பவர்கிரிட் ஆணையத்தில் (PGCIL) Officer Trainee வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.1,60,000/- || உடனே விரையுங்கள்!

 பவர்கிரிட் ஆணையத்தில் (PGCIL) Officer Trainee வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.1,60,000/- || உடனே விரையுங்கள்!

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL) நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Officer Trainee (Finance / Company Secretary) பணிக்கென காலியாக உள்ள 43 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.50,000/- முதல் ரூ.1,60,000/- வரை ஊதியம் வழங்கப்படும். தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பணியிடங்கள் :

Officer Trainee பணிக்கென காலியாக உள்ள 43 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் CA / ICWA (CMA) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.50,000/- முதல் ரூ.1,60,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 07.08.2024ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF


🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

NIEPMD-யில் ரூ.45,000/- ஊதியத்தில் வேலை – கல்வி தகுதி,வயது வரம்பு குறித்த விவரங்களுடன்!


NIEPMD-யில் ரூ.45,000/- ஊதியத்தில் வேலை – கல்வி தகுதி,வயது வரம்பு குறித்த விவரங்களுடன்!

Coordinator பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை NIEPMD ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

NIEPMD காலிப்பணியிடங்கள்:

Coordinator பணிக்கென காலியாக உள்ள ஒரே ஒரு பணியிடம் மட்டும் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NIEPMD கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Ed. / M.Ed. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Coordinator வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NIEPMD ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.45,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

Coordinator தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 28.08.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF


 🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

மெல்ல மலரும் மாணவர்களுக்கான தமிழ் உயிர் | மெய் எழுத்துக்கள் மற்றும் ஆங்கில எழுத்துக்கள் அடங்கிய வண்ணப் படங்கள் (61 பக்கங்கள்)

 

மெல்ல மலரும் மாணவர்களுக்கான தமிழ் உயிர் | மெய் எழுத்துக்கள் மற்றும் ஆங்கில எழுத்துக்கள் அடங்கிய வண்ணப் படங்கள் (61 பக்கங்கள்)



🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

ஆகஸ்ட் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு !

 சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினம், ஆடிப்பெருக்கு விழா மற்றும் கோட்டை மாரியம்மன் கோயில் பண்டிகையை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

 கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி புதன்கிழமை சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. அதே நேரத்தில் மாவட்ட கருவூலம் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களுடன் செயல்படும். ஆகஸ்ட் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை ஈடுசெய்யும் வகையில் ஆகஸ்ட் 31ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.


🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

SMC மறுகட்டமைப்பு - தேவையான அனைத்தும் ஒரே Link ல் PDF , Word , Exel, PSD, Picture & Video File

 பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு 2024 ~ 2026

SMC - தேவையான அனைத்தும் ஒரே Link ல் PDF , Word , Exel, PSD, Picture & Video File


▪️ உறுப்பினர் சான்றிதழ்


▪️ உறுதிமொழி 


▪️ கூட்ட அழைப்பிதழ் 


▪️ படிவங்கள் 


▪️ அட்டவணைகள் 


▪️ நிகழ்ச்சி நிரல் 


▪️ பார்வையாளர் படிவம்


▪️ வழிகாட்டி அரசாணைகள்


▪️ சுவரொட்டிகள் 


▪️ விழிப்புணர்வு கூட்ட வீடியோக்கள்


📌 தேவையான அனைத்தும் ஒரே Link ல் PDF , Word , Exel,  PSD, Picture & Video File ஆக வழங்கப்பட்டுள்ளது.


👇👇👇https://drive.google.com/drive/folders/1F3UTNkcubZEog10uCa794mB_ER3DFTbf?usp=drive_link



🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

கல்வியை மேம்படுத்திட ஆட்சியர் தலைமையில் மாதத்தில் ஒரு நாள் கல்வி வளர்ச்சி குறைதீர் நாள்!!!

 கல்வியை மேம்படுத்திட மாதத்தில் ஒரு நாள்  கல்வி வளர்ச்சி குறைதீர் நாள்!!!


38 கல்வி மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் , மாதத்தில் ஒரு நாள் நடைபெறும் 9 இடம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

IMG-20240801-WA0019



🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

'நான் முதல்வன்' திட்ட ஊக்கத்தொகைக்கான மதிப்பீட்டு தேர்வுக்கு வெள்ளிக்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம்!

 1288760

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வுக்கு தயாராகும் 1,000 மாணவர்களுக்கு ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் மாதம் ரூ.7500 ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கான மதிப்பீட்டு தேர்வுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


இது தொடர்பாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக சிறப்புத் திட்ட இயக்குநர் (நான் முதல்வன் - போட்டித் தேர்வுகள் பிரிவு) இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: “நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும், சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் கடந்த 07.03.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இப்பிரிவு, தமிழக இளைஞர்கள் மத்திய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் பல பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.


தமிழக அரசின் 2023-2024-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் உரையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையத்துடன் இணைந்து மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் தேர்வுகளுக்காக பயின்று வரும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையான வசதிகளைச் செய்து உதவும் வகையில் ஒரு திட்டத்தை செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது.


.


இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் சிவில் சர்வீசஸ் பயின்று வரும் மாணவர்கள் 1000 பேர் மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்கப்படும். இத்திட்டம் கடந்த ஆண்டு முதல் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், அதன் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக அடுத்த ஆண்டு யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கான மதிப்பீட்டுத் தேர்வை வரும் செப்டம்பர் 15-ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளது.


இதன்மூலம் தேர்ந்தெடுக்கப்படும் தமிழக மாணவர்கள் 1000 பேருக்கு ஊக்கத்தொகையாக மாதம் ரூ.7,500 ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும். இத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஆகஸ்ட் 2-ம் தேதி (இன்று) முதல் ஆன்லைனில் (https://www.naanmudhalvan.tn.gov.in) விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 17-ம் தேதி ஆகும். தேர்வுக்கான நுழைவுச்சீட்டு செப்டம்பர் 9-ம் தேதி வெளியிடப்படும். தேர்வு செப்டம்பர் 15-ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறும். கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



🔻🔻🔻

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

உடலில் இன்சுலின் வேலை என்ன தெரியுமா..? சர்க்கரை நோயாளிகள் அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

 அதிக எடையுடன் இருப்பது நீரிழிவு நோயின் வாய்ப்பை அதிகரிக்கிறது. எடை மற்றும் டைப் 2 நீரிழிவு (T2DM) ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு மிகவும் வலுவானது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் எடையைக் குறைப்பதனால் இரத்ததில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முடியும். மேலும், இது நீரிழிவு நோயின் தொடக்கத்தை தாமதப்படுத்துகிறது. இதில் முக்கியப் பங்கு வகிக்கும் இன்சுலின் என்பது ஒரு ஹார்மோன் சுரப்பி ஆகும்.

இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது. இது சீரான உடலியல் செயல்பாடுகளை பாதிக்கிறது. மறைமுகமாக, எடையை நிர்வகிக்கிறது. இது நேரடியாக எடை இழப்பை ஏற்படுத்தாது என்றாலும், உடல் சர்க்கரையை எவ்வாறு கையாளுகிறது, கொழுப்பைச் சேமிக்கிறது மற்றும் பசியைக் கட்டுப்படுத்துகிறது என்பதை இன்சுலின் நிர்வகிக்கிறது.

News18

இன்சுலினுக்கும் கொழுப்புக்கும் என்னத் தொடர்பு?

உடல் எடை அதிகரிக்கும் போது, கல்லீரல் மற்றும் கணையம் போன்ற உறுப்புகளைச் சுற்றி கொழுப்பை உருவாகிறது. இது இன்சுலின் எதிர்ப்புக்கு வழிவகுக்கிறது. உடலில் அதிக அளவு இன்சுலின் இருந்தால் உடல் எடை கூடும். ரத்தத்தில் உயர் சர்க்கரை அளவு முக்கியமாக இன்சுலின் அளவை அதிகரிக்கும். இதற்கு காரணமாக பெரும்பாலான பதப்படுத்தப்பட்ட உணவுகள் இருக்கின்றன. செல்கள் இன்சுலினுக்கு ஆற்றல் வழங்காதபோது, அது “இன்சுலின் எதிர்ப்பிற்கு” வழிவகுக்கிறது. எனவே, ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க இன்சுலின் சரியான அளவில் இருப்பது முக்கியம்.

நீண்ட காலமாக இன்சுலினை சரியான திசையில் நிர்வாகம் செய்ய , நோயாளிகளுக்கு பிற உடல்நலம் மற்றும் உணவு மாற்றங்கள் தேவைப்படுகிறது. இதற்கு முதற்படியாக சர்க்கரையை குறைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், உணவில் கார்போஹைட்ரேட்டின் அளவைக் குறைத்து, ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவை அதிகம் சேர்ப்பது சிறந்த முறையாக பின்பற்றப்படுகிறது. சில வைட்டமின்கள் குறைபாடு உள்ளவர்களுக்கு சப்ளிமெண்ட்ஸ் உதவலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வதற்கு முன் எப்போதும் உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றுவது அவசியம். மெக்னீசியம், சிங்க், வைட்டமின் பி 12, வைட்டமின் சி போன்ற சில ஊட்டச்சத்துக்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு பெரும்பாலும் குறைபாடுடையவையாக பார்க்கப்படுகிறது. சப்ளிமெண்ட்ஸ் தவிர, சில நவீன சிகிச்சைகள் நீரிழிவு நோய்க்கு சிறந்தத் தீர்வாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக, IV வைட்டமின் சிகிச்சையானது அதிக அளவு வைட்டமின்களை உடலுக்கு வழங்குகிறது. இது உடலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இருப்பினும், இது ஒரு மருத்துவரின் வழிகாட்டுதலின் கீழ் செய்யப்பட வேண்டும்.

நீரிழிவு நோய் குறித்து ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு வருவதால், சில எளிதான வாழ்க்கை முறை மாற்றங்கள் நம்மைப் பாதுகாக்கும் என்பதை அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இறுதியாக, ஒவ்வொருவருக்கும் அவரவர் மருத்துவ வரலாறு மற்றும் மரபணு காரணங்கள் உள்ளன. உங்கள் உடல்நலம் குறித்த முழுமையான மதிப்பீட்டை அறிய மருத்துவரை அணுகுவதே சிறந்தது.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

தாரவ புரோட்டீன் அல்லது விலங்கு புரோட்டீன்... எது ஆரோக்கியத்திற்கு நல்லது..?

 புரோட்டீன் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது முட்டை தான், ஆம், இது ப்ரோட்டீனின் நல்ல மூலமாகும். ஆனால் முட்டை மட்டுமில்லை, விலங்கு மற்றும் தாவர அடிப்படையிலான உணவுகள் உட்பட பல்வேறு உணவுகளில் புரோட்டீன் காணப்படுகிறது.

விலங்கு அடிப்படையிலான புரோட்டீன் மற்றும் தாவர அடிப்படையிலான புரோட்டீன் இடையேயான விவாதம் இன்றுவரை தொடர்கிறது. உடலின் முழு இயக்கத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக புரோட்டீன் உள்ளது. தசைகள், ஹார்மோன்கள், எலும்புகள் மற்றும் ரத்தத்திற்கான கட்டுமானத்தை உருவாக்க புரோட்டீன் உதவுகிறது. எனவே புரோட்டீன் சத்துக்கள் நிறைந்த உணவை சாப்பிடுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

விலங்கு மற்றும் தாவரங்களில் இருந்து இரண்டு வகையான புரோட்டீன்கள் கிடைக்கின்றன. இவை இரண்டிற்கும் இடையிலான வித்தியாசம் என்ன, என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என என்றாவது யோசித்து பார்த்திருக்கிறீர்களா?. விலங்கு மற்றும் தாவரங்களில் இருந்து கிடைக்கும் ப்ரோட்டீனுக்கு இடையேயுள்ள வித்தியாசங்கள் பற்றி முழுமையாக பார்க்கலாம்.

News18

உங்களுக்கு ஏன் புரோட்டீன் தேவைப்படுகிறது?

திசுக்கள், தசைகள் உள்ளிட்ட உடல் உறுப்புகளின் கட்டமைப்புக்கு புரோட்டீன் இன்றியமையாத ஒரு தேவையாக உள்ளது. மேலும், ஹார்மோன் சமநிலை, நோய் எதிர்ப்பு சக்தி மேம்பாட்டுக்கும் புரோட்டீன் அவசியமாக உள்ளது. உடலுக்கு தேவையான புரோட்டீன் இல்லையென்றால், தசை பலவீனம், சோர்வு, நோய் எதிர்ப்பு சக்தியில் பலவீனம் மற்றும் காயம் குணமடைவதில் தாமதம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும். இவை ஏற்படாமல் தவிர்க்க வேண்டுமொனால் போதிய அளவு புரோட்டீன் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். ஹார்வர்ட் ஹெல்த் பப்ளிஷிங் படி, புரோட்டீன்க்கான ரெகமன்டேட் டைடெரி அல்லோவேன்ஸ் படி (RDA) ஒரு கிலோ உடல் எடையில் 0.8 கிராம் புரோட்டீன் இருக்கும்.

விலங்கு ப்ரோட்டீனின் நன்மைகள்…

லீன் மீட்ஸ், மீன், முட்டை மற்றும் பால் உணவுகள் போன்ற விலங்கு சார்ந்த புரோட்டீன் மூலங்கள், தாவர அடிப்படையிலான புரோட்டீன் மூலங்களுடன் ஒப்பிடும்போது முழுமையான ப்ரோட்டீனின் நல்ல ஆதாரங்கள் இருக்கின்றன என்று மருத்துவர் டாக்டர் மணீஷ் இடோலிகர் கூறியுள்ளார். தாவரங்களில் உள்ள ப்ரோட்டீனை விட விங்குகளிடம் இருந்து கிடைக்கும் ப்ரோட்டீனை நமது உடலால் எளிதில் உறிஞ்சிக்கொள்ள முடியும்.

விலங்குகளிடம் இருந்து கிடைக்கும் ப்ரோட்டீனில் காணப்படும் 9 அத்தியாவசிய அமினோ ஆசிட்கள், அதனை ஒரு ‘முழுமையான’ ப்ரோட்டீனாக உருவாக்குகிறது மற்றும் தசைகள் மற்றும் எலும்புகளை உருவாக்க உடலுக்கு உதவுகிறது. கூடுதலாக, விலங்கு புரோட்டீன்களில் வைட்டமின் பி 12, அயன், ஜின்க் மற்றும் ஒமேகா -3 ஃபாட்டி ஆசிட்கள் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, அவை மூளை ஆரோக்கியம், ரத்த சிவப்பணு உற்பத்தி, நோயெதிர்ப்பு செயல்பாடு மற்றும் ஹார்மோன் உற்பத்தியை ஆதரிக்கின்றன.

தாவர ப்ரோட்டீனின் நன்மைகள்?

பழங்கள், காய்கறிகள், பீன்ஸ், பருப்பு, தானியங்கள், நட்ஸ் மற்றும் விதைகள் போன்ற தாவர அடிப்படையிலான புரோட்டீன்களில் பெரும்பாலும் நார்ச்சத்து நிறைந்தவை, இது செரிமானத்தை மேம்படுத்தவும், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. தாவரங்களில் இருந்து கிடைக்கும் ப்ரோட்டீனில் குறைவான அளவிலான அமினோ ஆசிட்களே உள்ளன. இது குறித்து டாக்டர் இடோலிகர் கூறியதாவது, “விலங்கு புரோட்டீன் மூலங்களுடன் ஒப்பிடும்போது தாவர புரோட்டீன்கள் பொதுவாக நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் கொலஸ்ட்ராலில் குறைவாக உள்ளன, அவை இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன என்று கூறியுள்ளார். கூடுதலாக, தாவர புரோட்டீன்களில் வைட்டமின்கள், மினரல்ஸ் மற்றும் பைட்டோநியூட்ரியன்கள் உட்பட பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன, அவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும், நல்வாழ்விற்கும் நன்மையளிக்கும்.

எந்த புரோட்டீன் சிறந்தது..?

இறைச்சி, பால் மற்றும் முட்டைகளில் காணப்படும் விலங்கு ப்ரோட்டீனில், அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின் பி 12 போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது, இதன் காரணமாக இது பெரும்பாலும் முழுமையான ப்ரோட்டீனாக கருதப்படுகிறது. இருப்பினும், இது அதிக அளவு நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இது இதய பிரச்சினைகளுக்கு பங்களிக்கிறது.
பருப்பு வகைகள், தானியங்கள், நட்ஸ் மற்றும் விதைகளில், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் மினரல்ஸ் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. தாவர அடிப்படையிலான உணவுகள் இதய நோய், நீரிழிவு மற்றும் சில புற்றுநோய்களின் அபாயத்தை குறைந்த அளவு குறைக்கிறது. ஆனால் ஒவ்வொரு வித தாவர புரதங்களிலும் வெவ்வேறு வகையான மிகக் குறைந்த அளவிலான புரோட்டீன்கள் கிடைக்கும். இதற்காக நிறைய உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். இது புரோட்டீன் சத்து குறைபாடு மட்டுமின்றி மற்ற பிற ஊட்டச்சத்து குறைபாட்டையும் ஏற்படுத்தும். ஆனால் விலங்கு புரோட்டீன்கள் குறைவாக எடுத்தாலே அதிக புரோட்டீன் கிடைக்கும். அதனால் அளவோடு எடுத்துக் கொண்டு மற்ற ஆபத்துக்களைக் குறைத்துக் கொள்வது நல்லது. இரண்டு வகையான புரோட்டீன்களையும் உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வதற்கும், உங்கள் தினசரி புரோட்டீன் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் இதுவே சிறந்த வழியாகும்.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

அதிகமாக காஃபி குடித்தால் கல்லீரல் பாதிக்கப்படுமா..? உண்மை இதுதான்..!

 பலரின் தினசரி வழக்கமாக காலை நேரத்தில் காஃபி பருகுவது இருக்கிறது. உங்களுக்கும் காலை எழுந்ததும் காஃபி குடிக்கும் பழக்கம் இருக்கிறதா? சமீபத்திய ஒரு கணக்கெடுப்பின்படி, சுமார் 60% மக்கள் தினமும் காஃபி குடிக்கிறார்கள்.

பலரும் காஃபியை தங்களுக்கு பிடித்த பானமாக வைத்திருப்பதற்கு பின்னால் உள்ள ரகசியம் காஃபின் ஆகும். காஃபினானது மூளையில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் விழிப்புணர்வை அதிகரிக்க செய்கிறது மற்றும் சோர்வை குறைக்கிறது. காஃபியில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்துள்ளன, இது செல்களை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களை நடுநிலையாக்குவதன் மூலம் அழற்சியை எதிர்த்து போராட உதவுகிறது. அதிகப்படியான ஃப்ரீ ரேடிக்கல்ஸ் இருந்தால் அது முன்கூட்டியே முதுமை மற்றும் கேன்சர், இதய நோய் மற்றும் நீரிழிவு போன்ற பல்வேறு அபாயங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

News18

அதே போல காஃபி செரிமானத்திற்கு உதவுகிறது, மேலும் இரைப்பை குடல் அமைப்பு மூலம் உணவின் இயக்கத்தை துரிதப்படுத்துகிறது. சிலர் காலை காஃபி குடித்த சிறிது நேரத்திலேயே மலம் கழிக்க வேண்டும் என்ற தூண்டுதலை அனுபவிப்பது இதற்கு உதாரணம். அதே நேரம் காஃபி நம் கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும் என்ற கருத்து நிலவுகிறது. இது குறித்தும் இங்கே பார்க்கலாம் வாருங்கள்..

உங்கள் கல்லீரலுக்கு காஃபி ஆரோக்கியமானதா அல்லது ஆரோக்கியமற்றதா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் நம் உடலில் இருக்கும் உள்ளுறுப்புகளில் மிக முக்கிய உறுப்பாக கருதப்படும் கல்லீரல், நம் உடலை சீராக இயங்க வைக்கும் சுமார் 500 வெவ்வேறு செயல்பாடுகளை செய்கிறது. கல்லீரலானது நாம் எடுத்து கொள்ளும் உணவில் இருக்கும் புரதங்கள், கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் கொழுப்புகளை ஆற்றலாக மாற்றுகிறது. மேலும் உடல் செயல்பாடுகளுக்கு தேவையான புரதங்கள் மற்றும் கெமிக்கல்களை உற்பத்தி செய்கிறது. சிறந்த செரிமானத்திற்கு உதவுவது முதல் ரத்தத்தில் இருந்து கழிவுகளை வடிகட்டி நீக்குவது வரை கல்லீரலின் பங்கு மிக முக்கியமானது.

எனவே கல்லீரலின் ஆரோக்கியத்தை பராமரிப்பது இன்றியமையாதது. அதிர்ஷ்டவசமாக காஃபியானது கல்லீரல் ஆரோக்கியத்திற்கான பானமாக உள்ளது. பொதுவாக காஃபி எனர்ஜியை பூஸ்ட் செய்ய உதவுவதாக அறியப்பட்டாலும், கல்லீரலை ஆரோக்கியமாக வைப்பதற்கும் காஃபி பங்களிக்க கூடும்.

கல்லீரல் ஆரோக்கியத்திற்கு காஃபி நன்மை அளிக்கும் என்பதற்கு பல காரணங்கள் உள்ளன…

  • காஃபியில் குளோரோஜெனிக் ஆசிட் (CGA) போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் உள்ளன, இவை கல்லீரலில் குளுக்கோஸை ப்ராசஸ்-ஆக உதவுகிறது மற்றும் கல்லீரலில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது.

  • தினசரி காஃபி குடிக்கும் பழக்கம் உடலில் அழற்சி குறைவதோடு தொடர்புடையது. அழகேசி மற்றும் வீக்கம் குறைவாக இருப்பது சில கல்லீரல் நோய்களிலிருந்து பாதுகாப்பை தரலாம்.

  • காஃபியானது Autophagy-ஐ தூண்டுவதாக கூறப்படுகிறது. இது சேதமடைந்த செல் காம்போனென்ட்ஸ்களை அகற்றும் ஒரு ப்ராசஸ் ஆகும். இது கல்லீரல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் மற்றும் இந்த உள்ளுறுப்பு திறம்பட செயல்பட உதவுகிறது.

    எனவே தினசரி காஃபி குடித்தாலும் மிதமான நுகர்வு உங்கள் கல்லீரலுக்கு நன்மை பயக்கும். மேலும் நாள்பட்ட கல்லீரல் நோய் மற்றும் கல்லீரல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். காஃபியானது “கல்லீரல் ஆரோக்கியத்திற்கான மேஜிக்கல் பீன்” என குறிப்பிடப்படுகிறது. வழக்கமான அடிப்படையிலான காஃபி நுகர்வு பழக்கம் கல்லீரல் நொதிகளின் அளவு குறைய உதவுகிறது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip