July 19, 2024

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ரூ.600 நிதி உதவி: உடனே அப்ளை பண்ணுங்க!

 
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளிடமிருந்து உதவித்தொகை பெற விண்ணபிக்கலாம்.

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் 01.07.2024 அன்று தொடங்கும் காலாண்டிற்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் தற்பொழுது பெறப்படுகின்றன.


கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு (தோல்வி). பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கும் மேலான கல்வித்தகுதிகளை பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து 30.06.2024 அன்றைய தேதியில் ஐந்தாண்டுகள் நிறைவடைந்த பின்னர், வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓர் ஆண்டு நிறைவடைந்த பின்னர் வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கும், தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது.


பயனாளியின் தகுதிகள் : இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/- க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மேலும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 30.06.2024 அன்றைய நிலையில் 45 வயதிற்குள்ளும், இதர இனத்தை சார்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும். அரசாணை (நிலை) எண்.127. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை நாள் 25.07.2019 வாயிலாக இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகையினை இருமடங்காக உயர்த்தி மாதமொன்றுக்கு பத்தாம் வகுப்பு தோல்விக்கு ரூ.200- ம்,பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்கு ரூ.300 -ம், மேல்நிலைக்கல்வி தேர்ச்சிக்கு ரூ.400- ம்,பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.600- ம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பத்தாம் வகுப்பு தோல்வி மற்றும் தேர்ச்சிக்கு ரூ.600/- மேல்நிலை கல்வி தேர்ச்சிக்கு ரூ.750/-ம் மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.1000/- வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: உதவித்தொகை விண்ணப்பப்படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள் தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையினை ஆதாரமாக காண்பித்து விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் விண்ணப்பங்களை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்


இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம் : நேரில் செல்ல இல்லாதவர்கள் https://employmentexchange.tn.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயன்பெற்றவர்கள் மீள விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்களாவார்கள். மேலும், இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்களின் பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.


சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்: 01.07.2024 உடன் தொடங்கும் காலாண்டிற்கான உதவித்தொகை விண்ணப்பங்களை மனுதாரர்கள் 2024 ஆகஸ்ட் 31 -ம் தேதிவரை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் விழுப்புரத்தில் இயங்கும் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டப்பிரிவில் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப்புத்தகத்துடன் நேரில் சமர்ப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பற்ற அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு காலாண்டிற்கு ஒருமுறை வழங்கப்படும் வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகையை சிறப்பு நேர்வாக மாதந்தோறும் வழங்குவதற்கு அரசால் அனுமதி வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது .


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

ராயல் லுக்கில் கெத்தாக நிற்கும் தஞ்சாவூர் டைடல் பார்க்... 1000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு...

 தமிழகத்தில் படித்த இளைஞர்கள் பெண்களுக்கு ஐடி வேலைகளைப் பெற உதவும் வகையிலும் மாநிலம் சமூகப் பொருளாதார மேம்பாட்டை அடைவதற்காகவும் தஞ்சாவூர், சேலம் தூத்துக்குடி உள்ளிட்ட சில மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்படும் என்று கடந்த‌ 2022ம் ஆண்டு தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.இந்த நிலையில் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே தஞ்சையின் முதல் ஐடி பூங்கா அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.

தஞ்சாவூர் மேலவஸ்தா சாவடியில் 3.40 ஏக்கரில் 55 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் தரைதளம்‌ மற்றும் 3 அடுக்கு மாடிகளுடன், ரூ.30.50 கோடி மதிப்பீட்டில் டைடல் பூங்கா கட்டுமானப் பணிகள் கடந்த ஒரு வருடமாக முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் அவ்வப்போது தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆய்வு செய்து, பணிகளின் முன்னேற்றம் குறித்து ஒப்பந்தக் காரர்களிடமும் அதிகாரிகளிடமும் கேட்டு வந்தார். தற்போது பூங்காவின் கட்டுமான பணிகள் 95சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த மாதம் டைடல் பூங்கா திறக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

டெல்டா இளைஞர்களுக்கு வாய்ப்பு: டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் சென்னை, பெங்களூரு, மும்பையில் ஐடி துறைகளில் வேலை பார்க்கின்றனர். தஞ்சையில் டைடல் பூங்கா திறக்கப்பட்டால். அவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். இந்த பூங்காவில் இரு நிறுவனங்கள் தொடங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 7 நிறுவனங்கள் வர உள்ளன./

இதன்மூலம் தஞ்சாவூர்,திருவாரூர்,பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மாவட்டங்களைச் சேர்ந்த 1,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதே போல் டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளின் படித்த பிள்ளைகள் கூட வேலைவாய்ப்பு பெறுவார்கள். இந்த ஐடி பூங்காவால் டெல்டாவில் தொழிற்புரட்சி ஏற்படும். என ஐடி நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

July 18, 2024

பள்ளிக் கல்வித் துறை - வாசிப்பு இயக்கக் கையேடு | 2024 - 2025

 

IMG_20240718_212540

பள்ளிக் கல்வித் துறை - வாசிப்பு இயக்கக் கையேடு | 2024 - 2025👇👇👇

Download here


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

மூன்றாண்டுகளுக்கு மேல் பணிபுரியும் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் PA பணியிட மாறுதல் -இணை இயக்குநரின் செயல்முறைகள்

 IMG_20240718_224650

மூன்றாண்டுகளுக்கு மேல் பணிபுரியும் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் PA பணியிட மாறுதல் -இணை இயக்குநரின் செயல்முறைகள்

CEO -PA - over 3 years transfer counselling -reg👇👇👇

Download here



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

எஸ்எம்சி குழுக்கள் மறுகட்டமைப்பு திருத்தப்பட்ட அட்டவணை வெளியீடு

 

1281792

அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) மறுகட்டமைப்பு பணிகளுக்கான கால அட்டவணையில் பள்ளிக் கல்வித் துறை மாற்றம் செய்துள்ளது.


இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:


இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்ட விதிகளின்படி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில் இயங்கிவரும் பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்எம்சி) 2022-ம் ஆண்டு மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. அதன்படி பெற்றோர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர்களை உள்ளடக்கிய 20 உறுப்பினர்கள் கொண்ட குழுவாக எஸ்எம்சி மாற்றி அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.


இதற்கிடையே, ஏற்கெனவே நியமிக்கப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழுவின் பதவிக் காலம் நடப்பு ஜூலை மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இதையடுத்து 2024-26-ம் ஆண்டுகளுக்கான புதிய உறுப்பினர்களைக் கொண்டு எஸ்எம்சி குழு மறு கட்டமைப்பு செய்யப்படவுள்ளது. இதற்கான கால அட்டவணை, வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுவிட்டன.


தற்போது அதில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி எஸ்எம்சி குழு குறித்து பெற்றோருக்கான விழிப்புணர்வு கூட்டம் ஜூலை 28-ல் இருந்து ஆகஸ்ட் 2-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


இதில் பங்கேற்க பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு வாட்ஸ்அப், துண்டு பிரசுரங்கள் மற்றும் மாணவர்கள் மூலமாக ஜூலை 31-ம் தேதிக்குள் அழைப்பு விடுக்க வேண்டும். இதையடுத்து, மாநிலம் தழுவிய எஸ்எம்சி மறுகட்டமைப்பு நிகழ்வுக்கான அட்டவணையும் மாற்றப்பட்டுள்ளது.


அதன்படி நடுநிலைப் பள்ளிகளுக்கு ஆகஸ்ட் 10-ம் தேதியும், தொடக்கப் பள்ளிகளுக்கு 17, 24-ம் தேதிகளிலும், உயர்நிலைப் பள்ளிகளுக்கு 31-ம் தேதியிலும் மறுகட்டமைப்பு பணிகள் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

தமிழகம் முழுவதும் ஓவிய ஆசிரியர்களின் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை

 IMG_20240718_222448

பள்ளிக் கல்வித் துறையில் கலை ( ஓவியம் ) ஆசிரியர்கள் பொது இட மாறுதல் கலந்தாய்வுக்குப் பின்னர் EMIS இணையதளம் வாயிலாக பெறப்பட்ட மாவட்ட வாரியாக ஓவிய ஆசிரியர்கள் . காலிப் பணியிட விபரங்கள் - ஜூலை -2024 

மொத்தக் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை -772

Drawing vacant list-July2024👇👇👇

Download here


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

அறிவியல்-பலகை July-2024

 

IMG_20240719_092647

அறிவியல்-பலகை July-2024

Download here


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

DEE - பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் முன்னுரிமை பட்டியல்!

 

தொடக்கக் கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடத்திற்கான மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல்  முன்னுரிமை பட்டியல்..


Tamil Seniority List - Download here


English Seniority List - Download here


Maths Seniority List - Download here


Science Seniority List - Download here


Social Seniority List - Download here


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

ஆய்வக உதவியாளர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு - 2% ஒதுக்கீடு - அரசிடம் பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருக்கள் சமர்ப்பிப்பு!

 IMG_20240718_215503

ஆய்வக உதவியாளர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு - 2% ஒதுக்கீடு வழங்கி TRB மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வில் பங்கு பெற்று, நியமனம் பெற அரசிடம் பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருக்கள் சமர்ப்பிப்பு!

DSE - Promotion to Lab Assistant Letter

Download here


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

BT/BRTE provisional selection list published in TRB's official website

 .com/

BT/BRTE provisional selection list for subject Botany and zoology has been published in TRB's official website 👇👇👇

https://trb.tn.gov.in/index.php?language=LG-1&status=Active


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

வரையறுக்கப்பட்ட விடுப்பு பற்றி தெரிந்துகொள்வோம்!!!

 

வரையறுக்கப்பட்ட விடுப்பு 


அ ) தமிழக அரசு தமது அலுவலர்களுக்கு கீழே உள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள விழாக்களுக்கு ஒரு ஆண்டிற்கு 3 நாட்கள் என வரையறுக்கப்பட்ட விடுப்பு அனுமதிக்கிறது . ( அ.நி.எண் 3 /ப.ம.நி.சீ துறை நாள் 12.01.2006 ) 


ஆ ) மத சார்பின்றி எந்த பண்டிகைக்கு வேண்டுமானாலும் ஆண்டிற்கு 3 நாட்கள் எடுத்துக் கொள்ளலாம் . முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும் . 

இ ) இவ்விடுப்பினை அரை நாளாக எடுக்க இயலாது . ( அ.க.எண் . 118727 அ.வி. III / 88-1 ப.ம.நி.சீ.துறை நாள் 04.04.87 ) 


ஈ ) காலதாமத வருகைக்காக இவ்வகை விடுப்பை ஈடுகட்ட முடியாது . ஆனால் தற்செயல் விடுப்புடன் இவ்விடுப்பை இணைத்துக் கொள்ளலாம் . ( அரசுக் கடித எண் . 24686 / அவி ||| / ப.ம.நி.சீ. துறை நாள் 04.04.87 )


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Dr.Radhakrishnan Award Application User Manual

 Dr Radhakrishnan Award Application _User Manual 👇👇👇

Download here


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Ennum Ezhuthum | Term-1 Std 3 English Full Revision.pdf

 

Ennum Ezhuthum | Term-1 Std 3 English Full Revision.pdf👇👇👇

Download here

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

July 17, 2024

இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்கள் மேலும் உயர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

 
தமிழ்நாட்டில் கூடுதலாக 1000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தொடக்க கல்வித்துறையில் 2023-24ம் ஆண்டில் ஏற்பட்ட காலிப் பணியிடங்களில் 1768 இடைநிலை ஆசிரியர்கள் நேரடியாக நியமனம் செய்யப்படுவதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி ஒன்பதாம் தேதி வெளியிடப்பட்டது.


ஜூன் மாதம் நடைபெறுவதாக இருந்த போட்டித் தேர்வு பின்னர் ஜூலை 21ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில் ஏற்கனவே உள்ள பணியிடங்களுடன், இடைநிலை ஆசிரியர் பதவியில் கூடுதலாக 1,000 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான சேர்க்கை அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. இதன் மூலம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை 2768ஆக உயர்ந்துள்ளது.


இடைநிலை ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு வருகிற 21-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற உள்ளது.


இதையடுத்து தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களிடம் நேர்காணல் நடத்தி, சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பணி ஆணை வழங்கப்பட உள்ளது.


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது தெரியுமா.. வெளியான லேட்டஸ்ட் தகவல்...

 

தமிழக அரசுத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நிரப்பி வருகிறது. அரசுப்பணியைப் பெற வேண்டும் என்பது லட்சக்கணக்கான இளைஞர்களது கனவாக உள்ளது.

இதற்காகப் பலரும் கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு அதற்கான பயிற்சி மையங்களில் சேர்ந்து தொடர்ந்து படித்து வருகின்றனர். இதனால் டிஎன்பிஎஸ்சி வெளியிடும் ஒவ்வொரு அறிவிப்பையும் பலரும் உற்றுநோக்கிக் காத்திருக்கின்றனர். அந்த வகையில் தற்போது பலரும் எதிர்பார்த்திருக்கும் ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

6,244 காலியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்த மாதம் ஜூன் 9ஆம் தேதி நடைபெற்றது. தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வு முடிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். பொதுவாக டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் முடிவுகள் வெளியிடுவதற்குத் தோராயமாக 3 மாதங்களிலிருந்து 6 மாத காலமேயாகும். ஆனால் கடைசியாக 2022 ஜூலை மாதத்தில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வானது சில காரணங்களால் தேர்வின் முடிவுகள் வெளியிடுவதற்கு 8 மாதத்திற்கு மேல் கால தாமதங்களாகிவிட்டன.

கடந்த 2014 வரையிலான காலகட்டத்தில் சுமார் 10 முதல் 17.5 லட்சம் தேர்வர்கள் பங்கேற்றனர். ஆனால் கொரோனா பாதிப்பின் காரணத்தினால் 2020 மற்றும் 2021ல் டிஎன்பிசி தேர்வு நடைபெறவில்லை ஆகையால் 2022ல் நடைபெற்ற தேர்வில் ஏறத்தாழ 18 லட்சத்திற்கும் கூடுதலாகத் தேர்வர்கள் பங்கேற்றனர். அதனால் மும்மடங்கு கூடுதலாக வேலைகள் இருந்ததால் தேர்வு முடிவுகள் வெளியிடக் காலதாமதம் ஆகியதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும் மகளிருக்கான இடஒதுக்கீடு முறையில் மாற்றத்தை குறித்து உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் பெயராலும் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதமாகின.

இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் முடிவிற்காக 17 லட்சத்திற்கு மேலான தேர்வர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். தேர்வு முடிவு தாமதமில்லாமல் விரைவாக வெளியாக வேண்டும் என்பது அவர்களது எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில் லட்சக்கணக்கான தேர்வர்களின் எதிர்பார்த்த தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 15.8 லட்சம் தேர்வர்கள் எழுதி இருந்த இந்த குரூப்4 தேர்வு முடிவுகள் வருகின்ற ஜனவரி அதாவது 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news