January 22, 2023

வீட்டுக்கடன் வாங்கும் போது மறக்கக்கூடாதவை...

 வீடு கட்ட வேண்டும் என்று ஒரு குடும்பத்தில் முடிவு செய்தால் முதலில் என்ன செய்வார்கள்? வங்கிக்கடன் எவ்வளவு கிடைக்கும் என்றுதான் கணக்கு போடுவார்கள். எதிர்பார்க்கும் கடன் கிடைக்கவில்லை என்றால் எஞ்சிய தொகைக்கு என்ன செய்யலாம் என்று மனதை குழப்பிக்கொள்வார்கள். ஆனால், வீட்டில் கணவன், மனைவி என இரண்டு பேருமே வேலைக்குப் போனால் இப்படியெல்லாம் குழப்பிக்கொள்ள தேவையில்லை.

 இருவரின் சம்பளத்தையும் கணக்கில் காட்டி அதிகமான தொகையை வீட்டுக்கடனாக வாங்கிவிடலாம். வீட்டுக்கடன் கேட்டு வங்கிகளை அணுகும்போது முதலில் கடன் கேட்பவரின் வருவாயைத்தான் வங்கிகள் பரிசீலிக்கும். ஈட்டும் வருவாய், வயது எனச் சில விஷயங்களை கருத்தில்கொண்டுதான் வீட்டுக் கடனை நிர்ணயிப்பார்கள். கணவன் மட்டுமே ஈட்டும் வருவாயைக் கொண்டு வழங்கப்படும் வீட்டுக்கடன் போதுமானதாக இல்லை என்று கருதினால், மனைவியை இணைத்துக்கொண்டும் கூடுதல் வீட்டுக்கடன் கேட்கலாம்.

ஆனால், அதற்கு மனைவி வேலைக்குச் சென்று வருவாய் ஈட்ட வேண்டும். ஒரு வேளை மகன் வேலைக்குச் சென்றால் தந்தை-மகன் வருவாயைக் காட்டி கூடுதல் வீட்டுக்கடன் கேட்கலாம். வங்கிகளில் கேட்ட கடனைக் கொடுக்காமல் இருப்பதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. 

கடன் வாங்குபவருக்கு அதைத் திருப்பி செலுத்தும் அளவுக்கு பொருளாதார வசதி இருக்க வேண்டும் அல்லவா? கூடுதலாகக் கொடுத்துவிட்டு பிறகு கட்ட முடியாமல் போனால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். இதைத் தவிர்க்கவே வங்கிகள், அவ்வாறு செயல்படுகின்றன. அதே சமயம் கடனைத் திருப்பிச் செலுத்தும் அளவுக்குக் குடும்பத்தில் வருவாய் இருக்கிறது என ஆதாரம் காட்டினால் கூடுதலாகக் கேட்கப்படும் கடன் கிடைத்துவிடும். கணவன்-மனைவி அல்லது தந்தை-மகன் எனக் கூட்டாகச் சேர்ந்து கடன் வாங்கினால் விரைவாகத் தவணையைச் செலுத்த வேண்டும் என்றில்லை. கூட்டு வீட்டுக் கடனை தவணையாகச் செலுத்த 5 முதல் 25 ஆண்டுகள் வரை கால அவகாசம் கொடுப்பதற்கான வசதிகள் இருக்கின்றன.

வயது, பொருளாதார நிலைமை, வேலையிலிருந்து ஓய்வு பெறும் வருடம் என இதையும் கணக்கில் கொண்டு தவணையைச் செலுத்த கால அவகாசம் வழங்குவார்கள். 25 வயதில் கடன் வாங்கினால் அதிகபட்சமாக 30 ஆண்டுகள் வரை கூட கால அவகாசம் கிடைக்கும். ஆனால், 50 வயதில் கடன் வாங்கினால், அதை வேலையிலிருந்து ஓய்வு பெறுவதற்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். எனவே இந்தச் சூழ்நிலையில் செலுத்தும் மாதத் தவணை தொகை அதிகமாகிவிடும். 

ஆண்டு அதிகமாக இருந்தால் மாதத் தவணை குறைவாக இருக்கும். ஆண்டுகள் அதிகமாக இருக்கிறது என்பதற்காக சாவகாசமாகத் தவணையைச் செலுத்த நினைக்கக் கூடாது. தவணைத் தொகை குறைவாக இருந்தாலும் வட்டி விகிதம் அதிகமாக இருக்கும். இதில் மொத்தமாகச் செலுத்தும் தவணைத் தொகையைச் சேர்த்துப் பார்த்தால் அதிகத் தொகை கட்ட வேண்டிய நிலை வந்துவிடும். அதனால் தேவையில்லாமல் நீண்ட காலத் தவணையைத் தேர்வு செய்யாமல், பொருளாதார நிலைமைக்கு ஏற்ப முடிவு எடுப்பது நல்லது.


குளிர்காலத்தில் தினமும் பேரிட்சை பழம் அவசியம் சாப்பிடுங்கள்..! ஆயுசுக்கு உத்தரவாதம்

 

குளிர்காலத்தில் தினமும் பேரிட்சை பழம் அவசியம் சாப்பிடுங்கள்..! ஆயுசுக்கு உத்தரவாதம்

Health Benefits Of Dates; குளிர்காலத்தில் மார்க்கெட்டில் பேரிச்சம்பழத்தின் தேவை திடீரென அதிகரித்துள்ளது. உண்மையில், பேரீச்சம்பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள் காரணமாக இதனை உட்கொள்ளுமாறு நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். பேரிச்சம்பழம் நம் உடலை சூடாக வைப்பதற்கு மட்டுமல்லாமல், இவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம், பல வகையான நோய்களுக்கும் நிவாரணியாக அமைகின்றன. 

பேரிச்சம்பழம் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்களின் பொக்கிஷம் என்று கூறப்படுகிறது. இது பல பருவகால நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. குளிர் காலத்தில் பேரிச்சம்பழம் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நன்மை பயக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

குளிர்காலத்தில் இனிப்புகளுக்கு கிராக்கி மிகவும் அதிகமாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில் நீரிழிவு நோய் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. அதனால்தான் பேரீச்சம்பழத்தை தினமும் உட்கொள்ள வேண்டும். இருப்பினும், இனிப்பு இருந்தாலும், பேரீச்சம்பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில் இது மிகக் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. 

ரத்த இழப்பு நீங்கும்

இரத்த சோகை பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக பேரீச்சம்பழம் சாப்பிட வேண்டும். ஏனெனில் இரத்த சோகையை பேரிச்சம்பழத்தின் உதவியுடன் அகற்றலாம். இது தவிர, பேரீச்சம்பழத்தில் உள்ள இரும்பு, நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துக்கள் உடலில் உள்ள இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு உதவுகின்றன.

எலும்புகளை வலுவாக வைத்திருக்கும்

குளிர்காலத்தில் தசை மற்றும் எலும்பு பிரச்சனைகள் தொடங்கும்.  இத்தகைய பாதிப்பு உள்ளவர்கள் பேரீச்சம்பழம் சாப்பிட வேண்டும். ஏனெனில் பேரீச்சம்பழத்தில் கால்சியம் மற்றும் பொட்டாசியம், பாஸ்பரஸ், தாமிரம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது தவிர, மூட்டுவலி நோயாளிகளும் குளிர்காலத்தில் தினமும் குறைந்தது இரண்டு பேரீச்சம்பழங்களை சாப்பிட வேண்டும்.

சளி மற்றும் காய்ச்சலுக்கு நிவாரணம்

குளிர்காலத்தில் குளிர் அறிகுறிகளை நீக்குவதற்கு பேரிச்சம்பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் உள்ள சத்துக்களால் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறுவதால் சளி, இருமல் போன்றவை தவிர்க்கப்படும்.

மலச்சிக்கலுக்கு நிவாரணம்

குளிர்காலத்தில் மலச்சிக்கல் பிரச்சனையால் மக்கள் அடிக்கடி சிரமப்படுகின்றனர். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பேரீச்சம்பழங்களை உட்கொள்ளலாம். இது உங்களுக்கு பாதிப்பில் இருந்து நிவாரணம் தரும். இரவில் தூங்கும் முன் சில பேரீச்சம்பழங்களை தண்ணீரில் ஊறவைத்து காலையில் சாப்பிடுங்கள். இது உங்கள் மெட்டபாலிசம் சரியாக வேலை செய்யும்.

உயர் இரத்த அழுத்தம்

குளிர்காலத்தில் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க விரும்பினால், தினமும் பேரீச்சம்பழம் சாப்பிட வேண்டும். இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

பக்கவாதத்தை முன்கூட்டியே உணர்த்தக்கூடிய முக்கியமான அறிகுறிகள்!

 பக்கவாதம் என்பது எப்போது ஏற்படும் என்பதை நம்மால் அதை அவ்வளவு எளிதில் கணித்துவிட முடியாது.  பக்கவாதம் என்பது கொடுமையான விஷயமாக கருதப்படுகிறது, இந்த பாதிப்பு ஏற்பட்டுவிட்டால் நம்மால் தனித்து செயல்பட முடியாது.  மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் தடைகள் ஏற்படுவதால், மூளையின் இயக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டு நமது உடலிலுள்ள செல்கள் பாதிப்படைந்து பக்கவாதம் ஏற்படுகிறது.  மூளையின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படுவதால் நமது உடல் செல்களுக்கு ஆக்சிஜன் செல்வதில் பாதிப்பு ஏற்படுகிறது.  முகம் ஒருபக்கமாக வளைதல் அல்லது வாய் பேச முடியாத நிலை ஏற்படுதல் போன்றவை பக்கவாதத்தின் பொதுவான வெளிப்பாடாக இருந்து வருகிறது.  பெரும்பாலும் கை அல்லது கால் பகுதியில் தான் பக்கவாதம் ஏற்படுகிறது.


பக்கவாதம் திடீரென்று ஏற்படுகிறது தான் என்றாலும் பக்கவாதம் ஏற்படுவதற்கு ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு முன்னர் சில அறிகுறிகளை நமது உடல் வெளிப்படுத்துகின்றது.  தீவிர பக்கவாதம் ஏற்படுவதற்கு பல நாட்களுக்கு முன்பு சில அறிகுறிகள் வெளிப்படுகிறது.  பக்கவாத நோயாளிகளில் 43 சதவீதம் பேர் பக்கவாதம் ஏற்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு வரை மினி-ஸ்ட்ரோக் அறிகுறிகளை அனுபவித்ததாக ஆராய்ச்சியின் அறிக்கைகள் தெரிவிக்கிறது.  இந்த வகையைச் சேர்ந்த பொதுவான அறிகுறிகளில் ஒன்று உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

சிலருக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கு பல நாட்களுக்கு முன்பு தலைவலி , உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு போன்ற அறிகுறிகளை அனுபவிப்பார்கள்.  உங்களின் ஒரு கை அல்லது காலில் உணர்வின்மை அல்லது வலி போன்றவை ஏற்படும், மூளையின் செயல்பாட்டில் குறைபாடு ஏற்படுவதால் தான் இதுபோன்ற நிலை உங்களுக்கு ஏற்படுகிறது.  சிலருக்கு உடலின் பெரும்பகுதி பலவீனமாக இருக்கும்.  உங்கள் கைகளில் ஒன்றில் பலவீனம் என்பது ஒரு தொடர்ச்சியான பக்கவாதத்தின் அறிகுறியாகக் கருதப்படுகிறது.  இந்த அறிகுறிகளை முன்னரே நீங்கள் கவனிப்பதன் மூலம் பெரியளவில் ஆபத்துக்கள் எதுவும் நடக்காமல் அதிலிருந்து தப்பித்து விடலாம் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

January 21, 2023

L&T Infotech நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

 

L&T Infotech நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

Larsen & Toubro Infotech Ltd ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Embedded Software Engineer பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

L&T பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Embedded Software Engineer பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Embedded Software Engineer கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய பாட பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

L&T ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Embedded Software Engineer தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Skill Test அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ICICI Prudential Life Insurance நிறுவனத்தில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்பு – ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்பு!!

 

ICICI Prudential Life Insurance நிறுவனத்தில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்பு – ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்பு!!

ICICI Prudential Life Insurance நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Sr. Manager- I Strategic Alliances and Innovation,Chief Manager E-Commerce பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ICICI Prudential Life Insurance காலிப்பணியிடங்கள் :

ICICI Prudential Life Insurance நிறுவனத்தில் தற்போது வெளியான அறிவிப்பில் Sr. Manager- I Strategic Alliances and Innovation,Chief Manager E-Commerce பணிகளுக்கென பல்வேறு காலிப் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

ICICI Prudential Life Insurance கல்வி தகுதிகள் :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பணி சார்ந்த ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ICICI Prudential Life Insurance அனுபவ விவரம் :

இப்பணிகளுக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 03 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ICICI Prudential Life Insurance திறன்கள் :
  • Good communication and planning skills
  • Good understanding of core business processes
  • Proven influencing and collaboration skills
  • Good execution skills to be able to deliver the overall digital partner strategy
ICICI Prudential Life Insurance தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது .கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூரவ அறிவிப்பை பார்வையிடவும்.

ICICI Prudential Life Insurance விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification 1 & Apply Online Link



Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

தமிழகத்தில் 28ம் தேதி மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – கலந்து கொள்ள முழு விவரங்கள் இதோ!!

 

தமிழகத்தில் 28ம் தேதி மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – கலந்து கொள்ள முழு விவரங்கள் இதோ!!

தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்கள் மூலமாக வேலைவாய்ப்பு கிடைத்திட வழிவகை செய்யப்படுகிறது. அந்த வகையில் வருகிற 28ம் தேதி அன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் இம்மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்கான முழு விபரம் குறித்து பார்ப்போம்.

வேலைவாய்ப்பு முகாம்

தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியில் வேலைவாய்ப்பை உருவாக்க தற்போது வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பல்லாயிரக்கணக்கானோருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற 28ம் தேதி அன்று அருப்புக்கோட்டையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மேலும் இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் அருப்புக்கோட்டையில் உள்ள எஸ்.பி.கே. கல்லூரியில் வருகிற 28ம் தேதி அன்று 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் இணைந்து நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு நடைபெற உள்ளது. இதில் 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐடிஐ , டிப்ளமோ ஆகிய படிப்பை முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.

இந்த தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வேலைவாய்ப்பு அடையாள அட்டை, கல்விச்சான்றுகளின் நகல் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றை உடன் எடுத்து வர வேண்டும். இம்முகாமில் 28ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள்  www.vnrjobfair.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news


எல்.ஐ.சி மாபெரும் வேலைவாய்ப்பு: மாதம் ரூ.50,000 வரை சம்பளம்... 1,516 அப்ரண்டிஸ் வளர்ச்சி அதிகாரி காலியிடங்கள்!

 Recruitment of Apprentice Development Officer 22-23:  ஆயுன் காப்பீட்டுத் துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான  லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, அதன்  அலுவலகங்களில் அப்ரண்டிஸ் வளர்ச்சி அதிகாரி (Apprentice Development Officer) பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளது. வணிக சந்தைப் பற்றிய புரிதலும், நல்ல தகவல் தொடர்புத் திறனும்  கொண்ட திறமையுள்ள இளம் பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் கூறியுள்ளது.

காலியிடங்கள்: எல்.ஐ.சி தென்மண்டலத்தில் மட்டும் தோராயமாக 1516 அப்ரண்டிஸ் வளர்ச்சி அதிகாரிகளின் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்வு மற்றும் நியமனங்களில், அரசின்  இட ஒதுக்கீட்டு முறை  உட்பட்ட அரசின் விதிகளின்படி இருக்கும்.

அடிப்படைத்  தகுதிகள்: விண்ணப்பதாரர் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டதாரி அல்லது மும்பையில் உள்ள இன்சூரன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் ஃபெலோஷிப் (Felowship) தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆன்லைன் தேர்வுகள் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு நடைபெறும். முதல்நிலைத் தேர்வு 12.03.3023, முதன்மைத் தேர்வுகள் 08.04.2023 ஆகிய தேதியில் நடைபெறும்.   

ஊதியங்கள் மற்றும் பயன்கள்:  பயிற்சிக் காலத்தில், அப்ரண்டிஸ் வளர்ச்சி அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரருக்கு ஒரு நிலையான உதவித் தொகையாக (Stipend) மாதத்திற்கு சுமார் ரூ.51,500/- வழங்கப்படும்.

அதன் பின், வளர்ச்சி அதிகாரியாக பதவி பெற்றவுடன்   (Probationary Development: Officer),  நிலையான சம்பளம் மற்றும் படிகளுடன்,  கிராஜூவிடி (Gratuity), வரையறுக்கப்பட்ட பங்களிப்பு கொண்ட ஓய்வூதியம், (Defined Contiributory Pension Scheme), விடுப்பு பயண சலுகை (LTC), மருத்துவச் சலுகை, குழுக்காப்பீடு (Group Insurance)மற்றும் குழுவின் தனிநபர் விபத்துக் காப்பீடு, வாகனம் வாங்குவதற்கான முன் பணம் (2 வீலர் மற்றும் 4 வீலர்)ஆகிய பயன்கள் உண்டு. மேலும் கைப்பெட்டி/லெதர் பேக், கைப்பேசி (Mobile Handset) போன்றவை வாங்கிய பின் அத்தொகையினை திரும்பப் பெறும் வசதிகளும் உண்டு.

வளர்ச்சி அதிகாரியாக (Development Officer) 'பணி நிரந்தரம் பெற்ற பின், செயல்திறனுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைக்கும் (Performance Linked Incentives) தகுதி பெறலாம்.

விண்ணப்பம் செய்வது எப்படி? எல்ஐசி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான  https://licindia.in/-யில் ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.  விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 10.02.2023 ஆகும்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

இந்திய ரயில்வே துறையில் 7914 காலியிடங்கள் அறிவிப்பு: எழுத்து தேர்வு, நேர்காணல் எதுவுமில்லை

 Indian railway Apprentice Recruitment : இந்திய ரயில்வே தொழிற்பழகுனர் சட்டத்துக்கு உட்பட்டு 1963 (Apprentice Act) முதல் குறிப்பிட்ட பிரிவுகளில் விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது.

அந்த வகையில், வெல்டர், பெயிண்டர், எலக்ட்ரீஷியன், ஃபிட்டர், உள்ளிட்ட பல்வேறு வர்த்தக பிரிவுகளில் தொழில் பழகுநருக்கான அறிவிப்பை தென் கிழக்கு ரயில்வே வாரியம் (South Eastern Railway) வெளியிட்டுள்ளது. இதன் மூலம் , 2026 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பணிக்கு எந்தவொரு மாநிலத்தையும் பிறப்பிடமாக கொண்டவர்களும், இந்தியர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும். கடைசி தேதி 02-02-2023 ஆகும்.

அதே போன்று, ஏசி மெக்கானிக், கார்பன்டர், எலக்ட்ரிசியன், பிட்டர், பெயிண்டர், வெல்டர் பல்வேறு வர்த்தக பிரிவுகளில் தொழில் பழகுநருக்கான அறிவிப்பை தெற்கு மத்திய ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் 4103 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், தெற்கு மத்திய ரயில்வே மணடலத்தின் கீழ் வரும், வேலூர் மாவட்ட விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும். கடைசி தேதி 29.01.2023 ஆகும்.

ஜெய்ப்பூரை தலைமையாகக் கொண்டு இயங்கி வரும், வடமேற்கு ரயில்வே மண்டலம், மெக்கானிக்கல், வெல்டர் உள்ளிட்ட பல்வேறு தொழிற்பிரிவுகளில் தொழிற் பழகுநருக்கான அறிவிப்பை வெளியிட்டது. இதன்மூலம், 2026 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும். கடைசி தேதி 10.02.2023 ஆகும்.

மேற்கூறிய பதவிகளுக்கு, விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் எந்தவித போட்டி அல்லது தேர்வு இன்றி பழகுனர்களாக எடுத்துக் கொள்ளப்படுகின்றனர்.

10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ கல்வியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் உத்தேச இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். எழுத்து, வாய்மொழி போன்ற எந்தவித தேர்வும் நடத்தப்படாது. மேலும், தொழிற்பழகுனர் சட்டத்தின் கீழ் , விண்ணப்பத்தாரருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

முதல் நிலை காலியிடங்களில் ( Level – 1 recruitment) 20 சதவீத இடங்களை அப்ரெண்டிஸ்களுக்காக இந்திய ரயில்வே ஒதுக்கீடு செய்து வருகிறது. எனவே, ஆர்வமுள்ள தேர்வர்கள் இதற்கு விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

வேலைக்கு செல்லும் பெண்களா நீங்கள்... ரூ.200-ல் அரசு தங்கும் விடுதி! - அரசின் அசத்தல் திட்டம் பற்றி தெரியுமா?

 Working Women Hostels: பெண்களை வேலைக்கு செல்ல ஊக்குவிக்கவும்,  பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யவும் மத்திய/மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களில் செயல்படுத்தி வருகிறது. அதில், பணிபுரியும் மகளிருக்கான அரசு விடுதிகள் திட்டம்  மிக முக்கியமானதாக உள்ளது.

பணிபுரியும் மகளிருக்கான அரசு விடுதிகள் திட்டம் (scheme for working women hostel): 

கடந்த 1975ம் ஆண்டு முதல் , மத்திய/மாநில அரசு நிதியுதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது. குடும்பத்தை விட்டு வெளியூரில் பணிபுரியும் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பெறும் மகளிருக்கு உணவுடன் பாதுகாப்பான தங்கும் வசதி அமைத்துக் கொடுப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

இந்த திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில்  பணிபுரியும் பெண்களுக்கு 28 அரசு விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள்:  மாத வருமானம் சென்னையில், ரூ.25,000/-த்திற்குள்ளும், இதர மாவட்டங்களில் ரூ.15,000/-த்திற்குள்ளும் இருத்தல் வேண்டும்.

தங்கி பயன்பெறும் கால அளவு:  மூன்றாண்டுகள் விடுதியில் தங்கலாம்.   மூன்றாண்டுகளுக்கு மேல், பயனாளியின் தேவை , தங்கிப் பயிலும் காலத்தில் நடந்துகொண்ட விதம் ஆகியவற்றின் அடிப்படையில் காப்பாளரின் பரிந்துரையின்பேரில் நீட்டிக்கப்படும்.

மாத வாடகை:  சென்னையில் மாதமொன்றுக்கு  வாடகையாக ரூ.300/ செலுத்த வேண்டும்.  இதர மாவட்டங்களில் ரூ.200/-ம் செலுத்த வேண்டும். உணவு மற்றும் மின் கட்டணம் பகிர்ந்து  கொள்ள வேண்டும். 

எங்குள்ளது:  சென்னையில் 7 அரசு விடுதிகளும், காஞ்சிபுரத்தில் 3 அரசு விடுதிகளும்,  திருச்சியில் 2 விடுதிகளும்  உள்ளன. கோவை, சிவகங்கை, தூத்துக்குடி, கடலூர், தஞ்சாவூர், திருப்பூர், திருவள்ளூர், விழுப்புரம், வேலூர், திருநெல்வேலி, சேலம், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் தலா ஒரு விடுதிகள் உள்ளன.

சமீபத்திய புள்ளிவிவரங்களின் படி, தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 1415 பேர் தங்குவதற்கு  வசதி  செய்யப்பட்டுள்ளது. ஆனால், 348 அறைகளில் பெண்கள் தங்கியுள்ளனர். 1067 அறைகள் காலியாக உள்ளன (செயலாக்கத் திட்டம் - சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை - 2022-2023).

எனவே, சென்னைபோன்ற பெரு நகரங்களில் குறைவான சம்பளத்தில் பணிபுரியும் பெண்கள், இந்த விடுதியை பயன்படுத்திக் கொள்ளலாம். வாடையாக மாதம் வெறும் ரூ.300 செலுத்தி, உங்கள் சம்பள பணத்தை சேமித்துக் கொள்ளலாம். விடுதியின் முகவரியை, அந்தந்த மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ரேஷன் கடை வேலைவாய்ப்பு : தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?

 தமிழ்நாடு முழுவதும் நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர்கள் (salesman) மற்றும் கட்டுநர் (Packer) பதவிகளுக்கான நியமன முடிவுகள் இதுவரை வெளியடப்படாத காரணத்தினால், தேர்வர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதம், கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள    விற்பனையாளர்கள் (salesman) மற்றும் கட்டுநர் (Packer) பதவிகளுக்கான அறிவிப்பை அந்தந்த மாவட்ட கூட்டுறவுத் துறை ஆட்சேர்ப்பு நிலையங்கள் வெளியிட்டன. இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பின் மூலம், மாநிலம் முழுவதும் 4000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டன. எவ்வித எழுத்துத் தேர்வும் இல்லாமல், வெறும் நேர்காணலை மட்டும் நடத்தி ஆட்களைத் தேர்வு செய்யப்படும் என்பதால், லட்சக்கணக்கான பேர் இதற்கு விண்ணப்பித்து இருந்தனர் .

இதற்கான, நேர்காணல் தேர்வு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகத்தில்  டிசம்பர் 15 முதல் 30-ம் தேதி வரை  நடைபெற்றது.  நேர்முகத் தேர்வில் முதலில் சான்றிதழ் சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டது. இதில், விண்ணப்பதாரரின் அசல் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. மேலும், சான்றிதழ் சரிபார்ப்புக் குழு, தேர்வர்களின் அசல் சான்றிதழ்களின் இரண்டு நகல்கள் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை வாங்கி வைத்துக் கொண்டனர். பின்னர், அன்று மாலையே நேர்காணல் தேர்வு நடத்தப்பட்டது. ஓவ்வொரு மையத்திலும், கிட்டத்தட்ட 15 -20 நேர்காணல் அறைகள் அமைக்கப்பட்டு, முன்னாள்/இன்னாள் கூட்டுறவுச் சங்கத்தைச் சேர்ந்த பணியாளர்கள் தேர்வை நடத்தினர்.

பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே தேர்வு முடிவுகள் வெளியிடப்படம்  என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  இதுநாள் வரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட வில்லை. இதற்கிடையே, கிராம உதவியாளர் பதவிக்கான தேர்வு முடிவுகளை அந்தந்த மாவட்ட வாட்டாச்சியர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

தேர்வர்கள் ஐயம்: 

கிராம உதவியாளர் பதவியைப் பொறுத்த வரையில், அறிவுப்பு நிலை முதல் இறுதி நியமனம் வரை, அந்தந்த மாவட்ட வட்டாச்சியர்கள்  மாவட்ட ஆட்சியரிடம் ஒப்புதல் பெற்று மேற்கொண்டனர். வரப்பெற்ற விண்ணப்பங்கள், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள், விண்ணப்பங்கள் நிராகரிப்பு செய்யப்பட்டதற்கான காரணங்கள்  அனைத்தும் மாவட்ட ஆட்சியர் இணையதளங்களில் வெளியிடப்பட்டன.

ஆனால், நியாய விலைக் கடைகளில் இத்தகைய வெளிப்படைத் தன்மை இல்லை என்று தேர்வர்கள் கருதுகின்றனர். உதாரணமாக, நேர்முகத்  தேர்வில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் பெயர் பட்டியலை இதுநாள் வரை இணைய தளத்தில் வெளியிடப்படவில்லை. இத்தகைய, பட்டியல் வெளியிடப்படும் என்று கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் வெளியிட்ட வழிக்காட்டுதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

DHS தர்மபுரி மாவட்ட சுகாதார சங்கத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பியுங்கள்!!

 

DHS தர்மபுரி மாவட்ட சுகாதார சங்கத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பியுங்கள்!!

தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சுகாதார சங்கம் (DHS Dharmapuri) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் Staff Nurse & MLHP பணிகளுக்கு என 86 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க நாளை (27.01.2023) கடைசி நாள் என்பதால் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

DHS Dharmapuri காலிப்பணியிடங்கள்:

தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சுகாதார சங்கத்தில் (DHS Dharmapuri) சமீபத்தில் வெளியான அறிவிப்பின்படி Staff Nurse & MLHP பணிகளுக்கு என 86 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

DHS வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 50 ஆக இருக்க வேண்டும்.

DHS Dharmapuri கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் நர்சிங், DGNM ல் B.Sc முடித்திருக்க வேண்டும்.

DHS ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு நிறுவனத்தின் விதிமுறை படி மாதம் ஊதியமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

DHS Dharmapuri தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் Written Test / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

DHS விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ,தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (27.01.2023) அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification
Application Form PDF


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

முருங்கைக்காயில் இருக்கும் இந்த 7 நன்மைகளை பற்றி தெரியுமா..? மிஸ் பண்ணிடாதீங்க..!

 சாம்பார் , காரக்குழம்பு என ஏதோ ஒரு வகையில் முருங்கைக்காயை வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக்கொள்வோம். சீசனே இல்லை என்றாலும் முருங்கைக்காயை தேடி அலைந்து வாங்கி சாப்பிடும் அளவிற்கு ஃபேன் பேஸ் இங்கு உண்டு. இப்படி அதன் சுவையை அறிந்த நீங்கள் அதன் நன்மைகளையும் தெரிஞ்சுக்கிட்டா நல்லது. எனவே முருங்கைக்காயில் கிடைக்கும் 7 நன்மைகள் இதோ...

செரிமானத்தை மேம்படுத்துகிறது : உடலுக்கு தேவையான நியாசின், ரிபோஃப்ளேவின் மற்றும் வைட்டமின் பி12 போன்ற நுண்ணூட்டச்சத்துக்களை உள்ளடியக்கியதால் செரிமான மண்டலத்தை பாதுகாக்கிறது. குறிப்பாக குடல் இயக்கத்தை சீராக்கி வயிறு சம்மந்தமான பிரச்சனைகளிலிருந்து விடுவிக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் : நோய் எதிர்ப்பு சக்திக்கு சிறந்த ஆதாரம் முருங்கைக்காய். அந்த வகையில் இருமல், சளி போன்ற தொற்று பாதிப்புகளுக்கு முருங்கைக்காயை சாப்பிடுவது பக்கபலம். அதில் உள்ள விட்டமின் சி-யே உங்களுக்கு போதுமானது. அதுமட்டுமன்றி இதயம் தொடர்பான உயர் இரத்த அழுத்த பிரச்சனைகளுக்கும் முருங்கைக்காய் நல்லது.

இரத்தத்தை சுத்தப்படுத்தும் : ஆன்டி பயாடிக் ஏஜெண்டாக முருங்கைக்காய் செயல்படுவதால் இரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிற்து. இதனால் இரத்ததின் ஆக்சிஜன் அளவு மேம்படுகிறது. அதாவது இரத்தத்தில் தரத்தை மேம்படுத்த முருங்கைக்காய் உதவுகிறது.

எலும்புகளை பலப்படுத்தும் : முருங்கைக்காயில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து இருப்பது எலும்புகளுக்கு அதிக நன்மை சேர்க்கிறது. எனவே எலும்புகளுக்கு தேவையான ஊட்டச்சத்து முருங்கைக்காயில் இருப்பதால் வாரம் ஒருமுறையேனும் எடுத்துக்கொள்வது நல்லது. இதனால் எதிர்காலத்தில் வரும் எலும்பு பிரச்சனைகளையும் தவிர்க்காலாம்.

சுவாசநோய்களுடன் போராடுகிறது : முருங்கைக்காயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் சுவாசம் தொடர்பான பிரச்சனைகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. குறிப்பாக இந்தியாவில் நிலவும் அதிக காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படு நுரையீரலுக்கு முருங்கைக்காய் மிகவும் நல்லது. விட்டமின் சி-யும் இதில் இருப்பதால், தொற்று, ஒவ்வாமை தொடர்பான பிரச்சனைகளுக்கும் உதவும்.

இரத்த சர்க்கரை அளவை சீராக்குகிறது : இரத்த சர்க்கரை அளவை சீராக்கி அதை கட்டுக்குள் வைப்பதுதான் முருங்கைக்காயின் பிரதான நன்மை. அதில் உள்ள வைட்டமின் மற்றும் மினரல்கள் பித்தப்பையின் வேலையை மேம்படுத்துவதால் நீரிழிவு நோயாளிக்குக்கு நன்மைகளை அள்ளித்தருகிது.

சருமத்திற்கு நல்லது : முருங்கைக்காய் பூஞ்சை தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. நீங்கள் முருங்கை இலையை காய வைத்து அதை பொடியாக்கி முகத்தில் அப்ளை செய்தாலே முகப்பரு, வெயில் கருமை போன்றவை நீங்கும். அதோடு ஃபேஷியல் செய்த பொலிவு கிடைக்கும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

உஷார்..! இந்த 8 பழக்கங்கள்தான் உங்கள் சிறுநீரகத்திற்கு எதிரி...

 மனித உடலில் இருக்கும் உறுப்புகளில் மிக முக்கியமான ஒன்றாக இருக்கின்றன சிறுநீரகங்கள். உடலில் ஒட்டுமொத்த திரவ சமநிலைக்கு சிறுநீரகங்கள் பொறுப்பாக உள்ளன. அவை உடலில் உள்ள கழிவுப்பொருட்கள் மற்றும் நச்சுகளை வடிகட்டி சிறுநீராக வெளியேற்ற உதவுகின்றன. ரத்தத்தை சுத்தமாக வைத்திருக்கவும் உதவுகின்றன.

எனவே சிறுநீரகங்களின் ஆரோக்கியம் என்பது நம் நல்வாழ்வை உறுதி செய்ய கூடிய ஒன்று. தொடர்ந்து செய்யப்படும் சில சிறிய விஷயங்கள் கூட சிறுநீரகங்களை பாதிக்கும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. ஆம், சில தினசரி பழக்கவழக்கங்கள் சிறுநீரகத்திற்கு தீங்கு விளைவிக்கும். சிறுநீரகங்கள் சரியாக செயல்படவில்லை என்றால் உடல் ரத்தத்தை வடிகட்டும் மற்றும் உடலில் இருந்து கழிவுப்பொருட்களை அகற்றும் திறனில் பாதிப்புகள் ஏற்படும். நம் சிறுநீரகங்களை பாதிக்க கூடிய பொதுவான சில பழக்கங்கள் இங்கே...

உப்பு அதிகமாக சேர்த்து கொள்வது: உணவில் அதிக உப்பு சேர்த்து கொள்வது நம் சிறுநீரகங்களுக்கு தீங்கு விளைவிக்கும். அதிகப்படியான உப்பு ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும், இது சிறுநீரகங்களுக்கு தீங்கு விளைவிக்கும். மேலும் இப்பழக்கம் உடலில் அதிகப்படியான சோடியத்திற்கு வழிவகுக்கும். உடலில் குவியும் அதிக சோடியத்தை அகற்ற முடியாமல் சிறுநீரகங்கள் சிரமப்படும். இது சிறுநீரக ஆரோக்கியத்தில் எதிர்மறை விளைவை ஏற்படுத்தும். எனவே சோடியம் நிறைந்த உணவுகளை குறைத்து கொள்ள வேண்டும்.

அதிக சர்க்கரை : உப்பை போலவே உணவில் அதிக சர்க்கரை சேர்த்து கொள்வதும் சிறுநீரகங்களுக்கு தீமை விளைவிக்கும். அதிகப்படியான சர்க்கரை நுகர்வு உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கிறது. இதன் விளைவாக சிறுநீரக கோளாறுக்கான ஆபத்து விரைவாக அதிகரிக்கிறது.

உடலில் போதுமான நீர்சத்து இல்லாமல் வைத்திருப்பது : தினசரி பரிந்துரைக்கப்பட்ட அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது சிறுநீரக கோளாறுகளுக்கு வழிவகுக்கிறது. உடலை ஹைட்ரேட்டாக வைத்திருக்க தினசரி போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இப்பழக்கம் வளர்சிதை மாற்ற கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது மற்றும் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கிறது.

உடற்பயிற்சி செய்யாமலிருப்பது : நீண்ட நேரம் அமர்ந்தே இருக்கும் வாழ்க்கை முறை சிறுநீரக ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே சிறுநீரக ஆரோக்கியத்தை பராமரிக்க தினசரி உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

புகைபழக்கம்: புகைபழக்கம் சிறுநீரகங்களில் ரத்த ஓட்டத்தை குறைக்கிறது மற்றும் சிறுநீரக ரத்த நாளங்களை சுருக்குகிறது. புகைபிடித்தல் சிறுநீரகத் தமனிகளின் தடித்தல் மற்றும் கடினப்படுத்துதலுக்கும் காரணமாகிறது. ஆரோக்கியமான சிறுநீரகங்களை பெற விரும்பினால் புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும்.

அதிக மது நுகர்வு: ஆல்கஹால் சிறுநீரக செயல்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது மற்றும் ரத்தத்தை வடிகட்டும் திறனை குறைக்கிறது. அதிக ஆல்கஹால் நுகர்வு யூரிக் அமிலத்தின் உருவாக்கத்தை அதிகரித்து சிறுநீரகங்களை சேதப்படுத்தும்.

அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்து கொள்வது:
பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அடங்கி இருக்கும் சோடியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளிட்டவை சிறுநீரகங்களுக்கு தீங்கு விளைவிக்கும். சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பேக்கேஜ்டு உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதே போல சிறுநீரக நோய் இல்லாதவர்கள் அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது அவர்களின் சிறுநீரகம் மற்றும் எலும்புகளுக்கு தீங்கு விளைவிக்கும்.


பெயின் கில்லர்ஸ் & பாடி-பில்டிங் ஹெல்த் சப்ளிமென்ட்ஸ்:
நம்மில் பலர் உடல்வலி அல்லது தலைவலி என்றாலே உடனே வலி நிவாரணிகளை எடுத்து கொள்கிறோம். மருத்துவர்களின் பரிந்துரை இன்றி அடிக்கடி எடுத்து கொள்ளும் பெயின் கில்லர் மாத்திரைகள் நம்முடைய சிறுநீரகங்களை வெகுவாக பாதிக்கும் மேலும் நீண்டகால சிறுநீரக பிரச்சனைகளை ஏற்படுத்தும். மருத்துவரிடம் கலந்தாலோசிக்காமல் ஊட்டச்சத்து அல்லது பாடி-பில்டிங் ஹெல்த் சப்ளிமெண்ட்ஸ் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

January 19, 2023

சூரிய ஒளியில் இத்தனை நன்மைகள் கிடைக்கிறதா..? இனியும் ஓடி மறையாதீங்க..!

 பூமியில் உள்ள உயிர்களின் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதில் சூரிய ஒளி முக்கிய பங்கு வகிக்கிறது என்பது பற்றி நம் எல்லோருக்கும் தெரியும். அதுமட்டுமல்லாது, மனிதர்களின் ஆரோக்கிய தன்மைக்கும் சூரிய ஒளி பெரிதும் உதவுகிறது. இருப்பினும், சூரியனில் இருந்து வரும் அதிகப்படியான புற ஊதா கதிர்வீச்சு தோல் புற்றுநோயை ஏற்படுத்தும். ஆனால், சூரிய ஒளியில் குறிப்பிட்ட அளவு நேரத்தை செலவிடுவது நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், மக்கள் அதிக சூரிய ஒளியில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வது மிகவும் அவசியமானது போலவே, சூரிய ஒளியின் ஆரோக்கிய நன்மைகளைப் பெறுவதற்கும் போதுமான அளவு அதில் நேரத்தை செலவிட வேண்டும். உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த போதுமான அளவு வைட்டமின் டி அளவை பெற வேண்டும். சூரிய ஒளியின் முக்கிய பயன்களை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வைட்டமின் டி அளவு : வைட்டமின் டி உடலில் பல முக்கிய செயல்பாடுகளை செய்கிறது. இது உடலின் வீக்கத்தைக் குறைக்கிறது மற்றும் செல் பெருக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது. இதை மாத்திரைகள் போன்று தனியாக சாப்பிடுவதால் போதுமான அளவு கிடைப்பது கடினம் என்றாலும், சூரியனிடம் இருந்து வைட்டமின் டி இயற்கையாக கிடைக்கிறது. மேலும் இதன் பலன்களைப் பெற வாரத்திற்கு சில முறை 5-15 நிமிடங்கள் சூரிய ஒளியை நேரடியாக நேரத்தை செலவிடுங்கள். 15 நிமிடங்களுக்கு மேல் வெளியே இருக்கப் போகிறீர்கள் என்றால் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

நோய் எதிர்ப்பு சக்தி : உங்கள் நோயெதிர்ப்பு அமைப்புக்கு வைட்டமின் டி முக்கியமானது, மேலும் சூரிய ஒளியை தொடர்ந்து பெறுவதால் வைட்டமின் டி-யை அதிகரிக்க முடியும். ஒரு வலுவான நோயெதிர்ப்பு அமைப்பை பெறவும், அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்படும் சிக்கல்களின் அபாயத்தைக் குறைக்கவும் வைட்டமின் டி பெரிதும் உதவும்.

எலும்புகளின் வலிமைக்கு : சூரிய ஒளியில் நாம் இருக்கும் போது, நம் உடல்கள் வைட்டமின் டி-ஐ உற்பத்தி செய்கிறது. ஒவ்வொரு நாளும் சுமார் 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் இருந்தாலே போதுமானது. மேலும், வைட்டமின் டி உங்கள் உடலில் கால்சியத்தை பராமரிக்க உதவுகிறது. மேலும் உடையக்கூடிய, மெல்லிய அல்லது சிதைந்த எலும்புகளின் பாதிப்புகளில் இருந்து தடுக்கிறது. சூரிய ஒளியில் சிறிது நேரத்தை செலவிடுவது மருத்துவர்கள் பரிந்துரைக்கும் முக்கிய வழியாகும்.

மனச்சோர்வு : மனசோர்வு எல்லோருக்கும் இருக்க கூடிய பாதிப்பாகும். ஆனால், இந்த பாதிப்பில் இருந்து வெளியேற சூரிய ஒளி உதவுகிறது. இது உங்களை நன்றாக உணர வைக்கிறது என்பதற்கான அறிவியல் ஆதாரம் உள்ளது. சூரிய ஒளி உங்கள் உடலில் செரோடோனின் அளவை உயர்த்துகிறது, மேலும் இது உங்கள் மனநிலையை மேம்படுத்தும் ஹார்மோன் உற்பத்திக்கும் வழிவகுக்கிறது. உங்களை நிதானமாகவும், அமைதியாகவும் இருக்க சூரிய ஒளி உதவுகிறது.

உடல் எடை குறைப்பு : 2014 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி, எடை குறைப்பு என்பது காலை 8 மணி முதல் மதியம் வரை  30 நிமிடங்கள் உடலில் சூரிய ஒளி படுவதால் உடல் எடை குறைக்க பெரிதும் உதவும் என கண்டறிந்துள்ளனர். மேலும், அதிகாலை சூரிய ஒளிக்கும் எடை குறைப்புக்கும் இடையே தொடர்பு இருப்பதாக ஆய்வு செய்துள்ளனர். இதுவும் எடை குறைப்பில் நல்ல விளைவுகளை தருகிறது.

நீண்ட ஆயுள் : ஜர்னல் ஆஃப் இன்டர்னல் மெடிசினில் வெளியிடப்பட்ட 30,000 ஸ்வீடிஷ் பெண்களிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், சூரிய ஒளியில் அதிக நேரம் செலவழித்தவர்கள், குறைவான அளவு சூரிய ஒளியில் இருந்தவர்களை விட 6 மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை அதிகமாக வாழ்ந்ததாகக் கண்டறிந்துள்ளது. இது பலருக்கும் சூரிய ஒளியின் முக்கியவத்துவதை உணர்ந்த கூடும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

பிப்ரவரி மாதத்தில் டூர் ப்ளான் இருக்கா..? கோவா முதல் தாஜ்மஹால் வரை.. பட்ஜெட்டில் விசிட் அடிக்கலாம்

 சுற்றுலா என்பது ஒவ்வொருவருக்கும் மன நிம்மதியைக் கொடுக்கும் சுவாரஸ்சியமான அனுபவம். எத்தகைய பணிச்சுமைகள் மற்றும் மனஉளைச்சல்கள் இருந்தாலும் இயற்கையோடு நாம் பயணிக்கும் போது அத்தனையும் மறந்து சிறு குழந்தையாய் சுற்றித் திரிவோம். இந்த மனநிலையோடும், குறைந்த செலவிலும் அடுத்த மாதம் சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தால் இதோ இந்த இடங்களை நீங்கள் பார்த்து ரசிக்கலாம். இதோ எந்தெந்த இடங்கள் என இங்கே அறிந்துக் கொள்வோம் வாருங்கள்.

கோவா : இந்தியாவின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள சிறிய மாநிலம் தான் கோவா. இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்றாக உள்ள இங்கு பிப்ரவரி மாதத்தில் செல்லும் போது அதிக செலவாகாது. சீசன் இல்லாததால் மலிவான விலையில் விமானங்கள், தங்குமிடம் மற்றும் சாப்பாடு அனைத்தும் விலை மலிவானதாக இருக்கும். எப்போதும் போல பீச்சில் ஆட்டம் போட்டு விட்டு கோவாவின் அழகை ரசிக்கலாம்.இது மட்டுமின்றி இந்தியாவின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றான கோவா திருவிழாவும் பிப்ரவரியில் தான் நடைபெறும். பிப்ரவரி 18- 21 முதல் நடைபெறும் இந்த விழாவில் ஏராளமானோர் விதவிதமான வேடம் அணிந்து ஊர்வலமாக வருவார்கள். நல்ல கொண்டாட்டங்களுடன் பார்ப்பதற்கு வேடிக்கையாகவும் இருக்கும்.

ஷில்லாங், மேகாலயா :
 கடல் மட்டத்திலிருந்து 1525 மீட்டர் உயரத்தில் உள்ள நகரம் தான் வடகிழக்கு இந்தியாவில் உள்ள ஷில்லாங். மலைகள் என்றாலே எப்போதும் கண்களுக்கு விருந்தாகவே இருக்கும். ஆனால் இங்குள்ள முக்கிய சிறப்பு என்பது உம்ங்கோட் நதி எனப்படும் டாவ்கி நதி. உலகின் தூய்மையான நதிகளில் ஒன்றாக இது உள்ளது. வருடத்தில் எந்த நேரத்திலும் இந்த நதி மிகவும் தூய்மையாகவே தெரியும். இருந்தப்போதும் பிப்ரவரி மாதம் சிறந்த நேரமாக கருதப்படுகிறது. நதியின் கீழே உள்ள கற்பாறைகள், பாசிகள் என அனைத்தும் கண்ணாடி போல நமது கண்களுக்குக் காட்சியளிக்கும்.

ஜோத்பூர், ராஜஸ்தான் : ராஜஸ்தான் என்றாலே பாலைவனம் மற்றும் கோட்டைகள் தான் நமது கண்களுக்கு முதலில் தெரியவரும். இதன் அழகை முழுமையாக ரசிக்க வேண்டும் என்றால் அதிக குளிருக்கும், அதிக வெயிலுக்கும் இடைப்பட்ட நேரத்தில் உள்ள பிப்ரவரி மாதம். லேசான வெப்பநிலையோடு ராஜஸ்தானின் முழு அழகையும் ரசிக்கலாம்.

மும்பை, மகாராஷ்டிரா : இந்தியாவின் நுழைவு வாயிலான மும்பையில் பல்வேறு சுற்றுலா தளங்கள் உள்ளது. மற்ற மாதங்களைப் போல் இல்லாமல் பிப்ரவரி மாதத்தில் நீங்கள் செல்லும் போது அங்கு வருடாந்திர கலா கோடா திருவிழா என்பது பிப்ரவரி 4- 12 வரை நடைபெறும். இதோடு யுனெஸ்கோவின் உலக பாரம்பரியமிக்க யானை குகைககளில் பிப்ரவரி 13- 15 ஆகிய தேதிகளில் யானைத் திருவிழா நடைபெறும். இது சுற்றுலா பயணிகளுக்கு வியப்பை ஏற்படுத்தும்.

சூரஜ்குண்ட், ஹரியானா : இந்தியாவின் வளமான மற்றும் நாட்டுப்புற மற்றும் கலாச்சார பராம்பரியத்தை அனுபவிக்க சிறந்த இடங்களில் ஒன்றாக உள்ளது ஹரியானாவில் உள்ள சூரஜ்குண்ட். இதோடு இங்கு ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4 முதல் 20 வரை நடைபெறும் வருடாந்திர கைவினை கண்காட்சி மிகவும் சிறப்பாக நடைபெறும்.

ஆக்ரா, உத்தர பிரதேசம் : காதலர்களின் நினைவு சின்னமாக கருதப்படும் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் சுற்றுலா செல்வதற்கு சிறந்த இடம். பளிங்கு கற்களால் ஆன கோட்டையை வியந்துப்பார்க்கும் வகையில் அமைந்திருக்கும். இதோடு பிப்ரவரி மாதத்தில் 18- 27 ஆம் தேதி வரை இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக தாஜ் மஹாத்சவ் விழா கொண்டாடப்படுகிறது.

அந்தமான் நிக்கோபார் தீவுகள் : கடலுக்கு நடுவில் உள்ள தீவுகள் என்றாலே பார்ப்பதற்கு வியப்பாக இருக்கும். அதிலும் மிகவும் புகழ்பெற்றது அந்தமான் நிகோபார் தீவுகள் என்றே கூறலாம். இங்கு பிப்ரவரி மாதத்தில் வானிலை மிகவும் அழகாக இருப்பதால் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும்.

கூர்க், கர்நாடகா : கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்று தான் கூர்க். மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த இடங்கள் பிப்ரவரி மாதத்தில் கண்கவர் காட்சியாக இருக்கும். இங்குள்ள இயற்கையின் அழகு, மரங்கள்,விலங்குகள் அனைத்தும் இந்த நேரத்தில் உயிர்ப்புடன் நமது கண்களுக்கு காட்சியளிக்கும்.

நாசிக், மகாராஷ்டிரா : மாகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக்கில் உள்ள புகழ் பெற்ற சூலா திராட்சைத் தோட்டம் சுற்றுலா செல்வதற்கு ஏற்ற இடம். நேரடியாக திராட்சைத் தோட்டத்திற்கு விசிட் செய்து உங்களுக்குப் பிடித்த பழங்களை நீங்கள் ருசித்துப் பார்க்கலாம். பார்ப்பதற்கும் இந்த இடங்கள் கண்களைக் கொள்ளைக் கொள்ளும் அளவிற்கு இருக்கும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip