Search

ஆகஸ்ட் 3 - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

 ஆடிப் பெருக்கு மற்றும் விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 3-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆகஸ்ட் 3-ஆம் தேதி (சனிக்கிழமை) அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இயங்காது என்று தெரிவித்துள்ளார்.



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

School Morning Prayer Activities - 24.07.2024

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.07.2024

திருக்குறள் 

பால் : பொருட்பால்


அதிகாரம்: அறிவு உடைமை


குறள் எண்:425

உலகம் தழீஇயது ஒட்பம்; மலர்தலும்


கூம்பலும் இல்லது அறிவு.


பொருள்: உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கிக் கொள்வது சிறந்த அறிவு; முன்னே மகிழ்ந்து

விரிதலும் பின்னே வருந்திக் குவிதலும் இல்லாதது அறிவு.


பழமொழி :

ஐந்தில் ல் வளையாதது ஐம்பதில் வளையுமா?


A young twig is easier twisted than an old tree


இரண்டொழுக்க பண்புகள் :


*மழை பெய்யும் போது மரம் மற்றும் மின்கம்பிகள் அருகில் நிற்க மாட்டேன். 


 *மழைக்காலங்களில் பாதுகாப்பு ஆடைகள், சூடான குடிநீர் பயன்படுத்துவேன்.


பொன்மொழி :


தயங்குபவர் கை தட்டுகிறார், துணிந்தவர் கை தட்டல் பெறுகிறார்.----பிடல் காஸ்ட்ரோ


பொது அறிவு : 


1. மிகப்பெரிய வால் நட்சத்திரம் எது?



விடை: ஹோம்ஸ்


2. நமது மூளையானது எத்தனை லட்சம் செல்களால் ஆனது?


விடை: ஏறக்குறைய 60 லட்சம் 


English words & meanings :


 Thorough-முழுமையான,


  perfect-சரியான


வேளாண்மையும் வாழ்வும் : 


மாப்பிள்ளை சம்பா

இது தமிழ்நாட்டின் பாரம்பரிய அரிசி வகைகளில்ஒன்றாகும், இதில் மினரல்ஸ் (தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள்) உயிர்ச்சத்து, புரதச்சத்து அதிக அளவில் உள்ளது


நீதிக்கதை


 பொறுமை


ஒருமுறை தாமஸ் ஆல்வா எடிசன் அவர்கள் வெஸ்டர்ன் யூனியன்  நிறுவனத்திற்கு ஒரு இயந்திரம் வடிவமைத்து கொடுத்தார்.  அவருக்கு அந்த இயந்திரத்திற்கு என்ன விலை நிர்ணயம் செய்வது என்று ஒரே குழப்பமாக இருந்தது.


அவரும்,அவரது மனைவியும் அந்த விலை நிர்ணயத்தை பற்றி விவாதித்தார்கள்.


எடிசனின் மனைவி " 20000 டாலர் கேளுங்கள்" என்றார்.எடிசன் "இந்த தொகை அதிகமாக இருந்தால் நமது இயந்திரத்தை வேண்டாம் என்று சொல்லி விட்டால் என்ன செய்வது" என்று யோசித்தார்.


பணத்தை தருவதற்காக, மூத்த அதிகாரி ஒருவரை  வெஸ்டன் யூனியன் நிறுவனம் அனுப்பி இருந்தது. அதிகாரி எடிசனிடம், "இயந்திரம் என்ன விலை"? என்று கேட்டார்.



எடிசன் ஒன்றும் பேசாமல் சில நிமிடங்கள் மௌனமாகவே இருந்தார். பொறுமை இழந்த அதிகாரி," எடிசன் சார், இதோ உங்களது இயந்திரத்திற்கான  விலை நூறாயிரம் டாலர்கள் இதோ உங்கள் இயந்திரத்திற்கான முதல் தவணை தொகை இது" என்று காசோலையை  எடிசனிடம், கொடுத்துவிட்டு இயந்திரத்தை எடுத்துக்கொண்டு சென்றார்.



அவசரப்படாமல் பொறுமை காத்த எடிசனுக்கு நான்கு மடங்கு லாபம் ஏற்பட்டது. அவசரம் நமக்கு சிப்பிகளை தரலாம்.ஆனால் பொறுமையே நமக்கு முத்துக்களை தரும். பொறுமை அனுபவத்தின் வெளிப்பாடு அதுவே நம் வாழ்க்கையில் ஏற்படும்  துன்பங்களைத் துடைக்கும்  துடுப்பாய் பயன்படும்.



இன்றைய செய்திகள் - 24.07.2024



🔖கற்பித்தல், பள்ளி நிர்வாகம் தவிர்த்து வேறு பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு.



🔖ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 77 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு: அனைத்து அருவிகளும் முழுமையாக மூழ்கின.


🔖வங்கதேசத்தில் சிக்கித் தவித்த தமிழக மாணவர்கள் 131 பேர் பாதுகாப்பாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.


🔖மத்திய பட்ஜெட் 2024 எதிரொலி: தங்கம், வெள்ளி, செல்போன், காலணி விலை குறைகிறது.


🔖அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராகிறார் கமலா ஹாரிஸ்: 7 மணி நேரத்தில் ரூ.391 கோடி நன்கொடை குவிந்தது.


🔖மகளிர் ஆசிய கோப்பை வரலாற்றில் சதம் அடித்த முதல் வீராங்கனையாக வரலாற்று சாதனை படைத்த இலங்கை வீராங்கனை சமாரி அத்தபத்து.


🔖மகளிர் ஆசிய கோப்பை: யு.ஏ.இ. அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி.


🔖ஒலிம்பிக் தொடருடன் டென்னிஸ் போட்டியிலிருந்து ஓய்வு - ஆண்டி முர்ரே அறிவிப்பு.


Today's Headlines


🔖Teachers should not be engaged in other work except teaching, school administration: High Court Madurai branch ordered.


🔖  Water flow into Okanagal Cauvery River is increased to 77,000 cubic feet : All waterfalls completely submerged.


🔖131 Tamil Nadu students who were stranded in Bangladesh have been safely brought to Chennai.


 🔖Union Budget 2024: Gold, Silver, Cellphone, Footwear Prices Drop.


🔖 Kamala Harris is becoming the Democratic Party candidate in the US presidential election: 391 crores of donations were accumulated just in 7 hours.


 🔖Sri Lankan player Samari Athapatthu made history by becoming the first female player to score a century in the history of Women's Asia Cup.


 🔖Women's Asia Cup:   A huge victory for Pakistan by defeating the UAE  team.


 🔖Andy Murray Announced his Tennis Retirement after  Olympic Series.

 

Prepared by

Covai women ICT_போதிமரம்

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

வருமான வரி திட்டத்தில் புதிய மாற்றங்கள் - மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு.

 

 வருமான வரி நிலையான கழிவு ரூ.75,000 ஆக அதிகரிப்பு

தனி நபர் வருமான வரி விதிப்பில் மாற்றமில்லை.

வருமான வரி நிலையான கழிவு ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.75 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏஞ்சல் வரி விதிப்பு முறை முற்றிலும் அகற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வருமான வரி விதிப்பு முறையில் தனி நபர்களுக்கான வருவாயில், ரூ. 3 லட்சம் வரை வரி விதிப்பு இல்லை .

ரூ.7 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும்.

ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும்.

ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கு 15 சதவீதம் விரி விதிக்கப்படும்.

ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கு 20 சதவீதம் வரி விதிக்கப்படும்.

ரூ.15 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டுவோருக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும்.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனங்கள், திரட்டும் மூலதனத்துக்கு விதிக்கப்படுவது ஏஞ்சல் வரி. புதிய நிறுவனங்கள் முதலீட்டாளர்களிடமிருந்து நிதி கோரினால், ஏஞ்சல் வரி விதிப்பு நடைமுறையில் இருந்தது. இது ரத்து செய்யப்படுகிறது.

NEW TAX REGIME 


Standard deduction at 75000 vs 50000 earlier 


Tax rates changed in New Tax regime 


0-3lakh - Nil 

3-7 lakh -5% 

7-10 lakh -10%

10-12 lakh -15%

12- 15lakh -20% 

Above 15Lakh -30% 


Capital Gains Tax:


Short Term now 20% 

(instead of 15%)


Long term now 12.5%

(instead of 10%)




🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்த பிறகு 'இ-வெரிஃபை' செய்வது எப்படி? செய்யாவிட்டால் என்ன ஆகும்?


.com/

வருமான வரி கணக்குத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நெருங்கி வருகிறது. 2023-2024 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இம்மாத இறுதியில் முடிவடைகிறது.


இந்தக் காலக்கெடுவுக்குள் வரிக் கணக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் மற்றும் ரிட்டர்ன் தாக்கல் செய்வது மட்டும் போதாது. ரிட்டர்ன் தாக்கல் முடிந்தவுடன், குறிப்பிட்ட நேரத்திற்குள் வரி அறிக்கைகளுக்கு மின்னணு சரிபார்ப்பு (இ-வெரிஃபை - E-Verify) செய்யப்பட வேண்டும்.



பொதுவாக, ரிட்டர்ன் தாக்கல் செய்தவர்களுக்கு, வருமான வரித்துறை இ-வெரிஃபை சரிபார்ப்புக்கான காலக்கெடுவை வழங்கும். முன்னதாக இந்தக் காலக்கெடு 120 நாட்களாக இருந்தது. இது இம்முறை 30 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.


வரி செலுத்துவோர் ரிட்டர்ன்களைத் தாக்கல் செய்து, உரிய தேதிக்குள் இணையத்தில் சரிபார்க்கவில்லை என்றால், அந்த ரிட்டர்ன் கோரிக்கைகள் செல்லாது


வருமான வரித்துறை மின்னணு சரிபார்ப்புக்கு பல்வேறு வழிகளை பரிந்துரைக்கிறது. அந்த வழிமுறைகள் இங்கே பகிரப்பட்டுள்ளன.


இ-வெரிஃபைக்கான வழிமுறைகள்

டிஜிட்டல் கையொப்ப சான்றிதழ்

ஆதார் OTP

வங்கிக் கணக்கு அல்லது டிமேட் கணக்கைப் பயன்படுத்தி மின்னணு சரிபார்ப்புக் குறியீட்டைக் கொண்டு சரிபார்ப்பது

ஆஃப்லைன் பயன்முறையில் வங்கி ஏடிஎம் மூலம் சரிபார்ப்பது

நெட் பேங்கிங் மூலமாகவும் சரிபார்த்துக் கொள்ளலாம்.


ஆதார் OTP மூலம் இ-வெரிஃபை செய்வது எப்படி?

இ-வெரிஃபை பக்கத்தில், 'I would like to verify using OTP on mobile number with Aadhaar' என்ற அம்சத்தை கிளிக் செய்து 'Continue’ அழுத்தவும்

ஆதார் OTP பக்கத்தில் உள்ள 'நான் எனது ஆதார் விவரங்களைச் சரிபார்க்க ஒப்புக்கொள்கிறேன்' என்ற தேர்வுப்பெட்டியைக் கிளிக் செய்து, ஆதார் OTP ஐ உருவாக்கும் அம்சத்தை கிளிக் செய்யவும்.



அதன் பிறகு ஆதார் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் 6 இலக்க OTP ஐ உள்ளிட்டு வெரிஃபை பொத்தானை அழுத்தவும்


அதன் பிறகு வெற்றிகரமாக வெரிஃபை செய்யப்பட்டதற்கான தகவலுடன் பரிவர்த்தனை ஐ.டி. (transaction ID) இருக்கக் கூடிய பக்கம் தோன்றும். அந்த பரிவர்த்தனை ஐடியை நீங்கள் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.



இ-ஃபைலிங் போர்ட்டலில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல முகவரிக்கு ஐடி வருமானம் சரிபார்க்கப்பட்டதாக உறுதிப்படுத்தும் தகவல் வரும்.



ஆன்லைன் வங்கிச் சேவை வாயிலாக இ-வெரிஃபை செய்வது எப்படி?



இ-வெரிஃபை பக்கத்தில், 'Through Net Banking' என்ற இணைப்பைக் கிளிக் செய்து, தொடரவும்


நீங்கள் இ-வெரிஃபை செய்ய விரும்பும் வங்கியைத் தேர்ந்தெடுத்து 'continue’ என்பதை கிளிக் செய்யவும்


'Disclaimer’-ஐ படித்துப் புரிந்துகொண்டு 'continue’ என்பதைக் கிளிக் செய்யவும்


அதன் பிறகு, உங்கள் வங்கிக் கணக்கு நெட் பேங்கிங் உள்நுழைவு பக்கத்திற்குச் செல்லும்


பயனர் ஐ.டி. மற்றும் கடவுச்சொல் மூலம் நெட் பேங்கிங்கில் உள்நுழையவும்



வங்கியின் இணையதளத்தில் e-Filing என்ற அம்சத்தில் உள்நுழைவதற்கான இணைப்பு இருக்கும், அதை கிளிக் செய்யவும்


பக்கத்தில், 'Download Engineer Utility’ என்பதைக் கிளிக் செய்யவும்

Engineer Utility பதிவிறக்கம் செய்யப்பட்டு நிறுவல் முடிந்ததும், உங்கள் அடையாளத்தை சரிபார்க்கவும் என்ற பக்கத்தில் 'I have downloaded and install Engineer Utility' என்பதைத் தேர்ந்தெடுத்து 'தொடரவும்’ என்பதைக் கிளிக் செய்யவும்

தரவு அடையாளப் பக்கத்தில் வழங்குநர், சான்றிதழைத் தேர்ந்தெடுத்து வழங்குநரின் கடவுச்சொல்லை உள்ளிடவும். அதன் பிறகு Sign-ஐ அழுத்தவும்

பரிவர்த்தனை ஐ.டி-யுடன் வெற்றிச் செய்தி பக்கம் தோன்றும். அந்த பரிவர்த்தனை ஐ.டி-யைக் குறித்துக் கொள்ளவும்.

இ-ஃபைலிங் போர்ட்டலில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு ஐடி வருமானம் சரிபார்க்கப்பட்டதாக உறுதிப்படுத்தும் தகவல் வரும்.


மின்னணு சரிபார்ப்பில் தாமதம் ஏற்பட்டால் அபராதம் உண்டா?

கொடுக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் இ-வெரிஃபை செய்யாவிட்டால், உங்கள் வருமானம் தாக்கல் செய்யப்பட்டதாக கருதப்படாது. ஐ.டி.ஆர் தாக்கல் செய்யாதது வருமான வரிச் சட்டம், 1961-இன் கீழ் பொருந்தக்கூடிய அனைத்து விளைவுகளையும் சந்திக்க வேண்டும்.


இருப்பினும், காலக்கெடுவுக்குள் சரிபார்ப்பை ஏன் செய்ய முடியவில்லை என்று கோரிக்கை வைக்கலாம். இந்தக் கோரிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள காரணம் செல்லுபடியாகும் பட்சத்தில், வருமான வரித் துறை இ-வெரிஃபை மேலும் ஒரு வாய்ப்பு அளிக்கும்.


மின்னணு சரிபார்ப்புக் குறியீடு (EVC) என்றால் என்ன?

மின்னணு சரிபார்ப்புக் குறியீடு (EVC) என்பது 10 இலக்க எண் குறியீடாகும்.



சரிபார்ப்பு செயல்முறைக்காக, வங்கி கணக்கு மற்றும் டிமேட் கணக்கில் பதிவுசெய்யப்பட்ட இ-ஃபைலிங் போர்டல், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடிக்கு இது அனுப்பப்படும்

EVC ஆனது உருவாக்கப்பட்ட நேரத்திலிருந்து 72 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும்.

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news


சிறுநீரகக் கல் பிரச்சனை இருக்கவங்க இந்த 3 உணவுகளை தொடவே கூடாது.!

 

சிறுநீரக கற்கள் தோன்றிவிட்டால், உயிரையே கொல்லும் அளவுக்கு வலி எடுத்துவிடும்.. கிட்னியில் கற்கள் பெரிதாக இருந்தால், உடனடியாக டாக்டரை சந்திக்க வேண்டும்.. ஆனால், ஆரம்ப நிலையில் இருந்தால், இந்த கற்களை எளிய முறையில், உணவு முறையிலேயே குணப்படுத்திவிடலாம் என்கிறார்கள் நிபுணர்கள். உணவு பழக்கத்தை சரியாக கடைப்பிடித்தால், கற்கள் வராமல் தடுக்கலாம்.. அத்துடன், ஆரம்பகட்ட சிறுநீரகக் கற்களையும் இதே உணவு பழக்கத்தால் கரைத்துவிடலாம்.

எனவே, உங்களுக்கு சிறுநீரகக் கற்கள் இருப்பது கண்டறியப்பட்டாலோ அல்லது உங்களுக்கு சிறுநீரகக் கல் இருந்தாலோ என்ன சாப்பிட வேண்டும், எதைச் சாப்பிடக்கூடாது என்பதைச் சரிபார்ப்பது அவசியம். அந்த வலிமிகுந்த சிறுநீரகக் கற்களைத் தடுக்க நீங்கள் முயற்சிக்கிறீர்கள் என்றால், நீங்கள் தவிர்க்க வேண்டிய மூன்று உணவுகள் உள்ளன, அவை மதிய உணவு இறைச்சி, சோடா பாப் மற்றும் உலர்ந்த பழங்கள் ஆகியனவாகும்.

News18

நெச்சுரோஃபேதிக் மருத்துவரான டாக்டர் ஜானைன் பௌரிங், சிறுநீரகக் கற்கள் உருவாகும் வாய்ப்புகள் இருந்தால் தவிர்க்க வேண்டிய மூன்று மோசமான உணவுகளை குறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். மேலும், ஹைதராபாத்தில் உள்ள கேர் ஹாஸ்பிடல்ஸ் பஞ்சாரா ஹில்ஸின் சிறுநீரக ஆலோசகரான டாக்டர் பி வம்ஷி கிருஷ்ணா கூறியதாவது, சிறுநீரக கற்களால் பாதிக்கப்படுபவர்கள் மதிய உணவு இறைச்சி, சோடா பாப் மற்றும் உலர்ந்த பழங்கள் சாப்பிடுவதை தவிர்ப்பது அல்லது கட்டுப்படுத்துவது நல்லது என்று கூறியுள்ளார்.

மதிய உணவு இறைச்சி என்பது டெலி மீட் அல்லது கோல்ட் கட்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. மதிய உணவு இறைச்சிகள் பொதுவாக க்யூரிங், ஸ்மோக்கிங் அல்லது ப்ரீசர்வேடிவ் சேர்ப்பதன் மூலம் பதப்படுத்தப்படுகின்றன. மேலும் ஹாம், துர்க்கி, கோழி, சிக்கன், ரோஸ்ட் பீப், சலாமி, போலோக்னா மற்றும் பெப்பரோனி போன்றவையும் பதப்படுத்தப்படுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

சிறுநீரக கல் உருவாவதற்கு பங்களிக்கும் உணவுகள்:

சாதாரணமாக இருக்கும் நபர்கள் உப்பு அதிகம் உள்ள உணவுப்பொருளையும் மற்றும் இனிப்பு அதிகம் உள்ள உணவுப்பொருட்களையும் சாப்பிடக் கூடாது. ஒருவேளை இதுபோன்ற உணவுகளை எடுத்துக்கொண்டால் அது சிறுநீரக கற்கள் அதிகமாக உருவாவதற்கு தூண்டும் வகையில் இருக்கும் என்று மருத்துவ ஊட்டச்சத்து நிபுணர் இஷி கோஸ்லா கூறுகிறார்.

சிறுநீரக கல் உருவாவதற்கு பங்களிக்கும் உணவுகள் குறித்து டாக்டர் கிருஷ்ணா கூரியாவது.

  • மதிய உணவு இறைச்சி: மதிய உணவு இறைச்சி ஆனது சோடியம், கொழுப்பு மற்றும் சில சமயங்களில் சர்க்கரைகள் மற்றும் நைட்ரேட்டுகள்/நைட்ரைட்டுகள் சேர்க்கப்பட்ட உணவுகள் ஆகியவற்றில் அதிகமாக இருக்கலாம், அவை அடிக்கடி சாப்பிடுவதற்கு உகந்ததல்ல. அதிகப்படியான சோடியம் சிறுநீரில் கால்சியம் அளவை அதிகரிக்கலாம், அதே நேரத்தில் அனிமல் ப்ரோட்டீனை அதிகமாக சாப்பிட்டால் யூரிக் ஆசிட் உற்பத்தியை அதிகரித்து இரண்டும் சிறுநீரகத்திலும் கல் உருவாவதற்கு வாய்ப்பளிக்கின்றன.

  • சோடா பாப்: பல சோடாக்களில், குறிப்பாக கோலாக்களில், அதிக அளவு பாஸ்போரிக் ஆசிட் உள்ளது, இது சிறுநீரக கற்கள் அபாயத்தை அதிகரிக்கும். கூடுதலாக, அதிக சர்க்கரை உள்ள உணவுகளை சாப்பிட்டால் உடல் பருமன் மற்றும் இன்சுலின் எதிர்ப்புக்கு வழிவகுக்கிறது. மேலும், அவை சிறுநீரக கற்கள் உண்டாக்குவதற்கான மற்றொரு காரணங்களாகும்.

  • உலர்ந்த பழங்கள்: சிறுநீரகத்தில் கல் பிரச்சனை இருந்தால் ஆக்சலேட் சார்ந்த உணவுகளை அதிகம் சாப்பிடக்கூடாது. அதாவது திராட்சை, பாதாம், முந்திரி, பிஸ்தா, வேர்க்கடலை, இனிப்பு பண்டங்கள், சர்க்கரைவள்ளிக்கிழங்கு, வால்நட் மற்றும் ஸ்ட்ராபெர்ரி ஆகிய உணவுகளில் அதிகளவு ஆக்சலேட் இருப்பதால் இந்த உணவுகளை சிறுநீரக கல் உள்ளவர்கள் சாப்பிடுவதை தவிர்த்துக்கொள்வது நல்லது.
    இதைத்தவிர, உப்பு, சிப்ஸ், பாப்கார்ன், அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய், கருவாடு, பாதாம், பிஸ்தா, ஸ்ட்ராங் காபி, டீ, சமையல் சோடா, கூல்டிரிங்ஸ்கள், சாக்லேட், ஆல்கஹால் இவைகளை தவிர்த்தாலே போதும், எப்போதுமே சிறுநீரகத்தில் கற்கள் சேராது.. கல்லின் அளவு 5 மிமீக்கு குறைவாக இருந்தால் மட்டுமே வீட்டு மருத்துவம் பயன்படுமே தவிர, இதுவே தீர்வுகிடையாது. கற்களின் அளவு பெரிதானால், டாக்டரை கண்டிப்பாக சந்திக்க வேண்டும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

மார்பகப் புற்றுநோயை தவிர்க்க இந்த உணவு மற்றும் உடற்பயிற்சிகளை மட்டும் பின்பற்றினாலே போதுமா.?

 மார்பக புற்றுநோய் என்பது இந்தியாவில் பெரும்பாலான நபர்களை தாக்கும் ஒரு பொதுவான வகை புற்றுநோயாக அமைகிறது. இதன் காரணமாக இதற்கான தடுப்பு முறைகளை நாம் கட்டாயமாக தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. வழக்கமான பரிசோதனைகள் மற்றும் பிற ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பயிற்சிகளுடன் சேர்ந்து உணவு மற்றும் உடற்பயிற்சி போன்ற வாழ்க்கை முறை காரணிகளும் மார்பக புற்றுநோயை தடுப்பதில் முக்கிய பங்கு கொண்டுள்ளது.

உணவு மற்றும் உடற்பயிற்சி ஆகியவை நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு கொண்டிருக்கும் பொழுது, அவை மார்பக புற்றுநோய் அபாயத்தை குறைப்பதற்கும் காரணமாகிறது. 30 முதல் 35 வயதிலான பெண்கள் பெரும்பாலும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். வாழ்க்கை முறை காரணமாக சிறுவயதிலேயே பூப்படையும் பெண்கள் மற்றும் தாமதமாக நடைபெறும் மெனோபாஸ் போன்றவை மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது.

இதற்கு முக்கிய காரணம் உடலுக்கு போதிய செயல்பாடு அளிக்காமல் இருத்தலும், புகைப்பிடித்தல் அல்லது பிற எந்த வடிவத்திலாவது புகையிலை பயன்படுத்துவதாலும் ஏற்படுகிறது. மேலும் 35 வயதிற்கு பிறகு தாமதமாக கர்ப்பம் தரிப்பதாலும் மார்பக புற்றுநோய் உண்டாகலாம். அதோடு தாய்ப்பால் ஊட்டாமல் இருப்பது, மார்பகத்தின் மரபணு சார்ந்த வரலாறு அல்லது கருப்பை புற்றுநோய் போன்றவை மார்பக புற்றுநோயை ஏற்படுத்தலாம்.

இறுதியாக பெண்களில் மலட்டுத்தன்மையை சரி செய்வதற்கு வழங்கப்படும் ஹார்மோன் ஊக்க மருந்துகள் மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது. மார்பக புற்றுநோயானது மரபணு, ஹார்மோன், சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை முறை காரணிகள் ஆகிய அனைத்தின் விளைவாக தூண்டப்படுகிறது.

மார்பக புற்றுநோயை தடுப்பதில் உணவின் பங்கு : 

  • சரிவிகித ஊட்டச்சத்து மற்றும் வழக்கமான உடற்பயிற்சி மூலமாக ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பது அவசியம். உடல் பருமன் மற்றும் அதிகமான உடல் எடை ஆகிய இரண்டும் மெனோபாஸுக்கு பிறகு கொழுப்பு செல்கள் உற்பத்தி செய்யும் அதிக அளவு ஈஸ்ட்ரோஜன் காரணமாக மார்பக புற்று நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கின்றன. ஆகவே உங்களுடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வதற்கு பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் மெலிந்த புரதங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் நிறைந்த உணவை தினமும் சாப்பிடுங்கள்.

  • காய்கறிகள், பழங்கள் மற்றும் முழு தானியங்கள் அடங்கிய உணவை தினமும் சாப்பிடுவதால் மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் குறையும் என்று ஒரு சில ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

  • மது அருந்துவது மார்பக புற்றுநோய் உண்டாவதற்கான அபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆகவே முடிந்த அளவு மது அருந்துவதை குறைத்துக் கொள்வது நல்லது. ஏனெனில் இது ஹார்மோன் அளவுகளை அதிகரித்து மார்பக புற்றுநோயை உண்டாக்கலாம்.

  • நட்ஸ் வகைகள், விதைகள், அவகாடோ பழம் மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகளை தேர்ந்தெடுப்பது உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து, ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்கிறது.

  • சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகம் உள்ள உணவை சாப்பிடுவது மார்பக புற்றுநோயை ஏற்படுத்தலாம். பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் அடங்கிய டோஃபு, சோயா பால் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள முழு தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவை ஹார்மோன் அளவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி, செரிமான ஆரோக்கியத்திற்கு ஆதரவு தருவதன் மூலமாக மார்பக புற்று நோய்க்கு எதிரான விளைவுகளை வெளிப்படுத்துகிறது.


  • மார்பக புற்றுநோய் அபாயத்தை குறைப்பதில் உடற்பயிற்சியின் தாக்கம் : 

    • விறுவிறுப்பான நடை பயிற்சி, ஜாகிங், நீச்சல் அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்ற உடற்பயிற்சிகளை வழக்கமான முறையில் செய்வது ஆரோக்கியமான உடல் எடையை பராமரித்து மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. மார்பக புற்றுநோய் அபாயத்துடன் தொடர்புள்ள ஈஸ்ட்ரோஜன் மற்றும் இன்சுலின் அளவுகளை உடற்பயிற்சி குறைக்க உதவுகிறது.

    • மேலும் உடற்பயிற்சியானது வீக்கத்தை குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, மனநலனை மேம்படுத்துவதால் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கு பங்களிக்கிறது. இந்த காரணிகள் அனைத்தும் மறைமுகமாக மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவுகின்றன. நீங்கள் தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்து வரும் பொழுது உங்களுடைய ஹார்மோன் அளவுகள் சமநிலை அடைந்து புற்றுநோய் வளர்ச்சி தடுக்கப்படுகிறது.

      • எனவே புற்றுநோயை தடுப்பதற்கு மட்டுமல்லாமல் உங்களுடைய ஒட்டுமொத்த நல்வாழ்வை கருதி ஆரோக்கியமான உணவையும் உடற்பயிற்சியையும் உங்களது அன்றாட வழக்கத்தில் சேர்த்துக்கொள்ள தவறாதீர்கள்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

இந்தியாவின் பெரும்பாலான நுரையீரல் புற்றுநோயாளிகள் தங்கள் வாழ்நாளில் புகைப்பிடித்ததேயில்லை.. அதிர்ச்சியூட்டும் ஆய்வு முடிவுகள்.!

 இந்தியாவில் நுரையீரல் புற்றுநோயின் தாக்கம் வியத்தகு மாற்றத்திற்கு உள்ளாகி வருகிறது. பாரம்பரியமாக புகைப்பழக்கத்துடன் தொடர்புடையதாக அறியப்படும் நுரையீரல் புற்றுநோய், தற்போது இந்தப் பழக்கம் இல்லாத நபர்களையும் அதிகளவில் பாதிக்கிறது.

சமீபத்தில் நம்மை திடுக்கிடச் செய்யும் ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நுரையீரல் புற்றுநோயாளிகளில் கணிசமான பகுதியினர், குறிப்பாக பெண்கள், புகைப்பிடிக்காதவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது. இந்தப் போக்கு அபாய ஒலியை எழுப்புகிறது. ஏனென்றால் நாட்டில் நுரையீரல் புற்றுநோயின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் காரணிகளின் சிக்கலான தொடர்பை இது கோடிட்டு காட்டியுள்ளது. குறிப்பாக புகையிலை கட்டுப்பாட்டிற்கு அப்பாலும் தடுப்பு நடவடிக்கைகளை கையாள வேண்டும் என்பதையும் ஆபத்து காரணிகளை மறு மதிப்பீடு செய்ய வேண்டிய அவசியத்தையும் இது உணர்த்தியுள்ளது.

News18

இதற்கு சுற்றுச்சூழல் காரணிகளின் பங்கை, குறிப்பாக காற்று மாசுபாட்டை வலியுறுத்துகிறார் டில்லியில் உள்ள சிகே பிர்லா மருத்துவமனையின் நுரையீரல் நிபுணர் டாக்டர்.விகாஸ் மிட்டல். புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் வருவதற்கு காற்று மாசுபாடு (PM2.5) குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்கிறது. இந்தியாவில் உள்ள மற்றொரு பொது சுகாதார பிரச்சனையான காசநோயின் பரவலும் நுரையீரல் பாதிப்பை அதிகப்படுத்தி, புற்றுநோயின் ஆபத்தை அதிகரிக்கலாம்.

புகைப்பிடிப்பவரின் அருகில் அமர்ந்திருத்தல், ரசாயன தொழிற்சாலைகளில் பணிபுரிதல் மற்றும் மரபணு ஆகியவையும் நுரையீரல் புற்றுநோய்க்கு போதுமான பங்களிப்பைச் செய்கின்றன வழக்கமான உடல்நலப் பரிசோதனைகள் மற்றும் நுரையீரல் புற்றுநோய் அறிகுறிகளைப் பற்றிய விழிப்புணர்வு மூலம் நோயை முன்கூட்டியே கண்டறிவதன் முக்கியத்துவம் குறித்து விளக்குகிறார் டாக்டர்.நீரஜ் கோயல்.

இந்த ஆய்வு முடிவுகளின் தாக்கங்கள் ஆழமானவை. நுரையீரல் புற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போருக்கு ஒரு விரிவான அணுகுமுறை தேவைப்படுகிறது. கடுமையான விதிமுறைகள் மூலம் காற்று மாசுபாட்டைக் குறைப்பது, சுத்தமான எரிசக்தி ஆதாரங்களை ஊக்குவித்தல் மற்றும் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துதல் ஆகியவை முக்கியமான படிகளாகும். மேலும் காசநோய் கட்டுப்பாட்டு திட்டங்களை வலுப்படுத்துதல் மற்றும் மரபணு காரணிகளைப் புரிந்துகொள்வதற்கான ஆராய்ச்சியில் முதலீடு செய்வது ஆகியவற்றுக்கும் நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் ஆபத்து காரணிகள் பற்றிய பொது விழிப்புணர்வு பிரச்சாரங்கள் போன்றவை நோயை முன்கூட்டியே கண்டறிவதற்கும் தடுப்பதற்கும் அவசியமாகும். புகைப்பிடிப்பதை நிறுத்துதல் மற்றும் காற்று மாசுபாட்டின் வெளிப்பாட்டைத் தவிர்ப்பது உள்ளிட்ட ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை ஊக்குவித்தல் போன்றவை புற்றுநோயின் ஆபத்தை கணிசமாகக் குறைக்கும்.

நுரையீரல் புற்றுநோயின் எச்சரிக்கை அறிகுறிகள்:

  • தொடர் இருமல்: நீண்ட நாட்களாக நிற்காமல் இருமல் நீடிப்பது.

  • சளியில் ரத்தம்: எச்சிலில் ரத்தம் இருப்பது.

  • மூச்சு விடுவதில் சிரமம்: சுவாசிப்பதில் சிரமம் அல்லது மூச்சுத் திணறல்.

  • குரல் கரகரப்பு: கரகரப்பாக மாறுவது போன்ற குரலில் ஏற்படும் மாற்றங்கள்.

  • மார்பு பகுதியில் வலி: ஆழமான சுவாசம், இருமல் அல்லது சிரிக்கும் போது மோசமடையக்கூடிய மார்பு வலி.

  • பசியின்மை மற்றும் உடல் எடை இழப்பு: பசியின்மை மற்றும் காரணமின்றி உடல் எடை இழப்பு.
    நுரையீரல் புற்றுநோயை தடுக்கும் முயற்சியில் நம்முன் உள்ள சவால்கள் மகத்தானவை என்றாலும், இந்தக் காரணிகளை கூட்டாக நிவர்த்தி செய்வது இந்தியாவில் நுரையீரல் புற்றுநோயின் பாதிப்பு மற்றும் அதனால் ஏற்படக் கூடிய இறப்பு விகிதத்தில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும். அதிகரித்து வரும் இந்த சுகாதார நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்கு அரசாங்கம், சுகாதார நிபுணர்கள், மருத்துவர்கள் மற்றும் பொதுமக்களை உள்ளடக்கிய ஒரு ஒருங்கிணைந்த கூட்டு முயற்சி அவசியம்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

காரில் செல்லும்போது வாந்தி வருகிறதா..? இதை தடுப்பது எப்படி..?

 

ஒரு சிலருக்கு கார் அல்லது பேருந்தில் பயணிக்கும் போது தலைசுற்றல், வாந்தி, குமட்டல், வியர்வை அல்லது தலைவலி போன்றவை ஏற்படும். இதன் காரணமாக அவர்களின் பயணம் மோசமானதாக மாறும். பயணத்தில் இருக்கும்போது பொதுவாக ஏற்படக்கூடிய பிரச்சனை தான் இது. நம்மைச் சுற்றியுள்ள பலரும் கார், ரயில், விமானம், படகு அல்லது பொழுதுபோக்கு பூங்கா சவாரிகளின் போது இந்தப் பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர்.

இதற்கான காரணம் என்ன?

பயணத்தின் போது உங்கள் உள் காது உணர்வதிலிருந்து நீங்கள் பார்க்கும் காட்சிகள் வேறுபடும் போது வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சனை ஏற்படுகிறது. பார்வை மற்றும் உள் காது சமிக்ஞைகளுக்கு இடையிலான இந்த முரண்பாடு, இயக்கம் பற்றிய முரண்பட்ட செய்திகளை உங்கள் மூளைக்கு அனுப்புகிறது. இதனால் தான் வாந்தி வருகிறது.

News18

இது எவ்வாறு நிகழ்கிறது என்பதற்கான சில எடுத்துக்காட்டு இதோ:

நீங்கள் பயணிப்பதை உங்கள் கண்கள் பதிவு செய்து, நீங்கள் நகரும் செய்தியை உங்கள் மூளைக்கு அனுப்புகிறது. இதற்கிடையில், நீங்கள் அசையாமல் அமர்ந்திருப்பதை உங்கள் உள் காது உணர்ந்து, நீங்கள் நகரவில்லை என்ற செய்தியையும் உங்கள் மூளைக்கு அனுப்புகிறது. செய்திகளில் உள்ள இந்த முரண்பாட்டின் காரணமாக, மூளையால் அதைச் சரியாகச் செயல்படுத்த முடியாமல் போகும் போது வாந்தியும் தலைசுற்றலும் குமட்டலும் ஏற்படுகின்றன.

இதை தடுப்பதற்கான வழிமுறைகள் என்ன?

வாந்தி வருவதற்கான தடுப்பதற்கான சிறந்த வழி என்னவென்றால், இதுபோன்ற நிலையை ஏற்படுத்தும் சூழ்நிலைகளைத் தவிர்ப்தே ஆகும். ஆனால், அது பெரும்பாலான சமயங்களில் சாத்தியமில்லை. இயக்க நோயைத் தவிர்க்க உதவும் சில உத்திகள் இதோ:

  • கார் அல்லது பேருந்தின் முன்புறத்தில் எப்போதும் அமரவும்.

  • விமானங்கள், பேருந்துகள் மற்றும் ரயில்களில் ஜன்னல் இருக்கையைத் தேர்வு செய்யவும்.

  • படுத்துக்கொண்டு கண்களை மூடிக்கொள்ளவும்.

  • தூங்குவது அல்லது அடிவானத்தைப் பார்ப்பதும் உதவும்.

  • நீர்ச்சத்து குறையவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அடிக்கடி போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்.

  • வாகனத்தில் நல்ல காற்றோட்டத்தை உறுதி செய்யவும்.

  • காருக்குள் உங்கள் பார்வையை ஒருமுகப்படுத்தும் செயல்களான படிப்பது அல்லது ஃபோனைப் பயன்படுத்துவது போன்ற செயல்களைத் தவிர்க்கவும்.

  • பயணத்தின் முன் அல்லது பயணத்தின் போது மிதமான உணவை உட்கொள்ளுங்கள்.

  • அதிமான அல்லது காரமான உணவுகளைத் தவிர்க்கவும்.

  • இசையைக் கேட்பது போன்ற செயல்களில் ஈடுபடுங்கள்

  • இஞ்சி மிட்டாய் சாப்பிடுங்கள்.

இதற்கு சிகிச்சை உள்ளதா?
பயணத்தின் போது வாந்தி வருவதை தடுக்க அல்லது சிகிச்சையளிக்க மருந்துகள் உள்ளன. இருப்பினும், மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளை உட்கொள்வது நல்லதில்லை. இதுபோன்ற பிரச்சனைகளுக்கு மருந்துகளை நீங்கள் எடுக்க வேண்டுமா என்பதை அங்கீகாரம் பெற்ற மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றவும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip