Search

"தமிழ்புதல்வன்" திட்ட துவக்க விழா நிகழ்ச்சி - மாணவர்களுக்கு காண்பதற்கான நேரடி இணைப்பு - 09.08.2024

 IMG_20240808_222147

அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை உயர்த்திட "தமிழ் புதல்வன்" எனும் மாபெரும் திட்டம் இந்த நிதியாண்டு முதல் அமல்படுத்திடும் வகையில் 09.08.2024 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் இத்திட்டத்தை துவக்கி வைக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, 09.08.2024 அன்று கோயம்புத்தூரில் நடைபெறும் "தமிழ்புதல்வன்" திட்ட துவக்க விழா நிகழ்ச்சியை அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு அனைத்து மாணவர்களும் ஆன்லைன் வாயிலாக காணும் வகையில் பள்ளிகளில் தக்க ஏற்பாடுகளை செய்யும் படி பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. துவக்க விழா நிகழ்ச்சிகளை காணொலியில் காண்பதற்கான லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது.


மேலும், துவக்க விழா நிகழ்ச்சியை கண்டு களித்த அறிக்கையை அனுப்புமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் தங்களின் பள்ளியில் இந்நிகழ்ச்சியை பார்த்த மாணவர்கள், ஆசிரியர்கள் எண்ணிக்கையினை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google Form-இல் 09.08.2024 அன்று நண்பகலில் தவறாது உள்ளீடு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


காணொலிக்கான Link: https://youtu.be/Zgbw9Sht4us


Google Form-க்கான Link: https://forms.gle/ToJ2eqXRdtAXriHx5



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


School Morning Prayer Activities - 09.08.2024

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.08.2024

திருக்குறள் 

பால் : பொருட்பால்


அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல்


குறள் எண்:448


இடிப்பாரை இல்லாத எமரா மன்னன்

கெடுப்பார் இலானுங் கெடும்.


பொருள்: கடிந்து அறிவுரை கூறும் பெரியாரின் துணை இல்லாத காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்கும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.


பழமொழி :

குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும்


A kick from the wise is better than a kiss from a fool


இரண்டொழுக்க பண்புகள் : 


*ஆபத்தில் இருப்பவர்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன். 


*துன்பப்படுபவர்களைக் கண்டால் அவர்களுக்கு ஆறுதல் கூறுவேன்.


பொன்மொழி :


"எனக்கு ஒரு மரத்தை வெட்ட எட்டு மணி நேரம் இருந்தால், அதில் ஆறு மணி நேரம் நான் கோடாரியை கூர்மை படுத்துவேன்.----ஆபிரகாம் லிங்கன்


பொது அறிவு : 


1.ஹீமோகுளோபினில் உள்ள உலோகம் எது?



விடை: இரும்பு


2.நம் நாட்டில் முதன்முதலாக இரும்பு எஃகு தொழிற்சாலை நிறுவப்பட்ட இடம் எது?


விடை: ஜாம்ஷெட்பூர்(jamshedpur


English words & meanings :


 Alliance : கூட்டணி. 


 Alumni : முன்னாள் மாணவர்கள்


வேளாண்மையும் வாழ்வும் : 


மண்ணின் ஈரப்பதத்தில் நுண்ணுயிர்கள், மண் புழு, நல்ல பாக்டீரியாக்கள் உருவாக தொடங்கும்.

மழைக் காலங்களில் முளைத்திருக்கும் சிறிய செடிகளை மேய்க்கும் ஆநிரையின் கழிவுகள், மண்ணுக்கு உரமாகி மண்ணுக்கு ஆற்றலைக் கொடுக்கும். 


ஆகஸ்ட் 09 இன்று


பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள் 


பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஷ்டு 9ஆம் தேதி அனுசரிக்க ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் திசம்பர் 1994 முன்மொழியப்பட்டு , 2007 செப்டம்பர் 13 அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது.[1] தொல்பழங்குடிகளான குறிஞ்சி நிலத்தின் குன்றகுறவர்களின் உரிமைகளை ஊக்குவிக்கவும், அவ்வுரிமைகளைப் பாதுகாக்கவும் இத் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிகழ்வானது அப்பழங்குடி குறவர் மக்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற உலக பிரச்சினைகளின் எடுக்கும் நல்லெண்ண முடிவுகளுக்கு அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.


நீதிக்கதை


 முயற்சி செய்யாதவர்களுக்குக் கடவுள் உதவமாட்டார் 


பூஞ்சோலை என்பது ஓர் அழகான  கிராமத்தில் மணிவண்ணன் எனபவன் வாழ்ந்து வந்தான்.


அவன் நல்லவன்தான். எனினும், எந்த ஒரு பிரச்சினையிலும், முயற்சி செய்யாமல் கடவுள் தன்னைக் காப்பாற்றுவார் என்றே எண்ணுவான் . 


தனக்குத்தானே எவன் ஒருவன் உதவி செய்து கொள்கிறானோ அவனுக்குத்தான் இறைவனும் உதவுவார் என்ற கருத்து அவனது நெஞ்சில் பதியாமல் போனது.


அவனுடைய நெருங்கிய உறவினர் திருமணம் பூஞ்சோலைக் கிராமத்திற்கு அடுத்ததாக இருந்த கிளியனூரில் நடைபெறுவதாக இருந்தது . மணிவண்ணனும் அந்தத் திருமணத்தில் கலந்து கொள்வதற்காகத் தனது மாட்டுவண்டியில் சென்று கொண்டிருந்தான். 


கிளியனூரை அடைகின்ற வேளையில் ஒரு பெரிய பள்ளத்தில் வண்டிச் சக்கரங்கள் புதைந்து விட்டன. மாடுகளும் சேற்றில் சிக்கிய தமது கால்களை எடுக்க முடியாமல் தவித்தன.


மணிவண்ணன் மிகவும் பயந்து விட்டான். மாடுகளாவது சேற்றில் சிக்கிய தமது கால்களை எடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தன. ஆனால், மணிவண்ணனோ எவ்விதச் சிறு முயற்சியையும் செய்யாமல் விழித்துக்கொண்டிருந்தான் .


உடனே அவன் “கடவுளே  என்னை இந்தத் துன்பத்திலிருந்து காப்பாற்று” என்று வேண்டினான். 


உடனே வானிலிருந்து ஒரு குரல் கேட்டது. “மனிதனே, நீ, சேற்றில் சிக்கிய உன் மாடுகளையும், வண்டியின் சக்கரங்களையும் மீட்பதற்கு சிறிதளவு கூட முயற்சியே செய்யவில்லை. வெறுமனே என்னை அழைப்பதில் எந்தப் பயனும் இல்லை. முதலில் தன்னால் ஆன முயற்சியைச் செய்பவர்களுக்குத்தான் நான் உதவுவேன்.முயற்சி செய்யாதவர்களுக்கு நான் நிச்சயம் உதவ மாட்டேன்” என்று கூறியது.


உடனே மணிவண்ணன் தனது தோள்பலத்தால் சக்கரத்தில் முட்டுக்கொடுத்து வண்டியை தூக்கி நிறுத்தி மாடுகளை அதட்டி ஓட்டினான். இப்பொழுது வண்டி சேற்றிலிருந்து மீண்டது. மணிவண்ணன் முயற்சியின் சிறப்பை அறிந்து கொண்டான். 


கடவுள் வானிலிருந்து அவனை ஆசிர்வதித்தார். 


நீதி : முயற்சி செய்யாதவர்களுக்குக் கடவுள் உதவ மாட்டார். எனவே, நாம் வெற்றி பெற,  முயற்சியைச் செய்ய வேண்டும். இறைவன் அருள் நமக்குத் தானாகவே கிடைக்கும்.


இன்றைய செய்திகள் - 09.08.2024


🦋தமிழகம் முழுவதும் 24 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


🦋ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்களை நடத்த ஊரக வளர்ச்சி இயக்குநர் பா.பொன்னையா அறிவுறுத்தியுள்ளார்.


🦋மனை, கட்டுமான பிரிவுகளுக்கான கட்டணங்கள் மாற்றியமைப்பு: ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கை.


🦋42 கோடி டன் நிலக்கரி இருப்பு கொண்ட ஒடிசா சகிகோபால் சுரங்கத்தை தமிழ்நாடு மின்வாரியத்துக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.


🦋வங்கதேசத்தில் உள்ள இந்திய விசா மையங்கள் அனைத்தும் காலவரையின்றி மூடல்.


🦋'தாரங் சக்தி’ என்ற பெயரில் முதல்முறையாக 10 நாடுகளின் விமானப்படையுடன் இந்தியா கூட்டுப் பயிற்சி.


🦋ஜப்பானில் 7.1 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


🦋ஐ.சி.சி. ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசை: டாப் 5-ல் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர்கள்.


🦋ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் கிறிஸ் கெயிலின் மாபெரும் சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா.


🦋ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கியில்  இந்திய அணி  வெண்கலப் பதக்கத்தை வென்றது.


Today's Headlines


🦋The Tamil Nadu government has ordered the transfer of 24 IPS officers across Tamil Nadu.


🦋 Director of Rural Development

P. Ponniah instructed the Panchayat members to hold Gram Sabha meetings in all Panchayats in Tamil Nadu on August 15th Independence Day.


🦋 Revision of Fees for Land, Construction Sections: Action taken by Regulatory Authority.


 🦋Odisha Sakigopal mine with 42 crore tonnes of coal reserves has been allotted to Tamil Nadu Electricity Board.


 🦋All,  Indian visa centers in Bangladesh remain closed indefinitely.


🦋 For the first time in the name of 'Tarang Shakti', India is conducting a joint exercise with the Air Forces of 10 countries.


 🦋7.1-magnitude earthquake hits Japan: Tsunami warning issued


 🦋ICC  ODI Batsmen Rankings:  Indian Players Dominating the Top 5  places


🦋 Rohit Sharma equaled Chris Gayle's record in ODI history


 🦋Indian team won bronze medal in Olympic men's hockey.

 

Prepared by

Covai women ICT_போதிமரம்




🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் Guest Faculty காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.50,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

 தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் Guest Faculty காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.50,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் ( CUTN ) ஆனது Guest Faculty பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென 2 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

CUTN காலிப்பணியிடங்கள்:

Guest Faculty பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Guest Faculty கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc, PhD / NET தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

CUTN வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Guest Faculty ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ஒரு வகுப்புக்கு ரூ.1500/- என ரூ.50,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

CUTN தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (21.08.2024) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து hodchemistry@cutn.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 18.08.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

Official Site


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் Assistant General Manager காலிப்பணியிடங்கள் – நேர்காணல் மட்டுமே || உடனே விண்ணப்பியுங்கள்!

 

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் Assistant General Manager காலிப்பணியிடங்கள் – நேர்காணல் மட்டுமே || உடனே விண்ணப்பியுங்கள்!

Tamilnad Mercantile Bank ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Chief Financial Officer, Deputy General Manager, Assistant General Manager பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Tamilnad Mercantile Bank காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Chief Financial Officer, Deputy General Manager, Assistant General Manager பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

AGM கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் CA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnad Mercantile Bank வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 40,45 என்றும் அதிகபட்ச வயதானது 50,55 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

AGM ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு Tamilnad Mercantile Bank-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

Tamilnad Mercantile Bank தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 17.08.2024ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 1

Download Notification PDF 2

Official Site

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


JIPMER ஆணையத்தில் 200+ காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.44,900/- || உடனே விரையுங்கள்!

 JIPMER ஆணையத்தில் 200+ காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.44,900/- || உடனே விரையுங்கள்!

Junior Translation Officer, Nursing Officer, Pharmacist மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை JIPMER ஆனது அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென 209 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

JIPMER காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Junior Translation Officer, Nursing Officer, Pharmacist மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 209 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Translation Officer கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 12th, B.Pharm, B.Sc, BE / B.Tech, D.Pharm, Diploma, M.Sc, MA, Nursing, PG Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

JIPMER வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 25, 27, 30, 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Junior Translation Officer ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.19,900/- முதல் ரூ. 44,900/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

JIPMER தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Certificate verification / Skill Test / CBT மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 19.08.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group