Search

சென்னை பெருநகர போக்குவரத்து குழும வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி நாள்!

 

சென்னை பெருநகர போக்குவரத்து குழும வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி நாள்!

சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம்‌ ஆனது Social Expert, Senior Data Integration, Junior Data Scientist பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி என உள்ளது. இந்த அரசு பணிக்கு என 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 10.08.2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

போக்குவரத்து குழும வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Social Expert, Senior Data Integration, Junior Data Scientist பதவிக்கு தலா ஒரு பணியிடம் என மொத்தம் 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • இப்பணியிடங்கள் அனைத்தும் இரண்டு வருட ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
  • இந்த பணி குறித்த கூடுதல் விவரங்கள் www.cumta.tn.gov.in என்ற இணைய முகவரி மூலம் அறிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

IBPS ஆணையத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலை – 4000+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள்‌ 10-ஆகஸ்ட்‌-2023 அன்று அல்லது அதற்கு முன்‌ cumtaoffice@tn.gov.in என்ற மின்னஞ்சலுக்கு, தற்குறிப்பு போர்ட்‌ஃபோலியோ, கடந்த 3 மாதங்களுக்கான ஊதியச்‌ சீட்டு மற்றும் எதிர்பார்க்கப்படும் சம்பளம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

CUMTA -Tamilnadu நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.80,000/- ஊதியம்! - last date :10.08.2023

 

CUMTA நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.80,000/- ஊதியம்!

CUMTA ஆனது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், Junior Data Scientist, Communication Expert பணிகளுக்கென 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

CUMTA காலிப்பணியிடங்கள்:

CUMTA ஆனது தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Junior Data Scientist, Communication Expert பணிகளுக்கென 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CUMTA கல்வித் தகுதி:

பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelor’s/Master’s degree பெற்றிருக்க வேண்டும்.

CUMTA ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.80,000/- முதல் ரூ.1,50,000/-வரை ஊதியம் வழங்கப்படும்.

CUMTA தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Exam/Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

CUMTA விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் மூலம் இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

SAIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்|| மாதம் ரூ.17,000/- உதவித்தொகை!

 

SAIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்|| மாதம் ரூ.17,000/- உதவித்தொகை!

ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் Trainees பணிக்கென மொத்தம் 202 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவம் மற்றும் தேவையான ஆவணங்களுடன் ஆன்லைனில் இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

SAIL காலிப்பணியிடங்கள்:

ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் Trainees பணிக்கென மொத்தம் 202 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SAIL வயது வரம்பு:

விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 18 முதல் 35 வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

SAIL கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மேலும் பல்கலைக்கழகத்தில் B. Pharmacy / Diploma/Bachelor of Physiotherapy/ MBA/BBA/PG பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

SAIL ஊதிய விவரம் :

தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.7,000/- முதல் ரூ.17,000/- வரை உதவித்தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SAIL தேர்வு செய்யப்படும் முறை :

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SAIL விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிகளுக்கு பணிபுரிய ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, போதிய ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

வேலைக்கு விண்ணப்பிக்கிறீர்களா?... கூகுளின் முன்னாள் ஹெச்.ஆர் சொல்லும் சிம்பிள் டிப்ஸை பாலோ பண்ணுங்க!

 கடந்த சில மாதங்களாகவே உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஐடி ஊழியர்கள் தங்கள் வேலையை இழந்துள்ளார்கள். 2022-ம் ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பிறகு, ஒரே சமயத்தில் பணியாளர்களை வேலையை விட்டு நீக்கினார். அதிலிருந்து கூகுள், மைக்ரோசஃப்ட், அமேஸான், மெட்டா போன்ற நிறுவனங்களும் பலரை பணி நீக்கம் செய்தனர். தற்போதைய பொருளாதார சூழல் தான் இத்தகைய வேலை நீக்கத்திற்கு காரணம் என இந்த நிறுவனங்கள் கூறுகின்றன. இதன் காரணமாக தற்போது ஐடி நிறுவனங்களில் வேலைக்கு சேர்வதற்கு கடும் போட்டி நிலவுகிறது.

லிங்க்டின் தளத்தின் வழியாக லட்சக்கணக்கான நபர்கள் வேலை தேடி வருகிறார்கள். சிலருக்கு நிறுவனத்திலிருந்து பதில்கள் வந்தாலும், பலரது விண்ணப்பங்கள் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் கண்களில் கூட படுவதில்லை. இதுபோன்ற நபர்களுக்கு உதவும் விதமாக, ஆன்லைனில் வேலைக்கு விண்ணப்பித்த நபர்கள், அதன்பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை கூறுகிறார் கூகுள் நிறுவனத்தின் முன்னாள் மனிதவள துறை அதிகாரியான நோலன் சர்ச்.

“வேலை தேடி ஒரு நிறுவனத்திற்கு விண்ணப்பத்தை அனுப்பிய பிறகு, உங்கள் நிறுவனத்திற்கு இப்படியொரு விண்ணப்பம் அனுப்பியுள்ளேன் என்று கூறி லிங்க்டின் தளத்திலோ அல்லது அந்நிறுவனத்தின் மனிதவள துறை அதிகாரி மற்றும் சிஇஓ-வின் தனிப்பட்ட மின்னஞ்சலுக்கு செய்தி அனுப்புங்கள். இப்படிச் செய்வதால் நிச்சியம் உங்கள் விண்ணப்பம் அவர்கள் கண்களில் பட அதிக வாய்ப்புள்ளது” என சர்ச் கூறுகிறார்.

ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிறுவனங்களுக்கு அனுப்பப்படும். அதனால் உங்களுடைய விண்ணப்பம் அவர்கள் கண்ணில் படாமல் கூட போகலாம். ஆனால் சர்ச் கூறியபடி நீங்கள் செய்தால், உங்கள் விண்ணப்பம் பரிசீலிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.

"நான் DoorDash-ல் பணியாற்றிய சமயத்தில், அந்நிறுவனத்தின் சிஇஓ-விற்கு இதுபோன்ற நிறைய மின்னஞ்சல்கள் வரும். அதையெல்லாம் அவர் எனக்கு அனுப்பிவிடுவார். இப்படி தனிப்பட்ட மின்ஞ்சல்களிலோ அல்லது லிங்க்டின் தளத்தில் குறுஞ்செய்தியோ அனுப்பும் நபர்கள் அனைவரையும் நாங்கள் தொடர்பு கொள்வோம்" என சர்ச் தெரிவிக்கிறார்.

இதுவொரு பெரிய நிறுவனமாயிற்றே; நாம் அனுப்பும் தனிப்பட்ட இ-மெயில், குறுஞ்செய்திகளை எல்லாம் பார்ப்பார்களா என்றெல்லாம் நீங்கள் நினைக்கக்கூடாது. இதற்கு ஒரு உதாரணத்தையும் அவர் கூறுகிறார். நீங்கள் வேலைக்காக அமேஸான் நிறுவனத்தில் விண்ணப்பத்துள்ளீர்கள். அதுகுறித்த விவரங்களை தெரிவிக்க ஆண்டி ஜேசிக்கு நீங்கள் இ-மெயில் அனுப்ப விரும்பினால், யாரும் உங்களை மிரட்டப் போவதில்லை. ஆகவே தயங்காமல் இ-மெயில் அனுப்புங்கள்.

தற்போது Continuum நிறுவனத்தின் சிஇஓ-வாக இருக்கிறார் சர்ச். “நீங்கள் அனுப்பும் எல்லா இ-மெயில்களையும் நான் வாசிக்க முடியாமல் போகலாம். ஆனால் என்னுடைய குழுவில் உள்ள யாரோ ஒருவர் உங்கள் இ-மெயிலை பார்த்து அதை மனிதவள துறை அதிகாரிக்கோ அல்லது நிறுவனத்தின் துணை தலைவருக்கோ அனுப்புவார்கள்” என்கிறார் சர்ச்.

இதற்கிடையில், ஜனவரி மாதத்தோடு 12,000 பணியாளர்களை வேலையை விட்டு நீக்கியுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தச் செய்தி பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. தன்னுடைய ஊழியர்களுக்கு அதிகளவு சம்பளம் வழங்கும் நிறுவனமாக அறியப்படுகிறது கூகுள்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

3,359 காவலர் பணியிடங்கள்... தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு..

 தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலைசிறைக் காவலர்,  தீயணைப்பாளர் ஆகிய  காலிப் பணியிடங்களுக்கான பொதுத் தேர்வு (Common Recruitment) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


இதற்கான, விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன. 18.08.2023  வரை இணையவழியில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கலாம். குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்/பெண் மற்றும் திருநங்கைகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஊதிய விகிதம் ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை.

மொத்த காலியிடங்கள்: 3,359

மொத்த காலிப்பணியிடங்களில் 10% விளையாட்டிற்கான இடஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படும் என்றும், 10% சார்ந்துள்ள வாரிசுதாரர்கள் (Wards cum Dependent) பிரிவின் கீழ் நிரப்பப்படும் என்றும், 5% இடங்கள் முன்னாள் இராணுவத்தினர் கீழ் நிரப்பப்படும் என்றும்,  பெண்களுக்குரிய பணியிடங்களில் 3% ஆதரவற்ற விதவைகளுக்கு (Destitute Widow) ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த  ஆட்சேர்ப்பில்  துணை ராணுவப்படை வீரர்களுக்கு அளித்து வந்த சிறப்பு ஒதுக்கீட்டை தமிழக அரசு நீக்கியுள்ளது.

கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு/SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் 01.07.2023 அன்று, 18 வயது நிறைவுற்றவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயதுவரம்பிற்கான தளர்வுகள் பின்வருமாறு:





2022 அரசு விதிமுறைகளின் படி, இந்த எழுத்துத் தேர்வில் முதன் முறையாக தமிழ் மொழி தகுதித்தேர்வு நடத்தப்படும். இதில், குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் பெற்று தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுடைய முதன்மை எழுத்துத் தேர்வின் OMR விடைதாள்கள் மட்டுமே மதிப்பீடு செய்யப்படும்.

எப்படி விண்ணப்பிக்கலாம்?

தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnusrb.tn.gov.in./என்ற பக்கத்தில் விண்ணப்பிக்கலாம். எதிர்வரும் 18ம் தேதி முதல் இணையவழியில் விண்ணப்பம் சமர்பிபிக்லாம்.

தெரிவு செய்யப்படும் முறை: 



தேர்வுக் கட்டணம்: ரூ 250/-

விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கட்டணத்தை வங்கியின் ரொக்க செலுத்துச்சீட்டு மூலம் அல்லது இணையவழி கட்டணம் மூலம் செலுத்தலாம்.

மேல் விவரங்கள் / சந்தேகங்களுக்கு, மாநிலத்தின் அனைத்து மாநகரம் மற்றும் மாவட்ட காவல் அலுவலங்களில் உதவி மையம் அமைக்கப்படும். அலுவலக நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வு வாரியத்தின் உதவி மையத்தை அணுகலாம். 044-40016200,044-28413658,9499008445,9176243899, 9789035725 தொலைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

அஞ்சல் துறையில் 30,041 காலியிடங்கள்.. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு.. உடனே அப்ளை பண்ணுங்க!

 இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 30, 041 கிராம அஞ்சல் பணியாளர்களுக்கான (GRAMIN DAK SEVAKS -GDS) ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், தமிழ்நாட்டில் மட்டும் 2,994 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.  இந்த பதவிக்கு எந்தவித எழுத்து மற்றும் நேர்காணல் தேர்வும் இல்லாமல், 10ம் வகுப்புத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலே தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ள தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுளளது.

பணி விவரங்கள்: 

பணியின் பெயர்கிராம அஞ்சல் பணியாளர் (GRAMIN DAK SEVAKS -GDS) NOTIFICATION NO: No.17-67/2023-GDS
காலியிடங்கள்2,994  (தமிழ்நாட்டில் மட்டும்) . நாடு முழுவதும் 30, 041 காலியிடங்கள்
ஊதியம் மற்றும் படிகள்கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM - BranchPostmaster BPM) - ரூ. 12,000 முதல் 29,380 வரை. உதவிக் கிளை போஸ்ட் மாஸ்டர் / அஞ்சல் பணியாளர் (Assistant Branch Postmaster - ABPM /Dak Sevak) - ரூ. 10,000 முதல் 24,470/- வரை
கல்வித் தகுதிகுறைந்தபட்சம் 10ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.கட்டாயமாக விண்ணப்பதாரர்கள் உள்ளூர் மொழியறிவு கொண்டிருக்க வேண்டும். அதேபோன்று, மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும்
மத்திய அரசு வேலையா?ஆம். இருந்தாலும்,  அஞ்சல்துறை துறை சாராத சேவை அமைப்பின் (Extra Departmental system in the Department of Posts) கீழ் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை, படிகள் மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டாலும், அஞ்சல் துறையில் முழு நேர ஊழியர்களுக்கான சம்பள விகிதம் இவர்களுக்கு பொருந்தாது.   (Gramin Dak Sevaks are holders of civil posts but they are outside the regular civil service)
வயது வரம்பு:குறைந்தபட்ச வயது - 18 (விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட இறுதி நாளன்று பூர்த்தியடைத்திருக்க வேண்டும்)அதிகபட்ச வயது - 40 (விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட இறுதி நாளன்று பூர்த்தியடைத்திருக்க வேண்டும்)பட்டியல் சாதிகள் (5 ஆண்டுகள்), பட்டியல் பழங்குடியினர் (5 ஆண்டுகள்) பிரிவினருக்கும், இடஒதுக்கீடு சலுகை பெற தகுதியுடைய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் (3 ஆண்டுகள்), மாற்றுத் திறனாளிகள்(10 ஆண்டுகள்) நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் வயது வரம்புச் சலுகை அளிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த பெண்கள்,   பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடியினர்/ மாற்றுத் திறனாளிகள்/ திருநர்கள் ஆகிய பிரிவைச் சார்ந்த விண்ணப்பதார்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. ஏனைய வகுப்பினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்

Indian Post Gramin Dak Sevas (GDS) விண்ணப்பம் செய்வது எப்படி? 

இந்த பதவிக்கான விண்ணப்ப செயல்முறை ஆன்லைன் மூலமாக மட்டுமே நடைபெறும். indiapostgdsonline.cept.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்க விரும்பும் அஞ்சல் வட்டத்தை முதலில் தேர்வு செய்ய வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட வட்டங்களில் உள்ள காலியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம்.

Notification -ஐ பதிவிறக்கம் செய்ய இந்தஇணைப்பைக் கிளிக் செய்யவும்.

ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில், விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித் தகுதி சான்றிதழ், வண்ண பாஸ்போர்ட் புகைப்படம் மற்றும் இதர ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். கடைசி தேதி 23.08.2023 ஆகும்.



Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

போஸ்ட் ஆபிசில் 30 ஆயிரம் காலியிடங்கள்: பெண்களுக்கு வாய்ப்புகள் அதிகம் தெரியுமா? உடனே விண்ணப்பியுங்கள்

 அஞ்சல் துறையில் காலியாக உள்ள 30, 041 கிராம அஞ்சல் பணியாளர்களுக்கான (GRAMIN DAK SEVAKS -GDS) ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், தமிழ்நாட்டில் மட்டும் 2,994 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதில்,  பொதுப் பிரிவினருக்கு 1406 இடங்களும் , ஓபிசி பிரிவினருக்கு 689 இடங்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவருக்கு 280 இடங்களும் , 492 இடங்கள் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவருக்கும், 20 இடங்கள் பட்டியல் பழங்குடியியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன

இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், குறைந்தபட்சம் 10ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 10ம் வகுப்புத் தேர்வில், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளை கட்டாயப் பாடங்களாகவோ அல்லது விருப்பப் பாடங்களாகவோ எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பெண்களுக்கு கூடுதல் வாய்ப்பு:

இந்த காலிப்பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதிப் பட்டியல் (Merit List) தயாரிக்கப்படும்.

10ம் வகுப்பு தேர்ச்சிப் பட்டியலில், மதிப்பெண்களுக்கு பதிலாக Grade தகுதி அளவீடுகளைக் கொண்டிருந்தால், அவை 9.5 என்ற விழுக்காட்டு அளவால் பெருக்கப்பட்டு, மதிப்பெண்களாக மாற்றம் செய்யப்படும்.

பெண்களுக்கு முன்னுரிமை :

10ம் வகுப்புத் தேர்வில், இரண்டிற்கும் மேற்பட்ட தேர்வர்கள் சமமான மதிப்பெண்களைப் பெற்றிருந்தால்,

" வயதில் முதியவர், பழங்குடியின இனத்தைச் சேர்ந்த திருநங்கை, பட்டியல் இனத்தைச் சேர்நத திருநங்கை, பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண்கள், ஓபிசி பிரிவைச் சேர்ந்த திருநங்கை, ஓபிசி  பிரிவினரில் உள்ள  பெண்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த திருநங்கை, பொருளாதார பின்தங்கிய வகுப்பினரில் உள்ள  பெண்கள், பொதுப் பிரிவினரில் உள்ள திருநங்கை, பொதுப் பிரிவினரில் உள்ள பெண்கள், பழங்குடி வகுப்பைச் சேர்ந்த  திருநம்பி, பட்டியல் வகுப்பைச் சேர்ந்த ஆண்கள், பட்டியல் வகுப்பைச் சேர்ந்த திருநம்பி,  பட்டியல் வகுப்பைச் சேர்ந்த ஆண்கள், ஓபிசி பிரிவைச் சேர்ந்த திருநம்பி, பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் உள்ள  ஆண்கள்,  பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த திருநம்பி, பொருளாதார பின்தங்கிய வகுப்பினரில் உள்ள  ஆண்கள், பொதுப் பிரிவினரில் உள்ள திருநம்பி, பொதுப் பிரிவினரில் உள்ள ஆண்கள்" என்ற  முறையின் மூலம் மூப்பு நிலை கண்டறியப்படும்.

விண்ணப்பக் கட்டணம் கிடையாது:  இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 ஆகும். இருப்பினும், பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடியினர்/ அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த பெண்கள், மாற்றுத் திறனாளிகள்/ திருநர்கள் ஆகிய பிரிவைச் சார்ந்த விண்ணப்பதார்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

கடந்த சில ஆண்டுகளாகவே, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், மாணவர்களை விட மாணவிகளே தேர்ச்சி விகிதத்திலும், மதிப்பெண் அளவிலும் சிறந்து விளங்கி வருகின்றனர். தற்போது, சமமான மதிப்பெண் பெற்றிருந்தால், அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த பெண் விண்ணப்பதாரங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுளளது. எனவே, பெண்கள் இத்தேர்வில் வெற்றி பெற சாதகமான சூழல் உருவாகியுள்ளது.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

30, 041 அஞ்சல் துறை காலியிடங்கள்... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? முழு விவரம் இதோ!

 இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 30, 041 கிராம அஞ்சல் பணியாளர்களுக்கான (GRAMIN DAK SEVAKS -GDS) ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், தமிழ்நாட்டில் மட்டும் 2,994 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.காலியிடங்கள் 2,994 (தமிழ்நாட்டில் மட்டும்) . 

நாடு முழுவதும் 30, 041 காலியிடங்கள்

கல்வித் தகுதி: குறைந்தபட்சம் 10ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.கட்டாயமாக விண்ணப்பதாரர்கள் உள்ளூர் மொழியறிவு கொண்டிருக்க வேண்டும். அதேபோன்று, மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும்

வயது வரம்பு: குறைந்தபட்ச வயது - 18 (விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட இறுதி நாளன்று பூர்த்தியடைத்திருக்க வேண்டும்)அதிகபட்ச வயது - 40 (விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட இறுதி நாளன்று பூர்த்தியடைத்திருக்க வேண்டும்)பட்டியல் சாதிகள் (5 ஆண்டுகள்), பட்டியல் பழங்குடியினர் (5 ஆண்டுகள்) பிரிவினருக்கும், இடஒதுக்கீடு சலுகை பெற தகுதியுடைய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் (3 ஆண்டுகள்), மாற்றுத் திறனாளிகள்(10 ஆண்டுகள்) நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் வயது வரம்புச் சலுகை அளிக்கப்படும்.

இந்த பதவிக்கு எந்தவித எழுத்து மற்றும் நேர்காணல் தேர்வும் இல்லாமல், 10ம் வகுப்புத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலே தேர்வு செய்யப்பட உள்ளனர். 10ம் வகுப்புத் தேர்வில், இரண்டிற்கும் மேற்பட்ட தேர்வர்கள் சமமான மதிப்பெண்களைப் பெற்றிருந்தால், பெண் தேர்வர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த பதவிக்கான விண்ணப்ப செயல்முறை ஆன்லைன் மூலமாக மட்டுமே நடைபெறும். indiapostgdsonline.cept.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்க விரும்பும் அஞ்சல் வட்டத்தை முதலில் தேர்வு செய்ய வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட வட்டங்களில் உள்ள காலியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பக் கட்டணம் கிடையாது: இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 ஆகும். இருப்பினும், பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடியினர்/ அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த பெண்கள், மாற்றுத் திறனாளிகள்/ திருநர்கள் ஆகிய பிரிவைச் சார்ந்த விண்ணப்பதார்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை

மத்திய அரசு வேலையா? ஆம்... இருந்தாலும், அஞ்சல்துறை துறை சாராத சேவை அமைப்பின் (Extra Departmental system in the Department of Posts) கீழ் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை, படிகள் மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டாலும், அஞ்சல் துறையில் முழு நேர ஊழியர்களுக்கான சம்பள விகிதம் இவர்களுக்கு பொருந்தாது. (Gramin Dak Sevaks are holders of civil posts but they are outside the regular civil service)


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

சரியாக தூங்கவில்லை எனில் எவ்வளவு பிரச்சனைகளை உண்டாக்கும் தெரியுமா..? அலட்சியமா இருக்காதீங்க..!

நம்மில் பெரும்பாலானோர் தினமும் போதுமான அளவு தூக்கத்தை பெறுவதில்லை. நமது பணிச்சுழல் காரணமாக தூக்கத்திற்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் நீண்ட காலத்திற்கு சரியான தூக்கம் பெறாமல் இருப்பது நமது உடலை மட்டுமல்லாமல் மனதையும் பெருமளவு பாதிக்கும். அதுமட்டுமல்லாமல் இதனால் ஒரு சில நரம்பு சார்ந்த கோளாறுகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. தூக்கமானது நமது மனநிலை, ஆரோக்கியம் மற்றும் நமது ஒட்டுமொத்த நல்வாழ்வில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் தூங்கும் பொழுது நமது மூளை பல்வேறு விதமான செயல்பாடுகளில் ஈடுபடுகிறது.

நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் பொழுது நாள் முழுவதும் நடந்த விஷயங்களை நமது மூளை நினைவுகளாக சேமிக்கிறது. இது போன்ற ஒரு நிலையில் நாம் போதுமான அளவு தூங்காத போது மூளையினால் அந்த செயல்பாடுகளை செய்ய முடியாமல் போகிறது. இதன் காரணமாக ஒரு சில பிரச்சனைகள் எழுகிறது. நன்றாக தூங்குவது முடிவு எடுக்கும் திறனை மேம்படுத்துகிறது. அதோடு பிரச்சனைகளை தீர்ப்பதற்கான திறன்களையும் மேம்படுத்துகிறது.

ஒரு நபர் தொடர்ச்சியாக 7 மணி நேரத்திற்கும் குறைவான தூக்கத்தை பெற்று வரும் பொழுது அவரது கவனிப்பு திறன் நாளுக்கு நாள் குறைகிறது. இது கற்கும் செயல்முறையில் பாதிப்பை உண்டாக்குகிறது. கூடுதலாக போதுமான அளவு தூக்கம் பெறாதது நமது மனநிலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இப்பொழுது போதுமான அளவு தூக்கம் பெறாததால் ஏற்படக்கூடிய ஒரு சில நரம்பு சார்ந்த பிரச்சனைகளை பார்க்கலாம்.

இன்சோம்னியா: நாள்பட்ட தூக்கமின்மை பிரச்சனை ஆபத்து நிறைந்த புரதங்களான பீட்டா அமைலாய்டு அதிக அளவில் மூளையில் படிய காரணமாகிறது. இது அல்சைமர் நோய் ஏற்படுவதற்கான ஆபத்தை அதிகரிக்கிறது. இது உணர்வு சார்ந்த சிக்கல்கள் மற்றும் குறைந்த கவனிப்பு திறன் போன்ற விளைவுகளை ஏற்படுகிறது.

அல்சைமர்:

சீர்குலைக்கப்பட்ட தூக்க அட்டவணை மற்றும் நாள்பட்ட தூக்கமின்மை பிரச்சனை காரணமாக எழக்கூடிய நரம்பு சார்ந்த பிரச்சனை இது. தூங்கும் பொழுது நமது மூளையில் இருக்கக்கூடிய பீட்டா அமைலாய்டு போன்ற ஆபத்து நிறைந்த கழிவு பொருட்களை அகற்றும் செயல்முறை நடைபெறுகிறது. ஆனால் போதுமான அளவு தூக்கம் பெறாமல் இருக்கும் பொழுதோ அல்லது தூக்க அட்டவணையில் சீர்குலைவு ஏற்படும் பொழுது இந்த நச்சுக்கள் நமது மூளையில் சேகரிக்க துவங்குகிறது. இது அல்சைமர் நோய்க்கு வழிவகுக்கும்.


ஸ்லீப் ஆப்னியா: தூங்கும் பொழுது அடிக்கடி மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவது ஸ்லீப் ஆப்னியா எனப்படும். இதனால் மூளைக்கு செல்ல வேண்டிய ஆக்சிஜன் கிடைக்காமல் போகிறது. இது மனநிலை ஆரோக்கியத்தை பாதிக்கும், அதோடு ஞாபகம் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் இதயம் சார்ந்த நோய்களை ஏற்படுத்துகிறது.

நார்கோலெப்சி: தூக்க-விழிப்பு சுழற்சியை (sleep-wake cycle) சீராக நடத்துவதற்கான திறனை மூளை இழக்கும் பொழுது நார்கோலெப்சி ஏற்படுகிறது. நார்கோலெப்சியை அனுபவிக்க கூடிய நபர் பகல் நேரத்தில் அதிகப்படியான நேரம் தூங்குவார். இதுவும் ஒரு நபரின் மனநிலை, ஞாபக சக்தி மற்றும் கவனிப்பு திறனை பாதிக்கும்.

இரவு நேரத்தில் போதுமான அளவு தூங்குவதன் முக்கியத்துவம் என்ன? நமது மூளை திறம்பட செயல்படுவதற்கு இரவு நேரத்தில் போதுமான அளவு தூக்கம் அவசியம். நாம் தூங்கும் பொழுது நமது மூளையில் இருக்கக்கூடிய ஆபத்து நிறைந்த நச்சுக்கள் மற்றும் கழிவு பொருட்கள் அகற்றப்படுகிறது. இது மூளையின் ஆரோக்கியம் மற்றும் மனநிலை ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய ஒரு செயல்பாடு. கூடுதலாக நினைவுகளை சேகரிப்பது, கற்கும் திறன் மற்றும் மனநிலையை மேம்படுத்துவது போன்ற செயல்பாடுகளிலும் தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. தூக்க-விழிப்பு சுழற்சியில் மெலடோனின் என்ற தூக்க ஹார்மோனுக்கு முக்கிய பங்கு உள்ளது. இருட்டிற்கு பதிலளிக்கும் விதமாக நமது மூளையில் அமைந்துள்ள பீனியல் கிளாண்ட் மெலடோனின் ஹார்மோனை உற்பத்தி செய்கிறது.

ஒரு சில பழக்கவழக்கங்கள் மூலமாக மெலடோனின் அளவுகளை இயற்கையாக அதிகரிக்கலாம். இதற்கு முதலில் எலக்ட்ரானிக் சாதனங்களில் இருந்து வெளிப்படக்கூடிய ப்ளூ லைட்டிலிருந்து விலகி இருக்க வேண்டும். குறிப்பாக படுக்கைக்கு செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே எலக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது மெலடோனின் உற்பத்தியை அதிகரிக்கும். மேலும் படுக்கைக்கு செல்லும் பொழுது மனதை அமைதிப்படுத்த கூடிய செயல்பாடுகளான தியானம், புத்தகம் வாசிப்பது போன்றவற்றை செய்வதும் உதவக்கூடும். பகல் பொழுதில் இயற்கையான சூரிய ஒளியை பெறுவதும் மெலடோனின் உற்பத்தியை அதிகரித்து நமது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பது நல்லதா..? தண்ணீரைக் குடிக்க சரியான வழிகள்..!

 தண்ணீர் ஒவ்வொரு உயிருக்கும் உயிர் வாழ என்று அமையாத ஒரு தேவையாகும். ஒரு மனிதனால் உணவில்லாமல் கூட ஒரு வாரம் வரை உயிர் வாழ இயலும். ஆனால் தண்ணீர் இல்லாமல் மூன்று நாட்கள் கூட வாழ முடியாது. மேலும் நமது உடலின் பெரும் பகுதி நீரால் ஆனது. உடலின் ரத்த ஓட்டத்திற்கும் ஜீரணத்திற்கும் ஆரோக்கியமான தசைகளுக்கும் நீர் மிகவும் அவசியம்.

தண்ணீரைக் குடிக்க சரியான வழி :

இந்த தண்ணீர் குடிக்கும் விஷயத்தில் மட்டும் காலம் காலமாக வாய்க்கால் தகராறு இருந்து வருகிறது. நின்று கொண்டு தண்ணீர் குடிக்க கூடாது என்று ஒருவர் சொல்ல, சரி என்று உட்கார்ந்து கொண்டு குடித்தால் கிளாசை இப்படி தூக்கி குடிக்க கூடாது என்று மற்றொருவர் சொல்ல, சரி என்று கிளாசில் வாயை வைத்து குடித்தால் இப்படி குடிப்பது நாகரிகம் அல்ல என்று மற்றொருவர் சொல்ல எனக்கு தண்ணியே வேணாம் என்று சில சமயங்களில் தோன்றும் அளவிற்கு செய்து விடுவார்கள். அவ்வளவு கருத்து வேறுபாடுகள் இந்த தண்ணீர் குடிக்கும் விஷயத்தில் இருந்து வருகிறது.

இதையும் தாண்டி இன்னும் ஆழமாக அறிந்து கொள்ள விரும்பினால், முதலில் நீங்கள் உ.பி அல்லது உ.மு வா என்பதை கண்டறிய வேண்டும். அதாங்க உணவுக்கு பின் தண்ணீர் அருந்துவீர்களா அல்லது உணவு உண்ணும் முன் தண்ணீர் அருந்துவீர்களா என்பதும மிகவும் முக்கியம். ஆயுர்வேதத்திலும் இதைப்பற்றி பல தகவல்கள் இருக்கிறது. உணவு உண்டவுடன் தண்ணீர் குடித்தால் வயிற்றில் சுரக்கும் அமிலங்களை சமன்படுத்தி உணவு செரிமானத்தை கடுத்து விடும் என்பது போன்ற கருத்துக்களும் நிலவி வருகிறது.எனினும் இன்று வரை யாருக்கும் சரியான விடை தெரிந்த பாடில்லை.


அறிவியல் என்ன சொல்கிறது :

உணவு உண்ட பின் தண்ணீர் குடிப்பதால் உடலுக்கும் அல்லது உணவு ஜீரணத்திற்கும் தீங்கு ஏற்படுவதாக எந்த ஒரு ஆய்விலும் இதுவரை கண்டறியவில்லை. ஆனால் அதே சமயத்தில் உணவு ஜீரணத்தின் போது நமக்கு சுரக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் ஆனது அதிகமான நீருடன் அந்த அமிலம் தன்னுடைய உணவை செரிக்கும் திறனை சற்று இழக்கிறது என்பது உண்மைதான்.

உண்ணும் உணவுக்கேற்றபடி தண்ணீர் குடிக்க வேண்டும் :

உண்மையில் நீங்கள் எந்தவிதமான உணவு உட்கொள்ளுகிறீர்கள் என்பதை பொருத்தும் நீங்கள் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதும் அமைகிறது. உதாரணத்திற்கு நீங்கள் புரதச்சத்து நிறைந்த உணவை உண்டால் தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பதன் மூலம் ஜீரண சக்தியை அதிகரிக்கலாம்.

நீங்கள் குடிக்கும் தண்ணீர் எப்படிப்பட்டது :

மேற்கண்ட காரணிகளுடன் சேர்த்து நீங்கள் குடிக்கும் தண்ணீரின் தரமும், அதன் தன்மையும் முக்கிய காரணியாக அமைகிறது. காரத்தன்மை அதிகம் உள்ள நீரை குடிக்கும் போது அவை வயிற்றில் உள்ள அமிலங்களை சமன் செய்கின்றன. அதே சமயத்தில் அமிலத்தன்மை உள்ள நீரை பருகும் போது அவை உணவு செரிமானத்திற்கு உதவுகின்றன.

மேற்கண்ட தரவுகளை வைத்து பார்க்கும் போது இந்த தண்ணீர் குடிப்பது என்பது ஒவ்வொருவருக்கும் அவருடைய உடல் அமைப்பை பொருத்தும் அவருடைய உணவு முறையை பொருத்தும் மாறுபடுகிறது இதில் நீங்கள் எந்த வகை என்பதை நீங்களே யோசித்து அதற்கேற்றபடி உங்கள் தண்ணீர் குடிக்கும் முறையை மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

தண்ணீர் குடிக்க சரியான நேரம் எது?

  • தினமும் காலை எழுந்தவுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது உங்கள் உடல் உறுப்புகளுக்கு மிகவும் நல்லது உடலில் உள்ள நச்சுக்கிருமிகளை வெளியேற்றுவதற்கு இது உதவியாக இருக்கும்.
  • நீங்கள் காலை உணவு உன்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது உங்கள் உணவு செரிமானத்தை ஊக்குவிக்கும். அவ்வாறு இல்லையெனில் உணவு உண்ட பின்பு ஒரு மணி நேரம் கழித்து தண்ணீர் குடிக்கலாம்.
  • நீங்கள் குளிப்பதற்கு முன்பு ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பதன் மூலம் உங்கள் உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை அதிகரிக்கலாம்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

ஒரு மாதத்திற்கு அரிசி சாப்பிடாமல் இருந்தால் உடலில் இத்தனை மாற்றங்கள் நடக்குமா..?

 ஆசியாவில் வசிக்கும் பெரும்பாலான மக்களின் முக்கிய உணவாக அரிசி இருந்து வருகிறது. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது அரிசி உணவை சாப்பிட்டால் தான் திருப்தியாக இருக்கும் என்ற அளவிற்கு அரிசி நம் வாழ்க்கையில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. ஆனால் உண்மையிலேயே அதிக அளவு அரிசி உணவை உட்கொள்வது உடலுக்கு ஆரோக்கியமானது தானா என்ற கேள்வி பலருக்கும் எழலாம்!

அரிசியில் உடலுக்கு தேவையான கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன மேலும் ஸ்டார்ச் மற்றும் பல்வேறு விதமான ஊட்டச்சத்துக்களும் அதில் நிறைந்துள்ளன. அதே சமயத்தில் அரிசி உணவை அதிகம் உட்கொள்ளும் போது அவை ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து உடல் எடை கூடுவதற்கு வழிவகுக்கும்.

ஆனால் அதற்காக அரிசி உணவை ஒட்டு மொத்தமாக ஒதுக்கி விட வேண்டும் என்று கூறி விட முடியாது. உதாரணத்திற்கு ஒரு மாதத்திற்கு நீங்கள் அரிசி உணவை சாப்பிடாமல் இருந்தால் என்ன நடக்கும் என்பதை பற்றி வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

“ஒரு மாதம் வரை அரிசி உணவை நீங்கள் உட்கொள்ளாமல் இருக்கும்போது, உடலில் கலோரிகள் குறைவதன் காரணமாக உடல் எடை குறைய வாய்ப்பு உண்டு. மேலும் கார்போஹைட்ரேடுகள் உட்கொள்ளாத காரணத்தினால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் இருக்கும்” என பாலாஜி ஆக்சன் மெடிக்கல் இன்ஸ்டிட்யூட்டின் தலைமை ஊட்டச்சத்து நிபுணரான பிரியா பர்மா தெரிவித்துள்ளார்.

ஒர்க் ஹார்ட் மருத்துவமனையில் பணிபுரியும் மற்றொரு வல்லுனரான ரியா தேசாய் கூறுகையில், ஒரு மாதத்திற்கு அரிசி உணவை உட்கொள்ளாமல் இருக்கும்போது கண்டிப்பாக அது உடல் எடை குறைவதற்கு வழிவகுக்கும். ஆனால் அரிசிக்கு பதிலாக வேறு ஏதேனும் தானியங்களையோ அல்லது அதே அளவு கலோரிகளை தரும் வேறு ஏதேனும் கார்போஹைட்ரேடுகள் நிறைந்த உணவுப் பொருட்களையும் நீங்கள் உட்கொள்ளாமல் இருக்க வேண்டும். “அரிசி உணவை தவிர்ப்பது என்பது கண்டிப்பாக ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை சமநிலையில் வைக்க உதவும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே சமயத்தில் “நீங்கள் அரிசி உணவை கைவிட்ட அந்த மாதத்தில் மட்டுமே ரத்தத்தில் சர்க்கரை அளவானது குறைந்திருக்கும் எனவும் அல்லது மீண்டும் அரிசி உணவை எடுத்துக் கொள்ள ஆரம்பித்ததில் இருந்து குளுக்கோஸ் அளவு அதிகரிக்க துவங்கும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் சிறிய அளவிலான அரிசி உணவை உட்கொள்வது எந்த விதத்திலும் உடலுக்கு தீங்கு விளைவிக்காது என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரிசி உணவை கைவிடுவதால் அரிசியின் மூலம் கிடைக்கும் கார்போஹைட்ரேட்டுகள் வைட்டமின் பி மற்றும் சில தாதுக்கள் ஆகியவற்றில் குறைபாடு ஏற்படலாம் என்று அவர் கூறுகிறார். எனினும் இது நபருக்கு நபர் வேறுபடலாம்.

ஆனால் உண்மையிலேயே அரிசி உணவை மொத்தமாக உங்களது உணவு பட்டியலில் இருந்து நீக்க வேண்டுமா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை என்று தான் கூற வேண்டும். ஒரு மாதத்திற்கு அரிசி உணவை கைவிட வேண்டும் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பமாகும். அரிசி உணவை விரும்புபவர்கள் தங்களது உணவு கட்டுப்பாட்டில் ஒரு பகுதியாக அரிசி உணவை சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் அவை அளவோடு இருப்பது நல்லது. மேலும் நம் உணவு பட்டியலில் ஊட்டச்சத்து மிகுந்த உணவுப் பொருட்கள் அதிகம் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஒட்டுமொத்தமாக அரிசி உணவை உணவு பட்டியலில் இருந்து நீக்குவது என்பது நல்ல அணுகுமுறை அல்ல என்று தேசாய் குறிப்பிட்டுள்ளார். அரிசி உணவுடன் புரதச்சத்து மிகுந்த உணவுப் பொருட்களையும், காய்கறிகளையும் சேர்த்துக் கொள்வதன் மூலம் அரிசி உணவை மிகவும் சத்து மிகுந்த உணவாக நம்மால் மாற்ற முடியும். அரிசியில் உள்ள கார்போஹைடிரேட்டுகள் தான் உடலின் சக்திக்கு அடிப்படையானவை. எனவே அவற்றை முற்றிலுமாக உணவு பட்டியலில் இருந்து நீக்குவது என்பது நம்மை பலவீனம் அடையச் செய்யும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமல்லாமல் இந்த செயல்முறை தசைகள் வலுவிழிப்பதற்கும் உடலில் அதிக அளவிலான ஊட்டச்சத்து மற்றும் தாதுக்கள் குறைபாடு ஏற்படுவதற்கும் வழி வகுக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. உடலில் அதிக அளவில் சேர்ந்துள்ள கொழுப்பை குறைப்பது மட்டுமே நமது நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர தசைகளை குறைப்பது நோக்கமாக இருக்கக் கூடாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

மாலை நேரத்தில் டீ குடிப்பது தவறா..? நிபுணர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்..!

 இந்திய மக்களின் வாழ்வியலுடன் டீ எந்த அளவுக்கு பின்னி பிணைந்துள்ளது என்பதை நாம் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அதிகாலையில் வீட்டில் எழுந்த உடனேயே பல் துலக்கி கம கமவென்ற மணத்துடன் டீ அருந்தாவிட்டால் நம் மக்களுக்கு அன்றைய பொழுதே தொடங்காது.

வீட்டில் டீ அருந்திய கையோடு அன்றைய பொழுது கழிந்து விடாது. ஒவ்வொரு தெருவிலும், திரும்பிப் பார்க்கும் திசையிலும் எண்ணற்ற டீக்கடைகள் இருக்கின்றன. அவை அத்தனையிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். கோடை வெயில் சுட்டெரிக்கும் சமயத்திலும் கூட சூடாக டீ அருந்தும் பழக்கம் பலருக்கு உண்டு. நம் மக்கள் இந்த அளவுக்கு தீராத மோகம் கொண்ட டீயை மாலை நேரத்தில் அருந்தலாமா என்று கேள்வி எழுகிறது. இந்த கேள்விக்கான விடையை இப்போது பார்க்கலாம்.

மாலையில் டீ அருந்தக்கூடாது..! நீங்கள் டீ பிரியராக இருக்கலாம், நேரம் காலம் பார்க்காமல் டீ அருந்துபவராக இருக்கலாம். ஆனால் மாலை நேரத்தில் டீ அருந்தக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தூக்கம் மற்றும் கல்லீரல் சுத்திகரிப்பு : நாம் தூங்குவதற்கு 10 மணி நேரம் முன்பாகவே டீ மற்றும் காஃபைன் பானங்களை தவிர்த்து விட வேண்டும் என்று மருத்துவர் சவாலியா அறிவுறுத்துகிறார். நிம்மதியான தூக்கம், கல்லீரலில் நச்சுக்களை உடல் சுத்திகரிப்பது, அழற்சி தடுப்பு, ஆரோக்கியமான செரிமானம் ஆகியவற்றுக்கு இது உதவும் என்று அவர் தெரிவிக்கிறார்.

ஆரோக்கியம் தரும் பிளாக் டீ : நம் மக்களில் பலருக்கு பிளாக் டீ அருந்தும் பழக்கம் இருக்கிறது. பாலிஃபினால்ஸ் மற்றும் ஆண்டிஆக்ஸிடென்ட் சத்துக்கள் நிறைந்து இருப்பதால் செல்களின் சிதைவு மற்றும் அலர்ஜி போன்றவற்றை இது தடுக்கும்.

பால் கலந்தால் என்ன ஆகும்.? இருப்பினும் டீ என்றாலே அதில் பால் மற்றும் சர்க்கரை ஆகியவற்றை பிரதானமாக இந்தியர்கள் சேர்த்துக் கொள்கின்றனர். இதனால் டீ யில் உள்ள ஊட்டச்சத்து அளவுகள் மாறுபடுகின்றன. அதன் முழுமையான பலன் நமக்கு கிடைப்பதில்லை.

சுவை மாறுகிறது - இயல்பாக பார்த்தால் டீ லேசான கசப்பு சுவை கொண்டது. பால் மற்றும் சர்க்கரையை சேர்க்கும்போது இது இனிப்பு தன்மை கொண்டதாக மாறுகிறது. இதனால் சுவை மற்றும் தன்மை மாறுபட்டு விடுகிறது.

பிளாக் டீ-யே சிறப்பானது... டீயுடன் பால் மற்றும் சர்க்கரை சேர்க்கும்போது அதில் உள்ள ஆண்டிஆக்சிடென்ட் சத்துக்கள் மாறுபடுகின்றன. நேரடியாக டீ அருந்தும் போது கிடைக்கும் புத்துணர்ச்சியை காட்டிலும் பால் கலந்து குடிக்கும் போது குறைவான புத்துணர்ச்சியே நமக்கு கிடைக்கும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

தினமும் காலை லெமன் வாட்டர் குடிப்பதால் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்..!

 ஆரோக்கிய பானங்களில் ஒன்றாக பிரபலமடைந்துள்ளது லெமன் வாட்டர். லெமன் வாட்டரா இது என்ன பெயர் புதுசா இருக்கு என்று யோசிக்கும் முன்பு, பெயர் தான் புதிது! சாதாரணமாக நாம் பருகும் தண்ணீரில் எலுமிச்சை சாறை மிக்ஸ் செய்து தயாரிக்கப்படுவதைத் தான் குறிக்கிறது.

எலுமிச்சை ஜூஸை தண்ணீரில் கலந்து செய்யப்படும் சிம்பிள் ட்ரின்க்காண லெமன் வாட்டர். இதில் சேர்க்கப்படும் எலுமிச்சை சாறின் அளவு அவரவர் விருப்பத்தை பொறுத்தது ஆகும். வெதுவெதுப்பான நீரில் தயார் செய்யப்படும் இதை காலை எழுந்தவுடன் குடிப்பது பலவிதமான நன்மைகளை அளிக்கிறது. ஒரு சிலர் இதில் புதினா இலை, தேன் அல்லது பிற சுவையூட்டும் பொருட்களை சேர்த்து குடிப்பார்கள். காலை நேரத்தில் இதைக் குடிப்பதால் கிடைக்கும் சில முக்கிய நன்மைகளை இங்கே பார்க்கலாம்.

ஹைட்ரேஷன்: இரவு நேரத்தின் நீண்ட தூக்கத்திற்குப் பிறகு காலை எழுந்தவுடன் உங்கள் நாளை உற்சாகமாக துவங்க மற்றும் ஆற்றலை அதிகரிக்க நம் உடலை ரீஹைட்ரேட் செய்ய வேண்டும். இதற்கு காலை நேரத்தில் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். காலை எழுந்தவுடன் நீங்கள் குடிக்கும் தண்ணீரில் சிறிதளவு எலுமிச்சை ஜூஸ் அல்லது ஸ்லைசை சேர்ப்பதன் மூலம் அது ஆரோக்கியமானதாக மாறும். மேலும் தண்ணீரில் சுவைக்காக கொஞ்சம் எலுமிச்சை சாற்றைப் பயன்படுத்தினால் நீங்கள் அதிகமாக தண்ணீரை விரும்பி குடிப்பீர்கள். இதனால் உடலில் ஹைட்ரேஷன் லெவலை பராமரிக்க உதவும்.

வைட்டமின் சி: வைட்டமின் சி-யின் சிறந்த மூலமாக இருக்கிறது எலுமிச்சை. இது ஒரு சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகும். இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதோடு, கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது மற்றும் தாவர அடிப்படையிலான உணவுகளில் இருந்து இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கும் உதவுகிறது.

செரிமானம் மேம்படும்: லெமன் வாட்டர் குடிப்பது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் வயிற்றில் ஆசிட் உற்பத்தியை ஊக்குவிக்கும் என்று சிலர் நம்புகிறார்கள். மேலும் இது உணவை உடைத்து செரிமானத்தை எளிதாக மேம்படுத்த உதவுகிறது. எனினும் இதற்கான சான்றுகள் குறைவாகவே உள்ளன.

சுவாசத்தை புத்துணர்ச்சியாக வைக்கும்: எலுமிச்சையின் சிட்ரஸ் பண்புகள் வாயில் உமிழ்நீர் உற்பத்தியை ஊக்குவிக்கும், செயல்பாட்டில் உள்ள துர்நாற்றத்தை எதிர்த்துப் போராடும். எனவே காலை நேரத்தில் லெமன் வாட்டர் குடிப்பது சுவாசத்தை புத்துணர்ச்சியடைய செய்து துர்நாற்றத்தை குறைக்கும்.

டீடாக்ஸிஃபிகேஷன்: லெமன் வாட்டர் பெரும்பாலும் டீடாக்ஸிஃபையிங் ஏஜென்ட்டாக செயல்படுகிறித்து, மேலும் இது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. டீடாக்ஸ் பானமாகவும் இருக்கும் லெமன் வாட்டரை தினமும் குடித்தால் மலச்சிக்கலை குணமாகும், நச்சுக்கள் வெளியேறி குடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த, லெமன் வாட்டர் மட்டுமே தீர்வல்ல. சீரான உணவு, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் போதுமான தூக்கம் போன்ற பிற ஆரோக்கியமான பழக்கவழக்கங்களுடன் சேர்த்து இதனை பின்பற்ற வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

எலும்பை வலுப்படுத்த அசைவம் மட்டுமல்ல இந்த சைவ உணவுகளும் உதவும்..!

 வலுவுடன் கூடிய ஆரோக்கியமான எலும்புகளை பராமரிப்பது ஒட்டுமொத்த உடலுக்கு அவசியம். குறிப்பாக நாம் வயதாகும்போது, பால் அல்லது அசைவ உணவுகளை அதிகம் உட்கொள்வது எலும்புக்கு நல்லது என்று கூறுவதுண்டு. ஆனால், இங்கு பல சைவ உணவுகள், எலும்புகளை வலுவாக்கும் சூப்பர் ஃபுட்ஸாக வலம் வருகின்றன. அந்த வகையில், வலுவான எலும்புகளுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் சிறந்த ஆதாரங்களாக இருக்கும் ஆறு தாவர அடிப்படையிலான சூப்பர் உணவுகள் குறித்துப் பார்க்கலாம்.

டோஃபு : சோயாபீன்களிலிருந்து தயாரிக்கப்படும் இந்த டோஃபு, ஒரு தாவர அடிப்படையிலான சத்தான புரதத்தைக் கொண்டிருக்கும் உணவாகும். இது பால் பொருள்களுக்கு ஒரு சிறந்த மாற்றாகக் கருதப்படுகிறது. இதில் அதிகளவும் கால்சியம், புரதம் ஆகிய சத்துகள் நிறைந்துள்ளன. டோஃபுவை நாம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் பலமாகவும், எலும்பு முறிவுகளின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.

கீரைகள் : தாவர வகையை சார்ந்த கீரைகள் உணவின் முக்கிய அங்கமாகப் பார்க்கப்படுகிறது. இவை அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, புரதச்சத்தைக் கொண்டுள்ளன. கீரைகளை சாப்பிடுவது, நம் உடலை வலுவாக வைத்திருக்கவும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. சாலடுகள், சாண்ட்விச்கள், கூட்டு பொரியல் என எந்த விதத்திலும் உணவுடன் கீரை வகைகளைச் சேர்த்துக் கொள்ளலாம். இவை எந்தவொரு உணவிற்கும் ஒரு சுவையான மற்றும் சத்தான சைட் டிஷ்ஷாக அமைகின்றன. அதிகளவு கால்சியம் இதில் நிரம்பியுள்ளதால், எலுப்புகளுக்கு தேவையான வலுவை கீரை உணவுகள் தங்கு தடையின்றி வழங்குகின்றன.

பாதாம்: பாதாம் என்பது ஒரு 'நட்ஸ்' வகைகளில் சுவையானது மட்டுமல்ல; எலும்புகளுக்கு ஊட்டமளிக்கும் ஊட்டச்சத்துக்களின் அருமையான ஆதாரமாகும். கால்சியம், வைட்டமின் ஈ ஆகியவை நிறைந்த பாதாம் பருப்பு, எலும்பின் அடர்த்தியை ஆதரிக்க உதவுகிறது. மேலும், அவற்றின் கட்டமைப்பை பராமரிக்க உதவுகிறது. பாதாமில் இருக்கும் நல்ல ஆரோக்கியமான கொழுப்புகள் ஒட்டுமொத்த எலும்பு வலிமைக்கு பங்களிக்கின்றன.

வீகன் மில்க் : விலங்கில் இருந்து கிடைக்கும் பாலுக்கு மாற்றாக, வலுவூட்டப்பட்ட வீகன் மில்க் கூடுதல் ஊட்டச்சத்துக்களால் செறிவூட்டப்பட்டுள்ளன. இந்த பால் பொதுவாக பாதாம், சோயா, ஓட்ஸ் அல்லது தேங்காய் போன்ற தாவர வகை தயாரிக்கப்படுகிறது. இதில் கால்சியம், வைட்டமின் டி, வைட்டமின் பி 12 போன்ற தாதுக்கள் அடங்கியுள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் நமது எலும்புகள், நோயெதிர்ப்பு அமைப்பு, ஒட்டுமொத்த ஆரோக்கியம் ஆகியவற்றிற்கு அவசியமானதாகும். லாக்டோஸ் ஒவ்வாமை இருப்பவர்களுக்கு வலுவூட்டப்பட்ட தாவர பால் ஒரு சிறந்த வழி ஆகும்.

வீகன் மில்க் : விலங்கில் இருந்து கிடைக்கும் பாலுக்கு மாற்றாக, வலுவூட்டப்பட்ட வீகன் மில்க் கூடுதல் ஊட்டச்சத்துக்களால் செறிவூட்டப்பட்டுள்ளன. இந்த பால் பொதுவாக பாதாம், சோயா, ஓட்ஸ் அல்லது தேங்காய் போன்ற தாவர வகை தயாரிக்கப்படுகிறது. இதில் கால்சியம், வைட்டமின் டி, வைட்டமின் பி 12 போன்ற தாதுக்கள் அடங்கியுள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் நமது எலும்புகள், நோயெதிர்ப்பு அமைப்பு, ஒட்டுமொத்த ஆரோக்கியம் ஆகியவற்றிற்கு அவசியமானதாகும். லாக்டோஸ் ஒவ்வாமை இருப்பவர்களுக்கு வலுவூட்டப்பட்ட தாவர பால் ஒரு சிறந்த வழி ஆகும்.

ப்ரோக்கோலி : ப்ரோக்கோலி என்பது எலும்பு வலுப்படுத்தும் ஊட்டச்சத்துக்களால் நிரம்பிய ஒரு காய்கறி வகையாகும். அதன் கால்சியம், வைட்டமின் கே, மெக்னீசியம் ஆகியவை எலும்பு ஆரோக்கியத்திற்கு முதன்மையானதாக இருக்கிறது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip