Search

தமிழக அரசுப் பள்ளிகளில் குறைந்தபட்ச மாணவர் எண்ணிக்கை - வழிமுறைகள் வெளியீடு

 

1292234

அரசுப் பள்ளிகளில் உள்ள மேல்நிலை வகுப்பில் மாணவர் எண்ணிக்கை மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் 30-க்கும், ஊரகப் பகுதிகளில் 15-க்கும் குறையக்கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் மாணவர் எண்ணிக்கையின்படி பணியாளர் நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி நடப்பு கல்வியாண்டில்(2024-25) கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி நிலவரப்படி பள்ளிகளில் உள்ள மாணவர் எண்ணிக்கைக்கேற்ப முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயம் செய்ய வேண்டும். அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.


அதன்படி தமிழ் மற்றும் ஆங்கில பாட ஆசிரியர்களுக்கு வாரத்துக்கு 24 பாடவேளைகளும், இதர பாட ஆசிரியர்களுக்கு வாரத்துக்கு 28 பாடவேளைகளும் குறைந்தபட்சம் வருமாறு பணியாளர் நிர்யணம் செய்யப்படுகிறது. 11, 12-ம் வகுப்புக்கு 1:40 என்ற ஆசிரியர்-மாணவர் விகிதத்தை பின்பற்ற வேண்டும். மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ள பகுதி மாநகராட்சி, நகராட்சியாக இருப்பின் 30 மாணவர்களும், ஊரகப் பகுதியாக இருந்தால் மாணவர் எண்ணிக்கை 15 ஆகவும் குறைந்தபட்சம் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அதேபோல், பணிநிர்ணயம் செய்யும் போது மொழிப்பாடத்தில் 24 பாடவேளைக்கும் முதன்மை பாடத்தில் 28 பாடவேளைகளுக்கும் கூடுதலாக இருப்பின் ஒரு ஆசிரியரை கூடுதலாக நிர்ணயம் செய்யலாம். இதுதவிர ஒரு குறிப்பிட்ட பாடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து, அதில் ஒரு பணியிடம் உபரியாக இருப்பின் அந்த இடத்தில் பணியாற்றுபவர்களில் இளையோரை உபரியாக காண்பிக்க வேண்டும்.


அதேநேரம் ஒருமுறை பணிநிரவல் செய்த ஆசிரியர்களை அடுத்த 3 கல்வியாண்டுகளுக்கு மீண்டும் மாற்றம் செய்யக்கூடாது. எனினும், சென்ற பணிநிரவல் நடவடிக்கைக்கு உள்ளான ஆசிரியர் இந்த ஆண்டும் விருப்பம் தெரிவித்தால் அவரை தற்போதைய பணியாளர் நிர்ணயித்தின்போது உபரியாக காண்பிக்கலாம். இந்த வழிமுறைகளை பின்பற்றி முதுநிலை ஆசிரியர்களை பணிநிர்ணயம் செய்து விவரங்களை இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும், என்று அதில் கூறப்பட்டுள்ளது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

உங்கள் பெட்ஷீட்டை எத்தனை நாளுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் தெரியுமா? - ஆரோக்கியமாக இருக்க இதை தெரிஞ்சுக்கோங்க!

 2021 ஆம் ஆண்டில் டன்லோபிலோ சிங்கப்பூர் நடத்திய ஆய்வில், கடைசியாக உங்கள் பெட்ஷீட்டை எப்போது மாற்றினீர்கள்? என்ற கேள்விக்கு 10.2% பேர் 2 மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே படுக்கை விரிப்பை மாற்றுகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.

மேலும், பெரும்பாலானோர் அதாவது 44.9% பேர் குறைந்தபட்சம் 1 முதல் 2 வாரங்களுக்கு ஒருமுறை படுக்கை விரிப்பை மாற்றுவதாக ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. YouGov-இன் மற்றொரு கருத்துக்கணிப்புப் படி, இங்கிலாந்தில் உள்ள 18 முதல் 24 வயதுடைய ஆண்களில் 37% பேர் 5 முதல் 6 வாரங்களுக்கு ஒருமுறை பெட்ஷீட்டை மாற்றுவதும் தெரியவந்துள்ளது. சரி, இதிலிருந்து பெட்ஷீட்டை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்? என்ற கேள்வியும் நமக்குள் எழுந்துள்ளது அல்லவா?!

ஹெல்த்லைன், ஆரோக்கியத்திற்கான வலைத்தளத்தின்படி, “நேஷனல் ஸ்லீப் ஃபவுண்டேஷனின் 2012 வாக்கெடுப்பின்படி, 91 சதவீத மக்கள் ஒவ்வொரு வாரமும் தங்கள் பெட்ஷீட்டை மாற்றுகிறார்கள். படுக்கையானது, உடலுடன் நேரடி தொடர்புடையதாக இருக்கிறது. பெட்ஷீட்கள் உடலின் வியர்வைகளை உறிஞ்சும் தன்மை கொண்டது. குழந்தைகள், பெரியவர்கள், முதியவர்கள் என அனைவருடனும் நேரடியாக தொடர்பு கொண்டவையாக இருக்கின்றன.

இவற்றை படுக்கைகள் உறிஞ்சும் போது அவற்றில் பலவிதமான பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகளின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும். இதனால் மீண்டும் மீண்டும் படுக்கையில் படுக்கும் போது அவை கடுமையான தீங்கு விளைவிக்கும்.

உங்கள் பெட்ஷீட்களை அடிக்கடி மாற்ற வேண்டியதற்கான காரணங்கள்:

ஸ்கின் கண்டிஷன்:

ஸ்கின் கண்டிஷன் அல்லது ஒவ்வாமை உள்ள நபர்கள் சுத்தமான மற்றும் அசௌகரியமான தூக்கத்தில் இருந்து விடுபட அடிக்கடி பெட்ஷீட்களை மாற்ற வேண்டும். தூசுள் சுவாச ஒவ்வாமைக்கு முதன்மை காரணம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீண்ட காலமாக துவைக்கப்படாத பெட்ஷீட்டுகளில் தூங்குவது ஆஸ்துமாவை ஏற்படுத்தலாம். சுவாச பிரச்சனைகளை அதிகரிக்க செய்யலாம்.

வியர்த்தல்:

உறக்கத்தின் போது உங்களுக்கு அதிகமாக வியர்த்தால், உங்கள் பெட்ஷீட்களை அடிக்கடி மாற்றுவது வசதியான மற்றும் ஆரோக்கியமான தூக்கத்தை பராமரிக்க உதவுகிறது.

நோய்:

நீங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தாலோ அல்லது தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலோ, கிருமிகள் பரவுவதைத் தடுக்க அடிக்கடி உங்கள் பெட்ஷீட்களை மாற்றுவது நல்லது.

சுற்றுச்சூழல் காரணங்கள்:

வெப்பம் மற்றும் ஈரப்பதம் நிறைந்த காலங்களில் படுக்கையறையில் பாக்டீரியா வளர்ச்சியை தூண்டும். எனவே பாக்டீரியா வளர்ச்சியை தடுக்க அடிக்கடி பெட்ஷீட்களை மாற்றுவது நல்லது.
செல்லப்பிராணிகள் :
உங்கள் செல்லப்பிராணிக்கு படுக்கையில் தூங்கும் பழக்கம் இருந்தால், உங்கள் பெட்ஷீட்டை அடிக்கடி மாற்றி சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும்.




Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

உங்கள் டயட்டில் அவசியம் சேர்க்க வேண்டிய வைட்டமின் ஏ நிறைந்த பழங்கள்.!!

 நோய் தொற்றுகளுக்கு எதிராக போராட, காயங்களை குணப்படுத்துதல், நமது எலும்புகளை வலிமையாக்க மற்றும் ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துவது போன்ற பல்வேறு முக்கிய செயல்பாடுகளுக்கு நம் உடலில் போதுமான வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ்கள் இருப்பது அவசியம்.

உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் மைக்ரோநியூட்ரியன்ட்ஸ்கள் என்றும் வரும் போது வைட்டமின் ஏ-வை ஒரு சூப்பர் ஹீரோ என்று குறிப்பிடலாம். வைட்டமின் ஏ என்பது ஃபேட்-சொல்யூபிள் அதாவது கொழுப்பில் கரைய கூடிய வைட்டமின் ஆகும். இது நம் சருமம், கூந்தல் மற்றும் பார்வை திறனை பராமரிக்க உதவுகிறது. தவிர நம்முடைய இனப்பெருக்க அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இதை நம்முடைய உடலால் இயற்கையாக உற்பத்தி செய்ய முடியாது என்பதால் வைட்டமின் ஏ நிறைந்த உணவுகள் நம்முடைய டயட்டில் சேர்க்கப்பட வேண்டும். சில ஆய்வுகளின்படி, வைட்டமின் ஏ-வானது கேன்சர் மற்றும் ஆஸ்துமாவை தடுக்க உதவும்.

News18

எவ்வளவு தேவை.?

வைட்டமின் ஏ-ஆனது நம் கல்லீரலில் சேமிக்கப்பட்டு உடலின் தேவைக்கேற்ப வெளியிடப்படுகிறது. தேசிய சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி நாளொன்றுக்கு ஆண்களுக்கு 900 மைக்ரோகிராம் மற்றும் பெண்களுக்கு 700 மைக்ரோகிராம் அளவு வைட்டமின் ஏ தேவைப்படுகிறது.

வைட்டமின் ஏ-வின் வகைகள்:

  • ரெட்டினோல்: இந்த வகை வைட்டமின் ஏ மாட்டிறைச்சி, கோழி போன்ற விலங்கு உணவுகளில் காணப்படுகிறது. நம் உடல் நேரடியாக இந்த ப்ரீ-ஃபார்ம்ட் வைட்டமினை எடுத்து கொள்ள முடியும்.

  • பீட்டா கரோட்டின்: இது பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருந்து பெறப்படும் வைட்டமின் ஏ-வின் தாவர அடிப்படையிலான மூலமாகும். இந்த வகை வைட்டமின் ஏ முதலில் அதன் ஆக்ட்டிவ் ஃபார்மாக (ரெட்டினோலாக) மாற்றப்பட்டு பின்னர் உடலால் பயன்படுத்தப்படுகிறது.

வைட்டமின் ஏ வழங்கும் நன்மைகள்:

நம்முடைய உடல் வளர்ச்சிக்குத் தேவையான முக்கியமான வைட்டமின் இதுவாகும். வைட்டமின் ஏ கொடுக்கும் பல்வேறு நன்மைகளில் சில முக்கிய நன்மைகள் இங்கே…

  • பார்வை திறனை மேம்படுத்துகிறது

  • இரவு குருட்டுத்தன்மை எனப்படும் மாலைக்கண் நோய் அபாயத்தைக் குறைக்கிறது

  • எலும்புகள் மற்றும் பற்களை பலப்படுத்துகிறது

  • தசை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது

  • நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

  • கேன்சரை தடுக்கிறது

  • இனப்பெருக்க அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு, கருவில் வளரும் குழந்தையின் நுரையீரல் ஆரோக்கியமாக உருவாக உதவுகிறது.

    வைட்டமின் ஏ குறைபாடு…

    பொதுவாக குழந்தை பருவத்தில் வைட்டமின் ஏ குறைபாடு ஏற்படுவது என்பது ஒரு குழந்தை தாயிடமிருந்து போதுமான தாய்பாலை பெறாதபோது ஏற்படுகிறது. அதே போல வயிற்றுப்போக்கு பிரச்சனை குழந்தைகளின் உடலில் இருக்கும் வைட்டமின் ஏ இழப்புக்கு வழிவகுக்கிறது. அதே நேரம் வைட்டமின் ஏ குறைபாடு நாள்பட்ட வயிற்றுப்போக்கு ஏற்பட வழிவகுக்கிறது. வைட்டமின் ஏ குறைபாடு குறிப்பாக குழந்தைகளிடையே பார்வை பிரச்சனை ஏற்பட காரணமாக இருக்கிறது.

    வைட்டமின் ஏ நிறைந்த பழங்களின் பட்டியல்…

    வைட்டமின் ஏ பழங்கள், காய்கறிகள், விலங்கு உணவுகள் மற்றும் பால் பொருட்களில் காணப்படுகிறது. உங்களின் தினசரி வைட்டமின் ஏ தேவையை பூர்த்தி செய்ய உங்கள் டயட்டில் சேர்க்க வேண்டிய வைட்டமின் ஏ நிறைந்த பழங்கள் இங்கே…

    • பப்பாளி: பப்பாளியில் வைட்டமின் ஏ ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்துள்ளது. இது பார்வை மற்றும் சருமத்திற்கு சிறந்தது. இது கார்னியாவை பாதுகாப்பதோடு ரெட்டினா சிதைவை தடுக்கிறது, எனவே இது கண் ஆரோக்கியத்திற்கான வைட்டமின் ஏ நிறைந்த ஒரு சிறந்த பழமாக அமைகிறது. காலை உணவாகவோ அல்லது ஸ்மூத்தி அல்லது இனிப்பு வடிவிலோ பப்பாளியை சாப்பிடலாம்.

    • மாம்பழம்: வைட்டமின் ஏ, வைட்டமின் சி, தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றின் சிறந்த மூலமாக இருக்கிறது மாம்பழம். ஒரு நடுத்தர அளவிலான மாம்பழம் தேவையான வைட்டமின் ஏ-யில் கிட்டத்தட்ட 75% வழங்குகிறது. தவிர சில வகை கேன்சர் மற்றும் பிற பெரிய நோய்களின் அபாயத்தை மாம்பழங்கள் குறைக்கிறது.

    • முலாம்பழம்: கோடைகால பழமான இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது. ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து ஒரு ஸ்லைஸ் செய்யப்பட்ட முலாம்பழத்தை சாப்பிடுவது புத்துணர்ச்சி அளிக்கும்.

    • கிரேப் ஃப்ரூட்: ஆரஞ்சு பழத்தை போலவே இருக்கும் கிரேப் ஃப்ரூட்டில் வைட்டமின் சி உடன் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் இதய நோய்கள், கேன்சர் மற்றும் கண் தொடர்பான பிரச்சனைகள் போன்ற பல நாள்பட்ட நிலைகளை தடுக்க உதவுகிறது.

    • தர்பூசணி: வைட்டமின் ஏ நிறைந்த இயற்கையான பழம் தர்பூசணி ஆகும். இது நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி, தோல் ஆரோக்கியம் மற்றும் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் அற்புதமாக செயல்படுகிறது.

    • ஃபிரெஷ்ஷான ஆப்ரிகாட்ஸ்: இவை ஃபிரெஷ், ட்ரை மற்றும் கேன்ட் வடிவத்தில் கிடைக்கின்றன. இதில் ஃபிரெஷ்ஷான ஆப்ரிகாட்ஸ் பழங்களில் வைட்டமின் ஏ நிரம்பியுள்ளது. இது பார்வையை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மற்றும் வயது சார்ந்த கண் பிரச்சனை ஏற்படும் வாய்ப்புகளை குறைக்க உதவுகிறது.

    • டேன்ஜரின் (Tangerine): வைட்டமின் ஏ வயது தொடர்பான மாகுலர் சிதைவை தடுக்க உதவுகிறது அந்த வகையில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றின் நல்ல மூலமாக இவை இருக்கின்றன. கண்களை கண்புரையிலிருந்து பாதுகாக்கிறது. அரிக்கும் தோலழற்சி போன்ற பல தோல் நிலைகளுக்கு சிகிச்சையளிப்பதில் இந்த பழம் உதவுகிறது.

      • நெக்ட்ரைன்: பிரகாசமான இந்த சிவப்பு நிற பழங்களில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. கண்களை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிகல்ஸ்களில் இருந்து பாதுகாக்கிறது. இந்த பழம் கண் ஆரோக்கியத்தை சிறப்பாக வைக்கிறது. செல் வளர்ச்சியை அதிகரிக்க, வெள்ளை ரத்த அணுக்களின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. இதிலுள்ள வைட்டமின் ஏ தொற்றுகளை எதிர்த்து போராட, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

      • கொய்யா: கொய்யா பழங்களில் வைட்டமின் ஏ நிறைந்திருப்பதால் பார்வை திறனை நன்றாக மேம்படுத்தும். தவிர கண்புரை மற்றும் மாகுலர் சிதைவின் வளர்ச்சியை குறைக்கிறது. சருமத்தை பிரகாசமாக்க உதவுகிறது மற்றும் சருமம் வயதாகும் செயல்முறையை மெதுவாக்குகிறது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

நுரையீரல் சுத்திகரிப்பு, புற்றுநோய் தடுப்புமுறை... இந்த தகவல்களை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

 

நுரையீரல் புற்றுநோயானது உலகளவில் புற்றுநோய் தொடர்பான இறப்புகளுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது. 2024 உலக நுரையீரல் புற்றுநோய் தினத்தை நாம் அனுசரித்து கொண்டிருக்கும் இந்த சமயத்தில், ​​நுரையீரல் ஆரோக்கியம் குறித்து நிலவும் பல்வேறு கட்டுக்கதைகள் மற்றும் உண்மைகளை விளக்குவது அவசியம் ஆகும். குறிப்பாக நுரையீரல் சுத்திகரிப்பு மற்றும் நுரையீரல் புற்றுநோயைத் தடுப்பதில் இதன் நோக்கம் குறித்து நாம் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும்.

நுரையீரல் சுத்திகரிப்பு பற்றிய புரிதல் : 

நுரையீரல் சுத்திகரிப்பு அல்லது நுரையீரல் நச்சு நீக்கம் என்பது நுரையீரலில் உள்ள மாசுகள், நச்சுகள் மற்றும் சளி ஆகியவற்றை அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு நடைமுறைகளைக் குறிக்கிறது. நுரையீரல் சுத்திகரிப்பு செய்வதால் சுவாச செயல்பாட்டை மேம்படுத்தி, நுரையீரல் திறனை மேம்படுத்துவதோடு சுவாச நோய்களின் அபாயத்தை குறைக்கலாம் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

News18

பொதுவான நுரையீரல் சுத்திகரிப்பு நுட்பங்கள் சில:

  • நீராவி சிகிச்சை: நீராவியை உள்ளிழுப்பது மூலம் சுவாசப்பாதைகளைத் திறந்து நுரையீரல் சளியை வெளியேற்ற உதவுகிறது.

  • கட்டுப்படுத்தப்பட்ட இருமல்: நுரையீரலில் இருந்து அதிகப்படியான சளியை வெளியேற்றுவதற்கான நுட்பம்.

  • மார்பு தாளம்: நுரையீரலில் இருந்து சளியை வெளியேற்ற மார்பில் லேசாக தட்டுதல்.

  • உடற்பயிற்சி: ஒட்டுமொத்த நுரையீரல் ஆரோக்கியம் மற்றும் திறனை மேம்படுத்துவதற்கான உடல் செயல்பாடு.

  • உணவு மாற்றங்கள்: நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஆண்டி ஆக்ஸிடெண்ட் நிறைந்த உணவுகளை உட்கொள்வது.

நுரையீரல் சுத்திகரிப்பு செய்வதால் நுரையீரல் புற்றுநோயைத் தடுக்க முடியுமா?

நுரையீரல் சுத்திகரிப்பு என்ற யோசனை கவர்ச்சிகரமாக தோன்றினாலும், நுரையீரல் புற்றுநோயைத் தடுப்பதில் அதன் செயல்திறன் பற்றிய அறிவியல் ஆதாரங்களை ஆய்வு செய்வது முக்கியம். இது நுரையீரல் புற்றுநோயைத் தடுக்கும் என்ற கூற்றை ஆதரிக்க குறைவான அறிவியல் சான்றுகள் உள்ளன. பெரும்பாலான ஆய்வுகள், நாள்பட்ட மூச்சுத் திணறல் நோய் மற்றும் ஆஸ்துமா போன்ற நாள்பட்ட சுவாச நிலைமைகளைக் கொண்ட நபர்களுக்கு இந்த நடைமுறைகளில் கிடைக்கும் நன்மைகளில் தான் பெரும்பாலும் கவனம் செலுத்துகின்றன.
சுற்றுச்சூழல் காரணிகளின் பங்கு: புகைப்பிடித்தல், புகைப்பிடிக்கும் நபரின் அருகில் அமர்ந்திருத்தல், ரேடான் வாயு, அஸ்பெஸ்டாஸ் மற்றும் காற்று மாசுபாடு போன்ற சுற்றுச்சூழல் காரணிகள் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. நுரையீரல் சுத்திகரிப்பு சில நபர்களுக்கு சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்றாலும், நுரையீரல் புற்றுநோயுடன் தொடர்புடைய ஆபத்து காரணிகளை அகற்ற முடியாது.

நுரையீரல் புற்றுநோய் தடுப்பதற்கான பயனுள்ள உத்திகள் : 

நுரையீரல் சுத்திகரிப்பு போன்ற நிரூபிக்கப்படாத முறைகளை நம்புவதற்குப் பதிலாக, நுரையீரல் புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்க பல நடவடிக்கைகளை எடுக்கலாம்.

  • புகைப்பிடிப்பதைத் தவிர்க்கவும்: நுரையீரல் புற்றுநோயைத் தடுப்பதற்கான மிகச் சிறந்த வழி புகைப்பிடிப்பதைத் தவிர்ப்பது மற்றும் புகைப்பிடிப்பவரின் அருகில் அமராமல் இருப்பது. புகைப்பிடிப்பதை எந்த வயதிலும் நிறுத்தினாலும் நுரையீரல் புற்றுநோயின் அபாயத்தை கணிசமாகக் குறைக்கிறது.

  • கார்சினோஜென்களின் வெளிப்பாட்டைக் குறைக்கவும்: ரேடான் வாயு, ஆஸ்பெஸ்டாஸ் மற்றும் தொழில்துறை மாசுபடுத்திகள் போன்ற அறியப்பட்ட புற்றுநோய்களின் வெளிப்பாட்டைக் குறைக்கவும். அபாயகரமான பொருட்கள் உள்ள பணியிடங்களில் சரியான காற்றோட்டத்தை உறுதிப்படுத்தவும்.

  • ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிக்கவும்: பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த சரிவிகித உணவு, சீரான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உடல் எடையை பராமரித்தல் ஆகியவற்றை பின்பற்றவும்.

    • வழக்கமான உடல் பரிசோதனை: நீண்ட கால புகைப்பிடிப்பவர்கள் மற்றும் நுரையீரல் புற்றுநோயின் குடும்ப வரலாற்றைக் கொண்டவர்களுக்கு, குறைந்த டோஸ் கம்ப்யூட்டட் டோமோகிராபி (LDCT) பயன்படுத்தி வழக்கமான பரிசோதனைகளுக்கு உட்படுத்த வேண்டும். ஆரம்பத்திலேயே நோயை கண்டறிவதன் மூலம் சிகிச்சையின் விளைவுகளை கணிசமாக மேம்படுத்த முடிகிறது.

    • தடுப்பூசிகள்: நாள்பட்ட சுவாச நோய்த்தொற்றுகள் நுரையீரல் ஆரோக்கியத்தை பலவீனப்படுத்தும் என்பதால், இன்ஃப்ளூயன்ஸா மற்றும் நிமோனியா போன்ற சுவாச நோய்த்தொற்றுகளுக்கான தடுப்பூசிகள் புதுப்பித்த நிலையில் இருப்பதை உறுதிசெய்யவும்.




Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

INDEPENDENCE DAY SPEECH , SONGS & KAVITHAI FOR PRIMARY STUDENTS

 


Independence Day Special Songs - QR Code Collection - Click here ( New)

Independence Day Special Speech -English Collections ( New)  - Click here

Independence Day Special Speech - Tamil And English Collections ( New)  - Click here

Independance day speech in tamil for school students (Videos)

INDEPENDENCE DAY | SPEECH 1- Click here (Tamil)

INDEPENDENCE DAY | ESSAY 1- Click here (Tamil)

INDEPENDENCE DAY | SPEECH 1- Click here (English)




INDEPENDENCE DAY - KAVITHAI - 3- Click here (Tamil)

SONGS

Tamil Thaai Vaazhthu - Click here

JANA GANA MANA - Click here

Kodi Padal - Click here

MARCH PAST SONG - Click here

Vande Mataram (ORIGINAL) - Click here

Vande Mataram (LATA MAGESHKAR) - Click here

Ovvoru Pookalume - Click here

Acham Acham illai - Click here

India Naadu En Veedu - Click here

VAZHIYA SENTHAMIL - Click here


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


Independence Day Celebration - August 2018 ( School Special Day - Speech, Songs, Essay, Poem, Drawing Pictures....)

 

20170809102022_wm



INDEPENDENCE DAY - KAVITHAI - 3- Click here (Tamil)

SONGS

Tamil Thaai Vaazhthu - Click here

JANA GANA MANA - Click here

Kodi Padal - Click here

MARCH PAST SONG - Click here

Vande Mataram (ORIGINAL) - Click here

Vande Mataram (LATA MAGESHKAR) - Click here

Ovvoru Pookalume - Click here

Acham Acham illai - Click here

India Naadu En Veedu - Click here

VAZHIYA SENTHAMIL - Click here

Drawing Competition 

Picture 1 - Click here

Picture 2 - Click here

Picture 3 - Click here

Picture 4 - Click here

Picture 5 - Click here

Picture 6 - Click here

Kalvi Valarchi Naal - Kamarajar Birthday Celebration

Drawing Competition :

Kamarajar - Drawing Competition - Picture 1 - Click here
Kamarajar - Drawing Competition - Picture 2 - Click here
Kamarajar - Drawing Competition - Picture 3 - Click here

Kamarajar - Drawing Competition - Picture 4 - Click here
Kamarajar - Drawing Competition - Picture 5 - Click here
Kamarajar - Drawing Competition - Picture 6 - Click here
Kamarajar - Drawing Competition - Picture 7 - Click here
Kamarajar - Drawing Competition - Picture 8 - Click here
Kamarajar - Drawing Competition - Picture 9 - Click here
Kamarajar - Drawing Competition - Picture 10 - Click here

🔻🔻🔻

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


SMC மறுகட்டமைப்பு உறுப்பினர்கள் உறுதிமொழி

 .com/

SMC மறுகட்டமைப்பு உறுப்பினர்கள் உறுதிமொழி

SMC Reconstitution Members Pledge👇👇👇

Download here


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


CL, EL, RL தவிர பிற விடுப்புகள், பண்டிகை முன்பணம் போன்றவை Kalanjiyam App மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

 இனிவரும் காலங்களில் விடுப்பு எடுப்பவர்கள் களஞ்சியம் மொபைல் செயலியை பயன்படுத்தி விடுப்பு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் தற்செயல் விடுப்பு ஈடு செய்யும் விடுப்பு மற்றும் வரையறுக்கப்பட்ட விடுப்புகளை தவிர மற்றும் ஏனைய விடுப்புகளை சம்பந்தப்பட்ட பணியாளர்கள் அனுமதி ஆணை பெற்று அவ்வாணையை களஞ்சியம் செயலியில் ஏற்பளிப்பு செய்து பிறகு தான் ஊதிய வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது

👇👇👇👇👇

IMG-20240808-WA0025



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group


"தமிழ்புதல்வன்" திட்ட துவக்க விழா நிகழ்ச்சி - மாணவர்களுக்கு காண்பதற்கான நேரடி இணைப்பு - 09.08.2024

 IMG_20240808_222147

அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை உயர்த்திட "தமிழ் புதல்வன்" எனும் மாபெரும் திட்டம் இந்த நிதியாண்டு முதல் அமல்படுத்திடும் வகையில் 09.08.2024 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் இத்திட்டத்தை துவக்கி வைக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, 09.08.2024 அன்று கோயம்புத்தூரில் நடைபெறும் "தமிழ்புதல்வன்" திட்ட துவக்க விழா நிகழ்ச்சியை அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு அனைத்து மாணவர்களும் ஆன்லைன் வாயிலாக காணும் வகையில் பள்ளிகளில் தக்க ஏற்பாடுகளை செய்யும் படி பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. துவக்க விழா நிகழ்ச்சிகளை காணொலியில் காண்பதற்கான லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது.


மேலும், துவக்க விழா நிகழ்ச்சியை கண்டு களித்த அறிக்கையை அனுப்புமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் தங்களின் பள்ளியில் இந்நிகழ்ச்சியை பார்த்த மாணவர்கள், ஆசிரியர்கள் எண்ணிக்கையினை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google Form-இல் 09.08.2024 அன்று நண்பகலில் தவறாது உள்ளீடு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


காணொலிக்கான Link: https://youtu.be/Zgbw9Sht4us


Google Form-க்கான Link: https://forms.gle/ToJ2eqXRdtAXriHx5



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group