Search

வீட்டிலேயே வளர்க்க வேண்டிய அற்புதமான மூலிகை செடிகள் !!

 இந்த தலைப்பே சுவாரஸ்யமான தலைப்புங்க. இதுவரை எந்த ஒரு மூலிகை வேண்டுமென்றாலும் நீங்கள் நாட்டு மருந்து கடை அல்லது எங்கயாவது தேடி அலைய வேண்டியிருக்கும். ஆனால் உங்கள் அழகான வீட்டிலேயே பலன் தரக்கூடிய சில மூலிகை தாவரங்களை உங்கள் வீட்டிலேயே வளர்த்து பயன் பெறலாம்.

இதன் மூலம் நான் பெற்ற அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எந்த மாதிரியான மூலிகை செடிகளை எப்படி உங்கள் வீட்டில் வளர்த்து பாரமரிக்கலாம் என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

இந்த மூலிகை செடிகள் தான் தற்போது ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவ துறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது நம்முடைய உடலுக்கு எந்த விதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. இது ரெம்ப பாதுகாப்பான முறையாக இருப்பதோடு செலவு குறைந்த முறையும் கூட.

இந்த மூலிகை செடிகள் எல்லாம் எங்கள் பாட்டி சில வைத்திய முறைக்கு பயன்படுத்தி அதன் மூலம் பயனையையும் அடைந்துள்ளனர். இந்த மூலிகை செடிகளை சில வீட்டு வைத்தியங்களுக்கு பயன்படுத்தலாம். உங்கள் மருத்துவர் ஆலோசனையும் மேற்கொள்ளவது நல்லது.

சரி வாங்க இப்பொழுது எந்த மாதிரியான மூலிகை செடிகளை உங்கள் வீட்டில் வளர்க்கலாம் மற்றும் அதன் அற்புதமான மருத்துவ குணங்கள் பற்றி காணலாம்.

துளசி



துளசி ஒரு இந்து மதத்தின் புனித செடியாக கருதப்படுகிறது. மேலும் இது ஹோலி பேசில் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் மருத்துவ குணங்களில் தலை சிறந்து இருப்பதால் மூலிகை செடிகளின் ராணி என்றும் பெயர் பெற்று விளங்குகிறது. இதை அப்படியே அல்லது ஹெர்பல் டீ யாக போட்டு சாப்பிடலாம்.

இந்த துளசியில் நான்கு வகைகள் உள்ளன. ராம துளசி, வன துளசி, கிருஷ்ணா துளசி, கற்பூர துளசி. இதில் கற்பூர துளசி பெரும்பாலும் வெளிபயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது. கற்பூர துளிசி எண்ணெய் காது பிரச்சினைகள் மற்றும் காது சொட்டு மருந்தாக பயன்படுகிறது. மேலும் இந்த ஆயில் சோப்பு, ஷாம்பு போன்று உடம்பை சுத்தப்படுத்தும் பொருளாகவும் அமைகிறது. துளசியில் கிருமி எதிர்ப்பு சக்தி, பூஞ்சை எதிர்ப்பு பொருள்கள், ஆன்டி பாக்டீரியல் பொருட்கள், ஆன்டி பயோடிக் பொருட்கள் போன்றவை காய்ச்சல், சலதோஷம் மற்றும் மூச்சு பிரச்சினைகள் போன்றவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது.

ராம துளசி இலைகள் நீண்ட நாள்பட்ட மூச்சுப் பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. இந்த துளிசியின் சாறு காய்ச்சல், சலதோஷம், இருமல் மற்றும் சுவாச பிரச்சினைகளை சரி செய்கிறது. மேலும் மலேரியாவை சரி செய்யவும் துளசி பயன்படுகிறது.

சீரண பிரச்சினை, காலரா, இன்ஸோமினியா, ஹைஸ்ட்ரியா போன்றவற்றை எதிர்த்தும் செயல்படுகிறது. சுத்தமான துளசி இலைகளை மில்லியன் மக்கள் தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.

வெந்தயம்



வெந்தயம் என்பது மெத்தி என்ற பெயரில் இந்தியாவில் அழைக்கப்படுகிறது. அதன் விதைகள் மற்றும் அதன் இலைகள் நிறைய மருத்துவ குணங்கள் வாய்ந்ததாக உள்ளது. நமது உடம்பை குளிர்ச்சியாக வைப்பதற்கு வெந்தயம் மிகவும் உதவி புரிகிறது. இது எந்த ஒரு சூழ்நிலைக்கும் ஏற்ற படி வளரும் மருத்துவ குணம் வாய்ந்த மூலிகை செடியாகும். உடம்பை ஆரோக்கியமாக வைப்பதற்கும் உடல் எடையை அதிகரிக்கவும் பயன்படுகிறது.

வெந்தயம் கல்லீரல் புற்றுநோயை தடுக்கிறது. சீரண சக்தியை அதிகரிக்கிறது. புதிய பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் உற்பத்தியை அதிகரிக்கிறது. பிரசவ வலி மற்றும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது. மேலும் வயிற்றில் ஏற்படும் அலர்ஜி, குடல் அலர்ஜி குடல் அல்சர் போன்றவற்றை தடுப்பதோடு இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. கெட்ட சுவாசத்தை தடுக்கிறது. இந்த அற்புதமான மூலிகை செடியை வீட்டிலேயே வளர்த்து நாம் பயன் பெறலாம்.

லெமன் கிராஸ்



லெமன் கிராஸ் மற்றொரு மூலிகை செடியாகும். இதையும் வீட்டிலேயே வளர்த்து நாம் பயன் பெறலாம். சின்ன ஒரு ஜாடியில் கூட எளிதாக இதை வளர்க்கலாம். இது எண்ணிலடங்காத மருத்துவ பயன்களை அள்ளித் தருகிறது. இது டீ, சாலட்ஸ், சூப், மற்றும் நிறைய சமையல் வகைகளில் பயன்படுகிறது.

இந்த லெமன் கிராஸ் நரம்பு மண்டலத்திற்கு மிகவும் நல்லது. இதிலுள்ள ஆன்டி பைரிடிக் பொருள் அதிகமான காய்ச்சலை கூட குணப்படுத்தி விடுகின்றது. மூச்சுப் பிரச்சினை மற்றும் தொண்டை புண் போன்றவற்றிற்கும் பயன்படுகிறது. மேலும் இது எல்லா விதமான வலிகளான அடி வயிற்றில் வலி, தலைவலி, மூட்டு வலி, தசை வலி, சீரண மண்டல கோளாறுகள், தசை சுருக்கம், வயிற்று வலி போன்றவற்றிற்கும் பயன்படுகிறது.

கற்றாழை



கற்றாழை ஒரு அற்புதமான மூலிகை செடியாகும். இது எங்கு வேணும்னாலும் வளரும். நன்றாக வளர்வதற்கு சூரிய ஒளி தேவை. இது கண்டிப்பாக வீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகை செடியாகும். இதை உங்கள் வீட்டில் வளர்த்தால் கொசுக்கள் வராமல் இருக்க இது உதவுகிறது. இது வெளி மற்றும் உள் என்ற இரண்டு பயன்பாட்டிற்கும் பயன்படுகிறது. இது நல்ல நீர்ச்சத்தை கொடுக்கக்கூடிய மூலிகையாக உள்ளது.,

இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நமது உடம்பு வயதாகுவதை தடுக்கிறது. நீங்கள் குறைவான நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருந்தால் கற்றாழை ஜூஸை தினமும் குடித்து வந்தால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

அடிபட்ட மற்றும் வெட்டப்பட்ட காயங்கள் மற்றும் தீ காயங்கள் போன்றவற்றை குணப்படுத்தும் மருந்தாக பயன்படுகிறது. அலற்சியை எதிர்க்கிறது. மேலும் உங்கள் சருமம் மற்றும் தலை முடிகளை பாதுகாக்கிறது.

இந்த கற்றாழை ஜூஸை குடித்தால் பசியின்மை, சீரண சக்தி கோளாறுகள், மலச்சிக்கல், குடல் அல்சர் போன்றவற்றை குணப்படுத்துகிறது.

புதினா :

இந்த மூலிகை செடி உலகளவில் எல்லாராலும் வளர்க்கப்படும் முக்கிய செடியாகும். ஒரு சிறிய தொட்டியில் எல்லா சூழ்நிலைக்கும் பொருந்தக் கூடிய இவற்றை வீட்டிலேயே எளிதாக வளர்க்கலாம்.

இதில் இயற்கையாகவே மக்னீசியம், விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி போன்றவைகள் உள்ளன. இதன் இலைகளிருந்து தயாரிக்கப்படும் சாறு தசைகளுக்கு ரிலாக்ஸ் கொடுக்க பயன்படுகிறது. வாய் துர்நாற்றத்தை போக்குகிறது.

மேலும் வாய்வு, வயிற்று மந்தம், காய்ச்சல், எரிச்சலுடன் மலம் கழித்தல், பெருங்குடல் பிரச்சினை போன்றவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது. நமது உடலில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியினை தடுக்கிறது.

வல்லாரை கீரை

மற்றொரு வீட்டிலேயே வளர்க்க கூடிய ஈஸியான செடி வல்லாரை ஆகும். இது நமது மூளை வளர்ச்சிக்கும் நினைவாற்றலுக்கும் மிகச் சிறந்த மூலிகை பொருளாகும். இந்த சின்ன மூலிகை செடி அல்சர், சரும பாதிப்பு, இரத்த குழாய் சுருக்கம் போன்றவற்றை சரியாக்குகிறது.

நீங்கள் எப்பொழுதும் இளமையாக இருக்க நினைத்தால் இதை தினமும் உணவில் சேர்த்து கொண்டாலே போதும். இதன் இலைகளை கசக்கி பிழிந்த சாறு வெளியில் ஏற்படும் புண்களை குணப்படுத்த பயன்படுகிறது. மேலும் மூளை மற்றும் நரம்பு மண்டல சீரான இயக்கத்திற்கு பயன்படுகிறது. நினைவாற்றலை அதிகரிக்கிறது.

அஸ்வகந்தா

அஸ்வகந்தா முந்தைய கால ஆயுர்வேத முறைகளிலிருந்து பயன்படுத்தப்படும் மூலிகை செடியாகும். இதை வீட்டிலேயே வளர்க்கலாம். இது மன அழுத்தம் குறைப்பதற்கும் மற்றும் நரம்பு மண்டல பாதுகாப்பிற்கும் பயன்படுகிறது.

இந்த பழைய மூலிகை செடி கருவுறுதல், காயங்களை குணப்படுத்துதல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் போன்றவற்றிற்கு பயன்படுகிறது. இதய இயக்கத்திற்கு டானிக்காக செயல்படுகிறது.

கண்களின் ஆரோக்கியத்திற்கும் பயன்படுகிறது. மேலும் இது மன அழுத்தத்தை குறைத்து கவலைகள், அனிஸ்சிட்டி போன்றவை வராமலும் தடுக்கிறது. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்தல், கொலஸ்ட்ரால் அளவை குறைத்தல் போன்ற அற்புதமான பலன்களை அள்ளித் தருகிறது.

லெமன் பாம்

வீட்டில் வளர்க்கக்கூடிய மற்றொரு தாவரம் லெமன் பாம் ஆகும். இதன் இலைகள் பார்ப்பதற்கு லெமன் மர இலைகளை போல் இருப்பதால் இந்த பெயர் பெற்றுள்ளது.

இதன் இலைகளை கசக்கி அதன் சாற்றை உடம்பில் தேய்த்து கொண்டால் இயற்கை கொசு விரட்டியாக செயல்படும். தொண்டை புண், சலதோஷம், காய்ச்சல், தலைவலி, மன அழுத்தம், சீரண மண்டல பிரச்சினைகள் போன்றவற்றிற்கும் பயன்படுகிறது.

சளி, இருமல், உடல் வலி இருந்தாலே பரிசோதனை : புதிய நெறிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பரிசோதனைக்காக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.



சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பாதிப்பு தற்போது உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதில தற்போதுவரை உலகம் முழுவதும் மொத்த கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்க 30 கோடியை கடந்துள்ள நிலையில், பல நாடுகளி்ல் கொரோனா தொற்றின்  4-வது மற்றும் 5-வது அலை பரவி வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய கொரோனா தொற்றின் 2-வது அலை கடந்த ஆண்டு இறுதியில் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், மக்கள் அனைவரும் தங்களது இயல்பு வாழ்க்கையை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தனர். ஆனால் கடந்ந நவம்பர் இறுதியில் இருந்து இந்தியாவில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது.

தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால், பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்குடன் மற்றும்  கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மீண்டும் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் சூழல் உருவாகியுள்ள நிலையில், மக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும் என்றும், முககவசம் மற்றும் சமூக இடைவெளியை கட்டாயம் பி்ன்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் கடந்த வாரம் முதல் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்ற நாட்களில் இரவு நேர ஊரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று பாதிப்பு குறித்து அரவு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு நேரத்தில் காவல்துறையினர் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில். தற்போது தமிழக அரசு சார்பில், கொரோனா பரிசோதனைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி, காய்ச்சல் சளி மற்றும் உடல் வலி இருப்பவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது மேலும் இணை நோய்கள் மற்றும் 60 வயதை கடந்தவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 60 வயதிற்கு குறைவாக இருந்தாலும் அவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனை அல்லது வீட்டு தனிமையில் உள்ளவர்கள் தொடர்ந்து 3 நாட்கள் காய்ச்சல் இல்லாமல் இருந்தால் 7 நாட்கள் கழித்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒமிக்ரானின் ஆபத்தான ஐந்து அறிகுறிகள் - Omicron symptoms

 நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனாவின் புதிய மாறுபாட்டான ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.



Omicron symptoms: நாட்டில் மீண்டும் கொரோனா தொற்றின் அறிகுறிகள் அதிகரித்து வருகின்றன. கொரோனாவின் புதிய மாறுபாட்டான ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஒரு மாதத்திற்குள், கொரோனாவின் புதிய மாறுபாடான, ஒமிக்ரான், உலகம் முழுவதையும் மூழ்கடித்தது. முன்பு காணப்படாத அறிகுறிகளை Omicron இல் காண்கிறது. ஒமிக்ரானின் ஆரம்ப அறிகுறிகளைக் கவனித்துக் கொண்டால், அதைக் கட்டுப்படுத்துவது எளிது என்று மருத்துவர்கள் நம்புகிறார்கள். அத்தகைய சில அறிகுறிகளைப் பற்றி இங்கே நாங்கள் உங்களுக்கு கூறயுள்ளோம்.

1. நீலம் மற்றும் சாம்பல் நிற நகங்கள்: இது ஒமிக்ரானின் (Omicron) ஆரம்ப அறிகுறிகளில் காணப்படுகிறது. ஒமிக்ரானால் (Symptoms of Omicron) பாதிக்கப்பட்டவர்களின் இரத்தத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதன் காரணமாக அவர்களின் நகங்கள் நீலமாக மாறத் தொடங்கும். இதுபோன்ற ஏதாவது ஒன்றை நீங்கள் கண்டால், மருத்துவரை அணுகவும்.

2. தோலில் ஏற்படும் விளைவு: உங்கள் தோலில் திடீர் புள்ளிகள் இருந்தால் அல்லது தோல், உதடுகள் நீல நிறமாக மாறினால், நீங்கள் மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும்.

3. சுவாசிப்பதில் சிரமம்: திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டாலோ, மார்பு இறுக்கமாக உணர்ந்தாலோ கண்டிப்பாக மருத்துவரை அணுகவும்.

4. சோர்வு மற்றும் உடல் வலி: நீங்கள் சோர்வாக உணர்ந்தாலோ அல்லது இடுப்பின் கீழ் பகுதியில் தாங்க முடியாத வலி இருந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுகவும். இது Omicron இன் முக்கிய அறிகுறிகளாகும். 

5. இரவில் வியர்த்தால்: இரவில் தூங்கும் போது அதிகளவில் வியர்த்தால், இதுவும் ஒமிக்ரானின் அறிகுறியாக இருக்கலாம்.


இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி பதிவு செய்வது எப்படி? Covisheild Or Covaxin ?

 மத்திய அரசின் அறிவிப்பின்படி இந்தியாவில் மக்களுக்கு 10.01.2022 பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படது.

மத்திய அரசின் அறிவிப்புப்படி கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவில் தகுதியான மக்களுக்கு ஜனவரி-10 முதல் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கிது

 இவை முதற்கட்டமாக சுகாதாரம் மற்றும் முன்னிலை பணியாளர்கள்,  60 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆகியோருக்கு செலுத்தப்பட இருக்கிறது.  

இந்த பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் covisheild போடுவதா அல்லது covaxin போடுவதா என்று மக்களுக்கு குழப்பம் ஏற்படும்.  இந்நிலையில் இதற்கு முன் பெற்றுக்கொண்ட தடுப்பூசியை தான் பெற்றுக்கொள்ள என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

முதல் இரண்டு தடுப்பூசிகள் covisheildஐ செலுத்தியவர்கள், தற்போது போடப்படும் மூன்றாவது டோஸிலும் covisheild ஐ தான் தேர்ந்தெடுக்க வேண்டும். 


அதேபோல முதல் இரண்டு தடுப்பூசிகள் covaxin ஐ செலுத்தியவர்கள், தற்போது போடப்படும் மூன்றாவது டோஸிலும் covaxin ஐ தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.   இதுகுறித்து நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் கூறுகையில், covisheild பெற்றவர்கள் covisheild  தான் பெறுவார்கள், covaxin பெற்றவர்கள் covaxin  தான் பெறுவார்கள் என்று கூறியுள்ளார்.  மேலும் கோவிட்-19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை எடுத்துக் கொண்ட தகுதியுள்ள மக்கள் நேரடியாக  எந்த தடுப்பூசி மையத்திற்கும் சென்று பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம்.  சுகாதாரப் பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்படும் கோவிட்-19 தடுப்பூசிக்கான பதிவு 08.01.2022 சனிக்கிழமை மாலை முதல் CoWIN தளத்தில் தொடங்கியது. 

இதுகுறித்து தேசிய சுகாதார இயக்கத்தின் (NHM) கூடுதல் செயலாளரும் பணி இயக்குனருமான விகாஸ் ஷீல் பதிவிட்ட ட்வீட்டில், "HCWs/FLWs மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட  குடிமக்களுக்கான தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்பதிவு விண்ணப்பம் Co-WIN ல் தொடங்கப்பட்டுள்ளது.  தடுப்பூசிக்கு முன்பதிவு செய்ய http://cowin.gov.in ஐப் பார்வையிடவும்" என்று பதிவிட்டுள்ளார்.  ஆன்லைன் மற்றும் ஆப்லைனிலும் தடுப்பூசிக்கான முன்பதிவுகள் நடத்தப்படும்.  Co-WIN அமைப்பில் பதிவுசெய்யப்பட்ட இரண்டாவது டோஸின் தேதியின் அடிப்படையில் (9 மாதங்கள் அதாவது இரண்டாவது டோஸ் எடுக்கப்பட்ட நாளிலிருந்து 39 வாரங்கள்)  தடுப்பூசி செலுத்தப்படும்.  மேலும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த தகுதியானவர்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பி நினைவுபடுத்தப்படும்.

ஒமைக்ரான் வைரஸ் பிஏ.1 பிஏ.2 பிஏ.3 என 3 வகையாக மாறுகிறது- மருத்துவ நிபுணர்கள் தகவல்

 ஒமைக்ரான் மற்றும் அதன் 3 வகையான மாற்றங்கள் டெல்டாவின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டுகிறது. இனி வரும் காலங்களில் ஒமைக்ரானின் ஆதிக்கமே அதிகமாக இருக்கும்.

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் கொரோனா வைரஸ் (பி.1.1.529) கடந்த மாதம் 2-ந் தேதி இந்தியாவுக்கு பரவியது.



கர்நாடக மாநிலத்தில் டாக்டர் உள்பட 2 பேருக்கு முதல் முதலாக ஒமைக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து மராட்டியம், ராஜஸ்தான், குஜராத், கேரளா, தமிழ்நாடு உள்பட பெரும்பாலான மாநிலங்களுக்கு இந்த உருமாறிய கொரோனா பரவியது.

தற்போது இந்தியாவில் ஒமைக்ரானின் பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டிவிட்டது. 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமைக்ரான் தொற்று உள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்து வரும் இன்சாகோக் அமைப்பின் உயிரி தொழில்நுட்பத் துறையினர் ஒமைக்ரான் பற்றி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் சோதனை விவரங்களை பரிசோதித்தனர்.

இந்த ஆய்வின்படி ஒமைக்ரான் வைரஸ் 3 வகையாக மாற்றம் அடைந்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மருத்துவ நிபுணர் ஒருவர் கூறியதாவது:-

ஒமைக்ரான் தற்போது 3 வகையாக மாறி வருகிறது. பிஏ.1, பிஏ.2 மற்றும் பிஏ.3 என 3 வழித் தோன்றல்களை கொண்டு இருக்கிறது.

இதில் பிஏ.1 குறைந்த வீரியம் மிக்கது. மிகவும் அதிகமாக பரவக்கூடியது. இதன் காரணமாகவே இந்தியாவில் தற்போது கொரோனா அதிகமாக பரவி வருகிறது.

ஒமைக்ரான் மற்றும் அதன் 3 வகையான மாற்றங்கள் டெல்டாவின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டுகிறது. இனி வரும் காலங்களில் ஒமைக்ரானின் ஆதிக்கமே அதிகமாக இருக்கும்.

பிஏ.1 மற்றும் பிஏ.3 ஸ்பைக் புரதத்தில் 60 முதல் 70 சதவீதம் நீக்கம் உள்ளது. பிஏ.2வில் ஸ்பைக் புரதத்தில் 69-70 சதவீதம் நீக்கம் இல்லை. ஆர்.டி.-பி.சி.ஆர் மற்றும் எஸ்.ஜி.டி.எப். கிட் இந்தியாவில் ஆரம்பகால ஒமைக்ரான் கட்டத்தில் பயன்படுத்தப்பட்டது.

இந்தியாவில் ஒமைக்ரான் பிஏ.3 மாற்றத்தை நாங்கள் இன்னும் அடையாளம் காணவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்


அதிவேகமெடுத்த ஓமைக்ரான்… குழந்தைகளுக்கு முதலில் செய்ய வேண்டியவை குறித்த கைட்லைன்


சாதாரண சளியா? ஒமைக்ரானா? வித்தியாசம் என்ன? அறிகுறிகள் சொல்வதென்ன?

5 ஜி.பி. இலவச டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்.

 பி.எஸ்.என்.எல். நிறுவனம் மற்ற நிறுவன வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய திட்டத்தை அறிவித்து இருக்கிறது.

கடந்த ஆண்டு இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல், வி மற்றும் ஜியோ தங்களின் பிரீபெயிட் சலுகை கட்டணங்களை உயர்த்தின. அனைத்து சலுகை கட்டணங்களும் அதிகபட்சமாக 25 சதவீதம் வரை உயர்த்தப்பட்டன. 


இதன்காரணமாக பலர் பி.எஸ்.என்.எல். சேவைக்கு மாற துவங்கினர். இதை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் புதிய சலுகையை விளம்பர நோக்கில் அறிவித்து இருக்கிறது. அதன்படி ஏர்டெல், ஜியோ மற்றும் வி நிறுவன வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல். சேவைக்கு மாறும் போது 5 ஜி.பி. டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது.



இந்த சலுகை 30 நாட்கள் அல்லது சலுகை தற்போதைய சலுகையின் வேலிடிட்டி இருக்கும் வரை வழங்கப்படுகிறது. இது குறுகிய காலத்திற்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. எனினும், மற்ற நிறுவன வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல். சேவைக்கு ஜனவரி 15, 2022 முன் போர்ட் செய்ய வேண்டும். 


பின் இலவச 5 ஜி.பி. டேட்டாவை பெற வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல். சேவைக்கு மாறியதற்கான காரணத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, உடன் #SwitchToBSNL ஹேஷ்டேக் சேர்த்து பின் பி.எஸ்.என்.எல். அக்கவுண்டை டேக் செய்ய வேண்டும். இத்துடன் பி.எஸ்.என்.எல். சமூக வலைதள பக்கங்களை பின்தொடர்ந்து, இதற்கான ஆதாரத்தை பி.எஸ்.என்.எல். வாட்ஸ்அப் எண் - 9457086024 அனுப்ப வேண்டும். 

தினமும் ரூ8 முதலீடு… ரூ17 லட்சம் ரிட்டன்; எல்ஐசியின் சூப்பர் பாலிசி

 

இந்த திட்டம் 16 ஆண்டுகள், 21 ஆண்டுகள் அல்லது 25 ஆண்டுகள் போன்ற பல்வேறு விருப்பங்களுடன் உங்களுக்கு கிடைக்கிறது.




இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (LIC),காப்பீடு உள்பட ஏராளமான சேவைகளை வழங்கி வருகிறது. இதில் குறைந்த எண்ணிக்கையிலான பிரீமியங்கள் முதிர்வு காலத்திற்குப் பிறகு பெரிய வருமானத்திற்கு வழிவகுக்கும். உங்கள் ஓய்வு மற்றும் முதுமைக்கு நீங்கள் சிறிது பணத்தை சேமிக்க விரும்பினால், எல்ஐசி பாலிசிகள் உங்களுக்கு சிறந்த வழி.

கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்ட எல்ஐசியில், நிச்சயம் உங்களது குடும்ப உறுப்பினரோ அல்லது உறவினர்களோ பாலிசி எடுத்திருப்பார்கள். ஒருவேளை, நீங்கள் இன்னும் எல்ஐசி பாலிசையை எடுக்காவிட்டால், தினமும் வெறும் 8 ரூபாய் செலுத்தி, ரூ.17 லட்சம் வருமானம் கிடைக்கும் எல்ஐசியின் ஜீவன் லாப் திட்டம் நிச்சயம் சிறந்த சேமிப்புக்கான வழியாகும்.

எல்ஐசி ஜீவன் லாப் என்பது என்டௌமெண்ட் திட்டத்துடன் இணைக்கப்படாமல் வெளி வரும் வரையறுக்கப்பட்ட பிரீமியம் செலுத்தும் திட்டமாகும். இந்த திட்டம் பங்குகளை சார்ந்து இருக்காது என்பதால், பாதுகாப்பானதாகக் கருதப்படுகின்றன.

நீங்கள் மாதத்திற்கு ரூ. 233 முதலீடு செய்வதன் மூலம் முதிர்ச்சி காலத்தில் ரூ.17 லட்சத்தை பெறலாம், அதாவது ஒரு நாளைக்கு ரூ.8க்கும் குறைவாக தான் முதலீடு தொகை இருக்கிறது.

இத்திட்டத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால், குறைந்தபட்ச முதலீட்டு வயது எட்டு மட்டுமே. அதன்படி, உங்கள் குழந்தைகளுக்கும் இத்திட்டத்தை தாராளமாக தொடங்கலாம். அதே சமயம், இதில் முதலீடு செய்வதற்கான அதிகபட்ச வயது 59 ஆகும்.

இந்த திட்டம் 16 ஆண்டுகள், 21 ஆண்டுகள் அல்லது 25 ஆண்டுகள் போன்ற பல்வேறு விருப்பங்களுடன் காப்பீட்டு உரிமையை தேர்வு செய்ய உங்களுக்கு அனுமதி கொடுக்கிறது.

அதாவது, ஒருவர் பாலிசி காலத்தை 21 வருடங்கள் தேர்வு செய்தால், பாலிசி எடுக்கும் போது அவரது வயது 54 வயதுக்கு குறைவாக இருக்க வேண்டும். அதே நேரத்தில், பாலிசி காலமாக 25 வருடத்தை தேர்வு செய்தால், தனிநபரின் வயது வரம்பு 50 ஆண்டுகள் ஆகும்.

பாலிசி கால வரையின் போது எந்த நேரத்திலும் பாலிசிதாரரின் இறப்பு ஏற்பட்டால், நியமனதாரருக்கு இறப்பு சலுகைகளானது வழங்கப்படும். நாமினி போனஸ் மற்றும் காப்பீட்டுத் தொகையின் பலனைப் பெறுகிறார். இந்த திட்டத்தில் வரி விலக்கும் பெறலாம்.

ரூ.1 கோடி கிடைக்கும் - எல்ஐசியின் ஜீவன் சிரோமணி பிளான் !!!

ஆன்லைனிலேயே PPF , SSY போன்ற அஞ்சலக திட்டங்களில் முதலீடு செய்யலாம்

60 மாதங்களில் ரூ.10- ரூ.14 லட்சம்.. வரி சலுகையும் உண்டு.. அஞ்சலகத்தின் இந்த திட்டம் தான் சிறந்தது..!


அதிவேகமெடுத்த ஓமைக்ரான்… குழந்தைகளுக்கு முதலில் செய்ய வேண்டியவை குறித்த கைட்லைன்

 இரண்டாம் அலை ஓய்ந்த பிறகு தற்போது சமீபத்தில் பரவிவரும் ஓமைக்ரான் நோயானது தமிழகத்திலும் அதிவேகத்தில் பரவி வருகிறது. குழந்தைகள் மத்தியிலும் ஒமைக்ரான் எளிதில் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், ஜனவரி 3ஆம் தேதி முதல் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். இருப்பினும், குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதில் பெற்றோர்கள் முன்பை விட கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான மிக எளிய வழிகளில் ஒன்று ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவை சாப்பிடுவது. சமீபத்தில், பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் மற்றும் அவரது குழுவினர் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சில முக்கிய டிப்ஸ்களை பகிர்ந்து கொண்டனர். மேலும், பெருந்தொற்று நேரத்தில் உங்கள் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு கொடுக்க வேண்டிய உணவுகள் பற்றி குழந்தைகள் நல மருத்துவர் சுசித்ரா நம்மிடம் பகிர்ந்தவற்றை பார்க்கலாம்.

உங்கள் குழந்தைகளுக்கு நாள்தோறும் குறைந்தபட்சம் ஒரு சீசன் பழங்கள் அல்லது உள்ளூர் பழங்களை கொடுக்க முயற்சி செய்யுங்கள். குழந்தைகள் முழு பழத்தையும் சாப்பிட விரும்பவில்லை என்றால், அந்த பழங்களை சிறிதளவு கொடுப்பது கூட அவர்களுக்கு குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.


ராகி லட்டு (அ) அல்வா:

எப்போதுமே அனைவரும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை ஆரோக்கியமான மற்றும் சத்தான ஒன்றை சாப்பிடுவது மிகவும் முக்கியம். ரொட்டி, நெய் மற்றும் ஜாகிரி ரோல் (jaggery roll), சுஜி அல்வா அல்லது ராகி லட்டு போன்ற இனிபான மற்றும் எளிய உணவை கொடுப்பது குழந்தைகளை உற்சாகமாக வைத்திருக்க உதவும்.


அரிசி:

அரிசியில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக அதில் ஒரு சிறப்பு வகையான அமினோ அமிலம் உள்ளது. ஜீரணிக்க எளிதான மற்றும் சுவையான அரிசி குழந்தைகளின் டயட்டில் சேர்க்க வேண்டிய ஒரு முக்கியமான உணவு ஆகும். பருப்பு, அரிசி மற்றும் நெய் ஆகியவை குழந்தைகளுக்கு சிறந்த உணவு விருப்பமாக இருக்கின்றன.

ஊறுகாய் அல்லது சட்னி:

குழந்தைகளின் தினசரி உணவில் வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட சில ஊறுகாய் அல்லது சட்னி வகைகள் இருப்பதும் அவசியம். இந்த சைடிஷ்கள் குழந்தைகளின் குடல் பாக்டீரியாக்கள் செழிக்க உதவும், அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க உதவும்.

முந்திரி:

மதிய உணவிற்கு இடையில் சில முந்திரிகளை குழந்தைகளுக்கு சாப்பிட கொடுப்பது அவர்களை சுறுசுறுப்புடனும், ஆற்றலுடனும் வைத்திருக்கும். இவை வலிகளையும் குறைக்க உதவும்.

ஆரோக்கியமாக சாப்பிடுவதைத் தவிர, பொதுவாக நம் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் வேறு சில விஷயங்களும் உள்ளன. உணவு என்பது ஒரு காரணி, இது உண்மையில் உங்கள் நோய் எதிர்ப்பு ஆரோக்கியத்தில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் நாம் அறியாமல் செய்யும் வேறு சில அன்றாட நடவடிக்கைகள் நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளிக்கு போகாமல் வீட்டிலேயே இருப்பதால் குழந்தைகளின் தூக்க பழக்கவழக்கம் பெரும் மாற்றத்தை சந்தித்துள்ளது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே அவர்களின் தூக்கத்தை முறையாக பேணுவது பெற்றோர்களின் கடமை. தவிர குழந்தைகளை உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க வைப்பதும் மற்றொரு முக்கியமான வாழ்க்கை முறை பழக்கமாகும்.

உங்கள் தினசரி உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டிய 11 வகையான ஊட்டச்சத்துக்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்...

நமது ஆயுட்காலம் முழுவதும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதுகாக்க நமது உணவு பட்டியலில் சில முக்கிய உணவு வகைகளை சேர்க்க வேண்டும். இதுகுறித்து விளக்கிய டாக்டர் இர்பான் ஷேக், ஊட்டச்சத்துக்களின் ஆதாரங்கள் குறித்து தெளிவுப்படுத்தியுள்ளார்.


நோய் எதிர்ப்பு சக், மூளை வளர்ச்சி, தசை, எலும்பு ஆரோக்கியம் போன்ற அனைத்து வகையான உடல்நலத்திற்கும் ஊட்டச்சத்துக்கள் அவசியம். நமது ஆயுட்காலம் முழுவதும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதுகாக்க நமது உணவு பட்டியலில் சில முக்கிய உணவு வகைகளை சேர்க்க வேண்டும். இதுகுறித்து விளக்கிய டாக்டர் இர்பான் ஷேக், ஊட்டச்சத்துக்களின் ஆதாரங்கள் குறித்து தெளிவுப்படுத்தியுள்ளார். அவர் கூறிய முக்கிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் அவை நிறைந்துள்ள உணவு வகைகள் குறித்து நாம் இங்கு காண்போம்.
புரதம் :


தசைகள், எலும்புகள், ஹார்மோன்கள், ஆன்டிபாடிகள் போன்ற உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் புரதச்சத்து அவசியமானது. ஒரு நாளைக்கு 0.8 கிராம் முதல் 1 கிலோ வரை புரதத்தை உட்கொள்வது தசையை வலுவடைய உதவுகிறது. புரதச்சத்தானது முட்டையில் மட்டுமின்றி கொண்டைக்கடலை, பாலாடைக்கட்டி, குயினோவா, தயிர், வேர்க்கடலை, பால் மற்றும் பால் பொருட்கள் மற்றும் பாதாம் போன்ற உணவுகளும் அதிகமாக காணப்படுகிறது.
DHA ஒமேகா-3 :




முக்கியமாக கடல் உணவுகளில் அதிகமாக காணப்படும் இந்த DHA ஒமேகா-3 தனித்துவமான கொழுப்பு சத்து நமது மூளைக்கு ஊட்டமளிக்கிறது மற்றும் கண்பார்வையை கூர்மையாக வைத்திருக்க உதவுகிறது. கொழுப்பு நிறைந்த மீன் ஒமேகா 3ன் சிறந்த ஆதாரமாகும். ஒமேகா-3 நிறைந்த காய்கறிகள், கொட்டைகள் மற்றும் சீட்ஸ் போன்ற தாவர அடிப்படையிலான உணவுகளை அதிகமாக சாப்பிடுங்கள். சைவ உணவு பிரியர்கள் கடற்பாசி, நோரி, ஸ்பைருலினா மற்றும் குளோரெல்லா போன்றவற்றையும் எடுத்து கொள்ளுங்கள்.

கோலின் :

கோலின் (Choline) நீரில் கரையக்கூடிய அத்தியாவசியமான ஊட்டச்சத்தாகும். நமது மூளை, நரம்பு மண்டலம், நினைவகம், மனநிலை மற்றும் தசை ஆரோக்கியம் போன்றவை கோலினை சார்ந்துள்ளது. ஆனால் நம்மில் பெரும்பாலோர் அதை போதுமான அளவு உட்கொள்வதில்லை, குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு கூடுதல் கோலின் எடுத்து கொள்ள வேண்டும். கோலினின் இறைச்சி, கோழி, மீன், பால் பொருட்கள் மற்றும் முட்டை போன்ற விலங்கு அடிப்படையிலான உணவில் அதிகமாக காணப்படுகிறது.

கால்சியம் :



எலும்புகள் மற்றும் பற்கள் ஆரோக்கியத்திற்கு கால்சியம் முக்கியமானது. பால், தயிர் மற்றும் சீஸ் போன்ற பால் பொருட்கள் கால்சியம் நிறைந்த உணவு ஆதாரங்கள் ஆகும். இது தவிர கீரைகள் மற்றும் பீன்ஸ் போன்றவற்றிலும் கால்சியம் நிறைந்துள்ளது.

வைட்டமின் டி :

வைட்டமின் டி நம் உடல்கள் கால்சியத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. சூரிய ஒளியில் இருந்து நம்மால் வைட்டமின் டி-யை இயற்கையாயாக பெற முடியும். இதனால் வைட்டமின் டி 'சூரிய ஒளி வைட்டமின்' என்றும் அழைக்கப்படுகிறது.கொழுப்பு நிறைந்த மீன், கல்லீரல், முட்டையின் மஞ்சள் க, ஆரஞ்சு சாறு மற்றும் சீஸ் போன்ற உணவு வகைகளிலும் இயற்கையாகவே வைட்டமின் டி நிறைந்துள்ளது.

துத்தநாகம் :

துத்தநாகம் சரியான வளர்ச்சிக்கு முக்கியமானது, குறிப்பாக குழந்தை பருவம், இளமை பருவம் மற்றும் கர்ப்ப காலத்தில் துத்தநாகத் தை சரியான அளவு எடுத்து கொள்ள வேண்டும். மேலும் துத்தநாகம் காயங்களை விரைவாக ஆற்றவும் உதவுகிறது. சிவப்பு இறைச்சியில் துத்தநாகம் நிறைந்துள்ளது. சைவ உணவு உண்பவர்கள் கொண்டைக்கடலை, பருப்பு மற்றும் பீன்ஸ் போன்ற உணவுகளை எடுத்து கொள்ளலாம்.

செலினியம் :

ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து செல்களை பாதுகாக்க செலினியம் ஒரு ஆக்ஸிஜனேற்ற ஊட்டச்சமாக செயல்படுகிறது. உங்கள் தினசரி தேவைகளில் 11 சதவீதம் செலினியம் பால் மற்றும் தயிரில் உள்ளது. இது தவிர வாழைப்பழம், முந்திரி, பருப்பு, கீரை போன்றவற்றிலும் செலினியம் நிறைந்துள்ளது.

வைட்டமின் ஏ :

"ஆன்டி-இன்ஃபெக்டிவ் வைட்டமின்" என்று அழைக்கப்படும் வைட்டமின் ஏ ஊட்டச்சத்து தோல், வாய், வயிறு மற்றும் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் தொற்றுநோயை எதிர்த்துப் போராடவும், பார்வை திறனை மேம்படுத்தவும் உதவுகிறது. உருளைக்கிழங்கு, பூசணி, கேரட் மற்றும் கீரையில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது.

வைட்டமின் ஈ :



வைட்டமின் ஈ ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக உங்கள் உடலை பாதுகாக்க உதவுகிறது மற்றும் ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்தை உறுதி செய்கிறது. வைட்டமின் ஈ பெரும்பாலான உணவுகளில் காணப்படும் பொதுவான ஊட்டச்சத்து ஆகும். சமையல் எண்ணெய்கள், சீட்ஸ் மற்றும் நட்ஸ் உள்ளிட்ட உணவுகளில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது.

வைட்டமின் சி :

உயிரணுக்களை சேதத்திலிருந்து பாதுகாக்கும் ஆக்ஸிஜனேற்றியாக வைட்டமின் சி செயல்படுகிறது. இது உணவுகளில் இருந்து அதிக இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு உதவுவதால் இரத்த சோகை இருப்பவர்கள் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது நல்லது. ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. மேலும் கிவி, ஸ்ட்ராபெர்ரி, ப்ரோக்கோலி, தக்காளி, காலிஃபிளவர் மற்றும் சிவப்பு மிளகாயிலும் வைட்டமின் சி உள்ளது.

திரவங்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் :

செல்கள் மற்றும் திசுக்களை ஆரோக்கியமாக வைத்திருக்க திரவங்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் அவசியம். இது நமது udalil உள்ள கழிவுப்பொருட்களை அகற்றவும், உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. குறிப்பாக நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும் போது சோடியம், பொட்டாசியம் மற்றும் குளோரைடு போன்ற எலக்ட்ரோலைட்டுகளை கொண்ட திரவங்களை உட்கொள்வது நீரேற்றமாக இருக்க உதவுகிறது.

இளநீர், தர்பூசணி, கீரை, காய்கறிகள், வாழைப்பழம் போன்ற பழங்கள், கொடிமுந்திரி உட்பட எலக்ட்ரோலைட்கள் நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்து கொள்ளுங்கள். இது தவிர, பீன்ஸ், பருப்பு, பயறு வகைகள் ஆகியவற்றிலும் கணிசமான அளவு எலக்ட்ரோலைட்டுகள் உள்ளன.

கோல்டன் (மஞ்சள்) பாலின் மகிமை மற்றும் அதை எப்படி செய்வது ?

 மருத்துவ உலகில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பொருள் மஞ்சள். உலகில் மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் இயற்கையாகவே மருத்துவ குணம் நிறைந்துள்ள பொருட்களில் ஒன்று மஞ்சள். குறிப்பாக, மஞ்சளானது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், அழற்சி குறைபாடுகள் சிகிச்சைக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அத்தோடு அதன் நன்மை நின்று விடுவதில்லை. மேலும் மஞ்சள் மற்றும் பால் இயற்கையான ஆன்டி-பயாடிக் பண்புகளை கொண்டுள்ளன. உங்களுடைய அன்றாட உணவில் இந்த இரண்டு இயற்கை பொருட்களையும் சேர்த்துக் கொள்வதால், பல்வேறு நோய்கள் மற்றும் நோய்த்தொற்றுகளைத் தடுக்கலாம்.



அதிலும் மஞ்சள் தூளை சற்றே சூடான பாலுடன் கலக்கப்படும் போது, எண்ணிலடங்கா பலவித சுகாதார பிரச்சனைகளுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. அதுமட்டுமின்றி இது சுற்றுச்சூழலிலுள்ள அபாயகரமான நச்சுகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளுடன் போராட ஒரு பயனுள்ள தீர்வாகவும் உள்ளது. குளிர்காலத்தில் தூங்குவதற்கு முன்பு மஞ்சள் கலந்த பாலை கண்டிப்பாக ஏன் குடிக்க வேண்டும் என்ற காரணத்தை இக்கட்டுரையில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.


மஞ்சள் பால் கோல்டன் மில்க் என்று அழைக்கப்படும் மஞ்சள் பால் உங்கள் ஆரோக்கியத்திற்கு ஒரு வரப்பிரசாதம். இது குளிர்காலத்தில் உங்கள் உடலை சூடாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. குளிர்காலத்தில் உறங்கும் முன் நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் சூடான மஞ்சள் பால் குடிப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சரி, அவ்வாறு செய்வதற்கு பல காரணங்கள் உள்ளன. கோல்டன் மில்க் ஏன் உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் மற்றும் ஐந்து நிமிடங்களுக்குள் அதை எவ்வாறு தயாரிப்பது என்பதை அறிய இக்கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.

ஊட்டச்சத்துக்கள்:
பால் நமது உடலுக்கு அன்றாடம் தேவைப்படும் ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாகும். இதில் கால்சியம், வைட்டமின் டி, வைட்டமின் ஏ, வைட்டமின் பி2, வைட்டமின் பி12, ஜிங்க், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் செலினியம் உள்ளது.

காய்ச்சலில் இருந்து பாதுகாக்கிறது: 
மஞ்சளில் குர்குமின் என்ற கலவை உள்ளது. இது இயற்கையில் அழற்சி எதிர்ப்பு மற்றும் உங்கள் உடலை பொதுவான காய்ச்சல் மற்றும் சளி ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கிறது. நீங்கள் பருவகால காய்ச்சல், சளி மற்றும் இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், ஒவ்வொரு நாளும் மஞ்சள் பால் உட்கொள்ள வேண்டும். ஏனெனில் இது மீட்பு செயல்முறையை துரிதப்படுத்துகிறது.

வயிற்றுக்கு நல்லது நீங்கள் அடிக்கடி வீக்கம் மற்றும் அஜீரணத்தால் அவதிப்படுகிறீர்கள் என்றால், உங்கள் கடைசி உணவாக ஒரு கிளாஸ் சூடான மஞ்சள் பால் சாப்பிடுங்கள். இது உங்கள் வயிற்றை ஆற்றும் மற்றும் செரிமான செயல்முறைக்கு உதவும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது நீரிழிவு நோயாளிகளும் இந்த கலவையை பாதுகாப்பாக உட்கொள்ளலாம். ஏனெனில் இது அழற்சி சைட்டோகைன்களைக் குறைக்கிறது. மேலும், இது இரத்த குளுக்கோஸ் அளவுகளில் சாதகமான விளைவைக் கொண்டிருக்கிறது.


ஏன் தூங்கும் முன் இதை குடிக்க வேண்டும்?
தூங்குவதற்கு முன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான மஞ்சள் பால் குடிப்பது உங்களுக்கு நல்ல இரவு தூக்கத்தை பெற உதவும். நீங்கள் தூக்கமின்மை பிரச்சனை உள்ளவராக இருந்தால் அல்லது இரவில் பல முறை எழுந்திருந்தால், உங்கள் வழக்கமான மஞ்சள் பாலை நீங்கள் குடிக்க வேண்டும். மஞ்சள் பால் மீட்பு விகிதத்தை வேகப்படுத்துகிறது. மேலும் உள் காயம் அல்லது வீக்கத்தை குணப்படுத்துகிறது. ஓய்வு நேரத்தில் உங்கள் உடல் ஓய்வில் இருப்பதால், உடல் அதன் பழுதுபார்க்கும் பணிகளைச் செய்ய ஏற்ற நேரம் இது.

நோயெதிர்ப்பு சக்தி பால், இலவங்கப்பட்டை, கருப்பு மிளகு தூள் மற்றும் வெல்லத்துடன் மஞ்சள் சேர்ப்பதால், ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மஞ்சள் பாலை தவறாமல் உட்கொள்வது, மெல்லிய கோடுகள், சுருக்கங்கள் மற்றும் சருமத்தை பளபளப்பாக வைத்திருப்பதன் மூலம் வயதான அறிகுறிகளை தாமதப்படுத்தலாம்.



மஞ்சள் பால் செய்வது எப்படி?

  • தேவையான பொருட்கள் - 1 கப் பால்
  • ¼ தேக்கரண்டி மஞ்சள் தூள் 
  • ¼ தேக்கரண்டி கருப்பு மிளகு தூள் 
  • 1 டீஸ்பூன் வெல்லம் தூள் 
  • 1 அங்குலம் இலவங்கப்பட்டை.

முறை ஒரு பாத்திரத்தில் இலவங்கப்பட்டை மற்றும் வெல்லம் தூள் சேர்த்து பால் சேர்க்கவும். நன்கு கொதிக்க வைக்கவும். இப்போது மஞ்சள் தூள் மற்றும் கருப்பு மிளகு தூள் சேர்க்கவும். நன்றாக கலக்கி, குறைந்த தீயில் 1-2 நிமிடங்கள் இளங்கொதிக்க வைக்கவும். ஒரு கோப்பையில் பாலை வடிகட்டி சூடாக குடிக்கவும்.

மாரடைப்பு வராமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன?

 ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29-ந்தேதி உலக இருதய நோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதன் மூலம் இருதய நோய் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கடலூர் கல்யாண் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இருதய நோய் நிபுணர் டாக்டர் கல்யாணராமன் கூறியதாவது:-


இருதய நோய் (மாரடைப்பு) உலகின் மிகப்பெரிய உயிர்க்கொல்லி நோயாகும். நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், புகைபிடித்தல், காற்று மாசு ஆகியவற்றால் இருதய நோய் வர வாய்ப்பு உள்ளது. இருதய நோயுடன் வாழும் 520 மில்லியன் மக்களுக்கு கோவிட்-19 கடுமையான இதய பாதிப்பை ஏற்படுத்துகிறது..

இதனால் இருதய நோய் உள்ளவர்கள் வழக்கமான இருதய பரிசோதனை செய்துகொள்ளாமல் அச்சப்பட்டு வீட்டில் தனிமையாக இருக்கின்றனர். சர்க்கரை பானங்கள், பழச்சாறுகளை தவிர்த்து அதற்கு பதிலாக தண்ணீர் அல்லது இனிப்பு சேர்க்கப்படாத பழச்சாறுகளை தேர்வு செய்து ஒரு ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்ற வேண்டும்.

நாள்தோறும் நாம் தேர்வு செய்த சைவ உணவுகள் மொத்த அளவை, 5 பாகங்களாக பிரித்து, அதில் சத்து நிறைந்த காய்கறி மற்றும் பழங்களை சேர்த்து உண்ண வேண்டும். உப்பு நிறைந்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். தினமும் உடற்பயிற்சி குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் என வாரத்தில் 5 நாட்கள் செய்ய வேண்டும். மேலும் அன்றாட பணிகளில் நாம் சுறுசுறுப்புடன் இயங்க வேண்டும்.

புகை பிடிப்பதையும், புகையிலை பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். இதன் மூலம் உங்கள் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்த நீங்கள் செய்யக்கூடிய ஓர் சிறந்த செயலாகும். புகைப்பிடிப்பதை கைவிட்ட, 2 ஆண்டுகளுக்குள் இருதய நோய் ஏற்படும் அபாயம் கணிசமாக குறைகிறது.

மேலும் 15 ஆண்டுகளுக்கு மேல் புகை பிடிக்காதவர்களுக்கு இருதய நோய் வராது. புகைபிடிப்பதை தவிர்ப்பதன் மூலம், உங்கள் இருதய பிரச்சினைகள் குறைவது மட்டுமின்றி, அருகில் இருக்கும் சக மனிதர்களின் இருதய பிரச்சினைகளும் குறைய வழிவகை செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சிவப்பு நிற பழங்களை ஏன் சாப்பிட வேண்டும்?

 ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஐந்து பழங்கள் சாப்பிடுவதற்கு பரிந்துரைக்கப்படுகிறது. பல்வேறு வண்ணங்களை கொண்ட பழங்களை உட்கொள்ள முயற்சிப்பது நல்லது. ஏனென்றால், பழங்களின் நிறங்களை பொறுத்து அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மாறுபடும். அவற்றுள் சிவப்பு நிற பழங்களை ஏன் சாப்பிட வேண்டும் என்பதை பார்க்கலாம்.


1. ஸ்ட்ராபெர்ரி:


போலேட், போலிக் அமிலம் நிறைந் திருக்கும் இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

ஆன்டி ஆக்சிடென்டுகள், வைட்டமின் சியும் கொண்டிருப்பதால் நோய் எதிர்ப்பு மண்டல செயல்பாட்டையும் ஊக்குவிக்கும். கொழுப்பு நீக்கிய பால் மற்றும் தயிருடன் ஸ்ட்ராபெர்ரி பழங்களை கலந்தும் ருசிக்கலாம்.

2. செர்ரி:



இந்த பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. மேலும் வைட்டமின் சி, பொட்டாசியம் ஆகியவையும் நிரம்பப்பெற்றது.இது ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத் திருக்க உதவுகிறது. செர்ரி பழங்களை உலர வைத்து ஆண்டு முழுவதும் பயன் படுத்தலாம்.

3. தர்பூசணி:



இது 92 சதவிகிதம் தண்ணீர் கொண்டது. வெப்பமான கோடை நாட்களில் உடலை நீரேற்றமாக வைத்திருக்க இது சிறந்த தேர்வாக அமையும். பீட்டா கரோட்டின், வைட்டமின் சி மற்றும் லைகோபீன் போன்ற ஆன்டி ஆக்சிடென்டுகளும் இதில் அதிகம் உள்ளன. எல்.டி.எல். என்ற கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவும். இதன் மூலம் இதய நோய் அபாயத்தை தவிர்க்கலாம். மேலும் இது ரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தக்கூடியது. பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கக்கூடியது.

4. மாதுளை:

இந்த பழத்தில் பாலிபினால்கள், ஆன்டிஆக்சிடென்டுகள் அதிகம் உள்ளன. அவை புற்றுநோய் மற்றும் இதய நோய்களை தடுக்கக்கூடியவை. ஆய்வுகளின்படி, கிரீன் டீ மற்றும் ரெட் ஒயின் ஆகியவற்றை விட மாதுளையில் ஆன்டி ஆக்சிடென்டுகள் மூன்று மடங்கு அதிகம் உள்ளன.

5. கிரேப் புரூட்:


இளஞ்சிவப்பு நிற கிரேப் புரூட் பழத்தில் வைட்டமின் சி போன்ற ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்ளன. பெக்டினும் அதிகமாக உள்ள இது கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிற கிரேப் புரூட் பழத்தில் அதிக லைகோபீன் இருப்பதால் அவற்றை தேர்வு செய்வது சிறந்தது.

காலை உணவுடன் ஒரு கிரேப் புரூட் பழம் அல்லது ஒரு டம்ளர் கிரேப் புரூட் ஜூஸ் பருகலாம். பழ சாலட்டுகளிலும் கிரேப் பழங்களை சேர்த்து உட்கொள்ளலாம். மருந்து, மாத்திரை உட்கொள்பவர்கள் டாக்டரின் பரிந்துரையின் பேரிலேயே கிரேப் புரூட் பழத்தை சாப்பிட வேண்டும். ஏனெனில் அது மருந்துகளுடன் எதிர்வினை புரியக்கூடும்.

6. ஆப்பிள்:



இதில் பாலிபீனால்கள், வைட்டமின் சி போன்றவை அதிகம் உள்ளன. ஒருவர் அதிக பாலி பீனால்கள் மற்றும் நார்ச்சத்து பெற விரும்பினால், ஆப்பிளின் தோல் பகுதியை நீக்கிவிடுவது நல்லது. ஆப்பிளில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளது. ஆப்பிள்களில் நார்ச்சத்து அதிகம் இருப்பது பல்வேறு வழிகளில் எடை குறைப்புக்கு உதவும்.


7. பிளம்ஸ்:


இந்த பழத்தில் ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடெண்டுகள் அதிகம் உள்ளன. பல்வேறு நாள்பட்ட நோய் பாதிப்புகளை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்க இது உதவுகிறது.




60 மாதங்களில் ரூ.10- ரூ.14 லட்சம்.. வரி சலுகையும் உண்டு.. அஞ்சலகத்தின் இந்த திட்டம் தான் சிறந்தது..!

 இந்தியாவினை பொறுத்த வரையில் என்ன தான் பல ஆயிரம் முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், அஞ்சலக திட்டங்களுக்கு என்றுமே தனி இடம் உண்டு.

இது மிக பாதுகாப்பான திட்டம் என்பதோடு மட்டும் அல்லாமல், பங்கு சந்தை அபாயம் இல்லாத திட்டங்களாக உள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக, பெரியளவில் லாபம் இல்லாவிட்டாலும், கணிசமாக நிலையான வருமானம் தரக்கூடிய திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.


அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது 60 மாதங்களில் 10 - 14 லட்சம் ரூபாய் வரையில் லாபம் கொடுக்க கூடிய ஒரு திட்டத்தினை பற்றித் தான் பார்க்க இருக்கிறோம். அப்படி என்ன திட்டம் இது? இதில் யாரெல்லாம் இணையலாம்? மற்ற கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்ன வாருங்கள் பார்க்கலாம்.

என்ன திட்டம்? நாம் இன்று பார்க்க கூடிய திட்டம் அஞ்சலகத்தின் தேசிய சேமிப்பு பத்திரமாகும் (National Savings Certificates - NSC). இந்த திட்டத்தினை அஞ்சலகத்தில் பெற்றுக் கோள்ள முடியும். இன்றும் நிலையான வருமானம் தரக்கூடிய அசத்தலான திட்டங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இது 5 வருட திட்டமாகும். முழுக்க சந்தை அபாயம் இல்லாத ஒரு திட்டமாக பார்க்கப்படுகிறது.

வரிச்சலுகை உண்டு நிலையான வருமானம் தரக்கூடிய திட்டம் என்றாலும் இந்த திட்டத்தில் வருமான வரி சட்டம் பிரிவு 80சியின் கீழ் வரி சலுகை அளிக்கப்படுகின்றது. இந்த திட்டத்தில் நுழைய 18 வயது குறைந்தபட்ச வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதிர்வு வயது 60 வயதாகும். இதில் குறைந்தபட்ச முதலீடு என்பது டயர் 1 நகரங்களில் 500 ரூபாயாகும். இதே டயர் 2 நகரங்களில் 250 ரூபாயாகும். அதிகபட்ச வரம்பு என்பது நிர்ணயம் செய்யப்படவில்லை.

வட்டி விகிதம் தேசிய சேமிப்பு பத்திரத்திற்கு தற்போதைய நிலவரப்படி வட்டி விகிதம் 6.8% ஆகும். உதாரணத்திற்கு 1,000 ரூபாய்க்கு இந்த பத்திரத்தில் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். இது ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு 1,389 ரூபாயாக உள்ளது. இதில் 1.5 லட்சம் ரூபாய்க்கு வரிச்சலுகையும் உண்டு. எனினும் முதிர்வின் போது கிடைக்கும் வருமானம் வரிக்கு உட்பட்டதாகும். இதில் டிடிஎஸ் பிடித்தம் இல்லை.

முன் கூட்டியே திரும்ப பெறுதல் இந்த திட்டத்தில் தனி நபர்கள் முன் கூட்டியே திரும்ப பெற முடியாது. இதே ஜாய்ண்ட் ஆக்கவுண்டாக வைத்திருப்பவர்கள் அல்லது விண்ணப்பதாரர்கள் இறந்து விட்டால், அல்லது நீதிமன்ற உத்தவின் பேரில் இடையில் முடித்துக் கொள்ளலாம். இதனை ஓராண்டுக்குள் எடுத்தால் முகமதிப்பு மட்டுமே செலுத்தப்படும். இதே ஒரு வருடத்திற்கு பிறகு மூன்று ஆண்டுகளுக்குள் முடித்துக் கொண்டால், சேமிப்பு கணக்கிற்கு வழங்கப்படும் வட்டி மட்டுமே வழங்கப்படும். இதே முன்று வருடத்திற்கு பிறகு தள்ளுபடி மதிப்பில் விற்பனை செய்து கொள்ளலாம்.

ரூ.10 - 14 லட்சம் எப்படி? இன்றைய வட்டி விகித நிலவரப்படி 10 லட்சம் ரூபாய் நீங்கள் முதலீடு செய்தால், அது 5 வருடம் கழித்து 13.89 இதே 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 5 வருடம் கழித்து 6,94,746 ரூபாயாக உங்கள் முதிர்வு தொகை இருக்கும். இதே 11 லட்சம் ரூபாய் முதலீடு எனில், ஐந்து வருடங்களுக்கு பிறகு, 15.28 லட்சம் ரூபாய் முதிர்வாக கிடைக்கும்.