Search

School Morning Prayer Activities - 29.07.2024

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.07.2024

திருக்குறள் 

பால் : பொருட்பால்


அதிகாரம்: அறிவு உடைமை


குறள் எண்:428


அஞ்சுவது அஞ்சாமை பேதைமை; அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில்.


பொருள்: அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும்; அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்.


பழமொழி :

ஆண்டவர் எப்படியோ தொண்டரும் அப்படியே


Like God, like worshipper


இரண்டொழுக்க பண்புகள் : 


 *  நான் எப்போதும் அழகாகவும், தெளிவாகவும் எழுதுவேன்.                   


 *என் வாசித்தலை மேம்படுத்த தினமும் ஐந்து பக்கங்களாவது வாசிப்பேன்.


பொன்மொழி :


"முடியாது" என்று நீங்கள் சொல்வதையெல்லாம் யாரோ ஒருவர் எங்கோ செய்து கொண்டிருக்கிறார். ----அப்துல் கலாம்


பொது அறிவு 


1. உருவத்தில் பெரிய தேனீயாக அழைக்கப்படுவது எது?


விடை: இராணித்தேனீ 


2. இந்தியாவின் மிக உயரமான அருவி எது, எங்கு அமைந்துள்ளது?


விடை: சரவாதி ஆற்றின் (ஜோக் அருவி) கர்நாடகா 


English words & meanings :


retard-தடு,


issue-பிரச்சனை


வேளாண்மையும் வாழ்வும் : 


மற்ற பாரம்பரிய அரிசியை காட்டிலும், இதில் தனிம சத்துக்கள் அதிகம் உள்ளது, சீலியாயிக்,சர்க்கரை ஆகிய நோயின் தாக்கத்தை குறைக்கவல்லது, உடலில் உள்ள கொழுப்பினை குறைக்க வல்லது, ரத்தத்தில் ஹீனமோக்ளோபின் அளவினை அதிகரிக்க உதவும் மேலும் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது


ஜூலை 29 இன்று


பன்னாட்டுப் புலி நாள்


பன்னாட்டுப் புலி நாள் அல்லது உலகப் புலி நாள் என்பது புலி வளம்பேணல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வோராண்டும் ஜூலை 29இல் கொண்டாடப்படும் நாளாகும்.[1] இந்நாள் 2010இல் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் நடந்த புலிக் குழுமலில் உருவாக்கப்பட்டது.[2] இந்நாளின் நோக்கம் புலிகளின் இயற்கை வாழ்விடங்களைக் காப்பாற்றுவதற்கான உலகளாவிய அமைப்பை ஏற்படுத்தி, புலி வளம்பேணும் சிக்கல்கள் குறித்த பொதுமக்கள் விழிப்புணர்வை மேம்படுத்தி அவர்களது ஆதரவைப் பெறுவதாகும்.


நீதிக்கதை


 ஒருவரை உருவம் பார்த்து எடை போடக்கூடாது


அடர்ந்த காடு ஒன்றில் இருந்த குகையில் சிங்கம் ஒன்று வசித்து வந்தது.விலங்குகளை வேட்டையாடி வயிறு நிறைய  இறைச்சியை சாப்பிட்டு விட்டு தன் குகையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது. 


அப்போது அந்த குகையின் ஒரு மூலையில் வசிக்கும் எலி ஒன்று சிங்கத்தின் உடலை ஒரு பாறை என்று எண்ணிக்கொண்டு, அதன் முதுகில் ஓடியாடி விளையாடியது. இதனால் சிங்கத்தின் தூக்கம் கெட்டது. 


அது கண் விழித்து எலியை பிடித்துக் கொண்டது. பிறகு அது எலியை பார்த்து “சிறிய ஏலியே, நான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது என் மீது ஏறி விளையாடி என் தூக்கத்தை நீ கலைத்து விட்டாய். உன்னை என்ன செய்கிறேன் பார். 


உன்னை என் வாயில் போட்டு மென்று விடுகிறேன்” என்றது. எலிக்கு பயத்தால் உடல் நடுங்கியது. அது தன் உயிரை கையில் பிடித்துக் கொண்டு சிங்கத்தை பார்த்து, “சிங்கராஜா, என்னை எதுவும் செய்து விடாதீர்கள். உங்கள் உடம்பை கல் என்று நினைத்து விளையாடிவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் என்னை தயவு செய்து மன்னித்தால், நான் தக்க சமயத்தில் உங்களுக்கு உதவுகிறேன்.” என்றது. 


எலி பேசுவதை கேட்ட சிங்கம், கடகட என காடே அதிரும்படி சிரித்தது. அது எலியை பார்த்து, “எலியே, நீ பொடிப்பயல். சின்னஞ்சிறிய உடல் கொண்ட உன்னால் மலைபோல் தோற்றமும் கம்பீரமும் கொண்ட எனக்கு என்ன உதவி செய்ய முடியும்?” 


நான் இப்பொழுது வயிறு நிறைய சாப்பிட்டு இருப்பதால், உன்னை ஒன்றும் செய்யாமல் விடுகிறேன். மேலும் அற்ப உருவம் கொண்ட உன்னை நான் சாப்பிடுவதால் எனக்கு தான் அவமானம். பிழைத்துப் போ, என்று கூறிவிட்டு எலியை விட்டது. 


எலி தப்பித்தோம், பிழைத்தோம் என்று அதன் இடத்தில் சென்று புகுந்து கொண்டது. ஒரு நாள் சிங்கம் வழக்கம்போல் வேட்டையாட புறப்பட்டது. நெடு நேரமாகியும் அதற்கு இறை எதுவும் கிடைக்கவில்லை. 


அது சோர்ந்து போனது. அது வேட்டையாடிக்கொண்டே நடுக்காற்றுக்கு வந்து விட்டது. அங்கே ஓரிடத்தில் வேட்டைக்காரர்கள் மிருகங்களை பிடிப்பதற்காக வலை விரித்து வைத்திருந்தனர். 


சிங்கம் அந்த விலைக்குள் சிக்கிக்கொண்டது. காடே அதிரும்படி கர்ஜித்தது, எவ்வளவோ முயன்றும் அதனால் அந்த வலையில் இருந்து வெளியே வர முடியவில்லை. அது மீண்டும் மீண்டும் கோபத்தால் கர்ச்சித்துக் கொண்டே இருந்தது. 


இந்த சத்தம் வலையில் உறங்கிக் கொண்டிருந்த எலியின் காதில் விழுந்தது. அது உடனே விரைந்து ஓடி வந்தது. சிங்கம் சிக்கி இருந்த வலையை தன் கூர்மையான பற்களால் கடித்து சிங்கத்தை விடுவித்தது. 


அப்பொழுது சிங்கம் எலியை பார்த்து, “எலியாரே, அன்று நீ என் தூக்கத்தை கலைத்த போது உன்னை கொல்லாமல் விட்டேன். அப்பொழுது நீ தக்க சமயத்தில் உதவுவதாக வாக்களித்தாய், அப்பொழுது நான் சிறிய உருவம் கொண்ட உன்னால் பெரிய உருவமும், கம்பீரமும் கொண்ட எனக்கு என்ன உதவி செய்துவிட முடியும்?” என்று ஏளனமாக பேசினேன். 


உருவத்தில் மிகவும் சிறியவனான நீதான் இன்று என் உயிரை காப்பாற்றி இருக்கிறாய். உன் உதவியை நான் என்றும் மறக்க மாட்டேன். உன் உதவிக்கு நன்றி என்று கூறியது. 


இன்றைய செய்திகள் - 29.07.2024


🌸2024 ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் பெற்றுக் கொடுத்திருக்கிறார். 22 வயது ஆன மனு பாக்கர் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.


🌸பாம்பன் செங்குத்து தூக்குப் பாலப் பணிகள் நிறைவு: அக்டோபரில் ரயில் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை.


🌸மேட்டூர் அணை 100 அடி நிரம்பியதை தொடர்ந்து, காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து  நீர் திறப்பு.


🌸பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்புக்காக நிர்பயா திட்ட பணிகள் விரைந்து முடிக்கப்படும்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.


🌸ஓய்வுபெறும் அக்னி வீரர்களுக்கு தங்கள் மாநிலங்களில் அரசு பணியில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று குஜராத்  உள்ளிட்ட 6 மாநிலங்கள் அறிவித்துள்ளன.


🌸பழமையான பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்க இந்தியா - அமெரிக்கா இடையே கலாச்சார சொத்து ஒப்பந்தம்.


🌸பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் குரூப் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி.


🌸பாரீஸ் ஒலிம்பிக்: நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய ஆண்கள் ஹாக்கி அணி.


Today's Headlines


🌸Shooter Manu Pakar has won India's first medal at the 2024 Paris Olympics. 22-year-old Manu Bhakar has become the first Indian woman to win a medal in the Olympic shooting 10m air pistol category.


🌸Pampan Vertical Suspension Bridge Completed: steps are taken to start train service in October.


🌸 Water is being released from Mettur Dam for irrigation of Cauvery Delta followed by   filling of Mettur Dam by 100ft


🌸Nirbhaya project work will be completed quickly for the safety of women, children: Tamil Nadu government informed the High Court.


🌸6 states including Gujarat have announced that retiring Agni veterans will be given reservation in government jobs in their states.


🌸India-US Cultural Property Treaty is signed to Prevent Smuggling of Ancient Artifacts


🌸Badminton — in women's singles category Indian player PV Sindhu won  the first  round  in Paris Olympic series.


🌸Paris Olympics: Indian men's hockey team defeated New Zealan

 

Prepared by

Covai women ICT_போதிமரம்



🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

லேப்டாப் வெளியிடும் வெப்பத்தால் சருமத்திற்கு இத்தனை பாதிப்புகளா..? உஷார்..!

 லேப்டாப்புகளில் நீண்ட நேரம் செலவிடும் நபர்கள் அல்லது வெப்பத்தை வெளியிடும் சாதனங்களை தங்களுடைய மடி அல்லது கால்களில் நேரடியாக வைக்கும் நபர்களை தற்போது மிகவும் வித்தியாசமான ஒரு சரும பிரச்சனை தாக்கி வருகிறது. அது டோஸ்டட் ஸ்கின் சிண்ட்ரோம் என்று அழைக்கப்படுகிறது. இந்த வித்தியாசமான பிரச்சனை தோலில் சிவத்தல், எரிச்சல் அல்லது தடிப்புகளை ஏற்படுத்துகிறது.

நவீன தொழில்நுட்பம் மூலமாக இயங்கிக் கொண்டிருக்கும் நம்முடைய வாழ்க்கை முறை காரணமாக இந்த சரும பிரச்சனை ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களின் தோலானது சிவப்பு-பழுப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. நீண்ட நாட்களுக்கு மிதமான அளவு வெப்பம் வெளிப்படுத்தப்படும் பொழுது இது ஏற்படுகிறது. ரத்த நாளங்கள் மற்றும் தோல் செல்கள் பாதிக்கப்படுவதன் விளைவாக இந்த கோளாறு உருவாகிறது.

டோஸ்டட் ஸ்கின் சிண்ட்ரோம் ஏற்படுவதற்கு பின்னணியில் உள்ள காரணங்கள் : 

சமீப சில வருடங்களாகவே டோஸ்டட் ஸ்கின் சிண்ட்ரோம் வழக்குகள் அதிகரித்து வருகிறது. இதற்கு பின்னணியில் உள்ள முக்கியமான காரணங்கள் நவீன வாழ்க்கை முறை மற்றும் அதிகப்படியாக தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல் ஆகும். பலர் தங்களுடைய லேப்டாப்புகளை மடியில் வைத்து பயன்படுத்துகிறார்கள். ஒரு சிலர் ஹீட்டிங் பேடுகளை அதிக அளவில் உபயோகிக்கிறார்கள். இதன் விளைவாகவே இந்த டோஸ்டட் ஸ்கின் சிண்ட்ரோம் ஏற்படுகிறது.

தொடர்ச்சியாக வெப்பத்தை வெளியிடப்படுவதால், நாளடைவில் சருமத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு டோஸ்டட் ஸ்கின் சிண்ட்ரோம் உருவாகிறது.

டோஸ்டட் ஸ்கின் சிண்ட்ரோம் உண்டாவதில் நவீன வாழ்க்கை முறை மற்றும் தொழில்நுட்ப பழக்கவழக்கங்களின் பங்கு என்ன?

இந்த கோளாறு அதிகரித்ததற்கு முக்கியமான காரணம் நம்முடைய தற்போதைய வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள். நம்மில் பெரும்பாலானவர்கள் நீண்ட நேரம் லேப்டாப்பில் வேலை செய்வது மட்டுமல்லாமல் அவற்றை நமது மடியிலேயே வைத்து வேலை செய்வதை பழக்கமாகக் கொண்டிருக்கிறோம். இதனால் நமது தோல் தொடர்ச்சியான வெப்பத்திற்கு வெளிப்படுத்தப்படுகிறது.

அதே நேரத்தில் நாள்பட்ட வலி நிவாரணம் அல்லது சௌகரியத்திற்காக நாம் பயன்படுத்தும் ஹீட்டிங் பேடுகள் மற்றும் குளிர்கால மாதங்களில் நாம் தினசரி பயன்படுத்தும் கார் இருக்கை வெப்பப்படுத்திகள் (Car seat warmer) நமது உடலில் ஒரு சில உறுப்புகளுக்கு தொடர்ச்சியாக வெப்பம் வெளிப்படுத்தப்படுவதை உறுதி செய்கிறது. உட்கார்ந்த வாழ்க்கை முறை காரணமாகவும், வெப்பத்தை வெளியிடும் சாதனங்களின் அதிகப்படியான பயன்பாடு காரணமாகவும் டோஸ்டட் ஸ்கின் சிண்ட்ரோம் ஏற்படுகிறது.

தடுப்பு முறைகள் : 

டோஸ்டட் ஸ்கின் சிண்ட்ரோம் ஏற்படாமல் தடுப்பதற்கு நீங்கள் பின்வரும் குறிப்புகளை பின்பற்றலாம்:-

லேப்டாப் ஸ்டாண்ட் பயன்படுத்தவும் : 

லேப்டாப்பை நேரடியாக உங்கள் மடியில் வைப்பதற்கு பதிலாக ஒரு ஸ்டாண்ட் பயன்படுத்துவதன் மூலமாகவோ அல்லது உங்கள் தோலுக்கும் வெப்பத்திற்கும் இடையில் ஒரு தடையை உருவாக்கும் வகையில் கூலிங் பேட் பயன்படுத்துவதன் மூலமாகவோ நீங்கள் டோஸ்டட் ஸ்கின் சிண்ட்ரோம் வராமல் தடுக்கலாம்.

ஹீட்டிங் பேட் பயன்பாட்டை குறைக்கவும் : 

ஒருவேளை நீங்கள் அடிக்கடி ஹீட்டிங் பேட் பயன்படுத்தக் கூடியவர் என்றால் அதன் பயன்பாட்டை முடிந்த அளவு குறைத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை அதனை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், பேடு மற்றும் உங்களுடைய தோலுக்கு இடையில் ஒரு துணி அல்லது துண்டு வைப்பதை உறுதிப்படுத்துங்கள்.

கார் சீட் வாமர்கள் : 

கார் இருக்கை வெப்பப்படுத்திகளை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்கவும். உங்களுக்கு ஏற்கனவே டோஸ்டட் ஸ்கின் சிண்ட்ரோம் அறிகுறிகள் இருப்பதாக நீங்கள் கவனித்தால் உடனடியாக அதற்கான சிகிச்சை பெறுவது அவசியம்.

உங்கள் தோலை வெப்பத்திற்கு வெளிப்படுத்துவதை நிறுத்தவும். மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் கற்றாழை அல்லது கார்டிகோஸ்டிராய்டுகள் அடங்கிய கிரீம்களை பயன்படுத்தி தோலை ஆற்றலாம்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

40-களில் ஃபிட்டாக இருக்க விரும்பும் பெண்களுக்கான 5 ஆரோக்கியமான டிப்ஸ்.!

 பொது ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கம் ஏற்படும் என்பதால் பெண்கள் குறிப்பாக 40-களில் தங்கள் உடலை நன்றாக பராமரிப்பது முக்கியம். குறிப்பிட்ட வயதிற்கு பின் பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், ஈஸ்ட்ரோஜன் லெவல் குறைவது உள்ளிட்டவை காரணமாக பெண்களின் muscle mass, வளர்சிதை மாற்றம் மற்றும் எலும்பு அடர்த்தி உள்ளிட்டவற்றை பாதிக்கப்படலாம். இந்த பாதிப்புகளை எதிர்த்துப் போராட, சீரான ஆரோக்கியமான டயட் மற்றும் வழக்கமான அடிப்படையிலான உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது உள்ளிட்டவை முக்கியம்.

தினசரி உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவதன் மூலம் ஆரோக்கியமான எடையை பராமரிக்க முடியும். மேலும் நீரிழிவு, இதய நோய் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நாள்பட்ட நிலைமைகளை உருவாகும் அபாயத்தை குறைத்து கொள்ள முடியும். தவிர மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வு அறிகுறிகளைக் குறைப்பதன் மூலம் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தி கொள்ளலாம்.

News18

அதே போல் கார்டியோவாஸ்குலர் ஒர்கவுட்ஸ் இதய ஆரோக்கியம் மற்றும் ஸ்டாமினாவை மேம்படுத்துகின்றன, அதே நேரத்தில் ஸ்ட்ரென்த் ட்ரெயினிங்ஸ் குறிப்பாக muscle mass மற்றும் எலும்பு அடர்த்தியை பராமரிக்க உதவி செய்கின்றன. மேலும் ஆக்ட்டிவாக இருப்பது ஆற்றலை அதிகரிப்பதோடு, எண்டோர்ஃபின்ஸ்களை வெளியிடுவதன் மூலம் மனநிலையை மேம்படுத்துகிறது. இது இரவு நேரம் நன்கு தூங்க ஊக்குவிக்கிறது. ஒவ்வொரு பெண்ணும் தன்னை மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள வேண்டிய டிப்ஸ்களை தொடர்ந்து பார்க்கலாம்…

40 வயதுகளில் இருக்கும் பெண்கள் உடல் செயல்பாடுகள் மற்றும் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது மக்களை சந்திக்க, நேர்மறை சமூகத்தை உருவாக்க அவர்களுக்கு கிடைக்கும் ஒரு அருமையான வாய்ப்பாகவும் இருக்கும்.

இனி பெண்கள் தங்கள் 40-களில் மகிழ்ச்சியாகவும், ஃபிட்டாகவும் இருக்க உதவும் 5 ஆரோக்கியமான டிப்ஸ்கள் பற்றி பார்க்கலாம்.

ஆரோக்கியமான காலை உணவு:

வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிப்பதில் ஆரோக்கியமான உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் தேவையற்ற கலோரி நுகர்வை குறைக்கிறது. சிலர் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் காலை உணவை தவிர்க்கிறார்கள். இது ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

தினசரி உப்பு நுகர்வை குறைக்க வேண்டும்:

உயர்ந்த ரத்த அழுத்தம் மற்றும் இதயம் சார்ந்த சுகாதார பிரச்சனைகளை தவிர்க்க, சோடியம் உட்கொள்ளலை தினசரி 2,300 மி.கி-க்கும் குறைவாகக் கட்டுப்படுத்த அமெரிக்கன் டயட்ரி கைடன்ஸ் பரிந்துரைக்கின்றன.

போதுமான சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டும்:

உணவை சமைக்கும் முன் அல்லது உணவு சாப்பிடுவதற்கு முன் கைகளை சுத்தமாக கழுவி கொள்வது இன்றியமையாதது. இதற்கு சோப்பை பயன்படுத்தலாம். எப்போதுமே சிறந்த சுகாதாரத்தை பராமரிப்பது நோய்களை தடுக்க முக்கியமான வழியாகும்.

அடிக்கடி உடல் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும்:

ஏரோபிக் பயிற்சிகள் ஆற்றலை வழங்குகின்றன மற்றும் இதய துடிப்பை கட்டுப்படுத்துகின்றன, எனவே இவை ஆரோக்கியம் மற்றும் ஃபிட்னஸை பராமரிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. பெண்கள் தங்களின் நீண்ட கால ஆரோக்கியத்திற்கு, ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.
போதுமான தூக்கம்:
பெண்கள் தினசரி இரவு 8 மணிநேரம் நிம்மதியாக தூங்குவதை உறுதி செய்ய வேண்டியது அவசியம். அறிவாற்றல் திறன்கள், நோய் எதிர்ப்பு சக்தி, உற்பத்தித்திறன், ஆரோக்கியம் மற்றும் மன அமைதி ஆகியவற்றுக்காக நாள்தோறும் போதுமான அளவு தூங்குவது முக்கியம்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip








TNPSC வேலை வாய்ப்பு; 654 தொழில்நுட்ப பணியிடங்கள்; தகுதிகள், தேர்வு முறை என்ன?

 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வில் அடங்கிய நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 654 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 24.08.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

உதவிப் பொறியாளர் (அமைப்பியல்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 207

தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகம் – 5

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் – 1

நீர்வளம் – 115

பொதுப் பணி – 45

நெடுஞ்சாலை – 3

ஊரக வளர்ச்சி துறை – 18

தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி கழகம் – 5

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் - 14

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E degree in Civil Engineering or Civil and Structural Engineering முடித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 57 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம் : நிலை – 20

வேளாண் அலுவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 32

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelor degree in Agriculture படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : நிலை – 20

கட்டிட வடிவமைப்பு உதவியாளர்/ திட்டமிடல் உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree of Master of Town Planning or A Degree in Civil Engineering; or A Degree in Architecture; or An A.M.I.E (Civil) படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : நிலை – 20

உதவி இயக்குனர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Mechanical or Electrical or Chemical Engineering or Textile Technology or Industrial Engineering or Production Engineering படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 20

உதவி பொறியாளர் (மின்னியல்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 80

பொதுப்பணி – 67

இந்துசமய அறநிலையத்துறை – 13

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelor of Engineering degree in Electrical Engineering or Electronics and Communication Engineering or Electrical and Electronics Engineering படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 20

உதவிப் பொறியாளர் (தொழிற்சாலை)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelor of Engineering or Bachelor of Technology படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : நிலை – 20

உதவி நிலத்தியலாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 20

வேளாண்மை பொறியியல் – 1

நிலத்தியல் மற்றும் சுரங்கம் – 5

நீர்வளம் - 14

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Master of Science degree in Geology or Master of Science degree in Applied Geology or Master of Science (Technology) in Hydrogeology படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : நிலை – 20

வேதியியலாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி: M.Sc., in Chemistry or Chemical Technology படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : நிலை – 20

மருந்து ஆய்வாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 15

கல்வித் தகுதி: Degree in Pharmacy or Pharmaceutical Sciences or Medicine படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 20

இளநிலை கட்டிட வடிவமைப்பாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 5

கல்வித் தகுதி: Degree in Architecture படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 20

இளநிலை மேலாளர் (நிதி மற்றும் கணக்குகள்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி: Institute of Chartered Accountants / Cost Accountants/ படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 18

காப்பாட்சியர் (வேதியியல் பாதுகாப்பு) 

காலியிடங்களின் எண்ணிக்கை: 15

கல்வித் தகுதி: M.Sc degree with Chemistry (Main) and Electro Chemistry as special subject or M.Sc. (Technical) in Chemical Engineering or M.E. (Chemical)/ M.Sc  Zoology, Botony, Geology, Anthropology, Indian Archaeology, Sanskrit, History, Chemistry படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 18

ஆராய்ச்சி உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 5

கல்வித் தகுதி: Post-graduate degree in Economics or Econometrics or Statistics or Business Administration or Mathematics or Social work or Sociology or Anthropology or Agricultural Economics or Public Administration  படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : நிலை – 18

புள்ளியியல் ஆய்வாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 10

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : நிலை – 18

உதவி மேலாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 15

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBA Finance or Marketing  படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : நிலை – 17

இளநிலை பகுப்பாய்வாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 5

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Graduate in Pharmacy or Chemistry or Pharmaceutical Chemistry படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : நிலை – 16

மொழிபெயர்ப்பாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Law படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : நிலை – 16

நூலகர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் Library Science டிகிரி முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 15

தொழில்நுட்ப நிர்வாகி

காலியிடங்களின் எண்ணிக்கை: 13

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E., / B.Tech., in Mechanical Engineering/ படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : நிலை – 15

செயல் அளவையர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E., / B.Tech., in Civil Engineering / Degree in Geology படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 15

செயல் நிலத்தியர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Geology படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 15

துணை மேலாளர் 

காலியிடங்களின் எண்ணிக்கை: 25

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Post Graduate Degree in Dairy Science/ Dairy Chemistry/ Chemistry/ Bio-Chemistry/ Bio-Tech./ Microbiology/ Degree with IDD / NDD or Post Graduate Degree in Dairy Science or B.Tech in Food Technology/ Dairy Technology/ Food Processing படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 13

செயலக அலுவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelor of Law படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 13

கடல் முதலாள்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Mechanical Engineering or Must possess a Post Diploma in Diesel Traction படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 13

இளநிலை வேதியியலாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 6

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Post Graduate Degree in any Branch of Chemistry படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 13

துணை மேலாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 12

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Post Graduate Degree in Dairy Science/ Dairy Chemistry/ Chemistry/ Bio-Chemistry/ Bio-Tech./ Microbiology படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 12

நுண்கதிர் ஆய்வாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Sc., Chemistry படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 12

சி.ஆர்.ஆர் இயக்குபவர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E., / B.Tech., in Chemical Engineering படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 12

உதவி காப்பாட்சியர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 6

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in any one of the following subjects: Zoology, Botony, Geology, Anthropology, Indian Archaeology, Sanskrit, History, Chemistry படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 10

உதவி சுற்றுலா அலுவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 23

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Travel and Tourism or any degree with Diploma in Tourism படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 10

வட்டார சுகாதார புள்ளியலாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 56

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Statistics or Mathematics or Economics படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 10

பண்டகக் காப்பாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Physics or Chemistry படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 10

உதவி மேலாளர் சேமிப்பு கிடங்கு/ இளநிலை உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 73

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Agriculture or in Scienceபடித்திருக்க வேண்டும்.

சம்பளம் : நிலை – 10

வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC-DNC, MBC, BC and BCM பிரிவினர் 42 வயதிற்குள் இருக்க வேண்டும். சில பணியிடங்களுக்கு வயது வரம்பு கூடுதலாக இருக்கும்.

தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 150, இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வுக் கட்டணம் : எழுத்துத் தேர்வு ரூ.100, இருப்பினும் SC, SC(A), ST, MBC(V), MBC - DNC, MBC, BC, BCM மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.

விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். 

ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம். நிரந்தரப்பதிவு வைத்திருப்பவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை ஆணையம் அறிவித்துள்ள அளவு மற்றும் பார்மட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும், தங்களது கல்வி மற்றும் பிறச் சான்றிதழ்களை கையில் வைத்துக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். உங்களது அனைத்து விவரங்களையும், சரியாக உள்ளிட்டு விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தி, சமர்ப்பிக்க வேண்டும். சமர்பிக்கப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.08.2024

இது குறித்து மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/ என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

12 ம் வகுப்பு கல்வித் தகுதி போதும்...இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு

இந்திய விமானப்படையில் 2024-ஆம் ஆண்டிற்கான அக்னிவீர்வாயு ஆள்சேர்ப்பிற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பதற்கான தகுதி: இத்தேர்வுக்கு திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 03.07.2004 முதல் 03.01.2008 தேதிகளுக்குள் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: இப்பணியிடத்திற்கான கல்வித்தகுதியாக 12-ஆம் வகுப்பில் இயற்பியல், கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது மூன்று வருட பொறியியல் பிரிவில் பட்டயச்சான்று பெற்றவர்கள் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன் டெக்னாலஜி, இன்ஃபர்மேஷன் டெக்னாலஜிபாடத்தில் 50 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் அல்லது அறிவியல் அல்லாத 12-ஆம் வகுப்பு பயின்றவர்கள் ஆங்கிலப்பாடப்பிரிவில் 50 சதவீதமதிப்பெண்ணுடன் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.
**விண்ணப்பிக்கும் முறை:**இப்பணியிடத்திற்கான தேர்வுநாள் 18.10.2024 முதல் நடைபெற உள்ளது. மேலும், இது குறித்த விவரங்களுக்கு https//agnipathvayvu.cdac.in என்ற இணையதளத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் அல்லது My IAF APP என்ற அலைபேசி விண்ணப்பபடிவத்தின் வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம்.இந்திய விமானப்படையில் இணைந்து பணியாற்ற விரும்பும் ஆர்வலர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறலாம். 







🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

பெண்களுக்கான வாய்ப்பு... செல் போன் சர்வீஸ் - 30 நாளில் ஈஸியா கத்துக்கலாம்...

கிராமப்புற பெண்களை தொழில் முனைவோர் ஆக்கும் நோக்கத்தோடு பல்வேறு வகையான பயிற்சிகள் கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் வழங்கப்பட்டு வருகிறது . முற்றிலும் இலவசமாகவே அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வரும் நிலையில் , தற்போது கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சிய மையத்தில் கிராமப்புற பெண்களுக்கு என இலவச செல்ஃபோன் சர்வீஸ் பயிற்சி அளிக்கப்பட உள்ளது

30 நாட்கள் நடைபெறும்‌ செல் போன் சர்வீஸ் இலவச பயிற்சியானது தினசரி காலை 9.30மணியிலிருந்து மாலை 5.30 வரை நடைபெறும். ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் பயிற்சி துவங்க உள்ளது. பயிற்சி கட்டணம் இல்லை, பயிற்சிக்கான உபகரணங்கள் மற்றும் காலை,மதிய உணவு முற்றிலும் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
பயிற்சியின் முடிவில் சான்றிதழ் மற்றும் தொழில் துவங்க வங்கி கடன் ஆலோசனை வழங்கப்பட உள்ளது.  விருப்பம் உள்ள நபர்கள் 04546-251578 & 8072334369& 9500314193& 9442758363 & 8870376796 என்ற எண்களில் தொடர்பு கொள்ளம் எனவும் அல்லது ஆகஸ்ட் ஆறாம் ஆம் தேதிக்கு முன்பாக கனரா வங்கி ர்ஸ்டி உழவர் சந்தை எதிர் புறம்,  கான்வென்ட் அருகில் தேனி இந்த முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news