Search

இந்த காய்கறிகளை உங்க வீட்டு பால்கனியிலேயே வளர்க்கலாம்.. அதிக பராமரிப்பு தேவைப்படாது..!

 இன்றைய நவீன உலகில் உணவுக் கலப்படம் என்பது ஒரு முக்கிய கவலையாக உள்ளது. கடைகளில் கிடைக்கும் பல காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளால் நிறைந்திருக்கின்றன.

இருப்பினும், இதற்கு ஒரு எளிய மற்றும் பயனுள்ள தீர்வு ஒன்று உள்ளது, அதாவது காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவை உங்கள் வீட்டிலேயே வளர்ப்பதாகும். பால்கனி தோட்டங்கள், மாடித் தோட்டங்கள் அல்லது சமையலறை தோட்டங்கள் அமைத்து காய்கறிகள் மற்றும் பழங்களை சொந்தமாக விளைவிப்பதால், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உறுதிசெய்யலாம்.

News18

கட்டுப்பாடு மற்றும் விழிப்புணர்வு : 

CEF குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், நிறுவனருமான மனிந்தர் சிங் நய்யார் கூறியதாவது, ஒருவர் தங்கள் உணவுக்கு தேவையான பொருட்களை தாங்களே வளர்ப்பதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றலாம். ஒரு சாதாரண மனிதனால் ஒட்டுமொத்தமாக கலப்பட உணவுப் பொருட்களைக் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், அவர்கள் தங்கள் வீடுகளில் சொந்த தயாரிப்புகளை வளர்ப்பதால், கலப்பட உணவு எடுத்துக் கொள்வதை தடுக்க முடியும் என்று கூறியுள்ளார்.

ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து : 

கடைகளில் வாங்கும் காய்கறிகள் மற்றும் பழங்கள் உடன் ஒப்பிடும்போது, ​​வீட்டில் உற்பத்தி செய்யப்படும் தயாரிப்புகளில் வைட்டமின்கள், இருப்புசத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட்கள் அதிகமாக உள்ளன, இது ஆரோக்கியமான உணவு தேர்வாகும். உங்கள் தோட்டத்தில் இருந்து நேரடியாக புதிய, கலப்படமற்ற உணவை சாப்பிடும்போது உங்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வும் மேம்படும்.

சேமிப்பு : 

ஆரோக்கிய நன்மைகளை தவிர, நீங்களே உங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்களை உற்பத்தி செய்து கொள்வது உங்களின் பணத்தை சேமிக்க வழிவகுக்கும். பொதுவாக விதைகள் மற்றும் சிறிய தாவரங்கள் விலை குறைவானது, மேலும் காலப்போக்கில், காய்கறிகள் மற்றும் பழங்கள் வாங்கும் செலவும் குறைகிறது. இது குறித்து நய்யார் கூறியதாவது, அத்தகைய உணவு ஆரோக்கிய நலன்களைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், காலப்போக்கில் நிறைய பணத்தையும் சேமிக்க முடியும் என கூறியுள்ளார்.சுவை மற்றும் திருப்தி : 

பொதுவாக வீட்டில் தயாரிக்கப்படும் காய்கறிகள் மற்றும் பழங்கள் சுவைக்கு நிகரில்லை. சுவைகள் அதிகமாகவும், ஊட்டச்சத்து நிறைந்ததாகவும், எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்களே தயாரித்த உணவை சாப்பிடுவதால் திருப்தி உண்டாகும்.

நடைமுறை குறிப்புகள் : 

ZingyZest இன் உணவுப் பதிவர் சாரா ஹுசைன் என்பவர் வீட்டுத் தோட்டம் தொடர்பான தனது தனிப்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார். அதாவது, உணவில் கலப்படம் என்பது இன்று மிகவும் கவலையான விஷயங்களில் ஒன்றாகும். பொதுவாக வெளியில் வாங்கப்படும் காய்கறிகள் மற்றும் பழங்கள் எல்லாமே கலப்படம் செய்யப்படுகின்றன, மேலும் ஆர்கானிக் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை இருமடங்காக அதிகரித்துள்ளது, ஆனால் இது எளிதில் கிடைக்காது, என்று அவர் கூறியுள்ளார். மூலிகைகள் மற்றும் கொத்தமல்லி, துளசி, ஆர்கனோ, எலுமிச்சை மற்றும் பூண்டு போன்ற காய்கறிகள் வளர எளிதானவை மற்றும் குறைந்த இடம் இருந்தாலே போதுமானது என்றும் ஹுசைன் கூறியுள்ளார்.

உங்கள் சொந்த தோட்டத்தைத் அமைக்க சில குறிப்புகள் இங்கே:

  • சரியான இடத்தை தேர்வு செய்யவும்: பால்கனிகள், மொட்டை மாடிகள் அல்லது ஜன்னல்கள் போன்ற சரியான இடத்தை தேர்வுசெய்யவும்.

  • சிறியதாக தொடங்குங்கள்: மூலிகைகள் (கொத்தமல்லி, துளசி) போன்ற எளிதில் வளரக்கூடிய தாவரங்களுடன் தொடங்கி, படிப்படியாக காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு விரிவாக்குங்கள்.

  • தரமான மண்ணைப் பயன்படுத்துங்கள்: ஆரோக்கியமான தாவர வளர்ச்சியை உறுதிப்படுத்த நல்ல தரமான மண் மற்றும் உரத்தை பயன்படுத்துங்கள்.

  • தினசரி பராமரிப்பு: உங்கள் செடிகளுக்கு அடிக்கடி தண்ணீர் ஊற்றி, பூச்சிகளைக் கண்காணிக்கவும்.
    உங்கள் தோட்டங்களில் தாவரங்கள் வளர்வதைப் பார்த்து மகிழுங்கள். தீங்கு விளைவிக்கும் உணவுகளை கட்டுப்படுத்தி, சொந்த விளைபொருட்களை வளர்ப்பதன் மூலம், உணவுக் கலப்படத்தை தவிர்க்கலாம், நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம், பணத்தைச் சேமிக்கலாம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கலாம்.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

கேரளாவில் பரவும் மூளையைத் தின்னும் அமீபா.. இதன் ஆரம்ப நிலை அறிகுறிகள் எப்படி இருக்கும்..?

 கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபா பிரச்சனை உருவெடுத்துள்ளது. கோழிக்கோட்டைச் சேர்ந்த 14 வயதான மிருதுல் ஒரு குளத்தில் குளித்துள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த அந்த சிறுவன் தலைவலி மற்றும் வாந்தி பிரச்சனையால் அவதியடைந்துள்ளார். இதனையடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு primary amoebic meningoencephalitis எனப்படும் மூளையைத் தின்னும் அமீபா தொற்றால் அந்த சிறுவனுக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.

இதனையடுத்த சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த புதன் கிழமை சிகிச்சை பலனின்றி அந்த சிறுவன் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து கண்ணூரைச் சேர்ந்த 13 வயதான தக்‌ஷினா, மலப்புரத்தைச் சேர்ந்த 5 வயதான ஃபட்வா ஆகியோர் இந்த அமீபா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

தாக்‌ஷினா மூணாறுக்கு பள்ளி சுற்றுலா சென்று அங்கு நீச்சல் குளத்தில் குளித்தபோது இந்த அமீபா தொற்று ஏற்பட்டதாகவும், ஃபட்வா தனது வீட்டின் அருகே உள்ள ஆற்றில் உறவினர்களுடன் குளித்த போது தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மற்றொரு சிறுவனும் இந்த தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இதற்கிடையில், வெள்ளிக்கிழமையன்று முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், நீர்நிலைகளில் குளிப்பதை தவிர்க்கவும், நீச்சல் குளங்களில் குளோரினேஷன் செய்யப்படுவதை உறுதி செய்யவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

News18

முதன்மை அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் (primary amoebic meningoencephalitis - PAM) என்றால் என்ன?

முதன்மை அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் என்பது அரிதான மத்திய நரம்பு மண்டல தொற்று ஆகும், இது நன்னீர், ஏரிகள் மற்றும் ஆறுகளில் காணப்படும் அமீபாவால் ஏற்படுகிறது. அமீபிக் என்செபாலிடிஸ் எனப்படும் நோயின் வகைகளில் பிஏஎம் ஒன்றாகும். PAM இன் ஆரம்ப அறிகுறிகள் பாக்டீரியா மூளைக்காய்ச்சலைப் போலவே இருக்கும்.

பயோடெக்னாலஜி தகவல்களுக்கான தேசிய மையத்தின் அறிக்கையின்படி, இந்த தோற்றால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதம் 90% க்கும் அதிகமாக உள்ளது. இது மூளை செல்கள் மற்றும் திசுக்களை நேரடியாக பாதிக்கிறது என்பதால் இது மூளை உண்ணும் அமீபா என்றும் அழைக்கப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.

இந்த தொற்றானது மூக்கு வழியாக உடலில் நுழைந்து நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. மேலும் மூளை திசுக்களை அழித்து மூளை வீக்கத்தை ஏற்படுத்தும். இது பொதுவாக நீச்சல், டைவிங் அல்லது மற்ற நீர் விளையாட்டு பயிற்சி செய்யும் போது நிகழலாம். இந்த அரிய நோய் முக்கியமாக இளம் வயதுடையவர்களை பாதிக்கிறது.

அறிகுறிகள் என்ன?

காய்ச்சல், தலைவலி, கழுத்து விறைப்பு, குமட்டல் போன்ற பொதுவான மூளைக்காய்ச்சல் அறிகுறிகள் உண்டாகும் என அமெரிக்காவில் உள்ள நோய் கட்டுப்பாட்டு மையம் (CDC) அளித்த தகவலில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த அறிகுறிகள் தோன்றிய 1 முதல் 18 நாட்களுக்குள் இறப்பு நேரிடலாம்.
சிகிச்சை : 
இந்த நோய்த்தொற்று அரிதாக இருப்பதால் குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை. இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் பிழைக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

வயதானவர்களை தாக்கும் டிமென்ஷியா.. புறக்கணிக்கக் கூடாத 6 எச்சரிக்கை அறிகுறிகள்.!

 டிமென்ஷியா என்பது மூளையில் ஏற்படும் பாதிப்பு அல்லது மூளையில் ஏற்படும் காயம் போன்றவற்றால் ஏற்படும் குறைபாடு ஆகும். இது நம் சிந்தனைத் திறன், நினைவாற்றல் போன்றவற்றை பாதிக்கிறது. டிமென்ஷியா என்பது ஒரு நபரின் அன்றாட வாழ்க்கையின் அனைத்து செயல்பாடுகளையும் சுயமாகச் செய்யும் திறனைப் பாதிக்கும். அதாவது, நினைவாற்றல், பார்வை, பேச்சு, புரிதல், சுற்றுப்புறங்களைப் பற்றிய விழிப்புணர்வு, நடத்தையில் மாற்றம் மற்றும் அசாதாரண தூக்க முறைகள், தொலைந்து போவது ஆகியவை அடங்கும்.

வார்த்தைகளைத் தேடுவதில் சிரமம் மற்றும் குறுகிய கால நினைவாற்றல் போன்ற பிரச்சனைகள் ஆரம்ப அறிகுறிகளுக்கு பொதுவான எடுத்துக்காட்டுகள் என்றாலும், டிமென்ஷியா என்பது வயது ரீதியான ஒரு சாதாரண விஷயம் இல்லை என்பதைப் புரிந்துகொள்வதும் அவசியமாகும்.

வயதுக்கு ஏற்ப லேசான நினைவாற்றல் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றன, ஆனால் இதுபோன்ற பிரச்சனைகள் நம் அன்றாட நடவடிக்கைகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தாது. இத்தகைய அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிவது நோயின் முன்னேற்றத்தைத் தடுக்க உதவுகிறது மற்றும் நோயாளிகள் சுதந்திரமான வாழ்க்கையை வாழவும் உதவுகிறது.

News18

டிமென்ஷியா குறித்து 6 எச்சரிக்கை அறிகுறிகள் பற்றி பார்ப்போம்..

டிமென்ஷியா தினசரி வாழ்க்கையை சீர்குலைக்கிறது:

முக்கியமான தேதிகளை மறந்துவிடுதல் அல்லது அதே தகவலை திரும்பத் திரும்பக் கேட்பது, வயதானால் ஏற்படும் மறதியை விட மிக தீவிரமான அறிகுறிகளாக இருக்கலாம்.

நிதிகளை திட்டமிடுதலில் சிரமம்:

புனேவின், பேனரில் உள்ள மணிப்பால் மருத்துவமனையின் நரம்பியல் மருத்துவரான டாக்டர் சின்மய் கும்பர் கூறியதாவது, நிதி தொடர்பான விஷயங்களை நிர்வகிப்பது அல்லது செய்முறையைப் பின்பற்றுவது போன்ற வழக்கமான வேலைகளை முடிக்க கடினமாக இருப்பதை ஒருவர் அனுபவித்தல், இது நிர்வாக செயலிழப்பு என்று அழைக்கப்படுகிறது.

தேதிகள் அல்லது இடத்தை மறைத்தல்:

டிமென்ஷியாவின் ஆரம்ப அறிகுறிகள் பழக்கமான இடங்களில் இருந்து தொலைந்து போவது அல்லது தேதிகள் மற்றும் பருவங்களை மறப்பது ஆகியவை அடங்கும்.

மனநிலை மாற்றங்கள்:அதிகரித்த எரிச்சல் அல்லது மனச்சோர்வு போன்ற மனநிலையில் ஏற்படும் இந்த குறிப்பிடத்தக்க மாற்றம் டிமென்ஷியாவின் வளர்ச்சியுடன் ஒத்துப்போகலாம். மேலும், டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் வழக்கத்தை விட அதிக பதட்டமாகவோ அல்லது பயமாகவோ தோன்றலாம்.

குழப்பம் மற்றும் தொடர்புகொள்வதில் சிரமம்:

பேச்சுக்களைப் பின்பற்றுவதில் சிக்கல் அல்லது பொருத்தமான சொற்களைக் கொண்டு வருவது அறிவாற்றல் குறைபாட்டைக் குறிக்கலாம். ஆரம்ப நிலையில், டிமென்ஷியா நோயாளிகள் அடிக்கடி குழப்பத்தை அனுபவிக்கலாம். அவர்கள் முகங்களை அடையாளம் கண்டுகொள்வது, நாள் அல்லது மாதத்தை தீர்மானிப்பது அல்லது தன்னை தானே கண்டறிவது போன்றவற்றில் சிரமங்கள் ஏற்படும்.

பொருட்களை தவறாக வைப்பது:

தவறான இடங்களில் பொருட்களை வைப்பது அல்லது யாரையாவது திருடிவிட்டார்கள் என குற்றம் சாட்டுவது போன்றவை நினைவாற்றல் பிரச்சனையின் அறிகுறிகளாக இருக்கலாம். உதாரணமாக, அவர்கள் தங்கள் வாகனத்தின் சாவியை இழப்பது, அந்த நாளில் என்ன செய்ய வேண்டும் என்பதை மறப்பது போன்றவையாகும்.

சிகிச்சை:

  • வரும் முன் காப்பதே சிறந்தது. டிமென்ஷியாவும் வராமல் தடுக்கலாம். அதாவது, சிறந்த கல்வி, சமூகமயமாவது, வழக்கமான உடற்பயிற்சி, நல்ல தூக்கம் ஆகியவற்றாலும், குறுக்கெழுத்து, சுடோகு, திரைப்படம் பார்ப்பது, யோகா மற்றும் தியானம் போன்ற மூளையைத் தூண்டும் செயல்களில் ஈடுபடுவதாலும், மது மற்றும் புகைபிடிப்பதைத் தவிர்ப்பதாலும் டிமென்ஷியாவைத் தடுக்க உதவும்.

    குறைந்தப்பட்ச அறிவாற்றல் குறைபாடு (MCI) ஸ்டேஜ் என்று அறியப்படும் டிமென்ஷியாவை ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்த புதிய மருந்துகள் கிடைக்கின்றன, இது தீவிரமான டிமென்ஷியாவை தடுக்க உதவுகிறது மற்றும் நோயாளிகள் தங்கள் அன்றாட வாழ்க்கையின் செயல்பாடுகளை சுயமாகச் செய்யும் திறனைத் தக்க வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

காலாவதி தேதி முடிந்த உணவுகளை சாப்பிட்டால் என்ன ஆகும்..? நிபுணர் தரும் விளக்கம்..!

 
நாம் கடையில் பொருட்கள் வாங்கும் போது, அதன் பாக்கெட்டில் உற்பத்தி மற்றும் காலாவதி தேதியை கண்டிப்பாகப் பார்ப்போம். இன்றைக்கு நாம் வாங்கும் பெரும்பாலான பொருட்கள் பேக்கேஜ் வடிவத்தில் தான் கிடைக்கின்றன. இதன் பாக்கெட்டின் மேல் இரண்டு தேதிகள் எழுதப்பட்டிருக்கும். ஒன்று இந்த பொருள் இந்த மாதத்தில் அல்லது இந்த தேதியில் தயாரிக்கப்பட்டது என்றும், இன்னொன்று இந்த தேதிக்குப் பிறகு காலாவதியாகும் என்பதையும் குறிக்கும். காலாவதி தேதிக்குப் பிறகு அந்த உணவை சாப்பிடலாமா?

ஆனால் பால், ரொட்டி, நம்கீன், மசாலா, கிரீம், பவுடர் போன்ற அனைத்து பேக் செய்யப்பட்ட பொருட்களின் பாக்கெட்டுகளிலும் ஏன் காலாவதி தேதி மற்றும் இந்த தேதிக்கு முன் பயன்படுத்துவது நல்லது என எழுதப்பட்டுள்ளது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இந்தத் தேதி கடந்துவிட்டால், அந்தப் பொருள் உண்மையில் கெட்டுப்போய் சாப்பிடுவதற்கு தகுதியற்றதாக மாறிவிடுமா? காலாவதியான பிறகு எந்தவொரு பொருளையும் பயன்படுத்துவதில் ஏதேனும் தீங்கு உண்டா? FSSAI-ன் தேசிய உணவு ஆய்வகத்தின் இயக்குநர் ஏ.கே.அதிகாரி இந்தக் கேள்விகளுக்கான பதில்களை தருகிறார்.

News18

உற்பத்தி மற்றும் காலாவதி தேதி என்றால் என்ன?

FSSAI விதிகளின்படி உணவு, அழகுசாதனப் பொருட்கள், பானங்கள் அல்லது நுகர்வோர் பயன்படுத்தும் பொருட்களின் பாக்கெட்டில் அதன் உற்பத்தி மற்றும் காலாவதி தேதி எழுதப்பட்டிருக்க வேண்டும். உற்பத்தித் தேதி என்பது பொருள் தயாரிக்கப்பட்டு பேக் செய்யப்பட்ட தேதியாகும். அதேசமயம் காலாவதி தேதி என்பது இந்த தேதிக்குப் பிறகு பொருளைப் பயன்படுத்த வேண்டாம் என்று குறிப்பதற்கான தேதியாகும். அதையும் மீறி பயன்படுத்தினால் ஆபத்துகள் வருவதற்கும் வாய்ப்புள்ளது.

காலாவதி தேதி முடிந்தவுடன் பொருட்கள் கெட்டுப் போகுமா?

எந்தவொரு பொருளும் அதன் காலாவதி தேதி வந்தவுடனோ அல்லது அதற்கடுத்த நாட்களிலிலோ அதை தூக்கி எறிய வேண்டும் என உணவுத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். ஏனென்றால் அதன் சுவை, வாசனை ஆகியவற்றில் சில வேறுபாடுகள் இருக்கலாம். துர்நாற்றம் வீசலாம்; பாலாக இருந்தால் திரிந்து போகலாம். தயிரின் சுவையில் வித்தியாசம் இருக்கலாம்.

மசாலா, உலர் பழங்கள், பிற உணவுப் பொருட்கள், எண்ணெய்கள், ஷாம்புகள், கிரீம்கள் போன்றவற்றை அவை காலாவதியான பிறகும் 8-10 நாட்களுக்கு பயன்படுத்தலாம். இதனை உடனடியாக தூக்கி எறிய வேண்டும் என்ற அவசியமில்லை ஆனால் இதற்கும் ஒரு வரம்பு இருக்கிறது.

இந்த விவகாரம் சட்ட நடவடிக்கையுடன் தொடர்புடையது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இதுபோன்ற காலாவாதியான ஒரு பொருளை உட்கொண்டதால் மக்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறி வழக்கு ஒன்று நீதிமன்றத்திற்கு வந்தது. அவர்கள் சம்மந்தபட்ட நிறுவனம் மீது வழக்கும் பதிவு செய்தனர். ஆனால் காலாவதி தேதியை கடந்த பிறகும் அந்த நபர்கள் பொருட்களை பயன்படுத்தியுள்ளது அதன்பிறகே தெரிய வந்தது. அதன் காரணமாகவே இதை சாப்பிட்ட நபர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகையால் அந்த நிறுவனத்தின் மீது எந்த தவறு இல்லாத காரணத்தினால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

எனவே, காலாவதி தேதி பிரச்சனை சட்ட நடவடிக்கைகளிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒருவேளை தயாரிப்பு தேதி காலாவதியாகாத போதிலும் பொருளில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டால், அதன் உற்பத்தியாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

அடிக்கடி காரணமே இல்லாமல் உங்க மனநிலை மாறுதா..? இந்த விட்டமின் குறைபாடா கூட இருக்கலாம்.!

 நம்முடைய மனநிலை மற்றும் மூளையின் பிற செயல்பாடுகளை பாதிக்கும் மூளை ரசாயனங்களை உற்பத்தி செய்வதில் வைட்டமின் பி-12 முக்கிய பங்கு வகிக்கிறது. சிவப்பு இரத்த அணுக்கள், செல் வளர்சிதை மாற்றம், நரம்பு செயல்பாடு மற்றும் டிஎன்ஏ உற்பத்தி ஆகியவற்றில் இந்த வைட்டமின் பி-12 (கோபாலமின் என்றும் அழைக்கப்படுகிறது) முக்கிய பங்கு வகிக்கிறது.

வைட்டமின் பி12 குறைபாடு உடையவர்களுக்கு விசித்திரமான உணர்வுகள், உணர்வின்மை அல்லது கை, கால்கள் அல்லது கால்களில் கூச்ச உணர்வு, நடப்பதில் சிரமம் (தடுமாற்றம், சமநிலைப் பிரச்சனைகள்), ரத்த சோகை, சிந்தனைத்திறன் (அறிவாற்றல் குறைபாடுகள்), நினைவாற்றல் இழப்பு, பலவீனம் அல்லது சோர்வு போன்ற பொதுவான அறிகுறிகள் ஏற்படும்.

News18

நமது மனநிலையை வைட்டமின் பி-12 எவ்வாறு பாதிக்கிறது?


நம்முடைய மனநிலை மற்றும் மூளையின் பிற செயல்பாடுகளை பாதிக்கும் மூளை ரசாயனங்களை தயாரிப்பதில் வைட்டமின் பி-12 மற்றும் பிற பி வைட்டமின்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறைந்த அளவு பி-12 மற்றும் வைட்டமின் பி-6, ஃபோலேட் போன்ற பிற பி வைட்டமின்கள் குறைவாக இருப்பதற்கும் மன அழுத்தம் ஏற்படுவதற்கும் நெருங்கிய தொடர்புள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.


மோசமான டயட் அல்லது நாம் சாப்பிடும் உணவின் மூலம் கிடைக்கும் வைட்டமின்களை உறிஞ்சுவதில் சிரமம் காரணமாக இந்த குறைபாடுகள் ஏற்படலாம். ஆகவே நம்முடைய மனநிலையை ஒழுங்குபடுத்துவதற்கும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் போதுமான பி-12 அளவைப் பராமரிப்பது அவசியமாகும். சிக்கன், இறைச்சி, மீன் மற்றும் பால் பொருட்களில் வைட்டமின் பி-12 அதிகமாக காணப்படுகிறது. அதுமட்டுமின்றி மாத்திரைகளாகவும், ஊசி அல்லது நாசி ஸ்ப்ரேயாகவும் இது கிடைக்கிறது.

வைட்டமின் பி-12 குறைபாட்டால் யார் அதிகம் பாதிக்கப்படுவார்கள்?

சைவம் அல்லது வீகன் உணவை உட்கொள்பவர்கள் வைட்டமின் பி-12 குறைபாட்டிற்கு ஆளாகலாம். வயதானவர்கள் மற்றும் செரிமான பாதை பிரச்சனை உள்ளவர்களும் வைட்டமின் பி-12 குறைபாட்டிற்கு ஆளாகின்றனர். செரோடோனின் போன்ற முக்கியமான மூளை இரசாயனங்களை உற்பத்தி செய்வதில் வைட்டமின் பி 12 முக்கிய பங்கு வகிக்கிறது, இது நமது மனநிலையை சீராக்க உதவுகிறது. வைட்டமின் பி12 அளவுகள் குறையும் போது, ​​இந்த இரசாயனங்கள் சமநிலையற்று, மனநிலை மாற்றங்கள், எரிச்சல் மற்றும் மனச்சோர்வு போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கும். ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பாலினத்தவருமே வைட்டமின் பி12 குறைபாட்டால் மனநிலை மாற்றங்களை அனுபவிக்கிறார்கள்.

வைட்டமின் பி12 குறைபாட்டிற்கும் மனச்சோர்விற்கும் தொடர்புள்ளதாக ஆய்வுகள் கூறினாலும், ஒருவருக்கு மனநிலை மாற்றங்கள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும். இதற்கு வேறு ஏதாவது காரணங்கள் இருக்கிறதா அல்லது பி12 குறைபாடு காரணமாக இப்படி ஏற்படுகிறதா என்பதை அறிய மருத்துவரை அணுக வேண்டும்.

ஆரம்பத்திலேயே நோயை கண்டறிதல் மற்றும் உடனடி சிகிச்சையைத் தொடங்குவது மூலம் நோயாளியின் அறிகுறிகளை விரைவாக மேம்படுத்த முடியும். உயர் இரத்த அழுத்தம் மற்றும் ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்தல், புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதலை கைவிடுதல், உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருத்தல், போதுமான தூக்கம் மற்றும் மன அழுத்தத்தை நிர்வகித்தல் போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிக்க வேண்டியதன் அவசியத்தையும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.




Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

2-2-2 மெத்தட் என்றால் என்ன? வைரலாகும் வெயிட் லாஸ் ட்ரெண்ட் !

 பல்வேறு உடற்பயிற்சிகள், சமசீரான உணவுகள், பழங்கள் உள்ளிட்டவை எடை குறைப்புக்கு உதவுகின்றன . அவற்றில் ஒன்று 2-2-2 மெத்தட் ஆகும். சமீப காலமாக வைரலாகி வரும் இந்த புதிய 2-2-2 முறை குறைத்த வைரல் போஸ்ட் ஒன்று அதிகமான பார்வையாளர்களை பெற்றது. இந்த முறையானது, ஒருவரின் வளர்சிதை மாற்றத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

மேலும், 2-2-2 எடை குறைப்பு நடைமுறையில் கீட்டோ, இடைப்பட்ட நேரங்களில் சாப்பிடாமல் இருப்பது(இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்), கார்போஹைட்ரேட் லோடிங் மற்றும் HIIT உடற்பயிற்சிகள் போன்ற பல்வேறு நுட்பங்கள் இதில் அடங்கும்.

நியூயார்க் போஸ்ட்டின் கூற்றுப்படி, 2-2-2 முறையானது இரண்டு பெரிய பாட்டில்களில் தண்ணீரைக் குடிப்பது, பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவது மற்றும் இரண்டு வேலை நடைபயிற்சிகளை மேற்கொள்வது ஆகியவை அடங்கும்.

ஜார்ஜியாவைச் சேர்ந்த ஹெல்த் கோச்சான ஜென்னா ரிஸோ கூறியதாவது, பருகும் தண்ணீரின் அளவு என்பது வானிலை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பொறுத்தது. பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவை ஒருவரின் உணவுத் திட்டத்திற்கு கூடுதல் நன்மைகளை வழங்குகிறன்றன என்றும் அவர் விளக்கினார். மேலும், இந்த முறையை நீங்கள் மூன்று வாரங்கள் பின்பற்றினால், உங்கள் எடை குறைந்திருக்கும், மேலும், இன்னும் பின்பற்ற வேண்டும் என்றும் உங்களுக்கு தோன்றும் என்றும் குறிப்பிட்டார்.

சமச்சீர் உணவுடன் உடலுக்கு ஹைட்ரேஷனை வழங்குவதில் இந்த முறை நன்மை அளிக்கிறது. இதில் உயர்பயிற்சி, பழங்கள், காய்கறிகள் மற்றும் தண்ணீர் ஆகியவை எடுத்துக்கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள். அதாவது தினமும் 2 பழங்கள் மற்றும் 2 காய்கறிகள் மற்றும் 2 லிட்டர் தண்ணீர் மற்றும் ஒரு நாளைக்கு 2 வேளை நடைபயிற்சி ஆகியனவாகும்.

ஒருவர் தன் உடலை ஹைட்ரேட்டாக வைத்திருப்பது மிகவும் அவசியம் என்பதால், ஒவ்வொரு நாளும் இரண்டு பாட்டில் தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும், தினசரி இரண்டு பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட் ஆகியவை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு எடை குறைக்கவும் உதவும். மற்றும், இரண்டு வேளை நடைபயிற்சி மேற்கொள்வதால், இதயம் மற்றும் மனநிலை மேம்படுவதோடு, மேலும் உடலில் இருக்கும் கூடுதல் கலோரிகளை எரிக்கிறதுஇயன் கே. ஸ்மித், எம்.டி மற்றும் தி மெட் ஃப்ளெக்ஸ் ஆகிய இரண்டு டயட்டின் ஆசிரியர்களால் இது முதன்முதலாக உருவாக்கப்பட்டது: பர்ன் பெட்டர் ஃப்யூயல், பர்ன் மோர் ஃபேட், 2-2-2 முறை ஆகியவை மெட் ஃப்ளெக்ஸ் டயட் வெயிட் லாஸ் ப்ரோக்ராமின் ஒரு பதிப்பாக விவரிக்கப்படுகிறது. டாக்டர். ஸ்மித்தின் கூற்றுப்படி, மொத்தத்தில் 2-2-2 முறை ஆனது பல்வேறு வகையான உணவு வகைகள் (கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகள்), உணவு அல்லாத தொடர்புடைய அம்சங்கள் மற்றும் இரண்டு வகையான உடற்பயிற்சிகள் ஆகியனவாகும்.



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

குழந்தைகள் அதிக நேரம் போன் பாக்குறாங்களா ..? பெற்றோர்கள ஸ்க்ரீன் டைம் பற்றி தெரிஞ்சுக்கோங்க

 

மனித உடம்பில் முக்கிய உறுப்புகளில் ஒன்றாக கண் உள்ளது. ஆனால் பொதுமக்கள் பலரும் கண்களை சரியான முறையில் பராமரிப்பது இல்லை. குழந்தைகளும் இந்த காலகட்டத்தில் மொபைல் ஃபோன் இல்லாமல் இருப்பதில்லை. இது போன்ற பல இக்கட்டான சூழ்நிலையில் பொதுமக்கள் தங்களது உடம்புகளை கவனித்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள்.

டிஜிட்டல் சாதனங்களின் ஒளிரும் திரைகள் முதல் புற ஊதா கதிர்வீச்சு மற்றும் மாசுபாடு போன்ற சுற்றுச்சூழல் காரணிகள் வரை நமது கண்கள் தினமும் பல்வேறு சவால்களுக்கு ஆளாகின்றன. இருப்பினும், கண்களுக்கு சரியான ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தையும் நாம் அளிக்க வேண்டும்.

பொதுமக்கள் தினமும் சில அத்தியாவசிய கண் பராமரிப்பு, பழக்கங்களை கடைபிடித்து கண்களை கவனித்து வந்தால் கண் பிரச்சனைகளை எளிதில் தவிர்க்கலாம். கண்களை எவ்வாறு பராமரிப்பது? குழந்தைகளுக்கு மொபைல் ஃபோன் கொடுக்கலாமா என பல தகவல்களை நம்மிடம் பகிர்ந்து உள்ளார் விழுப்புரம் மாவட்ட அரசு கண் மருத்துவர் டாக்டர் உமாராணி.

பிறந்த குழந்தையின் முதல், 5 வருட குழந்தைகள் வரை விட்டமின் ஏ சொலுஷன் ட்ராப்ஸ் ஆறு மாதத்திற்கு ஒரு முறை எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக சத்துக்கள் நிறைந்துள்ள காய்கறிகளை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். இரவு நேரத்தில் போனில் உள்ள வெளிச்சத்தை குறைத்து மொபைலை பயன்படுத்தக் கூடாது. மங்கலான வெளிச்சத்தில் படிக்கக் கூடாது. அதுபோன்று நடந்து கொண்டே படிக்கக் கூடாது. இதன் மூலம் பார்வை குறைபாடு, பார்வை பிரச்சனைகள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும்.

மேலும் பெரியவர்களுக்கு பார்வை குறைபாடு, வயது தொடர்பான மாகுலர் சிதைவு (மாகுலர் டிஜெனரேஷன்) பிரச்சனை ஏற்படும். மேலும் டயாபட்டீஸ் உள்ளவர்களுக்கு விழித்திரை கோளாறும் ஏற்படும். எனவே இந்த நோய் உள்ளவர்கள் கண் மருத்துவர் அணுகி கண்களை பரிசோதித்து கொள்ள வேண்டும். மேலும் கண்ணாடி அணியும் நபர்கள் ஆறு மாதத்திற்கு ஒரு முறை தங்களுடைய கண்ணாடிகளை பரிசோதித்து கொள்ள வேண்டும். குறிப்பாக கம்ப்யூட்டர் மொபைலில் வேலை செய்யும் ஐடி ஊழியர்கள், மற்ற நபர்கள் ஒரு நாளில் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது 20 நிமிஷம் கண்ணிற்கு ஓய்வு கொடுப்பது மிகவும் முக்கியமானதாகும். அதனுடன் சிஸ்டம் பார்க்கும் நபர்கள் LUBRICANT EYE DROPS மற்றும் ANTI REFLECTIVE COATING கிளாசஸ் பயன்படுத்திக் கொள்ளலாம்

அதுபோல இரண்டு முதல் மூன்று வயதுடைய குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே ஆஸ்டிஜிமாடிசம் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதனால் குழந்தைகளுக்கு கெரடோகோனஸ் நோய் ஏற்படும். எனவே குழந்தைகளை மருத்துவரிடம் அழைத்து இந்த நோயை வராமல் தடுப்பதற்கு அவர்களுக்கு தேவையான பரிசோதனை பெற்றுக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு ஸ்கிரீனிங் டைம் கட்டாயமாக இல்லை. முடிந்த அளவிற்கு குழந்தைகளை டிவி பார்க்காமலும், செல்போன்களை பயன்படுத்தாமல் பார்த்துக் கொள்வது பெற்றோர்களின் கடமையாகும். அப்படி கட்டாயமாக தேவை என்றால் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் மட்டும்தான் குழந்தைகளின் ஸ்கிரீனிங் டைம் ஆக இருக்க வேண்டும்.

பொதுமக்கள் தூங்கி எழுந்தவுடன் அல்லது கண்களில் ஏதேனும் தூசி பட்டால் உடனடியாக கண்களை தேய்ப்பது கூடாது. இறந்தவுடன் கண்களை குளிர்ந்த நீரில் கழுவிய பிறகு மற்ற வேலைகளை பார்க்க வேண்டும். அதுபோல தூங்க செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக செல்போன்களை பயன்படுத்தக் கூடாது. நிச்சயமாக இப்போ உள்ள மக்கள் இரவு நேரத்தில் மொபைலில் உள்ள ஐ கம்பர்ட் ஆப்ஷனை பயன்படுத்தி செல்போன்களை பயன்படுத்திகிறார்கள், அப்படியே அந்த ஆப்ஷனை பயன்படுத்தினாலும் 2 மணி நேரத்திற்கு மேல் செல்போன்களை பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால் கண்ணுக்கும், முளைக்கும் நேரான நரம்பு தொடர்பு உள்ளதால், நீங்கள் ஓய்வெடுத்தால் தான் மூளையும் ஓய்வெடுக்கும்.

கண்களுக்கு எண்ணெய், தாய்ப்பால் ஊற்றலாமா?

பொதுமக்களுக்கு கண்களில் கண் எரிச்சல், கண்களில் தூசி விழுந்தாலோ கண்களில் எண்ணெய் விடுவது, தாய்ப்பால் ஊற்றுவது, கண்ணை சுத்தம் செய்கிறேன் என எலுமிச்சை சாறு ஊற்றுவது போன்ற எந்த ஒரு செய்கையும் செய்யக்கூடாது.

பொதுமக்களுக்கு கண் சிகிச்சை திட்டம் : அரசு மருத்துவமனைகளில் மருத்துவ காப்பீடு திட்ட மூலம் பொது மக்களுக்கு கண்சதை, கண்புரை சிகிச்சை செய்யப்படுகிறது என கண் மருத்துவர் உமாராணி தெரிவித்தார்.



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

தினமும் பூண்டு சாப்பிடுவதால் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா..? மகத்தான மருத்துவ குணங்கள்..!

 

பூண்டு சமையல் மரபுகள், பல்வேறு கலாச்சார நடைமுறைகள், மற்றும் மருத்துவ சிகிச்சைகளில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இது வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், தாமிரம், இரும்பு போன்ற அத்தியாவசிய தாதுக்களின் சிறந்த மூலமாகும்.

பூண்டின் ஆரோக்கிய நன்மைகள் சோர்வைப் போக்கவும், உழைப்பாளிகளின் சகிப்புத்தன்மையை அதிகரிக்கவும் பயன்படுத்தப்பட்டன. கிரேக்க ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் கூட தங்கள் தடகள செயல்திறனை மேம்படுத்த பூண்டு சாப்பிடுவார்கள்.
பூண்டு சளி, காய்ச்சலை நீக்கி, கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துகிறது. இது தமனிகளில் பிளேக் படிவதைத் தடுக்கின்றதால், இதய நோய்களின் அபாயங்களை குறைக்க முடியும்.

பூண்டு சாப்பிடுவதால் புற்றுநோய் அபாயங்கள் குறைகின்றன. பூண்டின் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் பெருங்குடல், வயிறு, கணையம், மற்றும் மார்பகப் புற்றுநோய்களைத் தடுக்க உதவுகின்றன. அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கம், தசை, மற்றும் மூட்டு வலிகளை எளிதாக்கி கீல்வாதத்தைத் தடுக்க உதவுகின்றன.


News18

பூண்டு உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி இதய நோய்களை தடுக்கும். உடல் எடை குறைய, கொழுப்பை குறைக்க, எடை மேலாண்மைக்கு உதவும். முகப்பரு குறைக்க, சருமத்தை சுத்தப்படுத்தி உதவும். பாக்டீரியாக்களை குறைக்க, சருமத்தை தெளிவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.

பூண்டு என்பது வெங்காயம், லீக்ஸ் மற்றும் குடைமிளகாயுடன் தொடர்புடைய ஒரு மூலிகையாகும். இது இதயம் மற்றும் இரத்த அமைப்புகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. அல்லிசின் பூண்டு வாசனையையும் உண்டாக்குகிறது மற்றும் பூண்டின் விளைவுகளையும் மாற்றும்.



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

TABLET TRACKING | EMIS NEW UPDATE

 

📱 TABLET TRACKING | EMIS NEW UPDATE


https://youtu.be/uogdnh0N8jM


🛜  _தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிக்கு வழங்கப்பட்ட TABLET எண்ணிக்கை மற்றும் எந்த ஆசிரியர்களுக்கு எந்த TABLET ஒதுக்கீடு செய்யப்பட்டது என்ற விவரத்தை EMIS வலைதளத்தில் UPDATE செய்ய_


https://youtu.be/C_7UEXTsWcg


🛜 _எண்ணும் எழுத்தும் கற்பிக்கும் ஆசிரியர்கள் TABLET பெற்றுக் கொண்ட பிறகு அதன் விவரத்தை EMIS வலைதளத்தில் அப்டேட் செய்ய_


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

ஆசிரியர்களுக்கு Tab வழங்குதல் மற்றும் EMIS இல் பதிவு செய்தல் சார்ந்த விவரம்.

 IMG-20240710-WA0047

1)Tab பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்க கூறப்பட்டது.


2) ஒரு பள்ளியில் 5 tab   கொடுக்கப்பட்டு அந்தப் பள்ளியில் ஐந்தாசிரியர்கள் எனில் மீதம் இருக்காது. ஒவ்வொருவருக்கும் ஒன்று என்று மீதம் இல்லாமல் சரியாக இருக்கும் 1.1அதுவே ஒரு பள்ளிக்கு 5 tab வழங்கப்பட்டு மூன்று ஆசிரியர்கள் மட்டுமே இருந்திருந்தால் மீதமுள்ள இரண்டு டேப்பை அந்த பள்ளியிலேயே வைத்திருக்க வேண்டும். 


1.2) ஒரு பள்ளிக்கு ஐந்து tab வழங்கிய பின் அப்பள்ளியில் ஏழு ஆசிரியர்கள் எனில் இரண்டு ஆசிரியர்களுக்கான tabயை எந்தப் பள்ளியில் மீதமிருந்து stockல்  வைக்கப்பட்டுள்ளதோ அந்தப் பள்ளியில் இருந்து வழங்க கூறப்பட்டது.


2)  தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியிலிருந்து வந்திருக்கும் ஆசிரியர்களுக்கு இந்த tab வழங்க வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.


3)தலைமையாசிரியர்கள் எந்த serial number உள்ள Tab எந்த ஆசிரியரிடம் வழங்கப்பட்டுள்ளது என்ற விவரத்தினை EMIS webportalல் உடனடியாக பதிவிடவும்.


3) Tab பெற்ற ஆசிரியர்கள்  அவரது Individual emis loginல் சென்று Tab பெற்ற விவரத்தை Yes/No  என பதிவிட வேண்டும்.


4.இப்பதிவு பெற்று ஒரு வாரம் கழித்து இந்த Tab பயன்படுத்தியதற்கான feedback form (ஏழு கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும் ) பூர்த்தி செய்ய வேண்டும்.


EMIS website இல் பதிவு செய்வதற்கான வழிமுறைகள்.


School EMIS login -- school -- Infrastructure -- Tablet tracking -- Enter received count இதில் எத்தனை tablet (Tab) பெறப்பட்டது என்ற எண்ணிக்கை பதிவிட வேண்டும்.


பதிவிட்டவுடன் - Teacher ID choose  பண்ணி இந்த teacherக்கு நேராக எந்த serial number tablet அந்த ஆசிரியருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தினை பதிவிட வேண்டும்.




🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news