Search

வாசிப்பு இயக்கம் நடைமுறை படுத்துதல் - ஆசிரியர் வழிகாட்டி கையேடு

இதுவரை குழந்தைகளுக்குக் கதை சொல்லியிருக்கிறோம். இப்போது அவர்களே கதைகளை வாசிக்க இருக்கிறார்கள். கேட்போராக (Listeners) இருக்கும் குழந்தைகளை வாசிப்போராக (Readers) மாற்றும் முயற்சி இது.அரசுப் பள்ளிகளில் படிக்கும் எளிய வீட்டுப் பிள்ளைகளின் கைகளில் சின்னச் சின்ன கதைப் புத்தகம் தரும் புதிய முயற்சி, முன்னேறிய நாடுகளில் 70 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது குழந்தைகளின் சுய வாசிப்பு (Independent Reading). இந்தியாவில் முதன்முதலாகத் தமிழ்நாட்டில் 250 புத்தகங்களுடன் குழந்தைகளின் சுயவாசிப்பு இயக்கம் தோன்றுகிறது.


2024-2025 ஆண்டில் அரசு தொடக்க , நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வாசிப்பு இயக்கத்தை செயல்படுத்திட 4 முதல் 9 வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு TNTP தரும் பயிற்சியில் பங்கேற்க வைத்தல் 


 வாசிப்பு இயக்கப் புத்தகங்கள்  அரசுப்பள்ளிகளுக்கு சென்று சேர்ந்ததை உறுதி செய்தல் வேண்டும்.


கடந்த ஆண்டு வழங்கப்பட்ட 53 புத்தகங்கள் தற்போது வழங்கியுள்ள 71 புத்தகங்கள் EMIS தளத்தில் பதிவேற்றுதல் 

வாசிப்பு இயக்கப் புத்தகங்களை பயன்படுத்துதல் நூலக பாடவேளையில் உரிய வழிக்காட்டுதல்களை வழங்குதல்


 மாணவர்கள் எந்த வாசிப்பு நிலையில் உள்ளனர் ( நட , ஓடு , பற ) என்ற விவரத்தை EMIS தளத்தில் உள்ளீடு செய்தல் உள்ளிட்ட வழிகாட்டும் நெறிமுறைகளை மாநில திட்ட இயக்ககம் , ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை வழங்கியுள்ளது.


Click Here to Download - வாசிப்பு இயக்கம் நடைமுறை படுத்துதல் - ஆசிரியர் வழிகாட்டி கையேடு - Pdf 

🔻🔻🔻

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Teachers Day 2024 : இந்தியாவில் செப்டம்பர் 5 ஆசிரியர் தினம் கொண்டாட காரணம் என்ன..?

 ஒரு நாட்டின் வருங்கால தூண்களை உருவாக்க ஆசிரியர்கள் வெளிப்படுத்தும் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் அவர்கள் இந்த சமூகத்திற்கு அளிக்கும் பங்களிப்புகளை போற்றும் வகையில் பல நாடுகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

நம் நாட்டை பொறுத்த வரை சிறந்த அறிஞராகவும் ஆசிரியராகவும் இருந்த இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தங்கள் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஆசிரியர்களுக்கு இந்த நாளன்று மாணவர்கள் நன்றி மற்றும் பாராட்டுக்களை தெரிவிக்கும் சந்தர்ப்பமாக ஆசிரியர் தினம் இருக்கிறது. தங்கள் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் அயராத முயற்சிகளை பல நிகழ்வுகள் நடத்தி மற்றும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு மாணவர்கள் மதிக்கிறார்கள்.

News18

ஆசிரியர் தினம் வரலாறு:

நம் நாட்டின் கல்வித் துறையில் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் இந்தியாவில் ஆண்டுதோறும் அவரது பிறந்த தினமான செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 1962-ஆம் ஆண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் நாட்டின் இரண்டாவது குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது இந்த ஆசிரியர் தின கொண்டாட்டம் நாட்டில் தொடங்கப்பட்டது.

ஆசிரியராக இருந்து நாட்டின் முதல் குடிமகன் என்ற அந்தஸ்த்தை பெற்று குடியரசு தலைவராக இருந்த டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட, அவரது முன்னாள் மாணவர்கள் மற்றும் நண்பர்களில் சிலர் அவரை அணுகினர். ஆனால் அவரோ செப்டம்பர் 5-ஐ தனது பிறந்தநாளாக கொண்டாடுவதற்குப் பதிலாக அந்த நாளை நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக கடைப்பிடித்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று பணிவுடன் பரிந்துரைத்தார்.

சமுதாயத்தில் ஆசிரியர்கள் வகிக்கும் முக்கிய பங்கையும், எதிர்கால இளைஞர்களை வளர்ப்பதில் அவர்கள் ஏற்றுள்ள மகத்தான பொறுப்பையும் அங்கீகரிப்பதற்காக தந்து பிறந்த நாள் அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்று அவர் நினைத்தார். இவரது பரிந்துரையை உற்சாகமாக ஏற்று கொண்டது நம் தேசம், அப்போதிருந்து ஆண்டுதோறும் செப்டம்பர் 5-ஆம் தேதி நாட்டின் கல்வியாளர்கள் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சிக்காக ஆசிரியர் தினத்தில் கௌரவிக்கப்படுகிறார்கள்.

ஆசிரியர் தினத்தின் முக்கியத்துவம்:

மாணவர்களின் மேம்பாட்டிற்காக ஆசிரியர்கள் வெளிப்படுத்தும் அர்ப்பணிப்பிற்கு நன்றி தெரிவிக்கும் நாளாக இருப்பதால் ஆசிரியர் தினம் குறிப்பிடத்தகுந்த முக்கியத்துவத்தை வகிக்கிறது. மாணவர்கள் பொறுப்புள்ள குடிமக்களாக மாற, அவர்களுக்கு அறிவு மற்றும் திறன்களை கற்பிப்பதன் மூலம் தேசத்தை கட்டியெழுப்புவதில் முக்கிய பங்காற்றுகின்றனர் ஆசிரியர்கள். சமூக முன்னேற்றம் மற்றும் தனிமனித மேம்பாடு ஆகிய இரண்டிற்கும் ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்கும் நிலையில், ஆசிரியர் தினம் அவர்களின் மகத்தான பொறுப்பை அங்கீகரிக்க மற்றும் அவர்களை கவுரவிக்க வாய்ப்பு மாணவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தரும் ஒரு நாளாக இருக்கிறது.


ஆசிரியர்களிடம் பகிர்ந்து கொள்ள சில வாழ்த்து செய்திகள்…

  • உங்கள் முடிவில்லா பொறுமை மற்றும் ஊக்கத்திற்கும் நன்றி. ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

  • எனக்குப் பிடித்த ஆசிரியராகிய நீங்கள் வழிகாட்டும் விளக்காக இருப்பதற்கு நன்றி

  • என் வாழ்க்கையில் நீங்கள் ஏற்படுத்திய தாக்கம் அளவிட முடியாதது. அற்புதமான கல்வியாளராக இருப்பதற்கு நன்றி. ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

  • உங்கள் ஞானம் என் வாழ்க்கை பாதையை ஒளிரச் செய்கிறது. நீங்கள் சொல்லி கொடுக்கும் ஒவ்வொரு பாடத்திற்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

  • சிறந்த ஆசிரியரே உங்கள் ஊக்கம் தான் எங்களுக்கு உலகம். ஆசிரியர் தினத்தை சிறப்பாக கொண்டாடுங்கள்.

ஆசிரியர் தின கொண்டாட்ட யோசனைகள்:

  • கல்வி நிறுவனங்கள் தங்களிடம் பணியாற்றும் ஆசிரியர்கள் ஆற்றி வரும் சிறப்புமிக்க பணிகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கலாம்.

  • தங்கள் ஆசிரியர்களை போலவே ஆடை அணிந்து மாணவர்கள், சில சிறப்பு நினைவுகள் அல்லது செயல்களை செய்வதன் மூலம் ஆசிரியர்களுக்கு சிறப்பு உணர்வை ஏற்படுத்தலாம்.

  • மாணவர்கள் அனைவரும் சேர்ந்தோ தனித்தனியாகவோ ஆசிரியர்களுக்கு பரிசுகள், வாழ்த்து அட்டைகள் அல்லது பூக்களை வழங்கலாம்.

  • ஆசிரியர்களை கெளரவப்படுத்தும் வகையில் ஆன்லைன் கேதரிங் மற்றும் விரிச்சுவல் ஈவன்ட்ஸ்களை நடத்தலாம்.

இதனிடையே நாளை (செப்டம்பர் 5) அன்று அனுசரிக்கப்பட உள்ள ஆசிரியர் தினத்திற்காக பல பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆசிரியர்களை கௌரவிக்க சிறப்பு நிகழ்வுகள், நிகழ்ச்சிகள் மற்றும் விருது வழங்கும் விழாக்களை ஏற்பாடு செய்துள்ளன. இந்த நிகழ்வுகளில் மாணவர்களின் நிகழ்ச்சிகள், உரைகள் மற்றும் பாராட்டு விருதுகள் வழங்குவது உள்ளிட்டவை அடங்கும்.

ஆசிரியர் தினம் உலகளவில் எப்போது, ​​எப்படி கொண்டாடப்படுகிறது?

  1. இந்தியா: ஆண்டுதோறும் செப்டம்பர் 5-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளிகள் ஆசிரியர்களுக்க நன்றி தெரிவிக்கும் விதமாக பால் திட்டமிட்ட விழாக்களை நடத்துகின்றன.

  2. அமெரிக்கா: இங்கு ஆண்டுதோறும் மே மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை தேசிய ஆசிரியர் தினம் அனுசரிக்கப்படுகிறது. ஆசிரியர்களுக்கு நன்றி மற்றும் பாராட்டு தெரிவிக்கும் வகையில் அங்கீகாரம், சிறிய பரிசுகள் மற்றும் நன்றி செய்திகள் போன்ற பல செயல்பாடுகளுடன் அந்த முழு வாரமும் ஆசிரியர்களை பாராட்டும் வாரமாக கொண்டாடப்படுகிறது.

  3. சீனா; செப்டம்பர் 10 அன்று,சீனாவில் ஆசிரியர்களின் பணிகளை அங்கீகரிக்கும் வகையில் விழாக்கள் மற்றும் விருதுகளுடன் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

  4. மெக்சிகோ; இந்த நாட்டில் மே 15 அன்று விழாக்கள் மற்றும் கலாச்சார விழாக்களுடன் ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. அங்கே குறிப்பிட்ட சில பகுதிகளில், இந்த நாள் ஒரு பொது விடுமுறை. எனவே ஆசிரியர்கள் விடுமுறை எடுத்து ஓய்வெடுக்கிறார்கள்.

  5. ஆஸ்திரேலியா: இந்நாட்டில் சில மாநிலங்களில், அக்டோபர் மாதத்தின் கடைசி வெள்ளி ஆசிரியர் தினம் அனுசரிக்கப்படுகிறது. காலை தேநீர் போன்ற நடவடிக்கைகள் மூலம் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வுகள் இருக்கும்.

  6. தாய்லாந்து: தாய்லாந்தில் ஆண்டுதோறும் ஜனவரி 16 அன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர்களை கௌரவிக்கும் மற்றும் ஆசிரியர் ஒற்றுமையை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் விழாக்களை ஆசிரியர் தின கொண்டாட்டங்கள் உள்ளடக்கியது.

  7. ரஷ்யா: இங்கு ஆண்டுதோறும் அக்டோபர் 5 அன்று ஆசிரியர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஆசிரியர்களின் குறிப்பிடத்தக்க பங்கை அங்கீகரிக்க, பாராட்ட இந்த நாளை ரஷ்யர்கள் அனுசரிக்கிறார்கள்.

  8. தென் கொரியா: கிங் செஜாங் தி கிரேட் (1397-1450) பிறந்தநாளுடன் இணைந்து, தேசிய ஆசிரியர் தினம் மே 15 அன்று தென் கொரியாவில் அனுசரிக்கப்படுகிறது கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

தமிழக அரசில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே || 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

 தமிழக அரசில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே || 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

மதுரை மாவட்ட சுகாதார சங்கம் ஆனது Radiographer, Hospital Worker பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள 10 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.10,000/- மாத ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

DHS காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Radiographer, Hospital Worker பணிக்கென காலியாக உள்ள 10 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hospital Worker கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு / B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

DHS வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 மற்றும் 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Hospital Worker ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.10,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DHS தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 17.09.2024ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

IDBI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2024 – மாத ஊதியம்: ரூ.1,57,000/- || முழு விவரங்களுடன்!

 IDBI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2024 – மாத ஊதியம்: ரூ.1,57,000/- || முழு விவரங்களுடன்!

IDBI வங்கி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Assistant General Manager (Grade C) & Manager (Grade B) பணிக்கென காலியாக உள்ள 56 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. MBBS / MD தேர்ச்சிபெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

IDBI காலிப்பணியிடங்கள்:

Assistant General Manager (Grade C) & Manager (Grade B) பணிக்கென காலியாக உள்ள 56 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Assistant General Manager கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduation / Post-Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

IDBI வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 25 மற்றும் 28 என்றும் அதிகபட்ச வயதானது 35 மற்றும் 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Assistant General Manager ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.1,57,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.

IDBI தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Group Discussion / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் 15.09.2024 ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

JIPMER ஆணையத்தில் Junior Nurse வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.20,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

 JIPMER ஆணையத்தில் Junior Nurse வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.20,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

Junior Nurse, Lab Technician பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை JIPMER ஆனது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 2 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.20,000/- மாத ஊதியமாக வழங்கப்படும். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

JIPMER காலிப்பணியிடங்கள்:

Junior Nurse, Lab Technician பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Nurse கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc / Nursing என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

JIPMER வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Junior Nurse ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.20,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

JIPMER தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து jipmermicrotb@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 16.09.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

தமிழக அரசில் ரூ.35,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || முழு விவரங்களுடன்!

 தமிழக அரசில் ரூ.35,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || முழு விவரங்களுடன்!

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் District Resource Person பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ. 35,000/- மாத ஊதியமாக வழங்கப்படும். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

District Resource Person பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

30 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.35,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 10.09.2024ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

TNPSC - குரூப்2, குரூப் 2A ஹால் டிக்கெட் வெளியீடு.

 டிஎன்பிஎஸ்சி குரூப்-2 முதல்நிலைத் தோ்வுக்கான நுழைவுச் சீட்டு புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.


தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2, குரூப் 2 ‘ஏ’ பணியில் காலியாக உள்ள 2,327 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 20-ஆம் தேதி வெளியிட்டது.


இதில் குரூப்-2 பணியில் தொழிலாளா் உதவி ஆய்வாளா், துணை வணிக வரி அலுவலா், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு சிறப்பு உதவியாளா், சென்னை மாநகர காவல் தனிப் பிரிவு உதவியாளா் உள்பட 507 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.


ஒரே நாளில் 5 பதக்கங்களை கைப்பற்றிய இந்திய வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து!

Advertisement


குரூப் 2 ’ஏ’ பணியில் தமிழ்நாடு மின்விசை நிதி, உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழக தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநரின் நோ்முக உதவியாளா், கூட்டுறவு சங்கங்கள் முதுநிலை ஆய்வாளா், உள்ளாட்சி நிதித் தணிக்கை உதவி ஆய்வாளா் என 48 துறைகளில் 1820 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


இந்தத் தேர்வுக்கு தமிழக முழுவதுதிலும் இருந்து மொத்தமாக 7.93 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.


அதன்படி, முதல்நிலை எழுத்துத் தோ்வானது செப்டம்பர் 14-ஆம் தேதியன்று நடைபெறும் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்தது.


இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 முதல்நிலைத் தோ்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது.


டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் தேர்வர்கள் தங்கள் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


எழுத்துத் தோ்வானது செப்டம்பர் 14-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையில் நடைபெற உள்ளது.




🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

அனைத்து வகை பள்ளிகளிலும் உள்ளக புகார் குழு ( Internal Complaints Committee - ICC ) கட்டாயம் அமைத்திட உத்தரவு.

 

IMG_20240904_191428

தஞ்சாவூர் வருவாய் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் ஏற்படும் பாலியல் தொடர்பான குற்றங்களை தடுக்கவும் , பள்ளிகளில் பயிலும் மாணவிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் இருந்து பாதுகாத்திட Protection of Children from Sexual Offences Act - 2012 மற்றும் பாதுகாக்கும் சட்டம் 2013 சட்டத்தினை மாநில அளவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயல்படுத்தி வருகிறது.


 இச்சட்டத்தின் படி அனைத்து வகை பள்ளிகளிலும் உள்ளக புகார் குழு ( Internal Complaints Committee - ICC ) கட்டாயம் அமைத்திட வேண்டும் . தங்கள் பள்ளிகளில் பாலியல் தொடர்பான குற்றங்களை தடுக்கவும் , புகார் தெரிவிக்கவும் , விசாரணை மேற்கொள்ளவும் தங்கள் அலுவலகம் மற்றும் பள்ளிகளில் உள்ளக புகார் குழுவானது கீழ்க்கண்ட விவரப்படி , உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து அதன் விவரத்தினை இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து தங்கள் பள்ளிகள் சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலத்தில் 05.09.2024 அன்று மாலை 4.00 மணிக்குள் இரண்டு பிரதிகளில் ஒப்படைத்திடுமாறும் . பெறப்பட்ட படிவத்தினை எண்ணிக்கை வாரியாக இவ்வலுவலகத்துக்கு 06.09.2024 அன்று மதியம் 12.00 க்குள் நேரிடையாக அ 6 பிரிவிடம் ஒப்படைக்குமாறு மாவட்டக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ICC Committee - CEO Proceedings - Download here



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group