Search

இருமல், காய்ச்சல், தலைவலி… இத்தனை பிரச்னைகளுக்கு தீர்வு தரும் கிராம்பு!

 இருமல், சளி, தலைவலி மற்றும் பலவற்றிற்கான வீட்டு மருந்தாகவும் கிராம்பு செயல்படுகிறது.



கிராம்பு, இலவங்கப்பட்டை, ஏலக்காய் மற்றும் பல மசாலாப் பொருட்கள் ஒவ்வொரு வீட்டு சமையலறையில் நிச்சம் இடம் பிடிக்கும் பொருட்கள். இந்த மசாலாப் பொருட்கள் நறுமணமுள்ளவையாகவும், நமது அன்றாட சமையலில் பரவலாகப் பயன்படுத்தபவையாகவும் உள்ளன. மேலும், இவை அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் செறிவூட்டப்பட்டும், பழங்காலத்திலிருந்தே பாரம்பரிய மருத்துவ நடைமுறையின் ஒரு பகுதியாகவும் இருந்து வருகின்றன. 

இந்த மசாலா பொருட்களை நாம் சரியான அளவில் எடுத்துக் கொண்டால், நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், பருவகால நோய்களைத் தடுக்கவும், உள்ளிருந்து நம்மை ஊட்டவும் உதவும். 

அந்த வகையில் கிராம்பு பல மருத்துவ மற்றும் ஆரோக்கிய நன்மைகளை கொண்ட ஒரு நறுமண மூலிகையாக உள்ளது. இவற்றின் நன்மைகளை பிரபல ஊட்டச்சத்து நிபுணரும் வாழ்க்கை பயிற்சியாளருமான லூக் குடின்ஹோ தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில் பகிர்ந்துள்ளார். அவற்றை நாங்கள் இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம். 

கிராம்பு தரும் ஆரோக்கிய நன்மைகள்

கிராம்பு மிகவும் பிரபலமான மசாலாப் பொருட்களில் ஒன்றாகும். இவை சமையலில் அதன் விரிவான பயன்பாடு தவிர, இருமல், சளி, தலைவலி மற்றும் பலவற்றிற்கான வீட்டு மருந்தாகவும் செயல்படுகிறது. இது சளி மற்றும் காய்ச்சலைத் தடுக்கும். அழற்சி எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு, கார்மினேட்டிவ் மற்றும் வாயு எதிர்ப்பு பண்புகள் நிறைந்தும் காணப்படுகிறது. 

“கிராம்பு (மற்றும் கிராம்பு எண்ணெய்) ஆக்ஸிஜனேற்றத்தின் வளமான ஆதாரங்களில் ஒன்றாகும். இது ஒரு கிருமி நாசினியாகவும் வலி நிவாரணியாகவும் பயன்படுகிறது. குறிப்பாக பல்வலி மற்றும் வயிற்று வலியில் இருந்து பாதுகாக்கிறது.” என்று டாக்டர். அசுதோஷ் கௌதம் கூறியுள்ளார். 

“கிராம்புகளை சரியான அளவில் எடுத்துக் கொண்டால், நமது உடலில் உள்ள சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும். இந்த சூடான மற்றும் இனிப்பு மசாலாவில் நிக்ரிசின் உள்ளது. இது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதாக அறியப்படுகிறது. மேலும் சர்க்கரையை தடுக்கிறது. அதோடு பல் வலி, வாய் துர்நாற்றம், அஜீரணம், குமட்டல், வாந்தி உள்ளிட்ட பலவற்றையும் தடுக்க இது உதவுகிறது” என ஊட்டச்சத்து நிபுணர் லூக் குடின்ஹோ அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

கிராம்புகளை எவ்வாறு உட்கொள்ள வேண்டும்? (மருந்தளவு)

“கிராம்புகளை மெல்லவோ அல்லது விழுங்கவோ கூடாது. அதற்கு பதிலாக உங்களால் முடிந்தவரை ஒரு கிராம்பு அல்லது இரண்டை எடுத்து உறிஞ்சவும்.

இது பெரும்பாலான மக்களுக்கு சரியாக வேலை செய்யும். ஆனால் சிலருக்கு அது வேலை செய்யாமல் போகலாம். உங்களுக்கு பொருத்தமாக இருந்தால் அதை முயற்சி செய்யுங்கள், இல்லையென்றால் வேண்டாம்,” என்று லூக் குடின்ஹோ விளக்கியுள்ளார். 

ஆன்லைனிலேயே PPF , SSY போன்ற அஞ்சலக திட்டங்களில் முதலீடு செய்யலாம்

சமீப காலமாக முதலீடு செய்ய வேண்டும் என்ற ஆர்வம் மக்கள் கணிசமாக அதிகரித்துள்ளது எனலாம். எனினும் முதலீடு செய்யும் போது அது பாதுகாப்பானதா? லாபகரமானதா? என்பதையும் பார்க்கப்படுகிறது.



ஏனெனில் சம்பாதித்த பணத்தை சேமிப்பதே கடினம். அதனை சரியான வழியில் செய்யாவிட்டால், பின் முதலீட்டினை இழந்து கஷ்டப்பட நேரிடும்.

இதனாலேயே இன்றைய காலக்கட்டத்தில் பலரும் அஞ்சலக திட்டங்களையே விரும்புகின்றனர். இது பாதுகாப்பானது. நம்பிக்கையானது. கணிசமான வருவாயினை கொண்டது. போதாக்குறைக்கு பல திட்டங்களில் வரிச்சலுகையும் கிடைக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக வங்கிகளை போலவே, அஞ்சலகத்திலும் பல சலுகைகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.

முதலீடு ஆன்லைனில் செய்ய முடியுமா? 
தற்போது நாட்டில் மூன்றாவது அலையின் தாக்கம் ஆரம்பித்துள்ளது. பல மாநிலங்களில் ஏற்கனவே கட்டுப்பாடுகளை அதிகரிக்க மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன. ஆக இந்த காலக்கட்டத்தில் வீட்டில் இருந்து ஏதேனும் பாதுகாப்பான முதலீடினை செய்ய முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 
குறிப்பாக அஞ்சலக திட்டங்களில் வீட்டில் இருந்து முதலீடு செய்ய முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கணக்கினை ஆன்லைனில் தொடங்கலாமா? மேலும் ஆன்லைனிலேயே வங்கிகளில் பணம் பரிமாற்றம் செய்வது போல, அஞ்சலக கணக்கில் இருந்தும் செய்து கொள்ள முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதேபோல ஆன்லைனிலேயே அஞ்சலத்தின் சேமிப்பு கணக்கினை தொடங்கிக் கொள்ள முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனெனில் லாக்டவுன் சமயத்தில் வீட்டில் இருந்தே இதனை செய்து கொள்ள வசதியாக இருக்குமே.

என்னென்ன திட்டங்களுக்கு அனுப்பலாம்? 
நீங்கள் இருந்த இடத்தில் இருந்து ஆன்லைனிலேயே டிஜிட்டல் சேமிப்பு கணக்கினை எங்கிருந்து வேண்டுமானாலும் தொடங்கிக் கொள்ளலாம். இதாற்காக அஞ்சலகத்தில் IPPB மொபைல் ஆப் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இதிலிருந்தே பணத்தினையும் பரிமாற்றம் செய்து கொள்ளலாம். இது அஞ்சலகத்தின் தொடர் வைப்பு நிதி, பொது வருங்கால வைப்பு நிதி (PPF), சுகன்யா சம்ரிதி யோஜனா(SSY) கனக்கிற்கும் பணத்தினை மாற்றிக் கொள்ளலாம்.

வரிச்சலுகை உண்டு அஞ்சலகத்தில் 9 வகையானது சேமிப்பு திட்டங்கள் உள்ளன. அதில் அஞ்சலகத்தில் தொடர் வைப்பு நிதி திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி, சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம், டெபாசிட் திட்டங்கள் என பலவும் உள்ளன. இந்த திட்டங்களில் 80 சி பிரிவின் கீழ் வரி சலுகையும் கிடைக்கும்.

வங்கிக் கணக்கில் இருந்து IPPB அஞ்சலக திட்டங்கள் மக்களுக்கு பாதுகாப்பான திட்டங்களாகவும் உள்ளது. ஆன்லைனில் செய்த பிறகு ஒரு முறை நீங்கள் அஞ்சலகம் செல்ல வேண்டியிருக்கும். நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்தும் அஞ்சலக கணக்கில் பணத்தினை பரிமாற்றம் செய்து கொள்ளலாம். அதன் பிறகு அஞ்சலக கணக்கில் DOP என்ற டிபார்ட்மெண்ட் ஆப் போஸ்ட் ஆபிஸ் புராடக்ட்ஸ் என்ற ஆப்சனில் பார்க்கவும். அதன் பிறகு எங்கு பணம் அனுப்ப வேண்டுமோ? அந்த ஆப்சனை க்ளிக் செய்ய வேண்டும். உதாரணத்திற்கு பிபிஎஃப் கணக்கிற்கு பணம் அனுப்ப வேண்டுமெனில் அதனை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு பிபிஎஃப் கணக்கு என், DOPன் கணக்கு எண் உள்ளிட்டவற்றை பதிவிட வேண்டும். அதேபோல மற்ற திட்டங்களுக்கும் இதுபோலவே பேமெண்ட் செய்து கொள்ளலாம். இது எவ்வளவு தொகை, என்பதை மென்சன் செய்து கொடுக்க வேண்டும். அஞ்சலகத்தின் இந்த ஆப் ஆண்ட்ராய்டு மற்றும் IoS-ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சாதாரண சளியா? ஒமைக்ரானா? வித்தியாசம் என்ன? அறிகுறிகள் சொல்வதென்ன?

 நடப்பது குளிர்காலம் என்பதால் பலருக்கும் சளி காய்ச்சல் உள்ளிட்ட தொல்லைகள் காணப்படுகின்றன. இதற்கு மத்தியில், நம்மை பாதித்திருப்பது சாதாரண சளியா அல்லது ஒமைக்ரான் பாதிப்பா என்பதை கண்டறிவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.



 அதிகரித்து வரும் பாதிப்புகள் மற்றும் மாறிவரும் வானிலைக்கு மத்தியில், சளி, இருமல், தொண்டை புண், மூக்கு ஒழுகுதல் மற்றும் தலைவலி போன்ற அறிகுறிகள் உங்களை இக்கட்டான நிலைக்குத் தள்ளலாம். அதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே.

நாட்டில் உள்ள பெரும்பாலான மாநிலங்கள் இன்னும் குளிர்காலத்தை அனுபவித்து வருகின்றன அல்லது குளிர்காலம் முடிவடைய உள்ளதால் வானிலையில் படிப்படியாக மாற்றங்கள் ஏற்படுகின்றன.

காலநிலை மாறுபாடு:


இத்தகைய காலநிலையில் ஒரு நபருக்கு சளி மற்றும் இருமல் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால், ஜலதோஷம் மற்றும் இருமல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட கோவிட்-டின் ஒமைக்ரான் மாறுபாட்டின் பரவலுக்கு மத்தியில், மக்கள் வித்தியாசத்தைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப சிகிச்சையைப் பெற வேண்டும்.

சளி, ஒமைக்ரான் வித்தியாசம் :

இருமல், சுவை மற்றும் வாசனை இழப்பு, சோர்வு, மூச்சுத் திணறல் மற்றும் அதிக காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளால் கோவிட் பொதுவாக அடையாளம் காணப்படுகின்றன.

ஆனால், புதிய கோவிட் ஒமைக்ரானைப் பற்றி நாம் பேசினால், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் படி, மூக்கு ஒழுகுதல், தொடர்ந்து இருமல், சோர்வு மற்றும் எரிச்சல் ஆகியவை முக்கிய அறிகுறிகளாகும். இது தவிர, குமட்டல் மற்றும் பசியின்மை ஆகியவை மாறுபாட்டின் இரண்டு புதிய அறிகுறிகளாக இருப்பதை ஸோ (Zoe) என்ற செயலி தனது ஆய்வில் கண்டறிந்துள்ளது.

தீவிர அறிகுறிகள்:


தொண்டை வலி, உடல் வலி, இரவில் வியர்த்தல் மற்றும் தும்மல் ஆகியவை மற்ற அறிகுறிகளாகும். ஒமைக்ரானின் இந்த அறிகுறிகள் பொதுவான சளி மற்றும் இருமலுடன் அடிக்கடி குழப்பமடையலாம்.

ஏனெனில் தொண்டை புண் மற்றும் மூக்கு ஒழுகுதல், அதைத் தொடர்ந்து இருமல், தும்மல் மற்றும் தலைவலி ஆகியவை பிந்தைய அறிகுறிகளாகும்.


கரோனா பரவல்

இரண்டு நிலைகளிலும் உள்ள வைரஸ் மேல் சுவாச மண்டலத்தை பாதிக்கும் என்பதால் அறிகுறிகள் மிகவும் ஒத்தவை. அறிகுறிகள் தவறாக இருக்கலாம் என்றாலும், ஒரு நபர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டிருந்தால், அறிகுறிகளின் தீவிரம் அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.


அதிக தண்ணீர் குடியுங்கள்:


இருப்பினும், நீங்கள் இன்னும் குழப்பமாக இருந்தால், சரியான சிகிச்சையைப் பெற, வைரஸை நீங்களே பரிசோதித்துக்கொள்ளுங்கள். இதற்கிடையில், ஆஸ்திரேலிய வல்லுநர்கள் வீட்டிலேயே கோவிட் நோயிலிருந்து மீள்வதற்கு தண்ணீர் உட்கொள்ளலை அதிகரிக்கவும், சரியான படுக்கை ஓய்வை உறுதிப்படுத்தவும் பரிந்துரைக்கின்றனர்.

முந்தைய வகைகளுடன் ஒப்பிடும்போது, குறிப்பாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு, ஒமைக்ரான் கடுமையான தொற்றுநோயை ஏற்படுத்தாது என்று இதுவரை அறிக்கைகள் காட்டுகின்றன. ஆனால் சமீபத்திய அறிக்கையில், உலக சுகாதார அமைப்பின் (WHO) தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் மரியா வான் கெர்கோவ் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.


ஒமைக்ரான் ஜலதோஷம் அல்ல:


ஒமைக்ரான் ஜலதோஷம் அல்ல. சில அறிக்கைகள் டெல்டாவுடன் ஒப்பிடும்போது ஒமைக்ரான் பாதிப்பாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான ஆபத்தை குறைக்கிறது என்றாலும், இன்னும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் ஒமைக்ரான் மற்றும் டெல்டா பாதிப்பினால் இறப்பவர்கள் உள்ளனர். மேலும், உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) வின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதனும் ட்விட்டரில் "ஒமைக்ரான் சாதாரண ஜலதோஷம் அல்ல" என்று கூறியுள்ளார்.


விழிப்புடன் இருக்க வேண்டும்:


மேலும், "அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளை பரிசோதிக்கவும், ஆலோசனை செய்யவும் மற்றும் கண்காணிக்கவும் அமைப்புகள் இருப்பது முக்கியம். இந்த ஒமைக்ரான் பாதிப்புகள் திடீரென்று அதிகரிக்கலாம்" என்றும் அவர் எச்சரித்துள்ளார்.


உலக சுகாதார அமைப்பு:


லேசான தொற்று என அறியப்பட்டாலும், சில நாடுகளில் ஒமைக்ரான் காரணமாக இறப்புகள் பதிவாகியுள்ளதால், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். பாதிப்புகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால், மக்கள் வீட்டிலேயே இருக்கவும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றவும் சுகாதார அலுவலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


கெட்ட கொழுப்புக்கள் சேர்வதை தடுக்க உதவும் உணவுகள் என்ன தெரியுமா...?

 தினமும் உணவுகளில் பீன்ஸ் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் குறைவதுடன் உடல் எடையை குறைக்கவும் உதவியாக இருக்கும்.



கத்தரிக்காயில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது சாப்பிடும் உணவுகள் சமிபாட்டையவும் உணவில் உள்ள கொழுப்புக்கள் உறிஞ்சப்படுவதையும் தடுக்கின்றது. இதன் மூலமாக உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வது தடுக்கப்படுகின்றது.

பச்சை காய்கறிகளான கீரை வகைகள், கோவை மற்றும் பீன்ஸ் இது போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்து வர உடலில் கெட்ட கொழுப்பு குறைந்து நல்ல கொழுப்பு அதிகரிக்கும். கீரை வகைகளில் பசலைக்கீரை கெட்ட கொழுப்பை கரைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பழங்களை சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. கெட்ட கொழுப்பை கரைப்பதில் எலுமிச்சை சிறந்து விளங்குகின்றது.

இரத்த நாளங்களில் உள்ள கெட்ட கொழுப்பை கரைப்பதில் மீன்கள் முக்கியமானவை. இருதயம் சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள் உணவுகளில் மீன்கள் இருக்கும் படி பார்த்துக்கொள்ளுவது மிகவும் நல்லது.

அதிக நல்ல கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்-டி நிறைந்துள்ள பழம் அவகோடா. இது உடலில் நல்ல கொழுப்பை அதிகரித்து கெட்ட கொழுப்பினை கரைக்க முக்கிய பங்கு வகிக்கிறது.

பூண்டில் அலிசின் எனும் இதயத்தை பாதுகாக்கும் அற்புதமான பொருள் நிறைந்திருக்கின்றது. இது கொலஸ்ட்ராலை வேகமாக குறைப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.

சின்ன வெங்காயத்தில் ஆன்டி ஒக்ஸிட் அதிகமாக நிறைந்திருக்கிறது. இரத்த குழாயில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைப்பதில் வெங்காயம் முக்கிய பங்கு வகிக்கிறது.

சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய பழங்கள் ???

 நீரிழிவு நோய் உள்ளவர்கள் பழங்களைச் சாப்பிடுவதில் கவனத்துடன் இருப்பது நல்லது. பழங்கள் உடலுக்கு நன்மை செய்தாலும், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அது சில நேரம் எதிர்மறையாகி விடுகிறது.
நீரிழிவு நோயாளிகளைப் பொறுத்த வரை, ஒவ்வொரு பழமும் ரத்தச் சர்க்கரை அளவை மாற்றும் திறன் கொண்டது. முன்னெச்சரிக்கையாக சில பழங்களை உண்ணாமல் தவிர்க்க வேண்டும். ஏனென் றால், ரத்தச் சர்க்கரை அளவை மோசமாக உயர்த்தக்கூடிய பழங்களும் உள்ளன.
சர்க்கரை அளவின்படி பழங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. நீரிழிவு நோய் உள்ளவர்கள் ஒவ்வொரு பழத்தின் ஜி.ஐ, (GI - Glycemic Index) குறியீட்டு எண்ணை அறிந்துகொண்ட பின், உண்ண வேண்டும். ஜி.ஐ. என்பது கிளைசிமிக் குறியீடு. நீரிழிவு நோய் உள்ளவர்கள் 55 அல்லது அதற்கும் குறைந்த அளவுள்ள ஜி.ஐ. குறியீட்டைக் கொண்ட பழங்களை உண்ணலாம். ஆப்பிள், பேரிக்காய் போன்றவற்றில் கார்போஹைட்ரேட்டின் அளவு குறைவாக இருப்பதால், நீரிழிவு நோய் உள்ளவர்களும் இந்தப் பழங்களைச் சாப்பிடலாம்.
# மாம்பழம்



மிகுந்த சர்க்கரை இருப்பதால் பழங்களின் ராஜா எனப்படும் மாம்பழத்தைத் தவிர்க்க வேண்டும். உட்கொண்டால் ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.
# சப்போட்டா


இந்தப் பழத்தின் ஜி.ஐ. குறியீட்டு எண் 55க்கு மேலே உள்ளதால், இதைத் தவிர்க்க வேண்டும். இப்பழத்தில் சர்க்கரையும் கார்போஹைட்ரேட்டும் அதிகம்.
# திராட்சை


நார்ச்சத்து, வைட்டமின் எனப் பல ஊட்டச்சத்துகள் நிறைந்த திராட்சையில் அதிக அளவு சர்க்கரையும் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாது. 100 கிராம் திராட்சையில் 15 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது.
# வாழைப்பழம்


அரை கப் வாழைப்பழத்தில் 15 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. இதன் ஜி.ஐ. 46 முதல் 70 வரை. பழுத்த வாழைப்பழங்களைச் சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.
# தர்பூசணி


குறைந்த நார்ச்சத்து, குறைந்த கலோரி உடைய தர்பூசணி பழத்தில் ஜி.ஐ குறியீடு 72. வைட்டமின் ஏ, சியும் அதிகமாக உள்ளன. அரை கப் தர்பூசணியில் 5 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது.
# அன்னாசி


அதிகக் கிளைசிமிக் குறியீட்டைக் கொண்டிருப்பதால், இப்பழத்தைத் தவிர்க்க வேண்டும். ஒரு சிறிய கோப்பை அன்னாசிப் பழத்தில் 20 கிராமுக்கு மேற்பட்ட அளவு கார்போஹைட்ரேட் உள்ளது.
# சீத்தாப்பழம்


வைட்டமின் சி, கால்சியம், இரும்பு, நார்ச்சத்து நிரம்பிய இப்பழத்தில் சர்க்கரை அதிகம். 100 கிராம் சீத்தாப்பழத்தில் 23 கிராமைவிட அதிகமாக கார்போஹைட்ரேட் உள்ளது.
# முந்திரிப்பழம்


நீரிழிவு நோயாளிகள் இதைத் தவிர்க்க வேண்டும். 103 ஜி.ஐ. மதிப்பு கொண்ட இப்பழத்தின் கால் பங்கிலேயே 24 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது.

தூக்கமின்மை உங்கள் உடலை எவ்வாறு பாதிக்கிறது?

 உடலுக்கு ஓய்வு கொடுப்பதன் மூலம், மீண்டும் புத்துணர்வோடு செயல்படுவதற்கு மூளை தன்னைத்தானே புதுப்பித்து கொள்ளும், ஓரு இயற்கையான வழிதான் தூக்கம்.



முதுமையில் பெரும்பாலோருக்கு ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினைகளில் தூக்கமின்மை முதலிடம் பிடிக்கிறது. அறுபது வயதுக்குப் பிறகு அனைவருக்குமே தூக்கம் சற்றுக் குறைவது இயல்பானதுதான். இந்த வயதில் ஐந்து மணி நேரத் தூக்கம்கூடப் போதுமானதுதான். ஆனால், தூங்கும் நேரத்தின் அளவைவிட எவ்வளவு நேரம் ஒருவர் தொடர்ந்து ஆழ்ந்த தூக்கத்தை பெறுகிறார் என்பதுதான் முக்கியம். உடலுக்கு ஓய்வு கொடுப்பதன் மூலம், மீண்டும் புத்துணர்வோடு செயல்படுவதற்கு மூளை தன்னைத்தானே புதுப்பித்து கொள்ளும், ஓரு இயற்கையான வழிதான் தூக்கம். ஒருவருடைய உடல் உழைப்பு, தூங்கும் விதம், சுற்றுச்சூழல், உடல்நலம், மனநலத்தைப் பொறுத்து தூக்கம் அமைகிறது.

முதுமை காரணமாகவோ, உடல்நிலை காரணமாகவோ தூங்கும் நேரம் குறைந்தாலும் தூக்கத்தின் அவசியம் குறைவதில்லை. பொதுவாக ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ஆறிலிருந்து எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம், தூக்கம் குறையும்போது உடலின் நலமும் உள்ளத்தின் நலமும் பாதிக்கப்படுகின்றன. இள வயதில் தேவையான அளவுக்கு தூங்காதவர்களுக்கு நாற்பது வயதிலேயே ஞாபக மறதி வந்துவிடுகிறது. தேவையில்லாமல் கோபம் வருகிறது. எதிர்படுபவர்களிடம் எல்லாம் எரிந்து விழுந்து அவர்களுடைய தூக்கத்தையும் கெடுத்து விடுகிறார்கள்.

ருவருக்கு தொடர்ந்து தூக்கம் கெடும்போது பசி குறையும். அஜீரணம் தலைகாட்டும். உணவின் அளவு குறையும். உடல் எடை குறையும். பணியில் ஆர்வம் குறையும். பகல் முழுவதிலும் தூக்க கலக்கத்தில் இருப்பார்கள். அடுக்கு கொட்டாவி வரும். சோர்வும் தலைவலியும் நிரந்தரமாகிவிடும். மாதக் கணக்கில் நல்ல தூக்கம் இல்லாதவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

கூட்டுக் குடும்பம் என்ற கலாசாரம் மறைந்துபோய் தனிக்குடித்தனம் என்ற கலாசாரம் வந்தபிறகு முதுமையில் பெரும்பாலானவர்களுக்குத் தனிமை என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இந்தத் தனிமை அவர்களுடைய தூக்கத்துக்கு வேட்டு வைக்கிறது. ‘வயதாகிவிட்டது, இனி உடற்பயிற்சி தேவையில்லை’ என நினைத்து முதுமையில் பலரும் உடற்பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இது தூக்கமின்மைக்குப் பாதை போடுகிறது.

காலையில் எழுந்துகொள்ளும் நேரமும் இரவில் படுக்கப்போகும் நேரத்தையும் ஒழுங்குக்குள் கொண்டுவரவேண்டும். பகல் தூக்கத்துக்கு அரை மணி நேரம் போதும். தூக்கப் பிரச்சினை உள்ளவர்கள் மாலையிலும் உடற்பயிற்சி செய்தால் இரவில் நல்ல தூக்கம் வரும். சீக்கிரமே தூங்கி, சீக்கிரமே விழிக்கிற பழக்கம் நல்ல வழிகொடுக்கும்

‘வைட்டமின் டி3’ கொரோனாவுக்கு எதிராக பாதுகாப்பு வழங்ககுமா?

 சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வில் கொரோனா நோய்த்தொற்றால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க உடலில் இந்த வைட்டமின் அதிக அளவில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்த்த நிலையில் ஒமைக்ரான் என்ற புதிய மாறுபாடு தோன்றி அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. கொரோனாவுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியின் செயல்திறன் மீதும் கேள்வியை எழுப்பியுள்ளது. அமெரிக்காவின் பைசர் மற்றும் இங்கிலாந்தின் அஸ்ட்ராஜெனேகா ஆகிய 2 தடுப்பூசிகளும் ஒமைக்ரான் வைரசுக்கு எதிராக குறைவான செயல் திறனை கொண்டிருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

தடுப்பூசிகளை விட நோய்த்தொற்றில் இருந்து பாதுகாப்பு வழங்கும் விஷயத்தில் நோய் எதிர்ப்பு மண்டலம்தான் முக்கிய பங்கு வகிக்கிறது. அத்தகைய வலுவான நோய் எதிர்ப்பு மண்டலத்தை உருவாக்குவதற்கு ஊட்டச்சத்து முக்கியமானது. உடலில் போதுமான அளவு இருக்க வேண்டிய வைட்டமின்களில் வைட்டமின் டி3 முக்கியமானதாகும். சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வில் கொரோனா நோய்த்தொற்றால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க உடலில் இந்த வைட்டமின் அதிக அளவில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.



வைட்டமின் டி 3 உட்கொள்ளல் மற்றும் தடுப்பூசிகள் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என்பதும் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வைட்டமின் D3 மலிவாக கிடைக்கக் கூடியது என்பதால் பொருளாதார ரீதியாக அனைவரும் உபயோகப்படுத்துவதற்கு சாத்தியமானதாகவும் கருதப்படுகிறது.

வைட்டமின் D3-ன் முக்கியமான நன்மை என்னவென்றால் இறப்பையும், அது சார்ந்த பின்விளைவுகளை தடுப்பதுமாகும். இத்தகைய பின்விளைவுகளில் கடுமையான சுவாசக் கோளாறு முக்கியமானது. இதனை போதுமான வைட்டமின் டி3 உட்கொள்ளல் மூலம் குணப்படுத்த முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

டைட்டமின் டி3-ன் வடிவங்கள்:

வைட்டமின் டி வலுவான எலும்புகள் மற்றும் பற்களுக்கு முக்கியமானது. சூரிய ஒளிதான் இதன் முக்கிய ஆதாரமாகக் கருதப்படுகிறது. இருப்பினும், வைட்டமின் டி இரண்டு வடிவங்களை கொண்டது. ஒன்று, வைட்டமின் டி2. இது தாவரங்களில் காணப்படுகிறது. மற்றொன்று வைட்டமின் டி3. இது சூரிய ஒளியில் இருந்து உடலுக்கு கிடைக்கக்கூடியது. சில விலங்கு களும் இந்த வைட்டமினை ஆதாரமாக கொண்டுள்ளன.

வைட்டமின் டி3 தரும் நன்மைகள் பின்வருமாறு:

* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

* வலுவான எலும்புகள் மற்றும் தசை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

* வைட்டமின் டி3 வீக்கத்தைக் கட்டுப்படுத்துவதாக அறியப்படுகிறது. இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

* இது மனநிலையை மேம்படுத்தும் பண்புகளையும் கொண்டுள்ளது.

* வைட்டமின் டி3-ன் சில நன்மைகள் அதை வைட்டமின் டி2யிலிருந்து வேறுபடுத்துகிறது. குறிப்பாக டி2 உடன் ஒப்பிடும்போது டி3 உடலில் நீண்ட நேரம் தங்கியிருக்கும்.

இது உடலில் வைட்டமின் டி யின் ஒட்டுமொத்த அளவை உயர்த்துவதற்கு உதவுகிறது.

வைட்டமின் டி3 கிடைக்கும் பொருட்கள்:

முட்டை, பால், வெண்ணெய், மீன் எண்ணெய், சால்மன், டுனா, டிரவுட் போன்ற மீன் வகைகள். இவை தவிர, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், எலும்புகள் மற்றும் தசைகளை வலுப்படுத்தவும் டாக்டரின் பரிந்துரையின் பேரில் வைட்டமின் டி3 மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். வலுவான நோயெதிர்ப்பு அமைப்பை கொண்டிருந்தால் கொரோனா எந்த வடிவில் உருமாறினாலும் தற்காத்துக்கொள்ளலாம். எனவே தடுப்பூசி போட்டுக்கொள்வதுடன், சத்தான உணவை உண்பதன் மூலமும், உடற்பயிற்சி செய்வதன் மூலமும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துங்கள்.

சைனஸுக்கு நிரந்தரத் தீர்வு என்ன?

 சைனுசைடிஸ் நோய் ஒவ்வாமையாலும், உடலின் இயல்பான பித்தம் (சூடு) அளவுக்கு அதிகமாவதாலும் ஏற்படுகிறது. காற்றை நாம் மாசுபடுத்தியதன் விளைவாலும், அவசர வாழ்வில் தினசரித் தலைக்குக் குளிப்பது, வாரம் ஒரு முறையேனும் எண்ணெய் குளியல் செய்வது போன்ற நல்வாழ்வுப் பழக்கங்களைத் தொலைத்ததாலும் தான், இந்தச் சைனுசைடிஸ் நோய் வருகிறது.

குளித்தல் என்றாலே தலைக்கு நீருற்றிக் குளிப்பதுதான் சரியானது. “முடி கொட்டிரும். முகம் வீங்கும். சளி பிடிக்கும். தும்மல் வரும். நேரமே இல்லை” எனப் பல காரணங்களை முன்னிறுத்தி இன்று நம்மில் பலர் கழுத்துக்கும் இடுப்புக்கும் குளிப்பதைக் கலாசாரமாக்கிக் கொண்டிருக்கிறோம். குளிப்பது என்பது அழுக்கு நீக்க மட்டுமல்ல. இரவில் உடலில் இயல்பாய் ஏறும் பித்தத்தை (சூட்டை) தணிக்கவே காலையில் நாம் குளிக்கிறோம். வெறும் அழுக்குப் போக என்றால், இரவில் மட்டும்தானே குளித்துப் பழகியிருப்போம். எனவே, இந்த நோயை அறவே போக்க, தினசரிக் குளியல் முதலில் மிக அவசியம்.



நோய் நீங்கும் காலம் மட்டும், மருத்துவர் ஆலோசனையுடன் சுக்குத் தைலம், சிரோபார நிவாரணத் தைலம், பீனிசத் தைலம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைத் தலைக்குத் தேய்த்துக் குளிக்க வேண்டும். சித்த மருத்துவ மூலிகையான சீந்தில், சைனுசைடிஸ் நோய்க்கான மிகச் சிறந்த தாவரம். இதன் தண்டை வைத்துத் தயாரிக்கும் மருந்துகள் நோய் எதிர்ப்பாற்றலைச் சீராக்கி (Immune Modulation) மூக்கடைப்பைச் சரியாக்கும் எனப் பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. பெருவாரியான நேரங்களில், சைனுசைடிஸ்க்கு அறுவை சிகிச்சை நிரந்தரத் தீர்வு அல்ல. ஏனென்றால், பாலிப்பையும் நாசித்தண்டு வளைவையும் சீர்படுத்துவதைத் தாண்டி, நோய் எதிர்ப்பாற்றலில் உள்ள hypersensitivityயைச் சீராக்காமல், இதை முழுமையாகக் குணப்படுத்துவது கடினம். அதனால், சில காலம் சித்த மருந்துகளுடன், மூச்சுப் பயிற்சி செய்துவாருங்கள்.

யோகாசனக் கிரியா பயிற்சியிலும், பிராணாயாமப் பயிற்சியிலும் மூக்கடைப்பைத் தடுக்க முடியும். நொச்சித் தழையில் ஆவி பிடிப்பதை வாரம் இரு முறையாவது செய்வது நாசித்தண்டு வளைவில் சேரும் கபத்தை இளக்கி, வெளியேற்றிச் சுவாசத்தைச் சீராக்கப் பெரிதும் உதவும்.

உணவில் காரச் சுவை தேவைப்படும் இடத்தில் எல்லாம் மிளகைச் சேர்த்துவருவது மிக முக்கியம். மிளகில் உள்ள piperine, piperidine சத்துகள் நோய் எதிர்ப்பாற்றலைச் சீர்படுத்திச் சைனுசைடிஸைக் கட்டுப்படுத்தும் அற்புத உணவு. இனிப்பு, பால், நீர்க் காய்கறிகளைச் சில காலம் மட்டும் அதிகம் எடுத்துக்கொள்ளாமல் இருப்பதும் அவசியம்.

தினமும் காபி குடிப்பது கெட்டதா? காபி குடித்தால்தான் வேலை ஓடுமா?


 பலருக்கு ஒவ்வொரு நாளும் காபியுடன்தான் விடியும். அதன் பிறகு ஒரு மணி நேரம் கழித்துக் காபி அல்லது டீ. வேலை இடைவேளையின்போது பதினோரு மணிவாக்கில் இன்னும் ஒரு டீ. மாலை தேநீர் இடைவேளை என்று சொல்லிக்கொண்டு ஒரு டீ. மாலை ஆறு மணிக்கு லேசாகத் தலைவலிக்கிறது என்ற விளக்கத்துடன் ஒரு டீ அல்லது ஸ்டிராங் காபி.
ஒரு நாளில் குறைந்தபட்சம் மூன்று அல்லது நான்கு முறையாவது இந்தப் பானங்களைப் பருகாதவர்கள் குறைவு. இப்படி அடிக்கடி காபி அல்லது டீ குடிப்பது நல்லதா?

நாம் ஏன் அடிக்கடியோ அல்லது சோர்ந்து போகும்போதோ காபி அல்லது டீ குடிக்க நினைக்கிறோம்? காரணம் அவற்றில் மனிதனின் நரம்பு மண்டலத்தைத் தூண்டி உற்சாகப்படுத்தும் வேதிப்பொருட்கள் இருக்கின்றன. அதன் காரணமாகவே காபி அல்லது டீ குடித்ததுமே நாம் உற்சாகமாக உணர்கிறோம். தவிர, காபியில் காஃபீன் என்கிற வேதிப்பொருள் இருக்கிறது. இது ஒருவித மயக்கத்தை ஏற்படுத்துவதால்தான் அடிக்கடி காபி குடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.



அளவுடன் இருந்தால்...

ஒரு நாளுக்கு இரண்டு முறை டீயோ, காபியோ குடிப்பது உடல்நலத்துக்குப் பெரிதாகக் கேடு விளைவிக்காது. அப்படிக் குடிப்பதால் சில நன்மைகளும் ஏற்படலாம். காபி குடிப்பதால் அல்சைமர், பார்கின்சன்ஸ், இதய நோய், ஈரல் நோய், கீல்வாதம், நீரிழிவு போன்றவை ஏற்படுவதை ஓரளவுக்குக் கட்டுக்குள் வைக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்களும் மருத்துவர்களும் சொல்கிறார்கள்.

மூளை நரம்புகளில் அடினோசினின் ஆதிக்கத்தைக் காஃபீன் குறைப்பதால் மனஅழுத்தம் குறையும் என்றும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
காபியில் எவ்வளவு நன்மை இருக்கிறதோ, அந்த அளவுக்கு டீ குடிப்பதிலும் நன்மைகள் இருப்பதாகப் பல மருத்துவ அறிக்கைகள் சொல்கின்றன. டீ குடிப்பதால் பார்கின்சன்ஸ், ருமட்டாய்டு ஆர்த்ரட்டிஸ் போன்றவை ஏற்படும் ஆபத்து ஓரளவுக்குக் குறைகிறதாம்.

ஒருவர் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்குச் சரியான அளவில் டீ குடித்து வந்தால், அவருடைய எலும்புகள் மற்றவர்களைவிட உறுதியாக இருக்குமாம். ரத்தஅழுத்தம் கட்டுக்குள் இருக்கும். புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணிகளையும் டீ குடிப்பதால் குறையலாம் என்கிறார்கள்.

அளவுக்கு மிஞ்சினால்:

இவ்வளவு நன்மைகள் இருக்கும் பானங்களைக் குடிப்பதில் என்ன தவறு என்று யோசிக்கலாம். அளவுக்கு அதிகமானால் அமிர்தமே நஞ்சாகும்போது காபியும், டீயும் மட்டும் நலம் தருமா என்ன? அளவுக்கதிகமான பயன்பாடு பல உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். காபியில் இருக்கும் காஃபீன் குறிப்பிட்ட எல்லையைத் தாண்டும்போது, அதுவே உடல்நலப் பாதிப்புக்குக் காரணமாக அமைந்துவிடும்.

அளவுக்கு அதிகமாகக் காபி குடிப்பதால் ரத்தத்தில் இருக்கும் இரும்புச்சத்தின் அளவு குறைந்து பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ரத்தசோகை ஏற்படலாம். காபியில் இருக்கும் சில வேதிப்பொருட்கள் இதயத்துக்கு எதிரானவை. அவை இதய வால்வுகளை விறைப்படையச் செய்து, பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். தலைவலிக்காகக் குடிக்கப்படும் காபியின் அளவுக்கு அதிகமானால் மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி ஏற்படலாம்.

சிலருக்குத் தூக்கத்தில் சிக்கல்கள் உண்டாகலாம். இன்னும் சிலருக்குச் சரியான நேரத்தில் காபி குடிக்கவில்லை என்றாலே பதற்றம் உண்டாகும். இதுவும் ஒரு வகை நோய்தான்.

எலும்பின் உறுதிக்குத் துணைபுரிகிற அதே டீதான், எல்லை மீறும்போது எலும்பின் உறுதியைப் பாதிக்கிறது. பற்களின் சிதைவுக்கும் அளவுக்கதிகமான டீ காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. புராஸ்டேட் புற்றுநோய், உணவுக் குழாய் புற்றுநோய் போன்றவை ஏற்படுவதற்கான காரணிகளில் ஒன்றாகவும் டீ அமைந்துவிடலாம் என்று சில மருத்துவ ஆய்வுகள் சொல்கின்றன.

எச்சரிக்கை

நன்மையும் தீமையும் கலந்தே இருக்கும் இந்தப் பானங்களை எப்படித் தவிர்ப்பது? அவற்றின் துணை இல்லாமல் ஒரு நாளை கழிக்க முடியாதே என்று பலர் கவலைப்படலாம். அதற்கு வழிகாட்டுகிறார் சென்னை காவேரி மருத்துவமனையின் பொது, நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவர் சிவராமக் கண்ணன்:

“காபியோ, டீயோ ஒரு நாளுக்கு இரண்டு முறை குடிப்பது நல்லது. அளவுக்கு அதிகமாகக் குடிப்பதைக் கூடியவரை தவிர்க்க வேண்டும். காபி, டீ இரண்டையும் நாம் அப்படியே குடிப்பதில்லை. அவற்றுடன் பால், சர்க்கரை இரண்டையும் கலந்துதான் குடிக்கிறோம். தினமும் நாம் சாப்பிடுகிற உணவிலேயே போதுமான அளவு சர்க்கரை, நமக்குக் கிடைத்துவிடும். அப்படி இருக்கும்போது நாம் தனியாகச் சேர்த்துக் கொள்கிற, ஒவ்வொரு டீஸ்பூன் சர்க்கரையும் வரப்போகிற நோய்க்கான அழைப்புதான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
பாலும் அப்படித்தான். வயதுக்கும், உடல்நிலைக்கும் ஏற்ற அளவில்தான் பாலைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதிகப்படியான கால்சியச் சத்தும் உடலுக்கு நல்லதல்ல. இந்த இரண்டு பானங்களுமே உற்சாகத்தைத் தருவதால், நம்மை அடிமைப்படுத்திவிடும். அதனால்தான் பலர் காபி குடிக்கவில்லை என்றால் வேலையே ஓடாது என்று சொல்கிறார்கள். இந்த நிலை உகந்தது அல்ல” என்று சொல்லும் சிவராமக் கண்ணன், அதற்கான மாற்று வழியையும் சொல்கிறார்.

“ஒரு நாளுக்கு இரண்டு முறைக்கு அதிகப்படியாகக் காபி குடித்தே தீர வேண்டும் என்று நினைக்கிறவர்கள், அவற்றின் அளவை குறைத்துக் கொள்ளலாம். ஒரு கப் காபிக்குப் பதில் முதலில் அரை கப், பிறகு கால் கப் என்று படிப்படியாகக் குறைக்கலாம். டீ விரும்பிகள் கிரீன் டீக்கு மாறலாம். கிரீன் டீயில் இயற்கையாகக் கிடைக்கும் ஆண்டி ஆக்ஸிடன்ஸ் நிறைந்திருப்பது திசுக்களின் வளர்ச்சிக்கு நல்லது. எதுவுமே அளவுடன் இருந்தால் வளமுடன் வாழலாம்” .

குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த செய்ய வேண்டியவை

 நமது குழந்தைகள் பல்வேறு வகையான கிருமிகள் மற்றும் வைரஸ்களை எதிர்கொள்கின்றனர். உங்களது குழந்தையின் நோயெதிர்ப்பு சக்திக்கு உதவக்கூடிய ஒருசில ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை நாம் பார்க்கலாம்.

நமது குழந்தைகள் பல்வேறு வகையான கிருமிகள் மற்றும் வைரஸ்களை எதிர்கொள்கின்றனர்; அது விளையாடும் இடத்திலோ, 1 பள்ளியிலோ அல்லது வீட்டில் கூட இருக்கலாம். உங்களது குழந்தைகள் போகும் அனைத்து இடத்தையும் நீங்கள் கிருமிநீக்கம் செய்ய முடியாது, ஆதேபோல் உங்களது குழந்தைகள் வெளியே போய் விளையாடுவதையும் நீங்கள் தடுக்க முடியாது. அதனால், பெற்றோராக, நீங்கள் தொற்றுகள் மற்றும் ஒருசில நோய்களின் பாதிப்புகளை எவ்வாறு குறைக்க முடியும்? குழந்தைகள் இயற்கையாகவே பலமுள்ள நோயெதிர்ப்பு சக்தியைப் பெறுகிறார்கள் என்பதை உறுதி செய்வது ஒரு முறையாகும். அதனால், உங்களது குழந்தையின் நோயெதிர்ப்பு சக்திக்கு உதவக்கூடிய ஒருசில ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை நாம் பார்க்கலாம்.



மிதமான உடற்பயிற்சி செய்வது இயற்கையான செல் அழிவு முறையில் (நோய் பாதிப்பை எதிர்க்கும் புரதங்கள்) ஒரு நல்ல பலனை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது. 2 இது மன அழுத்தத்தை குறைப்பதன் மூலமாக நோயெதிர்ப்புத் திறனை மேம்படுத்துகிறது. 3 இவ்வாறு அவர்களது வயதுக்கு ஏற்ப உடற்பயிற்சியை தொடர்ந்து உங்களது குழந்தைகள் செய்யும்படி சொல்வது அவர்களது உடலை கட்டுறுதியாக வைத்திருப்பதோடு அவர்களது நோயெதிர்ப்புத் திறனையும் மேம்படுத்தும். நீண்ட நேரம் மிகவும் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடுவது நோயெதிர்ப்புத் திறனை பாதிக்கும் என்பதும் பரவலாக ஏற்கப்பட்ட கருத்தாகும்; அதேவேளை, தொடர்ந்து மிதமான கடினத்தன்மை கொண்ட உடற்பயிற்சியை செய்வது பலனளிக்கக்கூடியதாகும். அதனால் பெற்றோராக நாம் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியமாகும்.



நோயெதிர்ப்புத் திறனில் ஊட்டச்சத்து ஒரு முக்கியமான பங்காற்றுகிறது. உலகம் முழுவதும் நோயெதிர்ப்புத்திறன்-குறைபாட்டுக்கு காரணமாக இருப்பது ஊட்டச்சத்து குறைபாடுதான் என்று கருதப்படுகிறது. வைட்டமின்கள் ஏ, சி, இ, பி6 மற்றும் ஃபோலேட் ஆகியவற்றின் குறைபாடு நோயெதிர்ப்புத் திறன் குறைபாட்டிற்கு காரணமாக கருதப்படுகிறது. ஒரு ஆரோக்கியமான நோயெதிர்ப்புத் திறனைப் பெறுவதற்கு துத்தநாகம், செலினியம், இரும்பு மற்றும் தாமிரம் போன்ற நுண் ஊட்டச்சத்துக்களும் முக்கியமானவையாகும். 5 இவற்றில் ஒரு ஊட்டச்சத்து குறைந்தாலும் அவை உடலின் நோயெதிர்ப்புத் திறனை பாதிக்கும். ஆகையால், அனைத்து முக்கியமான ஊட்டச்சத்துக்களும் நிறைந்த ஒரு சமச்சீரான உணவைச் சாப்பிடுவது அதிலும் முக்கியமாக நோயெதிர்ப்புத் திறன் வளர்ச்சி அடைந்து வரும் சமயத்தில் அவ்வாறு செய்வது மிகவும் முக்கியமாகும்.



நோயெதிர்ப்பு சக்தி முறையாக செயல்படுவதற்கு உடலை சீரமைக்கும் மிகவும் முக்கியமான ஒரு செயல்முறை தூக்கமாகும். தூக்கம் குறைவது நோயெதிர்ப்புக் கட்டமைப்பை பலகீனமாக்கும் அத்துடன் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கும். 6 உண்மையில், சரியான அளவு தூக்க நேரத்தைக் காட்டிலும் குறைவாக தூங்கினால் அதிகமாக சளி பிடிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 7 டி-செல்கள் மற்றும் வீக்கத்துடன் சம்மந்தமான சைட்டோகின்கள் இரவில் அதிகம் தோன்றும். 8 ஆகையால் உங்களது குழந்தைகளுக்கு போதுமான அளவுக்கு தூங்கும் பழக்கத்தை உருவாக்கி ஆரோக்கியமான ஒரு வாழ்க்கையை வாழச்செய்வது மிகவும் முக்கியமாகும்.

குழந்தைகள் எப்போதும் குழந்தைகள்தான். அவர்கள் எந்த விஷயத்தையும் அவர்களுக்கு பிடித்தது போல்தான் செய்வார்கள். பெற்றோர்களாக, அவர்களது ஆரோக்கியத்தைப் பற்றி அக்கறையாக இருப்பது நம்முடைய பொறுப்பாகும். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதில் கூட அவர்கள் மறுப்பார்கள். அதை எதிர்கொள்வதற்கு, அவர்களது உணவில் காய்கறிகளை அறிமுகப்படுத்த நீங்கள் புதுமையான முறைகளை அறிமுகப்படுத்த வேண்டும் மேலும் அவர்களது ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு சுவைமிக்க இணையுணவு பானங்களைக் கொடுக்க வேண்டும். நினைவிருக்கட்டும், அவர்களது வாழ்வில் இருந்து கிருமிகள் அல்லது தொற்றுகளை முற்றிலும் அகற்றுவது சாத்தியமில்லை, ஆனால் ஒருசில சிறிய முக்கியமான விஷயங்களை மனதில் கொள்வதன் மூலம் நாம் அவர்களது நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்த உதவி செய்யலாம்.

பூமியில் உள்ள 14 ஆரோக்கியமான காய்கறிகள் | Healthiest Vegetables on Earth

இந்தக் கட்டுரையில் 14 ஆரோக்கியமான காய்கறிகள் மற்றும் அவற்றை ஏன் உங்கள் உணவில் சேர்க்க வேண்டும் என்பதைப் பற்றி பார்க்கலாம்.

1.கீரைகள்

 இந்த இலை பச்சையானது ஆரோக்கியமான காய்கறிகளில் ஒன்றாக தரவரிசையில் முதலிடம் வகிக்கிறது.

ஒரு கப் (30 கிராம்) பச்சைக் கீரை உங்கள் தினசரி வைட்டமின் ஏ தேவைகளில் 56% மற்றும் உங்கள் தினசரி வைட்டமின் கே தேவையை வழங்குகிறது - இவை அனைத்தும் வெறும் 7 கலோரிகளுக்கு.

கீரையில் அதிக அளவு ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன, இது நாள்பட்ட நோய் அபாயத்தைக் குறைக்க உதவும்.

ஒரு ஆய்வில், கீரை போன்ற கரும் பச்சை இலைக் காய்கறிகளில் பீட்டா கரோட்டின் மற்றும் லுடீன் ஆகிய இரண்டு வகையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் உள்ளன, இவை புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கின்றன. கூடுதலாக, 2015 ஆம் ஆண்டின் ஆய்வில், கீரை நுகர்வு இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும், ஏனெனில் இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம் .

2. கேரட்

 கேரட்டில் வைட்டமின் ஏ நிரம்பியுள்ளது, தினசரி பரிந்துரைக்கப்பட்ட மதிப்பில் 428% ஒரு கோப்பையில் (128 கிராம்) வழங்குகிறது.

அவற்றில் பீட்டா கரோட்டின் உள்ளது, இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும், இது கேரட்டுகளுக்கு அவற்றின் துடிப்பான ஆரஞ்சு நிறத்தை அளிக்கிறது மற்றும் புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது .

உண்மையில், ஒரு வாரத்திற்கு ஒவ்வொரு கேரட் சேவைக்கும், பங்கேற்பாளர்களின் புரோஸ்டேட் புற்றுநோயின் ஆபத்து 5% குறைந்துள்ளது.

கேரட் சாப்பிடுவது புகைப்பிடிப்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும் என்று மற்றொரு ஆய்வு காட்டுகிறது. வாரத்திற்கு ஒரு முறையாவது கேரட் சாப்பிடுபவர்களுடன் ஒப்பிடும்போது, ​​கேரட் சாப்பிடாத புகைப்பிடிப்பவர்கள் நுரையீரல் புற்றுநோயை உருவாக்கும் அபாயம் மூன்று மடங்கு அதிகம் .கேரட்டில் வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் பொட்டாசியம்  அதிகமாக உள்ளது.

3. ப்ரோக்கோலி



ப்ரோக்கோலி குளுக்கோசினோலேட் எனப்படும் கந்தகம் கொண்ட தாவர கலவை மற்றும் குளுக்கோசினோலேட்டின் துணை தயாரிப்பான சல்ஃபோராபேன்  ஆகியவற்றில் நிறைந்துள்ளது.

சல்போராபேன் குறிப்பிடத்தக்கது, இது புற்றுநோய்க்கு எதிராக ஒரு பாதுகாப்பு விளைவைக் கொண்டிருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஒரு விலங்கு ஆய்வில், சல்போராபேன் மார்பக புற்றுநோய் உயிரணுக்களின் அளவையும் எண்ணிக்கையையும் குறைக்க முடிந்தது, அதே நேரத்தில் எலிகளில் கட்டி வளர்ச்சியைத் தடுக்கிறது.

ப்ரோக்கோலி சாப்பிடுவது மற்ற வகை நாட்பட்ட நோய்களையும் தடுக்க உதவும். 2010 ஆம் ஆண்டு விலங்கு ஆய்வில், ப்ரோக்கோலி முளைகளை உட்கொள்வது ஆக்ஸிஜனேற்றத்தின் அளவைக் கணிசமாகக் குறைப்பதன் மூலம் இதயத்தை நோயை உண்டாக்கும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்கும் என்று கண்டறியப்பட்டது.  நோயைத் தடுக்கும் திறனுடன் கூடுதலாக, ப்ரோக்கோலியில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

ஒரு கப் (91 கிராம்) மூல ப்ரோக்கோலி உங்கள் தினசரி வைட்டமின் கே தேவையில் 116%, தினசரி வைட்டமின் சி தேவையில் 135% மற்றும் ஃபோலேட், மாங்கனீசு மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றை வழங்குகிறது.

4. பூண்டு


 பூண்டு ஒரு மருத்துவ தாவரமாக பயன்படுத்தப்பட்ட நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது, அதன் வேர்கள் பண்டைய சீனா மற்றும் எகிப்து வரை உள்ளன.

பூண்டில் உள்ள முக்கிய செயலில் உள்ள கலவை அல்லிசின் ஆகும், இது பூண்டின் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுக்கு பெரிதும் காரணமாகும்.

பல ஆய்வுகள் பூண்டு இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்துவதோடு இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது என்பதைக் காட்டுகிறது.

ஒரு விலங்கு ஆய்வில், நீரிழிவு எலிகளுக்கு பூண்டு எண்ணெய் அல்லது பூண்டின் ஒரு அங்கமான டயல் ட்ரைசல்பைட் கொடுக்கப்பட்டது. இரண்டு பூண்டு கலவைகளும் இரத்த சர்க்கரை குறைவதற்கும் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதற்கும் காரணமாகின்ற. மற்றொரு ஆய்வு இதய நோய் உள்ளவர்களுக்கும், இதய நோய் இல்லாதவர்களுக்கும் பூண்டு ஊட்டப்பட்டது. பூண்டு மொத்த இரத்த கொழுப்பு, ட்ரைகிளிசரைடுகள் மற்றும் எல்டிஎல் கொழுப்பைக் குறைக்க முடியும் என்று முடிவுகள் காட்டுகின்றன, அதே நேரத்தில் இரு குழுக்களிலும் HDL கொழுப்பை அதிகரிக்கின்றன. புற்றுநோயைத் தடுப்பதிலும் பூண்டு பயனுள்ளதாக இருக்கும். மனித கல்லீரல் புற்றுநோய் உயிரணுக்களில் அல்லிசின் தூண்டப்பட்ட உயிரணு இறப்பை ஒரு சோதனைக் குழாய் ஆய்வு நிரூபித்தது.

இருப்பினும், பூண்டின் சாத்தியமான புற்றுநோய் எதிர்ப்பு விளைவுகளை நன்கு புரிந்து கொள்ள மேலும் ஆராய்ச்சி தேவை.

5. பிரஸ்ஸல்ஸ் முளைகள்



பிரஸ்ஸல்ஸ் முளைகளில் கெம்ப்ஃபெரால் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது, இது செல்களுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுப்பதில் குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும் .

உயிரணுக்களுக்கு ஆக்ஸிஜனேற்ற சேதத்தை ஏற்படுத்தும் மற்றும் நாள்பட்ட நோய்க்கு பங்களிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக கேம்ப்ஃபெரால் பாதுகாக்கப்படுவதாக ஒரு விலங்கு ஆய்வு கண்டறிந்துள்ளது .பிரஸ்ஸல்ஸ் முளை நுகர்வு நச்சுத்தன்மையை அதிகரிக்கவும் உதவும்.பிரஸ்ஸல்ஸ் முளைகளை உண்பது நச்சுத்தன்மையைக் கட்டுப்படுத்தும் சில குறிப்பிட்ட நொதிகளில் 15-30% அதிகரிப்புக்கு வழிவகுத்தது, இது பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும் என்று ஒரு ஆய்வு காட்டுகிறது.கூடுதலாக, பிரஸ்ஸல்ஸ் முளைகள் மிகவும் ஊட்டச்சத்து நிறைந்தவை. ஒவ்வொரு சேவையும் வைட்டமின் கே, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, ஃபோலேட், மாங்கனீஸ் மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை நல்ல அளவில் வழங்குகிறது.


6. காலே


ஒரு கப் (67 கிராம்) பச்சைக் கீரையில் ஏராளமான பி வைட்டமின்கள், பொட்டாசியம், கால்சியம் மற்றும் தாமிரம் உள்ளன.

வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே ஆகியவற்றுக்கான உங்களின் முழு தினசரி தேவையையும் இது பூர்த்தி செய்கிறது.

அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், கேல் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் நன்மை பயக்கும்.

2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், அதிக கொலஸ்ட்ரால் உள்ள 32 ஆண்கள் 12 வாரங்களுக்கு தினமும் 150 மில்லி கேல் ஜூஸை குடித்துள்ளனர். ஆய்வின் முடிவில், HDL கொழுப்பு 27% அதிகரித்துள்ளது, LDL கொழுப்பு 10% குறைந்துள்ளது மற்றும் ஆக்ஸிஜனேற்ற செயல்பாடு அதிகரித்தது. மற்றொரு ஆய்வில், முட்டைக்கோஸ் சாறு குடிப்பது இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் இரத்த கொழுப்பு மற்றும் இரத்த சர்க்கரை இரண்டையும் குறைப்பதில் நன்மை பயக்கும் என்பதைக் காட்டுகிறது.

7. பச்சை பட்டாணி


பட்டாணி மாவுச்சத்து நிறைந்த காய்கறியாக கருதப்படுகிறது. அதாவது மாவுச்சத்து இல்லாத காய்கறிகளை விட அதிக அளவு கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் உள்ளன மற்றும் அதிக அளவில் சாப்பிடும் போது இரத்த சர்க்கரை அளவை பாதிக்கலாம்.இருப்பினும், பச்சை பட்டாணி நம்பமுடியாத அளவிற்கு சத்தானது.

ஒரு கப் (160 கிராம்) சமைத்த பச்சைப் பட்டாணியில் 9 கிராம் நார்ச்சத்து, 9 கிராம் புரதம் மற்றும் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே, ரிபோஃப்ளேவின், தியாமின், நியாசின் மற்றும் ஃபோலேட்  உள்ளன.

நார்ச்சத்து அதிகம் உள்ளதால், பட்டாணி உங்கள் குடலில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை அதிகரித்து, வழக்கமான குடல் இயக்கத்தை ஊக்குவிப்பதன் மூலம் செரிமான ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.

மேலும், பட்டாணியில் சபோனின்கள் நிறைந்துள்ளன, இது புற்றுநோய் எதிர்ப்பு விளைவுகளுக்கு அறியப்பட்ட தாவர கலவைகளின் குழுவாகும்.

கட்டி வளர்ச்சியைக் குறைப்பதன் மூலமும், புற்றுநோய் உயிரணுக்களில் உயிரணு இறப்பைத் தூண்டுவதன் மூலமும் சபோனின்கள் புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவக்கூடும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது.


8. சுவிஸ் சார்ட்



சுவிஸ் சார்டில் கலோரிகள் குறைவாக உள்ளது ஆனால் பல அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகமாக உள்ளது.

ஒரு கோப்பையில் (36 கிராம்) வெறும் 7 கலோரிகள் உள்ளன, ஆனால் 1 கிராம் நார்ச்சத்து, 1 கிராம் புரதம் மற்றும் நிறைய வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே, மாங்கனீசு மற்றும் மெக்னீசியம்  உள்ளன.

நீரிழிவு நோயால் ஏற்படும் சேதத்தைத் தடுக்கும் திறனுக்காக சுவிஸ் சார்ட் குறிப்பாக அறியப்படுகிறது.

ஒரு விலங்கு ஆய்வில், இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதன் மூலமும், நோயை உண்டாக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து செல் சேதத்தைத் தடுப்பதன் மூலமும் சர்க்கரை நோயின் விளைவுகளை மாற்றியமைப்பதாக சார்ட் சாறு கண்டறியப்பட்டது.

மற்ற விலங்கு ஆய்வுகள் சார்ட் சாற்றில் உள்ள ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கம் நீரிழிவு நோயின் எதிர்மறையான விளைவுகளிலிருந்து கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களைப் பாதுகாக்கும் என்று காட்டுகின்றன.

9. இஞ்சி

இஞ்சி வேர் காய்கறி உணவுகள் முதல் இனிப்புகள் வரை அனைத்திலும் மசாலாப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

வரலாற்று ரீதியாக, இஞ்சி இயக்க நோய்க்கான இயற்கையான தீர்வாகவும் பயன்படுத்தப்படுகிறது.

பல ஆய்வுகள் குமட்டலில் இஞ்சியின் நன்மை விளைவை உறுதிப்படுத்தியுள்ளன. 12 ஆய்வுகள் மற்றும் கிட்டத்தட்ட 1,300 கர்ப்பிணிப் பெண்களை உள்ளடக்கிய ஒரு மதிப்பாய்வில், இஞ்சி மருந்துப்போலி உடன் ஒப்பிடும்போது குமட்டலை கணிசமாகக் குறைத்தது.

இஞ்சியில் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இது மூட்டுவலி, லூபஸ் அல்லது கீல்வாதம் போன்ற அழற்சி தொடர்பான கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதில் உதவியாக இருக்கும்.

ஒரு ஆய்வில், செறிவூட்டப்பட்ட இஞ்சி சாறுடன் சிகிச்சையளிக்கப்பட்ட கீல்வாதத்தில் பங்கேற்பாளர்கள் முழங்கால் வலி மற்றும் பிற அறிகுறிகளில் இருந்து நிவாரணம்  அனுபவித்தனர்.மேலும் ஆய்வுகள் இஞ்சி நீரிழிவு சிகிச்சையிலும் உதவும் என்று கூறுகிறது.

2015 ஆம் ஆண்டு ஆய்வில், நீரிழிவு நோய்க்கான இஞ்சி சப்ளிமெண்ட்ஸின் விளைவுகள் பற்றி ஆராயப்பட்டது. 12 வாரங்களுக்குப் பிறகு, இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதில் இஞ்சி பயனுள்ளதாக இருப்பது கண்டறியப்பட்டது.


10. அஸ்பாரகஸ்



இந்த வசந்த காய்கறி பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிறைந்துள்ளது, இது எந்த உணவிற்கும் ஒரு சிறந்த கூடுதலாகும்.

அரை கப் (90 கிராம்) அஸ்பாரகஸ் உங்கள் தினசரி ஃபோலேட் தேவைகளில் மூன்றில் ஒரு பங்கை வழங்குகிறது.

இந்த அளவு செலினியம், வைட்டமின் கே, தியாமின் மற்றும் ரிபோஃப்ளேவின்  ஆகியவற்றையும் வழங்குகிறது.

அஸ்பாரகஸ் போன்ற மூலங்களிலிருந்து போதுமான ஃபோலேட்டைப் பெறுவது நோயிலிருந்து பாதுகாப்பை வழங்குகிறது மற்றும் கர்ப்ப காலத்தில் நரம்புக் குழாய் பிறப்பு குறைபாடுகளைத் தடுக்கலாம்.

சில சோதனைக் குழாய் ஆய்வுகள் கல்லீரலின் வளர்சிதை மாற்ற செயல்பாட்டை ஆதரிப்பதன் மூலமும், நச்சுத்தன்மைக்கு எதிராக பாதுகாப்பதன் மூலமும் கல்லீரலுக்கு பயனளிக்கக்கூடும் என்று காட்டுகின்றன

11. சிவப்பு முட்டைக்கோஸ்

இந்த காய்கறி காய்கறிகளின் சிலுவை குடும்பத்தைச் சேர்ந்தது மற்றும் அதன் உறவினர்களைப் போலவே, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பண்புகளால் நிறைந்துள்ளது.

ஒரு கப் (89 கிராம்) பச்சை முட்டைக்கோசில் 2 கிராம் நார்ச்சத்து மற்றும் தினசரி வைட்டமின் சி தேவையில் 85% உள்ளது.

சிவப்பு முட்டைக்கோஸில் அந்தோசயினின்கள் நிறைந்துள்ளன, இது தாவர கலவைகளின் ஒரு குழுவாகும், இது அதன் தனித்துவமான நிறத்திற்கும் ஆரோக்கிய நன்மைகளுக்கும் பங்களிக்கிறது.

2012 ஆம் ஆண்டு விலங்கு ஆய்வில், கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கவும், தமனிகளில் பிளேக் உருவாக்கத்தை அதிகரிக்கவும் வடிவமைக்கப்பட்ட உணவு எலிகளுக்கு அளிக்கப்பட்டது. பின்னர் எலிகளுக்கு சிவப்பு முட்டைக்கோஸ் சாறு வழங்கப்பட்டது.

சிவப்பு முட்டைக்கோஸ் சாறு இரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகரிப்பதைத் தடுக்கிறது மற்றும் இதயம் மற்றும் கல்லீரலுக்கு சேதம் ஏற்படாமல் பாதுகாக்கிறது .

இந்த முடிவுகள் 2014 இல் மற்றொரு விலங்கு ஆய்வின் மூலம் ஆதரிக்கப்பட்டது, சிவப்பு முட்டைக்கோஸ் வீக்கத்தைக் குறைக்கும் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் உணவை  உண்ணும் எலிகளில் கல்லீரல் பாதிப்பைத் தடுக்கும்.

12. சர்க்கரை வள்ளி கிழங்கு



ஒரு வேர் காய்கறி என வகைப்படுத்தப்பட்ட, சர்க்கரை வள்ளி கிழங்கு அவற்றின் துடிப்பான ஆரஞ்சு நிறம், இனிப்பு சுவை மற்றும் ஈர்க்கக்கூடிய ஆரோக்கிய நன்மைகளுக்காக தனித்து நிற்கிறது.

ஒரு நடுத்தர சர்க்கரை வள்ளிகிழங்கில் 4 கிராம் நார்ச்சத்து, 2 கிராம் புரதம் மற்றும் நல்ல அளவு வைட்டமின் சி, வைட்டமின் பி6, பொட்டாசியம் மற்றும் மாங்கனீஸ்  உள்ளன.

இது பீட்டா கரோட்டின் எனப்படும் வைட்டமின் ஏ வடிவத்திலும் அதிகமாக உள்ளது. உண்மையில், ஒரு சர்க்கரை வள்ளிகிழங்கு உங்கள் தினசரி வைட்டமின் ஏ தேவைகளில்  438% பூர்த்தி செய்கிறது.

பீட்டா கரோட்டின் நுகர்வு நுரையீரல் மற்றும் மார்பக புற்றுநோய்  உட்பட சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தில் குறிப்பிடத்தக்க குறைவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட வகை சர்க்கரை வள்ளி கிழங்குகளும் கூடுதல் நன்மைகளைக் கொண்டிருக்கலாம். எடுத்துக்காட்டாக, கயாபோ என்பது ஒரு வகை வெள்ளை சர்க்கரை வள்ளிகிழங்கு ஆகும், இது நீரிழிவு எதிர்ப்பு விளைவைக் கொண்டிருக்கலாம்.

13. காலார்ட் கிரீன்ஸ்


கொலார்ட் கீரைகள் மிகவும் ஊட்டச்சத்து நிறைந்த காய்கறி.

ஒரு கப் (190 கிராம்) சமைத்த கோலார்ட் கீரையில் 5 கிராம் நார்ச்சத்து, 4 கிராம் புரதம் மற்றும் உங்கள் தினசரி கால்சியம் தேவையில் 27%  உள்ளது.

உண்மையில், காலர்ட் கீரைகள் மற்ற இலை கீரைகள், ப்ரோக்கோலி மற்றும் சோயாபீன்களுடன் கால்சியத்தின் சிறந்த தாவர ஆதாரங்களில் ஒன்றாகும்.

தாவர மூலங்களிலிருந்து போதுமான அளவு கால்சியம் உட்கொள்வது எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்கிறது .

கொலார்ட் கீரையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன மேலும் சில நோய்களை உருவாக்கும் அபாயத்தையும் குறைக்கலாம்.

ஒரு ஆய்வில், வாரத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட காலார்ட் கீரைகளை சாப்பிடுவது 57% குளுக்கோமா அபாயத்துடன் தொடர்புடையது, இது குருட்டுத்தன்மைக்கு வழிவகுக்கும் ஒரு கண் நிலை .

மற்றொரு ஆய்வில், ப்ராசிகா குடும்பத்தில் அதிக அளவு காய்கறிகளை உட்கொள்வது, இதில் காலார்ட் கீரைகள் அடங்கும், புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கலாம் .

காலர்ட் கீரையில் கால்சியம் அதிகம் உள்ளது, இது ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்கும். கொலார்ட் கீரைகளை தவறாமல் உட்கொள்வது கிளௌகோமா மற்றும் புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்துடன் தொடர்புடையது.


14. கோல்ராபி / டர்னிப் 



டர்னிப் முட்டைக்கோஸ் அல்லது ஜெர்மன் டர்னிப் என்றும் அழைக்கப்படுகிறது, கோஹ்ராபி என்பது முட்டைக்கோஸுடன் தொடர்புடைய ஒரு காய்கறியாகும், இது பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிடலாம்.

மூல கோஹ்ராபியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது, ஒவ்வொரு கோப்பையிலும் 5 கிராம் (135 கிராம்) வழங்குகிறது. இது வைட்டமின் சி நிறைந்தது, ஒரு கோப்பைக்கு தினசரி மதிப்பில் 140% வழங்குகிறது.

கோஹ்ராபியின் ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கம் அழற்சி மற்றும் நீரிழிவு நோய்க்கு எதிரான ஒரு சக்திவாய்ந்த கருவியாக அமைகிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

ஒரு விலங்கு ஆய்வில், கோஹ்ராபி சாறு சிகிச்சையின் ஏழு நாட்களுக்குள் இரத்த சர்க்கரை அளவை 64% குறைக்க முடிந்தது .

பல்வேறு வகையான கோஹ்ராபிகள் உள்ளன என்றாலும், சிவப்பு கோஹ்ராபியில் பீனாலிக் ஆக்ஸிஜனேற்றத்தின் இரு மடங்கு அளவு உள்ளது மற்றும் வலுவான நீரிழிவு எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு விளைவுகளைக் காட்டுகிறது .

ஒரு ஆய்வில், நீரிழிவு நோயாளிகளுக்கு 12 வாரங்களுக்கு தினமும் 4 கிராம் கயாபோ கொடுக்கப்பட்டது, இது இரத்த சர்க்கரை மற்றும் இரத்த கொழுப்பு அளவுகள் இரண்டையும் குறைக்க வழிவகுத்தது .