February 3, 2025

கள்ளகுறிச்சி DHS-ல் வேலைவாய்ப்பு அறிவிப்பு – 80+ காலிப்பணியிடங்கள் II உடனே விண்ணப்பிக்கவும்…

 

கள்ளகுறிச்சி DHS-ல் வேலைவாய்ப்பு அறிவிப்பு – 80+ காலிப்பணியிடங்கள் II உடனே விண்ணப்பிக்கவும்…

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள  District Health Society (DHS ) ஆனது  வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Cook, Office Assistant மற்றும் Hospital Worker உள்ளிட்ட  89 காலிப்பணியிடங்கள்  நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் குறித்த முழு விவரங்களையும்  கீழே விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Kallakurichi DHS காலிப்பணியிடங்கள்:

Special Educator, Social Worker, Lab Technician மற்றும் Pharmacist உள்ளிட்ட 89 காலிப்பணியிடங்கள்  நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Special Educator – 1 பணியிடம்

Occupational Therapist – 1 பணியிடம்

Social Worker – 1 பணியிடம்

Cook – 1 பணியிடம்

Office Assistant – 2 பணியிடம்

Hospital Worker – 16  பணியிடம்

Sanitary Worker – 22 பணியிடம்

Multipurpose Hospital Worker – 9 பணியிடம்

Sweeper – 17 பணியிடம்

Lab Technician – 3 பணியிடம்

Van Driver – 2 பணியிடம்

Cemonc Security – 2 பணியிடம்

Physiotherapist – 2 பணியிடம்

Pharmacist – 1 பணியிடம்

Mid Level Health Provider – 5 பணியிடம்

Therapeutic Assistant – 1 பணியிடம்

Dispenser – 2 பணியிடம்

Kallakurichi DHS கல்வி தகுதி:

Special Educator:

அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Bachelor’s அல்லது Master’s degree in Special Education படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Occupational Therapist:

Bachelor’s அல்லது  Master’s degree in Occupational Therapy படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Social Worker:

Master’s degree in Social Work – ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Cook:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சமாக 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Office Assistant:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சமாக 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Hospital Worker:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சமாக 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Sanitary Worker:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சமாக 8 ஆம் வகுப்பு தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும்.

Multipurpose Hospital Worker:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சமாக 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Sweeper:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சமாக 8 ஆம் வகுப்பு தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும்.

Lab Technician:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் DMLT படிப்பு முடித்திருக்க வேண்டும்.

Van Driver:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பில்  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  heavy driving license பெற்றிருக்க வேண்டும்.

Cemonc Security:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சமாக 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Physiotherapist:

Bachelor’s degree in Physiotherapy படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Pharmacist:

D.Pharm படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Mid Level Health Provider:

B.Sc in Nursing அல்லது DGNM படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Therapeutic Assistant:

Diploma in Nursing Therapy படிப்பு முடித்திருக்க வேண்டும்.

Dispenser:

D.Pharm படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

18 வயது நிறைவடைந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.


Kallakurichi DHS ஊதிய விவரம்:

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு பணிகளுக்கு வழங்கப்படும் மாத ஊதியம் பற்றி கீழே விவரிக்கக்கப்பட்டுள்ளது.

Special Educator – ரூ. 23,000

Occupational Therapist – ரூ. 23,000

Social Worker – ரூ. 23,800

Cook – ரூ. 8,500

Office Assistant – ரூ. 13,000

Hospital Worker – ரூ. 8,500

Sanitary Worker – ரூ. 8,500

Multipurpose Hospital Worker – ரூ. 8,500

Sweeper – ரூ. 8,500

Lab Technician – ரூ. 13,000

Van Driver – ரூ. 13,500

Cemonc Security – ரூ. 8,500

Physiotherapist -ரூ. 13,000

Pharmacist – ரூ. 15,000

Mid-Level Health Provider – ரூ. 18,000

Therapeutic Assistant – ரூ. 15,000

Dispenser – ரூ. 10,000

Kallakurichi DHS தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Kallakurichi DHS விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேல்குறிப்பிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள்  06.02.2025 என   தெரிவிக்கப்பட்டுள்ளது  . மேலும், இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

February 2, 2025

2024-2025 நிதியாண்டிற்கு நீங்கள் இதுவரை செலுத்திய வருமான வரி கணக்கை களஞ்சியம் செயலியில் பதிவிறக்கம் செய்வது எப்படி?

 IMG-20250202-WA0036

2024-2025 நிதியாண்டிற்கு நீங்கள் இதுவரை செலுத்திய வருமான வரி மற்றும் மீதமுள்ள வரி கணக்கை களஞ்சியம் செயலியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


களஞ்சியம் செயலியில் -Reports -Pay Drawn-2024-25 செலக்ட் செய்து pay drawn பட்டியலை டவுன்லோட் செய்யலாம்.


ஒரே பக்கத்தில் 11 மாதங்களுக்கு ஊதிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.


களஞ்சியம் app Link...👇👇👇 https://play.google.com/store/apps/details?id=com.ifhrms.kalanjiyam

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

TNPSC - குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதவிறக்கம் செய்வது எப்படி?

 

dinamani%2F2024-06%2F4fd9a1e9-0a11-4fc8-91f7-021307d8b5f2%2Ftnpsc

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது ஒருமுறை பதிவேற்றம்(ஓடிஆர்) மூலமாக விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகிவற்றை இணையதளத்தில் உள்ளீடு செய்து நுழைச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.


தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி முற்பகல் தமிழக அரசில் காலியாக உள்ள 2,540 குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்களை நிரப்புவதற்கான கொள்குறி வகையிலான ஒருங்கிணைந்த முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 5 லட்சத்து 81 ஆயிரம் பேர் எழுதினர். இதில் 29 ஆயிரத்து 809 பேர் அடுத்தக்கட்ட தேர்வுக்கு தகுதி பெற்றனர்.


அவர்களுக்கு வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி பிற்பகல் முதன்மைத் தேர்வின் தமிழ் தகுதித்தாள் தேர்வும் மற்றும் கொள்குறி வகையில் விடை அளிக்கும் பொது அறிவு மற்றும் பொது திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் தேர்வு நடைபெறும் எனவும், விரிவான விடை அளிக்கும் வகையிலான பொதுஅறிவுத் தேர்வு பிப்ரவரி 23 ஆம் தேதி முற்பகல் நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.


இந்த நிலையில், குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


நுழைவுச் சீட்டை பதவிறக்கம் செய்வது எப்படி?


தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பத்தாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in - இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


விண்ணப்பத்தாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம்(ஓடிஆர்) மூலம் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லாததால் எவ்வளவு சேமிக்க முடியும்?

 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வருமான வரி சலுகை மூலம் ஆண்டுக்கு ரூ. 12 லட்சம் வரை வருமான வரி இல்லை. இதுதவிர, நிலையான வருமான வரி விலக்கு ரூ.75 ஆயிரம் உள்ளது. எனவே, சம்பளம் பெறுவோர் ஆண்டுக்கு ரூ.12 லட்சத்து 75 ஆயிரம் வரை வருமான வரி செலுத்தத் தேவையில்லை.

17384685223057

வரி செலுத்துவோர் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் இருந்தால் அவர்கள் ரூ.80,000 அளவுக்கு பலன் பெறுவர். இது தற்போதுள்ள விகிதங்களின்படி செலுத்த வேண்டிய வரியில் 100 சதவீதம் ஆகும்.


ஆண்டுக்கு ரூ.18 லட்சம் வரை வருமானம் பெறுவோர் ரூ.70,000 வரை வரியை சேமிக்க முடியும். இது தற்போதைய வரி விகிதத்தில் 30 சதவீதம் ஆகும். ரூ. 25 லட்சம் வரை வருமானம் உள்ள ஒருவர் ரூ.1,10,000 அளவுக்கு வரி பலன் கிடைக்கும். இது தற்போதைய வரியில் 25 சதவீதம் ஆகும்.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp groupரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லாததால் எவ்வளவு சேமிக்க முடியும்?

JEE முதன்மை தேர்வு; பிப்.25 வரை விண்ணப்பிக்கலாம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

 1349380

பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மை தேர்வு ஏப்ரலில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் பிப்ரவரி 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று என்டிஏ அறிவுறுத்தியுள்ளது.


ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்டும். இது ஜேஇஇ முதன்மை தேர்வு, பிரதான தேர்வு என 2 பிரிவாக நடைபெறும். இதில், முதன்மை தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்துகிறது. ஆண்டுதோறும் ஜனவரி, ஏப்ரல் என 2 முறை இத்தேர்வு நடத்தப்படுகிறது.


அதன்படி 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தேர்வு ஜனவரி 22 முதல் 30-ம் தேதி வரை நடந்தது. சுமார் 13 லட்சம் பேர் எழுதினர். இதன் முடிவுகள் பிப்ரவரி 12-ம் தேதி வெளியிடப்பட உள்ளன.


இந்நிலையில், ஜேஇஇ 2-ம்கட்ட முதன்மை தேர்வு ஏப்ரல் 1 முதல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு தற்போது தொடங்கியுள்ளது. விருப்பம் உள்ள மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதளம் வாயிலாக பிப்ரவரி 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


முதல்கட்ட தேர்வு எழுதியவர்களும் இதில் பங்கேற்கலாம். தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்படும். ஹால் டிக்கெட் வெளியீடு உள்ளிட்ட இதர விவரங்கள் பின்னர் வெளியிடப்படும். இதுகுறித்த கூடுதல் தகவல்களை https://nta.ac.in என்ற தளத்தில் அறியலாம். தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிரமங்கள் இருந்தால், 011-40759000/69227700 என்ற தொலைபேசி எண் அல்லது jeemain@nta.ac.in எனும் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

3, 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘ஸ்லாஸ்’ தேர்வு நாளை தொடக்கம்: கூடுதல் வழிகாட்டுதல்கள் வெளியீடு

 1349381

அரசுப் பள்ளி​களில் 3, 5, 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்​களுக்கான ‘ஸ்லாஸ்’ தேர்வு நாளை (4-ம் தேதி) தொடங்​கு​கிறது. இத்தேர்​வுக்கான கூடுதல் வழிகாட்டு​தல்களை பள்ளிக்​கல்​வித் துறை வெளி​யிட்​டுள்​ளது.


இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி​களுக்கு பள்ளிக்​கல்வி இயக்​குநரகம் அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்கை விவரம்: தமிழகத்​தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி​களில் பயிலும் மாணவர்​களின் கற்றல் திறனை அளவிட ‘ஸ்லாஸ்’ எனும் மாநில கற்றல் அடைவு தேர்வு அவ்வப்​போது நடத்​தப்​படு​கிறது. அதன்​படி, இந்த ஆண்டு 3, 5, 8-ம் வகுப்பு பயிலும் 15.78 லட்சம் மாணவர்​களுக்கு பிப்​ரவரி 4 முதல் 6-ம் தேதிவரை ஸ்லாஸ் தேர்வு நடத்​தப்படஉள்ளது. கொள்​குறி வினாத்​தாள் அடிப்​படை​யில் தேர்வு நடைபெறும். 3-ம் வகுப்​புக்கு 35 கேள்வி​கள், 5-ம் வகுப்​புக்கு 45 கேள்விகள், 8-ம் வகுப்​புக்கு 50 கேள்விகள் இடம்​பெறும்.


இந்த தேர்​வுக்காக பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்​கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கூடுதல் வழிகாட்டு​தல்கள் வெளி​யிடப்​பட்​டுள்ளன. அதன்​படி, தேர்​வுக்கு முந்தைய நாள் வட்டார வள மையத்​தில் இருந்து வினாத்​தாள்களை பெற்று பள்ளி​களுக்கு எடுத்​துச் செல்ல வேண்​டும். ஒவ்வொரு நாளும் தேர்வு முடிந்த பிறகு, வினாத்​தாள்​கள், ஓஎம்ஆர் விடைத்​தாள்களை பெற்று வட்டார வள மையத்​தில் ஒப்படைக்க வேண்​டும். இவ்​வாறு அ​தில் கூறப்​பட்​டுள்​ளது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

மணற்கேணி செயலி பள்ளியில் பயன்படுத்தப்படுகிறதா? - ஆய்வுக்கு பள்ளிக்கல்வி துறை உத்தரவு

 

1349407

அரசுப் பள்ளிகளில் உள்ள ஸ்மார்ட் போர்டுகளில் மணற்கேணி செயலி பயன்படுத்தப்படுகிறதா என்பதை தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


இதுதொடர்பாக தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் கணினி சார்ந்த புதிய அறிவியல் தொழில்நுட்பங்களுடன் கற்றல் செயல்பாட்டுக்கு பெரிதும் உதவும் வகையில் மணற்கேணி செயலியை வடிவமைத்துள்ளது.


இந்த செயலியில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள பாடங்கள் தமிழ், ஆங்கில வழியில் அனிமேஷன் காணொலிகளாக மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் விதத்தில் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அரசு தொடக்கப் பள்ளிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திறன் பலகைகள் (ஸ்மார்ட் போர்டு) நிறுவப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.


இந்த பலகைகளில் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் உட்பட அனைத்து வகை ஆசிரியர்களும் தங்கள் பெயர் அல்லது செல்போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னர் அன்றைய வகுப்பறை குழலுக்கு ஏற்ற பாடங்களை தேர்வு செய்து கற்றல், கற்பித்தல் செயல்பாட்டினை மேற்கொள்ள வேண்டும்.


இதுதவிர தொடக்கப் பள்ளிகளில் மணற்கேணி செயலியை வகுப்பறைக் கற்பித்தலுக்கு ஆசிரியர்கள் பயன்படுத்தி வருகின்றனரா என்பதை அனைத்து அலுவலர்களும் பள்ளிப் பார்வை மற்றும் ஆய்வுகளின்போது கண்காணிக்க வேண்டும்.


மேலும், ஒவ்வொரு ஆசிரியரும் மணற்கேணி செயலியை திறன் பலகைகள் மூலம் பயன்படுத்தி வருவதை செல்போனில் படம்பிடித்து அதை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். இதுசார்ந்த அறிவுறுத்தல்களை முதல்நிலை கண்காணிப்பு அதிகாரிகளாக உள்ள வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

புதிய வருமான வரி மசோதா ஒரு வாரத்தில் அறிமுகம்

 1349291

வரு​மான வரி விகிதங்கள் தொடர்பாக அடுத்த வாரம் நாடாளு​மன்​றத்​தில் புதிய மசோதா அறிமுகம் செய்​யப்​படும் என்று மத்திய நிதி​யமைச்சர் நிர்மலா சீதா​ராமன் தெரி​வித்​துள்ளார்.


இதுகுறித்து நிதித்​துறை நிபுணர்கள் கூறிய​தாவது: புதிய வருமான வரி விகிதத்​தில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக அதிகரிக்​கப்​பட்டு உள்ளது. முழு​மையான விரி விகிதங்கள் தொடர்பாக புதிய மசோதா ஒரு வாரத்​தில் அறிமுகம் செய்​யப்​படும் என்று பட்ஜெட் உரையின்​போது அமைச்சர் நிர்மலா சீதா​ராமன் அறிவித்​துள்ளார். இந்த மசோதா குறித்து கடந்த பட்ஜெட்​டின்​போதே அமைச்சர் சுட்​டிக் காட்​டி​னார்.


கடந்த ஓராண்​டில் விரிவான மசோதா வரையறுக்​கப்​பட்டு உள்ளது. இந்த புதிய மசோதா​வில் பல்வேறு அம்சங்கள் இடம்​பெறக்​கூடும். அதாவது யாரெல்​லாம் வருமான வரி செலுத்த வேண்​டும். அவர்​களுக்கான வரி விகிதங்கள் என்னென்ன என்பன குறித்து தெளிவாக குறிப்​பிடப்​படலாம் வருமான வரி கணக்கு தாக்கலை எவ்வாறு மேற்​கொள்ள வேண்​டும். எவ்வாறு வருமான வரி செலுத்த வேண்​டும் என்பன உள்ளிட்ட அடிப்படை விவரங்​களும் புதிய மசோதா​வில் இடம்​பெறும். இவ்​வாறு நி​தித் துறை நிபுணர்​கள் தெரி​வித்​துள்ளனர்​.


வருமானவரி தாக்கல் காலம் நீட்டிப்பு: வருமானவரி தாக்கல் செய்வதற்கான கால வரம்பு 2 ஆண்டுகளாக இருந்தது. இது 4 ஆண்டுகளாக நீட்டிக்கப்படுகிறது என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்விக் கடன்களுக்கான பணத்தை செலுத்தினால் அதற்கு வரிப்பிடித்தம் (டிசிஎஸ்) செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். நேரடி வரி பிரச்சினைகளை தீர்க்க, வரி செலுத்துவோர் 33,000 பேர் விவாத் சே விஸ்வாஸ் 2.0 திட்டத்தை பயன்படுத்தியுள்ளனர். மூத்த குடிமக்களுக்கான வட்டி வருவாய்க்கான வரிபிடித்த வரம்பு இரட்டிப்பாக்கப்பட்டு ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.


மூத்த குடிமக்களுக்கு....: மூத்த குடிமக்​களுக்கான வட்டி வருமானத்​துக்கான டிடிஎஸ் வரம்பு ரூ.50,000-ல் இருந்து ரூ.1 லட்சமாக அதிகரிக்​கப்​பட்​டுள்​ளது. வயதான நிலை​யில் வாழ்​வா​தா​ரத்​துக்கு வருமானம் இன்றி வட்டியை மட்டுமே நம்பி​யிருக்​கும் லட்சக்​கணக்கான மூத்த குடிமக்​களுக்கு மிகவும் பயனளிப்​பதாக இந்த உச்ச வரம்பு இரட்​டிப்பு அறிவிப்பு அமைந்​துள்ளது.


மேலும், வீட்டு வாடகைக்கான டிடிஎஸ் வரம்​பும் ரூ.2.4 லட்சத்​தில் இருந்து ரூ.6 லட்சமாக பட்ஜெட்​டில் உயர்த்​தப்​பட்​டுள்​ளது. டிடிஎஸ் பிடித்தம் விகிதங்கள் மற்றும் வரம்​பு​களின் எண்ணிக்கையை குறைப்​பதன் மூலம் அதில் சீரமைப்பு செய்​யப்பட உள்ளதாக நி​தி​யமைச்​சர் தெரி​வித்​தார்​.




🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

February 1, 2025

SLAS 2025 - OMR Sheet நிரப்பும் பொழுது கவனிக்க வேண்டியவை

 IMG_20250201_112128 

 
▪️மாணவர்களின் பெயரை ஆங்கிலத்தில் Capital Letter -யில் எழுதவும்.
 ▪️Black /Blue colour பந்துமுனைப் பேனா மட்டுமே பயன்படுத்தவும்.

▪️ Ink pen / gel pen பயன்படுத்தக் கூடாது.

▪️OMR - ஐ மடக்கவோ,கசக்கவோ, கிறுக்கவோ கூடாது.

▪️தவறான விடைகளை Whitener / பிளேடு மூலம் திருத்தம் செய்ய முயற்சி செய்யக்கூடாது.

▪️ஒரே வினாவிற்கு இரண்டு விடைகளை தேர்வு செய்யக் கூடாது

*வரும் 04.02.2025, 05.02.2025 மற்றும் 06.02.2025 ஆகிய மூன்று நாட்கள் முறையே 3,5,8 ஆம் வகுப்புகளுக்கு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாநில அளவிலான அடைவு ஆய்வு (SLAS)  நடைபெற உள்ளது.

*இதற்கான மாதிரித் தேர்வு வினாத்தாள் பயிற்சியினை அனைத்து பள்ளிகளிலும் வழங்கிட அனைவரிடமும் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

*இதில் 3 ஆம் வகுப்பு மாணவர்கள் SLAS வினாத்தாளில் வினாவிற்கான விடையினை  வட்டமிட்டு கொடுத்தால் அதனை வைத்து தேர்வு நடத்துபவர் OMR SHEET ல் பூர்த்தி செய்து கொள்வார்.

*5 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் வினாத்தாளில் விடையினை வட்டமிட்டு பின்னர் மாணவர்கள் தான் OMR SHEET ல் பூர்த்தி செய்ய வேண்டும்.

 *எனவே இது சார்ந்த பயிற்சியினை மாணவர்களுக்கு வழங்கவும் SLAS வினாத்தாளில் அனைத்து வினாவிற்கும் விடையளிக்கவும் மாணவர்களை பழக்கப்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது.

*மேலும் 3 மற்றும் 5 ஆம் வகுப்பு குழந்தைகளில் 20 மாணவர்களுக்கும் 8 ஆம் வகுப்பு மாணவர்களில் 30 மாணவர்களும் ( அனைத்து பிரிவுகளில் இருந்தும்) SLAS  தேர்விற்காக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

*மேற்கண்ட எண்ணிக்கைக்கு குறைவாக உள்ள பள்ளிகளில் அனைத்து மாணவர்களும் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

*மேற்கண்ட எண்ணிக்கைக்கு அதிகமான மாணவர்கள் உள்ள பள்ளிகளில் எந்த மாணவர்கள் SLAS தேர்வில் பங்கேற்க வேண்டும் என்பதனை EMIS Server  மூலமாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. இதனை தேர்வு நடைபெறும் நாள் அன்று பள்ளியின் EMIS தளத்தில் பதிவிறக்கி அந்த மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்பதனை இதன்மூலம் அனைவருக்கும் அன்புடன் தெரிவிக்கப்படுகிறது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

பத்தாம் வகுப்புக்கான செய்முறை தேர்வு: தேர்வுத்துறை வழிகாட்டுதல்கள் வெளியீடு

 1349169

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 22-ம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது. அதற்கான வழிகாட்டுதல்களை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.


இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் ந.லதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்; தமிழக பள்ளிக்கல்வியில் 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. அதற்கு முன்னதாக செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 22 முதல் 28-ம் தேதிக்குள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.


அதன்படி மாணவர்களின் செய்முறைத் தேர்வு மதிப்பெண்களை பதிவு செய்வதற்கான வெற்று மதிப்பெண் பட்டியலை பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் பிப்ரவரி 17-ம் தேதி முதல் தேர்வுத் துறை வலைத்தளத்தில் (http://www.dge.tn.gov.in/) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதில் மாணவர்களின் செய்முறை மதிப்பெண் விவரங்களை பூர்த்தி செய்து மாவட்ட தேர்வுத் துறை அலுவலகங்களில் மார்ச் 4-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். அவற்றை தொகுத்து முழு விவரங்களை மார்ச் 15-ம் தேதிக்குள் இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


அதேபோல், தேர்வுக்கு வருகை புரியாதவர்களின் விவரங்களையும் அதற்குரிய படிவத்தில் பூர்த்தி செய்து வழங்க வேண்டும். தேர்வுக்கு தேவையான முன்னேற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு செய்து முடிக்க வேண்டும். இதுதவிர செய்முறைத் தேர்வுக்கான புறத்தேர்வாளராக பிற பள்ளிகளின் ஆசிரியர்களை தான் நியமிக்க வேண்டும் என்பன உட்பட வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்பட வேண்டும். இதுசார்ந்து அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group