Search

இந்தியாவில் அதிகரித்து வரும் சீன பூண்டு விற்பனை - எச்சரிக்கும் மருத்துவர்கள்!

 பூண்டு இந்திய சந்தையில் முக்கிய உணவு பொருளாக உள்ளது. உணவு மட்டுமின்றி மருத்துவ குணங்களும் சிறந்து விளங்குகிறது. இதனால் நமது நாட்டில் அனைவரது வீட்டிலும் பூண்டு நிச்சயமாக இருக்கும். இந்த நிலையில் சீனா தயார் செய்து ஏற்றுமதி செய்யும் பூண்டுகள் இந்தியாவில் அதிகரித்து வருவதாக வெளியான செய்தி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இந்த பூண்டு மற்ற பூண்டுகளை விட கவர்ச்சிகரமானதாக தோன்றுகிறது. ஆனால் மிகவும் தீங்கு விளைவிக்க கூடியதாகும். இந்த பூண்டு முக்கியமாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் பலர் இதை சீன பூண்டு என்று அழைக்கிறார்கள். உலகில் பூண்டு உற்பத்தியில் சீனா முதலிடத்தில் உள்ளது. விற்பனை நோக்கில் தற்போது செயற்கையாக பூண்டை தயார் செய்து அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து லாபம் பார்த்து வருகின்றனர். இதனால் தற்போது இந்தியாவில் சீன பூண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் இன்னும் சீன பூண்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

News18

இதுகுறித்து விளக்கும் காய்கறி விற்பனையாளர்கள், இந்த பூண்டு மிகவும் பெரியதாகவும், பார்க்க பளிச் என்று இருப்பதால் பலரும் இதனை வாங்க விரும்புகின்றனர் என்கிறார். இருப்பினும், இந்த சீன பூண்டு பல தீங்கு விளைவிக்கும் அம்சங்களை கொண்டுள்ளது. அதனால் இந்தப் பூண்டைப் பயன்படுத்துபவர்கள் பல பாதிப்புகளை சந்திக்கின்றனர். இந்த பூண்டை தொடர்ந்து பயன்படுத்துவதால் பல உடல் பிரச்சனைகள் ஏற்படும்.

இதுகுறித்து விளக்கும் மருத்துவர் சவுரப் சர்க்கார், சீன பூண்டு மற்ற பூண்டுகளை விட மிகவும் பெரியதாக இருக்கும். பூண்டு பற்கள் விரல்கள் போல் அடர்த்தியாக இருக்கும். இந்த பூண்டு வெளிர் சிவப்பு நிறத்தில் இருக்கும். இருப்பினும், இந்த பூண்டு மற்ற பூண்டுகளைப் போல கடுமையான வாசனையைக் கொண்டிருக்காது, லேசான துர்நாற்றத்துடன் இருக்கலாம். மேலும் இந்த பூண்டை வெள்ளையாக்க ப்ளீச் செய்யப்படுகிறது. இதனால் இந்த பூண்டை பயன்படுத்தினால் புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கிறார்.

உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் இந்த பூண்டு உற்பத்தியின் போது பல உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் வெள்ளையாக்க குளோரின் போன்ற இராசயங்களும், ஈயம் போன்ற உலோகங்களும் பயன்படுத்துகின்றனர். எனவே இந்த பூண்டை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இந்த சீன பூண்டில் மருத்துவ குணங்கள் எதுவும் இல்லை, மாறாக விஷதன்மை கொண்டதாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். எனவே பூண்டு வாங்க சந்தைக்குச் செல்வதற்கு முன், நீங்கள் சீனப் பூண்டை வாங்குகிறீர்களா அல்லது உள்ளூர் பூண்டை வாங்குகிறீர்களா என்பதை சரிபார்க்கவும் என கூறியுள்ளார்.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

ஆஃபீஸ் சேரில் உட்கார்ந்து முதுகு கூன் வலைந்து போச்சா..? உங்களுக்குதான் இந்த டிப்ஸ்..!

 நாள் முழுவதும் நாற்காலியில் உட்கார்ந்து வேலைபார்க்கும் வாழ்க்கை முறையானது கூன் முதுகு பாதிப்பை ஏற்படுத்த அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. நாற்காலியில் அமரும்போது நன்கு நேராகச் சாய்ந்து உட்காரப் பழக வேண்டும். தலையைக் கீழே தொங்கப்போட்டு, முதுகைக் குறுக்கி உட்காருவது முதுகை பலவீனப்படுத்தும். நாற்காலிகளில் அமர்ந்து நீண்ட நேரம் வேலை பார்ப்பவர்கள் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை எழுந்து சிறிது தூரம் நடப்பது நல்ல ஓய்வாக இருக்கும். வேலைகளுக்கு நடுவே சில நிமிடங்கள் ஓய்வாக நடப்பது, தண்ணீர் பருகுவது உடலையும் மனத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

ஒரு நாளைக்கு 15 மணி நேரத்துக்கு மேல் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களின் வாழ்நாள் குறைகிறது என்று ஓரு ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது. உங்கள் கூன் முதுகு பாதிப்பை குறைக்க சில பயிற்சிகள் பின்வருமாறு.

News18

சைல்ட் போஸ்:

  • உங்கள் மணிக்கட்டுகளை உங்கள் தோள்களின் கீழ் நேரடியாக வைக்கவும் மற்றும் உங்கள் முழங்கால்களை மடக்கி உங்கள் இடுப்புக்குக் கீழே வைக்கவும்.

  • மெதுவாக உங்கள் இடுப்பை உங்கள் குதிகாலில் படுமாறு வைத்தபடி, உங்கள் கைகளை உங்களுக்கு முன்னால் நீட்டவும்.

  • உங்கள் நெற்றியை தரையில் வைத்து, உங்கள் கைகளை நன்றாக நீட்டவும்.

  • இந்த நிலையில் 30 வினாடிகள் முதல் 1 நிமிடம் வரை இருக்கவும், ஆழமாக சுவாசிக்கவும்.

கேட் - கௌவ் போஸ்:

  • உங்கள் மணிக்கட்டுகளை உங்கள் தோள்களின் கீழ் நேரடியாக வைக்கவும் மற்றும் உங்கள் முழங்கால்களை மடக்கி உங்கள் இடுப்புக்குக் கீழே வைக்கவும்.

  • உங்கள் கைகளை தரையில் ஊன்றி மண்டியிடவும். உங்கள் முதுகை மெதுவாக வளைத்து, வயிற்றை தரையை நோக்கி இறக்கி, உங்கள் தலை மற்றும் கால் மேல நோக்கி பார்க்கவும்.

வால் புஷ்:

  • சுவருக்கு முன் நேராக நின்று உங்கள் கைகளை சுவரின் மேல் வைக்கவும். உங்கள் முதுகு சாய்ந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தவும்.

  • உங்கள் முழங்கைகள் 90 டிகிரிக்கு வளைந்து, “W” நிலையில் இருக்கும் வரை, உங்கள் கைகளை சுவரில் மேல் வைத்து அழுத்தவும். அப்போது உங்கள் தோள்பட்டை மற்றும் முதுகு அழுத்தம் கொடுப்பதை நீங்கள் உணரலாம்.

  • இதை 10 முதல் 15 முறை வரை செய்யவும்.

    கோப்ரா போஸ்:

    • முதலில் தரையில் முதுகு நேராக இருக்குமாறு குப்புற படுக்க வேண்டும்.

    • பிறகு உங்கள் மார்பு பகுதியை தரையில் இருந்து உயர்த்த உங்கள் கைகளில் அழுத்தம் கொடுக்கவும்.

    • உங்கள் முதுகு சற்று வளைந்தபடி உங்கள் கைக்களை நேராக வைத்து தலையை சற்று தூக்கவும்.

    • இந்த நிலையை 15 முதல் 30 விநாடிகள் வரை வைத்திருங்கள், ஆழமாக சுவாசிக்கவும்.

      டௌன்வர்ட் ஃபேஸிங் டாக்:

  • உங்கள் மணிக்கட்டுகளை நேரடியாக உங்கள் தோள்களுக்குக் கீழேயும், உங்கள் முழங்கால்களை உங்கள் இடுப்புக்குக் கீழேயும் வைக்கவும்.

  • உங்கள் கைகளில் அழுத்தி, உங்கள் இடுப்பை பின்புறமாக உயர்த்தி, உங்கள் கைகளையும் கால்களையும் நேராக்குவதன் மூலம் தலைகீழாக “V” வடிவத்தை உருவாக்கவும்.

  • இந்த நிலையை 30 வினாடிகள் முதல் 1 நிமிடம் வரை வைத்திருங்கள், ஆழமாக சுவாசிக்கவும்.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

இந்த காய்கறிகளை உங்க வீட்டு பால்கனியிலேயே வளர்க்கலாம்.. அதிக பராமரிப்பு தேவைப்படாது..!

 இன்றைய நவீன உலகில் உணவுக் கலப்படம் என்பது ஒரு முக்கிய கவலையாக உள்ளது. கடைகளில் கிடைக்கும் பல காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளால் நிறைந்திருக்கின்றன.

இருப்பினும், இதற்கு ஒரு எளிய மற்றும் பயனுள்ள தீர்வு ஒன்று உள்ளது, அதாவது காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவை உங்கள் வீட்டிலேயே வளர்ப்பதாகும். பால்கனி தோட்டங்கள், மாடித் தோட்டங்கள் அல்லது சமையலறை தோட்டங்கள் அமைத்து காய்கறிகள் மற்றும் பழங்களை சொந்தமாக விளைவிப்பதால், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உறுதிசெய்யலாம்.

News18

கட்டுப்பாடு மற்றும் விழிப்புணர்வு : 

CEF குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், நிறுவனருமான மனிந்தர் சிங் நய்யார் கூறியதாவது, ஒருவர் தங்கள் உணவுக்கு தேவையான பொருட்களை தாங்களே வளர்ப்பதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றலாம். ஒரு சாதாரண மனிதனால் ஒட்டுமொத்தமாக கலப்பட உணவுப் பொருட்களைக் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், அவர்கள் தங்கள் வீடுகளில் சொந்த தயாரிப்புகளை வளர்ப்பதால், கலப்பட உணவு எடுத்துக் கொள்வதை தடுக்க முடியும் என்று கூறியுள்ளார்.

ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து : 
கடைகளில் வாங்கும் காய்கறிகள் மற்றும் பழங்கள் உடன் ஒப்பிடும்போது, ​​வீட்டில் உற்பத்தி செய்யப்படும் தயாரிப்புகளில் வைட்டமின்கள், இருப்புசத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட்கள் அதிகமாக உள்ளன, இது ஆரோக்கியமான உணவு தேர்வாகும். உங்கள் தோட்டத்தில் இருந்து நேரடியாக புதிய, கலப்படமற்ற உணவை சாப்பிடும்போது உங்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வும் மேம்படும்.

சேமிப்பு : 

ஆரோக்கிய நன்மைகளை தவிர, நீங்களே உங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்களை உற்பத்தி செய்து கொள்வது உங்களின் பணத்தை சேமிக்க வழிவகுக்கும். பொதுவாக விதைகள் மற்றும் சிறிய தாவரங்கள் விலை குறைவானது, மேலும் காலப்போக்கில், காய்கறிகள் மற்றும் பழங்கள் வாங்கும் செலவும் குறைகிறது. இது குறித்து நய்யார் கூறியதாவது, அத்தகைய உணவு ஆரோக்கிய நலன்களைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், காலப்போக்கில் நிறைய பணத்தையும் சேமிக்க முடியும் என கூறியுள்ளார்.

சுவை மற்றும் திருப்தி : 

பொதுவாக வீட்டில் தயாரிக்கப்படும் காய்கறிகள் மற்றும் பழங்கள் சுவைக்கு நிகரில்லை. சுவைகள் அதிகமாகவும், ஊட்டச்சத்து நிறைந்ததாகவும், எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்களே தயாரித்த உணவை சாப்பிடுவதால் திருப்தி உண்டாகும்.

நடைமுறை குறிப்புகள் : 

ZingyZest இன் உணவுப் பதிவர் சாரா ஹுசைன் என்பவர் வீட்டுத் தோட்டம் தொடர்பான தனது தனிப்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார். அதாவது, உணவில் கலப்படம் என்பது இன்று மிகவும் கவலையான விஷயங்களில் ஒன்றாகும். பொதுவாக வெளியில் வாங்கப்படும் காய்கறிகள் மற்றும் பழங்கள் எல்லாமே கலப்படம் செய்யப்படுகின்றன, மேலும் ஆர்கானிக் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை இருமடங்காக அதிகரித்துள்ளது, ஆனால் இது எளிதில் கிடைக்காது, என்று அவர் கூறியுள்ளார். மூலிகைகள் மற்றும் கொத்தமல்லி, துளசி, ஆர்கனோ, எலுமிச்சை மற்றும் பூண்டு போன்ற காய்கறிகள் வளர எளிதானவை மற்றும் குறைந்த இடம் இருந்தாலே போதுமானது என்றும் ஹுசைன் கூறியுள்ளார்.

உங்கள் சொந்த தோட்டத்தைத் அமைக்க சில குறிப்புகள் இங்கே:

  • சரியான இடத்தை தேர்வு செய்யவும்: பால்கனிகள், மொட்டை மாடிகள் அல்லது ஜன்னல்கள் போன்ற சரியான இடத்தை தேர்வுசெய்யவும்.

  • சிறியதாக தொடங்குங்கள்: மூலிகைகள் (கொத்தமல்லி, துளசி) போன்ற எளிதில் வளரக்கூடிய தாவரங்களுடன் தொடங்கி, படிப்படியாக காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு விரிவாக்குங்கள்.

  • தரமான மண்ணைப் பயன்படுத்துங்கள்: ஆரோக்கியமான தாவர வளர்ச்சியை உறுதிப்படுத்த நல்ல தரமான மண் மற்றும் உரத்தை பயன்படுத்துங்கள்.

  • தினசரி பராமரிப்பு: உங்கள் செடிகளுக்கு அடிக்கடி தண்ணீர் ஊற்றி, பூச்சிகளைக் கண்காணிக்கவும்.

    உங்கள் தோட்டங்களில் தாவரங்கள் வளர்வதைப் பார்த்து மகிழுங்கள். தீங்கு விளைவிக்கும் உணவுகளை கட்டுப்படுத்தி, சொந்த விளைபொருட்களை வளர்ப்பதன் மூலம், உணவுக் கலப்படத்தை தவிர்க்கலாம், நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம், பணத்தைச் சேமிக்கலாம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கலாம்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

உங்கள் குழந்தையின் நுண்ணூட்டச்சத்து குறைபாட்டைக் தெரியப்படுத்தும் 5 முக்கிய அறிகுறிகள்

 எலும்புகள், தோல், தசைகள் மற்றும் நரம்புகள் உட்பட நம்முடைய உடலின் பல்வேறு பாகங்களின் சரியான செயல்பாட்டை பராமரிக்க ஊட்டச்சத்துக்கள் உதவுகின்றன. வைட்டமின் டி, துத்தநாகம், இரும்பு, கால்சியம் மற்றும் மாக்னீசியம் போன்ற நுண்ணூட்டச்சத்துக்கள் உடலுக்கு போதுமான அளவு கிடைக்காதபோது, ​​குழந்தைகளுக்கு நுண்ணூட்டச்சத்து குறைபாடுகள் உருவாகலாம்.

உடலால் இந்த சத்துக்களை உற்பத்தி செய்ய முடியும் என்றாலும், ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை குழந்தையின் டயட்டில் சேர்க்க வேண்டியது அவசியம் ஆகும். சிறிய அளவில் தேவைப்பட்டாலும், வைட்டமின் டி, துத்தநாகம் மற்றும் இரும்புச்சத்து போன்ற நுண்ணூட்டச்சத்துக்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை. அதனால்தான் அவை நுண்ணூட்டச்சத்துக்கள் என்று அழைக்கப்படுகின்றன. நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் நுண்ணூட்டச்சத்து குறைபாடுகளால் பாதிக்கப்படுகின்றனர்.

News18

குழந்தைகளின் நுண்ணூட்டச்சத்து குறைபாட்டிற்கு காரணம் என்னவாக இருக்கும்?

“கால்சியம், இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடாதது போன்ற பல்வேறு காரணங்கள் நுண்ணூட்டச்சத்து குறைபாட்டிற்கு காரணமாக இருக்கலாம். இவை பெரும்பாலும் நுண்ணூட்டச் சத்து குறைபாட்டிற்கு வழிவகுக்கும். குழந்தை பருவத்தில் மோசமான உணவுப்பழக்கம் இருப்பதால் ஆரோக்கியமான மற்றும் பச்சை இலைக் காய்கறிகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பல்வேறு உணவுகள் சாப்பிடுவதை புறக்கணிக்கிறார்கள். ஜலதோஷம், காய்ச்சல் மற்றும் வைரஸ் தொற்று போன்ற சில நோய்களும் கூட குழந்தைகளுக்கு பசியின்மையை ஏற்படுத்தும் என டாக்டர். பிரசாந்த் மோரல்வார் கூறுகிறார்.


இதன் அறிகுறிகள் : 

  • உடலில் ஆற்றல் குறைவாக இருப்பது

  • எப்போதும் கோபத்தில் சண்டை போடுவது, எதையாவது தூக்கி எறிவது அல்லது வெறித்தனமாக நடந்துகொள்வது

  • பசியின்மை அல்லது உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது சாப்பிட்டவுடன் உடனடியாக தூக்கி எறிதல்

  • ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உடல் பருமனாக இருந்தால், எப்போதும் பசியுடன் இருப்பது போன்றும், எவ்வளவு சாப்பிட்டாலும் திருப்தியடையாத உணர்வும் உருவாக்கும்.

  • உலர்ந்த மற்றும் எளிதில் உதிரும் முடி

  • காயங்கள் அல்லது வடுக்கள் மெதுவாக குணமாகும்

  • ஆரோக்கியமான உணவுப் பழக்கம் இல்லாததால் அடிக்கடி நோய்வாய்ப்படுதல்

குழந்தைகளில் நுண்ணூட்டச்சத்து குறைபாட்டை நிர்வகிப்பதற்கான சில டிப்ஸ் :

புரதம், இரும்பு, வைட்டமின் டி, துத்தநாகம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து ஆகியவையே மிகவும் பொதுவான குறைபாடுகள் ஆகும். ஆப்பிள்கள், பேரிக்காய் மற்றும் பெர்ரி போன்ற பழங்களில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து அதிகமுள்ளது. இவை தசைகளை உருவாக்குவதற்கு அவசியமானதோடு மலச்சிக்கல் அல்லது வாயு தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க உதவுகின்றன.

முட்டை, பால் பொருட்கள் மற்றும் பச்சை இலைக் காய்கறிகள் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது குழந்தைகளின் புரதக் குறைபாட்டின் பிரச்சனையை பராமரிக்க உதவும். இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் டி போன்ற நுண்ணூட்டச்சத்துக்கள் கீரை, கொண்டைக்கடலை, ஆளிவிதை, சோயாபீன்ஸ் மற்றும் தர்பூசணி போன்ற உணவுகளில் எளிதாகக் காணப்படுகின்றன. துத்தநாகம் மற்றும் கால்சியம் குறைபாடு உள்ள குழந்தைகள் பால், பனீர், மோர் மற்றும் தயிர் போன்ற பால் பொருட்களை அதிகம் சாப்பிட முயற்சிக்க வேண்டும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

உங்க உடல் எடையை அதிகரிக்கக் கூடிய காய்கறிகள் என்னென்ன தெரியுமா..?

 பொது அறிவை வளர்த்துக் கொள்வதில் பல்வேறு வினாடி வினாக்கள் மற்றும் புதிர்களை பயிற்சி செய்து பார்ப்பது ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. வழக்கமான GK புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்களை படிப்பது தவிர, ஒரு சில வினாடி வினாக்களில் பங்கு பெறுவது போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு பொது அறிவை வளர்த்துக் கொள்ள உதவியாக இருக்கும்.

ஆகவே இந்த பதிவில் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட ஒரு சில பொது அறிவு கேள்விகள் மற்றும் அதற்கான பதில்களை தெரிந்து கொள்ளலாம்.

News18

எந்த உப்பு நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது?

சுகாதார நிபுணர்களின் படி, குறைந்த சோடியம் கொண்ட உப்பு அதிக பயனுள்ளதாக கருதப்படுகிறது. கடல் மற்றும் கல் உப்பு ஆகிய இரண்டுமே அதிக அளவு பயன்களை கொண்டுள்ளன. இவை இரண்டுமே வழக்கமான உப்பை காட்டிலும் குறைந்த அளவு சோடியம் கொண்டுள்ளன. எனவே இந்த இரண்டு உப்புகளையும் நீங்கள் உங்களுடைய உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

BMI கணக்கிடுவது எப்படி?

BMI என்பது உடல் நிறை குறியீட்டெண் (Body Mass Index). இது ஒரு இயற்பியல் அளவீடு. இதன் மூலமாக ஒரு குறிப்பிட்ட உயரம் கொண்ட உடலுக்கு எந்த அளவு உடல் எடை சரியானதாக இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது. நிபுணர்களின் படி, 23 -க்கும் குறைவான BMI என்பது சரியான BMI ஆக கருதப்படுகிறது. இதைவிட ஒரு நபர் அதிக BMI கொண்டிருந்தால் அவர் உடல் எடை அதிகம் கொண்டவராக கருதப்படுவார். BMI 25 விட அதிகமாக இருந்தால் அது உடற்பருமனாக கருதப்படும்.

BMI = உடல் எடை (கிலோ கிராமில்) / (உயரம் X உயரம் (மீட்டர்களில்))

எந்த காய்கறி உடல் எடையை அதிகரிக்க வழிவகுக்கும்?

பச்சை பட்டாணி, சர்க்கரைவள்ளி கிழங்கு மற்றும் சோளக்கதிர் ஆகியவை ஆரோக்கியமான உணவுகள். எனினும் இவை உடல் எடையை விரைவாக அதிகரிக்க கூடும். இந்த காய்கறிகளில் அதிக அளவு கார்போஹைட்ரேட்டுகள் உள்ளது. இவற்றில் கொழுப்பு மற்றும் புரதச்சத்து கிடையாது. எனினும், ஆன்டி-ஆக்சிடன்ட்கள், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் மினரல்களின் சிறந்த மூலங்களாக இவை அமைகின்றன. இதைத்தவிர உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பெற நீங்கள் கொண்டைக்கடலை மற்றும் பீன்ஸ் போன்றவற்றையும் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

குளிர்ந்த நிலையிலும் உருகக் கூடிய பொருட்கள் என்னென்ன?

இந்த கேள்வியை கேட்டு நீங்கள் நிச்சயமாக குழம்பி போகலாம். ஆனால் சற்று யோசித்தால் இதற்கான பதிலை நீங்கள் கண்டுபிடித்து விடுவீர்கள். இந்த கேள்விக்கான பதில் மெழுகுவர்த்தி. எந்த வானிலையாக இருந்தாலும் சரி, மெழுகுவர்த்தி கட்டாயமாக உருகக் கூடும்.

உடலின் சாதாரண ரத்த சர்க்கரை அளவு என்ன?

ரத்த சர்க்கரை அளவு பொதுவாக நேரத்திற்கு தகுந்தார் போல மாறுபடும். எனினும் ரத்த சர்க்கரை அளவை பரிசோதிப்பதற்கான சரியான நேரம் காலை வெறும் வயிறு. இதன் போது உங்களுடைய ரத்த சர்க்கரை அளவு 70 முதல் 100 mg வரை இருந்தால் அது சாதாரண அளவாக கருதப்படுகிறது. இதைவிட அதிகமாக இருந்தால் உங்களுடைய ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

உடல் எடையை குறைப்பது எப்படி?

உடல் எடையை குறைப்பது என்பது கொழுப்பை குறைப்பது ஆகும். நமது உடலில் உள்ள கொழுப்பை எரிப்பது மிகவும் அவசியம். இதற்கு முதலில் நீங்கள் சாப்பிடும் உணவை கட்டுப்படுத்த வேண்டும். தெரிந்தோ தெரியாமலோ உங்களுடைய உடலில் உள்ள கொழுப்பு அதிகரிக்க கூடிய உணவுகளை சாப்பிட்டு விடக்கூடாது. துரித உணவுகள், அதிக எண்ணெய் சேர்த்து செய்யப்பட்ட தின்பண்டங்கள், காரமான உணவுகள், அதிகப்படியான மதுபானம், அதிகளவு தேநீர் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்கள் உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும்.
மேலும் உங்களுடைய உடல் எந்த அளவிற்கு ஆக்டிவாக இருக்கிறது என்பதை பார்க்க உங்களுடைய உடற்பயிற்சியை அதிகரிக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் ஏற்கனவே உடலை வருத்திக்கொண்டு வேலை செய்யக்கூடியவர் என்றால் நீங்கள் உடற்பயிற்சி செய்ய தேவையில்லை. இவ்வாறு செய்து வர உங்கள் உடல் எடை விரைவில் குறைவதை நீங்கள் கவனிக்கலாம்.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

தினமும் மலம் கழிக்கவில்லை என்றால் என்ன ஆகும்..? நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய முக்கியமான விஷயம் இதுதான்.!

 இந்த தலைப்பு கொஞ்சம் அசூசையை ஏற்படுத்துகிறதா? நிச்சயம் இருக்காது என்றே நினைக்கிறோம். ஏனென்றால் உங்களுக்கு மலம் கழிப்பதில் பிரச்சனை இருந்தால், அது உங்கள் மனநிலையில் சிக்கலை ஏற்படுத்தும். மலம் கழிப்பது என்பது நமது உடலின் மிக அடிப்படையான செயல்பாடுகளில் ஒன்றாகும். இது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. ஆனால் நாம் இதைப் பற்றி பெரிதாக எடுத்துக்கொள்வதேயில்லை.

ஆனால் உங்கள் மலம் உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி நிறைய விஷயங்களை கூறலாம். அதாவது அதன் நிறம், அமைப்பு மற்றும் எத்தனை முறை வெளியேறுகிறது என்பதைப் பொறுத்து உங்கள் ஆரோக்கியத்தை தீர்மானிக்க முடியும்..

News18

இப்போதுள்ள முக்கியமான கேள்வி: கட்டாயம் தினமும் மலம் கழிக்க வேண்டுமா?

அநேகமாக பலரின் மனதிலும் இந்த கேள்வி இருக்கும். ஆனால் யாரிடம் இதைப்பற்ற கேட்பது என தெரியாமல் இருப்பார்கள். இல்லை என்பதே இதற்குப் பதிலாகும்.

“தினமும் மலம் கழிப்பது சாதாரண விஷயம் என்றாலும், கண்டிப்பாக எல்லாருக்கும் இது அவசியமில்லை. சாதாரண குடல் இயக்கமானது ஒரு நாளைக்கு மூன்று முறை முதல் வாரத்திற்கு மூன்று தடவை வரை இருக்கும். எனவே நீங்கள் தினசரி மலம் கழிக்கிறீர்களோ அல்லது இரண்டு நாளுக்கு ஒருமுறை செல்கிறீர்களோ, ஒழுங்குமுறை முக்கியமானது” என்கிறார் டாக்டர் ஜிண்டால்.

தினசரி மலம் கழிக்கும் பழக்கம் மோசமானதல்ல என்றாலும், தினமும் கட்டாயம் மலம் கழிக்க வேண்டும் என்ற ஒரு கட்டுக்கதை நம்மிடையே நிலவி வருகிறது.

எச்சரிக்கை அறிகுறிகள் : 

உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் மலம் கழிக்கும் பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்றாலும், சில அறிகுறிகள் தென்பட்டால் அவசியம் மருத்துவரை சென்று சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.

உதாரணமாக..

  • கருப்பு நிறத்தில் மலம்: மேல் இரைப்பைக் குழாயில் இரத்தப்போக்கு இருப்பதை இது குறிக்கலாம்.

  • பிரகாசமான சிவப்பு நிறம்: இது மூல நோய் அல்லது பெருங்குடல் புற்றுநோய் போன்ற கீழ் இரைப்பை குடலில் ஏற்பட்டுள்ள இரத்தப்போக்கின் அறிகுறியாக இருக்கலாம்.

  • வெளிர் அல்லது களிமண் நிற மலம்: கல்லீரல் அல்லது பித்த நாள பிரச்சனைகளைக் குறிக்கலாம்.

  • துர்நாற்றம் கொண்ட மலம்: இது கணைய பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்கலாம்.

    உங்களையும் (உங்கள் மலத்தையும்) ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி?

    நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ, அதைப் பொறுத்தே உங்கள் ஆரோக்கியமும் இருக்கும். எனவே, நீங்கள் மாற்றங்களைச் செய்ய விரும்பினால், உங்கள் தட்டிலிருந்து முதலில் தொடங்கவும்.

    ஆரோக்கியமான மலம் கழிக்க உதவும் சில விஷயங்கள்:

    • சீரான குடல் இயக்கங்களை ஆதரிக்கவும் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கவும் நிறைய தண்ணீர் குடிக்கவும்

    • குடல் செயல்பாட்டைத் தூண்டுவதற்கு சீரான உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்

    • பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் அதிகமுள்ள உணவுகள் உட்கொள்வதைத் தவிர்க்கவும்.

      • தயிர் மற்றும் புளித்த உணவுகளில் காணப்படும் ப்ரோபயாடிக்குகள் குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும்

      • மன அழுத்தம் செரிமானத்தை பாதிக்கும் என்பதால் தியானம் அல்லது யோகா போன்ற பயிற்சிகளில் ஈடுபடுங்கள்.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

எந்த பழத்தில் அதிக 'கால்சியம்' சத்து உள்ளது..? சரியான பதிலை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்..!

 

பொது அறிவு என்பது ஒவ்வொரு கணமும் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ள உதவும் அறிவுக் களஞ்சியமாகும். ஒவ்வொரு மாணவரும் பொது அறிவை பயிற்சி செய்வதால் அவர்களது அன்றாட வாழ்க்கையை எளிதாக்குகிறது. ஏனெனில் பொது அறிவின் களஞ்சியத்தில் பல்வேறு நாடுகளிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் அறியப்படாத தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன.

போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டுமென்றால், பொது அறிவில் பயிற்சி பெறுவது அவசியமாகும். இன்று உங்களுடன் சில பொது அறிவு கேள்விகள் மற்றும் அதற்கான பதில்களைப் பகிர்ந்து கொள்ளப் போகிறோம். நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு உங்களுக்கு பதில் தெரிகிறத எனப் பாருங்கள்.

கேள்வி- பலாப்பழம் எந்த நாட்டின் தேசியப் பழம்?

பதில்- இலங்கை மற்றும் பங்களாதேஷின் தேசியப் பழமாக பலாப்பழம் உள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளாவின் மாநிலப் பழமாகவும் பலாப்பழம் உள்ளது. இந்த பழத்தின் ஊட்டச்சத்து மதிப்பு சிறப்பானது. கோடைகால பழமான இதற்கு இந்தியாவில் மதிப்பு ஜாஸ்தி. அதுவும் குறிப்பாக வங்காள மக்களுக்கு கோடைகால மாம்பழம் மற்றும் பலாப்பழத்தின் மதிப்பு கொஞ்சம் வித்தியாசமானது.

கேள்வி – இந்தியாவில் அதிகம் சாப்பிடப்படும் பழம் எது?

பதில் – வாழைப்பழம். இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. வாழைப்பழம் ஒன்றை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள ரத்த பற்றாக்குறையை போக்கலாம். அதோடு வாழைப்பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடென்ட் ஃப்ரீ ரேடிக்கல்களால் மூலம் ஏற்படும் பாதிப்பிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது. மேலும், இதில் உள்ள டோபமைன் நம் மனநிலையை சந்தோஷமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

கேள்வி - எந்த பழத்தில் அதிக கால்சியம் உள்ளது?

பதில் -

  • கால்சியம் நிறைந்த பழங்களின் பட்டியலில் ஆரஞ்சு முதலிடத்தில் உள்ளது. அதேப்போல் டேன்ஜரின் பழத்திலும் அதிக கால்சியம் சத்து உள்ளது.

  • மேலும் கால்சியம் நிறைந்த பழங்களில் ஒன்றாக கிவி உள்ளது. 1 கப் (177 கிராம்) கிவி பழத்தில் 60 மி.கி கால்சியம் உள்ளது.

  • கிவி பழத்தில் அதிகளவு கால்சியம் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் உள்ளது. இது உடலின் நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது. தினசரி பரிந்துரைக்கப்பட்ட வைட்டமின் சி அளவில் 230 சதவிகிதம் கிவி பழத்தில் உள்ளது.

  • இது தவிர, 100 கிராம் டேன்ஜரின் பழத்தில் 37 மில்லிகிராம் கால்சியம் கால்சியம் உள்ளது. 100 கிராம் ஆரஞ்சுப் பழத்தில் 43 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. இவையெல்லாம் கால்சியம் நிறைந்த பழங்களில் ஒன்றாகும்.

    கேள்வி: எந்த காய்கறியில் அதிக வைட்டமின்கள் உள்ளன?

    பதில்: கீரை. இதுவொரு பச்சை காய்கறி ஆகும். இந்தியாவின் அனைத்து பகுதி மக்களாலும் கீரைகள் உட்கொள்ளப்படுகிறது. இதில் கால்சியம், வைட்டமின்கள், இரும்பு மற்றும் ஆண்டி ஆக்ஸிடெண்ட் அதிகமுள்ளது. மேலும் கீரையில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமுள்ளதால், அசைவம் மற்றும் பால் பொருட்கள் அல்லாத டயட்டில் இதை தாராளமாக சேர்த்துக்கொள்ளலாம்.

    கேள்வி - எந்த நாடு அதிகமாக அபின் உற்பத்தி செய்கிறது?

    பதில் - ஆப்கானிஸ்தானை பின்னுக்கு தள்ளி உலகின் மிகப்பெரிய அபின் உற்பத்தி செய்யும் நாடாக மியான்மர் மாறியுள்ளது. இந்த ஆண்டு மட்டுமே 1080 மெட்ரிக் டன் அபின் மியான்மர் நாட்டிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

    கேள்வி - நாட்டிலேயே அதிக உப்பை உற்பத்தி செய்யும் மாநிலம் எது?

    பதில் – குஜராத். இந்தியாவிலேயே அதிக உப்பு உற்பத்தி செய்யும் மாநிலமாகவும், உலகில் மூன்றாவது பெரிய மாநிலமாகவும் இது திகழ்கிறது. குஜராத்தில் உள்ள காரகோடா, பாவ்நகர், போர்பந்தர் மற்றும் ரான் ஆஃப் கட்ச் ஆகியவை உப்பு உற்பத்தி செய்யும் முக்கிய மாவட்டங்களாகும். குஜராத்திற்கு அடுத்தபடியாக அதிக உப்பு உற்பத்தி செய்யும் மாநிலமாக இரண்டாம் இடத்தில் தமிழ்நாடு உள்ளது.

    கேள்வி - இந்தியாவின் தேசிய பாரம்பரிய விலங்கு எது?

    பதில் – யானை. இந்தியாவின் தேசிய பாரம்பரிய விலங்காக 2010-ம் ஆண்டு யானை அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12 –ம் தேதி உலக யானைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
    பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் சில பொதுவான அறிவு மற்றும் அன்றாட வாழ்க்கைத் தகவல்களைப் பகிர்ந்துள்ளோம். உங்கள் உடல்நலத்திற்காக யோகா பயிற்சி குறித்தோ அல்லது மருத்துவ தகவல்கள் ஏதாவது இந்தக் கட்டுரையில் படித்திருந்தால், அதில் ஈடுபடுவதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளவும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

TANUVAS பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே || முழு விவரங்களுடன்!

 TANUVAS பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே || முழு விவரங்களுடன்!

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் ஆனது Junior Research Fellow பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TANUVAS காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Junior Research Fellow-க்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Research Fellow கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BPharm / MBBS / BVSc / BSMS / MSc / BE / BTech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TANUVAS வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Junior Research Fellow ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.37,000/- ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TANUVAS தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 29.08.2024ம் தேதி நடைபெறும் நேர்காணலில் நேரில் சென்று கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

தமிழக அரசில் Data Entry Operator காலிப்பணியிடங்கள் – வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

 தமிழக அரசில் Data Entry Operator காலிப்பணியிடங்கள் – வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

தஞ்சாவூர் மாவட்ட சுகாதார சங்கம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Data Entry Operator, Office Assistant மற்றும் பல்வேறு பணிக்கென மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Data Entry Operator, Office Assistant மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 5 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / Any Degree தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.10,000/- முதல் ரூ.40,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 23.08.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF 1

Download Notification PDF 2

Official Site



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

மத்திய அரசில் Senior Engineer வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || உடனே விரையுங்கள்!

 மத்திய அரசில் Senior Engineer வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || உடனே விரையுங்கள்!

THDC இந்தியா லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Deputy Manager (IT), Senior Engineer (O&M-Wind Power Plant) பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.70,000/- முதல் ரூ.80,000/- ஊதியம் வழங்கப்படும். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

காலிப்பணியிடங்கள்:

Deputy Manager (IT), Senior Engineer (O&M-Wind Power Plant) பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E / B.Tech / B.Sc / MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40, 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.70,000/- முதல் ரூ.80,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் Contract அடிப்படையில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 30.08.2024ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் . இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group