February 4, 2025

விநியோகச் சங்கிலி மேலாண்மை படிப்பு மீண்டும் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

 

1349580

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (சென்னை ஐஐடி) சென்டர் ஃபார் அவுட்ரீச் அண்ட் டிஜிட்டல் எஜுகேஷன்’ (Centre for Outreach and Digital Education- CODE) மையம் சிஐஐ இன்ஸ்டிடியூட் ஆஃப் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ‘விநியோகச் சங்கிலி மேலாண்மை வல்லுநர்’ (Supply Chain Management professional – SCMPro) சான்றிதழ் படிப்புத் திட்டத்தை மீண்டும் தொடங்குகிறது.


இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை ஐஐடி, விநியோகச் சங்கிலி மேலாண்மையில் கூட்டுச் சான்றிதழ் வழங்கும் திட்டத்திற்காக சிஐஐ-யுடன் கூட்டுச் சேர்ந்துள்ளது. மேம்படுத்தப்பட்ட இத்திட்டத்தில், சென்னை ஐஐடி ஆசிரியர்கள் வீடியோ விரிவுரைகள் மூலம் வழங்கும் பயனுள்ள தகவல்களும் தற்போது இடம்பெற உள்ளன.


கடந்த 10 ஆண்டுகளில் ‘எஸ்சிஎம் புரோ’ சான்றிதழ் திட்டத்தின்கீழ் ஏற்கனவே 40,000-க்கும் மேற்பட்ட வல்லுநர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. சிஐஐ இன்ஸ்டிடியூட் ஆஃப் லாஜிஸ்டிக்ஸ் உயர்மட்ட கல்வி நிபுணத்துவத்துடன் கூடிய பாடத்திட்டத்தை ஒருங்கிணைத்து இதனை மேம்படுத்த உள்ளது. இப்புதிய பாடத்திட்டம், பங்கேற்பாளர்களுக்கு மேம்பட்ட திறன்களையும் விநியோகச் சங்கிலி மேலாண்மை குறித்த உலகளாவிய நுண்ணறிவையும் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. போட்டிகள் நிறைந்த துடிப்புமிக்க தொழில்துறையில் அவர்கள் சிறந்து விளங்க இந்தப் படிப்பு உதவிகரமாக இருக்கும்.


தகவல் தொழில்நுட்பம், மின்வணிகம், சில்லறை விற்பனை, நுகர்வோர் பயன்பாட்டுப் பொருட்கள், சரக்குப் போக்குவரத்து போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் வல்லுநர்களும், பொறியியல், வணிகம், அறிவியல், வணிக மேலாண்மைக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களும் பயன்பெறும் வகையில் இதற்கான பாடநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது.


இப்பாடத்திட்டம் ஏப்ரல் 1, 2025 அன்று தொடங்கப்பட உள்ளது. இதில் சேருவதற்கு பதிவு செய்வதற்கான கடைசி நாள் மார்ச் 31, 2025. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் இணைப்பின் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் - https://code.iitm.ac.in/supply-chain-management-professional-certification-scm-pro


இப்பாடத்திட்டத்தின் சிறப்புகளை எடுத்துரைத்த ஐஐடி மெட்ராஸ் சென்டர் ஃபார் அவுட்ரீச் அண்ட் டிஜிட்டல் எஜுகேஷன் (CODE) தலைவரும், பேராசிரியருமான ஆண்ட்ரூ தங்கராஜ் கூறுகையில், “இந்திய தொழில் கூட்டமைப்பின் தொழில்துறை நுண்ணறிவையும் சென்னை ஐஐடி-ன் சிறந்த கல்வியையும் இணைப்பதன் வாயிலாக, புதுப்பிக்கப்பட்ட இப்பாட நெறி உலகளாவிய, எதிர்காலத்திற்குத் தயார்படுத்தும் விநியோகச் சங்கிலித் தொழில் துறையில் வெற்றிபெறுவதற்கான கருவிகளை பங்கேற்பாளர்களுக்கு வழங்கும்” என்றார்.


இதுபோன்ற படிப்புகளின் முக்கியத்துவம் குறித்து விரிவாக விளக்கமளித்த சிஐஐ லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைவருமான கே. வி. மஹிதர், “சென்னை ஐஐடி சிஐஐ உடன் இணைந்திருப்பதன் மூலம், இந்த ஒத்துழைப்புத் திட்டத்தை முன்னெப்போதும் இல்லாத உயரத்திற்கு எடுத்துச் செல்லும் என நம்புகிறோம்” எனக் குறிப்பிட்டார்.


இந்த ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய சென்னை ஐஐடி கல்விப் பாடநெறிகளின் டீன் பேராசிரியர் பிரதாப் ஹரிதாஸ் கூறும்போது, "சென்னை ஐஐடி- சிஐஐ லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்திற்கு இடையிலான இந்த ஒத்துழைப்பு, கல்வி கற்றல் மற்றும் தொழில்துறை தேவைகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.


இத்திட்டத்தில் சென்னை ஐஐடி ஆசிரிய நிபுணத்துவத்தை ஒருங்கிணைப்பதன் மூலம், பங்கேற்பாளர்களுக்கு விநியோகச் சங்கிலி இயக்கவியல் பற்றிய ஆழமான புரிதலை வழங்குவதையும், இத்துறையில் சிறந்து விளங்க அவர்களைத் தயார்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்" எனக் குறிப்பிட்டார்.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

எஸ்சி, எஸ்டி மாணவர்களின் கல்விக் கடன் ரூ.48.95 கோடி தள்ளுபடி - தமிழக அரசு உத்தரவு


1349466

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்விக்கடன் ரூ.48.95 கோடியை தள்ளுபடி செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு 1972-1973 முதல் 2002-2003 வரையிலான காலங்களில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள் உட்பட அனைத்து படிப்புகளுக்கும் மற்றும் 2003-2004 முதல் 2009-2010 வரையிலான காலங்களில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு கல்விக் கடன்கள் வழங்கப்பட்டது.


அந்தக் கல்விக் கடன்களில் ரூ.48.95 கோடி நிலுவைத் தொகையை மாணவர்களிடமிருந்து வசூலிக்க இயலாததன் காரணமாகவும், வசூலிக்க சரியான பதிவேடுகள் மற்றும் விவரங்கள் ஏதும் அலுவலக ஆவணங்களில் இல்லாததாலும், வசூலிக்க வேண்டிய நபர்களை அடையாளம் காண இயலாததாலும், ரூ.48,95 கோடியை சிறப்பினமாக கருதி முழுவதையும் தள்ளுபடி செய்து (Write off proposal) அரசு ஆணையிடுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group 

2024-2025 ஆம் கல்வி ஆண்டு கல்வி இணை / கல்வி சாரா மன்றச் செயல்பாடுகள் - சிறார் திரைப்படங்களுக்கான பள்ளி மற்றும் வட்டார அளவிலான போட்டிகள் நடத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

IMG_20250204_110135

2024-25 - ஆம் ஆண்டில் , பார்வையில் காணும் செயல்முறைகளின் படி நவம்பர் . டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கான சிறார் திரைப்படங்கள் 6 முதல் 9 - ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு திரையிடப்பட்டுள்ன. 


அதனை தொடர்ந்து சிறார் திரைப்படம் திரையிடல் சார்ந்த பள்ளி , வட்டாரம் , மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டிகளை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது . அதன் பொருட்டு , அரசுப் பள்ளிகளில் பயிலும் 6 - ம் வகுப்பு முதல் 9 - ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் பங்கு பெறும் வகையில் எந்த ஒரு பள்ளியும் விடுபடாமல் . பள்ளி அளவிலான போட்டிகளை அட்டவணை -1 ல் குறிப்பிட்டுள்ளவாறு திட்டமிட்டு நடத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேலும் வட்டாரம் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்திடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் பின்னர் தெரிவிக்கப்படும்.


 வட்டாரம் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்தும் போது , இதில் சிறந்து விளங்கும் அனுபவம் வாய்ந்த நடுவர்களை தேர்ந்தெடுத்து உரிய முறையில் போட்டிகளை நடத்துதல் வேண்டும் . மேலும் , பள்ளி , வட்டாரம் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளை கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு திட்டமிட்டு நடத்திட வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது. 


ஒவ்வொரு நிலையிலான போட்டிகளை நடத்தும் போதும் , போட்டிகள் குறித்த விவரத்தினை போட்டி நடக்கும் தேதிக்கு முந்தைய தினத்தன்று மட்டுமே மாணவர்களுக்கு தெரிவித்தல் வேண்டும். எக்காரணம் கொண்டும் முன்னதாக தெரிவித்தல் கூடாது

movie screening Competition reg - Download here




 🔻🔻🔻

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

அரசு பணிகளில் இந்த ஆண்டு எத்தனை காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்? - டிஎன்பிஎஸ்சி தலைவர் விளக்கம்

 1349502

தமிழ்​நாடு அரசு பணியாளர் தேர்​வாணையம் (டிஎன்​பிஎஸ்சி) வாயிலாக இந்த ஆண்டு அரசு பணிகளில் எத்தனை காலி​யிடங்கள் நிரப்​பப்​படும் என்பது ஏப்ரல் மாதம் தெரிய​வரும் என்று தேர்​வாணை​யத்​தின் தலைவர் எஸ்.கே.பிர​பாகர் தெரி​வித்​தார்.


அரசு பணிகளில் சேர விரும்​புவோரின் வசதிக்காக டிஎன்​பிஎஸ்சி வருடாந்திர தேர்வு அட்ட​வணையை ஆண்டு​தோறும் வெளி​யிட்டு வருகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான தேர்வு அட்ட​வணையை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளி​யிட்​டது. அதில் குரூப்-1 தேர்வு, ஒருங்​கிணைந்த குரூப்-2, 2ஏ தேர்வு, குரூப்-4 தேர்வு,தொழில்​நுட்ப பணிகள் தேர்வு (நேர்​முகத் தேர்வு மற்றும் நேர்​முகத் தேர்வு இல்லாதது) என மொத்தம் 7 தேர்​வு​களுக்கான அறிவிப்புகள் இடம்​பெற்றுள்ளன.

வழக்​கமாக வருடாந்திர தேர்வு அட்ட​வணை​யில், என்னென்ன தேர்​வு​கள், எத்தனை காலி​யிடங்கள் என்பன உள்ளிட்ட விவரங்​களும் விரிவாக குறிப்​பிடப்​பட்​டிருக்​கும். ஆனால், 2025-ம் ஆண்டு தேர்வு அட்ட​வணை​யில் அதுபோன்று காலி​யிடங்கள் பற்றிய விவரம் இடம்​பெற​வில்லை.


மேலும், முன்பு தனித்தனி தேர்வாக நடத்​தப்​பட்டு​வந்த பல தேர்​வுகள் ஒருங்​கிணைந்த தொழில்​நுட்ப தேர்​வுகள் (நேர்​காணல் உள்ளவை), ஒருங்​கிணைந்த தொழில்​நுட்​பத்​தேர்​வுகள் (நேர்​காணல் இல்லாதவை) என இரு பெரிய தேர்​வு​களாக சுருக்​கப்​பட்​டுள்ளன. தேர்வு அட்ட​வணை​யில் அந்த ஒருங்​கிணைந்த தேர்​வு​களில் என்னென்ன பதவி​களுக்கான தேர்​வுகள் இருக்​கும் என்பதும் அவற்றில் குறிப்​பிடப்​பட​வில்லை. இதனால், எத்தனை காலி​யிடங்கள் அறிவிக்​கப்​படும். எந்தெந்த பதவி​களுக்கு தேர்​வுகள் நடத்​தப்​படும் என்பது தேர்​வர்​களுக்கு தெரிய​வில்லை.


இதுகுறித்து டிஎன்​பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிர​பாகரிடம் கேட்​ட​போது, “தற்​போதைய நிலை​யில் நடப்பு நிதி ஆண்டுக்கு (2024-2025) ஒதுக்​கப்​பட்ட அனைத்து காலி​யிடங்​களுக்​குமான போட்​டித்​தேர்​வு​களும் நடத்தி முடிக்​கப்​பட்டு​விட்டன. எனவே, அடுத்த நிதி ஆண்டுக்கான காலி​யிடங்​களின் விவரம் மார்ச் மாதத்​துக்கு பிறகே அதாவது ஏப்ரலில்​தான் தெரிய​வரும். தேர்​வு​களுக்கான அறிவிப்புகள் வெளி​யிடும்​போது அதில் காலி​யிடங்கள் எண்ணிக்கை​யும் எந்தெந்த பதவிகள் என்பதும் இடம்​பெறும்.


தேர்​வாணை​யத்​தால் நடத்​தப்​படும் தேர்​வு​களின் முடிவுகளை குறித்த காலத்​தில் வெளி​யிடு​வதற்கு முன்னுரிமை அளிக்​கிறோம். கடந்த ஆண்டு அக்டோபரில் நடத்​தப்​பட்ட ஒருங்கிணைந்த தொழில்​நுட்​பணி​களுக்கான தேர்​வு​களின் (நேர்​காணல் இல்லாதது) ​முடிவு​கள் பிப்​ரவரி ​மாதம் வெளி​யிடப்​படும் என அறி​வித்​திருந்​தோம். அதன்​படி, அத்​தேர்​வு​களின் ​முடிவு​கள் அடுத்த வாரம் வெளி​யிடப்​படும்​” என்​றார்​.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

 

IMG-20250204-WA0024

 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும் . காலநிலை கல்வி அறிவுக்கென ஒரு கொள்கையை தமிழ்நாடு அரசு விரைவில் அறிவிக்க உள்ளது.

சூழல் மன்றங்கள்

* தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும்.

* காலநிலை கல்வி அறிவுக்கு என்று ஒரு கொள்ளை வகுத்து தமிழ்நாடு அரசு விரைவில் வெளியிடும்.

 * காலநிலை குறித்து மாணவர்கள் மூலமே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் . 

* அரசு துறை அலுவலர்களுக்கு காலநிலை மாற்ற தடுப்பு குறித்து திறன் பயிற்சி அளிக்கப்படும்.

 * காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடிய வேலாண்மை , நீர் வளம் ஆகிய துறைகளுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படும்.

 * வெப்ப அலை பாதிப்புகளை எதிர்கொள்ள மாநில பேரிடர் நிதி பயன்படுத்தப்படும் .



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

TERM - 2 CCE Register Updated Now in EMIS Website

 

IMG_20250204_143034

EMIS NEW UPDATE 

TERM - 2   ( 2024 - 2025 ) 

1- 5 வகுப்புகளுக்கான CCE REGISTER ஐ தற்போது பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

February 3, 2025

Income Tax - நீங்கள் இதுவரை செலுத்திய வருமான வரி கணக்கை Kalanjiyam Appல் பதிவிறக்கம் செய்வது எப்படி? - Step By Step Procedure

 



2024-2025 நிதியாண்டிற்கு நீங்கள் இதுவரை செலுத்திய வருமான வரி மற்றும் மீதமுள்ள வரி கணக்கை களஞ்சியம் செயலியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


களஞ்சியம் செயலியில் -Reports -Pay Drawn-2024-25 செலக்ட் செய்து pay drawn பட்டியலை டவுன்லோட் செய்யலாம்.


ஒரே பக்கத்தில் 11 மாதங்களுக்கு ஊதிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.


Username 

⬇️


Password 

⬇️


Signin 

⬇️


Employee Self Service 

⬇️


Reports

⬇️


Pay Slip

⬇️


Select Year

⬇️


Select month 

⬇️


Go

⬇️


Emp-Regular-Salary

⬇️


Download



Click Here to Download - Income Tax - Kalanjiyam App - Direct Link


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Income Tax Exemption – Pensioners - அடுத்த ஆண்டு 2025-2026 முதல் வரி விலக்கு பெறும் ஆண்டு வருமான வரம்புகள்

 Tax%20Exemption


வரி விலக்கு - ஓய்வூதியம் பெறுபவர்கள் - அடுத்த ஆண்டு 2025-2026 முதல் வரி விலக்கு பெறும் ஆண்டு வருமான வரம்புகள்


Tax Exemption – Pensioners – Annual Income Limits for Tax Exemption from next year onwards


    வருமான வரியாக ஒரு ரூபாய் கூட செலுத்த தேவையில்லை என்னும் வருமான வரம்புகள் கொண்ட ஓய்வூதியம் பெறுவோர் விவரம்


1.  ஓய்வூதியம் 1,06,250க்கு மேல் இல்லாதவர்கள் மற்றும் நிலையான வைப்புத்தொகை இல்லாதவர்கள் 


2. ஓய்வூதியம் 99,000 க்கு மிகாமல் மற்றும் 10 லட்சத்திற்கும் குறைவான நிலையான வைப்புத்தொகை 


3. ஓய்வூதியம் 92,000க்கு மிகாமல் மற்றும் நிலையான வைப்புத்தொகை 20 லட்சத்துக்கும் குறைவாக 


4. ஓய்வூதியம் 85,000 க்கு மிகாமல் மற்றும் 30 லட்சத்திற்கும் குறைவான நிலையான வைப்புத்தொகை 


5. ஓய்வூதியம் 78,000 க்கு மிகாமல் மற்றும் 40 லட்சத்திற்கும் குறைவான நிலையான வைப்புத்தொகை 


6. ஓய்வூதியம் 71,000 க்கு மிகாமல் மற்றும் 50 லட்சத்திற்கும் குறைவான நிலையான வைப்புத்தொகை 


7. ஓய்வூதியம் 63,700க்கு மிகாமல் மற்றும் 60 லட்சத்திற்கும் குறைவான நிலையான வைப்புத்தொகை 


8. ஓய்வூதியம் 56,700க்கு மிகாமல் மற்றும் 70 லட்சத்திற்கும் குறைவான நிலையான வைப்புத்தொகை 


9. ஓய்வூதியம் 49,600க்கு மிகாமல் மற்றும் 80 லட்சத்திற்கும் குறைவான நிலையான வைப்புத்தொகை 


10. ஓய்வூதியம் 42,500 க்கு மிகாமல் மற்றும் 90 லட்சத்திற்கும் குறைவான நிலையான வைப்புத்தொகை 


11. ஓய்வூதியம் 36,500க்கு மிகாமல் மற்றும் ஒரு கோடிக்குக் கீழே நிலையான வைப்புத்தொகை



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

February Month - Teachers Diary


IMG_20241228_132636

2025 பிப்ரவரி மாதம் "ஆசிரியர் டைரி"


01.02.2025 - சனிக்கிழமை

ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்

BEO அலுவலகம்


04.02.2025 - செவ்வாய்க்கிழமை

3ஆம் வகுப்பு SLAS தேர்வு


05.02.2025 - புதன்கிழமை

5ஆம் வகுப்பு SLAS தேர்வு


06.02.2025 - வியாழக்கிழமை

8ஆம் வகுப்பு SLAS தேர்வு


08.02.2025 - சனிக்கிழமை

ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்

DEO அலுவலகம்


11.02.2025 - செவ்வாய்க்கிழமை

தைப்பூசம்

அரசு விடுமுறை


14.02.2025 - வெள்ளிக்கிழமை

ஷாபே பராஅத்

வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்- RL


15.02.2025 - சனிக்கிழமை

ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்

CEO அலுவலகம்


26.02.2025 - புதன்கிழமை

மகா சிவராத்திரி

வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்- RL


28.02.2025 - வியாழக்கிழமை

ரம்ஜான் நோன்பு தொடக்கம்

வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்- RL


`பிப்ரவரி மாதம் அனைத்து சனிக்கிழமையும் வாரவிடுமுறை


`பிப்ரவரி மாத சம்பளப் பட்டியலில் வருமான வரி இறுதி பிடித்தம் செய்தல்`


`இரண்டாம் கட்ட தொழில் வரி செலுத்தல்`

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group