Search

உலக நாடுகளில் காலை உணவில் என்னென்ன இருக்கும் தெரியுமா..? அவங்க பிரேக் ஃபாஸ்ட் ஸ்டைலே இதுதான்..!

 நாம் அனைவரும் என்றாவது ஒரு நாள் உலகம் முழுவதும் பயணம் செய்து பல்வேறு பகுதிகளில் என்ன வகையான உணவு பரிமாறப்படுகிறது என்பதை அறிய ஆர்வமாக உள்ளோம். பிரெஞ்சு மக்கள் இரவு உணவிற்கு என்ன சாப்பிடுகிறார்கள்? இலங்கையர்களும் நம்மைப் போலவே சோறு சாப்பிடுகிறார்களா? இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளில் காலை உணவு எப்படி இருக்கிறது? இந்தக் கேள்விகள் உங்கள் மனதில் தோன்றினால், இந்தக் கட்டுரை உங்களுக்காக மட்டுமே!

ஜப்பான்: கிழக்கு ஆசியாவில் உள்ள இந்த தீவு நாட்டில் நாம் இதுவரை பார்த்திராத காலை உணவு உண்டு! ஒரு பொதுவான ஜப்பானிய காலை உணவில் ஸ்டிக்கி அரிசி, வறுக்கப்பட்ட மீன், மிசோ சூப், நாட்டோ மற்றும் தமகோயாகி ஆகியவை உள்ளன. Tamagoyaki என்பது ஒரு ஜப்பானிய உருட்டப்பட்ட முட்டை மற்றும் நாட்டோ கொண்ட உணவாகும்.

பிரான்ஸ்: இந்தப் பட்டியலில் உள்ள மற்றொரு இனிப்பு காலை உணவு கொண்டது , க்ரோசண்ட்ஸ் பிரான்ஸில் உள்ள முக்கிய காலை உணவு! பெரும்பாலும் ஸ்ட்ராங்  காபியுடன், பிரெஞ்சு மக்கள் எளிமையான மற்றும் விரைவான காலை உணவை உட்கொள்வதை விரும்புகிறார்கள். காபியுடன் ஒரு சாக்லேட் குரோசண்ட் உண்பதை அதிகம் விரும்புகின்றனர்.

பிரான்ஸ்: இந்தப் பட்டியலில் உள்ள மற்றொரு இனிப்பு காலை உணவு கொண்டது , க்ரோசண்ட்ஸ் பிரான்ஸில் உள்ள முக்கிய காலை உணவு! பெரும்பாலும் ஸ்ட்ராங்  காபியுடன், பிரெஞ்சு மக்கள் எளிமையான மற்றும் விரைவான காலை உணவை உட்கொள்வதை விரும்புகிறார்கள். காபியுடன் ஒரு சாக்லேட் குரோசண்ட் உண்பதை அதிகம் விரும்புகின்றனர்.

இத்தாலி: உண்மையான இத்தாலிய காலை உணவில் காபியின் பங்கு பெரிது . அதோடு கார்னெட்டி போன்ற இனிப்பு பேஸ்ட்ரி இரு உணவு டிவிஸ்டாக இருக்கிறது. கார்னெட்டி உண்மையில் ஒரு இத்தாலிய குரோசண்ட்!

துருக்கி: மத்திய தரைக்கடல், ஒட்டோமான், மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பிய உணவு வகைகளின் தாக்கத்துடன், துருக்கிய உணவு மிகவும் பிரமாண்டமான விஷயமாக மாறுகிறது. பாரம்பரிய துருக்கிய காலை உணவு கூட ஒரு விருந்தாக கருதப்படுகிறது! காலை உணவில் பல்வேறு வகையான சீஸ், மரைனேட் செய்யப்பட்ட ஆலிவ்கள், ஜாம்,, துருக்கிய ரொட்டிகள் (சிமிட்), முட்டை மற்றும் துருக்கிய சுக்குக், பாஸ்துர்மாஆகியவை அடங்கும். காலை உணவிள் இங்கு  தேநீர் முக்கிய இடம் பிடிக்கின்றன

கொரிய கலாச்சாரம் இந்த நாட்களில்  K-Pop  மற்றும் K-Dramas காரணமாக பிரபலம் அடைந்து வருகிறது. இது கொரிய உணவு வகைகளைப் பற்றிய ஆர்வத்தை நம்மிடம் ஏற்படுத்துகிறது! கொரிய உணவுகளை நாம் ஓரளவு அறிந்திருந்தாலும்,  கொரிய கலாச்சாரத்தில் வழக்கமான காலை உணவுகள் கிம்ச்சி , கொரிய முட்டை, கிம்ச்சி முட்டை, கொரிய முட்டை ரோல்ஸ் மற்றும் அபலோன் கஞ்சி போன்றவற்றை உள்ளடக்கி உள்ளது.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

பாதாமை இப்படி சாப்பிட்டால் சர்க்கரை நோய் பற்றி கவலையே பட வேண்டாம் - ஆய்வில் மகிழ்ச்சியான செய்தி..!

 சிலருக்கு வெறும் வயிற்றில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது, சிலருக்கு சாப்பிட்ட பிறகு இரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இரண்டு சூழ்நிலைகளும் மோசமானவை. உண்மையில், நீரிழிவு என்பது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் ஒரு நோயாகும்.

கணையத்தில் இன்சுலின் குறைவாக உற்பத்தி செய்யப்படும்போது அல்லது இன்சுலின் வேலை செய்யாதபோது, ​​​​குளுக்கோஸ் உறிஞ்சப்படுவதில்லை, இந்த நிலையில் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. சர்க்கரை நோய் என்பது வாழ்க்கை முறை தொடர்பான நோய் என்பதால் நமது உணவு முறையும், உட்கார்ந்த வாழ்க்கை முறையும் இதற்கு முக்கியக் காரணம். எனவே இதனை மேம்படுத்தினால் சர்க்கரை நோயை ஒழிக்க முடியும்.

உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் பாதாம் பருப்பை உட்கொண்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைப்பது மட்டுமல்லாமல், நீரிழிவு நோயையும் தடுக்கலாம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன்பு தினமும் 30 கிராம் பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை முந்தைய நிலைக்கு கொண்டு வருவது மட்டுமல்லாமல், அது பலனளிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திக்குறிப்பின் படி, இந்தியாவை மனதில் வைத்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது, அதில் இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உண்மையில், பாதாமில் மோனோ-அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் (MUFAs), நார்ச்சத்து மற்றும் புரதம் ஆகியவை இருப்பதால் உணவுக்கு முன் இதை சாப்பிடுவது சிறந்த பலன் தரும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது, சாப்பிடுவதற்கு முன், பாதாம் இரத்த சர்க்கரையை நீக்கும் வடிவத்தில் முக்கிய சூப்பர்ஃபுட் என தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து ஆராய்ச்சி மையத்தின் டாக்டர் சீமா குலாட்டி, தேசிய நீரிழிவு, உடல் பருமன் மற்றும் கொலஸ்ட்ரால் அறக்கட்டளை மற்றும் ஃபோர்டிஸ் மருத்துவமனையின் நீரிழிவு மற்றும் அது சார்ந்த அறிவியல் தலைவர் டாக்டர் அனூப் மிஸ்ரா ஆகியோர் இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கினர்.

இன்டர்நேஷனல் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஆய்வில் : டாக்டர் குலாட்டி , நாங்கள் எங்கள் ஆய்வை இரண்டு வழிகளில் செய்துள்ளோம் என்று கூறினார். முதலாவதாக, இரத்த சர்க்கரையின் உடனடி குறைப்புக்கு என்ன காரணம்..? இரண்டாவதாக, நீரிழிவு நோயாளிகள் உணவுக்கு முன் பாதாம் உட்கொளவ்தால் உண்டாகும் மாற்றம் என்ன..? என இரண்டு கேள்விகளை முன் வைத்து நடத்தப்பட்டுள்ளது.

முதல் ஆய்வு ஐரோப்பிய ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்டுள்ளது, இரண்டாவது ஆய்வு ESPN இல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியர்கள் பொதுவாக வெறும் வயிற்றில் இரத்த சர்க்கரையை பரிசோதிப்பதால் இந்த ஆய்வு முக்கியமானது என்றும் அவர் கூறினார், ”ஆனால் உணவுக்குப் பிந்தைய சர்க்கரை பரிசோதனையில் கவனம் செலுத்துவதில்லை.

அதேசமயம் பெரும்பாலான இந்தியர்களுக்கு உணவுக்கு பின்பே இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இதற்கு அவர்களின் உணவுமுறையும் காரணமாக இருக்கலாம்” என்கிறார். இதில் சர்க்கரை அதிகரிப்பதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. அதனால்தான் உணவு சாப்பிட்ட பிறகு சர்க்கரை அளவு அதிகமாகிறது. சாப்பிட்ட பிறகு சர்க்கரையின் அளவு அதிகரிப்பது ஆரம்பத்திலேயே டைப் 2 நீரிழிவு நோயின் அறிகுறியாகும்.

உணவுக்கு முன் பாதாமை உட்கொள்வதால், டைப் 2 சர்க்கரை நோய் வராமல் தடுப்பது மட்டுமின்றி, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சர்க்கரை நோயை நீக்கும் திறனும் இருப்பதாக ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக டாக்டர் குலாட்டி கூறுகிறார். எளிமையாகச் சொன்னால், பாதாம் சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளின் அனைத்து வகையான சிக்கல்களையும் தடுக்கிறது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

NLC இந்தியா நிறுவனத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை – 92 காலிப்பணியிடங்கள்!

 NLC இந்தியா நிறுவனத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை – 92 காலிப்பணியிடங்கள்!

SME Operator பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை என்எல்சி இந்தியா லிமிடெட் ஆனது சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென மொத்தம் 92 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு, ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி SME Operator பணிக்கென காலியாக உள்ள 92 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
  • அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு, ITI தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • 63 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு NLC-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.
  • Short Listing செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்கள் Practical Test மூலம் தேர்வு செய்யப்படுவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 04.09.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

NLC SME Operator தேர்வு செயல் முறை:

1. Short Listing
2. Practical Test

விண்ணப்ப கட்டணம்:
  • UR / EWS / OBC (NCL) விண்ணப்பதாரர்கள் – ரூ.486/-
  • SC /ST / Ex-servicemen விண்ணப்பதாரர்கள் – ரூ.236/-
NLC SME Operator விண்ணப்பிக்கும் முறை:

மேலே உள்ள அனைத்து தகுதி விவரங்களையும் பூர்த்தி செய்யும் விண்ணப்பத்தார்கள் 22.08.2023 @ 10.00 மணி முதல் தற்போதைய வேலை வாய்ப்புகள் பிரிவில் அதாவது https://www.nlcindia.in/ இன் கீழ் உள்ள NLC இணையதளத்தில் உள்ள இணைப்பின் மூலம் ஆன்லைனில் 04.09.2023 @ 05.00 PM வரை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். வேறு எந்த விதமான விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification 2023 Pdf 

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.8,500/- உதவித்தொகையுடன் உங்களுக்கான வேலை!

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.8,500/- உதவித்தொகையுடன் உங்களுக்கான வேலை!

NAPS-ன் கீழ் Hmt Machine Tools Limited ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Turner பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Hmt Machine Tools Limited காலிப்பணியிடங்கள்:

Turner பணிக்கென காலியாக உள்ள 10 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Turner கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hmt Machine Tools Limited வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Fitter ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.7,700/- முதல் ரூ.8,500/- வரை உதவித்தொகை வழங்கப்படும்.

Hmt Machine Tools Limited தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TCS நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு

 

TCS நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு – ஜாக்பாட் வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க!

தனியார் நிறுவனமான TCS ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை அதன் அதிகாரபூர்வ தளத்தில் தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Executive(Webchat) பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் Written Test / Online Test (CBT) / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

TCS காலிப்பணியிடங்கள்:

TCS வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Executive(Webchat) பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Executive(Webchat) கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Com தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

TCS வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Executive(Webchat) முன் அனுபவம்:

1 முதல் 5 ஆண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் கொண்ட விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

TCS ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு TCS-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Executive(Webchat) தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Written Test / Online Test (CBT) / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 01.12.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ஒரு மாசத்துக்கு டீ குடிக்காம இருந்தால் என்ன ஆகும்..? டீ பிரியர்கள் அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

 தேநீர் மீதான காதல் இந்தியர்களிடம் இருக்கக்கூடிய மிகப்பெரிய ஒற்றுமை என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு இந்தியாவில் டீ பிரியர்கள் அதிகம். காலை எழுந்தவுடன் பல் துலக்கி விட்டு டீ குடிப்பது தான் நம்மில் பலரது முதல் வேலையாகவே இருக்கும். தேநீர் குடித்த உடன் நமக்கு ஏதோ புதுவித ஆற்றல் கிடைத்ததாக நாம் உணர்வோம். அந்த ஆற்றலை கொண்டு நாள் முழுவதும் ஓட்டி விடுவோம். அந்த அளவுக்கு டீயானது நமது வாழ்க்கையில் வேரூன்றி உள்ளது. ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு டீ குடிப்பதால் தவறொன்றும் இல்லை. ஆனால் அதிக அளவில் டீ குடிப்பது நிச்சயமாக நம் உடலில் நாள்பட்ட சிக்கல்களை ஏற்படுத்தும்.


இது போன்ற சூழ்நிலையில் டீயை ஒரேடியாக தவிர்த்து விடுவது நல்லதா? ஒரு மாதத்திற்கு டீ குடிக்காமல் இருந்தால் நம் உடலில் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும்? இந்த கேள்விகளுக்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.

முற்றிலுமாக டீயை தவிர்ப்பதால் கிடைக்கக்கூடிய பலன்கள்: ஒரு மாதத்திற்கு டீ குடிக்காமல் இருப்பதால் நமது உடலில் காஃபைன் உட்கொள்ளல் குறைகிறது. இதன் காரணமாக நமக்கு ஆழ்ந்த மற்றும் மேம்படுத்தப்பட்ட தூக்கம் கிடைப்பதோடு பதட்டம் குறைகிறது.

 டீயில் டையூரிடிக் விளைவுகள் இருப்பதன் காரணமாக டீயை அதிக அளவில் குடிப்பதால் நம் உடலில் இருக்கக்கூடிய நீர்ச்சத்து குறைகிறது. 

எனவே டீ குடிப்பதை கைவிடுவது டீஹைட்ரேஷன் தொடர்பான பிரச்சனைகளை குறைப்பதற்கு உதவும். அதுமட்டுமல்லாமல் டீ குடிப்பதை விடுவது நமது செல்களில் சேதத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை குறைக்கிறது. இதன் காரணமாக செரிமான பிரச்சனைகள் மற்றும் ஒரு சில வகையான புற்று நோய்கள் தடுக்கப்படுகிறது.

டீயை முற்றிலுமாக தவிர்ப்பதால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள்: ஒரு சிலருக்கு டீ குடிப்பது சௌகரியம் மற்றும் ஒரு வித ஓய்வை அளித்து வந்ததால் டீ குடிப்பதை நிறுத்தியவுடன் மன ரீதியான பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. டீ குடிப்பதை விட்டவுடன் சிலருக்கு சோர்வு, மந்தத்தன்மை, தூக்க கலக்கம், தலைவலி, கவனிப்பதில் சிக்கல் போன்ற அறிகுறிகள் உண்டாகலாம். எனினும் இதுபோன்ற அறிகுறிகள் சில நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும். உடலானது தேநீர் இல்லாமல் இருப்பதற்கு தன்னை பழகிக் கொண்டவுடன் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.

டீக்கு பதில் என்ன குடிக்கலாம்? ஒருவேளை உங்கள் டயட்டிலிருந்து டீயை முற்றிலுமாக நீக்குவதற்கு நீங்கள் முடிவு செய்து இருந்தால், நீங்கள் டீக்கு பதிலாக மூலிகை தேநீர், பழச்சாறு அல்லது வெந்நீர் போன்றவற்றை முயற்சி செய்யலாம். 

சாமந்திப்பூ, புதினா போன்ற காஃபைன் இல்லாத தனித்துவமான சுவை கொண்ட மூலிகை தேநீர்கள் நம் உடலுக்கு சாதகமான பல விளைவுகளை தருகிறது. 

குறிப்பாக ஆப்பிள் அல்லது கிரான்பெர்ரி போன்ற பழச்சாறுகள் இயற்கையாகவே காஃபைன் இல்லாத காரணத்தினால் நம் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்க உதவுகிறது. 

அதுமட்டுமல்லாமல் வெந்நீருடன் எலுமிச்சை அல்லது தேன் சேர்த்து குடிப்பது தேநீரைப் போல நமக்கு கதகதப்பையும், சௌகரியத்தையும் தர உதவுகிறது.

எனினும், ஒரு சில நபர்கள் கட்டாயமாக டீ குடிப்பதை தவிர்ப்பது நல்லது. உணர்திறன் கொண்ட வயிறு (சென்சிடிவ் ஸ்டொமக்) அல்லது நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படும் நபர்கள் காஃபைன் மற்றும் டானின் உள்ள டீயை தவிர்க்க வேண்டும். 

கர்ப்பிணி பெண்கள் அல்லது பாலூட்டும் தாய்மார்கள் டீயை மிதமான அளவு உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் அதிகப்படியான தேநீர் வளர்ந்து வரும் சிசுவை பாதிக்கலாம்.

 இரும்புச்சத்து குறைபாடு காரணமாக ரத்த சோகையினால் அவதிப்படும் நபர்கள் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும். 

டீயில் உள்ள டானின் இரும்புச்சத்து உறிஞ்சுதலை தடுக்கிறது. எனவே ரத்த சோகை நிலை இன்னும் மோசமாக கூடும்.

இறுதியாக உங்கள் தனிப்பட்ட ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு நீங்கள் டீ குடிக்கலாமா, ஒரு நாளைக்கு எத்தனை டீ குடிக்கலாம் என்பது போன்ற கேள்விகளுக்கு பதிலை தெரிந்து கொள்ள நீங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

சிறுநீரகத்தை பாதிக்கும் 5 நோய்கள்... எச்சரிக்கும் ஆரம்ப கால அறிகுறிகளை தெரிஞ்சுக்கோங்க..!

 நமது உடலில் சிறுநீரகம் மிகவும் முக்கிய உறுப்புகளில் ஒன்றாகும். உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நீரை சுத்திகரிப்பதோடு உடலை ஆரோக்கியமாக பேணவும் நமக்கு சிறுநீரகம் உதவுகிறது. மேலும் எலக்ட்ரோலைட் சமனிலையை சரியாக வைத்திருக்கவும் எரித்ரோபொரிடின், கால்சிட்ரோல் மற்றும் ரெனின் போன்ற ஹார்மோன்கள் சுரக்கவும் இது உதவுகிறது.

நம் உடலில் உள்ள pH, உப்பு, பொட்டாசியம் ஆகியவற்றை ஒழுங்குப்படுத்துவதில் சிறுநீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறுநீரகம் உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் நம் உடலில் உள்ள ரத்த அழுத்தத்தை முறைபடுத்தவும் ரத்த அணுக்களின் உற்பத்தியை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. ஆகையால் சிறுநீரகத்தில் எந்தப் பிரச்சனை ஏற்பட்டாலும் நமது உடலுக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள், மரபணு காரணங்கள் மற்றும் பல்வேறு நோய்களால் சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகிறது.

பொதுவாக ஏற்படும் 5 சிறுநீரக கோளாறுகள்: நாள்பட்ட தீராத சிறுநீரக நோய் : இது மிகவும் பொதுவாக சிறுநீரகத்தில் ஏற்படும் நோயாகும். உயர் ரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு நோய் காரணமாக இது ஏற்படுகிறது. இந்த இரண்டு நோய்களுமே சிறுநீரகத்தில் உள்ள ரத்தகுழாயை பாதித்து, ரத்த சுத்திகரிப்பை தடுக்கிறது. இதனால் நாளடைவில் நமது சிறுநீரகத்தின் செயல்பாடு மோசமடைகிறது.

சிறுநீரக கற்கள் : இது பெரும்பாலான மக்களுக்கு ஏற்படும் உடல்நலக் கோளாறாகும். சிறுநீரகத்தில் சுத்திகரிப்பு நடைபெறும் போது, நம் ரத்தத்தில் உள்ள மினரல்கள் படிகமாகி கற்களாக உருவாகிறது. இது மிகவும் வலியை ஏற்படுத்துவதோடு சிறுநீர் கழிக்கும் போது ரத்தமும் சேர்ந்து வரும். ஆனால் மற்ற சிறுநீரக நோய்களை ஒப்பிடும் போது இது ஒன்றும் அவ்வளவு ஆபத்தானதில்லை. சில சமயங்களில் சிறுநீரில் இந்த கற்களும் வெளியே வரும். அந்த சமயத்தில் வலி அதிகமாக இருக்கும்.

பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் : நமது சிறுநீரகத்தில் பல நீர்க்கட்டிகள் உருவாகும் போது இந்நோய் ஏற்படுகிறது. வழக்கமான சிறுநீரக நீர்க்கட்டிகளை விட இது கொஞ்சம் வித்தியாசமானது. இதன் வடிவம் வேறாக இருப்பதோடு பெரிதாகவும் வளரக்கூடியது. இது நமது சிறுநீரக செயல்பாட்டை பாதித்து சிறுநீரக கோளாறுகளை ஏற்படுத்துகிறது.

குளோமெருலோனெப்ரிடிஸ் : சில தொற்றின் காரணமாக நமது சிறுநீரகத்தில் உள்ள சிறிய ரத்த குழாய்களான குளோமெருலியில் வீக்கம் ஏற்படுகிறது. இதன் காரணமாக குளோமெருலோனெப்ரிடிஸ் நோய் நம் சிறுநீரகத்தை தாக்குகிறது. நமது சிறுநீரகம் நன்றாக செயல்படுவதற்கு இந்த சிறிய ரத்த குழாய்கள் மிகவும் அவசியமாகும். இவைதான் ரத்தத்தை சுத்திகரித்து கழிவை அகற்றுகிறது. இது உயிரை பறிக்கும் அளவிற்கு ஆபத்தான நோய் இல்லை என்றாலும் சரியான நேரத்தில் சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம்.

சிறுநீர் பாதை நோய்த்தொற்று : சிறுநீரகப்பையில் ஏற்படும் பாக்டீரியா தொற்றால் இந்நோய் வருகிறது. இதை எளிதில் குணப்படுத்தலாம். ஆனால் சரியான நேரத்தில் கவனிக்காமல் முறையான சிகிச்சையும் எடுக்காமல் இருந்தால் சிறுநீரகத்தில் மோசமான பிரச்சனைகள் ஏற்படும். சில சமயங்களில் சிறுநீரகம் செயல்படாமல் போகக்கூட வாய்ப்புண்டு.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

காலையில் எழுந்ததும் தலைவலி வருகிறதா..? இந்த 8 பிரச்சனைகள்தான் காரணம்..!

 காலையில் வரும் ஒற்றைத் தலைவலியால் பலரும் பெரிதும் அவதிப்படுகிறார்கள். பலருக்கும் இது எதனால் வருகிறது எனத் தெரிவதில்லை. ஏன் உங்களுக்கு தலைவலி வருகிறது என்பதற்கான 8 காரணங்களை இந்தக் கட்டுரையில் கூறியுள்ளோம்.

தினமும் காலையில் மோசமான தலைவலியோடுதான் கண் விழிக்கிறீர்களா? அப்படியென்றால் அதற்கு பல காரணங்கள் இருக்கிறது. காலையில் தலைவலியோடு இருப்பது அன்றைய நாளையே மோசமாகிவிடும். இதனால் ஒரு வேலையும் செய்ய முடியாமல் திணறிப் போவீர்கள். பொதுவாக மக்களுக்கு பல வகையான தலைவலிகள் ஏற்படுகின்றன. ஒற்றைத் தலைவலி, கிளஸ்டர் தலைவலி, ஹிப்னிக் தலைவலி, பதட்டத்தில் ஏற்படும் தலைவலி மற்றும் பராக்ஸிஸ்மல் தலைவலி என சொல்லிக்கொண்டே போகலாம். இந்த தலைவலி எதனால் ஏற்படுகிறது, அதற்கான காரணங்கள் என்ன என்பதை நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.


தூக்கமின்மை : நீங்கள் இரவு நேரத்தில் சரியாக தூங்கவில்லை என்றால், காலையில் தலைவலியோடுதான் எழும்புவீர்கள். நீண்ட நாட்களாக சரியான தூக்கம் இல்லாதவர்கள் இன்சோம்னியாவால் பாதிக்கப்படுவார்கள். இவர்களுக்கு அடிக்கடி தலைவலி வரக்கூடும், அதுவும் காலை நேரங்களில் அதிகப்படியாக இருக்கும். இந்தப் பிரச்சனையிலிருந்து மீள சரியான சிகிச்சையை எடுத்துக் கொள்ளுங்கள்.


அதிகப்படியான தூக்கம் : அட ஆமாங்க, அதிகமான நேரம் தூங்கினாலும் தலைவலி உண்டாகும். இப்படிச் செவது உங்களுக்கு வித்தியாசமாக தெரியலாம். ஆனால் நீங்கள் அதிக நேரம் தூங்கும் போது உங்களின் இயற்கையான சர்காடியன் ரிதத்தில் சிக்கல் உண்டாகி, உங்களின் தூக்க சுழற்சி பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக தலைவலி உண்டாகிறது.


கவலை : மன அழுத்தம் மற்றும் கவலைகள் உங்களுக்கு ஒற்றைத் தலைவலியை உண்டாக்கும். மேலும், மன அழுத்தம் உங்களின் தூகத்தையும் பாதிக்கும். ஒற்றைத் தலைவலி மற்றும் பிற தீவிர தலைவலிக்கும் உங்கள் மனநிலைக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. உங்களுக்கு மனநல பிரச்சனைகள் இருந்தால், அது சம்மந்தமான மருந்துகளை சரியாக எடுத்துக் கொள்ளுங்கள். நன்றாக தூங்குங்கள். அப்போதுதான் காலையில் தலைவலியோடு எழுந்துகொள்ள மாட்டீர்கள்.


தூக்கத்தில் மூச்சுத்திணறல் : தூக்கத்தில் மூச்சுத்திணறல் (ஸ்லீப் ஆப்னியா) ஏற்படுவது குறித்து மக்களிட்த்தில் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். குறட்டை விடும்போது உங்களின் சுவாசம் தடைபடுகிறது. இதன் காரணமாக உங்களின் இரவு நேர தூக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சரியான தூக்கம் இல்லாத காரணத்தல், காலையில் எழுந்த்தும் தலைவலி ஏற்படுகிறது.

பற்களை கடிக்கும் பழக்கம் : அடிக்கடி பற்களை கடிக்கும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா? அப்படியென்றால் உங்களுக்கு காலையில் எழுந்ததும் தலைவலி ஏற்படும் பிரச்சனை இருக்கும். இப்படி பற்களை கடிப்பதால் தாடை மூட்டுகளில் வலி உண்டாகிறது. இதன் காரணமாக உங்களுக்கு தலைவலி வருகிறது.

பிற உடல்நல கோளாறுகள் : சில சமயங்களில் வெளியே தெரியாத வகையில் உங்கள் உடலுக்குள் நோய்க்கூறுகள் இருந்தாலும், உங்களின் தூக்கம் பாதிக்கப்படும். அடிக்கடி காலையில் தலைவலி வந்தால், அது மூளையில் ஏற்பட்டுள்ள கட்டிகளின் அறிகுறிகளாக கூட இருக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நீர்ச்சத்து குறைபாடு : போதுமான அளவு தண்ணீர் அருந்தாமல் இருந்தால் கூட தலைவலி ஏற்படும் வாய்ப்புள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? இரவு நேரத்தில் போதுமான அளவு தண்ணீர் அருந்தவில்லை என்றால், தூங்கும் போது உங்களின் நீர்ச்சத்து குறைந்துவிடும். இதன் காரணமாக காலையில் கண் விழித்த்தும், தலைவலி வருகிறது. ஆகையால் இரவு படுப்பதற்கு முன்பு போதுமான அளவு நிர் அருந்துங்கள்.

கழுத்து தசைப்பிடிப்பு : ஒழுங்கற்ற முறையில் அல்லது சரியான நிலையில் படுக்காத போது, உங்கள் கழுத்து தசைகளில் அதிகப்படியான அழுத்தம் உண்டாகிறது. இது உங்களுக்கு தலைவலியை தூண்டுகிறது.

அறிகுறிகளை உதாசினப்படுத்தாதீர்கள் : உங்கள் உடலில் வழக்கத்திற்கு மாறான வகையில் ஏற்படும் அறிகறிகளை உதாசினப்படுத்தாதீர்கள். ஆரம்பத்தில் லேசாக இருந்த மாதிரி தெரியும். ஆனால் போகப் போக உங்கள் உடலுக்குள் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். காலையில் எழுந்ததும் அடிக்கடி தலைவலி வந்தால், இதன் கூடவே வேறு ஏதாவது அறிகுறிகள் வருகிறதா எனப் பாருங்கள். உங்கள் மருத்துவரை நேரில் சந்தித்து இதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்ளுங்கள்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் சமூக பணியாளர் வேலை - திருவள்ளூர் மக்களே இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

 திருவள்ளூர் மாவட்ட  நல சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்ட புகையிலை பொருட்கள் பயன்பாட்டு கட்டுப்பாட்டு மையத்தில் (District Tobacco Control Cell) உள்ள காலிப்பணியடங்களுக்கு ஆள்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்:   Social Worker (சமூக பணியாளர்)

கல்வித் தகுதி: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள்,  சமூகவியல் அல்லது சமூக பணியாளர் ஆகிய பாடங்களில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகால பணி அனுபவம் இருக்க வேண்டும். சுகாதார துறையில் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

ஊதியம்: மாதம் தொகுப்பூதியமாக ரூ.23,800 வழங்கப்படும்.

நிபந்தனைகள்: இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது என்றும் எந்த ஒரு காலத்திலும் நிரந்தரம் செய்யப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்ட இணையதள முகவரியில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை, நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதார பணிகள்,  மாவட்ட நலவாழ்வு சங்கம்

துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகம்,  54/5. ஆசூரி தெரு,

திருவள்ளூர் மாவட்டம் - 602 001 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள் 13.09.2023 ஆகும். மேலும், விவரங்கள் அறிந்து கொள்ள 044 -27661562 என்ற தொலைபேசி எண்ணிலும், dphtlr@nic.in என்ற  மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

12ம் வகுப்புத் தேர்ச்சி போதும் : மத்திய அரசில் 7,547 காவலர் பணியிடங்கள்

டெல்லி காவல்துறையில் காலியாக உள்ள 7,547 காவலர் (ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கான (நிர்வாகம்) தில்லி காவல் தேர்வு 2023 ) பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதில் தகுதியான நபர்களை தேர்வு செய்வதற்காக நடத்தப்படவுள்ள போட்டித் தேர்வுக்கு நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது

காலியிடங்கள் விவரம்: மொத்த காலிப்பணியிடங்களில், பெண் காவலர்களுக்கான (நிர்வாகம்) இடங்கள் 2491 ஆகவும், ஆண் காவலர்களுக்கான (நிர்வாகம்) இடங்கள் 4453 ஆகவும் உள்ளது.  முன்னாள் ராணுவத்தினர் வரிசையின் கீழ் 603 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.


விண்ணப்பம் செய்வது எப்படி? விண்ணப்பதாரர்கள் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பங்களை அனுப்புவதற்கு கடைசி தேதி 30.09.2023 (இரவு 11.00 மணி)  அன்றிரவே விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதச் சம்பளம் : ஊதிய நிலை 3  (21,700 - 69,100)


கல்வி தகுதி: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:  விண்ணப்பதாரர்கள் 01-07-2023 அன்று 18 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.  இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.

எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். பட்டியல்/ பழங்குடியினத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர்  8 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.

விண்ணப்பக் கட்டணம்:  இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர்  விண்ணப்பிக்க கட்டணம் செலுத்திவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.   

தேர்வு நடைபெறும் நாள்: டிசம்பர் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது அறிவு (General Awareness), கணித பிரச்னை தீர்க்கும் ஆற்றல் (Numerical ability), காரணங்கானல் (Logical Reasoning), கணினி அறிவியில் அடிப்படை  (English Language) ஆகிய நான்கு கூறுகளைக் கொண்டதாக உள்ளது.

கணினி வழியில் நடைபெறும்  எழுத்துத் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் மட்டுமே நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைக்கடிகாரம், புத்தகங்கள், துண்டுச்சீட்டு, சஞ்சிகைகள், செல்பேசி ப்ளூடூத் சாதனங்கள், ஹெட்போன்கள் சிறிய அளவிலான கேமராக்கள், ஸ்கேனர்கள், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் உள்ளிட்டவைகளை தேர்வு மையத்திற்குள் எடுத்துச்செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் மின் அனுமதி சான்றிதழ் மற்றும் அசல் அடையாள அட்டைகளை விண்ணப்பதாரர்கள் கட்டாயம் தேர்வு மையத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news 

தமிழ்நாடு மின் ஆளுமை முகமையில் மேலாளர் பணியிடங்கள் : இளைஞர்களே இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

 தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள  மின்-மாவட்ட மேலாளர் (E- District Managaer) பணியிடங்களை நிரப்புவதற்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.     

ஆள்சேர்க்கை விவரங்கள் : 

நிறுவனம் / துறைதமிழ்நாடு மின் ஆளுமை முகமை
பதவிமின்-மாவட்ட மேலாளர்
இணையதளம் மூலம்  விண்ணப்பம் தொடங்கும் நாள்ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி
இணையதளம் மூலம் விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள்செப்டம்பர் 11ம் தேதி
வயது தகுதி 01- 06-2023 அன்றைய தேதியில் 21 - 35 வயதுக்குள் இருக்க வேண்டும்
காலியிடங்கள்நாமக்கல் -  1நாகப்பட்டினம் -  1பெரம்பலூர் -   1திருச்சி -  1திருப்பூர் - 1வேலூர் -  1விழுப்புரம் -  1காஞ்சிபுரம் -  1
கல்வித் தகுதிகணினி அறிவியல்/கணினிஅறிவியல் மற்றும் பொறியியல்/தகவல் தொழில்நுட்பம்/ தகவல் தொடர்பு தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பி.இ, பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.(அல்லது)ஏதாவது இளநிலை பட்டத்துடன் எம்.சி.ஏ, எம்.எஸ்.சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கணினி வழி மூலம் தேர்வு நடைபெறும் நாள்24.09.2023
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்ரூ. 250/- ஆகும்

tnega என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்:  ஆள்சேர்க்கை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். அதேபோன்று, மேற்குறிப்பிட்ட பாடங்களைத் தவிர வேறு துறையில் பட்டம் பெற்றவர்கள் இத்தேர்வில் பங்கேற்க முடியாது.

விண்ணப்பதாரர் கண்டிப்பாக அந்தந்த  மாவட்டத்தைச்  சேர்ந்தவர் என்பதற்கான, இருப்பிட சான்றிதழ் அல்லது பிறப்பிட சான்றிதழை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆள்சேர்க்கை அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.

விண்ணப்பதாரர்கள்  https://tnega-edm.onlineregistrationform.org/TEG/  என்ற இணையதளத்திற்கு வருகை தந்து சமீபத்திய தகவல்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம். மேலும் தெளிவான விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள், பின்வரும் தொலைபேசி என்னிலும்  தொடர்பு கொள்ளலாம் 044-40016235 . மின்னஞ்சல் தொடர்புக்கு edm2023@onlineregistrationform.org ஆகும்.



 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

பாரத் ஸ்டேட் வங்கியில் 6,160 காலியிடங்கள் அறிவிப்பு : உடனே அப்ளை பண்ணுங்க!

 நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி 6, 160 தொழில்பழகுநர் (Apprentice) காலிப்பணியடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள் விவரம்:   6,160

பதவி: தொழில்பழகுநர் (Apprentice)

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி காலம்: ஓராண்டு

ஊதியம்: பனிக்காலத்தின் போது  மாதம் ரூ. 15,000 நிதியுதவியாக அளிக்கப்படும். இதர ஊதிய நலன்கள் வழங்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: இணையவழி எழுத்துத் தேர்வு , உள்ளூர் மொழி அறிவு (Test of Local Language) ஆகியவற்றில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும்.

எழுத்துத் தேர்வு, பொது/ நிதி மேலாண்மை விழிப்புணர்வு (General/Financial Awareness), பிரச்னை தீர்க்கும் ஆற்றல் (Problem Solving ability), காரணங்கானல் (Logical Reasoning), ஆங்கில மொழித்திறன் (English Language) ஆகிய நான்கு கூறுகளைக் கொண்டதாக உள்ளது.

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 300/- ஆகும். பட்டியலின/ பழங்குடியின/ மாற்றுத் திறனாளி விண்ணப்பதாரர்கள் கட்டம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் செய்வது எப்படி? https://nsdcindia.org/apprenticeship (அல்லது)  https://apprenticeshipindia.org (அல்லது)  http://bfsissc.com (அல்லது)  https://bank.sbi/careers (அல்லது)  https://www.sbi.co.in/ careers ஆகிய இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் மொழி அவசியம்:  இந்த பதவிக்கு உள்ளூர் மொழி அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமிழ் மொழியில் எழுத, பேச, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.  மொத்தமுள்ள 6, 160 காலியிடங்களில் தமிழ்நாட்டில் மட்டும் 648 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக இதற்கு விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். ஆள்சேர்க்கை அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பேக் கிளிக் செய்யலாம்.

இரவு உணவை தவிர்த்தால் இவ்வளவு நன்மைகள் இருக்கா?

 “காலை உணவு அரசனைப் போலவும், மதிய உணவு அரசியைப் போலவும், இரவு உணவு ஒரு யாசகனைப் போலவும்” இருக்க வேண்டும் என்று பலர் சொல்லுவது நம் காதுகளில் கேட்டிருக்கும். இந்த சூழலில் இரவு உணவு என்பது அத்தியாவசியமானது இல்லை என்று கூறுகின்றனர் நிபுணர்கள். அதாவது இரவு 7 மணிவரை எந்த நல்ல உணவை வேண்டுமானலும் உண்ணலாம் என்றும், அதன் பிறகு உணவை அறவே தவிர்ப்பது உடல் இயக்கங்களுக்கு நல்ல ஆதரவை தரும் என்று தெரிவிக்கின்றனர். இதை பலரும் முயற்சி செய்து, பின் அது நல்ல பலன் தருவதாக கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, நாம் இன்று இரவு உணவைத் தவிர்த்தால் என்னென்ன நல்லது நடக்கும் என்று விரிவாகப் பார்க்கலாம்.

செரிமான சக்தி வலுப்பெறும் : நம் உடலில் உள்ள செரிமான உறுப்புகள் மாலை நேரத்திற்கு பிறகு சரியான முறையில் வேலை செய்யாது. அதற்கும் சிறிது ஓய்வு தேவை அல்லவா. இதனால் 7 மணிக்கு மேல் உணவை வயிற்றில் கொட்டி செரிமான உறுப்புகளை டென்ஷன் ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதன் விளைவாக நமக்கு பல நன்மைகள் கிடைக்கும். நிம்மதியான தூக்கம், காலையில் எழும்போது சோர்வின்மை போன்ற பல நன்மைகள் இதில் அடங்கும்.

உடல் எடையைக் குறைக்கலாம் : இரவு நேரத்தில் உணவைத் தவிர்த்தால் எளிதாக உடல் எடையை குறைக்கலாம் என பல நிபுணர்கள் தங்கள் கருத்தை முன்வைத்துள்ளனர். உடலில் தேவையில்லாத கொழுப்பு தங்குவதையும் இந்த முறை தவிர்ப்பதாக கூறியுள்ளனர். உடலில் உள்ள நல்ல கலோரிகளை சேமித்து வைக்க இரவு உணவை நாம் தவிர்ப்பது நல்லதாகும்.

சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் : ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த இரவு உணவைத் தவிர்க்கலாம். இரவு அதிகமான பசி இருந்தால் சூப் போன்ற சக்தி நிறைந்த திரவ உணவுகளை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். அதுவும் 8 அல்லது 9 மணிக்குள் எடுத்துக் கொள்ளுங்கள். உணவில் இருக்கும் தேவையற்ற சர்க்கரை பொருள்கள் சரியான செரிமானம் இல்லாமல் உடலின் ரத்தத்தில் கலந்து நீரிழிவு நோய்க்கான ஆபத்தை வலுப்படுத்தும். எனவே, இரவு உணவை தவிர்ப்பது நல்லது.

உண்ணாவிரத பயன்கள் : இரவு ஒரு நேரம் நாம் உணவை தவிர்ப்பதால், உடல் பாகங்கள் அத்தனையும் வலுப்பெறுகிறது. தேவையில்லாமல் பசியைத் தூண்டும் பழக்கத்தில் இருந்து நம்மை விடுபடச் செய்கிறது. இரவு உணவை எப்படி தவிர்ப்பது நல்லதோ, அதேவேளை காலை உணவைத் தவிர்க்காமல் இருப்பது மிகவும் நல்லதாகும். செரிமானத் திறன் உடலில் அதிகம் கிடைக்கும் நேரம் காலை என்பதால், அத்தியாவசியமான சத்துள்ள உணவுகளை காலையிலேயே எடுத்துக் கொள்ளுங்கள்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip