Search

Expiry Date, Best Before மற்றும் Use By தேதியின்படி பொருட்களை பயன்படுத்துவதற்கு என்ன வித்தியாசம்? - 99 % பேருக்கு தெரியாது!

நீங்கள் எப்போதாவது பொருட்களில் காலாவதி தேதி உள்ளிட்ட தகவல்கள் எழுதியிருப்பதை பார்த்திருக்கிறீர்களா?. இல்லை என்றால் முதலில் அதை தான் நீங்கள் பார்க்க வேண்டும், ஏனென்றால் நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களின் பாக்கெட்டுகள் மீது தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதியாகும் தேதி உள்ளிட்டவை எழுதப்பட்டிருக்கும்.

காலாவதி தேதி (expiry date) என்பது அனைவரும் புரிந்துகொள்ளத்தக்கது. ஆனால் பெரும்பாலான மக்களுக்கு best before மற்றும் use by குறித்து அர்த்தம் தெரியாது. இதுகுறித்து உங்களுக்கு குழப்பம் இருந்தால் கவலைப்பட வேண்டாம். இதை பற்றி தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக, காலாவதி தேதி (expiry date), best before மற்றும் use by ஆகியவைக்கு ஒரே அர்த்தம் என மக்கள் கருதுகிறார்கள். ஆனால் அது உண்மை இல்லை. மூன்றுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் உள்ளன. உரிய தகவல் இல்லாததால், சில நேரங்களில் பயன்படுத்த தகுதியற்றதையும் நாம் பயன்படுத்துகிறோம். குறிப்பாக மருந்துகள், ஒப்பனை பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள். இந்த மூன்றை பற்றி விரிவாக தெரிந்து கொண்டால், நீங்கள் மீண்டும் இந்த தவறை செய்ய மாட்டீர்கள். ஆகையால் மூன்றுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன என்பதை அறிந்து கொள்வோம்.

காலாவதி தேதி (expiry date) என்ன?

காலாவதி தேதி என்பது, குறிப்பிட்ட தேதிக்கு பின்பு அந்த தயாரிப்பைப் பயன்படுத்துவது உடல்நலத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதை உணர்த்துவதாகும். அந்த பொருளை, அதில் அச்சிடப்பட்ட தேதிக்கு பிறகு பயன்படுத்த முடியாது. ஏனெனில் அதில் பாக்டீரியா அல்லது பிற தீங்கு விளைவிக்கும் பொருட்கள் வளரக்கூடும். வழக்கமாக, 2 முதல் 3 ஆண்டுகளுக்குப் பிறகு காலாவதியாகும் மருந்துகள் அல்லது அத்தகைய தயாரிப்புகளில் காலாவதி தேதி எழுதப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டாக, ஃபவுண்டேஷன்(Foundation) அல்லது ஐலைனர்(Eyeliner) போன்ற அழகு சாதனப் பொருட்களை அவற்றின் காலாவதி தேதிக்குப் பிறகு பயன்படுத்தினால், சருமத்தில் ஒவ்வாமை, தடிப்புகள் அல்லது பிற பிரச்சனைகள் ஏற்படலாம். இதுவே உணவுப் பொருட்களுக்கும் பொருந்தும். உதாரணமாக, பால் பாக்கெட்டில் எழுதப்பட்ட காலாவதி தேதிக்குப் பிறகு நீங்கள் அந்த பாலை உட்கொண்டால் வயிற்று பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

முன் சிறந்தது (Best Before) என்பதன் பொருள் என்ன?

முன் சிறந்தது (Best Before) என்பது அந்த தேதிக்குப் பிறகு தயாரிப்பு கெட்டுவிடும் என்று அர்த்தமல்ல. இந்த தேதிக்குள் தயாரிப்பு அதன் சிறந்த சுவை, அமைப்பு மற்றும் தரத்தில் இருக்கும் என்று அர்த்தம். இந்தத் தேதிக்குப் பிறகும் தயாரிப்பு பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால் அதன் தரம் சிறிது குறையலாம்.உதாரணமாக, ஒரு சாக்லேட்டில் “Best Before” என்று எழுதப்பட்டிருந்தால், அந்த தேதிக்குள் சாக்லேட் அதன் சிறந்த சுவை மற்றும் அமைப்புடன் இருக்கும் என்று அர்த்தம். இருப்பினும், அதன் பிறகும் நீங்கள் அதை சாப்பிடலாம். ஆனால் அதன் சுவை சிறிது மாறலாம். ஆனால் எந்த உணவுப் பொருட்களிலும் காலாவதி தேதி எழுதப்பட்டிருந்தால் அந்த தேதிக்குப் பிறகு அதை உட்கொள்ளக் கூடாது.

Use By date என்றால் என்ன?

தேதியின்படி பயன்படுத்துதல்(Use by date) என்பது, அதை உட்கொள்ள அல்லது பயன்படுத்துவதற்கான கடைசி தேதியாகும். இதன் பொருள், இந்த தேதிக்குள் தயாரிப்பு பயன்படுத்தப்பட வேண்டும். அதன் பிறகு அந்த பொருள் இனி பாதுகாப்பாக இருக்காது. இது ஒரு வகையில் காலாவதி தேதி போன்றது. குறிப்பாக புதிய உணவுப் பொருட்கள் மற்றும் கெட்டுப்போகும் பொருட்களில், ‘use by’ date மிகவும் முக்கியமானது.

எடுத்துக்காட்டாக, உணவு பொருள் பாக்கெட்டில் “use by” என்று எழுதப்பட்டிருந்தால், அந்த தேதிக்குப் பிறகு அதை உட்கொள்வது உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என அர்த்தம். இதேபோல், ஒப்பனைப் பொருட்களில் (makeup products) எழுதப்பட்டிருந்தால், அந்த தேதிக்குப் பிறகு அதைப் பயன்படுத்துவது உங்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும்.


எந்த தயாரிப்பில் என்ன பார்க்க வேண்டும்?


ஒப்பனை பொருட்கள் (makeup products): இதில், நீங்கள் காலாவதி தேதி மற்றும் பொருளின் பயன்படுத்தப்படும் கடைசி தேதியை(Use by date) பார்க்க வேண்டும். நீங்கள் அதை குறிப்பிட்ட தேதிக்குப் பிறகும் பயன்படுத்தினால், அதன் தரம் சிறிது குறையலாம். ஆனால் காலாவதியான பிறகு அதைப் பயன்படுத்துவது சரும பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

உணவுப் பொருட்கள்: உணவுப் பொருட்களில் (Best before) என்பது அந்தத் தேதி வரை அதன் சுவை மற்றும் தரம் மிகச் சிறந்ததாக இருக்கும். அதே சமயம் அந்தத் தேதிக்குப் பிறகு அதை சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
மேலே, கூறப்பட்ட தகவல்கள் அயர்லாந்தின் உணவுப் பாதுகாப்பு ஆணையம் (Food Safety Authority of Ireland), கனெக்டிகட் பல்கலைக்கழக விரிவாக்க வெளியீடுகள்(University of Connecticut Extension Publications), கனேடிய உணவுப் பாதுகாப்பு நிறுவனம் (the Canadian Institute of Food Safety,) மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உணவுப் பாதுகாப்பு மற்றும் லேபிளிங் அரசாங்கத் துறைகள்(the European Union’s Food Safety and Labelling Government Department) உட்பட பல்வேறு ஆதாரங்களில் இருந்து எடுக்கப்பட்டது. இது தவிர, சில சுகாதார வலைத்தளங்களிலும் இதே போன்ற தகவல்கள் இடம்பெற்றுள்ளன.




🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

மிலாடி நபி விடுமுறை - அரசாணை வெளியீடு

IMG_20240909_152522_wm

மிலாடி நபி - 17.09.2024 அன்று விடுமுறை - அரசாணை வெளியீடு!


Public Holiday - Holiday for Milad - un - Nabi declared on 17th September 2024 - under Negotiable Instruments Act , 1881 - Change in the date of observance of the festival- Orders - Issued .👇👇👇

Download here


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group 

2024-25ஆம் கல்வியாண்டிற்கான திருத்திய நாட்காட்டி (குறைக்கப்பட்ட வேலை நாட்கள்) வெளியீடு சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!!

 IMG_20240909_202034


2024-25 ஆம் கல்வியாண்டிற்கான நாட்காட்டி பார்வை ( 2 ) ல் கண்டுள்ள கடிதப்படி அனைத்து முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டு நாட்காட்டி குறித்த கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் அனுப்பி வைக்க தெரிவிக்கப்பட்டது . இப்பொருள் சார்ந்து பெறப்பட்ட கருத்துக்கள் நடைமுறையில் உள்ள அரசாணைகள் பார்வை ( 2 ) ல் கண்டுள்ள சட்டம் மற்றும் தொடர்புடைய விதிகள் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டது.


 பார்வை ( 3 ) ல் கண்டுள்ள சட்டத்தின்படி 6 முதல் 8 வகுப்புகளுக்கு குறைந்தபட்சம் 220 வேலை நாட்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளமை மற்றும் 2024-25 ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் ஜூன் 10 ம் தேதி திறக்கப்பட்டமை ஆகியனவற்றை கருத்திற்கொண்டு 6 முதல் 8 வகுப்புகளுக்கு வரையறுக்கப்பட்டுள்ள வேலை நாட்களின் அடிப்படையில் உயர் மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கும் 220 வேலை நாட்கள் ( 210 நாட்கள் கற்றல் - கற்பித்தல் , தேர்வுகள் உள்ளிட்டவைக்கும் 10 நாட்கள் பயிற்சி உள்ளிட்ட கல்விசார் பணிகளுக்கும் ) என நிர்ணயம் செய்து 2024-25 ஆம் கல்வியாண்டில் பின்பற்றப்பட வேண்டிய திருத்திய நாட்காட்டி இத்துடன் இணைத்து அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது . இதனை சார்நிலை அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அனுப்பி வைத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

`புதிய நாட்காட்டி விரைவில்....

 DSE - New Academic Calendar - Proceedings👇👇👇

Download here



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

2024-25ஆம் கல்வியாண்டிற்கான திருத்திய நாட்காட்டி வெளியீடு!

 

IMG_20240909_211319

2024-25ஆம் கல்வியாண்டிற்கான திருத்திய நாட்காட்டி வெளியீடு!

New Academic Calendar pdf - Download here


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

இனிப்பு அதிகமாக சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருமா.. உண்மை என்ன?

 அதிகப்படியான இனிப்புகளை சாப்பிடுவது நீரிழிவு நோயக்கு காரணமாகுமா அல்லது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகப்படுத்துமா என்கிற கேள்வி பலருக்கும் எழும். இதுபற்றிய விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

உலகில் பெரும்பாலானோர் உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய சர்க்கரை நோயை டைப் 1 மற்றும் டைப் 2 என இரண்டாகப் பிரிக்கலாம். இதில் டைப் 1 சர்க்கரை நோய் சர்க்கரையை அதிகமாக எடுத்துக் கொள்வதால் வராது என்றாலும், டைப் 2 நமது தினசரி வாழ்க்கை முறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதிக சர்க்கரையை உட்கொள்வதால் உடல் பருமன் அதிகரிக்கும் மற்றும் இன்சுலின் சுரப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது.

இதுவே டைப் 2 நீரிழிவு நோய்க்கான அபாயத்தை தூண்டுகிறது. குறிப்பாக சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள் தீங்கு விளைவிக்கும். சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதும், சரிவிகித உணவைப் பின்பற்றுவதும் நீரிழிவு நோய் அபாயத்தைக் குறைப்பதற்கு முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகிறது.

News18

மிட்டாய்கள் முதல் பேஸ்ட்ரிகள் வரை சர்க்கரையை சேர்ப்பது கட்டாயமாகியிருக்கிறது. இதுபோன்ற பொருட்களில் சர்க்கரையை தவிர்ப்பது கடினம். உடல்நலம், குறிப்பாக நீரிழிவு நோய் பற்றிய கவலைகள் அதிகரித்து வருவதால், அதிகப்படியான இனிப்புகளை உட்கொள்வது உண்மையில் இந்த நாட்பட்ட நிலையை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்குமா என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். சர்க்கரை உட்கொள்வதற்க்கும், நீரிழிவு நோய்க்கும் உள்ள தொடர்பைப் பற்றி நாம் புரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


சர்க்கரைக்கும், சர்க்கரை நோய்க்கும் உள்ள தொடர்பு என்ன?

அதிக சர்க்கரை சாப்பிடுவது நேரடியாக நீரிழிவு நோயை உண்டாக்குகிறதா என்பது மக்களிடையே பொதுவான கேள்விகளில் ஒன்றாகும். இதற்கு எளிதாக “ஆம்” அல்லது “இல்லை” என்று செல்வது தான் உண்மையில் கஷ்டமான விஷயம். அமெரிக்க நீரிழிவு சங்கத்தின் கூற்றுப்படி, டைப் 1 நீரிழிவு என்பது ஒரு தன்னுடல் தாக்க நிலையாகும், இதில் உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு, இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களைத் தாக்குகிறது, மேலும் இது சர்க்கரை உட்கொள்வதால் ஏற்படாது. மறுபுறம், டைப் 2 நீரிழிவு நோய், மிகவும் பரவலாக உள்ளது, இது உணவுமுறை உள்ளிட்ட வாழ்க்கை முறை காரணிகளுடன் தொடர்புடையது.

சர்க்கரை அதிகம் உள்ள உணவு, உடல் பருமனுக்கு வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது, இது டைப் 2 நீரிழிவு நோய்க்கான குறிப்பிடத்தக்க ஆபத்தான காரணியாக பார்க்கப்படுகிறது. அதிகப்படியான சர்க்கரை எடுத்துக் கொள்வது உடல் எடையை அதிகரிக்கிறது. குறிப்பாக முக்கிய உறுப்புகளைச் சுற்றியுள்ள உள்ளுறுப்பு, ழுப்பு வடிவத்தில் இருக்கும். இந்த வகை கொழுப்பு, இன்சுலின் எதிர்ப்புடன் தொடர்புடையது, உடலின் செல்கள் இன்சுலினுக்குக் குறைவாகப் பதிலளிக்கும் நிலையில், இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிப்பதற்கும், இறுதியில், டைப் 2 நீரிழிவுக்கும் வழிவகுக்கிறது.

சர்க்கரை பானங்களின் பங்கு என்ன?

சர்க்கரையின் முக்கிய ஆதாரங்களில் ஒன்று சர்க்கரை பானங்கள் ஆகும். சர்க்கரை பானங்களைத் தொடர்ந்து உட்கொள்ளும் நபர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான அதிக ஆபத்து இருப்பதாக ஜர்னல் ஆஃப் டயாபிடிஸ் இன்வெஸ்டிகேசன் நடத்திய ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு சர்க்கரை பானங்களை உட்கொள்வது கூட ஆபத்தை 26% அதிகரிக்கும் என்று அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

இதற்குப் பின்னால் உள்ள காரணம் என்னவென்றால், சர்க்கரை பானங்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை விரைவாக அதிகரிக்கச் செய்கின்றன, இது காலப்போக்கில் இன்சுலின் எதிர்ப்பை உருவாக்குகிறது. இந்த பானங்கள் எந்த ஊட்டச்சத்தையும் வழங்குவதில்லை, நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்காமல்,டை அதிகரிப்புக்கு மட்டும் பங்களிக்கின்றன. சர்க்கரை பானங்களை கட்டுப்படுத்துவது நீரிழிவு அபாயத்தைக் குறைப்பதில் ஒரு முக்கியமான படியாகும்.


இன்சுலின் எதிர்ப்பில் செயற்கையாக சேர்க்கப்படும் சர்க்கரைகளின் தாக்கம் என்ன?

பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருக்கும் இயற்கையான சர்க்கரைகளையும் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இருக்கும் சர்க்கரையையும் வேறுபடுத்திப் பார்ப்பது முக்கியமான ஒன்று. மிட்டாய்கள், வேகவைத்த பொருட்கள் மற்றும் இனிப்பு தானியங்கள் போன்ற சர்க்கரை அதிகமாக உள்ள பொருட்களை அதிகமாக உட்கொள்ளும் போது தீங்கு விளைவிக்கும். சர்க்கரைகள் அதிகம் உள்ள உணவுகள் நீரிழிவு நோயுடன் போராடும் இன்சுலின் எதிர்ப்பின் அளவை அதிகரிக்க செய்யும்.

உடலின் செல்கள் இன்சுலினுக்கு சரியாக பதிலளிக்கத் தவறும்போது இன்சுலின் எதிர்ப்பு ஏற்படுகிறது, இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன் ஆகும். இதனை ஈடுசெய்ய கணையம் அதிக இன்சுலினை உற்பத்தி செய்கிறது, ஆனால் காலப்போக்கில், இது அதிக இரத்த சர்க்கரை அளவு மற்றும் இறுதியில், டைப் 2 நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கிறது.

சரிவிகித உணவை உட்கொள்வது எவ்வளவு முக்கியம்?அதிகப்படியான சர்க்கரையை எடுத்துக் கொள்வது நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கும் என்பது தெளிவாகத் தெரிந்தாலும், சர்க்கரையானது இயல்பாகவே மோசமானது அல்ல என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். முக்கிய விஷயம் மிதமான மற்றும் சீரான உணவை பராமரிப்பது. உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) அறிவுரைப்படி, உங்கள் மொத்த தினசரி ஆற்றல் தேவையில் 10% க்கும் குறைவான அளிலான சர்க்கரை உணவையும், கூடுதல் ஆரோக்கிய நன்மைகளுக்காக 5% க்கும் குறைவாக இருக்கும் சர்க்கரையையும் எடுத்து கொள்ளலாம் என்று பரிந்துரைத்துள்ளது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

DRDO ஆணையத்தில் Junior Research Fellows வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.48,100/- || டிகிரி தேர்ச்சி போதும்

 DRDO ஆணையத்தில் Junior Research Fellows வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.48,100/- || டிகிரி தேர்ச்சி போதும்

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் எனப்படும் DRDO DYSL-AI ஆனது Junior Research Fellows பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

DRDO காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Junior Research Fellows பணிக்கென ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

JRF கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E / B.Tech / M.E / M. Tech / Post graduate degree in Basic Science தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

DRDO வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


JRF ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.48,100/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DRDO தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் GATE மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

CMC வேலூர் கல்லூரியில் Field Worker வேலை – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

 CMC வேலூர் கல்லூரியில் Field Worker வேலை – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Field Worker, Fire Officer மற்றும் பல்வேறு பணிக்கான 14 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

CMC காலிப்பணியிடங்கள்:

Field Worker, Fire Officer மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 14 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு / Any Degree / B.Sc / M.Sc / MD / MS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CMC வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30,35 மற்றும் 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு CMC-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CMC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.09.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் Video Anchor வேலை – ஜாக்பாட் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

 டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் Video Anchor வேலை – ஜாக்பாட் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன்(DIC) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Digital Portal Presenter/Video Anchor பணிக்கென காலியாக உள்ள ஒரே ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காலிப்பணியிடங்கள்:

DIC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Quality Analyst / Tester பணிக்கென மொத்தம் 1 காலிப்பணியிடம் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 2 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு DIC-ன் நிபந்தனைகளின் படி ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.09.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

IT துறையில் வேலை தேடுபவரா? Accenture நிறுவனத்தில் உங்களுக்கான வேலைவாய்ப்பு இதோ!

 IT துறையில் வேலை தேடுபவரா? Accenture நிறுவனத்தில் உங்களுக்கான வேலைவாய்ப்பு இதோ!

Accenture நிறுவனமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Application Lead பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Accenture காலிப்பணியிடங்கள்:

Accenture வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Application Lead பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Application Developer கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Accenture வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Application Lead முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Accenture ஊதிய விவரம்:

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

Application Lead தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Skill Test / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group