Search

ஆக.1 முதல் பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்: அரசுத் தேர்வுகள் இயக்ககம்

 1287177

இந்த ஆண்டு (2024 மார்ச்) 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.


இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை: இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உட்பட) அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் / மதிப்பெண் பட்டியல் 01.08.2024 அன்று முதல் வழங்கப்படும்.


பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலும் அசல் (Original Mark Certificates) / மதிப்பெண் (Statement Of Mark) பெற்றுக் கொள்ளலாம். மேலும். விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

School Calendar - August 2024

 
ஆகஸ்ட் -2024 நாள்காட்டி..


03-08-2024 - சனி --ஆசிரியர் குறைதீர் நாள் 


RL


16-08-2024 - வெள்ளி - வரலட்சுமி விரதம்.


19-08-2024 - திங்கள் - ரிக் உபகர்மா/ ஆவணி ஆவிட்டம் 


20-08-2024 - செவ்வாய் - காயத்ரி ஜெபம் 


அரசு விடுமுறை நாள்கள்..


15-08-2024 - வியாழன் - சுதந்திர தினம் 


26-08-2024 - திங்கள் - கிருஷ்ண ஜெயந்தி.


சனி பள்ளி வேலை நாள்கள்


10-08-2024 

24-08-2024



🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

School Morning Prayer Activities - 31.07.2024

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.07.2024

திருக்குறள் 

பால் : பொருட்பால்


அதிகாரம்: அறிவு உடைமை


குறள் எண்:430


அறிவுடையார் எல்லாம் உடையார்; அறிவிலார்

என்னுடைய ரேனும் இலர்.


பொருள்: அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர்; அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.


பழமொழி :

அத்ருஷ்டமும் ஐஸ்வர்யமும் ஒருவர் பங்கல்ல;


Fortune’s wheel is ever revolving


இரண்டொழுக்க பண்புகள் : 


 *  நான் எப்போதும் அழகாகவும், தெளிவாகவும் எழுதுவேன்.                   

 *என் வாசித்தலை மேம்படுத்த தினமும் ஐந்து பக்கங்களாவது வாசிப்பேன்.


பொன்மொழி :


" தடம் பார்த்து நடப்பவன் மனிதன். தனக்கென தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்!---- பிடேல் காஸ்ட்ரோ


பொது அறிவு : 


1. என் கடன் பணி செய்து கிடப்பதே – என்று கூறியவர்


விடை: திருநாவுக்கரசர்


2. தமிழ்நாட்டில் முக்கடல்களும் சந்திக்கும் இடம்


விடை: கன்னியாகுமரி


English words & meanings :


 concern-அக்கறை,


 cover-உறை


வேளாண்மையும் வாழ்வும் : 


விதைத்தபின் அறுவடைக்கு மட்டும் சென்று அறுவடை செய்து வந்தார்கள் நம் முன்னோர்கள். சர்க்கரை நோய், மலச்சிக்கல், புற்றுநோய்க்கு எதிரானது.


நீதிக்கதை


 ஒருவரை ஒருவர் குறை கூறுவது தவறு.


ஓர் ஊரில் இரண்டு நண்பர்கள் இருந்தனர். ஒருவர் சலவை தொழிலாளி, இன்னொருவர்  குயவர். இரண்டு பேருமே அரசரிடம் வேலை பார்த்து வந்தனர்.


ஒரு நாள் இரண்டு பேருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அவர்கள் தங்கள் குறைகளை தாங்களே தீர்த்துக்  கொள்ளாமல் அரசரிடம் ஒருவர் பற்றி ஒருவர் குறை கூறிக்கொண்டு இருந்தனர்.


 குயவர், சலவை தொழிலாளியை அரசரிடம் வசமாக சிக்க வைக்க வேண்டும் என்று எண்ணி அரசரைப் பார்த்து, “அரசே, நமது பட்டத்து யானை கருப்பாக இருக்கிறது. யானையை சலவை தொழிலாளியிடம் கொடுத்து வெளுக்க செய்ய சொல்லுங்கள்” என்றார். 


அரசர்  சலவை தொழிலாளியை கூப்பிட்டு யானையை வெளுத்து வரும்படி கூறினார். உடனே சலவை தொழிலாளி அரசரைப் பார்த்து, “அரசே, யானையை வெளுத்து விடலாம் யானையை வேக வைக்கும் அளவிற்கு பெரிய பானை ஒன்றை குயவரை செய்து தர சொல்லுங்கள்” என்றார்.

அரசர் குயவரை கூப்பிட்டு, “யானையை வேக வைக்க பெரிய பானையை செய்து கொடு” என்று ஆணையிட்டார். குயவர் திரு திரு என விழித்தார்.


இருவரும் ஒருவர் மீது ஒருவர் குறை கூறுவதை அறிந்த அரசர், அவரவருக்கு இட்ட வேலையை செய்யவில்லை எனில் கடும் தண்டனை விதிக்கப்படும் என்றார்.


இருவரும் அரசரிடம் சென்று  தங்கள் தவறை உணர்ந்து கொண்டோம். இனிமேல் இதுபோல் நடக்க மாட்டோம் என்று மன்னிப்பு கூறினர். அரசரும் மன்னித்து அவரவர் வேலையை செய்ய உத்தரவிட்டார்.


இறுதியில் இருவரும் சந்தித்தனர். உன் மேல் நானும், என்மேல் நீயும் குறை கூறி மாட்டிக் கொண்டோம். இதனால் நம் இருவருக்குமே துன்பம். இனிமேல் இதுபோல் நடக்கக்கூடாது. இருவரும்  முன்பு போலவே நண்பர்கள் ஆனார்கள். 


நீதி : ஒருவர் மீது ஒருவர் குறை கூறி வம்பில் மாட்டிக்கொண்டு விழிப்பதை விட, ஒருவர் மீது மற்றொருவர் குறை கூறுவதை விட்டு அவரவர் குறையை அவரவர் திருத்திக் கொண்டு வாழ்வது சிறந்ததாகும்.


இன்றைய செய்திகள் - 31.07.2024


🌟அம்மா உணவகங்களை சீர்படுத்த ரூ.7 கோடி ஒதுக்கீடு: சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்.


🌟இறப்பு, இடம் பெயர்தல் காரணமாக தமிழகத்தில் 4.49 லட்சம் குடும்ப அட்டைகள் ரத்து: கூட்டுறவு, உணவுத்துறை செயலர் தகவல்.


🌟மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம்: அரசு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் தலைவர் தகவல்.


🌟கேரளாவின் வயநாட்டில் கனமழை காரணமாக நிலச்சரிவில் சிக்கி பலர்  உயிரிழந்த நிலையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


🌟லெபனானை தாக்க இஸ்ரேல் திட்டம்: இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க மத்திய அரசு அறிவுரை.


🌟பாரீஸ் ஒலிம்பிக்; அயர்லாந்தை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்த இந்திய ஆண்கள் ஹாக்கி அணி.


🌟பாரீஸ் ஒலிம்பிக் டென்னிஸ்: ரபேல் நடாலை வீழ்த்திய ஜோகோவிச்.


🌟மகளிர் டி20 தரவரிசை: ஏற்றம் கண்ட இந்திய வீராங்கனைகள்.


Today's Headlines


🌟Allocation of Rs 7 Crores for renovation of Amma restaurants: Resolution in Chennai Corporation meeting.


 🌟4.49 lakh family cards are cancelled in Tamil Nadu due to death and migration of places: Cooperatives and Food department Secretary informantion.


 🌟Tamil Nadu ranking first in the export of electronic goods: Information from the head of the Government Industry Guidance Institute.


🌟 Heavy rains in Kerala's Wayanad have left many people dead in landslides. Kerala faces a huge impact.


 🌟Israel Plans to Attack Lebanon: Central Govt Advises Indians to Stay Safe


 🌟Paris Olympics;  Indian men's hockey team beat Ireland to record its 2nd win.


🌟 Paris Olympics Tennis: Djokovic beats Rafael Nadal


 🌟Women's T20 Rankings: Indian players on the rise.

 

Prepared by

Covai women ICT_போதிமரம்



🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

சூப்பர் திட்டம்.! இரண்டு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கும் தமிழக அரசு.! விண்ணப்பிக்க தேவையான ஆவணம்.?

 சூப்பர் திட்டம்.! இரண்டு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கும் தமிழக அரசு.! விண்ணப்பிக்க தேவையான ஆவணம்.?

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இரண்டு பெண் குழந்தைகள் இருப்பின் இரண்டாவது பெண் குழந்தை பிறந்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொண்டிருக்க வேண்டும் மற்றும் இரண்டாவது பெண் குழந்தை பிறந்து மூன்று ஆண்டிற்குள் கீழ் கண்டுள்ள அரசு விதிகளின் படி 2024-25 ஆம் நிதியாண்டிற்கு தகுதியுடைய பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இரண்டாவது பெண் குழந்தை பிறந்த நாளிலிருந்து மூன்று ஆண்டிற்குள் விண்ணப்பிக்கும் அப்பெண் குழந்தைகளுக்கு தலா ரூபாய் 25000/-க்கான வைப்புத்தொகை பத்திரம் வழங்கப்படும். தாயின் வயது மேற்படி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க வயது வரம்பு விண்ணப்ப நாளன்று 20 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும் மற்றும் 40 வயதிற்குள் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொண்டிருக்க வேண்டும்.


குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72000-க்குள் மிகாமல் இருக்க வேண்டும். ஆண் வாரிசு இல்லை என்ற சான்று அதற்கென வட்டாட்சியரிடம் பெற்றிருக்க வேண்டும். இரண்டு பெண் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்கள்/ ஒருவேளை இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொண்ட பிறகு முதல் குழந்தையோ அல்லது இரண்டாவது குழந்தையோ இறந்திருப்பின் அவர்களின் இறப்பு சான்று இணைக்க வேண்டும்.


தாய் மற்றும் தந்தையின் வயது சான்று (பள்ளி மாற்று சான்றிதழ் அல்லது அரசு மருத்துவரிடமிருந்து பெற்ற சான்று), இருப்பிட சான்றிதழ் மற்றும் ஜாதி சான்றிதழ், மருத்துவரிடமிருந்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொண்டதற்கான சான்றிதழ் (தாய் அல்லது தந்தை), ஒரு வேளை ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தை பிறந்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருந்தால் இத்திட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுக்குள் விண்ணப்பிக்கலாம்.


முதல் பிரசவத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்து, இரண்டாவது பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தை பிறந்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருந்தால் இத்திட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுக்குள் விண்ணப்பிக்கும் அப்பெண் குழந்தைகளுக்கு தலா ரூபாய் 25000/-க்கான வைப்புத்தொகை பத்திரம் வழங்கப்படும். முதல் பிரசவத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருந்தால் இத்திட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுக்குள் விண்ணப்பிக்கும் அப்பெண் குழந்தைக்கு ரூபாய்.50000/-க்கான வைப்புத்தொகை பத்திரம் வழங்கப்படும்.


குடும்ப அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ஆதார் ஆகியவற்றுடன் அருகில் உள்ள அரசு இ-சேவை மையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். மேற்குறிப்பிட்டுள்ள தகுதியுடைய பெண்கள் இ-சேவை மையத்தில் விண்ணப்பித்த பின் அதன் நகல் ஒன்றினை சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.



🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

EMIS NEW UPDATE - EMIS-BREAD WINNING

 
EMIS NEW UPDATE - EMIS-BREAD WINNING


*🆕விபத்தில் பெற்றோரை இழந்த மாணவர்கள்


*கல்வி உதவித்தொகை பெற EMIS-யில் விண்ணப்பித்தல்....


*📝விண்ணப்பிக்க தேவையான விவரங்கள்


👉 இறப்பு சான்றிதழ்

👉வாரிசு சான்றிதழ்

👉Bonafide Certificate

👉Birth Certificate

👉FIR

👉Post Mortem Report

👉Student Aadhaar

👉Living parent Aadhaar

👉Student Ration Card

👉Income certificate

👉Bank pass book


இந்த Document/சான்றிதழ்களை தயார் நிலையில் வைத்துக் கொண்டு விண்ணப்பிக்கவும்..


மிக முக்கிய குறிப்பு:


👉மாணவர்களின் பெற்றோர் 


1️⃣வாகன விபத்து

2️⃣தீ விபத்து

3️⃣கட்டிட விபத்து 


➡️போன்ற விபத்தில் இறப்பு / முழு ஊனம் அடைந்திருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்...


👉 விபத்து தொடர்பான FIR COPY & POST MORTEM REPORT அவசியம்...


⬅️வயது முதிர்வு

⬅️இயற்கை மரணம்

⬅️தற்கொலை


போன்ற காரணங்களால் இறப்பு ஏற்பட்டிருந்தால் விண்ணப்பிக்க கூடாது...

🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

SMC - தேவையான அனைத்தும் ஒரே Link ல் PDF , Word , Exel, PSD, Picture & Video File

 .com/

பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு 2024 ~ 2026


▪️ உறுப்பினர் சான்றிதழ்

▪️ உறுதிமொழி 

▪️ கூட்ட அழைப்பிதழ் 

▪️ படிவங்கள் 

▪️ அட்டவணைகள் 

▪️ நிகழ்ச்சி நிரல் 

▪️ பார்வையாளர் படிவம்

▪️ வழிகாட்டி அரசாணைகள்

▪️ சுவரொட்டிகள் 

▪️ விழிப்புணர்வு கூட்ட வீடியோக்கள்


📌 தேவையான அனைத்தும் ஒரே Link ல்  PDF , Word , Exel,  PSD, Picture & Video File ஆக வழங்கப்பட்டுள்ளது.


👇👇👇https://drive.google.com/drive/folders/1F3UTNkcubZEog10uCa794mB_ER3DFTbf?usp=drive_link


அன்புடன்,

பெ. அலெக்ஸ் பாண்டியன்,

BRTE, BRC - சேடபட்டி 

9943311042

Teachers Transfer 2024 - ( 29.07.2024 ) யாருக்கு? வரிசை எண் என்ன?

 DSE - பள்ளிக் கல்வித்துறை


29.07.2024 திங்கள்கிழமை

இல்லை

DEE - தொடக்கக் கல்வித்துறை

(29.07.24)அன்று இடைநிலை ஆசிரியர் வரிசை எண் 1250 முடிய மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்.

 (மாவட்டம்விட்டு  மாவட்டம்)

IMG-20240727-WA0012

KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.20.4

 IMG-20240728-WA0013

KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.20.4

What's New

 welcome note, login logout pin number, font increase decrease option available 👇👇👇👇

https://play.google.com/store/apps/details?id=com.ifhrms.kalanjiyam

🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news