Search

தினம் இரண்டு கிராம்பு ஆரோக்கியத்திற்க்கு அருமருந்து

 கிராம்பின் ஆரோக்கிய பண்புகள்: மனிதன் மட்டுமல்ல உயிரினங்கள் அனைத்திற்குமே இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி உண்டு. ஆனால், மனிதர்கள் மட்டும் நவீன உலகில் வாழும் உயிரினமாகவும், தொழில்நுட்பத்தால் இயற்கையை விட்டு வெகுதொலைவில் வந்து விட்ட உயிரினமாகவும் மாறிவிட்டார்கள்.



எனவே, இயற்கையிலேயே கிடைக்க வேண்டிய நோய் எதிர்ப்பு சக்தியையும் செயற்கையாகவே பெற வேண்டியிருக்கிறது. ஆனால், இயற்கையின் கொடைகள் அற்புதமானவை. இயற்கையில் விளையும் பொருட்களே, நமது வாழ்க்கையை தீர்மானிக்கின்றன.

வீட்டிலேயே உணவுக்கு பயன்படுத்தும் சில பொருட்களே நமது ஆரோக்கியத்தை பேணி காப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. அதில் கிராம்புக்கு முக்கிய இடம் உண்டு. இந்திய சமயலறைகளில் நீங்கா இடம் பிடித்துள்ள கிராம்பு பல அற்புதமான ஆரோக்கியப் பண்புகளைக் கொண்டதாகும். 

உணவின் ஊட்டச்சத்து மதிப்பையும் அதிகரிக்கும் கிராம்பு, சுவையான மசாலா ஆகும். பல் வலிக்கும், வயிறு மற்றும் தொண்டைக்கும் ஆரோக்கியத்தையும் ஆசுவாசத்தையும் அளிக்கிறது கிராம்பு.  

யூஜெனோல் என்ற பொருள் மன அழுத்தம் மற்றும் பொதுவான வயிற்று நோய்களைப் போக்க உதவுகிறது. இது, கிராம்பில் போதுமான அளவு உள்ளதால், கிராம்பின் பயன்பாடு மன அமைதியை ஏற்படுத்துகிறது. 

வைட்டமின் ஈ, வைட்டமின் சி, ஃபோலேட், ரிபோஃப்ளேவின், வைட்டமின் ஏ, தியாமின், வைட்டமின் டி, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பிற அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ள கிராம்பை எப்படி பயன்படுத்தினால் நல்லது?

படுக்கைக்குச் செல்வதற்கு முன் இரண்டு கிராம்புகளை மென்று சாப்பிட்டு பின்னர் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, அமிலத்தன்மை போன்ற வயிற்றுப் பிரச்சினைகளை போக்குவதோடு, செரிமானத்தையும் மேம்படுத்தும் கிராம்பை இரவில் சாப்பிடுவது நல்லது. 

தினமும் கிராம்பை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இருமல், சளி, வைரஸ் தொற்று, மூச்சுக்குழாய் அழற்சி, சைனஸ் மற்றும் ஆஸ்துமா போன்றவற்றிலிருந்து விடுபட கிராம்பு உதவுகிறது.  

உணவே மருந்தாகலாம் ஆனால் மசாலா மருந்தாகுமா? ஆகும் என்பதற்கு அட்டகாசமான உதாரணம் கிராம்பு.

Click here to join whatsapp group for daily health tip

சளியால் அவதியா? இந்த யோகாசனங்கள் பலன் தரும்..

 

மழை, குளிர் காலங்களில் சளி, இருமல் பிரச்சினைகள் ஏற்படுவது இயல்பானது. குளிர்ச்சியான கால நிலை காரணமாக உண்டாகும் இத்தகைய ஒவ்வாமைகளை தவிர்ப்பதற்கு உடல் நலத்தில் கூடுதல் அக்கறை கொள்ள வேண்டும்.

 நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த வேண்டும். அதற்கு சில யோகாசனங்கள் கை கொடுக்கும். மருத்துவர் மற்றும் யோகா ஆசிரியர் ஆலோசனை பெற்று இவற்றை செய்வது அவசியம். 


1. சர்வாங்காசனம்: 

தரைவிரிப்பில் மல்லாந்த நிலையில் படுக்கவும். பின்பு மூச்சை நன்றாக உள்ளிழுத்தபடி இரு உள்ளங்கைகளால் உடலை தூக்கி உயரே கொண்டு வரவும். அதாவது இரு உள்ளங்கைகளையும் இடுப்பில் வைத்தபடி கால்களை நேராக தூக்க வேண்டும். அப்போது முதுகு, இடுப்பு, கால்களை நேர் நிலையில் மேல்நோக்கி வைத்திருக்க வேண்டும். எந்த அசைவும் இல்லாமல் சீராக சுவாசிக்க வேண்டும். ஓரிரு நிமிடங்கள் அதே நிலையில் வைத்திருந்த பிறகு கால்களை மடித்து முதுகு பின்புறத்தை உள்ளங்கைகளில் கொண்டு வந்து மெதுவாக கால்களை ஆரம்ப நிலைக்கு திருப்ப வேண்டும். 

 2. உஜ்ஜயி பிராணாயாமம்: 

கால்களை மடக்கி, உடலை நேராக நிமிர்த்தி தியான நிலையில் அமர்ந்து கொள்ளவும். கண்களை மூடிக்கொள்ளவும். பின்பு இரு நாசி துவாரங்கள் வழியாக நிதானமாகவும், ஆழமாகவும் மூச்சை உள்ளிழுக்கவும்.சில விநாடிகள் அதே நிலையில் இருந்துவிட்டு மெதுவாக மூச்சை வெளியே விடவும். அப்படி மூச்சு வெளிப்படும்போது 'ஹா' என்ற சத்தத்தை வெளியிடவும். இந்த மூச்சுப் பயிற்சி நுரையீரலை வலுப்படுத்த உதவும். அதில் தேங்கி இருக்கும் சளியை வெளியேற்ற உதவும். 

3. அர்த்த மத்ஸ்யேந்திராசனம்: 

ரையில் நேராக நிமிர்ந்த நிலையில் கால்களை நீட்டியபடி அமர வேண்டும். பின்பு இடது காலை வலது பக்கமாக மடக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பின்பு வலது காலை இடது காலுக்கு வெளிப்புறமாக கொண்டு வந்து தரையில் ஊன்றிக் கொள்ள வேண்டும். அதே நிலையில் மூச்சை வெளியேற்றியபடி உடலின் மேல்பாகத்தை வலது பக்கமாக திருப்ப வேண்டும். அப்போது முதுகுத்தண்டுவடம் வளையாமல் நேராக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வலது கால் பாதத்தை இடது கையால் பிடித்துக்கொண்டு வலது கையை பின்புறமாக வைத்துக்கொள்ள வேண்டும். அந்த நிலையில் இயல்பாக மூச்சை உள் இழுத்தவாறு 20 முதல் 30 நொடிகள் இருக்க வேண்டும். பின்பு மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும்.



Click here to join whatsapp group for daily health tip

பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் 7 நன்மைகள்

ஆண்டு முழுவதும் கிடைக்கும் பழ வகைகளுள் ஒன்று, பப்பாளி. ஆனாலும் மற்ற பழங்களை போல் பப்பாளியை பலரும் விரும்பி சாப்பிடுவதில்லை. ஏன் பப்பாளி பழத்தை தவிர்க்கக்கூடாது என்பது குறித்து பார்ப்போம். 
1. செரிமானத்தை மேம்படுத்தும்
பப்பாளி பழத்தில் புரதத்தை ஜீரணிக்க உதவும் சைமோபாபைன் மற்றும் பபைன் போன்ற என்சைம்கள் இருப்பதால், செரிமான செயல்முறை எளிதாக நடைபெறும். மலச்சிக்கல் மற்றும் குடல் நோய் பாதிப்புகளையும் கட்டுப்படுத்தும் தன்மை பப்பாளிக்கு உண்டு. மேலும் பப்பாளியில் நிறைந்துள்ள நார்ச்சத்து செரிமான அமைப்பை சீராக செயல்பட வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலின் வளர்சிதை மாற்ற செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது.

2. புற்றுநோய்க்கு எதிராக பாதுகாப்பு அளிக்கும் 

புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய் பாதிப்புக்கு ஆளாகாமல் பாதுகாக்கும் ஆற்றலும் பப்பாளிக்கு இருக்கிறது. இதில் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளது. அது ப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற சேதத்தை குறைக்க உதவுகிறது. மேலும் பப்பாளியில் உள்ள லைகோபீன், புரோஸ்டேட் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க உதவும் பீட்டா கரோட்டினுடன் இணைந்து அத்தகைய புற்றுநோயை தடுக்கக்கூடியது. பப்பாளியில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்துக்கு ஆரோக்கியம் சேர்ப்பதால் பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தையும் தவிர்க்கலாம்.

3. இதயத்தைப் பாதுகாக்கிறது 

பப்பாளி, இதயத்திற்கு ஆரோக்கியமான உணவாகவும் கருதப்படுகிறது. இதில் பொட்டாசியம் மிகுதியாக இருக்கிறது. வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடென்டுகளும் அதிகம் உள்ளன. இவை அனைத்தும் தமனிகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் உடலில் ரத்த ஓட்டம் சீராக செயல்படுவதற்கும் ஊக்குவிக்கிறது. பக்கவாதம், மாரடைப்பு மற்றும் உயர் ரத்த அழுத்த அபாயத்தைக் குறைக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தவும் பப்பாளி உதவுகிறது. 

4. மூளையை பாதுகாக்கும் 
மூளை செல்களை சிதைப்பதன் மூலம் நினைவாற்றல் இழப்பு பிரச்சினையை ஏற்படுத்தும் நோய், அல்சைமர். அறிவுசார் திறன்களை இழக்க செய்துவிடும் ஒருவகை நரம்பியல் கடத்தி நோயும் கூட. பிரீ ரேடிக்கல்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகளுக்கு இடையே சம நிலையின்மை நிலவுவதன் விளைவாக செல்கள் சேதம் அடைகின்றன. பப்பாளி மற்றும் புளித்த பப்பாளி சாற்றை உட்கொள்வதன் மூலம், ப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. ஆதலால் பப்பாளி பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் அல்சைமர் நோயின் வீரியத்தை குறைக்கலாம்.

5. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 
இதில் அதிக அளவு வைட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும் என்பதை அறிந்து கொள்வதும் அவசியமானது. 

6. கண்களை பாதுகாக்கும் 
உடலின் மிக முக்கியமான பாகங்களில் ஒன்றாக கண்கள் இருப்பதால் அவற்றை பாதுகாப்பது முக்கியமானது. பப்பாளி, தசை சிதைவு போன்ற நோய்களில் இருந்து கண்களை பாதுகாக்கின்றன. இதுமட்டுமல்லாமல் பப்பாளியில் வைட்டமின் ஏ சத்தும் நிறைந்துள்ளது. இது கார்னியாவை பாதுகாக்க உதவுகிறது. ஆன்டி ஆக்சிடென்டுகளும் நிறைந்திருப்பதால் விழித்திரை சிதைவை குறைக்கவும், பார்வை திறனை மேம்படுத்தவும் உதவுகிறது. 

7. வலியை குறைக்க உதவும் 
இயற்கை வலி நிவாரணியாக செயல்படும் பப்பேன் என்ற நொதி பப்பாளியில் இருக்கிறது. இது வீக்கத்தை எதிர்த்து போராடவும், சில வகையான வலிகளை குறைக்கவும் உதவும். மேலும் அழற்சி எதிர்ப்பு தன்மை கொண்ட பாபாயின் இருப்பதால், கீல்வாதம் காரணமாக ஏற்படும் மூட்டு வலியை குறைப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

Fibromyalgia: உடல் வலியை அலட்சியம் செய்ய வேண்டாம்; தசைநார் வலி நோய் காரணமாக இருக்கலாம்

 உடம்பு வலி என்பது பொதுவாக அனைவருக்கும் வரும்  ஒரு உடல் நல பிரச்சனைதான். சில சமயங்களில் உடல் வலி பின்னி எடுக்கும். அதற்கு காய்ச்சல் அல்லது அதிக அளவில் ஏதேனும் பளு தூக்கியது போன்றவை காரணமாக இருக்கலாம். ஆனால், அடிக்கடி உடல் வலி ஏற்படுகிறது அல்லது காரணமே இல்லாமல் உடல் வலி ஏற்படுகிறது என்றால், அலட்சியம் வேண்டாம். உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். ஏனென்றால், அது  ஃபைப்ரோமியால்ஜியா என்னும் தசைநார் வலி என்னும் நோயாக இருக்கலாம்.

தசைநார் வலிக்கான காரணம்

இந்த தசை நார் நோயினால், ஆண்களை விட அதிக அளவில் பெண்கள் தான் பாதிக்கப்படுகின்றனர் என புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இந்த நோய் எதனால் ஏற்படுகிறது என்பதற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை என்றாலும், மரபு ரீதியாக இந்த நோய் ஏற்பட்டிருந்தால், அவர்களுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.


சிலருக்கும் உடல் ரீதியான காயம், தொற்று, அறுவை சிகிச்சை, குழந்தை பேறு ஆகியவற்றின் காரணமாவோ அல்லது மிக மோசமான மன நிலை பாதிப்பின் காரணமாகவோ ஏற்படக் கூடும்.  உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாகவும் தசைநார் வலி ஏற்படக் கூடும்.

தசைநார் வலிக்கான அறிகுறிகள்

தசைநார் வலி நோய் பாதிக்கபப்ட்டவர்களுக்கு, அதிக அளவிலான சோர்வு, தூக்கமின்மை, மூட்டுகளில் தாங்க முடியாத வலி, கடுமையான தலைவலி, எதிலும் கவனம் செலுத்து முடியாத மனநிலை போன்ற அறிகுறிகள் இருக்கும். இது உங்கள் அன்றாட வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

தசைநார் வலிக்கான சிகிச்சை

நோய்க்கான சிகிச்சையில், மருந்துகள் வழங்கப்பட்டாலும், உடற்பயிற்சி,  மன அழுத்தத்தை நீக்கும் யோகா பயிற்சிகள், தியான பயிற்சிகள் ஆகியவை முக்கிய ப்பங்கு வகிக்கின்றன. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், நமது வாழ்க்கை முறையை மேம்படுத்துவதன் மூலம் இந்த நோயிலிருந்து விடுபடலாம். 


Click here to join whatsapp group for daily health tip

New Age Startup Oppurtunities in Fisheries - Free Online Training Programme by MANAGE, Hyderabad

 New Age Startup Oppurtunities in Fisheries -  Free Online Training Programme by MANAGE, Hyderabad

1

Trg Prg No. & Year

:

179, 2022-23

2

Title

:

New Age Startup Oppurtunities in Fisheries 

3

Dates

:

11/07/2022 to 14/07/2022

4

Venue

:

Online (No Fee), ICAR- Central Institutes of Fisheries Technology, Cochin, Kerala

5

Objectives

:

i) To enrich the participants understanding on start-up opportunities in fisheries; ii) To familiarize the technological interventions in value addition, fish processing, nutraceuticals and dry fish processing; iii) To conduct focus group discussion on preparation of business plan. iv) To update the schemes and policies on the entrepreneurship development.

6

Content

:

Enterprise development process (EDP) is the activity of generating additional income to the interested stakeholders. The contents of the programme include the following areas. 


1. Stakeholders’ feasibility analysis 

2. Opportunities in value addition, fish processing, nutretuticals and dryfish processing. 

3. Business plan preparation. 

4. Investment analysis. 

5. Need for Inclusive entrepreneurship. 

6. Success of community based EDP 

7. Activities of Agri-Business unit of ICAR-CIFT. 

8. NFDB initiatives on entrepreneurship development 

9. MSME – Policies and programmes 

10. Practical session on detailed project report preparation

7

Methodology

:

Theory and practical that include classroom lectures, interactive discussions, case studies and real-life examples.

8

To Whom

:

Extension professionals, 

field level officers, 

students, 

entrepreneurs and other professionals in the fisheries sector who are interested/ engaged in establishment of fish-based enterprises. 

This will be helpful for the youth who are looking for self-employment opportunities in fisheries.



மூட்டு வலி வாட்டி வதைக்குதா? இவற்றின் மூலம் விரட்டி அடிக்கலாம்!

 மூட்டு ஆரோக்கியத்தை இயற்கையாக மேம்படுத்துவது எப்படி: 

முழங்கால் மற்றும் மூட்டு வலி பிரச்சனையால் பலர் சிரமப்படுகிறார்கள். பல நேரங்களில் முழங்கால் வலி காயம் காரணமாகவோ அல்லது கீல்வாதம் போன்ற பல நோய்களின் காரணமாகவோ ஏற்படலாம். 

வயது ஏற ஏற, நாட்பட்ட வலியும் வெளிவரத் தொடங்குவதையும் அடிக்கடி நாம் பார்க்கிறோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நீண்ட நேரம் எங்கும் உட்காரவோ, அதிக நேரம் நடக்கவோ முடியாது. இந்தப் பிரச்சனையைக் குறைக்க கால்சியம் நிறைந்த உணவை உட்கொள்வது நல்லது. . கால்சியம் எலும்புகளுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. ஏதேனும் காரணத்தால் மூட்டு வலி ஏற்பட்டால், நீங்கள் சில எளிய வழிமுறைகளின் மூலம் அதிலிருந்து நிவாரணம் பெறலாம். 

மழை மற்றும் குளிர்காலத்தில் மூட்டு வலி கணிசமாக அதிகரிக்கிறது. ஆகையால் இந்த காலங்களளில் உணவில் மாற்றங்களைச் செய்வதைத் தவிர, நீங்கள் லேசான உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டும். குழந்தை பருவத்திலிருந்தே கால்சியம் அதிகமாக உட்கொள்பவர்களுக்கு இந்த பிரச்சனை குறைவாகவே இருக்கும். மூட்டு வலியை போக்கும் பயனுள்ள உணவுகளை பற்றி காணலாம். 

பால் நுகர்வு:

உங்கள் எலும்புகளை வலுப்படுத்தவும், தசைகளை வளர்க்கவும் விரும்பினால், தினமும் பால் உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. பாலில் புரதம், கால்சியம், கூடுதலாக, பாஸ்பரஸ், மெக்னீசியம், அயோடின் மற்றும் வைட்டமின்கள் ஏ, டி, கே மற்றும் ஈ உட்பட பல தாதுக்கள், கொழுப்புகள் மற்றும் ஆற்றல் உள்ளது.

பெரும்பாலும் உடலில் ஏதாவது காயம் ஏற்பட்டாலோ, அல்லது சளி பிரச்சனை இருந்தாலோ, நாம் பாலுடன் மஞ்சள் சேர்த்து உட்கொள்கிறோம். பால் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதோடு, வலியை தாங்கும் சக்தியையும் அளிப்பதே அதற்கு காரணமாகும். 

இஞ்சி:

இஞ்சி சாப்பிடுவது மூட்டு வலி மற்றும் தசைகளுக்கு சிறந்த சிகிச்சை என்று கூறப்படுகிறது. இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது வலியைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இஞ்சியை வலி நிவாரணியாக பயன்படுத்த, ஒரு டீஸ்பூன் அரைத்த மஞ்சள், ஒரு கப் பாலில் இஞ்சி துண்டுகள் சேர்த்து, அதில் கருப்பு மிளகு ஒரு சிட்டிகை சேர்த்து அதை ஒரு கொதி நிலைக்கு கொண்டு வர வேண்டும். அதனுடன் தேன் கலந்து குடித்து வர, விரைவில் வலி நீங்கும்.

நட்ஸ் / உலர் பழங்கள்:

நட்ஸ் / உலர் பழங்களின் நன்மைகளை அனைவருக்கும் தெரியும். தினமும் அதை உட்கொள்பவர்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள். பல்வேறு நட்ஸ் / உலர் பழங்களை சாப்பிடுவதன் மூலம், உங்கள் மூட்டு வலிக்கு உதவும் பல ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும். 

மேலும் இவை தசை வளர்ச்சியிலும் உதவுகின்றன. நட்ஸ்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. வாதுமைக் கொட்டை, பாதாம், ஆளிவிதையுடன் பைன் கொட்டைகளை தினமும் உட்கொள்ள வேண்டும்

உடல் எடையை குறைக்க ஜூம்பா பயிற்சி டிரை பண்ண போறீங்களா..? அதுக்கு முன்னாடி இதை தெரிஞ்சுக்கோங்க...

 ஜூம்பா என்பது ஒரு வொர்க்அவுட் பார்ட்டி போன்றது. இது dance floor-ல் செய்யப்படும் வினோதமான ஒற்றுமையைக் கொண்ட வொர்க் அவுட். மேலும், இது குறுகிய காலத்திலேயே மிகவும் பிரபலமான வொர்க்அவுட்டாக மாறி வருகிறது. இது ஒரு தீவிர கார்டியோ பயிற்சியாகும். இது கலோரிகளை எரிக்கவும், தசை திரட்சிக்கும் மற்றும் உங்கள் கைகளை ஒரே நேரத்தில் டோனிங் செய்யவும் பயனுள்ளதாக இருக்கும்.



மற்ற உடற்பயிற்சிகளைப் விட இதிலுள்ள உற்சாகமான விஷயம் என்னவென்றால்; வொர்க் அவுட் போன்று ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப செய்ய வைத்து உங்களை சலிப்படையச் செய்யாது. வேடிக்கையாக இருக்கும் அதே நேரம் இது உங்கள் கலோரிகளை எரிப்பதில் கவனம் செலுத்துகிறது.

Zumba வகுப்பில் சேர ஏற்கனவே திட்டமிட்டுள்ளீர்களா? காத்திருங்கள். முதலில் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள் இங்கே உள்ளன. தி ரூட்டட் அண்ட் கோ இணை நிறுவனர் ரோஹித் மோகன் புகாலியா முதலில் மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்களை பட்டியலிட்டுள்ளார். ஜூம்பாவுக்கு செல்வதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்.,

1. நீர்ச்சத்து அதிகரிப்பு மற்றும் ஊட்டச்சத்து :

வொர்க்அவுட்டிற்காக உங்கள் உடலை சார்ஜ் செய்து கொள்ள மறக்காதீர்கள். ஜூம்பாவுக்கு முந்தைய மற்றும் பிந்தைய ஊட்டச்சத்து என்பது நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான அம்சமாகும். நீர்ச்சத்து அதிகரிப்பு கால்களில் ஏற்படும் பிடிப்புகளைத் தவிர்க்க உதவுகிறது மற்றும் உணவு உங்களை உற்சாகமாக வைத்திருக்க உதவுகிறது.

இதில் புரதங்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை தசை முறிவைத் தடுக்கின்றன, நீங்கள் நடனமாடும்போது அவற்றை வலுவாகவும் நெகிழ்வாகவும் வைத்திருக்கின்றன.

2. ஆரோக்கியமான மாற்றங்கள் தாமதமாகவே கிடைக்கும் :

ஜூம்பா ஒரு கடுமையான உடற்பயிற்சி முறையாக இருப்பதால், முடிவுகளை விரைவாக அடைய உதவுகிறது என்று கருதப்படுகிறது. இருப்பினும், உங்கள் எடை அல்லது தசை வலுவூட்டலில் கடுமையான மற்றும் உடனடியான விளைவுகளை எதிர்பார்ப்பது நடைமுறை சாத்தியமற்றது.

மற்ற எல்லா வகையான வொர்க்அவுட்டைப் போலவே, ஜூம்பாவும் அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சி தேவைப்படக்கூடிய ஒரு செயல்முறையாகும்.

3. இது அனைவருக்குமானது :

ஜூம்பாவை பின்பற்ற நீங்கள் நன்றாக நடனமாடக்கூடியவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இது ஒரு நல்ல நடனக் கலைஞராக இருப்பது பற்றியது அல்ல. ஜூம்பா நகர்வுகள் எளிதானவை மற்றும் மாற்றியமைக்கக்கூடியவை. இதற்கு வயது வரம்போ தனித்திறனோ தேவையில்லை. ABCD விதியை நினைவில் கொள்ளுங்கள்- Any Body Can Do.

4.வசதியான ஆடைகளில் கவனம் செலுத்துங்கள் :

Zumba என்று சொல்லும் போது பக்கவாட்டு அசைவுகள் மற்றும் முதன்மையான அசைவுகள் குறித்து சிந்தியுங்கள். இந்த ஃபிட்னஸ் பயிற்சிக்கு வரும்போது உங்கள் ஆடைகள் இலகுவானதாகவும் அதிகப்படியான வியர்வையை உறிஞ்சும் வகையிலும் இருக்க வேண்டும்.

பலவிதமான, உடல் அசைவுகளுக்கு ஒத்துழைக்கும் வகையிலான ஒரு ஜோடி ஆடைகளை எடுக்க மறக்காதீர்கள். Dance sneakers அல்லது cross trainers ஜூம்பாவிற்கு சிறந்த தேர்வுகள்.

5.நீங்கள் சாப்பிடக்கூடிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவுகளை அறிந்து கொள்ளுங்கள் :

எந்தவொரு உடற்பயிற்சி திட்டத்தின் பட்டியலிலும் சரியான உணவு மற்றும் ஊட்டச்சத்து முதலிடம் வகிக்கிறது. அது இல்லா விட்டால், ஜூம்பா வொர்க்அவுட் எளிதில் பலவீனம் மற்றும் சோர்வை ஏற்படுத்தும். கார்போஹைட்ரேட் நிறைந்த ஆனால் குறைந்த கொழுப்புள்ள உணவுகளையே தேர்ந்தெடுங்கள்.

ஜூம்பா அடைந்தே தீர வேண்டிய இலக்கல்ல, அது ஒரு போட்டியும் அல்ல. உடற்தகுதியை நோக்கிய இந்த அழகிய பயணத்தை அனுபவிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். இது அதிகம் செய்ய வேண்டும். மேலும் இந்த சுவாரஸ்யமான, உற்சாகமளிக்கும் உடற்பயிற்சியில் சத்தான ஸ்னாக்ஸ் விருப்பங்கள் ஆரோக்கியமான விளைவுகளைத் தரும். ஃபிட்டான மகிழ்ச்சியான மற்றும் சுவையான வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்!

Webinar on Startups in Urban Agriculture By MANAGE Hyderabad on 23-jul-2022


Topic: Startups in Urban Agriculture


Mode: Online 


To Whom :  Agripreneur, Non - Agrientrepreneur, Working Professionals, Students


Click here for Registration


Click here to join - Whatsapp Group for Agri Trainings, Study Materials, Jobs 

BIRAC BIG GRANT WRITING SESSION | 09th July 2022

 Biotechnology Ignition Grant (BIG) 21st Call is open now. 

KIIT-TBI as one of the BIG partners invites innovative proposals with potential for commercialization.

 

Keeping in view that the BIG-20th call for BIG Grant is opened on 1st July 2022, KIIT TBI is organizing a Grant Writing session on BIG Grant on 09th July 2022 .  


The webinar is open for all innovators/startups, and the participants who attend the session will get a further opportunity for subsequent multiple one-on-one mentoring sessions on BIG grant writing with leaders of the startup ecosystem.

 

To brief, BIG is the flagship programme of BIRAC, which provides the right admixture of fuel and support to young startups and entrepreneurial individuals. 


BIG is the largest early stage biotech funding programme in india. Funding grant of upto INR 50 lakhs to best in class innovative ideas to build and refine idea to proof-of-concept.

 

The Purpose of the BIG scheme is to:

· Foster generation of ideas with commercialization potential

· Upscale and validate of proof of concept

· Encourage researchers to take technology closer to market through a start-up

· Stimulate enterprise formation

As part of this scheme, successful BIG Innovators receive up to INR 50 lakh for research projects with commercialization potential with a duration of up to 18 months.

 

Eligible Entities Include


· Individual Entrepreneur with Graduate degree in any discipline, Research Scholar, Scientist

· Start-up having a registered company/ LLP incorporated on/after 1st July, 2017

Focus Areas: Healthcare, Lifesciences, Diagnostics, Medical Devices, Drugs, Vaccines, Drug Formulations and delivery systems, Industrial Biotechnology, Agriculture, Secondary agriculture, Waste Management, Sanitation, Clean Energy and related areas.

 

Grant Money: INR 50 lakhs

Duration: 18 months

Call open from: 1st July 2022

Call ends: 16th August 2022 (5:30 PM)

 

Register for our BIG Grant Writing  Workshop: https://cutt.ly/KIIT-TBI-BIG-Writing

 

To start the process of application, please generate the Letter of Intent (LoI) from us which is an important document to be uploaded in the online application form.

 

Generate LoI: https://cutt.ly/BIG-21-LOI

 

BIRAC Online Application: https://birac.nic.in/login_instructions.php?scheme_type=5



Refer to the resources attached in the zip below. It will help you navigate better with the application process.

1.    Registration Guide

2.    User Manual

3.    Scheme Guidelines

4.    Quick Reference Handbook

5.    FAQs

 

For any query, feel free to reach out below mentioned contacts:

  

Ray Saisoubhagya

Program Associate, Bioinnovation, KIIT-TBI

Email ID: sai@kiitincubator.in

Contact No: 7381899047

 

Website: www.kiitincubator.in/big





International Day Of Cooperatives - 6th July 2022

 

International Day Of Cooperatives:

100th International Day of Cooperatives was observed.

  • India celebrated the day under the theme “Building a Self-Reliant India and a Better World through Co-operatives”.
  • The International Day of Cooperatives was declared by the United Nations General Assembly on 16th December 1992, on the first Saturday of July.
  • The purpose of this festival is to promote cooperatives globally and foster an environment that will foster their expansion and profitability.
  • The occasion highlights the cooperative movement’s contributions to tackling the major issues addressed by the United Nations as well as to enhancing and expanding the alliances between the cooperative movement internationally and other actors.
  • It aims to raise awareness of cooperatives and further the values of the movement—
    • International solidarity,
    • Economic efficiency,
    • Equality,
    • Global peace.
  • Theme for 2022: Cooperatives Build a Better World.

 

Drones for Agricultural Development - Free Online Training Programme by MANAGE- Register Now

 

1

Trg Prg No. & Year

:

161, 2022-23

2

Title

:

Drones for Agricultural Development*

3

Dates

:

11/07/2022 to 15/07/2022

4

Venue

:

Online (No Fee), MANAGE

5

Objectives

:

The Objective of the Training program is to create awareness about Drones in general and Role of Drones in the Agricultural Sector. The program covers in detail about various aspects of the Drones in Agriculture. At the end of the training program, the participants will be able to understand the uses of drones and impact of technology and drones in the Agriculture Sector.

6

Content

:

The course content includes but not limited to 

● Introduction to Drones & Robotics 

● Drones in Agriculture – Opportunities 

● Challenges for Drones in Agriculture 

● Hands on Training for the participants 

● AI and ML usage in Drones – Role of Data Analytics 

● Drone basics – mapping – Analysis – Measurements 

● Drones as Spraying bots 

● Drones for Seed Distribution

7

Methodology

:

The course includes practical aspects of the drones and the sessions will be by Startups operating Drones in Agriculture sector, R & D professionals and Resources persons from Reputed Institutions

8

To Whom

:

Extension professionals, 

Students, 

Startups founders, 

Agriculture Ecosystem enablers, 

Agri Business Professionals, 

FaaS companies etc