10th Maths Second Revision Exam 2025 Theni ,Thiruvallur district Original Questions with Answer key for TM and EM
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
Adding Green to your Life
10th Maths Second Revision Exam 2025 Theni ,Thiruvallur district Original Questions with Answer key for TM and EM
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – கல்வி உதவித்தொகை – 2024-2025–ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் - மாண்புமிகு அமைச்சர் ஆதிதிராவிடர் நலன் அவர்களின் அறிவிப்பு – உயர்கல்வியில் சிறந்து விளங்கும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கரின் கல்வி இறுதி ஆண்டில் அவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான “பணவுறுதி ஆவணம்” (Skill Vouchers) வழங்க “உயர் திறன் ஊக்கத்திட்டம்“ - ஆணை வெளியிடப்படுகிறது.
👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - நான் முதல்வன் திட்டம் 2024-2025 - ஆம் கல்வியாண்டு அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மற்றும் வகுப்பு ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வாயிலாக வழங்கப்படும் இணையவழி சான்றிதழ் படிப்புகளுக்கான நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து
👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼
online certificate course proceeding - Download here
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - அறிவியல் பாட செய்முறைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு...👇👇👇
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
50 Simple English Sentences with Verbs Highlighted for Class 1 Students
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
50 Simple English Sentences with Verbs Highlighted for Class 2 Students
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
50 Simple English Sentences with Verbs Highlighted for Class 3 Students
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
50 Simple English Sentences with Verbs Highlighted for Class 4 Students
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
University Research Fellow பணிக்கென காலியாக உள்ள 4 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
University Research Fellow கல்வி தகுதி:
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் UG / PG / M. Ed / M. Phil / NET / SET / Pre Ph. D தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
BDU வயது வரம்பு:
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
University Research Fellow ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 5,000/- உதவித் தொகையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
BDU தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 07.02.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
Sr. Java Full Stack Engineer பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sr. Java Full Stack Engineer கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சியுடன் Full stack development experience கொண்டவராக இருக்க வேண்டும்.
Cognizant வயது வரம்பு:
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Sr. Java Full Stack Engineer ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு Cognizant-ன் நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும்.
Cognizant தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாள் முடிவதற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 27.02.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
TCS காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி React Node Developer பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
React Node Developer கல்வி தகுதி:
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s degree in Computer Science தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
TCS வயது வரம்பு:
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
React Node Developer முன் அனுபவம்:
சம்பந்தப்பட்ட துறையில் 8 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
TCS ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு TCS-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.
React Node Developer தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 30.04.2025 ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுகொள்ளப்படாது.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
ஜப்பானியர்களின் தோற்றம் உலகளவில் அனைவரையும் கவர்ந்துள்ளது. பொம்மைகளைப் போல அழகாகவும், கொழுப்பு இல்லாத முகத்துடன், பளபளப்பான சருமத்துடனும் அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்ற கேள்வி பலருக்கும் உண்டு. அவர்களின் வாழ்க்கை முறையின் சில சிறப்பம்சங்களே இதற்கு காரணம் என ஆய்வுகள் கூறுகின்றன. அந்த 5 இரகசியங்களை பின்பற்றுவதன் மூலம் நீங்களும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம்.
உடற்பயிற்சி மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை: ஜப்பானியர்கள் நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்ற வழக்கமான உடற்பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர். இது உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.
மெதுவாக சாப்பிடுதல்: ஜப்பானியர்கள் உணவை மெதுவாக சாப்பிடுகிறார்கள். இது அவர்களின் செரிமானத்திற்கு மிகவும் நல்லது. மென்று சாப்பிடுவதன் மூலம், உடலில் சத்துக்கள் சரியாக சேர்கின்றன. இதனால் கொழுப்பு சேராமல் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
சிறிய அளவிலான உணவுகள்: ஜப்பானியர்கள் சிறிய அளவில் உணவுகளை உண்கிறார்கள் மற்றும் சமச்சீர் உணவைப் பராமரிக்கிறார்கள். சிறிய கிண்ணங்களில் சிறிய அளவிலான உணவுகளை பரிமாறுகிறார்கள். இது செரிமானத்திற்கும் உதவுகிறது.
பதப்படுத்தப்படாத உணவுகள்: ஜப்பானிய உணவு முறையில் புதிய, பதப்படுத்தப்படாத உணவுகள் அதிகம். பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பதால் உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைப்பதால் கொழுப்பு மற்றும் சர்க்கரை உட்கொள்ளல் குறைகிறது. பாதுகாப்புகள் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்பதால் கொழுப்பு கல்லீரல் முதல் கொலஸ்ட்ரால் தொடர்பான பிரச்சனைகள் வரை பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம்.
ஆரோக்கிய பானங்கள்: ஜப்பானியர்கள் அதிக கிரீன் டீ அல்லது பிற ஆரோக்கிய பானங்களை அருந்துகிறார்கள். இது கூடுதல் கலோரிகள் சேர்க்காமல் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. இது சருமத்திற்கும் உடலுக்கும் நல்லது.
அரிசி பயன்பாடு: ஜப்பானியர்கள் தங்கள் அன்றாட உணவில் அரிசியை சேர்த்துக் கொள்கிறார்கள். சிறிய அளவில் பிசுபிசுப்பான அரிசியை உண்பதன் மூலம் அவர்கள் தங்கள் இளமை மற்றும் உயிர்ச்சக்தியைப் பராமரிக்கிறார்கள்.
வேலை-வாழ்க்கை சமநிலை: ஜப்பானியர்கள் வேலைக்கும் வாழ்க்கைக்கும் இடையே ஒரு சமநிலையைப் பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். வேலை உடன், அவர்கள் தங்கள் பொழுதுபோக்கு மற்றும் ஆர்வங்களுக்கும் நேரம் கொடுக்கிறார்கள்.
ஆரோக்கியத்தில் கவனம்: ஜப்பானியர்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். அவர்கள் வழக்கமான உடல் பரிசோதனைகளை மேற்கொள்கிறார்கள் மற்றும் மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றுகிறார்கள்.
சுற்றுச்சூழல் மற்றும் மன ஆரோக்கியம்: ஜப்பானில் தூய்மையான சூழல் நிலவுகிறது. இது மக்களின் உடல் நலத்திற்கு நல்லது. மேலும், ஜப்பானியர்கள் நேர்மறை சிந்தனைக் கொண்டவர்கள். இது அவர்களின் மன ஆரோக்கியத்திற்கு நல்லது.
நீண்ட ஆயுட்காலம்: ஜப்பான் உலகின் மிக உயர்ந்த சராசரி ஆயுட்காலம் கொண்ட நாடுகளில் ஒன்றாகும். அவர்களின் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையின் ரகசியம் அவர்களின் தனித்துவமான வாழ்க்கை முறையில் உள்ளது.
ஜப்பானியர்கள் பொதுவாக மிகவும் கட்டுக்கோப்பாக இருக்கிறார்கள். நோய்கள் அவர்களை நெருங்குவதில்லை. அவர்கள் நீண்ட ஆயுட்காலத்துடன் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளனர். ஜப்பானிய வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம் நாமும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம்.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
8வது சம்பளக் குழு அமல்படுத்தப்பட்ட பிறகு, அகவிலைப்படி அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படும். அகவிலைப்படி 50% அல்லது அதற்கு மேல் இருந்தால், அதை புதிய ஊதியக் குழுவில் இணைக்க ஒரு ஏற்பாடு உள்ளது.
நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI) அடிப்படையில் அகவிலைப்படி (DA) கணக்கிடப்படுகிறது. CPI அவ்வப்போது மாறுகிறது, இது அகவிலைப்படியிலும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. 8வது சம்பளக் குழு அமல்படுத்தப்பட்ட பிறகு, தற்போதைய அகவிலைப்படி அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்படும் என்பதால், ஊழியர்களின் மொத்த சம்பளம் அதிகரிக்கும்.
8வது ஊதியக்குழுவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் குழுவுக்கான தலைவர் மற்றும் உறுப்பினர்களின் அறிவிப்பு வரும். இதற்குப் பிறகு, ஊழியர்களின் புதிய சம்பள மேட்ரிக்ஸ் குறித்து ஆலோசிக்கப்படும். மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் அலவன்சுகளில் திருத்தம் செய்ய வாய்ப்பு உள்ளது. இதற்கு, ஊதியக் குழுவின் பரிந்துரைகள் பொருந்தும்.
ஆனால், 8வது சம்பளக் குழுவின் மிகப்பெரிய தாக்கம் அகவிலைப்படியில் இருக்கும். மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி பூஜ்ஜியமாக (0) மாற்றப்படும். அதாவது, புதிய ஊதியக் குழு அமல்படுத்தப்பட்டவுடன், அகவிலைப்படி பூஜ்ஜியமாக மாற்றப்படும்.
ஜனவரி 2026க்குள், அகவிலைப்படி (DA) 63 சதவீதத்தை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அகவிலைப்படி 50% -ஐ எட்டியவுடனேயே அது பூஜ்ஜியம் ஆக்கப்பட்டு அகவிலைப்படி தொகை அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கப்படும் என கூறப்பட்டது.
ஆனால், அப்படி நடக்கவில்லை. இப்போது புதிய சம்பளக் குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படும்போது, ஊழியர்களின் அகவிலைப்படி பூஜ்ஜியமாக (0) மாற்றப்பட்டு, அகவிலைப்படி தொகை அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படும் என்ற விவாதம் நடந்து வருகிறது.
இருப்பினும், அப்போதிருக்கும் அகவிலைப்படி (தோராயமாக 63%) அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா அல்லது 50% அகவிலைப்படி மட்டும்தான் அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா என்பது பற்றி இன்னும் தெளிவாகத் தெரியைல்லை. 50% தான் இணைக்கப்படும் என்றும் கூடுதலாக உள்ள 13 சதவீதம் இணைக்கப்படாது என்றும் ஒரு சாரார் கூறுகின்றனர். இப்போது அரசாங்கம் இது குறித்து இறுதி முடிவை எடுக்க வேண்டும்.
8வது சம்பளக் குழு அமல்படுத்தப்பட்ட பிறகு, மத்திய அரசு ஊழியர்களின் புதிய அடிப்படை சம்பளத்தில் அகவிலைப்படி கணக்கிடப்படும். இது 0 இலிருந்து தொடங்கப்படும். உதாரணமாக ஒருவரின் அடிப்படை சம்பளம் ரூ.34,200 என்று வைத்துக்கொள்வோம்.
அப்போது ஜனவரி 2026 முதல் அவரது அகவிலைப்படி 0 ஆக இருக்கும். பின்னர் ஜூலை 2026 இல், 3-4 சதவீத அகவிலைப்படி (தோராயமாக) அதனுடன் சேர்க்கப்படும். அப்போதிருந்து, மேலும் கணக்கீடுகள் தொடரும். அகவிலைப்படி பூஜ்ஜியமாக மாறினால், அது மற்ற கொடுப்பனவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
8வது சம்பளக் குழு அமல்படுத்தப்பட்ட பிறகு, அகவிலைப்படி அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படும். அகவிலைப்படி 50% அல்லது அதற்கு மேல் இருந்தால், அதை புதிய ஊதியக் குழுவில் இணைக்க ஒரு ஏற்பாடு உள்ளது.
நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI) அடிப்படையில் அகவிலைப்படி (DA) கணக்கிடப்படுகிறது. CPI அவ்வப்போது மாறுகிறது, இது அகவிலைப்படியிலும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. 8வது சம்பளக் குழு அமல்படுத்தப்பட்ட பிறகு, தற்போதைய அகவிலைப்படி அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்படும் என்பதால், ஊழியர்களின் மொத்த சம்பளம் அதிகரிக்கும்.
தற்போதைய சூழ்நிலையில், ஒரு ஊழியரின் அடிப்படை ஊதியம் ரூ.18,000 மற்றும் அகவிலைப்படி 50% என வைத்துக்கொள்வோம். அப்போது அகவிலைப்படி ரூ.9,000 ஆக இருக்கும். 8வது சம்பளக் குழு அமல்படுத்தப்பட்ட பிறகு, அடிப்படை சம்பளத்தில் அகவிலைப்படி சேர்க்கப்பட்டால் மொத்த அடிப்படை சம்பளம் ரூ.27,000 ஆக உயரும்.
புதிய ஊதிய விகிதம் அமல்படுத்தப்படும் போதெல்லாம், ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படும். விதிகளின்படி, ஊழியர்களுக்கு வழங்கப்படும் 100% அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்தில் சேர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால் இது நடக்காது. அப்படி செய்ய நிதி நிலைமை தடையாக இருக்கும். இருப்பினும், 2016 ஆம் ஆண்டில் அப்படி செய்யப்பட்டது.
அதற்கு முன், 2006 ஆம் ஆண்டு, ஆறாவது ஊதியக்குழு அறிமுகப்படுத்தப்பட்டபோது,டிசம்பர் வரை ஐந்தாவது ஊதிய அளவில் 187 சதவீத அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்தது. முழு அகவிலைப்படியும் அடிப்படை சம்பளத்தில் இணைக்கப்பட்டது. ஆகையால், ஆறாவது ஊதிய அளவின் குணகம் 1.87 ஆக இருந்தது. பின்னர் புதிய சம்பளப் பட்டியல் மற்றும் புதிய தர ஊதியமும் உருவாக்கப்பட்டன. ஆனால், அதை வழங்க மூன்று ஆண்டுகள் ஆனது.
2026 ஜனவரியில் 8வது சம்பளக் குழு அமல்படுத்தப்படும்போது, அகவிலைப்படி பூஜ்ஜியமாகிவிடும். அத்தகைய சூழ்நிலையில், அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்பட்டு, அது பூஜ்ஜியத்திலிருந்து கணக்கிடப்படும். ஜனவரி முதல் ஜூன் 2026 வரையிலான AICPI குறியீடு, அகவிலைப்படி 3 சதவீதமாக இருக்குமா, 4 சதவீதமாக இருக்குமா அல்லது எவ்வளவு இருக்கும் என்பதை தீர்மானிக்கும். இந்த நிலைமை தெளிவாகத் தெரிந்தவுடன், ஊழியர்களுக்கு 0 சதவீதத்தில் தொடங்கி அகவிலைப்படி வழங்கப்படும்.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
Copyright (c) AGRIEXAM.IN All Right Reseved