Search

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.08.2024

 

திரு. உசைன் போல்ட் அவர்கள்





திருக்குறள்: 

பால் :பொருட்பால்

அதிகாரம்: காலம் அறிதல்

குறள் எண்:487

பொள்ளென ஆங்கே புறம் வேரார், காலம் பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

பொருள்: அறிவுடையவர், (பகைவர் தீங்கு செய்த) அப்பொழுதே உடனே புறத்தில் சினம் கொள்ள மாட்டார்,(வெல்வதற்கு ஏற்ற )காலம் பார்த்து அகத்தில் சினம் கொள்வர்.

பழமொழி :

பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே

A man without money is a bow without an arrow

இரண்டொழுக்க பண்புகள் :  

*எனக்கு வழங்கப்பட்ட வேலைகளை உரிய நேரத்தில் முடிப்பேன் .     

 *எனது கடமைகளை சரிவர செய்து, உரிமைகளைப் பெறுவேன்.

பொன்மொழி :

கற்றலைப் பற்றிய அழகான விடயம் என்னவென்றால், அதை உங்களிடமிருந்து யாராலும் பறிக்க முடியாது. –பி.பி. கிங்

பொது அறிவு : 

1. இந்திய கடற்கரையின் நீளம்..

 விடை :6100 கிலோ மீட்டர்

2. தமிழ்நாட்டின் கடற்கரை நீளம். 

விடை :1076 கிலோ மீட்டர்

English words & meanings :

 bit-துண்டு,

smidgen-சிறிதளவு

வேளாண்மையும் வாழ்வும் : 

வேளாண்மை செழிக்க நல்ல மழை, நீர் வளம், நல்ல மண், நல்ல விதைகள் தேவை.
நம் முன்னோர்களின் மழை மானி குறித்து பார்ப்போம் 

ஆகஸ்ட் 21

உசைன் போல்ட் அவர்களின் பிறந்தநாள்

உசைன் போல்ட் என்கிற உசேன் செயிண்ட் லியோ போல்ட் (Usain St. Leo Bolt, பிறப்பு: ஆகத்து 21, 1986) யமேக்காவில் பிறந்த தடகள ஆட்டக்காரர்2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 9.69 நொடி நேரத்தில் 100 மீட்டர் விரைவோட்டத்தை ஓடி உலகச் சாதனை பெற்றார். அத்துடன் 200 மீ ஓட்டம் (19.30 வினாடி) போட்டியிலும் ஒலிம்பிக் மற்றும் உலக சாதனைகளைப் புரிந்தவர்; தன் நாட்டு சக வீரர்களுடன் இணைந்து 4 x 100 மீ தொடரோட்டத்தில் 37.10 வினாடிகளில் ஓடி சாதனை புரிந்தார். இவை அனைத்தையும் போல்ட்டு 2008 பெய்ஜிங் கோடை ஒலிம்பிக்கில் நிகழ்த்தினார்.2003இல் 200 மீட்டர் விரைவோட்டத்திலும் உலக இளையோர் சாதனை படைத்தார். ஒலிம்பிக்கின் மூன்று விரைவோட்டப் பந்தயங்களின் (100 மீ, 200 மீ மற்றும் 4 x 100 மீ) நடப்பு முதன்மை வீரன் (சாம்பியன்), ஒன்பது முறை உலக முதன்மை வீரன், ஒலிம்பிக் விரைவோட்டப் பந்தையங்களில் ஆறு தங்கப் பதக்கங்களை வென்ற முதல் வீரர், இம்மூன்று விரைவோட்டப் பந்தயங்களின் நடப்பு உலக சாதனைகளின் சொந்தக்காரர் எனப் பல சிறப்புகள் போல்ட்டைச் சாரும்.

நீதிக்கதை

 குரு கற்பித்த வித்தை


 சிறுவன் ஒருவன் ஜூடோ பழக விரும்பினான்.  ஏற்கனவே ஏற்பட்ட விபத்தில் அவன் இடது கையை இழந்து விட்டான். எனினும் இந்த குறையை பொருட்படுத்தாமல்  குரு ஒருவர் அவனுக்கு ஜூடோ கற்றுக் கொடுக்க  ஒப்புக்கொண்டார்.

 தினமும் பயிற்சி அளித்தார் ஆனால் ஒரே ஒரு குத்து வித்தையை மட்டுமே  கற்றுக்கொடுத்தார்.

நான்கைந்து மாதங்கள் சென்றன.  அப்போதும் அதே பயிற்சிதான் தொடர்ந்தது. சிறுவனுக்கோ ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் தொடர்ந்து பயிற்சியை மேற்கொண்டான்.

 ஒருநாள் சிறுவன் குருவிடம் கேட்டு விட்டான். ஆனால் அதற்கு குரு "இந்த ஒரே ஒரு குத்து  மட்டும் போதும்" என்று கூறினார். நாட்கள் கடந்தன. குரு சிறுவனை போட்டிக்கு அனுப்பி வைத்தார்.

ஒரு கை இல்லாமல்  போட்டிக்கு வந்த அவனை  அனைவரும் அற்பமாய் பார்த்தனர். ஆனால் இறுதியில் சிறுவனே வென்றான். தன்னை எதிர்த்த பலசாலிகள் பலரையும் வீழ்த்தி விட்டான். எல்லோருக்கும் ஆச்சரியம் சிறுவனுக்கும் தான்.

அப்போது சிறுவன் குருவை பார்த்து, " எப்படி குருவே என்னால் ஒரு கையை மட்டும் வைத்துக் கொண்டு ஒரே ஒரு குத்துப் பயிற்சியை மட்டுமே பெற்ற என்னால் எப்படி வெற்றி பெற முடிந்தது?" என்று கேட்டான்.

 அதற்கு குரு  " இரண்டு காரணங்கள், ஒன்று நீ பயிற்சி பெற்றது ஜூடோவிலேயே மிகவும் கடினமான குத்து பயிற்சி. இரண்டாவது இந்த குத்தை தடுக்க வேண்டும் என்றால் குத்துபவனின் இடது கையை மடக்க வேண்டும். அது உன்னிடம் இல்லை அல்லவா?அதனால் தான் நீ வெற்றி பெற்றாய்" என்று கூறினார்.

குருவுக்கு ஆத்மார்த்தமாக நன்றி சொன்னான் சிறுவன்.

 நீதி: தன்னம்பிக்கையும், முறையான பயிற்சியும் இருந்தால்  எவரும் வெற்றி பெறலாம்.

இன்றைய செய்திகள்

21.08.2024

* பர்கூர் வன்கொடுமை எதிரொலி: தனியார் பள்ளிகளில் என்சிசி, என்எஸ்எஸ் முகாம்களுக்கு அரசு புதிய கட்டுப்பாடுகள்.

* ஓர் இடத்துக்கு 4 மாணவர்கள் போட்டி: எம்பிபிஎஸ், பிடிஎஸ்  கலந்தாய்வு இன்று ஆன்லைனில் தொடங்குகிறது.

* மத்திய பொதுத் துறை நிறுவனத்தின் உதவியுடன் சென்னை ஐஐடி-யில் ரூ.16.5 கோடியில் நவீன உடற்கூறியல் ஆய்வகம்.

* UPSC லேட்ரல் என்ட்ரி: நேரடி நியமன அறிவிப்பு விளம்பரத்தை ரத்து செய்து மத்திய அரசு நடவடிக்கை.

* குரங்கு அம்மை பாதிப்பை கண்டறிய தயார் நிலையில் இருக்க வேண்டும்: வைரஸ் ஆராய்ச்சி ஆய்வகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்.

* சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜன்னிக் சின்னெரும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் சபலென்காவும் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

* சர்வதேச டி20 கிரிக்கெட்; ஒரு ஓவரில் அதிக ரன்கள்- யுவராஜ் சிங் சாதனையை முறியடித்த சமோவா வீரர்.

Today's Headlines

* Barkur atrocities reverberate: Govt new restrictions on NCC, NSS camps in private schools

*  4 students compete for one seat: MBBS, BDS counseling starts online today.

 * 16.5 Crore State-of-the-Art Anatomy Laboratory at IIT Chennai with the help of a Central Public Sector Undertaking.

* UPSC Lateral Entry: Central Govt Moves to Cancel Direct Recruitment Notification Advertisement

 * Be prepared to detect monkey measles outbreaks: Central government instructed  to virus research laboratories.

 * Cincinnati Open Tennis: Jannik Sinner won men's singles title, Sabalenka won women's singles title.

 * International T20 Cricket; Highest runs in an over - Yuvraj Singh is the Samoan player who broke the record.
 Prepared by

Covai women ICT_போதிமரம்


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

ICT Training For BT Teachers - SCERT Proceedings

 

17.8.23 முதல் 9.11.24 வரை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ICT பயிற்சி வட்டார  அளவில் நடத்திட SCERT இயக்குநரின் செயல்முறைகள்.





🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

முதன்மை கல்வி அலுவலர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு ஆணை வெளியீடு.

 IMG_20240820_192307

முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி அதனையொத்த பணியிடங்கள் பணியிட மாறுதல் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடத்திலிருந்து முதன்மைக் கல்வி அலுவலராக பதவி உயர்வு அளித்து பணி நியமனம் - ஆணை வெளியிடப்படுகிறது .


Transfer & Promotion Order - Download here



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

உயர்தொழில்நுட்ப ஆய்வகப் பயிற்றுநர்கள் மற்றும் ஆய்வக உதவியாளர்களுக்கான பணிகள் மற்றும் பொறுப்புகள்

 

IMG_20240820_183607

உயர்தொழில்நுட்ப ஆய்வகப் பயிற்றுநர்கள் மற்றும் ஆய்வக உதவியாளர்களுக்கான பணிகள் மற்றும் பொறுப்புகள் - Duties of AIs..


Duties and Responsibilities of Hi-Tech Lab Instructors, Administrators and Laboratory Assistants...👇👇👇

Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

All CEOs & DEOs Meeting ( Ag.22,23 ) Agenda and Instructions

 IMG_20240820_132823

மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களது தலைமையில் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் 22.08.2024 & 23.08.2024-ல் கீழ்க்கண்டுள்ளவாறு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தொடர்புடைய ஆய்வு அலுவலர்கள் தங்களது மாவட்டம் தொடர்பான விவரங்களுடன் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


All CEOs & DEOs Meeting Agenda and Instructions - Download here


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

 தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள தரவு உள்ளீட்டாளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 23.08.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Assistant Cum Data Entry Operator 

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 15,000

Office Assistant 

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 10,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://thanjavur.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: செயற் செயலாளர், மாவட்ட நலச்சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், காந்திஜி ரோடு, எல்.ஐ.சி பில்டிங் அருகில், தஞ்சாவூர் - 613001

விண்ணப்பிக்க கடைசி தேதி : 23.08.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://thanjavur.nic.in/ இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

அண்ணா பல்கலை. வேலை வாய்ப்பு; டிப்ளமோ தகுதி; உடனே விண்ணப்பிங்க!

 சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் சுகாதார மையத்தில் செவிலியர் மற்றும் ஆய்வக நுட்புனர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 21.08.2024

Staff Nurse

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி : DGNM படித்திருக்க வேண்டும். மேலும் ஒரு ஆண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும்.

சம்பளம் : தினசரி ரூ. 778

Lab Technician

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். DMLT படித்திருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

சம்பளம் : தினசரி ரூ. 778

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: Director, Health Centre, Anna University, Sardar Patel Road, Chennai - 600025

விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.08.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.annauniv.edu/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

சைலன்ட் ஹார்ட் அட்டாக்... இந்த அறிகுறிகளை கண்டிப்பா கவனியுங்க..!

 இன்றைய நவீன காலத்தில் வயதானவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு வரும் என்றெல்லாம் சொல்ல முடியாது. எந்த வயதினருக்கும், பாலினத்தவருக்கும் மாரடைப்பு வரும். மாரடைப்பின் சில அறிகுறிகளை நம்மால் கண்டுபிடிக்க முடிந்தாலும், இளம் தலைமுறையினரை அமைதியான முறையில் தாக்கும் மாரடைப்பு (சைலன்ட் ஹார்ட் அட்டாக்) குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றனர்.

இது எந்த நேரத்திலும் ஒருவரை தாக்கலாம். மாரடைப்பு வரும் பெரும்பாலானோருக்கு நெஞ்சு வலி, சுவாசப் பிரச்சனை, தலைசுற்றல் போன்ற எந்த அறிகுறியும் இல்லாமல் அமைதியான முறையில்தான் தாக்குகிறது. வழக்கமான மாரடைப்பு போல் இதற்கு நெஞ்சு வலி ஏற்படாது என்பதால் உடலில் ஏற்படும் சின்னச்சின்ன அறிகுறிகளுக்கும் நாம் கவனம் கொடுக்க வேண்டும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். சைலன்ட் ஹார்ட் அட்டாக்கின் 5 அறிகுறிகள் பற்றி பிரபல கார்டியாலஜிஸ்ட் டாக்டர் ரவீந்தர் சிங் ராவ் கூறியுள்ளதை பற்றி இங்கே பார்ப்போம்.

காரணமில்லாத சோர்வு: காரணமே இல்லாமல் தொடர்ச்சியாக களைப்பாக, சோர்வாக இருப்பது போல் உணர்ந்தால், அது அமைதியான மாரடைப்பின் அறிகுறிகளாக கூட இருக்கலாம். பலவீனமான இதயம், தனது ஆற்றலை உடலிலிருந்து நேரடியாக எடுத்துக் கொள்வதால் இவ்வாறு களைப்பு உண்டாகிறது.

மூச்சுவிடுவதில் சிரமம்: எந்தவித உடல் இயக்கம் இல்லாத நேரத்திலும் கூட மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தால், அது அமைதியான மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கலாம். இதயத்தின் செயல்பாடு குறையும்போது உடலுக்கு தேவையான ஆக்சிஜன் குறைவாக கிடைக்கிறது. இதனால் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுகிறது.

உடலின் மேற்பகுதியில் அசௌகர்யம்: கைகள், கழுத்து, தாடை அல்லது முதுகு போன்ற உடலின் மேற்பகுதியில் வலியோ அசௌகரியமோ இருந்தாலும் கூட, அது சைலன்ட் அட்டாக்கிற்கான அறிகுறியாக இருக்கலாம். இந்த வலி மிதமாக இருப்பதால் இதை பெரிதாக நாம் கண்டுகொள்வதில்லை.

குமட்டல் மற்றும் தலைச்சுற்றல்: தொடர்ச்சியான குமட்டல், தலைவலி அல்லது தலைச்சுற்றல் வந்தால் இதயத்தின் செயல்பாட்டில் பிரச்சனை இருப்பதாக அர்த்தம். இதயத்தால் ரத்தத்தை ஒழுங்காக பம்ப் செய்ய முடியாதபோது ரத்த அழுத்தம் குறைந்து தலைச்சுற்றல் உண்டாகிறது.

அதிகபடியான வியர்வை: நாம் வெப்பமான சுழலில் வாழ்ந்து வந்தாலும், எதுவும் செய்யாமல் ஓய்வாக இருக்கும்போது கூட வழக்கத்தை விட அதிகமாக வியர்வை வந்தால், இதயத்தில் பிரச்சனை இருக்கிறது என்பதன் வெளிப்பாடாகும். இதயத்தில் அழுத்தம் ஏற்பட்டால் உடலில் வியர்வை அதிகமாகும். இவற்றோடு மற்ற அறிகுறிகளும் சேரும்போது நாம் உடனடியாக சிகிச்சை எடுக்க வேண்டும்.

அமைதியான மாரடைப்பிற்கு இது மட்டுமே அறிகுறிகள் இல்லையென்றாலும் இவற்றில் எந்த அறிகுறிகளாவது உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள். மேலும் இதயத்திற்கு ஆரோக்கியம் தரும் டயட் மற்றும் வாழ்க்கை முறையை பின்பற்றுங்கள்.





Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

உங்கள் குழந்தையின் எலும்புகள் வலுவாக இருக்க தவறாமல் கொடுக்க வேண்டிய உணவுகள்.!

 குழந்தைகளின் வளர்ச்சியில் எலும்புகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. எலும்புகள் வலுவாக இருந்தால் மட்டுமே உங்கள் குழந்தைகள் நன்கு ஆக்ட்டிவாக இருக்க முடியும். அதுமட்டுமின்றி குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் அவர்களின் எலும்பு ஆரோக்கியம் முக்கிய பங்கு வகிக்கின்றன.

உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், அவர்களின் எலும்புகள் வலுவாகவும் இருக்க, அவர்களின் தினசரி உணவில் எலும்புகளை ஆரோக்கியமாக வைக்கும் மற்றும் எலும்புகளை வலுப்படுத்தும் உணவுகளை சேர்ப்பது அவசியம்.

குழந்தைகளுக்கு ஆரோக்கியமான எலும்புகளை உருவாக்க அவர்களது டயட்டில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்த உணவுகளை சேர்ப்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும். முக்கியமாக எலும்பு ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம், வைட்டமின் டி மற்றும் வைட்டமின் சி போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் பரிந்துரைக்கப்பட்ட தினசரி அளவை உங்கள் குழந்தைகளுக்கு கொடுப்பதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.

News18

உங்கள் குழந்தையின் எலும்புகள் வலுவாக இருக்க நீங்கள் அவர்களுக்கு தவறாமல் கொடுக்க வேண்டிய சில முக்கிய உணவுகளை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

  • எலும்பு வளர்ச்சியில் கால்சியம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. பால் மற்றும் தயிர் போன்ற பால் பொருட்கள் உங்கள் குழந்தைகளுக்கு தேவையான அளவு கால்சியத்தை வழங்குகின்றன. பால் பொருட்களில் கால்சியம் மட்டுமல்லாமல் வைட்டமின் டி-யும் உள்ளது. இது உடலுக்கு தேவையான கால்சியத்தை உறிஞ்ச உதவுகிறது.

  • கீரை வகைகள், கடுகு கீரை மற்றும் ப்ரோக்கோலி போன்ற பச்சையிலை காய்கறிகளில் கால்சியம் மற்றும் வைட்டமின் கே அதிகம் காணப்படுகிறது. மேலும் இவை உங்கள் குழந்தைகளின் எலும்புகளை வலுவாக மற்றும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இவற்றில் இருக்கும் வைட்டமின் கே சத்தானது குழந்தைகளின் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.

  • பாதாம்கள் எலும்புகளை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. பாதாம்களில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் ப்ரோட்டீன் நிறைந்துள்ளன. இவை அனைத்துமே எலும்பு ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத ஊட்டச்சத்துக்கள் ஆகும்.

  • ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. சிட்ரஸ் வகை பழங்களை குழந்தைகளுக்கு வழக்கமான அடிப்படையில் கொடுப்பதால், அவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதோடு, அவர்களின் எலும்புகள் வலுவாக இருக்கும். சிட்ரஸ் பழங்கள் கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது. எலும்பு திசு (bone tissue) உருவாவதற்கு கொலாஜன் மிக அவசியம்.

    • சோயாபீன்ஸ் மற்றும் சோயா சீஸ் போன்ற பொருட்களை குழந்தைகளின் டயட்டில் சேர்ப்பது அவர்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம் மற்றும் புரதத்தை வழங்குகிறது. இவை குழந்தைகளின் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

உலர் பழங்களை பால் அல்லது தண்ணீர் எதில் ஊறவைக்க வேண்டும்? தெரிந்து கொள்ளுங்கள்!

 
உலர் பழங்களை உட்கொள்வதன் மூலம் நமது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் எளிதாகப் பெற முடியும். பொதுவாக பழங்களை அந்தெந்த சீசன்களில் நாம் ப்ரெஷாக சாப்பிட முடியும். இதனை அனைத்து நாட்களிலும் சாப்பிடும் வகையில் உலர வைக்கப்படுகிறது. உதாரணமாக திராட்சை, அத்திப்பழம், கிவி உள்ளிட்ட பழங்களை நாம் பார்த்திருப்போம். இந்த உலர் பழங்களிலும் ஊட்டச்சத்துக்கள் நிறைத்துள்ளது. தினமும் ஒரு கைப்பிடி உலர் பழங்களை சாப்பிடுவதன் மூலம், வைட்டமின் ஈ, ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம், ஜிங்க் மெக்னீசியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துக்களைப் பெற முடியும்.


முந்திரி, பாதாம், பிஸ்தா மற்றும் அக்ரூட் பருப்புகள் போன்றவற்றை சாப்பிடுவதற்கு முன் சில மணி நேரம் ஊறவைப்பது நல்லது. ஆயுர்வேதத்தின் படி இந்த முறை ஆரோக்கியமானது என்று கருதப்படுகிறது மற்றும் நவீன ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி ஊறவைத்து சாப்பிடுவது சரியானதாக கருதப்படுகிறது. உண்மையில் உலர் பழங்களை ஊறவைப்பது அவற்றில் உள்ள நுண்ணூட்டச்சத்துக்களை நாம் எளிதாக பெற முடியும்.

News18

உலர் பழங்களை எவ்வளவு நேரம் ஊறவைக்க வேண்டும் மற்றும் உலர்ந்த பழங்களை ஊறவைக்க தண்ணீர் அல்லது பால் இவற்றில் இதனை பயன்படுத்தப்பட வேண்டும்? என்ற கேள்வி பொதுவாக அனைவருக்கும் இருக்கும்.

இதற்கான பதில், உலர்ந்த பழங்களை தண்ணீர் மற்றும் பால் இரண்டிலும் ஊறவைக்கலாம் என்பது தான். உலர் பழங்களை பால் மற்றும் தண்ணீர் இரண்டிலும் ஊறவைப்பதால் வெவ்வேறு நன்மைகள் உள்ளன. அதுகுறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.,

உலர்ந்த பழங்களை தண்ணீரில் ஊறவைத்தால் கிடைக்கும் நன்மைகள்….

உலர் பழங்களை தண்ணீரில் ஊறவைத்த பிறகு அதில் உள்ள பைடிக் அமிலத்தின் அளவு குறையத் தொடங்குகிறது. இந்த அமிலம் இரைப்பையை அடைந்து செரிமான அமைப்பை சேதப்படுத்தி அஜீரண பிரச்சனையை அதிகரிக்கும் எனவே, தண்ணீரில் ஊறவைத்த உலர்ந்த பழங்களை உட்கொள்வதால் இந்த பிரச்சனை வராமல் தவிர்க்க முடியும்.

உலர் பழங்களை தண்ணீரில் ஊற வைக்கும் போது முதல் நாள் இரவு தூங்க செல்வதற்கு முன் ஊறவைத்து விட்டு, மறுநாள் காலை அதனை எடுத்து சாப்பிடலாம். ஆனால், உலர் பழங்களை பாலில் ஊறவைத்தால் அவற்றை நீண்ட நேரம் வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். அதாவது உலர்ந்த பழங்களை பாலில் சுமார் 1-2 மணி நேரம் ஊறவைத்து பிறகு உடனடியாக உட்கொள்ளலாம். பாலில் ஊறவைத்த உலர் பழங்களை சாப்பிடுவதால் புரதம், கால்சியம் மற்றும் தாதுக்களை வழங்குகிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பாலில் ஊறவைத்து சாப்பிடலாம்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip