்டு தோறும் ஏற்பாடு செய்து வருகிறது.



நாட்டின் மிகச் சிறந்த ஆசிரியர்களின் தனித்துவமான பங்களிப்பைக் கொண்டாடுவதும், தங்கள் அர்ப்பணிப்பு மற்றும் உழைப்பின் மூலம் பள்ளிக்கல்வியின் தரத்தை மேம்படுத்தியது மட்டுமல்லாமல் மாணவர்களின் வாழ்க்கையை வளப்படுத்திய அந்த ஆசிரியர்களைக் கவுரவிப்பதும் தேசிய நல்லாசிரியர்கள் விருதின் நோக்கமாகும்.



தகுதி நிபந்தனைகள்: 


மாநில அரசு / யூனியன் பிரதேச நிர்வாகங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாநில / யூனியன் பிரதேச வாரியத்துடன் இணைந்த தனியார் பள்ளிகளால் நடத்தப்படும் அங்கீகரிக்கப்பட்ட தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளித் தலைவர்கள் இந்த விருதுக்கு தகுதியுடையவர்கள்.





உடற்கல்வி ஆசிரியர் - உபரிப் பணியிடங்களை பணிநிரவல் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

 IMG_20240703_144233


உடற்கல்வி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை II மற்றும் I உபரிப் பணியிடங்களை பணிநிரவல் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

DSE - PET, PD 1 & PD 2 Deployment Proceedings

Download here

6 முதல் 12 வகுப்பு வரை மதிப்பீடு சார்ந்த வினாடி வினா நடத்துதல் - வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு.

 IMG_20240703_144541

உயர் தொழில்நுட்ப ஆய்வகம் மூலம் 6 முதல் 12 வகுப்பு வரை மதிப்பீடு சார்ந்த வினாடி வினா நடத்துதல் - வழிகாட்டி நெறிமுறைகள் - SPD & DSE இணைச் செயல்முறைகள்!

 Hi Tech Lab Quiz Program - Instructions👇👇👇

Download here

காலாவதியான மாத்திரைகளை சாப்பிட்டால் என்ன ஆகும்..? கட்டுக் கதைகளும், உண்மைகளும்!

 நம் அனைவரது வீட்டிலுமே பெரும்பாலும் மருந்து பெட்டி அல்லது ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் வைத்திருப்போம் அதிலுள்ள மாத்திரைகளை நாம் பயன்படுத்துவதற்கு முன்பு அவற்றின் காலாவதி தேதியை கட்டாயமாக சரி பார்ப்போம். ஆனால் ஒருவேளை மாத்திரைகள் காலாவதி ஆகிவிட்டால் அவை பிரயோஜனம் இல்லாமல் போகுமா? அல்லது அவை விஷமாக மாறுமா? என்பதை என்றைக்காவது நீங்கள் யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா. காலாவதியான மாத்திரைகள் பற்றிய ஒரு சில கட்டுக்கதைகள் மற்றும் உண்மைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஒரு மருந்தின் காலாவதி தேதி எவ்வாறு முடிவு செய்யப்படுகிறது?

ஒரு மருந்தின் காலாவதி தேதியானது குறிப்பிட்ட காலகட்டத்திற்கு அதன் பாதுகாப்பு செயல்திறன் மற்றும் தரம் போன்றவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. அது சேமிக்கப்படும் இடத்தை பொறுத்து அதன் தரம் சோதிக்கப்படுகிறது. இதில் மாத்திரைகள் சேமிக்கப்படும் வெப்பநிலை, ஈரப்பதம், வெளிச்சம் மற்றும் ஆக்ஸிஜன் அளவுகள் போன்றவை கருத்தில் கொள்ளப்படும். பல்வேறு விதமான தர கட்டுப்பாட்டு சோதனைகளை மேற்கொண்ட பிறகு மாத்திரைகளுக்கான காலாவதி தேதி முடிவு செய்யப்பட்டு அச்சிடப்படுகிறது.

News18

காலாவதியான மாத்திரைகளை சாப்பிட்டால் என்ன ஆகும்?

காலாவதியான மாத்திரைகளை சாப்பிடுவதால் பல்வேறு அபாயங்கள் மற்றும் விளைவுகள் ஏற்படலாம். இது குறிப்பிட்ட அந்த மருந்து மற்றும் அது எவ்வளவு நாட்களுக்கு முன்பு காலாவதியானது என்பதை பொறுத்து அமைகிறது. மாத்திரைகளை சாப்பிடுவதால் அலர்ஜி அல்லது எதிர்பாராத பக்க விளைவுகள் ஏற்படலாம். ஒரு சில காலாவதியான மாத்திரைகளில் பாக்டீரியா வளர்ச்சி ஏற்பட்டு இருந்தால், அதனை சாப்பிடும் பொழுது அதனால் நமக்கு தொற்றுகள் அல்லது பிற உடல் உபாதைகள் ஏற்படலாம்.

இன்சுலின் மற்றும் ஹார்மோன் மருந்துகள் காலாவதி ஆகும் பட்சத்தில் அவற்றின் செயல்திறன் குறைந்து அதனால் ரத்த சர்க்கரை அல்லது ஹார்மோன் அளவுகள் தாறுமாறாக ஏற்றத்தாழ்வுக்கு ஆளாகி மோசமான சிக்கல்கள் ஏற்படலாம். இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு அளிக்கப்படும் நைட்ரோகிளசரின் போன்றவற்றை காலாவதி ஆகிய பிறகு பயன்படுத்தினால் அதனால் ஹார்ட் அட்டாக், பக்கவாதம் அல்லது மேலும் ஒரு சில இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். காலாவதியான கண் மருந்துகள் மற்றும் காது மருந்து சொட்டுகள் தொற்றுகள் அல்லது எரிச்சல் போன்றவற்றை உண்டாக்கும்.

காலாவதி தேதிக்குப் பிறகு ஒரு சில நாட்களுக்கு மருந்துகளை பயன்படுத்தலாமா?

ஒரு குறுகிய காலகட்டத்திற்கு அந்த மருந்துகளின் செயல்திறன் இருக்கும் என்றாலும் கூட அவற்றை பயன்படுத்துவது சரியானது அல்ல. ஏனெனில் காலாவதியான மருந்துகள் எப்போது, எப்படி, என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நம்மால் சொல்ல முடியாது. எனவே மருந்துகள் காலாவதி ஆகிவிட்டால் உடனடியாக அவற்றை அப்புறப்படுத்தவும்.

ஹெர்பல் அல்லது நேச்சுரல் சப்ளிமெண்டுகள் காலாவதியான பிறகு பாதுகாப்பானதா?

ஹெர்பல் மற்றும் நேச்சுரல் சப்ளிமெண்டுகளும் காலாவதி தேதிக்கு பிறகு அதன் செயல்திறன் குறைந்து அது தயாரிக்கப்பட்டதன் நோக்கத்தை பூர்த்தி செய்யாது. எனவே இவற்றை பயன்படுத்தும் பொழுதும் கட்டாயமாக காலாவதி தேதியை பின்பற்றுவது அவசியம்.

மருந்துகளை குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைத்தால் அவை நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்குமா?

குளிர்சாதன பெட்டியில் வைப்பதால் மருந்துகள் கெட்டுப் போகும் செயல்முறை தாமதப்படுத்தப்படலாம். எனினும் காலாவதி தேதிக்குப் பிறகு அதனை பயன்படுத்துவது நல்லதல்ல. ஆகவே காலாவதியான மருந்துகளை பாதுகாப்பான மற்றும் சரியான முறையில் அப்புறப்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்துங்கள்.

காலாவதியான மருந்துகளை மறுசுழற்சி செய்ய முடியுமா?

காலாவதியான மருந்துகளை வழக்கமான வீட்டு உபயோக கழிவுகளுடன் சேர்த்து மறுசுழற்சி செய்ய பரிந்துரைக்கப்படவில்லை. அதற்கு சரியான கையாளுதல் மற்றும் அப்புறப்படுத்தும் முறைகள் அவசியம்.

காலாவதியான மருந்துகள் பார்ப்பதற்கும் முகரும் பொழுது வழக்கமான வாசனையை கொண்டிருந்தால் அவற்றை நாம் பயன்படுத்தலாமா?

காலாவதியான மருந்துகளின் பாதுகாப்பை அதன் தோற்றம் மற்றும் வாசனை முடிவு செய்யாது. ஒரு சில காலாவதியான மருந்துகள் எந்த ஒரு வெளிப்புற அறிகுறியையும் ஏற்படுத்தாமல் மோசமான விளைவுகளை உண்டாக்கலாம். ஆகவே ஒருபோதும் காலாவதியான மருந்துகளை சாப்பிடாதீர்கள்.

தவறுதலாக நான் காலாவதியான மருந்துகளை சாப்பிட்டு விட்டால் என்ன செய்ய வேண்டும்?

காலாவதியான மருந்துகளை நீங்கள் சாப்பிட்டுவிட்டால் முதலில் அமைதியாக இருந்து, பதட்டப்படாமல் அதனால் ஏதேனும் விளைவுகள் அல்லது அறிகுறிகள் ஏற்படுகிறதா என்பதை கண்காணிக்கவும். அடுத்து மருத்துவரை அணுகி விவரத்தை கூறி அதற்கான தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.

காலாவதியான மருந்துகளை என்ன செய்ய வேண்டும்?

காலாவதியான மருந்துகளை சரியான முறையில் நீங்கள் அப்புறப்படுத்த வேண்டும். மருந்துகளை எப்படி அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல் மற்றும் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றுங்கள். சுற்றுச்சூழலுக்கும் மக்களுக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையில் அவற்றை நாம் அப்புறப்படுத்த வேண்டும். கழிப்பறைகள் அல்லது சாக்கடைகளில் ஒருபோதும் மருந்துகளை அப்புறப்படுத்தாதீர்கள். மேலும் பிற வீட்டு உபயோக கழிவுகளோடு சேர்த்து மருந்துகளை அப்புறப்படுத்த கூடாது.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

உங்களுக்கு மோப்பத் திறன் குறைவதாக உணர்கிறீர்களா..? இது இதய செலிழப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!

 ஒரு மனிதன் உயிருடன் இருக்கிறானா இல்லையா என்பது அடிப்படையில் அவனுடைய உணர்வு சார்ந்த அனுபவங்கள் மூலமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது குறிப்பாக நம்முடைய உடல் மற்றும் மன நலனில் தாக்கத்தை கொண்டுள்ளது. ஆரோக்கியமான மோப்பத்திறன் கொண்ட நபர்களுடன் ஒப்பிடும் பொழுது பாதி அளவு அல்லது கிட்டத்தட்ட மோப்பத்திறன் இல்லாத நபர்களுக்கு இதய செயலிழப்பு ஏற்படுவதற்கான அபாயம் 30 சதவீதம் அதிகமாக இருப்பதாக அமெரிக்க பத்திரிக்கை ஒன்றில் ஆய்வு மூலமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மோப்பத்திறன் குறைவதற்கும் இதய செயலிழப்பு ஏற்படுவதற்கான அபாயத்திற்கும் இடையே உள்ள தொடர்பை புரிந்து கொள்வதற்கான முக்கியத்துவம் எழுகிறது. ஒரு நபரின் இதயம் ரத்தத்தை திறம்பட உந்தி தள்ள முடியாத பொழுது, முக்கியமான உறுப்புகள் மற்றும் திசுக்களுக்கு ரத்தம் கிடைக்காமல் போகும் நிலையே இதய செயலிழப்பு என்று அழைக்கப்படுகிறது.

News18

இதற்கு பல்வேறு விதமான காரணங்கள் உண்டு. இது ஒரு நபரின் வாழ்க்கை தரத்தை குறிப்பிடத்தக்க வகையில் பாதிக்கிறது. இதய செயலிழப்பு என்பது கொரோனரி இதய நோய், ஹைப்பர் டென்ஷன், கார்டியோ மையோபதி, டயாபடீஸ் மற்றும் பல போன்றவற்றால் தூண்டப்படுகிறது. மூச்சு விடுவதில் சிரமம், சோர்வு, சீரற்ற இதயத்துடிப்பு அல்லது தொடர்ச்சியான இருமல் போன்றவை இதய செயலிழப்புக்கான அறிகுறிகளாக அமைகிறது.

இதய செயலிழப்பு மற்றும் மோப்பத்திறன் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள தொடர்பு : 

  • மோப்பத்திறன் குறைவது அல்லது முழுவதுமாக இழக்கப்படுவது என்பது இதய செயலிழப்புக்கான ஆரம்பகட்ட அறிகுறியாக திகழ்கிறது. மூளை மற்றும் நரம்பு மண்டலமானது வாசனை அமைப்புடன் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளது. இதய செயலிழப்பு என்பது ரத்த ஓட்டம் மற்றும் ஆக்சிஜன் வழங்குதலை குறைப்பதன் மூலமாக மூளையின் வாசனை வழித்தடங்களை தூண்டுகிறது. போதுமான அளவு ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்து கிடைக்காத காரணத்தால் வாசனை அமைப்பில் உள்ள நியூரான் செயலிழக்கப்படுகிறது. இதன் காரணமாக மோப்ப திறன் பாதிக்கப்படுகிறது.

  • வாசனை அமைப்பு மற்றும் இதயம் ஆகிய இரண்டுமே மைக்ரோவாஸ்குலர் அல்லது ஆரோக்கியமான சிறு சிறு ரத்த நாளங்களை நம்பியுள்ளது. இந்த ரத்த நாளங்களில் காயம் ஏற்படும் பொழுது அது இதய செயலிழப்பு போன்ற இதயம் சம்பந்தப்பட்ட கோளாறுகளை ஏற்படுத்துகிறது. இந்த நரம்புகள் வாசனை திசுக்களுக்கு ஆதரவு அளிப்பதால் போதுமான ரத்த ஓட்டம் கிடைக்காத போது அதனால் வாசனை அமைப்பின் செயல் திறன் பாதிக்கப்படுகிறது.

  • நாள்பட்ட வீக்கம் இதய செயலிழப்புடன் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளது. இது ஒரு நபரின் வாசனை திசுக்களை பாதித்து அதனால் அவரின் மோப்பத்திறன் குறைகிறது. நாள்பட்ட வீக்கம் மூளையில் உள்ள வாசனை மையங்களை பாதித்து அதனால் மோப்ப திறன் இழப்பு ஏற்படுகிறது.

  • வாசனையை கண்டுபிடிப்பது மற்றும் ரத்த ஓட்டம், ஆக்சிஜன் அளவுகள் போன்றவற்றில் மாற்றங்கள் உட்பட பல்வேறு விஷயங்களுக்கு ஆல்ஃபேக்டரி மியூகோசா பொறுப்பாகிறது. இதய செயலிழப்பின் போது இது பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக ஒருவரின் மோப்பத்திறன் குறைகிறது.

    • ஆகவே உங்களுடைய மோப்பத்திறனில் ஏதேனும் மாற்றங்களை அனுபவிக்கும் பட்சத்தில் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை ஆலோசிப்பது நல்லது. எனினும் மோப்பத்திறன் குறைந்தாலே அது இதய செயலிழப்பாக தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பதட்டப்படாமல் அதற்கு பின்னணியில் உள்ள காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்ள மருத்துவர் சந்தியுங்கள்.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

ஷாம்பூ பயன்படுத்தும்போது இந்த தவறை பண்ணாதீங்க.. முடி உதிர்வை தடுக்க நிபுணரின் ஆலோசனை.!

 

முடி உதிர்தல், நரைத்த முடி அல்லது உயிரற்ற முடி மற்றும் சிக்கல் போன்ற பிரச்சனைகளால் கிட்டத்தட்ட எல்லா வயதினரும் சிரமப்படுகின்றனர். பெண்கள் மட்டுமின்றி இளைஞர்கள் மற்றும் முதியோர்கள் மத்தியிலும் இது பெரிய அளவில் காணப்படும் பிரச்சனையாக மாறி வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், முடி உதிர்வு பிரச்சனைகள் குறித்து சில தீர்வுகளை பற்றி பார்ப்போம். அந்த தீர்வுகளை பின்பற்றுவதன் மூலம், முடி தொடர்பான பிரச்சனையிலிருந்து நிரந்தரமாக விடுபடலாம்.

மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இதற்காக நீங்கள் ஷாம்பூ மற்றும் பிற முடி சிகிச்சை தயாரிப்புகளை வாங்க வேண்டியதில்லை. உங்கள் சமையலறையில் இருக்கும் சில பொருட்களை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் கூந்தல் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.

ஷாம்பூ மற்றும் எண்ணெயை தவறாக பயன்படுத்துதல்:

கடந்த 8 ஆண்டுகளாக முடி சிகிச்சைத் துறையில் பணியாற்றி வரும் ஆர்.கே அகாடமி மற்றும் சலூனின் உரிமையாளரும் நிபுணருமான ராஜ்குமார் கூறுகையில், பெண், ஆண், குழந்தை, முதியோர் உட்பட முடி உதிர்தல் பிரச்சனை இருப்பவர்கள் சரியான முறையில் ஷாம்பூ மற்றும் எண்ணெய் பயன்படுத்த முயற்சி செய்ய வேண்டும். ஷாம்பு போடுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன், தலையில் எண்ணெய் தடவி, முடி வேர்கள் வரை மசாஜ் செய்யவும். ஒரு மணி நேரம் அப்படியே வைத்திருந்த பிறகு, அடுத்த ஒரு மணி நேரம் உங்கள் தலைமுடியை டவல் அல்லது துணியால் மூடி வைக்கவும். இரண்டு மணி நேரத்திற்கு பிறகு, ஷாம்பூ பயன்படுத்தி உங்கள் தலைமுடியை நன்றாக கழுவுங்கள்.

முடியை மென்மையாகவும், மிருதுவாகவும், சேதமடையாமலும் பராமரியுங்கள்:

மிருதுவான, மென்மையான மற்றும் பளபளப்பான கூந்தலுக்கு, நீங்கள் சமையலறையில் வைத்திருக்கும் சில பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என்று ராஜ்குமார் கூறியுள்ளார். வெந்தயத்தை இரவில் ஒரு பாத்திரத்தில் ஊறவைத்து, காலையில் சிறிது வெங்காயம் சேர்த்து நன்றாக அரைக்கவும். இப்போது இந்த பேஸ்ட்டை தலைமுடியில் ஒரு மணி நேரம் தடவி விடவும். ஒரு மணி நேரத்திற்கு பிறகு, குளிர்ந்த நீரில் மட்டுமே தலைமுடியைக் கழுவவும். ஷாம்பூ போட்டு குளித்த பிறகு இந்த செயல்முறையை செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வாரம் இருமுறை இதைச் செய்வைத்தால், உங்கள் தலைமுடி மென்மையாகவும், மிருதுவாகவும், சேதமடையாமல் இருப்பதையும் நீங்கள் காண்பீர்கள்.

வீட்டிலேயே ஸ்பா செய்யுங்கள்:

சலூன்களில் ஸ்பாவிற்கு நிறைய பணம் செலவழிக்கப்படுகிறது, இதனால், அதை நீங்களே வீட்டில் செய்யலாம். இதற்கு கற்றாழையில் உள்ள ஜெல், உருளைக்கிழங்கு சாறு, சிறிது கருப்பட்ட வாழைப்பழம் மற்றும் வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இப்போது அதை முடியின் நுனியில் இருந்து வேர்கள் வரை நன்கு தடவி ஒரு மணி நேரம் விடவும். ஒரு மணி நேரத்திற்கு பிறகு, நன்கு ஷாம்பூ போட்டு கழுவவும். இதனால் உங்கள் தலைமுடி பளபளப்பாக மாறியிருப்பதை நீங்கள் காண்பீர்கள்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip