Search

School Morning Prayer Activities - 08.07.2024

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.07.2024


திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம்:கேள்வி

குறள் எண்:412

செவிக்குணவு இல்லாத பொழ்து சிறிது

வயிற்றுக்கும் ஈயப் படும்.

பொருள்:செவிக்குக் கேள்வியாகிய உணவு இல்லாத போது

(அதற்கு துணையாக உடலை ஓம்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.


பழமொழி :

Many a slip between the cup and the lip.


கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை


இரண்டொழுக்க பண்புகள் :


*எல்லோரிடமும் மரியாதையாகவும் இனிமையாகவும் பேசுவேன்.


*யாரிடமும் கெட்ட வார்த்தைகளை பேச மாட்டேன்.


பொன்மொழி :


செய்த தவறை ஏற்பதே தன்மானத்தின் சிகரம் ஆகும்.

காந்தியடிகள்


பொது அறிவு : 


1. 1984-ஆம் ஆண்டு இலவச சத்துணவு திட்டத்தை தமிழ்நாட்டில் ஆரம்பித்து வைத்தவர்


விடை: எம்.ஜி.ராமச்சந்திரன்


2. கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் இந்திய பெண் யார்?


விடை: சானியா மிர்சா.


English words & meanings :


 excitement-உற்காசம்,


 eagerness- ஆவல்


வேளாண்மையும் வாழ்வும் : 


நம்முடைய மண் வளத்தையும், இயற்கையையும் பாதுகாப்பதற்கு இயற்கை வேளாண்மை சிறந்த ஒன்று. இயற்கை வேளாண்மையை விவசாயத்தில் பயன்படுத்துவதால் மண்ணின் வளம் மேம்படுகிறது, மண்ணின் தன்மை சிதைவடையாமல் இருக்க உதவுகிறது


ஜூலை 8 இன்று


செளரவ் கங்குலி அவர்களின் பிறந்தநாள்


சௌரவ் சந்திதாஸ் கங்குலி (Sourav Chandidas Ganguly; ஒலிப்புⓘ; பிறப்பு: சூலை 8, 1972) தாதா என அன்பாக அழைக்கப்படுகிறார். அதற்கு வங்காள மொழியில் மூத்த சகோதரர் என்பது அர்த்தமாகும். இவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரரும் அணித்தலைவரும் ஆவார். தற்போது இவர் வங்காளத் துடுப்பாட்ட அவையின் தலைவராக உள்ளார்.[1] சர்வதேச துடுப்பாட்ட அரங்கில் மிகச் சிறந்த அணித் தலைவராகவும் மட்டையாளராகவும் விளங்கினார்.வலது புறங்களில் பந்துகளை அடிப்பதில் சிறந்தவர் எனவே இவர் காட் ஆஃப் தெ ஆஃப் சைட் (வலது புறத்தின் கடவுள்) என அழைக்கப்படுகிறார்


நீதிக்கதை


 ஓவியம்


ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தார் அவர் மிகப்பெரிய வீரர்.அவர் வெற்றி காணாத போரே இல்லை என்று கூறும் அளவிற்கு மிகப்பெரிய திறமைசாலி. 


நாட்டு மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்த மிகச்சிறந்த புகழ்பெற்ற அரசர் அவர்.


அவருக்கு ஒரு மகன் இருந்தார்.  அழகான அறிவான இளவரசன்


 ஆனால்,அவன் முதுகில் ஒரு கூன் இருந்தது. அவனால் எப்போதும் குனிந்தே தான் நடக்க இயலும். இவ்வாறு தன்மகனை பார்க்கும் போதெல்லாம் அரசர் மிகவும் வருத்தம் அடைந்தார்.


அண்டை நாடுகளில் உள்ள புகழ்பெற்ற மருத்துவர்களை வரவழைத்து,இளவரசருக்கு  சிகிச்சை  அளித்தும் எந்த பலனும் இல்லை. இளவரசனின் கூன் சரியாகவே இல்லை.

இறுதியாக பக்கத்து நாட்டில் ஒரு  வயது முதிர்ந்த மருத்துவரைப் பற்றி கேள்விப்பட்ட  அரசர் அவரை வரவழைத்து இளவரசருக்கு சிகிச்சை அளிக்க வேண்டினார்.


 அவரின் ஆலோசனைப்படி மருத்துவம் நடக்க ஒரு சில ஆண்டுகளில்  இளவரசனின் கூன் கொஞ்சம் கொஞ்சமாக சரியாக ஆரம்பித்து, கடைசியில் இளவரசர் நன்றாக நிமிர்ந்து நடக்க ஆரம்பித்தார்.



மன்னர் மகிழ்ச்சியுடன் மருத்துவருக்கு பொன்னும் பொருளையும் பரிசாக கொடுத்தார். 


அந்த மருத்துவரின் மருத்துவ முறையோ சற்று வித்தியாசமாக இருந்தது. ஏனென்றால் மருத்துவர்  இளவரசருக்கு மருந்துகள் எதுவும் கொடுக்கவில்லை.பதிலாக   அவர் நிமிர்ந்த நேர்கொண்ட பார்வையுடன் கூடிய ஒரு ஓவியம் ஒன்றை வரைய கட்டளையிட்டார். வரைந்த ஓவியத்தை இளவரசர் அன்றாடம் பார்க்கும் படியான இடங்களில் எல்லாம் வைக்க ஏற்பாடு செய்தார். அந்த படங்களை பார்க்க பார்க்க இளவரசருக்கு நாமும் ஒரு நாள் நன்றாக நடப்போம் என்ற மன எண்ணம் ஆழ்மனதில்  உருவானது. அந்த எண்ணமே விரைவில்  வெற்றி பெற்றது.



ஆம். மாணவர்களே! உங்களின் குறிக்கோள்களை ஓவியமாகவோ  எழுத்து வடிவமாகவோ வரைந்து தாங்கள் பார்வை படும்படியான இடங்களில் வையுங்கள். உங்கள் குறிக்கோளும் ஒரு நாள் நிஜமாகும்.


இன்றைய செய்திகள் - 08.07.2024


# காவிரிப் படுகையில் அகழாய்வு செய்தால், நிறைய தொல்லியல் எச்சங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக மத்திய அரசின் தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கருத்து.


# மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,832 கன அடியாக அதிகரித்துள்ளது.









# தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.


# மத்திய பட்ஜெட் ஜூலை 23-ல் தாக்கல்: வருமான வரிச் சலுகை எதிர்பார்ப்பு.


# இந்தோனேசியாவின்  சுண்ணாம்புக் குகையில் 51,200 ஆண்டுப் பழமையான ஓவியங்களை ஆஸ்திரேலியா, இந்தோனேசியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

# தமிழக பள்ளி அணிகளுக்கான லீக் ஹாக்கி போட்டி 38 மாவட்டங்களில் நேற்று தொடங்கியது.


# கோபா அமெரிக்க கால்பந்து தொடர்: பிரேசில் அணியை வீழ்த்தி உருகுவே அரையிறுதிக்கு முன்னேற்றம்.


# விம்பிள்டன் டென்னிஸ்: 4வது சுற்றுக்கு முன்னேறினார் அமெரிக்காவின்  டெய்லர் பிரிட்ஸ்.


Today's Headlines


🌸Amarnath Ramakrishnan, superintendent of the archeology department of the central government, is of the opinion that if excavation is carried out in the Cauvery basin, a lot of archeological remains are likely to be found.


🌸The flow of water to Mettur dam has increased to 2,832 cubic feet per second.


🌸Tamilnadu, Puducherry and Karaikal areas are likely to receive rain for 7 days from today, according to the Chennai Meteorological Department.


🌸Union Budget presented on July 23: Income tax relief expected.


🌸Researchers from Australia and Indonesia have discovered 51,200-year-old paintings in a limestone cave in Indonesia.


🌸The league hockey competition for Tamil Nadu school teams started yesterday in 38 districts.


🌸Copa America: Uruguay beats Brazil to advance to semi-finals.


🌸Wimbledon Tennis: America's Taylor Britts advanced to the 4th round.


Prepared by

Covai women ICT_போதிமரம்

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

மாவட்டம் விட்டு மாவட்டம் பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு தேதி மாற்றம்!!

மாவட்டம் விட்டு மாவட்டம்  பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு 11.7.2024க்கு பதிலாக 12.7.2024 அன்று முதல் நடைபெறும்.

IMG-20240706-WA0012


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news 

3,058 தலைமையாசிரியா் பணியிடங்கள்: பதவி உயா்வு மூலம் நிரப்ப முடிவு

 

.com/

பள்ளிக் கல்வித் துறையில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 3,058 தலைமை ஆசிரியா் பணியிடங்களை பதவி உயா்வு மூலம் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.


தமிழகத்தில் தொடக்கக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 31,336 தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 25.50 லட்சம் மாணவா்கள் பயில்கின்றனா். இவா்களுக்கு பாடம் நடத்த 1.07 லட்சம் ஆசிரியா்கள் பணிபுரிகின்றனா். இதற்கிடையே இடைநிலை ஆசிரியா் பதவி உயா்வு விதிகளில் திருத்தம் செய்து பள்ளிக்கல்வித் துறை கடந்த டிசம்பா் மாதம் அரசாணை வெளியிட்டது.


அதன்படி மாநில முன்னுரிமை அடிப்படையில் பதவி உயா்வு வழங்கப்படும். இடைநிலை பள்ளி ஆசிரியா்கள் இனி நேரடியாக தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியராக மட்டுமே பதவி உயா்வு பெற முடியும். பட்டதாரி ஆசிரியராக பதவி உயா்வு பெற முடியாது என்பன உள்ளிட்ட அம்சங்கள் அதில் இடம் பெற்றிருந்தன.


இதற்கு இடைநிலை ஆசிரியா் சங்கங்கள் எதிா்ப்பு தெரிவித்தாலும் தமிழக அரசு அறிவிப்பை திரும்பப் பெறவில்லை.


இந்த நிலையில் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 3,058 தலைமையாசிரியா் பணியிடங்கள் பதவி உயா்வு மூலம் நிரப்பப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் 1,983 பணியிடங்களும், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் 1,075 பணியிடங்களும் காலியாக உள்ளன. இந்த 3,058 பணியிடங்கள் பதவி உயா்வு மூலம் நிரப்பப்படவுள்ளன. இதற்கான பதவி உயா்வு கலந்தாய்வு ஒன்றிய அளவில்தான் நடத்தப்படும். மேலும், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் பதவி உயா்வுக்கு தகுதியான நபா்கள் இல்லாத போது அந்த இடத்துக்கு இடைநிலை ஆசிரியா்களை நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என அவா்கள் தெரிவித்தனா்.

IMG_20240707_091806


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

கெமிக்கல் ஹேர் டை பயன்படுத்தினால் பார்வை பறிபோகுமா..? பதற வைக்கும் தகவல்..!

 தலைமுடிக்கு சாயம் பூசுவது , டை அடிப்பது மற்றும் பல்வேறு வகையான தலைமுடி சிகிச்சைகள் செய்துகொள்வது ஆகியவை இன்று சாதாரண விஷயமாக மாறிவிட்டன. புதிய தோற்றத்தையும் ஸ்டைலையும் முயற்சித்து பார்ப்பது சந்தோஷமாக இருந்தாலும், இதை பயன்படுத்துவதால் நமது ஆரோக்கியத்தில் உண்டாகும் விளைவுகளை அறிந்துகொள்வதன் மூலம், பின்னால் வரக்கூடிய ஆபத்தான சூழ்நிலைகளைத் தவிர்க்க உதவும்.

நம்முடைய உச்சந்தலைக்கு அருகாமையில் கண்கள் இருப்பதால், ஹேர் டையில் உள்ள அம்மோனியா, ஹைட்ரஜன் பெராக்சைடு, ரெசார்சினோல், ஆல்கஹால், பராபென்ஸ் போன்ற ரசாயனங்கள் தற்செயலாக நம் கண்களில் பட வாய்ப்புள்ளது. இந்த இரசாயனங்களின் தீவிரம் மற்றும் ஹேர் டை அல்லது தலைமுடி வண்ணத்தில் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட இரசாயனங்கள் ஆகியவற்றைப் பொறுத்து பலவிதமான கண் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

News18

எதிர்பாராவிதமாக ஹேர் டை கண்களில் படுவதால் வரக்கூடிய பிரச்சனைகள்:

  • கண் எரிச்சல் - தற்காலிகமாக சிவந்து போகும்; தீக்காயம் பட்ட்து போல் எரியும்; ஏதோ கொட்டுவது போன்ற உணர்வுகள் இருக்கும்.

  • கருவிழிப்படல பாதிப்பு - வலி, ஒளிச்சேர்க்கை மற்றும் மங்கலான பார்வை போன்றவை ஏற்படலாம். ஆனால் பாதிப்பு அதிகம் இருந்தால், அரிதான சமயங்களில் நிரந்தர பார்வை இழப்பு கூட ஏற்படலாம்.

  • வெண்படல அழற்சி – சிவந்து போதல், கண்களில் நீர் வடிதல் மற்றும் அசௌகரியமாக உணர்தல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும்

  • இரசாயன தீக்காயங்கள் - கண் இமைகள் மற்றும் கருவிழிப்படலத்தில் வலி, சிவத்தல், வீக்கம் மற்றும் மங்கலான பார்வைக்கு வழிவகுக்கும்

  • அலர்ஜி - அரிப்பு, வீக்கம், சிவத்தல் மற்றும் படை நோய்

  • கெரட்டின் சிகிச்சை - முடியை நேராக்க இது பயன்படுகிறது. இதில் ஃபார்மால்டிஹைடு உள்ளது. அதன் காரணமாக கண் எரிச்சல் மற்றும் வீக்கத்திற்கு வழிவகுக்கும்.

  • மினாக்ஸிடில் - முடி வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் இந்த சிகிச்சையில் கடுமையான விழித்திரை பக்கவிளைவுகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

எதிர்பாராவிதமாக ஹேர்டை கண்களில் பட்டால் என்ன செய்ய வேண்டும்?

  • வெதுவெதுப்பான நீரைக் கொண்டு கண்களைச் சுத்தப்படுத்தவும். அப்படி சுத்தப்படுத்தும் போது இமைகளை மேலும் கீழும் இழுத்து எல்லாத் திசைகளிலும் பார்க்கவும்.

  • மேலும் பரவாமல் இருக்க கண்களை தேய்க்காமல் இருக்க வேண்டும்

  • கண் இமைகளில் இருக்கும் அதிகப்படியான சாயத்தை சுத்தமான துணி அல்லது துடைப்பான்கள் மூலம் மெதுவாக துடைத்து எடுக்கவும்

  • வீக்கம் மற்றும் எரிச்சலை குறைக்க ஐஸ்கட்டியை வைத்து ஒத்தடம் கொடுங்கள்.

  • இவை எதுவும் பலனளிக்கவிட்டால், உடனடியாக அருகிலுள்ள கண் மருத்துவரை சென்று பாருங்கள்

    தலைமுடிக்கு நிறம் அல்லது ஹேர் டை அடிக்கும் போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள்:

    • தேவைக்கு மேல் சாயத்தை உச்சந்தலையில் தங்கவிடாதீர்கள்.

    • இதை பயன்படுத்துவதற்கு முன் ஒவ்வாமை எதிர்வினைகள் ஏதாவது ஏற்படுகிறதா என்பதை பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்

    • புருவங்கள் மற்றும் இமைகளுக்கு ஒருபோதும் சாயம் பூசாதிர்கள்.

    • ஹேர் டை அடிக்கும்போது பாதுகாப்பிற்கு கண்ணாடிகளை அணிந்துகொள்ளவும். அதேப்போல் காண்டாக்ட் லென்ஸ்களையும் அகற்றிவிடுங்கள்.

    • நீங்கள் அமர்ந்திருக்கும் அறை நன்கு காற்றோட்டமாக இருக்க வேண்டும்

    • கையுறைகளை அணியுங்கள். கைகளை கழுவுவதற்கு முன் உங்கள் கண்களைத் தொடாதீர்கள்.

      Click here for more Health Tip

       Click here to join whatsapp group for daily health tip

ரூ.56,000 முதல் ரூ.2 லட்சம் வரை மாதச் சம்பளம்; சென்னை ஐகோர்ட்டில் மொழிப் பெயர்ப்பாளர் வேலை: தகுதி, பிற விவரம் இங்கே

 

சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள மொழிப்பெயர்ப்பாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியாக உள்ள 8 பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.சென்னை உயர் நீதிமன்றத்தின் தற்போதைய அறிவிப்பின்படி மொழிப்பெயர்ப்பாளர் (தமிழ் மற்றும் தெலுங்கு) பணிக்கு 5 பேர், மொழிப்பெயர்கள் (இந்தி), மொழிப்பெயர்கள் (கன்னடா), மொழிப்பெயர்கள் (மலையாளம்) பணிக்கு தலா ஒருவர் என மொத்தம் 8 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பணி விவரங்கள் 

மொழிப்பெயர்ப்பாளர் (தமிழ் மற்றும் தெலுங்கு) பணிக்கு ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி படிப்பை தமிழ், ஆங்கிலம், தெலுங்கு பாடத்துடன் முடித்திருக்க வேண்டும். மேலும் தமிழில் இருந்து ஆங்கிலத்திலும், ஆங்கிலத்தில் இருந்து தெலுங்கு மொழியிலும் மொழிப்பெயர்த்து எழுதவும், படிக்கவும் செய்ய தெரிந்திருக்க வேண்டும். அதோடு பணிக்கு தேர்வாகும் நபர்கள் தமிழக அரசு பணியாளர் ஆணையம் சார்பில் தமிழில் இருந்து ஆங்கிலத்திலும், ஆங்கிலத்திலும் இருந்து தமிழிலும், தெலுங்கில் இருந்து ஆங்கிலத்திலும், ஆங்கிலத்தில் இருந்து தெலுங்கு மொழியிலும் மொழிப் பெயர்ப்பு தேர்வில் தேர்ச்சி அடைய வேண்டும்.

மொழிப்பெயர்ப்பாளர் (இந்தி) பணியாளர் பணிக்கு டிகிரி படிப்பை ஆங்கிலம், இந்தி பாடத்துடன் முடித்திருக்க வேண்டும். அதோடு இந்தியில் இருந்து ஆங்கிலத்திலும், ஆங்கிலத்தில் இருந்து இந்தியிலும் மொழிப்பெயர்க்கவும், எழுதவும் படிக்கவும், தெரிந்திருக்க வேண்டும். அதோடு பணிக்கு தேர்வாகும் நபர்கள் தமிழக அரசு பணியாளர் ஆணையம் சார்பில் இந்தியில் இருந்து ஆங்கிலத்திலும், ஆங்கிலத்தில் இருந்து இந்தியிலும், தமிழில் இருந்து ஆங்கிலத்திலும், ஆங்கிலத்தில் இருந்து தமிழிலும் மொழிப் பெயர்ப்பு தேர்வில் தேர்ச்சி அடைய வேண்டும்.

இதே போல் கன்னடா, மலையாளம் ஆகிய மொழிப்பெயர்ப்பாளர் பணிக்கும் தகுதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதசம்பளமாக குறைந்தபட்சம் ரூ.56,100 வழங்கப்படும். அதிகபட்சமாக  ரூ.2.5 லட்சம் வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். மேற்கண்ட தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் mhc.tn.govi.in என்ற இணையதளம் மூலம் இம்மாதம் ஜுலை 27-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். உரிய விண்ணப்பத்த தொகை செலுத்தி இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். பிற வழிகளில் வரும் விண்ணப்பம் ஏற்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு 

இப் பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோருக்கு 100 மதிப்பெண்களுக்கான முதன்மை தேர்வு (.எம்.ஆர் முறை), அதன்பிறகு 100 மதிப்பெண்களுக்கான மெயின் தேர்வு, அதன்பிறகு 25 மதிப்பெண்ணுக்கான Viva தேர்வு நடத்தப்படும். இதில் தேர்ச்சி அடைபவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news