Search

மலச்சிக்கல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க தினமும் காலை இதை குடிச்சுட்டு வாங்க..!

 காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் நாம் சாப்பிடக்கூடிய உணவுகளில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்களை நமது உடல் உறுப்புகள் மிக எளிதாக உறிஞ்சுவதன் காரணமாக, நமது ஆரோக்கியத்தில் சிறந்த மாற்றத்தை பெறலாம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. வெறும் வயிற்றில் சாப்பிடுவதற்கு ஏராளமான உணவுகள் மற்றும் பானங்கள் பரிந்துரைக்கப்பட்டாலும் உலர் திராட்சை தண்ணீர் பருகுவது நமது ஒட்டு மொத்த ஆரோக்கியத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. எனவே வெறும் வயிற்றில் ஊற வைத்த உலர் திராட்சையை சாப்பிடுவதால் நாம் பெறக்கூடிய பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

கல்லீரலை சுத்தம் செய்கிறது : உலர் திராட்சை தண்ணீர் பருகுவது நமது உடலில் இருக்கக்கூடிய நச்சுக்கள் அனைத்தையும் வெளியேற்ற உதவுகிறது. கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு, ரத்தத்தை சுத்தப்படுத்துவதற்கும் இந்த உலர் திராட்சை தண்ணீர் பேருதவி புரிகிறது.

உடல் எடை குறைக்க உதவுகிறது : தினமும் காலை எழுந்ததும் உலர் திராட்சை தண்ணீர் பருகி வந்தால் உடல் எடையை எளிதாக குறைக்கலாம். அதிகப்படியான ஃபிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் நமக்கு தேவையான ஆற்றலை தருகிறது. அதோடு இதில் ஏராளமான நார்ச்சத்து காணப்படுவதால் நம்மை நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வுடன் இருக்க செய்கிறது. இதன் காரணமாக நமது கலோரி உட்கொள்ளல் குறைக்கப்பட்டு, உடல் எடை குறைய வழி வகுக்கிறது.

புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது : உலர் திராட்சையில் பொதிந்து கிடக்கும் ஆன்டி-ஆக்சிடன்டுகள் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடுகிறது.

புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது : உலர் திராட்சையில் பொதிந்து கிடக்கும் ஆன்டி-ஆக்சிடன்டுகள் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடுகிறது.

இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது : உலர் திராட்சை தண்ணீர் இதயத்தை ஆரோக்கியமாக பராமரிப்பதோடு இரத்த சுத்திகரிப்பானாகவும் செயல்படுகிறது. கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் படிவதை தடுப்பதன் மூலமாக இதயத்தின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்கிறது.

வயிற்றில் உள்ள அமிலத்தை பராமரிக்கிறது  : அசிடிட்டி பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு உலர் திராட்சை தண்ணீர் ஒரு அருமருந்தாக செயல்படுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது  : ஆன்டி-ஆக்சிடன்டுகள் நிறைந்த இந்த உலர் திராட்சை தண்ணீர் நமது நோய் எதிர்ப்பு அமைப்பை வலுபடுத்தி, எந்த விதமான தொற்றுகள் நம்மை நெருங்குவதையும் தடுக்கிறது.

மலச்சிக்கல் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது : தொடர்ந்து உலர் திராட்சை தண்ணீர் குடித்து வருவது நமது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல், வயிற்று உப்புசம், அஜீரணம் போன்ற செரிமான கோளாறுகள் ஏற்படுவதை தடுக்கிறது.

எலும்புகளை வலுப்படுத்துகிறது : உலர் திராட்சையில் காணப்படும் போரான் எலும்புகளின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது. அதோடு உலர் திராட்சையில் கால்சியம் சத்தம் காணப்படுவதால் இது எலும்புகளை வலுவாக்கவும் உதவுகிறது.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது : உலர் திராட்சையில் காணப்படும் பொட்டாசியம் சத்து உடலின் ரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க உதவுகிறது.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

மாரடைப்பு வர என்ன காரணம்? தப்பிக்கும் வழிகள் என்ன? நிபுணரின் விளக்கம்..!

 அண்மைக்காலமாக மாரடைப்பு மற்றும் இருதய நோய்கள் மிகவும் பொதுவானதாகவும், மக்களை அச்சுறுத்துவதாகவும் மாறிவிட்டது. வயதானவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு வரும் என நினைத்துக்கொண்டிருந்த காலம் மலையேறிவிட்டது. மிக இளம் வயதினர் கூட மாரைப்பால் இறந்து வருகின்றனர்.

உடலமைப்பில் கட்டுமஸ்தானவர்கள் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பிற உடல் செயல்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு இதய பாதிப்பு மற்றும் மாரடைப்பு ஏற்படாது என்று பலரும் கருதிக்கொண்டிருக்கிறோம். அந்த எண்ணம் தவறானது. விளையாட்டுத் துறைகளில் இருப்பவர்களும் மாரடைப்பால் இறந்து வருவதை செய்திகளில் நீங்கள் அறிந்திருக்கலாம். ஆரோக்கியமானவர்களாக நீங்கள் நினைப்பவர்களுக்கு இதய நோய் பாதிப்பு இருப்பதைக்கூட பார்த்திருக்க வாய்ப்புகள் உண்டு. இதற்கு காரணம் என்ன? என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக பலருக்கும் இருக்கிறது.

இது குறித்து சர் கங்காராம் மருத்துவமனையின் இன்டர்நேஷ்னல் கார்டியாலஜிஸ்ட் மற்றும் எலக்ட்ரோபிசியாலஜிஸ்ட்டாக இருக்கும் மருத்துவர் டாக்டர் அமன் மகிஜா பேசும்போது, மாரடைப்பு (Heart Attack) மற்றும் திடீர் இதய பாதிப்பு (Cardiac Arrest) என்பது ஒன்றுக்கொன்று மாற்றாக பயன்படுத்தப்படும் வார்த்தைகள் எனத் தெரிவித்துள்ளார். தமனிகளில் ஏற்படும் அடைப்பு காரணமாக ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுவதாக தெரிவித்துள்ள அவர், ஒரு நபருக்கு திடீர் மார்பு வலி, வியர்வை, படபடப்பு மற்றும் பதட்டம் ஆகியவை ஏற்படும் என விளக்கம் அளித்துள்ளார். ஒழுங்கற்ற இதயத்துடிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் இதற்குக் காரணமாக இருக்கிறது என்று டாக்டர் அமன் மகிஜா கூறியுள்ளார்.

இதய நோய்க்கான காரணங்கள்:

இருதய நோய்களுக்கான முதன்மை காரணம் ஆரோக்கியமற்ற, செயலற்ற, சோம்பேறித்தனமான வாழ்க்கை முறை. உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய் ஆபத்து உள்ளவர்கள், எந்த செயல்பாடும் இல்லாத வாழ்க்கை முறையில் இருந்தால் அவர்களுக்கு திடீரென மாரடைப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். புகையிலை, மது, சிகரெட் பழக்கம் உள்ளவர்களுக்கு இதயம் நோய்கள் வருவதற்கு முக்கிய காரணம்.

உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பு ஆகியவையும் இதய நோய்கள் வருவதற்கான காரணங்கள் என கூறும் மருத்துவர்கள், பரம்பரையாக இதய நோய் வருவதற்கும் சாத்தியம் உள்ளதாக கூறுகின்றனர். ஒழுங்கற்ற இதயத்துடிப்பு, அர்ரித்மியா, கரோனரி இதயநோய் உள்ளிட்டவை பிற இதய நோய்களாகும்.

இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வழிகள் :

பரம்பரை இருதய நோய் ஆபத்து இருப்பவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொண்டால் இதய நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.
ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்த வாரத்துக்கு மூன்று அல்லது 4 முறை மிதமான மற்றும் தீவிரமான உடற்பயிற்சிகளை செய்யலாம். குறைந்தபட்சம் 40 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.
குடிப்பழக்கம், புகைபிடித்தல், அதிக நேரம் வேலை செய்தல், சரியான நேரத்தில் தூங்காமல் இருப்பது போன்ற ஆரோக்கியமற்ற பழக்கங்களுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதில் ஏதேனும் ஒன்றை பின்பற்றுபவராக இருந்தால் கூட மன அழுத்தம் ஏற்பட்டு இதய நோய் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்ற வேண்டும். உப்பு மற்றும் சர்க்கரை பயன்பாட்டை சமச்சீராக பயன்படுத்திக் கொள்வது நல்லது.
குறிப்பிட்ட கால இடைவெளியில் இதயம் சார்ந்த முழு உடல் பரிசோதனைகளை செய்து கொள்ளுங்கள். இதன் மூலம் இதயம் உள்ளிட்ட பாதிப்புகளை முன்கூட்டியே கணித்து முன்னெச்சரிக்கையாக இருக்கலாம்.

இதய நோய் பாதிப்பு இருப்பவர்கள் மூச்சுத் திணறல் மற்றும் சோர்வு, தலைவலி, மார்பு வலி போன்ற அறிகுறிகள் வந்தால் அலட்சியமாக இருக்கக்கூடாது. இவை திடீர் மாரடைப்புக்கான அறிகுறியாகவும் இருக்கலாம். இதுகுறித்து மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள்.

கொலஸ்ட்ரால் அதிகமானால் இந்த அறிகுறிகள் தான் முதலில் தெரியும்... லேசுல விட்டுடாதீங்க..!

 ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகமாகும் போது உடலில் எந்த மாதிரியான அறிகுறிகள் தோன்றும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். கொலஸ்ட்ரால் என்றாலே நம் உடலுக்கு கேடு விளைவுக்கும் என்ற ஒரு தவறான கண்ணோட்டம் இருக்கிறது. ஆனால் ஆரோக்கியமான செல்களை உருவாக்க நமது ரத்தத்திற்கு மெழுகு போன்ற ஒரு பொருளான கொலஸ்ட்ரால் அவசியம்.

எனினும், நம் உடலில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் சேர்ந்தால் அது தான் இதய நோய்களை ஏற்படுத்தும். கொலஸ்ட்ரால் என்பது நமது கல்லீரலால் உருவாக்கப்படும் மெழுகு போன்ற கொழுப்பு மாதிரியான ஒரு பொருள். இது வைட்டமின் டி, பல்வேறு ஹார்மோன்கள் மற்றும் செல் சுவர்கள் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. கொலஸ்ட்ரால் நீரில் கரையாது. அதேபோல அதனால் தனித்து உடலில் எங்கும் செல்ல இயலாது.

இன்று உலக அளவில் பலமக்கள் அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். இது மோசமான வாழ்க்கை முறை காரணமாக ஏற்படுகிறது. இதுபோன்ற நிகழ்வுகளில் ஒரு சில குணப்படுத்த கூடியவையாகவும், ஒரு சில தவிர்க்கக் கூடியவையாகவும் உள்ளன. நல்ல உணவு மூலமாகவும், அன்றாடம் உடற்பயிற்சி செய்வதன் மூலமாகவும் அதிக கொலஸ்ட்ராலை எளிதாக குறைக்கலாம்.

எந்த ஒரு நோயையுமே ஆரம்பத்தில் கண்டுபிடிப்பது அதற்கான தீர்வை எளிதாக்கும். ஒரு சிலர் தங்களுக்கு அதிக கொலஸ்ட்ரால் இருப்பது தெரியாமலேயே வாழ்கின்றனர். ஆகவே, அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் என்னென்ன அறிகுறிகள் தென்படும் என்பதை பார்க்கலாம்.

  • கை கால் மரத்து போவது: அதிக கொலஸ்ட்ரால் நரம்பைகளை பாதிப்பதால் கை மற்றும் கால்களில் கூசுவது போன்ற உணர்வு அல்லது மரத்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அதிகப்படியான கொலஸ்ட்ரால் ஒரு பகுதியில் தேங்கும்போது அங்கு ரத்த ஓட்டம் குறைகிறது. இதனால் மரத்து போன உணர்வு உண்டாகிறது.
  • மூச்சு விடுவதில் சிரமம்: அதிக கொலஸ்ட்ரால் உட்பட பல இதய நோய்களுக்குான முக்கிய அறிகுறியாக மூச்சு திணறல் கருதப்படுகிறது. கொலஸ்ட்ரால் தமனிகளில் (arteries) தேங்குவதன் காரணமாக இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைவதால் இந்த மூச்சுத் திணறல் உண்டாகிறது.
  • நெஞ்சு வலி: அதிக கொலஸ்ட்ரால் காரணமாக இதயம் சார்ந்த நோய்கள் உள்ள பெரும்பாலான நபர்கள் நெஞ்சில் ஒருவிதமான அசௌகரியத்தை அனுபவிப்பதாக கூறுகின்றனர். தமனிகளில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் தேங்கி, அங்கு அடைப்புகளை உண்டாக்குகிறது. இதனால் நெஞ்சு வலி ஏற்படுகிறது.
  • சோர்வு: அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதிப்படும் பெரும்பாலான நபர்கள் அதிகப்படியான சோர்வை அனுபவிக்கின்றனர். கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கும் பொழுது தசைகளுக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைவதன் காரணமாகவே இந்த சோர்வு உண்டாகிறது.
  • உயர் ரத்த அழுத்தம்: அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் ரத்த அழுத்தம் அதிகமாகும். தமனிகளில் கொலஸ்ட்ரால் அதிகப்படியாக படியும் பொழுது, ரத்த ஓட்டம் தடைபடுகிறது. இதனால் ரத்தத்தின் அழுத்தம் அதிகமாகிறது.
  • கண்பார்வை சார்ந்த கோளாறுகள்: அதிகப்படியான கொலஸ்ட்ரால் நேரடியாக நமது கண் பார்வையை பாதிக்கக்கூடும். ரத்த தமனிகளில் ஏற்படும் அடைப்புகள் காரணமாக கண்களுக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து கண் சார்ந்த பிரச்சனைகள் உருவாகிறது.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் 5 முக்கியமான பயிற்சிகள்..!

 

நமது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது என்பது நம்முடைய ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் முக்கியமான ஒன்று. உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது என்பது இதய ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிக்க உதவும் ஒரு முக்கிய படியாகும்.

இதய தசையை வலுப்படுத்த, எடையை கட்டுக்குள் வைக்க, மாரடைப்பு அல்லது பக்கவாதத்திற்கு வழிவகுக்கும் ஹை கொலஸ்ட்ரால், உயர் ரத்த சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட சிக்கல்கள் காரணமாக ஏற்படும் தமனி சேதத்தை தடுக்கவும் வழக்கமான உடல் செயல்பாடுகள் மிகவும் பயனுள்ளது.

அந்த வகையில் நம் இதயத்தை வலுப்படுத்த சிறந்த வழி உடற்பயிற்சி. தினசரி உடற்பயிற்சி செய்பவர்களை விட, உடற்பயிற்சி செய்யாதவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள். வாரத்திற்கு குறைந்தபட்சம் 150 நிமிடங்களாவது மிதமான உடற்பயிற்சி செய்ய நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். உங்கள் இதயத்தை வலுவாக மற்றும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் 5 முக்கிய உடற்பயிற்சிகள் இங்கே.

சுறுசுறுப்பான வாக்கிங்: வாக்கிங் என்பது ஒருவர் தனது தினசரி வழக்கத்தில் எளிதாக இணைத்து கொள்ள கூடிய குறைந்த தாக்கம் கொண்ட ஒரு கார்டியோ பயிற்சி ஆகும். நடைபயிற்சி, குறிப்பாக வேக நடைபயிற்சி, உங்கள் இதயத்தை வலுப்படுத்த ஒரு சிறந்த வழியாகும். எனவே இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைப்பவர்கள் வாரத்தில் குறைந்தது 6 நாட்களுக்கு 30 நிமிடங்கள் விறுவிறுப்பான நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

சைக்கிளிங்: சைக்கிள் ஓட்டும் பழக்கம் இதய நோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது. ஏனென்றால் சைக்கிளிங் என்பது இதயத்தை பலப்படுத்தும் ஒரு சிறந்த ஏரோபிக் பயிற்சியாகும். இது இதயத்திற்கான ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. கலோரிகளை எரிக்கவும் ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும் சைக்கிளிங் உதவுகிறது.

நீச்சல்: நீச்சல் பயிற்சி என்பது நம் உடலை மட்டுமல்ல இதயத்தையும் பலப்படுத்த உதவும் சிறந்த முழு உடல் பயிற்சியாகும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைக்கும் அனைத்து வயதினருக்கும் நீச்சல் ஒரு சிறந்த தேர்வாகும்.நீச்சல் பயிற்சியானது இதயத்தை வலிமையாக்குகிறது.

ஏரோபிக் டான்ஸ் அல்லது ஜூம்பா: டான்சிங் செய்வது என்பது வேடிக்கையானது மட்டுமல்ல, நம் இதயத்தை சிறப்பாக செயல்பட தூண்டுவதற்கான சிறந்த வழியாகும். ஏரோபிக் டான்ஸ் அல்லது ஜூம்பா கிளாஸ் நடன அசைவுகளை ஏரோபிக் பயிற்சிகளுடன் இணைத்து செய்வது சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள இதய பயிற்சியாக அமைகிறது.

ஜம்பிங் ரோப்: ஜம்பிங் ரோப் என்பது இதய ஆரோக்கியம், ஸ்டாமினா மற்றும் கோர்டினேஷன் ஆகியவற்றை மேம்படுத்த உதவும் ஹை-இன்டென்சிட்டி கார்டியோவாஸ்குலர் பயிற்சி ஆகும். இது இதய துடிப்பை சீராக வைப்பதோஇதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை கணிசமாகக் குறைக்கும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

பிரஷர் குக்கரில் ஒருபோதும் இந்த உணவுகளை சமைத்துவிடாதீர்கள்..!

 முன்னர் எல்லாம் எதை வேகவைக்க வேண்டும் என்றாலும் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் சமைக்க வேண்டியதை போட்டு சமைத்து வந்தனர்.ஆனால் நவீன சமையலறைகளில் பிரஷர் குக்கர்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. அரிசி, பருப்பு, கிழங்கு  முதல் புலாவ், பிரியாணி வரை, மக்கள் எல்லாவற்றையும் பிரஷர் குக்கரில் செய்கிறோம்.

சுவை மற்றும் ஆரோக்கியத்திற்காகவும் எரிவாயுவை சேமிப்பதற்கும் இந்த சிறந்த சமையல் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பிரஷர் குக்கரில் ஒருபோதும் செய்யக்கூடாத சில உணவுகளும் உள்ளன. அவை என்னென்ன மற்றும் ஏன் என்று நிபுணர்கள் சொல்வதைத் தெரிந்துகொள்வோம்.

வறுத்த உணவுகள்:  அதிக அழுத்தம் மற்றும் சூடான எண்ணெயுடன் தொடர்புடைய டீப் பிரை உணவுகள் சமைக்க பிரஷர் குக்கரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஆழமாக வறுக்க சரியான  வெப்பநிலை கட்டுப்பாடு தேவைப்படுகிறது. பிரஷர் குக்கர் இந்த நோக்கத்திற்காக வடிவமைக்கப்படவில்லை. மீறி பயன்படுத்தினால் அதீத வெப்பம்,  தீக்காயங்கள் மற்றும் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. டீப் பிரை  வாணலி அல்லது பிரத்யேக டீப் பிரையர்கள் பயன்படுத்துங்கள்.

விரைவாக சமைக்கும் காய்கறிகள் : பச்சை பட்டாணி, புடலங்காய், சுரைக்காய் போன்ற காய்கறிகள் மென்மையாகவும் விரைவாகவும் சமைக்கப்படுகின்றன. இந்த காய்கறிகளுக்கு பிரஷர் குக்கரைப் பயன்படுத்தினால், அளவுக்கு அதிகமாக வெந்து அவற்றின் துடிப்பான ஊட்டச்சத்துக்களை இழக்க நேரிடும்.

அதே போல இந்த விதி இலை கீரைகளுக்கும் பொருந்தும்.  சத்துக்கள் எளிதாக வீணாகிவும். கீரைகளின் ஊட்டச்சத்து ஒருமைப்பாட்டைத் தக்கவைக்க, திறந்த பாத்திரங்களில் இலை கீரைகளை வேகவைத்தல் அல்லது வதக்குதல் போன்ற  முறைகளைப் பயன்படுத்தி சமைப்பது சிறந்தது.

முட்டைகள் : பிரஷர் குக்கரில் முழு முட்டைகளை அவற்றின் ஓடுகளோடு சமைப்பது ஆபத்தானது. முட்டைகளுக்குள் சிக்கியுள்ள நீராவி அவற்றை வெடிக்கச் செய்யலாம். மேலும் இது குக்கர் சேதம் ஆவதற்கும் வழிவகுக்கும்.அதனால் தனியாக மூடி உள்ள சாதாரண பாத்திரத்தில் வேக வையுங்கள்

பால் பொருட்கள் : பாலை பொதுவாக அதற்காக வைத்திருக்கும் பாத்திரம் அல்லது பால் குக்கரில் தான் சூடு செய்வோம். இருந்தாலும் பாயசம், கிரேவி போன்று எதை செய்யும்போதும் பாலை பிரஸர் குக்கரில் சேர்த்து வேக வைத்துவிட கூடாது. அதிக அழுத்தம் மற்றும் வெப்பநிலைக்கு வெளிப்படும் போது, ​​பால் அல்லது கிரீம் போன்ற பால் பொருட்கள் திரிந்துவிடும். இது உங்கள் உணவுகளில் விரும்பத்தகாத சுவைகளை ஏற்படுத்தும். பிரஷர் குக்கரில்-சமையல் செயல்முறை முடிந்ததும் பால் பொருட்களைச் சேர்ப்பது நல்லது.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

மழைக்கால தொற்றிலிருந்து உங்கள் கண்களை பாதுகாக்க உதவும் எளிய வீட்டு வைத்தியங்கள்.!

 மழைக்காலம் வந்துவிட்டாலே நோய்களும் தொற்றுகளும் படையெடுத்து வந்துவிடும். ஈரப்பதமான யும் அங்கங்கே தேங்கி நிற்கும் நீரும் பல நோய்கள் பரவ காரணமாகின்றன. இதனால் மழைக்காலங்களில் வழக்கத்தை விட நம் உடல்நிலை பல பிரச்சனைகளை சந்திக்கிறது. பொதுவாக இந்த சமயங்களில் கண்களில் வெண்படல அழற்சி ஏற்படுகிறது. இதனை “மெட்ராஸ் ஐ” என்றும் கூறுவார்கள். இதனால் உங்கள் கண்கள் சிவந்து, கடுமையான எரிச்சல் உண்டாகும். எளிதில் தொற்றக் கூடிய இதனை, வீட்டு வைத்தியத்தின் மூலமே குணப்படுத்தலாம். இதில் சரியாகாவிட்டால், நீங்கள் கண் மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

தேன் : தேனில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறையவே உள்ளது. ஆகையால் கண்களில் ஏற்படும் தொற்றை சீராக்க தேனை தாராளமாக பயன்படுத்தலாம். அதற்கு என்ன செய்ய வேண்டுமென்றால், ஒரு கிளாஸ் தண்ணீரில் இரண்டு டேபிள் ஸ்பூன் தேனை சேர்த்து, அந்த தண்ணீரால் உங்கள் கண்களை கழுவுங்கள். இப்படிச் செய்வதால் கண்களில் ஏற்படக் கூடிய வலி மற்றும் எரிச்சலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

ரோஸ் வாட்டர் : கண்களில் ஏற்படும் தொற்றை குணப்படுத்த ரோஸ் வாட்டர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதுவொரு கிருமிநாசினியாகும். மேலும் இதில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் இருப்பதால், பாக்டீரியாவால் ஏற்படும் தொற்றை சீராக்க ரோஸ் வாட்டர் பெரிதும் உதவுகிறது. இது நம் கண்களை சுத்தப்படுத்துவதோடு குளிர்விக்கவும் செய்கிறது. ஒவ்வொரு கண்ணிலும் இரண்டு துளி டோஸ் வாட்டரை இடுங்கள். ஒரு நிமிடத்திற்கு உங்கள் கண்களை அப்படியே மூடி வைத்திருங்கள். இப்படிச் செய்வதால் வலி மற்றும் எரிச்சலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

உருளைக் கிழங்கு : உருளைக் கிழங்கு குளிர்ச்சித்தன்மை கொண்டது. கண்களில் ஏற்படும் எரிச்சலை இது குறைக்கிறது. உருளைக் கிழங்கில் உள்ள பண்புகள் நம் கண்களில் தொற்று ஏற்படாமல் காக்கிறது. மெல்லிய துண்டுகளாக உருளைக் கிழங்கை வெட்டிக் கொள்ளுங்கள். அதை இரவு தூங்குவதற்கு முன் உங்கள் கண்களின் மேல் வையுங்கள். 10 அல்லது 15 நிமிடங்கள் கழித்து எடுத்துவிடுங்கள். கண்களில் ஏற்படும் வலி மற்றும் வீக்கம் இதனால் குறையும்.

துளசி : துளசியில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்டும், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் உள்ளது. கண்களில் ஏற்படும் வலி மற்றும் எரிச்சலை துளசி குறைக்க உதவுகிறது. ஒரு கிளாஸ் தண்ணீரில் கொஞ்சம் துளசியை எடுத்து இரவு நேரத்தில் ஊற வையுங்கள். அடுத்த நாள் காலையில் அந்த நீரை பயன்படுத்தி, உங்கள் கண்களை சுத்தம் செய்யுங்கள். இப்படியே தொடர்ந்து 3-4 நாட்கள் செய்தால், கண் வலி குறையத் தொடங்கும்.

மஞ்சள்: இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளால், மஞ்சளில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. ஆனால் மஞ்சள், கண் எரிச்சலை குணப்படுத்துமா என பலரும் ஆச்சர்யப்படுவீர்கள். ஒரு கிளாஸ் மிதமான சுடு தண்ணீரில் கொஞ்சம் மஞ்சள் தூளை போட்டு, அதை நன்றாக கிளருங்கள். இப்போது சிறிய காட்டன் பஞ்சை எடுத்து, அதை இந்த மஞ்சள் நீரில் நனைத்து, உங்கள் கண்களை சுத்தப்படுத்துங்கள். இப்படிச் செய்வதால், உங்கள் கண்களில் இருக்கக்கூடிய அழுக்குகள் அகன்று, தொற்று ஏற்படுவதை தடுக்கும்.

க்ரீன் டீ பேக்ஸ் : இதில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளது. ஆகையால் கண்களின் வீக்கத்தையும் வலியையும் இது குறைக்கிறது. மிதமான சுடு தண்ணீரில், க்ரீன் டீ பையை நனைத்து, அதை உங்கள் இரண்டு கண்களின் மேல் வைத்துக் கொள்ளுங்கள். இந்த க்ரீன் டீ பைகளை ஃபிரிட்ஜில் வைத்தும் பயன்படுத்தலாம்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

வெறும் வயிற்றில் தவறி கூட இந்த நான்கு உணவுகளை சாப்பிட்டு விடாதீர்கள்..!

 நாள்பட்ட நோய்கள் பலவற்றிற்கு செரிமானமே மூல காரணம் என்று  கூறப்படுகிறது. உன் வயிற்றின் ஆரோக்கியம் தான் உன் வாழ்க்கை ஆரோக்கியத்தை நிர்ணயிக்கும் என்று சொல்வதை கூட கேட்டிருப்போம். வயிற்றின் ஆரோக்கியம் என்பது சரியான செரிமானம்,  வயிற்றின் ஆமிலத்தன்மை, குடல் ஆரோக்கியம் என அனைத்தையும் குறிக்கும்.

சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, இது நமக்கு வயிற்று பிரச்சனைகள் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, நம்மில் பெரும்பாலோர் நம் நாளை தவறான வழியில் தொடங்குவதாகும். நாம் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நமது ஆரோக்கியத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். வெறும் வயிற்றில் நாம் அறியாமல் பலவற்றை உட்கொள்கிறோம், இது செரிமான செயல்முறையை தீவிரமாக பாதிக்கும். இதனால் நாள் முழுவதும் வயிற்றுப் பிரச்சனைகள் மற்றும் சோர்வு ஏற்படுகிறது.

இப்போது, ​​காலையில் வெறும் வயிற்றில் என்ன சாப்பிட வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. சத்தான மற்றும் உடலில் நீரேற்றத்தை ஊக்குவிக்கும் சூடான உணவுகளை காலையில் உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது என்று சுகாதார நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

காலையில் நமது செரிமான அமைப்பு பலவீனமாக இருப்பதே இதற்குக் காரணம். எனவே நீங்கள் குளிர்ச்சியான மற்றும் செரிக்க சிரமமாக இருக்கும் உணவுகளை உட்கொண்டால், அவை செரிமானம் ஆக அதிக நேரம் எடுக்கும். இது வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதோடு உடலை சோர்வடைய செய்யும். எனவே காளையின் வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத உணவுகளை சொல்கிறோம்.

உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க பொதுவாக உட்கொள்ளப்படும் பானங்களில் எலுமிச்சை நீரும் ஒன்று. உடல் எடையைக் குறைக்க மக்கள் இதை அதிகம் உட்கொள்கிறார்கள். ஆனால் இந்த பானம் அமிலத்தன்மை கொண்டது என்பது அவர்களுக்குத் தெரியாது. இதை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால், வயிற்றில் இருக்கும் அமிலத்தோடு சிட்ரிக் அமிலம் சேர்ந்து செரிமானக் கோளாறுகள் ஏற்படும்.

புரோட்டீன் உடலுக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்து, ஆனால் அதை ஜீரணிக்க நமது செரிமான அமைப்பு கடினமாக உழைக்க வேண்டும். அதிக நேரமும் எடுக்கும். வெறும் வயிற்றில் புரதத்தை உட்கொள்வது மேலும் உங்களை பலவீனப்படுத்தும். வயிற்றில் வாயு, வீக்கம், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். வெறும் வற்றில் சமிடுவதை தவிர்த்து காலை மற்றும் மதிய உணவில் நல்ல புரதச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.

எலுமிச்சை நீரில் தேன் கலந்து குடித்தால் அது கொழுப்பை எரிக்க உதவும் என்று நம்பி பலர் குடிக்கின்றனர். ஆனால் தேனில் அதிக கலோரிகள் உள்ளன மற்றும் சர்க்கரையை விட கிளைசெமிக் குறியீட்டில் அதிகமாக உள்ளது. அதோடு தூய தேனைக் கண்டுபிடிப்பது கடினம் மற்றும் பெரும்பாலானவர்கள் தேன் என்ற பெயரில் சர்க்கரை  பாகை சாப்பிடுகிறார்கள். இது உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து பாதிப்பை தான் ஏற்படுத்தும்.

பலர் காலையில் ஜூஸ்கள், ஷேக்ஸ் மற்றும் ஸ்மூத்திகள் போன்ற பானங்களை உட்கொள்வதால், உடலை நச்சுத்தன்மையை நீக்க முயல்கிறார்கள். ஆனால் அவை குளிர்ச்சியாக இருப்பதால், அது நமது செரிமானத்திற்கு நல்லதல்ல. அவை செரிமான நெருப்பை மெதுவாக்கும் மற்றும் வளர்சிதை மாற்ற விகிதத்தையும் பாதிக்கின்றன. இதனுடன், உடலில் கப தோஷம் அதிகரிக்கிறது. இது தவிர சளி, இருமல் போன்றவற்றையும் உண்டாக்கும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

உடல் எடையை குறைத்த பின்பு அதை தக்க வைத்துக்கொள்ள நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

 

குறைத்த உடல் எடையை, அதன் பிறகு தக்கவைத்துகொள்வது தான் சவாலாக பார்க்கப்படுகிறது. அதை சாத்தியப்படுத்துவது எப்படி?

வருடத்திற்கு நான்கு சீசன்கள் போல உடல் எடை குறைப்புக்கும் சீசன்கள் உண்டு எனலாம். திடிரென்று உடல் எடை மீது கவனம் செலுத்தி அதை அதிவேகமாக குறைப்பவர்கள், அதனை தக்கவைத்துகொள்ள தவறிவிடுவார்கள். குறிப்பாக குறிப்பிட்ட சில முறைகளில் உடல் எடையை குறைப்போர் ஒரே ஆண்டில் மீண்டும் அதில் 30-35 சதவீதம் அளவிற்கு பருமன் அடைந்துவிடுகிறார்கள்.

இதற்கு பல காரணங்கள் உண்டு. உடல் எடையை குறைக்கும் போது ஒரு நாளைக்கு உத்தேசமாக 800 முதல் 1200 கலோரிகள் வரை என கணக்கிட்டு உட்கொள்பவர்கள். உடல் எடை குறைந்த பின் தங்கள் பழைய உணவுமுறைக்கு மாறுவது தான் உடல் எடை மீண்டும் அதிகரிப்பதற்கு முதல் காரணம். இரண்டாவது உடல் எடை குறைக்கும் போது நாம் செய்யும் மெனக்கெடல்கள் தற்காலிகமானது என்று தவறாக எண்ணுவது. மூன்றாவது அன்றாட உணவுகளை முற்றிலுமாக தவிர்த்து உடல் எடையை குறைப்போர் அது நீண்ட காலத்திற்கு பின்பற்ற முடியாத ஒரு பழக்கம் என்பதை உணர்வதில்லை.

சரி, இனி குறைத்த எடையை எப்படி பராமறிப்பது என்பதை பார்க்கலாம். முதலாவதாக உடல் எடை மேலாண்மையை நம் வாழ்நாள் முழுக்க பின்பற்ற வேண்டும் என்பதை நாம் உணர வேண்டும். ஒருவேளை அதிலிருந்து தவறும்பட்சங்களில், மீண்டும் மேலாண்மையை பின்பற்ற திட்டமிட்டு தொடங்க வேண்டும்.

உதாரணத்திற்கு வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மட்டும் அதிக உணவு உட்கொண்டால், அந்த வாரம் முழுவதும் அதிக உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். வெளியில் ஹோட்டல்களில் சாப்பிடும் போதோ அல்லது விழாக்களில் பங்கேற்று சாப்பிடும் போதோ குறைந்த கலோரிகளை கொண்ட உணவுகளை தேடி சாப்பிடுங்கள்.

நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க விட்டமின் சி அதிகமுள்ள உணவு வகைகளை பெரும்பாலும் எடுத்துக் கொள்ளலாம். விட்டமின் சி நிறைந்த எலுமிச்சை, ஆரஞ்சு, பப்பாளி, முளைகட்டிய பயறு வகைகள் ஆகியவற்றை அதிக அளவில் எடுத்துக் கொள்ளலாம்.

மேலும், இரவு உணவிற்கும், தூக்கத்திற்கும் இடைவெளி கொடுப்பது, இரவு உணவுக்குப் பின் நடைபயிற்சி செய்வது உள்ளிட்ட நல்ல பழக்கங்களை பின்பற்ற வேண்டும். சுறுசுறுப்பாக இருத்தல் அவசியம். மிதிவண்டி பயன்படுத்துவது பலன் தரும்.  குறிப்பாக உடல் எடையை பராமரிக்க ஒரு வாரத்தில் குறைந்தது 250 நிமிடங்களாவது உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இவற்றை பின்பற்றினால் நீங்கள் விரும்பும் படி உங்கள் உடல் எடையை பராமரித்துக்கொள்ளலாம்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

சென்னை ஐ.ஐ.டி வேலை வாய்ப்பு; இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிங்க!

 சென்னையில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (ஐ.ஐ.டி) இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 14.08.2023

Project Associate / Research Fellow

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: B.Tech/ M.Tech in Mechanical/ Chemical/ Aerospace Engineering படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 30,000 – 35,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://icandsr.iitm.ac.in/recruitment/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 14.08.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://icandsr.iitm.ac.in/recruitment/admin/uploads/announce/Announcement%20for%20the%20post%20of%20Project%20Associate%20or%20Research%20Fellow%20-%20Advt137..pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

இந்தியன் வங்கி இலவச பயிற்சி; 8-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிங்க!

 துரித உணவு தயாரிக்கும் இலவச பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி குயவர்பாளையம், லெனின் வீதியில் இயங்கி வரும் இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம், துரித உணவு தயாரிப்பு பற்றி இலவச பயிற்சி வழங்க உள்ளது.

அதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 8 ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். பயிற்சி வரும் 10 ஆம் தேதி துவங்குகிறது.

பயிற்சியில் 18 முதல் 45 வயதிற்கு உட்பட்ட, 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் பங்கேற்கலாம். 10 நாள் பயிற்சி அளிக்கப்படும். 90 சதவீதம் செய்முறை பயிற்சி. கிராமப் பகுதியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இவ்வாறு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


IBPS PO 2023; வங்கிகளில் 3049 அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்கள்; டிகிரி முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

 வங்கி வேலை வேண்டும் என நினைப்பவர்களுக்கு அருமையான வாய்ப்பு. பட்டப்படிப்பு முடித்தவர்கள் பொதுத்துறை வங்கிகளில் அசிஸ்டெண்ட் மேனேஜர் ஆகலாம். விருப்பமுள்ளவர்கள் வங்கி பணியாளர் தேவாணையம் (IBPS) வெளியிட்டு இருக்கும் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளுக்கான ஆட்சேர்ப்பு பணியினை IBPS அமைப்பு மேற்கொண்டு வருகிறது. இந்த அமைப்பு கனரா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷ்னல் வங்கி, பஞ்சாப் & சிந்து வங்கி, யூகோ வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறைகளை மேற்கொள்கிறது. இதில் தற்போது ப்ரோபேசனரி ஆபிஸர் (PROBATIONARY OFFICERS) அல்லது அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 3,049 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

PROBATIONARY OFFICERS/MANAGER TRAINEE

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 3,049

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 01.08.2023 அன்று 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும், SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை:

இத முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகள் உண்டு. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வுகள் அனைத்தும் கணினி வழி தேர்வுகளாக மட்டுமே நடைபெறும். எழுத்துத் தேர்வு கிடையாது.

முதல்நிலைத் தேர்வு:

முதல்நிலைத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம் (English language), திறனறிதல் (Reasoning ability) மற்றும் கணிதத்தில் (Numerical ability) இருந்து 100 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவு ஒவ்வொரு பகுதிக்கும் 20 நிமிடங்கள் என மொத்தம் 1 மணி நேரம். முதல்நிலைத் தேர்வு தகுதித் தேர்வு மட்டுமே. முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறுவோர் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இந்த முதல்நிலைத் தேர்வுகள் வருகின்ற அக்டோபர் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முதன்மைத் தேர்வு:

முதன்மைத் தேர்வு இரு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதியில் கொள் குறி வகை வினாக்கள் அடங்கிய தேர்வு 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம் (35), திறனறிதல் (45), கணிதம் (35) மற்றும் பொது அறிவு அல்லது வங்கி தொடர்பான கேள்விகள் (General/ Financial/Banking Awareness) (40) என மொத்தம் 155 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவு 3 மணி நேரம்.

அதனைத் தொடர்ந்து, இரண்டாம் பகுதியான விரிவாக எழுதுதல் தேர்வு நடைபெறும். இதில் கட்டுரை அல்லது கடிதல் எழுதுதல் தொடர்பாக இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். 50 மதிப்பெண்களுக்கு இந்த தேர்வு நடைபெறும். இதற்கான கால அளவு 30 நிமிடங்கள். இந்த முதன்மைத் தேர்வுகள் நவம்பர் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நேர்முகத் தேர்வு

முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வு 2024 ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு இறுதி தேர்ச்சிப் பட்டியல் வெளியிடப்பட்டு, காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு https://ibps.in/ அல்லது https://ibpsonline.ibps.in/crppo13jun23/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்

இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.850. SC/ST, PWD பிரிவுகளுக்கு ரூ.175.

விண்ணப்பிக்க கடைசி தேதி 21.08.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.ibps.in/wp-content/uploads/Detailed_Notification_CRP_PO_XIII.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

நைட் ஷிஃப்ட் வேலை செய்வது நல்லதா..? என்னென்ன விளைவுகளை உண்டாக்கும்..?

 காலை 9 மணிக்கு தொடங்கி 5 மணிக்கு முடியும் அலுவலக பணி நிமித்த வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை. ஒட்டுமொத்த உலகமும் பணி நிமித்தமாக 24 மணி நேரமும் சுழன்று கொண்டிருக்கும் நிலையில் அவரவர்க்கு கிடைத்த மற்றும் விரும்பிய நேரங்களில் பணி செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இரவெல்லாம் தூங்காமல் கண் விழித்து காத்திருக்கும் ஆந்தையைப் போல இரவு பணி செய்வதையே சௌகரியமானதாக சிலர் கருதுகின்றனர். அதே சமயம் அதிகாலையில் எழுந்து கீச், கீச் என்று ரீங்காரமிடும் குருவிகளைப் போல காலைப் பொழுதில் வேலை செய்வதை சிலர் விரும்புகின்றனர். இரவில் நிலவும் சத்தமின்றி நீடிக்கும் அமைதியை பயன்படுத்திக் கொண்டு சிறப்பான பணித்திறனை ஒரு சாரர் வெளிப்படுத்துகின்றனர். புத்தாக்க சிந்தனையும், எச்சரிக்கை உணர்வும் இரவு நேரங்களில் மேலோங்கி நிற்பதாக அவர்கள் கூறுகின்றனர். அதேசமயம் அதிகாலையில் எழுந்து பணி செய்யும் போது நமக்கான ஒழுக்கம் அதிகரிக்கிறது என்றும், தூக்க அனுபவங்கள் சிறப்பாக அமைகிறது என்றும் மற்றொரு சாரார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தூக்கத்திற்கான மருத்துவ துறை மூத்த நிபுணர் Navneet Sood அவர்களிடம் கேட்டபோது, “இரவில் ஆந்தையைப் போல வேலை செய்வதா அல்லது காலையில் குருவியை போல வேலை செய்வதா என்பது ஒவ்வொரு தனி நபரின் விருப்பம் மற்றும் அவர்களது வாழ்வியல் தேவையை பொறுத்து அமைகின்றது. மேலும் அவரவர் ஜெனிடிக்ஸை பொருத்தும் இந்த விஷயம் இருக்கும் என்றும் குறிப்பிட்டார். இரவில் பணி செய்பவர்களின் செயல் திறன் என்பது மாலை நேரங்களில் மிகக் கூடுதலாக இருக்கும். அதேசமயம் காலையில் வேலை செய்பவர்கள் விறுவிறுப்பாகவும், சுறுசுறுப்பாகவும் வேலை செய்வார்கள்”. என்று தெரிவித்தார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த மூத்த மருத்துவ நிபுணர் ஹரி கிஷன், மேற்கண்ட இதய கருத்துக்களை ஆமோதித்தார். அதேசமயம் இரவு பணி மற்றும் அதிகாலைப் பணி ஆகிய இரண்டிலும் அறிவியல் ரீதியாக சில பலன்களும், பாதக அம்சங்களும் இருக்கின்றன என்று அவர் குறிப்பிட்டார். இரவில் வெகு நேரம் கண் விழித்து வேலை செய்பவர்களுக்கு, அதிகாலையில் எழுவது என்பது மிக சிரமமான காரியமாக உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார். இதேபோல காலைப் பொழுதில் விறுவிறுப்பாக வேலை செய்பவர்கள் இரவில் வெகு முன்னதாகவே தூங்கச் சென்று விடுகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

நாம் செய்யும் வேலையைப் பொறுத்து இரவு பணி அல்லது காலை நேர பணி என்பது அமைந்தாலும், நம் உடல்வாகு எந்த பணி நிமித்தத்தோடு ஒத்துப் போகிறது என்பதனை பொறுத்து நமக்கான வேலையை தேர்வு செய்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். எந்த வேலையை செய்தாலும் நம் உடலுக்கு போதுமான அளவு தூக்கத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

ஆயுளை குறைக்கும் கெட்ட பழக்கங்களில் இருந்து எளிதாக வெளியேற உதவும் டிப்ஸ்!

 "நமது எதிர்காலத்தை நம்மால் மாற்றியமைக்க முடியாமல் போய்விட்டாலும், எதிர்காலத்தை பாதிக்க கூடிய ஒரு சில பழக்கங்களை நிச்சயமாக நம்மால் மாற்ற முடியும்." இதனை கூறியவர் நமது முன்னாள் குடியரசு தலைவரான உயர்திரு டாக்டர் அப்துல் கலாம் ஐயா அவர்கள். நம்மை அறியாமலேயே நாம் பின்பற்றி வரும் ஒரு சில கெட்ட பழக்கங்கள் குறித்தும், அவற்றிலிருந்து எவ்வாறு மீண்டு வருவது என்பது பற்றியும் சில குறிப்புகளை இப்பொழுது பார்க்கலாம்.

மோசமான தூக்க பழக்கம் : பெரியவர்கள் தினமும் 6 முதல் 8 மணி நேரம் தரமான இரவு தூக்கத்தை பெறுவது அவசியமாக கருதப்படுகிறது. போதுமான அளவு தூங்காமல் இருப்பது நமது மன ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய மனநிலை மாற்றங்கள், எரிச்சல், கவனிப்பதில் சிக்கல் மற்றும் ஞாபகத்திறன் குறைதல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல், உடல் ரீதியாக இது உடல்பருமன், நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் போன்றவற்றையும் ஏற்படுத்தலாம். மேலும் தரமான தூக்கம் கிடைக்காமல் போகும் பொழுது அது ஒரு சில புற்று நோய்களை கூட உண்டாக்கலாம். இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் நாம் அலட்சியமாக படுக்கையறையில் நிம்மதியாக தூங்குவதை விட்டுவிட்டு, மொபைல் ஃபோனை நோண்டுவது, டிவி பார்ப்பது, கேம் விளையாடுவது போன்றவற்றை செய்கிறோம்.

எனவே தினமும் போதுமான நேரம் தூங்குகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். படுக்கைக்கு சென்ற பிறகும் தூக்கம் வரவில்லை என்றால், தியானம் செய்வது அல்லது மூச்சு பயிற்சிகள் செய்வது போன்றவற்றை நீங்கள் முயற்சி செய்யலாம். தினமும் ஒரே நேரத்தில் படுக்கைக்கு செல்வதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். படுக்கைக்கு செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பிலிருந்து காஃபின் சேர்க்கப்பட்ட பானங்கள் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். ஏனெனில் இது தூக்கத்தை சீர்குலைக்கலாம்.

புகையிலையை தவிர்க்கவும் : எந்த வடிவத்திலும் புகையிலை எடுத்துக் கொள்ளக் கூடாது. புகைப்பிடித்தல், வெற்றிலை பாக்குடன் புகையிலை சேர்த்து சாப்பிடுவது அல்லது மூக்குப்பொடி, ஹான்ஸ் போன்ற எந்த ஒரு வடிவிலும் புகையிலேயே எடுத்துக் கொள்ளாதீர்கள். இந்த பழக்கத்தில் இருந்து உங்களால் விடுபட முடியவில்லை என்றால், தகுந்த சிறப்பு நிபுணர்களை அணுகி அதில் இருந்து விலகி இருக்க தேவையான சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளுங்கள்.

தவறான உணவு பழக்கம் : நம்மில் பெரும்பாலானோருக்கு இந்த பழக்கம் உண்டு. பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிக அளவில் சாப்பிடுவது, கண்ட நேரத்தில் உணவு சாப்பிடுவது, நடு இரவில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவது, அதிகப்படியான காஃபின் எடுத்துக் கொள்வது போன்ற பழக்கங்களை கைவிடுங்கள். இதனால் உடற்பருமன், நீரிழிவு நோய், ஹைப்பர் டென்ஷன் மற்றும் இதய நோய் ஏற்படுவது தவிர இந்த கெட்ட உணவு பழக்கங்களால் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயமும் அதிகரிக்கிறது. நீங்கள் சாப்பிடும் உணவில் போதுமான அளவு நார்ச்சத்து இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சிவப்பு இறைச்சிகளை குறைந்த அளவில் சாப்பிடவும். முடிந்த அளவு வெள்ளை சர்க்கரை சேர்ப்பதை தவிர்க்கவும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் பருகுங்கள். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான உணவு பழக்கங்களை பின்பற்றுங்கள்.

மது அருந்தும் பழக்கத்தை கைவிடுங்கள் : மதுப்பழக்கத்திற்கு அடிமை ஆவதால் ஏராளமான பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். மிதமான அளவு மது அருந்தினால் உடலுக்கு கேடு விளைவிக்காது என்றாலும், வழக்கமான முறையில் மது அருந்துவது ஒருவரை காலப்போக்கில் அதிகப்படியான மது அருந்த தூண்டலாம். மது அருந்துவது கல்லீரலை மிக மோசமாக பாதித்து புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். இது உங்கள் ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல் உங்கள் குடும்பத்தின் நிம்மதியையும் சீர்குலைத்து விடும் என்பதை மனதில் கொண்டு செயல்படுங்கள்.

சோம்பேறித்தனத்தை தூரவிரட்டுங்கள் : நமது முன்னோர்களை ஒப்பிடும் பொழுது நமது வாழ்க்கை அதிக அளவில் சோம்பேறித்தனமான வாழ்க்கையாக மாறிவிட்டதை நம்மால் உணர முடிகிறது. உட்கார்ந்தபடியே வேலை பார்ப்பது, அதிக நேரம் டிவி அல்லது கேட்ஜெட்டுகளில் செலவிடுவது போன்ற நாம் தினந்தோறும் செய்யக்கூடிய அனைத்தும் நமது உடல் ஆரோக்கியத்தை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறது. ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை 5 முதல் 10 நிமிடம் பிரேக் எடுத்துக்கொண்டு, சிறிய தூரம் நடப்பது, கை கால்களை அசைப்பது போன்றவற்றை செய்யுங்கள். பின்னர் தினமும் ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்கு எந்த ஒரு சாதனங்களையும் பயன்படுத்தாமல் இயற்கையோடு நேரத்தை செலவழியுங்கள். உடலில் இருந்து வியர்வை வெளியேறும் அளவு விளையாடுவது அல்லது உடற்பயிற்சி செய்வது போன்றவற்றை செய்யுங்கள். இவ்வாறு செய்வது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தி உங்கள் ஆயுளை அதிகரிக்கும்.

கெட்ட பழக்கங்களை நாம் எளிதாக கற்றுக் கொள்ளலாம். ஆனால் அதிலிருந்து வெளிவருவது சாதாரண காரியம் அல்ல. எனினும், அவ்வாறு செய்துவிட்டால் நமது எதிர்காலத்தை சிறப்பானதாக மாற்றிக் கொள்ளலாம். மேலே சொல்லப்பட்ட கெட்ட பழக்கங்களில் ஏதேனும் ஒன்று உங்களிடம் இருந்தால் கூட இன்றே அதனை கைவிடுவதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள். உங்கள் உடலையும், வாழ்க்கையையும் கவனித்துக் கொள்வது உங்கள் பொறுப்பு என்பதை மறந்து விடாதீர்கள்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

மாவட்ட சமூக ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை: பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்

 chennai Job Alerts: வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடனடி சேவை புரியும் நோக்கத்துடன் ஒருங்கிணைந்த சேவை மையம்(OSC) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சமூக நல அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


காலிப்பணியிடங்கள் விவரம்:

பதவி - வழக்குப் பணியாளர் (Case Worker); காலிப்பணியிடங்கள்- 3

சமூகப் பணியில் இளங்கலை பட்டம் (Bachelor's Degree in Social Work) பெற்றிருக்க வேண்டும்.

உளவியல் ஆலோசகர்(Counselling Psychology) (அல்லது) மேலாண்மை வளர்ச்சியில் (Development Management) பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் 1 வருட முன் அனுபவம் உடையவராகவும்,

உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப் பணிகளிலோ குறைந்த பட்சம் 1 வருட அனுவபம் உடையவராகவும் இருக்க வேண்டும்.

வயது 35க்குள் இருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ.15,000/ஆகும்.

பதவி: பன்முக உதவியாளர் (Multi Purpose Helper) காலிப்பணியிடம் - 1

8ம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.

ஏதாவது அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.6,400/- ஆகும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பங்கள் பூர்த்திசெய்யப்பட்ட தொடர்புடைய இணைப்புகள்/ஆவணங்களுடன் முறையாகச் சான்றொப்பமிடப்பட்டுஆகஸ்ட்  8 அன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் . விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி, மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 8வது தளம், சிங்காரவேலன் மாளிகை, இராஜாஜி சாலை, சென்னை-01  ஆகும் .

விண்ணப்ப படிவம் : APPLICATION FORM OSC.(PDF23KB)

மேற்கண்ட தேதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் சுருக்கமாக நிராகரிக்கப்படும். விண்ணப்பத்துடன் அசல் சான்றிதழ்களை அனுப்பக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

வேளாண்மை தொழில் தொடங்க 50 சதவீதம் மானியம்..! திருவாரூர் ஆட்சியர் அறிவிப்பு..!

 திருவாரூர் மாவட்டத்தில் வேளாண்மை தொழில் தொடங்க 50 சதவீதம் மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள அறிக்கையில், “இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்குதல் திட்டம் தொடர்பாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்குதல் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இந்த திட்டத்தில் வேளாண்மை/தோட்டக்கலை/வேளாண் பொறியியல் துறையில் குறைந்தபட்சம் இளநிலை பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் வேளாண் சார்ந்த தொழில்கள் துவங்கிட ஊக்கப்படுத்தும் வகையில் 50 சதவீத மானியம் அல்லது அதிகபட்சமாக 1 லட்சம் வழங்கிடும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி உணவு பதப்படுத்துதல் குறுநிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் அல்லது வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி மற்றும் வங்கிக்கடன் உதவியுடன் அக்ரி கிளினிக் போன்ற ஏதாவது ஒரு வேளாண் சார்ந்த தொழில் துவங்கும் 21-40 வயதுடைய பட்டதாரிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் வேளாண் பட்டாதாரிகள் உரிய ஆவணங்களுடன் தங்கள் வட்டார வேளாண் உதவி இயக்குநர்களை தொடர்புகொண்டு (Agreement) உடன்படிக்கையை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பயனடையலாம்” என தெரிவித்துள்ளார்.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news