April 15, 2022

கோடையில் சர்க்கரை நோயாளிகள் கவனமுடன் இருக்க வேண்டிய அவசியம் என்ன

 வானிலையில் வெப்பம் அதிகரிக்கும்போது, ​​இரத்த சர்க்கரை அளவை (Blood Sugar Levels (BSL)) உன்னிப்பாகக் கண்காணித்து, உடல் வெப்பத்தை சரியாகக் கையாள வேண்டும். இல்லை என்றால் சர்க்கரை நோய், கசப்பான விளைவுகளை கொடுக்கும்.



கோடைக்காலம் என்பது அனைவரையும் கடுமையாக தாக்குகிறது என்றாலும், நீரிழிவு நோய் தாக்கத்தை இன்னும் கடினமாக்குகிறது, இதனால் உடல் அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் சீர்குலைகிறது.

 நீரிழிவு நோயாளிகள் அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்திற்கு அதிக உணர்திறன் உடையவர்கள் என்பது, தகிக்கும் சூரியனின் தாக்கத்தால் சோர்வடையும் அபாயமும் அதிகரிக்கிறது.

உண்மையில், 80°F அதாவது சுமார் 27°Cக்கும் அதிகமான வெப்பநிலை, ​​நீரிழிவு நோய்க்கான மருந்துகள் மற்றும் பரிசோதனைப் பொருட்களையும் பாதிக்கிறது.

வானிலை வெப்பமடையும் போது, ​​இரத்த சர்க்கரை அளவை உன்னிப்பாகக் கண்காணித்து, உடல் வெப்பத்தை சரியாகக் கையாளவில்லை என்றால் சர்க்கரை நோயின் பாதிப்பு அதிகரிக்கும். 

கோடைக்காலம் மற்றவர்களை விட நீரிழிவு நோயாளிகளை அதிகம் பாதிக்கக்கூடிய காரணங்கள் இவை: 

செயலிழக்கும் வியர்வை சுரப்பிகள்
நீரிழிவு நோயாளிகளுக்கு தொடர்ந்து இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால், இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகள் சேதமடைந்திருக்கும். வியர்வை சுரப்பிகள் உட்பட உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் உயர் இரத்த சர்க்கரையால் பாதிக்கப்படுகின்றன. 

பயனற்ற வியர்வை சுரப்பிகள் உடலை குளிர்விப்பதில் சிறப்பாக செயலாற்ற முடிவதில்லை. எனவே உடலின் திறன் மேலும் பாதிக்கப்படுகிறது. எனவே, நீரிழிவு நோயாளிகள் அதிக வெப்பநிலையால் எளிதில் பாதிக்கப்படுகின்றனர்.

அடிக்கடி சிறுநீர் கழித்தல்
நீரிழப்புக்கு பங்களிக்கும் நீரிழிவு நோயின் மற்றொரு பிரச்சனை அடிக்கடி சிறுநீர் கழிப்பது. ஏனெனில் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை சிறுநீரகத்தையில் வேலையை அதிகரிக்கிறது.

சிறுநீரகங்கள் சரியாக செயல்படத் தவறினால், அதிகப்படியான குளுக்கோஸ் உடலில் இருந்து சிறுநீர் மூலம் வெளியேறிவிடுகிறது, இது உடலில் இருந்து அதிக அளவில் நீரை இழக்கச் செய்கிறது.  

சிறுநீரிறக்கிகள்
இரத்த அழுத்தம் உள்ள நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த டையூரிடிக்ஸ் பரிந்துரைக்கப்படுகிறது. டையூரிடிக்ஸ் சிறுநீரகங்களை சோடியத்தை வெளியிட தூண்டுகிறது.

இது சிறுநீரை அடிக்கடி கழிக்க தூண்டுகிறது, நரம்புகளில் இருந்து அதிகப்படியான திரவங்களை வெளியேற்றுகிறது, இது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது என்றபோதிலும் இது நீரிழப்புக்கு வழிவகுக்கும்.
எனவே, நீரிழிவு நோயாளிகள் கோடைக்காலத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பதால் இத்தனை தீமைகளா, அசர வைக்கும் தகவல்

 நமது ஆரோக்கியத்திற்கு தண்ணீர் மிகவும் முக்கியமானது. இதனால்தான் தினமும் 3-4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். மருத்துவர்களின் கூற்றுப்படி, சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும், உணவுடன் அல்லது உடனடியாக தண்ணீர் குடிப்பதால் அமிலத்தன்மை, வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். உணவு உண்ட உடனே தண்ணீர் குடிப்பவர்கள் பல உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.




உணவு உண்ட பிறகு தண்ணீர் குடிக்கலாமா?
உணவை ஜீரணிக்க சுமார் 2 மணி நேரம் ஆகும் என்று சுகாதார நிபுணர்கள் நம்புகிறார்கள், இதற்கிடையில் தண்ணீர் குடிப்பது செரிமானத்தை பாதிக்கிறது. அதனால்தான் உணவு உண்ட 45-60 நிமிடங்களுக்குப் பிறகு தான் தண்ணீர் குடிக்க வேண்டும். அதேபோல் உணவு உண்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

சரியான நேரத்தில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
1. உணவு உண்ட ஒரு மணி நேரம் கழித்து தண்ணீர் குடிப்பதால் எடை கட்டுக்குள் இருக்கும்.
2. சரியான நேரத்தில் தண்ணீர் குடிப்பதால் செரிமானம் சரியாகும், செரிமான அமைப்பு வலுவாக இருக்கும்.
3. வயிற்றில் வாயு மற்றும் அமிலத்தன்மை பிரச்சனை நீங்கும்.
4. உணவில் இருக்கும் சத்துக்களை உடல் நன்கு உறிஞ்சிக் கொள்ளும்.
5. சரியான நேரத்தில் தண்ணீர் குடிப்பதும் நல்ல தூக்கத்தைப் பெற உதவுகிறது.

உணவு உண்ட உடனே தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள்
* உடல் பருமன் பிரச்சனை ஏற்படும்
* செரிமான பிரச்சனைகள் ஏற்படும்
* உயர் இரத்த சர்க்கரை அளவு பிரச்சனை ஏற்படும்
* வயிற்று வாயு பிரச்சனை ஏற்படும்

தூங்கும் முன் மறந்து கூட இந்த 3 பொருட்களை சாப்பிடாதீர்கள்

 தூக்கமின்மை காரணமாக, ஒரு நபர் பல ஆபத்தான நோய்களுக்கு பலியாகலாம். உங்களுக்கும் போதுமான தூக்கம் வராமல் இருந்தால், உங்கள் உணமுறையில் மாற்றங்கள் செய்ய வேண்டியது அவசியமாகும், ஏனென்றால் உணவும் பானமும் உங்கள் தூக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால்தான் உணவுப் பழக்கவழக்கங்களில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம் என்று கூறப்படுகிறது.



நல்ல ஆரோக்கியத்திற்கு தூக்கம் அவசியம்
நல்ல ஆரோக்கியம் தூக்கத்துடன் நெருங்கிய தொடர்புடையது. தூக்கமின்மை காரணமாக, பல ஆபத்தான நோய்களுக்கு பலியாகலாம். இதய நோய், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி, மார்பக புற்றுநோய் ஆபத்து, மனச்சோர்வு போன்ற பிரச்சனைகள் இதில் அடங்கும். எனவே, தூங்கும் முன் ஆரோக்கியமற்ற பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

இரவில் தூங்கும் முன் இவற்றை உட்கொள்ள வேண்டாம்

1. காஃபின் கலந்த பானங்கள்
இரவில் உணவு உண்ணும் போது வெங்காயம் அல்லது தக்காளி போன்றவற்றுடன் ஆல்கஹால் மற்றும் காஃபின் அளவைக் கண்காணிப்பது முக்கியம். தூக்க முறைகளை பாதிக்கும் காஃபின் பல்வேறு உணவுகள் மற்றும் பானங்களில் காணப்படுகிறது. காஃபின் தேநீர், காபி மற்றும் பல்வேறு குளிர்பானங்களில் காணப்படுகிறது. எனவே, இரவில் தூங்கும் முன் இவற்றை உட்கொள்வதை தவிர்க்கவும்.

2. தக்காளி
தூங்கும் முன் தக்காளி சாப்பிடுவதும் தூக்கத்திற்கு நல்லதல்ல. ஏனெனில் தக்காளி அமில வீக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை அதிகரிக்கும். ஒரு அறிக்கையின்படி, இரவில் தக்காளியை உட்கொள்வது அமைதியின்மையை அதிகரிக்கும், இது நிம்மதியான தூக்கத்தை கெடுக்கும் என்று கூறப்படுகிறது.

3. வெங்காயம்
வெங்காயம் உங்கள் செரிமான அமைப்பை சீர்குலைக்கும். வெங்காயம் வயிற்றில் வாயுவை உருவாக்கும். இந்த வாயு உங்கள் வயிற்றின் அழுத்தத்தை பாதிக்கிறது, இதன் காரணமாக அமிலம் தொண்டையை நோக்கி நகரும். குறிப்பாக நேராக படுக்கும்போது. ஆச்சரியப்படும் விதமாக, பச்சையாகவோ அல்லது சமைத்த வெங்காயமோ இதுபோன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே, இரவில் தூங்கும் முன், முடிந்தவரை வெங்காயத்தை உட்கொள்வதை தவிர்க்கவும்.

லோ பிபி என்றால் என்ன? அதை முற்றிலும் சரிசெய்ய மிக சுலப வழி என்ன?

 80/60, 90/60 போன்றே பிரஷர் எப்போதும் இருந்தால் அதிர்ச்சியடையத் தேவையில்லை என்றும் அது நார்மல்தான் என்றும் மருத்துவர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.



பொதுமக்களுக்கு ஏற்படும் இயல்பான சந்தேகங்களைத் தனது ஃபேஸ்புக் பதிவுகள் மூலம் தீர்த்து வருகிறார் மருத்துவர் ஹரிஹரன். தற்போது பிபி குறித்து நிறைய கருத்துகள், சந்தேகங்கள் நிலவி வரும் சூழலில் லோ பிபி குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

ஃபேஸ்புக் பதிவில் அவர் கூறியுள்ளதாவது: 

''இந்தியப் பெண்களின் ஆவரேஜ் ரத்த அழுத்தம் (Blood pressure எனும் பிபி) எவ்வளவு? 
1984-ல் செய்யப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் தமிழக பெண்களின் ஆவரேஜ் பிரஷர் 100/65. 2020ல் இது 117/75 ஆக உள்ளது.

இதிலிருந்து தெரிவது என்ன? 
1984ல் உள்ள பெண்கள் ஆரோக்கியமாக இல்லையா? 2020-ல் பெண்கள் மிகவும் ஆரோக்கியமாக உள்ளார்களா? இல்லையே. இதன் ஆப்போசிட்தானே நிஜமாக உள்ளது. நாம் நம் அம்மா போல அந்த வயதில் ஆரோக்கியமாக இல்லையே.  அதனால், 198-4ல் உள்ள பெண்களின் ஆவரேஜ் பிரஷர் நார்மல் என வைத்துக்கொண்டால், இன்றைய மகளிரின் பிரஷர் அதிகம் உள்ளது. உடல் எடை, டென்ஷன், தூக்கமின்மை என்பதைக் காரணமாகச் சொல்லலாம். 

அமெரிக்கப் பெண்களிடம் சென்ற வருடம் செய்த ஆராய்ச்சியில், பெண்களின் சிஸ்டாலிக் பிரஷர் 100க்கு கீழ் இருப்பவர்களை விட 100க்கு மேல் இருப்பவர்களுக்கு இதய வியாதி மற்றும் ஸ்ட்ரோக் வர அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கிறது. (குறிப்பு-ஒருவரின் பிரஷர் 120/80 என்றால், மேலே உள்ள 120 என்பது சிஸ்டாலிக் எனப்படும்).

இன்றைக்கு யாரைக் கேட்டாலும், "எனக்கு லோ பிரஷர் இருக்கு, கிறுகிறுனு வந்துடும்" என ஃபேஷனாகச் சொல்வார்கள். அவர்கள் புரிதலே தவறு. என் கிளினிக்கில் கடந்த 16 வருடமாக நான் பார்த்த பெண்களில், முக்கால்வாசி பேருக்கு 90/60, 80/60 தான் இருந்தது.  கிறுகிறுப்பிற்கு அனீமியா போன்ற ஆயிரம் காரணங்கள் பெண்களுக்கு உண்டு. 

அதனால் இந்தியப் பெண்களே, உங்களுக்கு 80/60, 90/60 போன்றே பிரஷர் எப்போதும் இருந்தால், அது நார்மல் எனக் கொள்க. லோ பிரஷர் எனும் வாழ்வியல் வியாதி என ஒன்று  இல்லை. "அதெல்லாம் சரி டாக்டர், லோ பிபியை முற்றிலும் சரிசெய்ய மிக சுலப வழி என்னனு டைட்டில் போட்டீங்களே, பதில் மட்டும் சொல்லுங்க ப்ளீஸ்" .
"அப்படி ஒரு வியாதியே இல்லை".

இவ்வாறு மருத்துவர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார். 

April 9, 2022

சர்க்கரைநோயாளிகள் மாங்காய், மாம்பழம் சாப்பிடலாமா?

 நீரிழிவு உள்ளவர்கள் மாங்காயும் மாம்பழமும் சாப்பிடலாமா? ஒருநாளைக்கு எத்தனை பழம் சாப்பிடலாம்?



ஸ்ரீமதி வெங்கட்ராமன்

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த, கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.

``100 கிராம் மாங்காயில் 10 கிராம் கார்போஹைட்ரேட்டும், 44 கலோரிகளும் இருக்கும். நீரிழிவு உள்ளவர்கள் மாங்காய் சாப்பிடலாம். ஆனாலும் நாம் சாப்பிடும் அளவை கவனிக்க வேண்டியது முக்கியம். நீரிழிவு கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள்கூட பச்சை மாங்காய் சாப்பிடலாம். வெள்ளரிக்காய், முளைகட்டிய பயறு உள்ளிட்டவை சேர்த்த சாலட்டில் மாங்காயும் சிறிது சேர்த்துச் சாப்பிடுவதால் எந்தப் பிரச்னையும் இல்லை. அதிலுள்ள நார்ச்சத்தும் நீரிழிவுக்காரர்களுக்கு நல்லதுதான். மாங்காய் சாப்பிடலாம் என்பதால் அதே விதி நன்கு பழுத்த மாம்பழத்துக்கும் பொருந்தாது. 100 கிராம் மாம்பழத்தில் 17 கிராம் மட்டுமே கார்போஹைட்ரேட் இருக்கிறது. அதனாலேயே அது நீரிழிவு உள்ளவர்களுக்கு ஏற்றதென அர்த்தமில்லை.

`கிளைசீமிக் லோடு' என்றொரு வார்த்தை நீரிழிவுக்காரர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.


சாதம், மைதா உணவுகள் என கார்போஹைட்ரேட் உணவுகளை எடுக்கும்போது அதன் விளைவாக நம் உடலில் குளுக்கோஸின் அளவு எவ்வளவு அதிகரிக்கிறது என்பதைக் குறிப்பதுதான் கிளைசீமிக் லோடு.

எனவே, நீரிழிவு கட்டுக்குள் இல்லாதவர்கள், அதாவது ஹெச்பிஏ1சி (HbA1c ) அளவு 7-க்கு மேல் உள்ளவர்கள், அரிசி உணவுகள், மைதா உணவுகள், மாம்பழம் போன்றவற்றை உண்பதால் ரத்தச் சர்க்கரையின் அளவு இன்னும் அதிகரிக்கும். இன்சுலின் போட்டுக்கொள்வோர் என்றால் அதன் அளவை அதிகரிக்க வேண்டியிருக்கும். எனவே நீரிழிவு உள்ளவர்கள், ரத்தச் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிறகு மாம்பழம் சாப்பிடலாம். அடுத்து எவ்வளவு சாப்பிடலாம் என்ற கேள்வி வரும். 2 நாள்களுக்கொரு முறை சிறிய மாம்பழத்தில் பாதி சாப்பிடலாம். நிச்சயம் தினம் சாப்பிடக்கூடாது.


மாம்பழம்

சிலருக்கு ஹெச்பிஏ1சி அளவானது 11 என்றெல்லாம் உச்சத்தில் இருக்கும். அவர்கள் மாம்பழத்துக்கு ஆசைப்படவே கூடாது. ஹெச்பிஏ1சி என்பது மூன்று மாதங்களில் உங்கள் ரத்தச் சர்க்கரை அளவு எப்படியிருக்கிறது என்பதற்கான அளவீடு. எனவே மாம்பழம் சாப்பிட ஆசைப்படுவோர், அதற்கு முன் ரத்தச் சர்க்கரை அளவைக் குறைத்துவிட்டால் பிரச்னை இல்லை."

பற்களை பராமரிப்பது எப்படி?

 பற்களின் பராமரிப்பு என்பது பற்களோடு முடிந்து விடுவதில்லை. பற்களின் பராமரிப்பில் அதை சுற்றியுள்ள திசுக்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. உங்கள் இயற்கையான பற்களின் வேர்களை கட்டிக்காத்தால் செயற்கை வேர் என்ற தேவையே இல்லை. வெளியே தெரியும் ஈறு, உள்ளே உள்ள எலும்பு மற்றும் இணைப்புத்திசு ஆகியவை மிக முக்கியமானவை. பற்களின் வேர்கள் எலும்போடு கண்ணுக்குத்தெரியாத நுண்ணிய இழைகளால் இணைக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு நோயையும் வராமல் தடுப்பது மிக நல்லது அல்லது ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதற்கு ஏற்றபடி மருத்துவம் செய்துகொள்வது பின்னாளில் அதிக சேதமடைவதையும், செலவு மிகுதியாவதையும் தடுக்கும்.




ஈறுகள் பலம் இழப்பதற்கு பரம்பரை நோய்கள், பற்களின் பராமரிப்பில் குறைபாடு, ஒழுங்காக பல் துலக்காமல் இருத்தல், பற்களில் அதிக கரை படியவிடுதல், தவறான பழக்க வழக்கங்கள், பீடி, சிகரெட், பான் முதலியவை உட்கொள்ளுதல், இரவு நேரத்தில் பல் துலக்காமல் தூங்கி விடுவது, உணவுப் பொருட்களில் வைட்டமின், நார்ச்சத்து போன்றவை இல்லாமல் அதிக மாவுச்சத்து, சர்க்கரை நிறைந்த உணவை உண்ணுதல் ஆகியவை காரணங்களாகும். பற்களை வருடத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்தல் மூலம் ஆரம்ப நிலையிலேயே ஈறு பாதிப்புகளை சரி செய்யலாம் . அதிகமான நோய் தாக்கம் உள்ளவர்கள் அதன் தன்மைக்கேற்ப பல் மருத்துவத்தில் சிறப்பான கருவிகளைக் கொண்டு கெட்டுப்போன சதைகளை வருவி எடுத்து, நல்ல ஆரோக்கியமான எலும்பு துணுக்குகளையும் பிரித்து எடுக்கப்பட்ட ரத்த அணுக்கள் கொண்டும் இழந்த ஈறு மற்றும் எலும்புகளை வளர வைக்கலாம்.

ஈறுகளின் நலமே உங்கள் பற்கள் மற்றும் வாயின் நலம். வாய் என்பது உங்கள் உடலாகிய இல்லத்தின் நுழைவுவாயில் போன்றது. இதை நீங்கள் பேணி காத்தால் உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்படும். நன்கு முற்றிய நிலையிலும் பற்களை முழுவதும் எடுக்காமல் அதற்கு நரம்பு உயிரோட்ட சிகிச்சை செய்தும், வேர்சிகிச்சை செய்தும் அதன் மூலம் பற்களை இணைத்து மேற்கொண்டு பல் எடுப்பதை 10 முதல் 15 ஆண்டுகள் தள்ளிப்போடலாம். இந்த முறையில் பற்களின் ஆரோக்கியத்தை கூட்டுவதோடு, செயற்கை வேர்கள் இல்லாமலேயே உங்கள் பற்கள் பலம் பெறுகின்றன.

உங்கள் புன்னகை தன்னம்பிக்கையையும், உங்கள் மீது மற்றவர் வைத்திருக்கும் நம்பிக்கையையும் அதிகரிக்கும். பயமின்றி புன்னகை செய்யுங்கள், நீங்கள் இழந்த புன்னகையை நாங்கள் மீட்டு தருகிறோம் என்று திண்டுக்கல் கிருபா அட்வான்ஸ்டு பல் மருத்துவமனையின் டாக்டர்.வி.பெனடிக்ட் கூறியுள்ளார்.

டாக்டர்.வி. பெனடிக்ட், எம்.டி.எஸ்.,

March 28, 2022

இதய நோய்களை தடுக்கும் வேர்க்கடலை

 ஆசியாவில் ‘இஸ்கிமிக் ஸ்ட்ரோக்’ பாதிப்புக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. அங்கு வேர்க்கடலை நுகர்வு அதிகமாக இருப்பதே அதற்கு காரணம் என்பதை கண்டறிந்தோம்.



வேர்க்கடலை சாப்பிடாதவர்களுடன் ஒப்பிடுகையில், அதனை சாப்பிடுபவர்களுக்கு பக்கவாதம் அல்லது இதய நோய் ஏற்படும் அபாயம் குறைவு என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

‘‘உணவு பட்டியலில் தினமும் சராசரியாக 4-5 வேர்க்கடலைகளை சேர்ப்பது ‘இஸ்கிமிக் ஸ்ட்ரோக்’கை தடுக்க உதவும் என்று எங்கள் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன’’ என்கிறார், ஆராய்ச்சியாளர், இகேஹாரா. இஸ்கிமிக் ஸ்ட்ரோக் என்பது மூளைக்கு செல்லும் ரத்த குழாய்களில் அடைப்பு அல்லது ரத்தம் உறைவது போன்ற பிரச்சினைகளால் ஏற்படும் பக்கவாதமாகும்.

‘‘ஆசியாவில் ‘இஸ்கிமிக் ஸ்ட்ரோக்’ பாதிப்புக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. அங்கு வேர்க்கடலை நுகர்வு அதிகமாக இருப்பதே அதற்கு காரணம் என்பதை கண்டறிந்தோம்.

வேர்க்கடலையில் இதய ஆரோக்கியத்துக்கு வலு சேர்க்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதாவது மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள், பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள், தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து போன்றவை உயர் ரத்த அழுத்தம், கெட்ட கொழுப்பு போன்ற ஆபத்து காரணிகளைக் குறைப்பதன் மூலம் இதய நோய்களில் இருந்து காக்கின்றன’’ என்கிறார்.

அமெரிக்க இதய அசோசியேஷனின் ஒரு பிரிவான அமெரிக்கன் ஸ்ட்ரோக் அசோசியேஷன் இதழான ‘ஸ்ட்ரோக்’ இதழில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

March 21, 2022

கோடை காலத்தில் தாகத்தை தணிக்கும் வெள்ளரிக்காய் ஜூஸ்





 தேவையான பொருட்கள்:


வெள்ளரிக்காய் - 1
இஞ்சி - சிறிய துண்டு
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
தேன்- 2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
கருப்பு உப்பு - 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்

செய்முறை:

வெள்ளரிக்காயை தோலுரித்து, துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

மிக்சியில் நறுக்கிய வெள்ளரிக்காய் துண்டு, இஞ்சி மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி, வடிகட்டி கொள்ளவும்.

வடிகட்டி ஜூஸில் கருப்பு உப்பு, எலுமிச்சை சாறு, தேன் மற்றும் சீரகப் பொடி சேர்த்து கலந்து பரிமாறினால், வெள்ளரிக்காய் இஞ்சி ஜூஸ் ரெடி!!!

March 16, 2022

Training on "Digital Marketing Skills for Agri-startups" by MANAGE

 MANAGE-Centre for Innovation and Agripreneurship (CIA) is calling applications for the third batch of a 5-Day online training program on “Digital Marketing Skills for Agri-startups” to help Agri-startups develop a sound understanding of digital marketing & implement the same for business enhancement.


The program will cover the following aspects of Digital Marketing:
Web analytics, Social media tools, Marketing through search engines, Search engine optimization, Mobile marketing, Email marketing, Pay per click, Digital display marketing, Content marketing, and other ways of digital marketing.

Applications for the Third Batch are open now. The program will commence in April, 2022. Interested Participants are requested to register themselves. We will not be taking any payments now, however once the payment process starts, we will be contacting the registered applicants.

The program fee is ₹ 2500/- (Rupees Two thousand five hundred only).

You may contact us at 9510691279 or 9642337827 for any further information on the same.

Dr. Saravanan Raj
Director (Agricultural Extension)
National Institute of Agricultural Extension Management (MANAGE)
(An Organization of Ministry of Agriculture & Farmers Welfare, Government of India)
Rajendranagar, Hyderabad- 500 030, INDIA


March 11, 2022

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வித்திடும் பழக்கவழக்கங்கள்

 இன்பமும், துன்பமும் கலந்த வாழ்க்கை பயணத்தில் மகிழ்ச்சியான மன நிலையை தக்க வைத்துக்கொள்வதற்கு சில பழக்கவழங்களை கடைப்பிடித்தால் போதும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:


சில சமயங்களில் தற்பெருமை கொள்வது மகிழ்ச்சியை தரும். மனதுக்கும் இதமளிக்கும். ஆனால் அதனை மனதோடு நிலை நிறுத்திக்கொள்ளுங்கள். அது பற்றி மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். ஏனெனில் தற்பெருமை உங்கள் தவறுகளை மறக்கடிக்க செய்துவிடும். நீங்கள் செய்வதெல்லாம் சரி என்று எண்ணத் தோன்றும். நாளடைவில் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் கெடுத்துவிடும்.

வாழ்க்கை நிலையில்லாதது. எந்த சமயத்தில் எது நடக்கும் என்று கணிக்க முடியாது. எந்த ஒரு சூழலிலும் மன உறுதியை இழக்கக்கூடாது. எதிர்மறையான சிந்தனைகள் மனதில் எழுவதற்கு இடமும் கொடுக்கக் கூடாது. அது மகிழ்ச்சியை கட்டுப்படுத்திவிடும்.

பணம்தான் வாழ்வின் பிரதானம் என்ற எண்ணம் நிறைய பேரிடம் இருக்கிறது. பணக்காரராவதற்காக ஓடி ஓடி உழைத்தாலும் ஒவ்வொருவரும் கோடீஸ்வரராக முடியாது. பணத்தை துரத்தி செல்வது வாழ்க்கையின் பெரும் பகுதியை இழக்க நேரிடும். நெருங்கிய நண்பர்கள், குடும்பம், நிம்மதி என பல விஷயங்களை தியாகம் செய்ய நேரிடும்.

உங்கள் மனதுக்கு பிடித்தமான விஷயங்களை செய்யுங்கள். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று சிந்திப்பதை நிறுத்துங்கள். அவர்கள் எப்படி நம்மை மதிப்பிடுவார்கள் என்று கவலைப்படுவதையும் நிறுத்துங்கள். உங்களை நீங்களே மதிப்பீடு செய்து நிறை, குறைகளை சரிபடுத்துங்கள்.

எளிதில் உணர்ச்சிவசப்படுவதை நிறுத்துங்கள். அது எதிர்மறை சிந்தனை கொண்ட நபராக உங்களை மாற்றிவிடும். பாதுகாப்பற்ற சூழலில் வாழும் உணர்வையும் ஏற் படுத்திவிடும். மகிழ்ச்சியை உணரவே மனம் தடுமாறும்.

கடந்த காலத்தை பற்றி சிந்திப்பதை நிறுத்துங்கள். ஏனெனில் பெரும்பாலானோர் கடந்த காலங்களில் நடந்த மகிழ்ச்சியான நிகழ்வுகளை அசைபோடுவதில்லை. மனதை வருத்திய விஷயங்களையே நினைத்துப் பார்க்கிறார்கள். அவை தூக்கமில்லாத இரவுகளையும், மன வலிகளையும் மட்டுமே வழங்கும்.

எது நடந்தாலும் அதனை தைரியமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கொண்டிருக்க வேண்டும். ஏதேனும் தவறு செய்துவிட்டால் அது பற்றியே சிந்தித்து மனதை காயப் படுத்த வேண்டியதில்லை. அதில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகளை பற்றிதான் சிந்திக்க வேண்டும். செய்த தவறில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள். இனி அதுபோல் தவறு நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

உங்கள் நலனில் அக்கறை கொண்டிருப் பவர்களுடன் மட்டுமே முக்கியமான விஷயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். நயவஞ்சக எண்ணம் கொண்டிருப்பவர்களிடம் இருந்து விலகியே இருங்கள். அவர்களுடன் நெருக்கத்தை வளர்த்துக்கொள்ளாமல் இருந்தாலே மன அழுத்தத்திற்கு ஆளாக மாட்டீர்கள்.

காதல் தோல்வியை எதிர்கொண்டிருந்தால் மீண்டும் அந்த தருணத்தை ஒருபோதும் நினைத்துப் பார்க்காதீர்கள். ஏனென்றால் அது வெறுப்புணர்வைத்தான் ஏற்படுத்தும்.அதனால் எந்தவொரு பிரயோஜனமும் இல்லை.

நீங்கள் பார்க்கும் வேலை உங்களுக்கு மன நிறைவை கொடுக்கவில்லை என்றாலோ, வேலை மீது வெறுப்பு கொண்டாலோ அதிலிருந்து விலகி விடுங்கள். கை நிறைய சம்பளம் கொடுத்தாலும் மகிழ்ச்சியை தரவில்லை என்றால் அந்த வேலையை தொடர்வது அர்த்தமற்றது.

மது, போதைப்பொருள், ஆரோக்கியமற்ற உணவு உள்பட வேறு ஏதேனும் கெட்ட பழக்கவழக்கத்தை கொண்டிருந்தாலும் அதிலிருந்து விடுபடுங்கள். அதன் பிறகு வாழ்க்கையை எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக உணர்கிறீர்கள் என்பது புரியும்.

March 10, 2022

சிறு வயதிலேயே கண் பார்வை குறைபாடு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்!

 இளம் வயதிலேயே  பார்வை குறைபாடு  ஏற்பட பல காரணங்கள் உள்ளன. கண்பார்வை குறைபாடு என்பது முதியவர்களுக்கு இருக்கும் பிரச்சனையாக இருந்த காலம் போய், இப்போது இளைஞர்கள் மற்றும் குழந்தைகளிடையே கூட ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. மோசமான வாழ்க்கை முறை, தவறான முறையில் படிப்பது, அதிக நேரம் டிவி பார்ப்பது அல்லது மொபைலைப் பயன்படுத்துவது போன்றவை இதற்கு முக்கியக் காரணங்கள் என்று நம்பப்படுகிறது.


 கண்பார்வை குறைபாட்டிற்கான அறிகுறிகள்

அடிக்கடி தலைவலி, மங்கலான பார்வை மற்றும்  கண்கள் சிவத்தல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும். இது உங்கள் கண்பார்வையில் குறைபாடு உள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவிக்கும். அத்தகைய சூழ்நிலையில், இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள். அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும்.

பார்வை குறைபாடு ஏற்படக் காரணம்

பல காரணங்களால் கண்பார்வை குறைபாடு ஏற்படும் நிலையில், நரம்பியல் பிரச்சனைகளும் இதில் அடங்கும். நரம்பியல் பிரச்சினைகள் மங்கலான பார்வை அல்லது சிறு வயதிலேயே கண்பார்வை குறைபாடு ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக நம்பப்படுகிறது. .


இளம் வயதில் பார்வை குறைபாடு 

வாழ்க்கை முறை தவிர, மரபணு ரீதியாக,  இளம் வயதில் பார்வை குறைபாடு ஏற்படலாம். ஒரு குடும்ப உறுப்பினருக்கு அல்பினிசம் நோய் அல்லது ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா இருந்தால், இந்த நிலைமைகள் குழந்தைகளுக்கு பலவீனமான கண்களை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. இதனால், சிறு வயதிலேயே பார்வை மங்குதல், குருட்டுத்தன்மை கூட ஏற்படலாம்.

 இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் கோரிக்கையாகவோ அல்லது சிகிச்சைக்கான மாற்றாகவோ இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.

மூளையின் செயல் திறனை பாதிக்கும் ‘5’ ஆபத்தான உணவுகள்..!!

 சில உணவுப் பொருட்களை அடிக்கடி சாப்பிடுவதால், அவை மூளையின் செயல் திறன் மிகவும் பாதிப்பதோடு, ஞாபக மறதி மற்றும் மூளை வீக்கம் போன்றவை ஏற்படும் ஆபத்துக்களையும் அதிகரிக்கின்றன. மேலும், அல்சைமர் (Alzheimer) மற்றும் டிமென்ஷியா போன்ற மன நோய்களின் ஆபத்தையும் அதிகரிக்கும்.



அதிக கிளைசெமிக் குறியீடு கொண்ட உணவுகள்

அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட உணவுகள் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கின்றன. பிரெட் மற்றும் பாஸ்தா போன்றவை சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளின் வகையின் கீழ் வருகின்றன. இவற்றை உண்ணாதீர்கள். இவை எடை அதிகரிப்பு, வளர்சிதை மாற்றத்தில் கோளாறுகள் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களின் அபாயத்தை அதிகரிக்கின்றன.

அதிக நைட்ரேட் உணவு

அதிக நைட்ரேட் உள்ள உணவு மனநலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை சேதப்படுத்துகிறது. உணவிற்கு நிறத்தை கொடுக்க இது பயன்படுகிறது. சலாமி, சாசேஜ் மற்றும் பன்றி இறைச்சி போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

பொரித்த உணவை உண்பது உங்கள் அறிவாற்றல், ஆரோக்கியம் இரண்டையும் பாதிக்கிறது. ஒரு ஆய்வின் படி, பொரித்த பொருட்களை அதிகமாக சாப்பிடுபவர்களது நினைவாற்றல் பலவீனமடையத் தொடங்குகிறது. இவற்றை உட்கொள்வதால் இரத்த நாளங்களில் வீக்கம் ஏற்படுகிறது. எண்ணெயில் பொரித்த உணவுகளை உண்பதும் மனச்சோர்வின் அபாயத்தை அதிகரிக்கிறது.

சர்க்கரை பொருட்கள்

உடல் சர்க்கரைப் பொருட்களை குளுக்கோஸாக மாற்றுகிறது. இது ஆற்றலை அளிக்கிறது, ஆனால் சர்க்கரையை அதிகமாக உட்கொள்ளும் போது, ​​அது மூளையின் செயல்பாடு, நினைவாற்றல் ஆகியவற்றை பாதிக்கிறது. செயற்கை சர்க்கரையில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களை சாப்பிடுவது உங்கள் மூளையின் ஆரோக்கியத்தை மிக மோசமாக பாதிக்கிறது.

மது

மது அருந்துவதால் டிமென்ஷியா ஏற்படுகிறது. பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல்  செய்த ஆராய்ச்சி ஒன்றில்,  மது அருந்துபவர்களுக்கு டிமென்ஷியா ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

 இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. இதை கடை பிடிக்கும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெறவும்.

March 8, 2022

சர்க்கரை நோயாளிகள் காபி குடிக்கலாமா? எவ்வளவு குடிக்கலாம்?

சர்க்கரை நோயாளிகள் காபி குடிக்கலாமா? என்ற கேள்வி சர்க்கரை நோயை எதிர்கொள்ளும் ஒவ்வொரு நோயாளியின் மனதிலும் வந்திருக்க வேண்டும். இந்த கேள்வி அவசியமான ஒன்று என்பதால், அதற்கான பதிலை தெளிவாக தெரிந்து கொள்வது அவசியம். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் உணவில் கட்டுப்பாடு இருக்க வேண்டியது மிக மிக அவசியம். அதிலும் என்ன சாப்பிட வேண்டும்? என்ன சாப்பிடக்கூடாது? எவ்வளவு சாப்பிட வேண்டும்? என்ற விஷயங்களை தெரிந்து வைத்திருந்தால், எந்த உணவையும் தவிர்க்க வேண்டிய கட்டாயம் இருக்காது. 

அந்தவகையில் காபி குடிக்கலாமா? குடிக்கக்கூடாதா? என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். காபி என்பது பொதுவாக உடலையும் மனதையும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது. சில ஆய்வுகளில் காபி குடிப்பதால் சர்க்கரை நோய் எதிர்காலத்தில் வருவதை கூட தவிர்க்கலாம் என கூறுகின்றன. காபியில் நிறைய ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த இடத்தில் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று என்னவென்றால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. சர்க்கரை நோய் வரக்கூடாது என்பதற்காக அதிக காபி குடிக்கலாம் என நினைக்கக்கூடாது. மேற்கூறிய விஷயங்கள் நன்மை என்றால், அதன் தீமைகளையும் தெரிந்து கொள்ளுங்கள். 

ஒரு சில ஆய்வுகளில் காபி குடிப்பதால் இன்சுலின் சுரப்பு குறைவதாகவும் கூறுகின்றன. இதனால் நாளடைவில் டைப் 1 மற்றும் 2 ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாடில்லாமல் இருப்பவர்கள் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். அதிகமாக காபி குடிப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக பிபி ஏற்படும். மேலும், வெறும் வயிற்றில் காபி குடிப்பதும் இதய பிரச்சனைகளை அதிகரிக்கும். குடிக்க வேண்டும் என விரும்புவர்கள் காலை உணவுக்குப்பின் காபியை குடியுங்கள். நீரிழிவு நோயாளிகள் காபியை குறைந்த அளவிலேயே உட்கொள்ள வேண்டும்.

வெறும் வயிற்றில் ‘இந்த’ உணவுகளை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு..!!

 காலையில், நம் வயிறு காலியாக இருக்கும் போது, நாம் என்ன சாப்பிட்டாலும், அது நேரடியாக நம் வயிற்றின் உள் அடுக்கை பாதிக்கிறது. இதனால், வயிற்றில் எரிச்சல் உணர்வு, வயிற்று வலி, நெஞ்செரிச்சல், அஜீரணம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாத உணவுகள் குறித்து வல்லுநர்கள் கூறியிருப்பது என்ன என்பதை பார்க்கலாம். 



நார்சத்து  அதிகம் உள்ள உணவுகள்:

நார்ச்சத்து வயிற்றுக்கு நல்லது. ஆனால் அளவுக்கு மிஞ்சிய வகையிலான அதிக நார்ச்சத்து வயிற்றுக்கு தீங்கு விளைவிக்கும். இது வயிற்று வலி போன்ற சிக்கலகளை ஏற்படுத்தும். எனவே, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சரியாக தேர்ந்தெடுத்து, சீரான வகையில், சரியான அளவில் உண்ணுங்கள்.

கார உணவுகள்:

காலையில் காரமான, மசாலா அதிகம் உள்ள மற்றும் பொரித்த உணவை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். ஏனெனில், இது வயிற்று எரிச்சல் மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தும். இதனுடன், நீங்கள் வயிறு மற்றும் மார்பு பகுதிகளில் நீங்கள் அசௌகரியத்தை உணரலாம்.  

காப்பி அல்லது தேநீர்:

பெரும்பாலானோருக்கு காலையில் வெறும் வயிற்றில் தேநீர் மற்றும் காபி சாப்பிட்டால் தான் வேலையே ஓடும். ஆனால் அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்கின்றனர் வல்லுநர்கள். இதனால் உங்களுக்கு நெஞ்செரிச்சல் மற்றும் நீர் சத்து இழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

குளிர்ந்த நீர்:

காலையில் வெறும் வயிற்றில் சாதாரண தண்ணீர் அல்லது வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது நன்மை பயக்கும். ஆனால் நீங்கள் குளிர்சாதன பெட்டியில் இருந்து குளிர்ந்த நீரை ஒருபோதும் குடிக்கக்கூடாது. இதன் காரணமாக உங்கள் செரிமான சக்தி குறையத் தொடங்குகிறது.

ஆல்கஹால்:

ஆல்கஹால் வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாது. இது உங்கள் கல்லீரலில் அதிக அழுத்தம்  ஏற்படுத்தும் என்பதோடு, ஆல்கஹால் உங்கள் இரத்தத்தில் மிக வேகமாக பரவுகிறது. 

பகல் தூக்கம் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்குமா..!!

 வேலை செய்து சோர்வாக இருக்கும் போது, ​​மதியம் சிறிது ஓய்வு எடுத்தால், புத்துணர்ச்சி ஏற்படும் என்பது உண்மை தான். பகல்நேர தூக்கம் என்பது எல்லா வயதினருக்கும் பொதுவான விருப்பமாக உள்ளது எனக் கூறலாம். ஆனால் அதனால், சில ஆரோக்கிய பாதிப்பும் உண்டு. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில  விஷயங்கள்  உள்ளன.




ஆரோக்கியத்தில் பகல் தூக்கத்தின் தாக்கம்

பகல்நேர தூக்கம் உங்களுக்கு சோர்வு மற்றும் சோம்பலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. ஆனால் சிலருக்கு இந்த பழக்கம் பிரச்சனையை ஏற்படுத்தலாம். இது இரவின் இயற்கையான உறக்கச் சுழற்சியைப் பாதிக்கலாம், அத்தகைய சூழ்நிலையில், இரவில் நல்ல தூக்கம் இருக்காது.

சோம்பேறியாக இருக்காதே

சிலருக்கு, பகல் தூக்கம் என்பது தங்களை புத்துணர்ச்சியடையச் செய்வதற்கான எளிதான வழியாகும். ஆனால் பல ஆராய்ச்சிகளில் இது மந்த நிலை ஏற்பட்டு பாதிக்கலாம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. மதியம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தூங்குவது உங்கள் உடலை மந்தமாக மாற்றும்.

ஆயுர்வேதம் சொல்வது என்ன?

ஆயுர்வேதத்தில், பகலில் தூங்குவது நல்லதல்ல என கூறப்பட்டுள்ளது. அவ்வாறு செய்வது கபம் மற்றும் பித்த தோஷங்களுக்கு இடையில் சமநிலை இல்லாத நிலைக்கு வழிவகுக்கும், இருப்பினும் ஆரோக்கியமாக இருப்பவர்கள் பகலில்  சிறிது நேரம் தூங்கலாம் என்கின்றனர்.

பகல் தூக்கத்தை தவிர்க்க வேண்டியவர்கள்

நீரிழிவு மற்றும் உடல் பருமன் உள்ளவர்கள் பகலில் தூங்கக்கூடாது, ஏனெனில் உடல் எடை அதிகரிப்பு, காய்ச்சல், நினைவாற்றல் இழப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையும்.

ஒரு நாளில் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?

மதியம் சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் தூங்குவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பது பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கத்தைப் பின்பற்ற, அலாரத்தை அமைத்து கொண்டு தூங்கலாம், பகலில் குட்டித் தூக்கம் போடாலாம். ஆனால் நீண்ட நேரம் தூங்குவது நல்லதல்ல.