Agri Info

Education News, Employment News in tamil

January 8, 2023

SBI Card வங்கியில் Manager காலிப்பணியிடங்கள் – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

January 08, 2023 0

 பாரத ஸ்டேட் வங்கி (SBI) – Card வங்கி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Manager – Area Sales பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

SBI Card காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Manager – Area Sales பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SBI Card காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Manager – Area Sales பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SBI Card வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Manager முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 3 முதல் 5 ஆண்டு காலம் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SBI Card ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Manager தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 27.04.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 



தேசிய சுகாதார ஆணையத்தில் வேலை – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்!

January 08, 2023 0

 தேசிய சுகாதார ஆணையம் (National Health Authority) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. Director மற்றும் Junior Director பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தேசிய சுகாதார ஆணைய பணியிடங்கள்:தேசிய சுகாதார ஆணையத்தில் (NHA) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.Director – 02 பணியிடங்கள்Junior Director – 03 பணியிடங்கள்.

Director / Jr. Director தகுதிகள்:

இந்த மத்திய அரசு நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்கள், பொது நிறுவனங்கள், யூனியன் பிரதேச நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் போதிய ஆண்டு காலம் பணியாற்றிய அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Director / Jr. Director வயது விவரம்:


இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

Director / Jr. Director சம்பள விவரம்:Director பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Level – 13 என்ற ஊதிய அளவின் படி, மாத ஊதியம் பெறுவார்கள்.Junior Director பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Level – 12 என்ற ஊதிய அளவின் படி, மாத ஊதியம் பெறுவார்கள்.


NHA தேர்வு முறை:

இந்த NHA நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையை பொறுத்து Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு நேரடியாக பணியமர்த்தப்படுவார்கள்.

NHA விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அறிவிப்பு வெளியான நாள் முதல் அதற்கு பிறகு வரும் 45 நாட்களுக்குள் தபால் செய்ய வேண்டும்.

Download Notification Link




கொழுப்பைக் குறைக்க உதவும் ஏலம்! இது ஏலக்காயின் உடல் குறைக்கும் பண்பு

January 08, 2023 0

 Cardamom Benefits For Weight Loss: அதிகரித்து வரும் எடையை எப்படி குறைப்பது என்ற சவாலை சமாளிக்க மக்கள் போராடி வருகின்றனர். சமையலறையில் உள்ள பொருட்களே, நமக்கு ஆரோக்கியத்திற்குக் அடிப்படையாக உள்ளது. இருந்தாலும், உணவில் நறுமணத்தைக் கூட்ட உதவும், ஏலக்காயால் தொப்பையை குறைக்க முடியும் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா?  


வயிற்றில் உள்ள கொழுப்பைக் கரைக்கும் ஏலக்காய்

நறுமணத்தை மட்டுமல்ல, தொப்பையையும் குறைக்கும் பொருள் ஏலக்காய் என்பது பலருக்குத் தெரியாது. மணத்திற்கு மட்டுமல்ல உடல் எடை குறைப்புக்கும் ஏலக்காய் என்பது பாரம்பரியமான ஒன்று. உடல் பருமன் என்பது தனிப்பட்ட முறையில் நோய் என்று சொல்லாவிட்டால், பல நோய்கள் ஏற்பட அடிப்படையான விஷயமாக இருக்கிறது.

மாறிப் போன வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் என உடல் எடை அதிகரிக்க பல்வேறு காரணங்கள் இருந்தாலும், ஏலக்காயை பயன்படுத்தி, விரைவில் எடையை குறைக்கலாம்.

ஏலக்காயின் பயன்கள்

உடலில் படியும் கொழுப்பை குறைக்கும் குணம் கொண்ட ஏலக்காயை தினசரி உணவில் சேர்த்து வந்தால், வயிறு மற்றும் இடுப்பை சுற்றியுள்ள கொழுப்பை இயற்கையாகவே கரைக்கலாம். பொதுவாக உணவிலும், இனிப்புப் பதார்த்தங்களிலும் சேர்க்கப்படும் ஏலக்காய், தேநீரிலும் பயன்படுத்தப்படும்.  


உடல் எடை குறைக்க உதவும்

ஏலக்காயில் கொழுப்பை எரிக்கும் குணம் உள்ளது, இதனை தினசரி உணவில் சேர்த்து வந்தால், வயிறு மற்றும் இடுப்பை சுற்றியுள்ள கொழுப்பை இயற்கையாகவே கரைக்கலாம்.  


கொலஸ்ட்ரால் குறையும்

ஏலக்காய் சாப்பிடுவது செரிமான சக்தியை அதிகரிக்கிறது. அதனால், வயிற்றில் ஏற்படும் அமிலத்தன்மை, மலச்சிக்கல், வயிற்றில் எரியும் வாயு மற்றும் வாயு போன்ற பிரச்சனைகளும் நீங்கும். செரிமான சக்தி அதிகரிப்பதால், படிப்படியாக எடை குறையயும். தினமும் ஒன்று அல்லது இரண்டு சிறிய ஏலக்காயை சமைக்காமல் அப்படியே வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால், கெட்ட கொலஸ்ட்ராலை சட்டென்று குறைந்துவிடும்.

குளிர்காலத்தில் தயிர் சாப்பிடலாமா?

January 08, 2023 0
பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிரில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. மேலும், கால்சியம் அதிகம் கொண்ட உணவுப்பொருளாகவும் தயிர் உள்ளது. இது எலும்புகளை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும். குறிப்பாக தயிரில் உள்ள கால்சியம் எலும்பின் அடர்த்தியை சமப்படுத்தவும், பலப்படுத்தவும் செய்யும். மேலும் தயிரில் குறைந்த அளவே கொழுப்புகள் மற்றும் கலோரிகள் உள்ளன. உடல் எடையை சீராக பராமரிப்பதற்கு இவை உதவும். இருப்பினும் குளிர்காலத்தில் தயிர் சாப்பிடலாமா? என்ற குழப்பம் நிறைய பேருக்கு இருக்கிறது. குளிர்ச்சி நிறைந்த அதனை உட்கொள்வது சளி, இருமல் பிரச்சினைக்கு வித்திடும் என்பது அவர்களின் கருத்தாக இருக்கிறது. ஆனால் அனைத்து பருவ காலங்களிலும் உட்கொள்வதற்கு ஏற்ற உணவுப் பொருளாக தயிர் இருந்தாலும், கோடை காலத்தில்தான் அதிகம் விரும்பப்படுகிறது. குளிர்காலத்திலும் தயக்கமின்றி உட்கொள்ளலாம். இருப்பினும் இரவில் உட்கொள்வதாக இருந்தால் தயிருடன் சிறிதளவு உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. பகல் பொழுதிலும் தயிர் உட்கொள்வதற்கு யோசிப்பவர்களும் இந்த வழிமுறையை பின்பற்றலாம்.

குளிர்காலத்தில் வரும் சரும பிரச்சினைகளில் முக்கியமானது சருமம் உலர்வடைவது. சருமத்திற்கு ஈரப்பதமூட்டும் பொருட்கள் தயிரில் இயற்கையாகவே உள்ளன. அவை சருமம் உலர்வடையாமல் தடுக்கக்கூடியவை. முகப்பரு பிரச்சினை இருப்பவர்களுக்கு தயிர் சிறந்த நிவாரணியாக அமையும். அதில் லாக்டிக் அமிலம் இருப்பதால் முகத்தை அழகுபடுத்தும் `பேஸ் பேக்'காகவும் உபயோகிக்கலாம். தயிரை முகத்தில் தடவிவிட்டு சிறிது நேரம் கழித்து நீரில் கழுவினால் போதும். அது முகத்திற்கு பொலிவு சேர்ப்பதோடு, இறந்த செல்கள், சருமத்தில் படிந்திருக்கும் அழுக்குகள் போன்றவற்றையும் நீக்கிவிடும். குடல் சார்ந்த பிரச்சினை இருப்பவர்கள் குளிர் காலத்தில் தயிர் சேர்த்துக்கொள்வது நல்லது. அது குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். வயிறு தொடர்பான அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் விலக்கி வைக்கும்.

குளிர்காலத்தில் உணவில் கலந்து சாப்பிடுவதோடு சமைக்கும் பொருட்களிலும் தயிரை சேர்த்துக்கொள்ளலாம். சப்பாத்திக்கு மாவு பிசையும்போது அதனுடன் சிறிதளவு தயிரும் சேர்க்கலாம். தயிரில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மாவில் கலந்து ஒட்டுமொத்தமாக ஊட்டச்சத்துக்களின் எண் ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். மேலும் சப்பாத்தியும் மென்மையாக இருக்கும். ஒரு சிலர் குளிர்காலத்தில் மந்தமாகவோ, சோர்வாகவோ உணரலாம். அவர்கள் மாதுளை அல்லது ஸ்ட்ராபெர்ரி பழத்துடன் தயிர் கலந்து சாப்பிடுவது புத்துணர்வை அளிக்கும். நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க வழிவகை செய்யும். குழந்தையின் உணவில் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களை சேர்க்க தயிர் பயன்படுத்தலாம். காய்கறிகளுடன் தயிர் சேர்த்து சாலட்டாக தயாரித்து கொடுப்பது சிறப்பானது.

January 7, 2023

இந்த புத்தாண்டில் தனி சுகாதாரம் குறித்து நீங்கள் எடுக்க வேண்டிய சபதம் இதுதான்!

January 07, 2023 0
ஒவ்வொரு புத்தாண்டிலும் வெவ்வேறு உறுதிமொழிகளை நாம் எடுத்துக் கொள்கிறோம் என்றாலும், அவற்றில் பெரும்பாலானவற்றை நாம் கடைப்பிடிப்பதில்லை. இதனால் பெரும்பாலான நபர்கள் இப்போதெல்லாம் உறுதிமொழி எடுப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.

ஆனால், நம் வாழ்க்கை ஆரோக்கியமாக அமைய வேண்டும் என்றால் தனி சுகாதார நடவடிக்கைகளை நாம் எந்தவிதத்திலும் கை விட்டுவிடக் கூடாது. கடந்த கால அனுபவங்கள் இந்தப் பாடத்தை நமக்கு கற்றுக் கொடுத்துள்ளன. ஆக, இந்த ஆண்டில் தனி சுகாதாரத்தை கடைப்பிடிக்கும் வகையில் நீங்கள் எடுக்க வேண்டிய உறுதிமொழி என்ன, ஏன் அது அவசியம் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

தினசரி உடற்பயிற்சி :
 தினசரி உணவு சாப்பிடுவது, தூங்குவதை போலவே மிகவும் அத்தியாவசியமான பழக்கம் உடற்பயிற்சி ஆகும். உடற்பயிற்சி செய்யாமல் உடல் இயக்கமின்றி வாழ்க்கையை வாழுபவர்களுக்கு பலவிதமான நோய்கள் ஆட்கொள்கின்றன என்பதை மறக்க வேண்டாம். கடினமான பயிற்சிகளை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. நடைபயிற்சி அல்லது யோகா போன்ற பயிற்சிகள் போதுமானது.

கை சுகாதாரம்
கொரோனா பெருந்தொற்று காலம் வந்ததில் இருந்தே கைகளை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் குறித்து நாம் எல்லோரும் தெரிந்து வைத்துள்ளோம். ஆனால், வாழ்க்கை ஓட்டத்தின் வேகத்தில் அதை அவ்வப்போது மறந்து விடுகிறோம். கைகளை அவ்வப்போது கழுவும் பழக்கம் நம் குணாதிசயங்களில் ஒன்றாக மாற வேண்டும். இதைச் செய்ய தவறும் பட்சத்தில் ஏராளமான நுண்ணுயிர்கள் வயிற்றினுள் செல்லும் என்பதை மறக்க வேண்டாம்.

வாய் சுகாதாரம் முக்கியம் : 

காலை எழுந்தவுடன் யாரும் பல் துலக்குவதற்கு மறப்பதில்லை. ஆனால், அதற்குப் பிறகு வாய் சுகாதாரம் குறித்து மறந்து விடுகிறோம். நாள் முழுவதும் பாக்டீரியா மற்றும் கிருமிகள் நம் பற்களை தாக்குவதற்கு வாய்ப்பு உண்டு. குறிப்பாக, வாயில் உணவுப் பொருள் தங்குவதே கிருமிகளுக்கான அச்சாரம் ஆகும். ஆகவே சாப்பிட்டவுடன் வாய் கொப்பளிக்கவும். காலை பல் துலக்கிய பிறகு ஆயில் புல்லிங் செய்வது நல்ல தீர்வை தரும்.

இரவில் நல்ல தூக்கம் அவசியம்
இரவில் தூங்க வேண்டிய நேரத்தில் ஆன்லைனில் மூழ்கியிருக்கும் பழக்கம் இன்று பரவலாக இருக்கிறது. ஆனால், சரியான நேரத்திற்கு தூங்கச் சென்றால் மட்டுமே ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும். ஆழ்ந்த உறக்கம் தான் நம் உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி தரும். நாம் தூங்கும்போது நம் செல்கள், திசுக்கள் ஆகியவை மறு உருவாக்கம் செய்யப்படுகின்றன. அதிலும் இப்போதெல்லாம் தூக்கமின்மை பிரச்சினை பலரையும் ஆட்கொள்ளத் தொடங்கியுள்ள நிலையில், சரியான நேரத்திற்கு ஆழ்ந்த உறக்கம் கொள்ளும் பழக்கத்தை நம்மில் நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

உடலில் அதிக அளவு கொழுப்பு சேர்வதால் இவ்வளவு வியாதிகள் ஏற்படுமா..?

January 07, 2023 0
உலகம் முழுவதும் உள்ள மக்களில் பெரும்பாலானவர்களுக்கு உடலில் அதிக அளவிலான கொழுப்பு சேர்ந்திருக்கும் பிரச்சினை உள்ளது. அதிக அளவிலான கொழுப்பு உடலில் சேரும்போது அது பல்வேறு வித உடல் உபாதைகளை உண்டாக்குகிறது.

சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி, ஒரு மனிதனின் உடலில் அதிக கொழுப்புகள் சேரும்போது அவை ரத்த நாளங்களின் வழியாக ரத்தம் பாய்வதை கடினமாக்குகிறது. மாறிவரும் வாழ்க்கை முறைகளினாலும், ஆரோக்கியமற்ற உணவு பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி செய்யாமல் இருத்தல், புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற பிரச்சனைகளினால் உடலில் அதிக கொழுப்பு சேருகிறது..

இதில் மிகப்பெரிய அபாயம் என்னவெனில் இவை உடலில் சேர சேர உடனடியாக எந்தவித அறிகுறியையும் வெளிப்படுத்தாது. படிப்படியாக உடலில் சேரும் இந்த கொழுப்பு குறிப்பிட்ட காலத்தில் திடீரென உடலில் பல்வேறு விதமான நோய்களை உண்டாக்கும். முக்கியமாக இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை அதிக அளவில் உண்டாக்குகிறது. உடலில் அதிக கொழுப்பு சேர்வதால் உண்டாகக்கூடிய முக்கியமான ஐந்து நோய்களைப் பற்றி பார்ப்போம்.

கொரோனரி ஹார்ட் டிசிஸ்

உடலில் உள்ள ரத்த நாளங்களின் சுவர்களில் பிளேக் உருவாக்கத்தினால் இந்த வியாதி உண்டாகிறது. இந்த ரத்த நாளங்கள் இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் முக்கிய பணியை செய்கின்றன. மேலும் நாளடைவில் இந்த ரத்த நாளங்களில் கொழுப்புகள் படிந்து ரத்த ஓட்டத்தை சிரமமாக்குகின்றன. இதன் காரணமாக ரத்தத்தின் வழியாக ஆக்ஸிஜன் கடத்தப்படுவது தடை செய்யப்படுகிறது.

அப்ஸ்ட்ராக்டிவ் கொரோனரி ஆட்டரி டிசிஸ், நான் அப்ஸ்ட்ராக்டிவ் கொரோனறி ஆர்டரி டிசீஸ், ஸ்பான்டேனியஸ் கொரோனரி ஆட்டரி டைசெக்ஷன் ஆகியவை இந்த நோயின் வகைகள் ஆகும்.

மாரடைப்பு

உடலில் அதிக அளவு கொழுப்பு சேர்வதால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. ரத்த நாளங்களில் கொழுப்புகள் அதிகரிக்கும் போது, அவை ரத்தம் பாய்வதை தடை செய்கிறது. இதன் காரணமாக ரத்த நாளங்களின் வழியே போதுமான அளவு ரத்தம் கடத்தப்படாத நிலையில் அங்கு ரத்தம் உறைதல் ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுவதற்கு வழிவகை செய்கிறது.

பெரிபெரல் ஆர்டேரியல் டிசீஸ்

பிஏடி எனப்படும் இந்த நோய் அதிகப்படியான கொழுப்புகள் ரத்த நாளங்களில் படிவதால் ரத்த நாளங்கள் சுருங்குவதற்கு வழி செய்கிறது. முக்கியமாக உடலின் கீழ்பாகத்தில் இது அதிக பாதிப்பை ஏற்படுத்தும். கால்கள், பாதம், மூட்டுகள் ஆகிய இடங்களில் குறைந்த அளவு ரத்தம் பாய்வதோ அல்லது மொத்தமாக ரத்தம் பாய்வதை தடை செய்வதும் நிகழ்கிறது.

கால்களில் உணர்வற்று இருப்பதும், கால்களில் உள்ள சருமத்தின் நிறம் மாறுவதும், நகங்கள் மிக மெதுவாக வளர்வதும் காலில் காயம் ஏற்பட்டால் அவை ஆறுவதற்கு அதிக காலம் எடுத்துக் கொள்வதும் இந்த நோயின் அறிகுறிகள் ஆகும்.

பக்கவாதம்

இதயத்தை சுற்றியுள்ள ரத்த நாளங்களில் அதிக அளவு கொழுப்புகள் படிவதால் போதுமான அளவு ரத்தம் இதயத்திற்கு கடத்தப்படுவது தடை செய்யப்படுகிறது. மேலும் இதயத்தில் இருந்து மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களிலும் அடைப்பை ஏற்படுத்தி மூளைக்கு போதுமான அளவு ரத்தம் கடத்தப்படுவதும் தடுக்கப்படுகிறது. இதன் காரணமாக பக்கவாதம் உண்டாகிறது.

எவ்வாறு தற்காத்துக் கொள்வது?


முறையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப் பழக்க வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். நாம் உண்ணும் உணவில் சோடியம் குறைவாக இருக்கும் படியும் அதிக கொழுப்புகள் இல்லாத உணவுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


இறைச்சிகளை உண்பதற்கு பதிலாக காய்கறிகளையும் பழங்களையும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான புரதச்சத்து கிடைப்பதுடன் அதிகளவு கொழுப்பு சேர்வதையும் தவிர்க்க முடியும்.

இவற்றைத் தவிர தினசரி உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமான உடல் எடையை பேணிக்காப்பது ஆகியவை முக்கியமானவை. 

தமிழகத்தில் வரும் 21ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 300க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு!

January 07, 2023 0


Home  news  தமிழகத்தில் வரும் 21ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 300க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள்...

newsதமிழகத்தில் வரும் 21ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 300க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு!

By

 Deepika

-

 January 7, 2023

0

தமிழகத்தில் வரும் 21ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 300க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு!

தமிழகத்தில் வரும் 21ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 300க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு!

தருமபுரியில் ஜனவரி 21ம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. வேலை நாடுநர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு முகாம்:

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் துறைகள் வேலை வாய்ப்புகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு மையங்கள் வாயிலாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை அளிக்கும் நோக்கில் மாதந்தோறும் அல்லது வாரந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடந்து வருகிறது. இதில் முன்னணி நிறுவனங்கள் முகாமில் பங்கேற்று வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றனர்.

ஜனவரி 21ம் தேதி ஸ்ரீ விஜய் வித்யாலயா – கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நல்லம்பள்ளி, தர்மபுரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளது. இந்த முகாமில் 300-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இதில் 8 வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு வரை முடித்தவர்கள் பங்கேற்று வேலைவாய்ப்பை பெறலாம். இந்த முகாம் மூலம் 10000+ காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Indigo Airlines நிறுவனத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு 2023-விண்ணப்பிக்க முழு விவரங்கள் இதோ !

January 07, 2023 0
Indigo Airlines நிறுவனம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Senior Executive- AOCS in the role of Customer Services/ Security/ Ramp பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Indigo Airlines காலிப்பணியிடங்கள்:

Indigo Airlines நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Senior Executive- AOCS in the role of Customer Services/ Security/ Ramp பணிக்கென பல்வேறு காலியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இண்டிகோ ஏர்லைன்ஸ் கல்வி தகுதி:

Senior Executive- AOCS in the role of Customer Services/ Security/ Ramp பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பணி சார்ந்த ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Indigo Airlines அனுபவ விவரம் :

இப்பணிகளுக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 04-08 ஆண்டுகள் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

Indigo Airlines ஊதிய விவரம் :

Indigo Airlines நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indigo Airlines தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது .கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Indigo Airlines விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து,தேவையான ஆவணங்களுடன் இறுதி நாள் முடிவதற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தமிழ்நாடு அரசின் TNBB வாரியத்தில் Data entry Operator வேலை... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

January 07, 2023 0
தமிழ்நாடு உயிரிப்பல்வகைமை வாரியத்தில் (Tamil Nadu Biodiversity Board) தற்காலிக அடிப்படையில் DATA ENTRY OPERATOR பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அறிவியல் பாடத்தில் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்த பணி 4 மாதங்களுக்கு மட்டுமே. பின்னர் திறமையில் அடிப்படையில் பணிக்காலம் நீட்டிக்கப்படும். இப்பணிக்கு 3 இடங்கள் உள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுதப் படிக்க மற்றும் பேச நன்கு தெரிந்திருக்க வேண்டும். MS Excel, Lower grade தட்டச்சு மற்றும் taxonomy பற்றி அறிவு தேவை.

கல்வித்தகுதி:

Data entry Operator பணிக்கு Botany/Zoology அல்லது அதற்கு நிகரான இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்கள் முதல் கட்டமாகத் தேர்வு செய்து எழுத்துத் தேர்வு/ நேர்காணலுக்கு அழைப்பர்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://tnbb.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யhttps://tnbb.tn.gov.in/

முகவரி:

The Secretary,

Tamil Nadu Biodiversity Board,

TBGP Campus II Floor,

Nanmangalam, Medavakkam Post,

Chennai - 600100.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 30.01.2023.


January 6, 2023

பேங்க் ஆப் பரோடா வங்கியில் தேர்வில்லாத வேலை – சம்பளம்:ரூ.23,000/- விண்ணப்பங்கள் வரவேற்பு!!

January 06, 2023 0
பேங்க் ஆப் பரோடா வங்கி ஆனது FLC Coordinator பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பேங்க் ஆப் பரோடா காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி FLC Coordinator பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
FLC Coordinator கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பேங்க் ஆப் பரோடா வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 64 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

FLC Coordinator முன் அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 5 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேங்க் ஆப் பரோடா ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.23,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FLC Coordinator தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 21.01.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

ICFRE இந்திய வனவியல் துறையில் வேலை – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.31000/-

January 06, 2023 0
இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் ஆனது Junior Project Fellows (JPFs) மற்றும் Field Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 25.01.2023-க்குள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ICFRE காலிப்பணியிடங்கள்:Junior Project Fellow – 7 பணியிடங்கள்Field Assistant – 1 பணியிடம்

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து M.Sc/B.Sc/M.E/M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.



Home  அறிவிக்கைகள்  ICFRE இந்திய வனவியல் துறையில் வேலை – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.31000/-

அறிவிக்கைகள்ICFRE இந்திய வனவியல் துறையில் வேலை – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.31000/-

By

 Deepika

-

 January 7, 2023

0

ICFRE இந்திய வனவியல் துறையில் வேலை - தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.31000/-

ICFRE இந்திய வனவியல் துறையில் வேலை – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.31000/-

இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் ஆனது Junior Project Fellows (JPFs) மற்றும் Field Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 25.01.2023-க்குள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023நிறுவனம்ICFREபணியின் பெயர்Junior Project Fellow & Field Assistantபணியிடங்கள்08விண்ணப்பிக்க கடைசி தேதி25.01.2023விண்ணப்பிக்கும் முறைOnline & OfflineICFRE காலிப்பணியிடங்கள்:Junior Project Fellow – 7 பணியிடங்கள்Field Assistant – 1 பணியிடம்

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து M.Sc/B.Sc/M.E/M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பேங்க் ஆப் பரோடா வங்கியில் தேர்வில்லாத வேலை – சம்பளம்:ரூ.23,000/- விண்ணப்பங்கள் வரவேற்பு!!

ICFRE சம்பள விவரம்:Junior Project Fellow – ரூ.20,000/-Field Assistant – ரூ.17,000/-வயது வரம்பு:

01/01/2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 28-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

ICFRE விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு ஆன்லைன் மற்றும் Offline மூலம் 25.01.2023-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.





ஒரு நாளைக்கு இத்தனை முட்டைதான் சாப்பிடனுமா..? அதிகமானால் என்ன ஆகும்..?

January 06, 2023 0
முட்டை என்றாலே ஆரோக்கியமானது என பலருக்கும் தெரியும். ஆரோக்கியம் என்பதற்காக அதிகமாக சாப்பிடுவதும் ஆபத்து. அந்த ஆபத்து எந்த அளவில் இருக்கிறது என்பதுதான் பலருக்கும் குழப்பம். அதாவது ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிட்டால் அதன் நன்மைகளைப் பெறலாம்..ஒருவேளை அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும் என்கிற கேள்வி பலருக்கும் உண்டு. அதற்கான விடையை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.

முட்டையில் வைட்டமின் A, D மற்றும் B-12 நிறைவாக உள்ளது. அதோடு புரதச்சத்துக்கு முட்டைதான் சரியான உணவாக இருக்கும். உடல் எடையைக் குறைப்போருக்கு முட்டை சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. அதேசமயம் கட்டுமஸ்தான உடலைப் பெறவும் முட்டை சாப்பிடுவார்கள். முட்டையின் மஞ்சள் கருவில் விட்டமின் டி சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். மூளையின் சுருசுருப்பான இயக்கத்திற்கும் , ஞாபக திறன் அதிகரிக்கவும் முட்டை சாப்பிடலாம்.

முட்டை இப்படி பல நன்மைகளை கொண்டிருந்தாலும் மருத்துவர்கள் ஒரு நாளைக்கு 2 முட்டை மட்டுமே சாப்பிட வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர். அதாவது வேக வைத்த முழுமையான முட்டையாக இருப்பின் 2 முட்டைக்கு மேல் சாப்பிடக்கூடாது. குறிப்பாக தினமும் முட்டை சாப்பிடும் பழக்கம் இருப்போர் இதை நினைவில் கொள்ள வேண்டும்.

நீரிழிவு நோயாளிகள், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தால் ஒரு நாளைக்கு ஒரு முட்டையே போதுமானது என பரிந்துரைக்கின்றனர்.

காரணம் முட்டை அதிக புரதச்சத்து நிறைந்தது. குறிப்பாக அதன் மஞ்சள் கருவில் அதிக கொழுப்பு நிறைந்துள்ளது. அதாவது ஒரு முட்டையில் 200 மில்லி கிராம் கொழுப்பு உள்ளதாம். ஆனால் மனித உடலுக்கு ஒரு நாளைக்கு 300 மில்லிகிராம் கொழுப்பே போதுமானது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

எனவே அதிகமான முட்டையை சாப்பிடுவதால் கொழுப்பின் அளவு அதிகரித்து இதயத்திற்கு பாதிப்பை உண்டாக்கும். இரத்தத்தில் நிறைவுற்ற கொழுப்பு அதிகரித்துவிடும். அவை உடலுக்கு கெட்ட கொழுப்பாக மாறி பல உடல் நல பாதிப்புகளை உண்டாக்கும். குறிப்பாக இதயம் தொடர்பான பிரச்னைகளை சந்திக்க நேரிடும். எனவே முட்டையை அளவாக சாப்பிட்டு அதன் ஆரோக்கியத்தை முழுமையாக பெறுங்கள்.

இதய நோய் முதல் நோய் எதிர்ப்பு சக்தி வரை... வாய் விட்டுச் சிரித்தால் இத்தனை நன்மைகள் கிடைக்கும்..!

January 06, 2023 0
வாழ்கையில் நிம்மதியாக இருந்தால்தான் சிரிக்க வேண்டுமா என்ன ? துன்பத்திலும் சிரித்தால் அதைவிடப் மகிழ்ச்சியான மனிதன் இந்த உலகில் இருக்க முடியுமா? ஆம், சிரியுங்கள் எந்த பிரச்னை வந்தாலும் உடனே அதை மகிழ்ச்சியானதாக மாற்றி சிரித்துக் கொண்டே எல்லாவற்றையும் கடந்து போங்கள். பிரச்னைகள் தானாக நிவர்த்தியாகிவிடும். இதனால் உடலளவிலும் ஆரோக்கியம் பெறுவீர்கள்.
ஸ்ட்ரெஸ் பஸ்டர் : நீங்கள் ஸ்ட்ரெஸாக இருக்கிறீர்களானால் உங்களுக்கு அதை மறக்கடிக்க நிச்சயம் மகிழ்ச்சியான சூழல் அவசியம். ஏனெனில் நீங்கள் ஸ்ட்ரெஸாக இருக்கும்போது கார்டிசோல் (cortisol ) எனப்படும் அமிலம் சுரக்கிறது. இதன் அளவு அதிகரிக்கும்போது இதயப் பிரச்னைகள் வரும். இதைத் தவிர்க்க நீங்கள் எப்போதும் சிரித்துக் கொண்டே இருங்கள். இதனால் கார்டிசோலின் அளவு  69 சதவீதம் குறைவதாக ஒரு ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர். இனி கவலையை மறந்து ஸ்ட்ரெஸை துரத்தி அடிக்க வாய்விட்டுச் சிரிங்கள்.

இதயப் பிரச்னைகள் வராது : சிரிக்கும் போது உள்ளிழுத்துவிடும் மூச்சால் இரத்தத்தில் ஆக்ஸிஜனேற்றம் நிகழ்கிறது. இதனால் இரத்த ஓட்டம் இதயத்திற்கு சீராகப் பாய்ந்து அதன் செயல்பாடுகளும் சிறப்பாகிறது.

நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் : சிரிப்பதால் பீடா எண்டோர்ஃபின்ஸ் (Beta-Endorphins ) மற்றும் இதர ஹார்மோன்கள் சுரக்கின்றன. இவை டி- செல் (T-cells ) உற்பத்தியைத் தூண்டுகிறது. இதனால் லிம்ஃபோசைட்ஸ் (lymphocytes) உருவாகி அதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.

இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் : சிரிக்கும்போது இதயத்தின் ஆற்றலும் சீராகிறது. இதனால் இரத்த ஓட்டமும் அதிகரித்து இரத்த அழுத்தப் பிரச்னையை சரி செய்கிறது. இரத்த தசை நாளங்களையும் திறம்பட செயலாற்றச் செய்கிறது.

மன அழுத்தம் நீங்கும் :  ஆராய்ச்சியில், சிரிப்பதால் உங்கள் மூளையின் செயல்திறன் அதிகரித்து மன அழுத்தத்தைக் குறைப்பதாகக் கண்டறிந்துள்ளனர். அந்த ஆராய்ச்சியில் எப்போதும் மன அழுத்தத்திலேயே இருக்கும் அவர்கள்  நகைச்சுவை என்பதையே மறந்திருந்தனர். அவர்களுக்கு முற்றிலும் சிரிக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு மகிழ்ச்சியான சூழலில் வைத்திருந்ததில் அவர்களின் மன அழுத்தம் கட்டுப்பாட்டில் இருந்ததை அறிந்துள்ளனர். நாம் சிரிக்கும் போது பெருமூளைப் புறணி (  cerebral cortex ) முழுவதும் அதன் தாக்கம் எதிரொலித்து ஆற்றலை ஏற்படுத்துகிறது. சிரிப்பு என்பது மன அழுத்தம் மட்டுமன்றி மனக் கவலை, மனச் சோர்வு போன்றவற்றையும் குறைத்து நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகைச் செய்கிறது.

சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறையில் 211 காலியிடங்கள்: உடனே விண்ணப்பியுங்கள்

January 06, 2023 0
சென்னை நகர்ப்புற சுகாதார  இயக்கத்தின் கீழ், சென்னை மாநகராட்சியில்  செயல்பட்டு வரும் சுகாதார மையங்களில் உள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்:  211

பணிகாலியிடங்கள்கல்வித் தகுதிதொகுப்பூதியம்ஆய்வக நுட்புநர் பணி (Lab Technician)19-
ஆய்வக நுட்புநர் படிப்பில் DMLT., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்;- ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம் : ரூ.13,000/- 

மருந்தாளுனர்4உயர்கல்வி தேர்ச்சி , மருந்தாளுனர் துறையில் பட்டயப்படிப்புஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம் : ரூ.15,000/-

செவிலியர்  (Auxiliary Nurse Midwife/Lady Health Visitors)183உயர்கல்வி தேர்ச்சி , செவிலியர் துறையில் 2 ஆண்டு பட்டயப்படிப்புஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம் : ரூ.14,000/- 

எக்ஸ்-கதிர் வீச்சாளர்7எக்ஸ் -கதீர்வீச்சு படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம் : ரூ.12,000/-

அறுவை சிகிச்சை உதவியாளர்  (Operation THeatre Assistant)5Operation THeatre தொழில்நுட்பத்தில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம் : ரூ.8,400/-

Ophthalmic Assistant3Ophthalmic Assistant படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம் : ரூ.12,000/-

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், தங்களுடைய புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம் மற்றும் தகுதி சான்றுகளுடன் வரும் 19ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

The Member Secretary,

Chennai City Urban Health Mission,

Public Health Department, Rippon Buildings,

Chennai - 600 003

https://chennaicorporation.gov.in/gcc/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு 044 - 25619330, 25619 290 என்ற எண்ணில் வேலை நேரங்களில் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பபங்கள் நேரிலோ/ தபால் மூலமாகவோ அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு சூப்பர் வாய்ப்பு... 400க்கும் மேற்பட்ட தற்காலிக ஆசிரியர்கள் நிரப்ப முடிவு

January 06, 2023 0
இல்லம் தேடி கல்வி திட் டத்தை தொய்வின்றி செயல்படுத்தும் விதமாக, அரசுப் பள்ளிகலில்  400க்கும் மேற்பட்ட தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்ய தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் (பொறுப்பு) க. இளம்பகவத்,  அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இல்லம் தேடிக் கல்வித் திட்டம் அனைத்து மாவட்டங்களி லும் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டப் பணிகளைக் கண்காணிக்க மாவட்ட வட்டார அளவில் ஓர் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே மாவட்ட, வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் பணிபுரியும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்காதவாறு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக தற்காலிக ஆசிரியர் தேவையுள்ள பள்ளிகளின் விவரம் மாவட்டங்களிலிருந்து பெறப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நிரப்பப்பட வேண்டும். அந்த ஆசிரியர்களின் பணிக் காலம் ஜனவரி முதல் ஏப்ரல் வரையாகும்.

சம்மந்தப்பட்ட பள்ளியின் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர் தகுதியுடவையவராக இருப்பின் அவர்களுக்கு பணி வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு, தற்காலிகமாக நிரப்பப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.7500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10,000 வீதம் மதிப்பூதியம் வழங்கப்பட வேண்டும்.

அரசின் வழிமுறைகளைப் பின்பற்றி தாற்காலிக ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகளை ஜனவரி 9ம் தேதிக்குள் முடிக்க அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்புத் தேர்ச்சி போதும்.. நீங்களும் ட்ரோன் விமானியாக மாறலாம்... தாட்கோவின் செம திட்டம்

January 06, 2023 0
TAHDCO Drone Training Program:  அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் வேளான்துறைகளை நவீனப்படுத்த ட்ரோன்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, பூச்சி மருந்து தெளிப்பதில் ட்ரோன் பயன்பாட்டை இந்த நாடுகள் ஊக்குவித்து வருகின்றன.

இந்நிலையில், வேளாண் துறையில் ட்ரான் பயன்பாடு தொடர்பான பயிற்சியை தாட்கோ நிறுவனம் சென்னை குரோம்பேட்டையில் உள்ள சென்னை தொழில்நுட்பக் கழகத்துடன் இணைந்து இலவசமாக வழங்க முன்வந்துள்ளது. ஆர்வமுள்ள பட்டியல்/பழங்குடியின மாணவர்கள் இந்த பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம்.

ஆதிதிராவிடர்/பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த ஆண்கள்/பெண்கள்/திருநங்கைகள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம்.

கல்வித் தகுதி: குறைந்தது 10ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உடற்தகுதி மருத்துவ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

இந்தியர் என்பதற்கான அடையாளச் சான்று வேண்டும்.

பயிற்சி வகுப்புகள்: 

10 நாட்கள் ட்ரோன் திறன் பயிற்சி வழங்கப்படும்.

ரூ. 61,100 பயிற்சிக்கான கட்டணத்தை தாட்கோ ஏற்கும்.

தங்கும் வசதி அமைத்துக் கொடுக்கப்படும்.ரூ. 2.25 லட்சம் வரை கடன் உதவி:

பயிற்சி காலத்திற்குப் பிறகு, சிவில் விமானப் போக்குவரத்துத் தலைமை இயக்குனரகம் மூலம் ட்ரோன்கள் இயக்குவதற்கான உரிமம் வழங்கப்படும். இந்த உரிமங்கள் 10 ஆண்டு காலம் செல்லுபடியாகும்.

பயிற்சியை முடித்தவர்கள், சொந்தமாகவோ அல்லது வங்கி கடன் மூலமாகவே ட்ரோன்கள் வாங்க தாட்கோ உதவி செய்யும்.உழவன் செயலி மூலம் தங்கள் சேவையை சந்தைப்படுத்திக் கொள்ள வாய்ப்பு உருவாக்க தரப்படும். எனவே, ஆர்வமுள்ளவர்கள், தாட்கோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு   சென்று விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.



இந்த புத்தாண்டில் நீங்கள் கைவிட வேண்டிய தவறான பழக்க, வழக்கங்கள்.!

January 06, 2023 0
ஒவ்வொரு புத்தாண்டிலும் குறிப்பிட்ட உறுதிமொழிகளை செய்து கொண்டு, பின்னால் அதைச் செய்ய முடியவில்லை என்று கருதும் லட்சக்கணக்கான நபர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம். அந்த உறுதிமொழிகள் உங்கள் தனிப்பட்ட வாழ்வின் இலக்கு நோக்கியதாக இருக்கும் பட்சத்தில், அவற்றை தொடர்ந்து செயல்படுத்த முயல்வதும், கைவிடுவதும் உங்களின் தனிப்பட்ட விருப்பம்

ஆனால், சில தருணங்களில் தனிநபர் குணாதிசயங்கள் தான் என்றாலும், அவை பிறர் மத்தியில் உங்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தக் கூடியதாகவும், உங்கள் வளர்ச்சியை தடுக்கக் கூடியதாகவும் அமையும். அவை என்னவென்று உணர்ந்து கொண்டு தக்க தருணத்தில் விட்டு விடுவது நல்லது.

சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிடுவது : பொழுது போக்கவும், சக ஊழியர்கள், குடும்ப உறவுகள், முகம் அறியா நண்பர்கள் என்று எண்ணற்ற மக்களிடம் தொடர்பில் இருக்கவும் சமூக ஊடகங்கள் அவசியமானவை தான். அவை நம் வாழ்வின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும.

பல பொறுப்புகளை சுமப்பது : ஒரு சமயத்தில் ஒரு இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். நாம் ஒரு சூப்பர்ஹீரோ என்ற நினைப்பில் பல பொறுப்புகளை தூக்கி சுமக்கக் கூடாது. சுருக்கமாக சொன்னால், அகல கால் வைக்காதே என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதை புரிந்து கொண்டு நடக்க வேண்டும். ஒற்றை இலக்கின் நோக்கி தீர்க்கமான உறுதியுடன் செயல்படும்போது வெற்றி கிடைக்கும்.

எதிர்மறை ஆற்றல் : எப்போதும் மனதில் எதிர்மறை ஆற்றல் கொண்டவராக இருக்கக் கூடாது. நேர்மறை ஆற்றல் கொண்டவராக செயல்பட வேண்டும். எதையும் நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எல்லாம் நன்மைக்கே என்ற எண்ணம் மனதில் ஆழமாக இருந்தால் எதிர்மறை ஆற்றல் நாளடைவில் குறைந்து விடும்.

ஒப்பீடு கூடாது : உங்களுக்கென்று தனித்துவ குணம், திறமை எல்லாம் இயற்கை வழி கிடைத்திருக்கும். அதை நினைத்து மனம் நிறைவடைய வேண்டும். மற்றவர்களை பார்த்து, அவரை போல நாம் இல்லையே என்று மனம் ஏங்கக் கூடாது. ஒவ்வொருவருடைய வாழ்விலும் ஒரு நோக்கமும், அர்த்தமும் இருக்கும். நமக்கானதை நாம் புரிந்து கொண்டு வாழ்ந்தால் போதுமானது.

கடந்த காலத்தை நினைத்து வருந்துவது : கொட்டிய பாலை நினைத்து வருந்தாதே என்றொரு பழமொழி உண்டு. அதை நம் வாழ்க்கைக்கான தாரக மந்திரமாக எடுத்துக் கொண்டு, எது நடந்தாலும் அடுத்தக்கட்ட நகர்வை நோக்கி முன்னோக்கிச் செல்ல வேண்டும். நடந்த பழைய விஷயங்களை மட்டும் நினைத்து மனதை குழப்பிக் கொண்டிருக்கக் கூடாது.

முன்னுரிமை : உங்களுக்கு முன்னுரிமை அளிக்காத நபர்கள் குறித்து ஒருபோதும் சிந்திக்க வேண்டாம். அது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். நம் கை வசம் என்ன சிறப்புகள் இருக்கின்றனவோ அதை நினைத்து பெருமைப்பட வேண்டும். கிடைக்காத ஒன்றை நோக்கி மனம் ஏங்க கூடாது. எதிர்பார்ப்புகள் தான் ஏமாற்றத்தை கொடுக்கும்.


குறை காண்பது : உங்களின் செயல்பாடுகள் உங்களுக்கே பிடிக்காதவையாக தோன்றும். இதனால் தன்னை தானே வருத்திக் கொள்வீர்கள். இதன் எதிரொலியாக தன்னம்பிக்கை குறையும். தன்னம்பிக்கை உடைந்தால் எதிர்காலத்திற்கு உங்களை நீங்கள் தயார் செய்து கொள்ள இயலாது. எதையும் யோசித்து, சிந்தித்து செயல்படுத்தவும். செய்த பின் வருந்த வேண்டாம்.
பொறுப்புடைமை : பிறருடைய தவறுகளுக்கு அவர்கள் பொறுப்பேற்காத நிலையில், அதற்காக நீங்கள் உங்களை நினைத்து கவலை கொள்வதோ அல்லது சுயமாக குற்றம் சுமத்திக் கொள்வதோ ஏற்புடையது அல்ல. ஆகவே, உங்கள் நடத்தையில் நீங்கள் சரியாக இருந்தால் போதுமானது. பிறருடைய செயல்பாடு குறித்து கவலை கொள்ள வேண்டாம்.

மோதல்களை தவிர்ப்பது : யாருடனும், எதற்காகவும் சண்டையிடக் கூடாது என்ற உறுதிமொழியை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் மோதல் என்பது அந்த சமயத்தில் வெற்றியாளர் என்ற உணர்வை தந்தாலும், வேறொரு தருணத்தில் அவை உங்களுக்கு மன உளைச்சலைத் தருவதாக அமையும். பல ஆண்டுகளுக்கு ஆறாத வடுவாக நீடிக்கும். ஆகவே மோதல்களை தவிர்க்கவும்.


ரஸ்க் சாப்பிடுவதும் ரிஸ்க்தான்... தினமும் ரஸ்க் சாப்பிடுவதால் வரும் பாதிப்புகளை விளக்கும் மருத்துவர்..

January 06, 2023 0

டீ அல்லது காபியுடன் ரஸ்க் குடிக்க பலர் விரும்புவார்கள். இன்னும் பலர் அதை அப்படியே சாப்பிடுகிறார்கள். இருப்பினும் சிலருக்கு ரஸ்க் ஆரோக்கியமான சிற்றுண்டியா? டீ காபியுடன் சாப்பிடலாமா? இது என்ன கூறுகளை உள்ளடக்கியது? இதை சாப்பிட்டால் என்ன நடக்கும்..? என்ற கேள்விகள் இருக்கும். அவர்களுக்காகவே இந்த கட்டுரை

ரஸ்க் உடல் நலத்திற்கு நல்லதல்ல...

ஊட்டச்சத்து நிபுணர் குஷ்பூ ஜெயின் திப்ரேவாலா "ரஸ்க் சுத்திகரிக்கப்பட்ட மாவு, சர்க்கரை, எண்ணெய்கள், பசையம் மற்றும் சோடா மாவு சேர்க்கைகளுடன் சமைக்கப்படுகிறது. இந்த உணவு கலவை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்” என எச்சரிக்கிறார்.


ரஸ்கின் தினசரி நுகர்வு இரத்த குளுக்கோஸ் அளவை அதிகரிக்கும் மற்றும் அழற்சியின் அபாயத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. "ரஸ்க்கை தினமும் உட்கொள்வது உங்கள் குடலில் கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது. இது மோசமான செரிமானம் மற்றும் பசிக்கு வழிவகுக்கிறது" என்கிறார் குஷ்பூ ஜெயின்.

மேலும், ரவையில் இருந்து தயாரிக்கப்படும் ரஸ்க் உடல் நலத்திற்குப் பயனளிக்காது. "இது உங்கள் குடல் மற்றும் ஹார்மோன் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. உடலில் மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. சோம்பேறித்தனத்தையும் ஏற்படுத்துகிறது” என்கிறார் குஷ்பு ஜெயின்.


ஹார்மோன் நிபுணரும் ஊட்டச்சத்து நிபுணருமான ஷிகா குப்தா, ரஸ்கின் பொருட்களை விரிவாக டிகோட் செய்துள்ளார்.


சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவு/மைதா: ரஸ்க் தயாரிப்பதில் சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவு அல்லது மைதா மாவு பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து உமி, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிலிருந்து எடுக்கப்படுகின்றன. எனவே, இதில் நார்ச்சத்து எதுவும் இல்லை.

சர்க்கரை: ரஸ்கில் சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்டுகிறது. நீங்கள் வெறும் 2 ரஸ்க் சாப்பிட்டால் கூட, அது உங்கள் தினசரி சர்க்கரை அளவை மீறுவது போன்றது என்கிறார் குப்தா.

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்: இதில் பயன்படுத்தப்படும் எண்ணெயின் தரம் இல்லாததாக இருப்பதால் ஊட்டச்சத்து நன்மைகளும் இல்லை.

ரவை ரஸ்க்: ரவையிலிருந்து தயாரிக்கப்பட்டாலும், அதிலிருந்து அனைத்து நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்களும் நீக்கப்பட்டே தயாரிக்கப்படுகிறது .


உணவு சேர்க்கைகள் மற்றும் செயற்கை சுவைகள்: ரஸ்கை நீண்ட காலத்திற்கு பாதுகாக்க நிறைய இரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. மேலும் சுவை மற்றும் வாசனைக்காகவும் இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்கிறார் குப்தா.

உணவு வண்ணம்: ரஸ்கிற்கு பழுப்பு நிறத்தைக் கொடுக்க கேரமல் கலரிங் அல்லது பிரவுன் ஃபுட் கலரிங் பொதுவாக சேர்க்கப்படுகிறது. இந்த நிறம் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். மைதாவுடன் ரஸ்க் கோதுமை போல தோற்றமளிக்க இது பயன்படுகிறது" என்கிறார் சுகாதார பயிற்சியாளர் திக்விஜய் சிங்.


ஆனாலும் நீங்கள் ரஸ்க் சாப்பிட விரும்புகிறீர்கள் என்றால், உங்களுக்காக சில டிப்ஸ்


ரஸ்க் சாப்பிடும் போது இந்த விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள்


“மல்டிகிரேன் ரஸ்கில் மைதாவும் இருக்கலாம். எனவே, எப்போதும் 100 சதவீதம் கோதுமை அல்லது 100 சதவீதம் ரவை இருக்கும் ரஸ்க் தேர்வு செய்யுங்கள். எந்தவொரு பொருளையும் வாங்கும் முன் லேபிள்களை கவனமாக படிக்குமாறு குஷ்பு ஜெயின் அறிவுறுத்துகிறார்.








January 2, 2023

தலைவலி முதல் சுகர் வரை... வெந்நீரில் பெருங்காயம் கலந்து குடித்தால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா..?

January 02, 2023 0

 பெருங்காயத்தை குழம்பில் ஒரு சிட்டிகை சேர்த்தாலும் அதன் மணம் சுண்டி இழுக்கும். அதன் அளவு குறைவாக இருந்தாலும் நன்மைகளை ஏராளம் அள்ளித்தரும். குறிப்பாக பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இதில் நிறைவாக உள்ளன. அந்த வகையில் பெருங்காயத்தை வெந்நீரில் கலந்து குடித்தால் அதன் இன்னும் பல மருத்துவ நன்மைகளை பெறலாம். பெருங்காயத்தை வெந்நீரில் ஒரு சிட்டிகை கலந்து குடிப்பதன் நன்மைகளை ஊட்டச்சத்து நிபுணர் ப்ரீத்தி தியாகி விளக்குகிறார். அவை என்னென்ன பார்க்கலாம்.

எடையை குறைக்கிறது : பெருங்காயம் கலந்த நீரானது வளர்ச்சிதை மற்றத்தை அதிகரிக்கிறது. இதனால் உடல் எடையை வேகமாக குறைக்க உதவுகிறது. இதை தினமும் காலை குடித்து வாருங்கள். உங்களுக்கே ரிசல்ட் தெரியும்.

செரிமானத்தை அதிகரிக்கும் : வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு பெருங்காயம் மிகுந்த நன்மை அளிக்கிறது. அந்த வகையில் நீங்கள் செரிமான பிரச்சனையால் அவ்வப்போது பாதிக்கப்படுகிறீர்கள் எனில் வெதுவெதுப்பான நீரில் பெருங்காயம் கலந்து குடித்தால் சீராகும். செரிமான மண்டலத்தில் உள்ள நச்சுக்கள் நீங்கி சுத்தமாகும்.


சளி மற்றும் காய்ச்சல் நிவாரணி : குளிர்காலத்தில் பொதுவாக காய்ச்சல் மற்றும் சளி வருவது இயல்பு. இதிலிருந்து விடுபட வேண்டும் எனில் பெருங்காயம் கலந்த நீரை குடியுங்கள். இதனால் சுவாசப்பிரச்சனையையும் சரி செய்யலாம்.

தலைவலியை போக்கும் : அழற்சி எதிர்ப்பு பண்புகள் பெருங்காயத்தில் இருப்பதால் தலைவலிக்கு நல்ல மருந்தாக இருக்கும். இது இரத்த நாளங்களில் உள்ள வீக்கத்தை குறைப்பதால் வலி குறையும்.

மாதவிடாய் வலிக்கு மருந்து : மாதவிடாய் நாட்களில் ஏற்படும் அடி வயிற்று வலியை போக்க வேண்டுமெனில் வெதுவெதுப்பான நீரில் பெருங்காயத்தை ஒரு சிட்டிகை கலந்து குடியுங்கள். காலையில் வெறும் வயிற்றில் குடிக்க சரியாகும்.

இரத்த சர்க்கரை அளவு மேம்படும் : இரத்த சர்க்கரை அளவை குறைப்பதில் பெருங்காயம் பெரும் பங்கு வகிக்கிறது. அதிலும் வெதுவெதுபான நீரில் கலந்து குடிக்கும்போது அது கணைய செல்களை தூண்டி அதிக இன்சுலினை சுரக்க வைக்கிறது. இதனால் இரத்த சர்க்கரை அளவு மேம்படும்.

பிளாக் காபி உடல் எடையை குறைக்குமா? - ஆய்வு கூறுவது என்ன?

January 02, 2023 0

 டீ பிரியர்களை போலவே ‘காபி’ பிரியர்களும் அதிகளவில் உள்ளனர். காலையில் எழுந்து சூடாக ஒரு காபியை குடிக்கவில்லை என்றால், அந்த நாளே அவர்களுக்கு போகாது. காபி குடிப்பதால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்க முடியும். இந்த நிலையில் தொடர்ந்து பிளாக் காபி குடிப்பதால் உடல் எடை குறையும் என “ஹார்வர்ட் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்” அண்மையில் நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளனர். பிளாக் காபி என்றால், காபி தூளுடன் வெறும் சூடு தண்ணீர் மட்டும் கலந்து மிதமான சூட்டில் குடிப்பதாகும். விருப்பப்பட்டால் தேன் சேர்த்து கொள்ளலாம்.

இந்த பிளாக் காபியை தினமும் நான்கு கப் காபி குடித்தால் உடலில் உள்ள கொழுப்புகள் சுமார் 4 சதவீதம் வரை குறையும் என கூறப்படுகிறது. பிளாக் காபி குடிப்பதால் உடல் எடை குறைக்க என்ன காரணம் என இங்கு தெரிந்து கொள்வோம்.,

குறைவான கலோரி : பொதுவாக காபி என்பதை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று நிலக்கடலையில் இருந்து தயாரிப்பது, மற்றொன்று எஸ்பிரெசோவின் திரவ அவுன்ஸ் ஆகும். இதில் எஸ்பிரெசோவின் திரவ அவுன்ஸ் மூலம் தயாரிக்கப்படும் காபியில் உள்ள கலோரியின் அளவு ‘1 கலோரி’ ஆகும். நிலக்கடலையில் இருந்து தயாரிக்கும் காபியில் ‘2 கலோரி’ உள்ளது. காஃபினேட்டட் பீன்ஸினை பயன்படுத்தும் போது அதன் கலோரி அளவு பூஜ்ஜியமாகிறது. எனவே நாம் பூஜ்ஜிய கலோரி கொண்ட காபியினை எடுத்துக் கொள்ளும் போது எளிதாக உடல் எடையை குறைக்கலாம்.

குளோரோஜெனிக் அமிலம் : கருப்பு காபியில் ‘குளோரோஜெனிக்’ என்ற அமிலம் உள்ளது. இது உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது. இது இரவு உணவு அல்லது இரவு உணவிற்குப் பிறகு உடலில் உள்ள குளுக்கோஸ் உற்பத்தியை தாமதப்படுத்துகிறது. மேலும் புதிய கொழுப்பு செல்களின் உருவாக்கத்தையும் குறைக்கிறது.இதனால் உடலுக்கு மிகவும் குறைந்த கலோரி மட்டுமே கிடைக்கும்.

ஃபோர்டிஸ் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் சிம்ரன் சைனி இது பற்றி கூறும் போது, ‘காபியில் உள்ள குளோரோஜெனிக் அமிலம் ஆன்டி ஆக்ஸிடன்ட்டாக செயல்படுகிறது. இது உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. உடல் எடை இழப்புக்கு உதவுகிறது. அதோடு உடலில் இரத்த சர்க்கரை அளவையும் பராமரிக்கிறது.

பசியை கட்டுப்படுத்துவது : காபியின் மூலப்பொருளான “காஃபின்” , இது நம் உடலில் பல்வேறு மாற்றங்களை உண்டாக்குகிறது. இது நமது மூளை மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தை சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது. அதேநேரத்தில் அதிகப்படியான பசியை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இதனால் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

கொழுப்பை குறைக்க : பச்சை காபி பீன்ஸ் ஆனது நம் உடலில் உள்ள கொழுப்புகளை எரிக்க உதவுகிறது. இது உடலில் கொழுப்புகளை எரிக்கும் நொதிகளை அதிகமாக வெளியிட உதவுகிறது. கல்லீரலை சுத்தப்படுத்துகிறது. நம் உடலில் உள்ள தேவையில்லாத கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் மிதமிஞ்சிய கொழுப்புகளை நீக்குகிறது. வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. இதனால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை எரிக்க உதவுகிறது.

நீர் : பிளாக் காபி உடலில் இருந்து அதிகப்படியான நீரை அகற்ற உதவுகிறது. இதனால் எந்த ஆபத்தான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாமல் எடை இழப்புக்கு உதவுகிறது. காபி மூலம் உடல் எடை குறைதல் தற்காலிகமான ஒன்றாகும். காபியை வெறும் பொழுதுபோக்குக்காக மட்டும் குடிக்காமல், இனி உடல்நலத்திற்காகவும், உடல் எடை குறைப்புக்காகவும் குடிக்கலாம்.

பாரதியார் பல்கலை கழகத்தில் பணி ..ரூ.25,000 மாத ஊதியம் – நேர்காணல் மட்டுமே!

January 02, 2023 0

 பாரதியார் பல்கலைக்கழகத்தில் கள ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்பணியை பற்றிய விவரங்களை இப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

பல்கலைக்கழக பணி:

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் அனைத்தும் துரிதமாக பணி நியமனம் செய்யப்பட்டு வருகின்றது. வேலைவாய்ப்பு மிகுந்த மாநிலமாக தமிழகம் திகழ்வதாக மாநில அரசு பெருமிதம் அடைந்துள்ளது. தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளுக்கும் அரசு தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்நிலையில், கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் கள ஒருங்கிணைப்பாளர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கள ஒருங்கிணைப்பாளர் பணிக்கு கலை/சமூக அறிவியல்/மனித நேயம் போன்ற பாடங்களில் முதுகலைப் பட்டமும், நல்ல தொடர்பு திறன் உடையவராகவும் இருக்க வேண்டும். அடிப்படை கணினி அறிவை கொண்டிருக்க வேண்டும். இப்பணிக்கு மாதம் ரூ.20,000 + 5000 ஊதியமாக வழங்கப்படும் என்றும், 1 காலியிடம் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தேர்வுகள் எதுவும் இல்லாமல், நேர்காணல் மூலமே பணியாளர் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு தகுதியானவர்கள் நேர்காணலுக்கு https://b-u.ac.in/ என்ற தளத்தில் இருந்து விண்ணப்பத்தை பெற்று கீழே உள்ள முகவரிக்கு 10.01.2023 காலை 10 மணிக்கு நேரில் செல்ல வேண்டும்.

முகவரி:

Entrepreneurship Development Programme HUB,

Bharathiar University,

Coimbatore – 641 046, Tamil Nadu.


Kotak மகேந்திரா வங்கி வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

January 02, 2023 0
Kotak மகேந்திரா வங்கி வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Credit Manager-AGRI-FIN-PROJECTS (AF) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது கோடக் மகேந்திரா வங்கியில் இருந்து வெளியாகி உள்ளது. இந்த பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மகேந்திரா வங்கி கல்வி தகுதிகள்:

Credit Manager-AGRI-FIN-PROJECTS (AF) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசால் அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBA (Finance)/CA முடித்தவராக இருக்க வேண்டும்.

அனுபவ விவரம் :

இப்பணிக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் பணிசார்ந்த துறையில் 03 வருடங்கள் முதல் 08 வருடங்கள் வரை அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை :

கோடக் மகேந்திரா வங்கி பணிக்கு கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification

Apply Online

Indigo Airlines-ல் காத்திருக்கும் சூப்பர் வேலைவாய்ப்பு – மிஸ் பண்ணிராதீங்க!

January 02, 2023 0

 Indigo Airlines-ல் காத்திருக்கும் சூப்பர் வேலைவாய்ப்பு – மிஸ் பண்ணிராதீங்க!

Director – Cargo பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை Indigo ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


Indigo Airlines காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Director – Cargo பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indigo கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Indigo Airlines வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Indigo முன் அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 15 முதல் 20 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indigo Airlines ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indigo Skills:
  • Good interpersonal and presentation skills
  • Ability to lead large teams
Indigo Airlines தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறார்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாள் முடிவதற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்தபின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 


January 1, 2023

குளிர்காலத்தில் அடிக்கடி சளி பிடிப்பதற்கான 5 காரணங்கள் இவைதான்..!

January 01, 2023 0

 குளிர்காலம் வந்தாலே பல்வேறு நோய்கிருமிகளும் கூடவே வந்துவிடும். குளிர்காலத்தில் நாம் எதிர்பார்க்காத விதமாக நோய்வாய்ப்படுதல், சளி மற்றும் பிற நோய்த்தொற்றுகளின் பாதிப்பும் வந்துவிடுகிறது. அதே போன்று, குளிர் காலத்தில் உடலின் தட்ப வெப்ப நிலை மிகவும் குறைவாக இருக்கும். எனவே, எளிதில் பல நோய்த்தொற்றுகள் நமது உடலை எளிதில் தாக்க கூடும். குறிப்பாக குளிர்காலத்தில் திடீரென நோய்வாய்ப்படும் அபாயத்திற்கு காரணம் என்ன? அதன் பின்னால் பல காரணிகள் இருக்கின்றன. அவற்றை பற்றி இனி பார்க்கலாம்.

வறண்ட குளிர்காலக் காற்று : குளிர்காலத்தில், காற்று மிகவும் வறண்டு, அதில் உள்ள ஈரப்பதம் ஆவியாகிறது, அதாவது வைரஸ் துகள்கள் காற்றில் நீண்ட நேரம் இதனால் இருக்கக்கூடும். குளிர் மற்றும் வறண்ட காற்று ஆஸ்துமா அல்லது சிஓபிடி (நாட்பட்ட நுரையீரல் நோய்) போன்ற நாள்பட்ட சுவாச நிலைகளால் பாதிக்கப்பட்ட மக்களை மேலும் எரிச்சலடையச் செய்யலாம். இது ஜலதோஷம், நிமோனியா அல்லது காய்ச்சல் போன்ற தொற்றுநோய்களையும் மோசமாக்கும்.

தனிப்பட்ட சுகாதாரம் : குளிர் காலத்தில் தனிப்பட்ட நபரின் சுகாதாரத்தை கவனத்தில் கொள்ளல் வேண்டும். இருமல் மற்றும் தும்மலின் போது வாயை மூடிய படி இருப்பது நல்லது. மேலும், உங்கள் கைகளை அவ்வப்போது கழுவவும் அல்லது சுத்தப்படுத்தவும். வெளியில் இருக்கும் போதெல்லாம் முகக்கவசம் அணிந்து, நோய்வாய்ப்பட்டவர்களிடம் இருந்து சமூக இடைவெளியை கடைபிடிக்கவும்

மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை : மன அழுத்தம் மற்றும் மோசமான தூக்கம் உங்கள் மன ஆரோக்கியத்தை மட்டுமல்ல, உங்கள் உடல் நலனையும் கூட பாதிக்கிறது. மன அழுத்தம் உங்கள் மன அமைதியை பாதிக்கலாம். மன அழுத்தம் மற்றும் அமைதியான தூக்கம் இல்லாமல் இருப்பது உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துவதற்கு வழிவகுக்கும். மேலும், இதனால் நீங்கள் ஜலதோஷத்தால் பாதிக்கப்படலாம். பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உங்களை நோய்த்தொற்றுகள் மற்றும் வைரஸ்களை எதிர்த்துப் போராட அனுமதிக்காது.

வீட்டிற்குள் அதிக நேரம் செலவிடுதல் : வெளியில் வெப்பநிலை குறைவாக இருப்பதால், வீட்டிற்குள்ளே அதிக நேரத்தை செலவிடுகிறோம். குளிர் காலத்தில் உட்கார்ந்த நிலையில் அதிக நேரம் நாம் இருப்பதாலும், நமது நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து நோய்வாய்ப்படுத்துகிறது. வீடுகளில் உள்ள தூசி துகள்கள் பொதுவான ஒவ்வாமைக்கு உங்களை ஆளாக்கலாம். மேலும், நீண்ட நேரம் வீட்டில் இருப்பதால், வைரஸ்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவும் வாய்ப்பு அதிகம். சளி, காய்ச்சல் மற்றும் பிற நோய்களின் பாதிப்புக்கும் வழி வகுக்கிறது.

குறைந்த வெப்பநிலை : குளிர்காலத்தில் ஜலதோஷத்தை ஏற்படுத்தும் பல வைரஸ்களில் ரைனோவைரஸ்களும் ஒன்றாகும். இந்த வைரஸ்கள் உடல் வெப்பநிலைக்குக் கீழே உள்ள வெப்பநிலையில் சிறப்பாக உயிர் வாழும். நாம் குளிர்ந்த காற்றை சுவாசிக்கும்போது நமது மூக்கில் உள்ள இரத்த நாளங்கள் சுருங்குவதால், வெள்ளை இரத்த அணுக்கள் நம் மூக்கில் உள்ள சளி சவ்வுகளை அடைவதைத் தடுக்கின்றன. குறைந்த வெப்பநிலை என்பது நோய் கிருமிகளின் பாதிப்புக்கு நம்மை எளிதில் ஆட்படுத்துகிறது.




2023 ஆண்டிற்கான உங்களுடைய ரெசல்யூஷன் என்ன..? இன்னும் பிளான் பண்ணலையா..? இதோ சில யோசனைகள்..!

January 01, 2023 0

 புத்தாண்டு ரெசல்யூசன் என்பது நாம் நம் எதிர்கால பயனுக்காக எடுத்துக்கொள்ளும் உறுதிமொழி அல்லது வாக்குறுதியாகும். புத்தாண்டு ரெசல்யூசன்கள் ஆண்டின் முதல் நாளில் பெரும்பாலான மக்களால் எடுக்கப்படுகின்றன. இந்த தீர்மானங்கள் ஒரு உடற்பயிற்சி இலக்கை அடைவதில் இருந்து ஒரு புதிய விஷயங்களை கற்றுக்கொள்வது அல்லது வாழ்க்கையில் சிறிய இலக்குகளை அடைய முயற்சிப்பது என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான மக்களுக்கு 2022 ஒரு கடினமான ஆண்டாக இருந்தபோதிலும், புத்தாண்டு வருகை அனைவரின் மனதிலும் ஒரு நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, புதிய தீர்மானத்துடன் புதிய ஆண்டின் தொடக்கத்திற்கான நேரம் இது. ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய நீங்கள் தேர்வுசெய்யக்கூடிய புத்தாண்டு தீர்மானங்கள் குறித்த சில யோசனைகள் உங்களுக்காக.

2023ம் ஆண்டிற்கான புத்தாண்டு ரெசல்யூசன் யோசனைகள்:

நீங்கள் உங்களை ஒரு ஃபிட்டான மற்றும் ஆரோக்கியமான நபராக பார்க்க விரும்பினால், இந்த ஆண்டு உங்கள் மன மற்றும் உடல் தகுதி இலக்கை அடைய கீழ்காணும் தீர்மானங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்.

Badminton home workout: 5 exercises by Srikanth Kidambi

* தினமும் 1 மணி நேர ஒர்க்அவுட்.

* உடற்பயிற்சி இலக்கை அடைதல்

* தியான பயிற்சி

* யோகா பயிற்சி

* புதிய உடற்பயிற்சிகளை முயற்சித்தல்

இந்த ஆண்டு நீங்கள் சமையல், தையல் போன்ற எந்தவொரு புது திறமைகளையும் கற்றுக் கொள்ளலாம். பணியிடத்தில் பதவி உயர்வு பெற ஒரு பட்டப்படிப்பில் சேரலாம். உங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த உங்கள் அன்றாட வழக்கத்தில் ஒரு நல்ல பழக்கத்தை வளர்த்துக் கொள்ள நீங்கள் கீழ்காணும் தீர்மானங்களை தேர்வு செய்யலாம்.

Healthy and Eco Lifestyle.happy Indian Woman with Her Husband Making Smoothie in Big Kitchen Stock Photo - Image of blender, male: 162300540

* ஏதேனும் ஒரு திறனைக் வளர்ப்பது.

* மேல்படிப்பு படித்தல்

* சமையல் கற்றுக்கொள்ளுதல்

* நிலையான நடைமுறைகளை கற்றுக்கொள்ளுதல்

* ஒரு நல்ல பழக்கத்தைக் கற்றுக்கொள்ளுதல்

* புதிய மொழியைக் கற்றுக்கொள்ளுதல்

அதுவே, உங்கள் தினசரி வேலைகளில் இருந்து கொஞ்ச நேரத்தை ஒதுக்கி, ஒரு புத்தகத்தைப் படிப்பதில் ஈடுபடுவது, அல்லது தோட்டக்கலை செய்வது அல்லது டைரி எழுதுவது போன்ற விஷயங்களை உங்கள் அன்றாட வழக்கத்தை முறைப்படுத்த உதவும். அந்த வகையில் நீங்கள் கீழ்காணும் சில தீர்மானங்களை எடுத்துக்கொள்ளலாம்.

Make time for your family, it's important for a healthy home | Lifestyle News | English Manorama

* குடும்பத்துடன் நேரம் செலவிடுதல்

* புத்தகம் படித்தல்

* தினமும் காலையில் செய்தித்தாளைப் படித்தல்

* பத்திரிகையை பராமரித்தல்

* தோட்டக்கலையில் ஈடுபடுதல்

உண்மையில், ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துவதற்கு நீங்கள் எடுக்கும் சில ரெசல்யூசன்கள் உங்கள் அன்றாட நடைமுறையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். இவை சிறிய ஆனால் பயனுள்ள நடைமுறைகள். அவை உங்கள் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக மாற்றினால் சிறந்த முடிவுகளைத் தரும்.

The #1 Easiest Drinking Habit for Your Heart, New Study Says — Eat This Not That

* உங்கள் சருமத்தை கண்காணித்து கொள்ளுங்கள்.

* சீக்கிரம் எழுந்திருத்தல்

* ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குதல்.

* உங்கள் பொழுதுபோக்கிற்கு நேரம் ஒதுக்குதல்.

* உடமைகளை சுத்தமாக வைத்திருத்தல்

* அதிக தண்ணீர் குடித்தல்

* ஆரோக்கியமாக உணவுகளை சாப்பிடுதல்

* திரை நேரத்தைக் குறைத்தல்.

வேலை, குறிக்கோள்கள் போன்ற பல்வேறு காரணங்களால் உங்கள் குடுமத்தினரையோ அல்லது அன்புக்குரியவர்களையோ கைவிடும் சூழ்நிலைக்கு நீங்கள் தள்ளப்படலாம். ஆனால் உறவுகளுக்கு நேரம் கொடுப்பதன் மூலம், உங்கள் உணர்ச்சி நல்வாழ்வைப் பேணி, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியும். புகைபிடித்தல், குடிப்பது போன்ற ஏதேனும் பழக்கம் உங்களுக்கு இருந்தால், ஆரோக்கியமான வாழ்க்கை வாழ இந்த ஆண்டு அந்த பழக்கங்களை கைவிட முடிவு செய்யுங்கள்.

What skills are Indians learning for 2021 - The Economic Times

* உங்கள் உறவுக்கு அதிக நேரம் கொடுங்கள்

* உங்கள் வணிகத்தை வளர்க்கவும்

* கெட்ட பழக்கங்கள் / நடைமுறைகளை விட்டு விடுங்கள்

* 2022 ஆம் ஆண்டின் நிறைவு செய்யப்படாத இலக்குகளை அடைய முயற்சி செய்யுங்கள்.

2022ம் ஆண்டு உங்கள் கனவு இடத்திற்கு செல்ல பல்வேறு விஷயங்கள் முட்டுக்கட்டையாக இருந்திருக்கலாம். பயணம் உங்களை உற்சாகப்படுத்துகிறது. அந்த வகையில் நீங்கள் உங்கள் கனவு இலக்குகளை நிறைவேற்றுவதில் இருந்து உங்களைத் தடுத்து நிறுத்திய காரணங்களுக்காக வேலை செய்ய சரியான ஆண்டாக இருக்கும். அதன்படி இந்த தீர்மானங்களை நீங்கள் எடுக்கலாம்.

15 Indian Destinations to Travel Alone | Tour My India

* உங்களுக்கு பிடித்த இடத்திற்கு பயணித்தல்.

* பதவி உயர்வு பெறுதல்.

* உங்கள் கனவு வேலையைப் பெறுதல்.

* யோகா, நடனம் அல்லது இசை தொடர்பான சான்றிதழைப் பெறுதல்.

* நீச்சல் கற்றுக்கொள்ளுதல்

* குதிரை சவாரி கற்றுக்கொள்ளுதல்.

* எடை இழப்பு பயிற்சி செய்தல்.

நீங்கள் எப்போதும் எளிமையான மற்றும் நன்றியுள்ள வாழ்க்கையை வாழ விரும்பினால், இந்த நடைமுறைகளை 2023 முதல் உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றத் தொடங்க வேண்டும்.

* நன்றியுணர்வைப் பயிற்சி செய்தல்.

* சிறிய விஷயங்களுக்கு கூட நன்றி சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்துதல்.

* உணவை கடையில் வாங்கி சாப்பிடுவதை தவிர்த்து வீட்டிலேயே செய்து சாப்பிடுதல்.

* நல்ல சுகாதாரத்தை கடைபிடித்தல்.

அவசர நாட்களில் தேவைகளைப் பூர்த்தி செய்ய உங்கள் வருமானத்தில் சில தொகையை சேமித்து வைத்திருப்பது நல்லது. எடுத்துக்காட்டாக, வேலை இழப்பு உச்சத்தைத் தொடும் போது ஊரடங்கு நாட்களை சமாளிப்பது மிகவும் கடினம். எனவே, உங்கள் சம்பளத்தின் ஒரு பகுதியை சேமிக்க அல்லது முதலீடு செய்ய வேண்டியது அவசியம். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அல்லது பெற்றோருக்கும் சுகாதார காப்பீட்டை வாங்குவது அவசியம். இந்த தீர்மானம் உண்மையில் உங்கள் எதிர்கால நலனுக்காக உதவி செய்யும்.

* 50 சதவீத சம்பளத்தை சேமிப்பது.

* சுகாதார காப்பீடு வாங்குவது.

* பங்குகளில் முதலீடு செய்வது.

இந்த 2023ம் புத்தாண்டு தொடக்கத்தில் மேற்கண்ட தீர்மானங்களை நீங்கள் எடுப்பதன் மூலம் உங்கள் எதிர்கால வாழக்கை நிச்சயம் பயனடையும் என்பதில் பொய்யில்லை. இருப்பினும், புத்தாண்டு தீர்மானங்களை வாய்வழியாக எடுத்துவிட்டு அப்படியே விட்டுவிடாதீர்கள். நீங்கள் எடுத்த காரியத்தை நிறைவேற்ற உங்கள் முழு பங்களிப்பை கொடுப்பது அவசியம். விடாமுயற்சி எப்பொழுதுமே வெற்றி தான் என்பதை மறந்துவிடாமல் உங்களை மெருகேற்றிக்கொள்ள சில வாக்குறுதிகளை எடுத்து வாழ்க்கையில் முன்னேறுங்கள்..

 Click here to join whatsapp group for daily health tip