Search

BrahMos Aerospace-ல் ரூ.1,71,070/- ஊதியத்தில் வேலை – தேர்வு எழுத தேவையில்லை || நேர்காணல் மட்டுமே!

 

BrahMos Aerospace-ல் ரூ.1,71,070/- ஊதியத்தில் வேலை – தேர்வு எழுத தேவையில்லை || நேர்காணல் மட்டுமே!

BrahMos Aerospace Private Limited ஆனது Systems Engineer பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.60,000/- முதல் ரூ.1,71,070/- வரை மாத ஊதியம் வழங்கப்படும். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Systems Engineer பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 28 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.60,000/- முதல் ரூ.1,71,070/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
  • விண்ணப்பிக்கும் முறை:

    தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 10.09.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

    Download Notification PDF

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

TNJFU பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.45,000/- சம்பளம்!

 

TNJFU பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.45,000/- சம்பளம்!

Tamil Nadu Dr.J.Jayalalithaa Fisheries பல்கலைக்கழகமானது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Assistant Professor பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TNJFU காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் Assistant Professor பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Dr.J.Jayalalithaa Fisheries University கல்வி தகுதி:

பணிபுரிய ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBA, Ph.D பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Assistant Professor ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.40,000/- முதல் ரூ.45,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

TNJFU தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியுள்ள நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNJFU விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியான நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து , தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரி மூலம் இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification & Application Form Link

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

Black Coffee: அட்ரா சக்க அட்ரா சக்க.. பிளாக் காஃபி குடிப்பதால் இம்புட்டு நன்மையா?

 

பிளாக் காஃபி குடிப்பதால் ஏற்படும் பயன்களை இங்கு பார்க்கலாம்!

பிளாக் காஃபியில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ், வைட்டமின்கள், பொட்டாசியம், மக்னீசியம் உள்ளிட்டவை இருக்கின்றன

நாள் ஒன்றுக்கு இரண்டு பிளாக் காஃபி குடிப்பதால் அல்சைமர் நோய் வராமல் தடுக்க முடியும்.

நீங்கள் பிளாக் காஃபியில் இனிப்பு சேர்க்காமல் இருந்தால் அது எடையை குறைக்க பயன்படும்.

குளூக்கோஸ் உற்பத்தியை குறைக்கும் அமிலம் இதில் இருக்கிறது.

ஒர்க் அவுட் செய்வதற்கு முன்னதாக பிளாக் காஃபி குடிக்கும் போது நமது உடலின் எனர்ஜி நன்றாக அதிகரிக்கிறது. அதனால் நம்மால் நன்றாகவே ஒர்க் அவுட் செய்ய முடியும். அதே போல நம்முடைய கவனமும் மேம்படுகிறது.

பிளாக் காஃபி இன்சுலினை நன்றாக சுரக்க வைக்கும். இது டைப் 2 சர்க்கரை வியாதி வருவதை தடுக்கும்.

உங்களது மூடில் ஆதிக்கம் செலுத்தி உங்களை விழிப்புணர்வாக வைத்திருக்கும்.

----------------

நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும் உணவுகளையும் இங்கு பார்த்து விடலாம் 

 

நோய் எதிர்ப்பு சக்தியை சீராக பராமரிப்பதில் உணவுக்கு முக்கிய பங்கு உண்டு!

அதிகப்படியான வெள்ளைச்சர்க்கரை இரத்த அணுக்களின் செயல்பாட்டு மற்றும் நோயுடன் எதிர்த்து போராடும் தன்மையைக் குறைத்து விடும். கவனம்!

பதப்படுத்தப்பட்ட சோடியம் நிறைந்த உணவை தவிர்க்க வேண்டும். காரணம் இது நாள்பட்ட அழற்சி நோயை உருவாக்குவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் குறைக்கும்.

அதிகப்படியாக ஆல்கஹால் அருந்துவது நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதித்து, தொற்று நோய்கள் உருவாக வழிவகுக்கும்!

அதிகப்படியாக பொறித்த உணவுகளை சாப்பிடும் போதும் நமது நோய் எதிர்ப்பு மணலம் பாதிக்கப்படும். ஊட்டச்சத்து மற்றும் நார்ச்சத்து குறைவான உணவுகள் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் சமநிலைத்தன்மையை பாதித்து விடும்!


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

Happy Manthras : வாழ்வில் மகிழ்ந்திருக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய மந்திரங்கள் 7

 

Happy Manthras : நம் அனைவரின் வாழ்வின் ஒற்றை குறிக்கோள் என்றால், அது மகிழ்ந்திருப்பது மட்டும்தான். ஒருவருக்கு மகிழ்ச்சியென்றால், அது அவர்கள் செய்யும் வேலையை திறம்பட செய்வதாகும், அதுவே மற்றொருவருக்கு அது சுத்தமாக வேறுபடும்.

அது அவர்கள் நகரின் பரபரபான பஜாரில் ஷாப்பிங் செய்வதாக இருக்கலாம். ஒருவருக்கு மகிழ்ச்சி என்பது ஊர் சுற்றுவதாக இருக்கலாம். அதுவே மற்றொருவருக்கு வீட்டிலேயே இருப்பதாக இருக்கலாம்.

இவ்வாறு மகிழ்ச்சி என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும் எனில், ஒரே விஷயத்தை நாம் பின்பற்றிக்கொண்டிருக்க முடியாது. ஆனாலும், நாம் மகிழ்ந்திருப்பது அடுத்தவர்களையோல அல்லது நமது குடும்பத்தையோ, சமூகத்தையோ பாதிக்கக்கூடாது. எடுத்துக்காட்டாக மது நமக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒன்று எனில், அது நிச்சயம் நமது சமூகத்துக்கும், குடும்பத்துக்கும் கேடு விளைவிக்கும். எனவே அடுத்தவர்களை நாம் துன்புறுத்தாமல் காணுவதே இன்பம்.

இன்பமும், துன்பமும் சேர்ந்ததுதான் வாழ்க்கை எனில் அனைத்து சூழலிலும் இன்புற்றிருக்க உங்களுக்கு இவை உதவும்.

அனைத்து சூழலலிலும் உள்ள நல்லதை மட்டுமே பாருங்கள்

எந்த ஒரு சூழலிலும் உள்ள நல்லதை மட்டுமே பார்க்க வேண்டும். இன்பமோ, துன்பமோ அதில் நல்லது எது என்று பாருங்கள். அப்படி ஒரு நேர்மறை எண்ணத்துடன் நீங்கள் செல்லும்போதுதான் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது. எதிர்மறை எண்ணங்களே உங்கள் வாழ்க்கையை அழித்துவிடும்.

மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை புறக்கணியுங்கள்

உங்கள் குறித்த மற்றவர்களின் கருத்தை காதில் போட்டுக்கொள்ளாதீர்கள். ஏனெனில், அது உங்களை உற்சாகப்படுத்தாது, சோர்வடையச் செய்யும். எனவே மற்றவர்களின் சரியான விமர்சனங்களை மட்டுமே பரிசீலனை செய்யுங்கள். தவறான விமர்சனங்களை விட்டுவிடுங்கள். உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழவேண்டும் எனில், சிலரிடம் கடுமை காட்டித்தான் ஆக வேண்டும். அதற்காக வருந்தாவிட்டால் உங்கள் மகிழ்ச்சி உங்கள் கையில் இருக்கும்.

நன்றியுடன் இருக்கும் பண்பை வளர்த்துக்கொள்ளுங்கள்

ஒருவர் செய்த நன்றியை வாழ்நாளில் என்றுமே மறந்துவிடாதீர்கள். ஏனெனில் நன்றி மறப்பது நன்றன்று என்றுதான் வள்ளுவரும் வலியுறுத்தியுள்ளார். அனைவரும் சிறிய நிலையில் இருந்து உச்ச நிலைக்கு செல்ல முடியும். நிச்சயம் அதற்கு பலர் உதவியிருப்பார்கள். எனவே அந்த நன்றியை மட்டும் மறந்துவிடாதீர்கள்.

முடிந்தவை முடிந்தவையாக இருக்கட்டும்

முடிந்தவை முடிந்தவையாக இருக்கட்டும். நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். கடந்த கால கசப்புகள் எதுவும் நம்மை தொடர்ந்து அச்சுறுத்திக்கொண்டே இருக்கக்கூடாது. அதை கடந்துமுடித்துவிட வேண்டும். கடந்த காலத்தை எண்ணிக்கொண்டிருந்தால், நிகழ்காலமும் நரகமாவிடும் என்பதால் அதை மறப்பதே நல்லது.

கிசுகிசுக்களை கண்டுகொள்ளாதீர்கள்

உங்களை பற்றிய பல்வேறு கிசுகிசுக்கள் வந்துகொண்டேயிருக்கும். அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு சென்றுகொண்டிருங்கள். அவற்றிற்கெல்லாம் பதில் கொடுத்துக்கொண்டிருந்தால் உங்களால் ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யமுடியாது.

உங்கள் வாழ்க்கையை நீங்களே வடிவமையுங்கள்

உங்கள் வாழ்க்கையை நீங்களே வடிவமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள். மற்ற யாருடைய பாதிப்பும் அதில் இருந்துவிடக்கூடாது. உங்கள் மகிழ்ச்சிக்கும், துன்பத்துக்கும் நீங்களே காரணம். எனவே உங்களுக்கு எது மகிழ்ச்சி தருமோ அதையே நீங்கள் செய்ய வேண்டும்.

அதிகம் சிரியுங்கள்

அதிகம் சிரித்து பழகுங்கள். எவ்வளவு அதிகம் நீங்கள் சிரிக்கிறீர்களோ அவ்வளவு அதிகம் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்று பொருள் கிடையாது. ஒருமுறை நீங்கள் சிரித்தாலும் அது மன மகிழ்ச்சியில் சிரித்ததாக இருக்க வேண்டும். எனவே அதிகம் மனதை மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்ள முயற்சி செய்து, மகிழ்ந்திருங்கள்.

இந்த 7 மந்திரங்களை மட்டும் கையில் வைத்திருந்தீர்கள் என்றால் போதும், உங்கள் மகிழ்ச்சி உறுதியாகிவிடும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

என்னென்ன உணவுகள் உடலுக்கு குளிர்ச்சியைத் தருகின்றன தெரியுமா?

 

நாம் உண்ணும் உணவுகள் நமது உடல் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கின்றன. அப்படி சில நல்ல உணவுகள் குறித்து காண்போம்.

உடலை நாள் முழுவதும் சூடாகவிடாமல் வைத்து இருப்பது மிக முக்கியம். அப்படி வைக்காமல் சிலர் விடுவதால், இதயப் பிரச்னை, கல்லீரல் பிரச்னை,  அஜீரணக்கோளாறு ஆகியவை ஏற்படும். அத்தகைய உணவுகள் குறித்து காண்போம்.

வெள்ளரிக்காய்: வெள்ளரிக்காயில் வைட்டமின் கே அதிகளவில் இருப்பதால் எலும்புகளை வலுப்படுத்துகிறது. இதில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால், செரிமானம் நன்கு நடைபெறுகிறது. இதயத்திற்கு பாதுகாப்பாக இருக்கிறது. 

இளநீர்: சர்க்கரையைக் கட்டுப்படுத்தவும், இதயப் பிரச்னையைக் கட்டுப்படுத்தவும் இளநீர் பயன்படுகிறது. நீர்ச்சத்தினை அதிகரிக்கவும், சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கவும், உடலின் வெப்பநிலையைக் குறைக்கவும் இளநீர் பயன்படுகிறது.  

பப்பாளி: பப்பாளியில் நார்ச்சத்து இருக்கிறது. விட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடன்கள் நிறையவுள்ளன. கொழுப்பினைக் குறைக்கப்பயன்படுகிறது. உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். 

அன்னாச்சிப் பழம்: கேன்சரைத் தடுக்க உதவுகிறது. நார்ச்சத்து நிறைந்து இருக்கிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது மற்றும் குளிர்ச்சியைத் தருகிறது.

மாங்காய்: இதயத்திற்கு நல்லது. பற்களை வலுவாக்கும் தன்மை கொண்டது. உடல் எடையைக் குறைக்கும் தன்மை கொண்டது. குளிர்ச்சியைத் தருவதில் வல்லவை.

அதேபோல், பச்சைக்காய்கறிகள், தக்காளி, தர்பூசணி , வெள்ளைச் சர்க்கரைக்குப் பதிலாக தேனை எடுத்துக்கொள்ளவும்.  

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

வாழ்வில் முன்னேற வேண்டுமா? சக்ஸஸ் ஃபார்முலாவை தெரிந்துகொள்ளுங்கள் – நிபுணர்களின் விளக்கம்!

 

Success Tips : முறைகள் மற்றும் நம்பிக்கைகளை அடையாளம் காண்பது முதல் வெற்றிக்கான பாதையை நோக்கி நாம் செல்ல நமக்கு தேவையான விழிப்புணர்வைப்பெற்று, அதனை பழக்கவழக்கமாக்கி வாழ்வில் முன்னேறும் வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை தெரிந்துகொண்டு பயன்பெறுங்கள்.

அடிக்கடி வாழ்க்கையில் நாம், நின்று நிதானித்து, சில விஷயங்களை கவனித்து, வாழ்க்கையில் ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியுள்ளது. நல்ல ஒரு ஊக்குவிப்பும், திட்டமிடலும் இருந்தால், படிப்படியாக நேர்மறையான மாற்றங்களை கொண்டு வருவதற்கு சாத்தியம் உள்ளது. இஸ்ரா நாசர் என்ற தெரபிஸ்ட் கூறுகையில்,

உங்களைப்பற்றிய விழிப்புணர்வையும், செயலையும் இணைத்து செயல்படுத்தினாலே உங்களுக்கு வெற்றிகிட்டும். இது உங்களுக்கு தனித்துவத்தை ஏற்படுத்தி தரும். பொருமையாகவும், உங்களிடம் கருணையுடனும் நீங்கள் நடந்துகொள்ளும்போது, உங்களின் முன்னேற்றம் மற்றும் வெற்றியையும் கொண்டாடுவீர்கள்.

நம்மிடம் உள்ள பழக்கவழக்கங்களை உற்று நோக்கினாலே போதும். அவை நம்மிடம் புரையோடிக்கிடக்கும், நம்பிக்கையை கண்டுபிடிக்க உதவுகிறது. இந்த நம்பிக்கைகள் நமது கடந்த கால அனுபவங்களில் இருந்து ஏற்பட்டவை. அவை நம்மை தடுப்பவையாகவும் இருக்கும். இந்த தடைபடுத்தும் இந்த சவால்களை நாம் தகர்த்துவிட்டால், இவை வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

நமக்கான திட்டங்கள், நோக்கங்கள் அவற்றை அடைவதற்காக நாம் வைத்துள்ள குறிக்கோள்களை நாம் ஒவ்வொன்றாக மீண்டும், மீண்டும் வரிசைப்படுத்தி நினைவுபடுத்திக்கொண்டால், அது நமது செயல்களை அதற்கு ஏற்றாற்போல் வடிவமைக்க உதவும். அதன் குறிக்கோள் என்னவென்று தெரிந்துகொள்ளவும் உதவும்.

தொடர்ந்து சிறிய மாற்றங்களைச் செய்வது, நமது நோக்கங்கள் மற்றும் மதிப்புகளுடன் ஒத்துப்போகும் நோக்கம் கொண்ட இலக்கை நோக்கி படிப்படியாக முன்னேற உதவும்.

தொடர்ந்து சிறிய மாற்றங்களைச் செய்வது, நமது நோக்கங்கள் மற்றும் மதிப்புகளுடன் ஒத்துப்போகும் நோக்கம் கொண்ட இலக்கை நோக்கி படிப்படியாக முன்னேற உதவும். எனவே தொடர்ந்து முன்னேறிச்செல்வதற்கு தேவையான ஒன்றை நாம் செய்ய வேண்டும்.

வளர்ச்சி நமது ஆறுதல் மண்டலத்திலிருந்து வெளியேறி, பின்னடைவுகள் மற்றும் தோல்விகளில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று கோருகிறது. தோல்விகளை டீமோடிவேஷனாகப் பார்க்காமல், அவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

‘முடி உதிர்வால் மன உளைச்சல்’ தடுக்க தேவையான அந்த 5 பழங்கள்!

 

முடி உதிர்வை தடுக்கும் 5 பழங்களை இங்கு பார்க்கலாம்

முடி உதிர்வு பிரச்சினையானது நமது முடியை நாம் முறையாக பராமரிக்காத காரணத்தாலும், முடிக்குத் தேவையான ஊட்டச்சத்தை கொடுக்காத காரணத்தினாலும், பல்வேறு சூழ்நிலைகளால் நமக்கு உருவாகும் மன அழுத்தத்தாலும் உருவாகிறது. இதற்கு பல்வேறு சிகிச்சை முறைகள் இருப்பினும் எந்தெந்த பழங்களை சாப்பிட்டால் முடி உதிர்வானது குறையும் என்பதை இங்கு பார்க்கலாம்.

வாழைப்பழம்

வாழைப்பழம் நமக்கு எப்போதும் கிடைக்கக்கூடிய ஒரு பழமாக இருக்கிறது. இந்தப்பழத்தில் இருக்கக்கூடிய இயற்கையான எண்ணெய்கள் நமது முடிவளர்ச்சிக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது. இதுமட்டுமல்ல நமது முடி சேதமடைவதையும் இவை தடுக்கின்றன.

பப்பாளிப்பழம்:

பப்பாளிப்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி அடங்கி இருக்கிறது. இந்த சத்துக்கள் நமது முடி உதிர்வை குறைப்பதோடு, முடியின் வேர்களையும் பலப்படுத்துகிறது.

ஸ்ட்ராபெர்ரி பழம்:

ஸ்ட்ராபெர்ரி பழத்தில் மக்னீசியம், காப்பர், மாங்கனீசு ஆகிய சத்துக்கள் இருக்கின்றன. இதில் அதிமாக இருக்கும் வைட்டமின் சி சத்து நம்முடைய ஹேர் ஃபோலிகல்ஸை, நமது உடலில் உருவாகும் ஃப்ரீ ரேடிக்கல்கஸ் பாதிக்காமல் பாதுகாக்குகிறது.

நெல்லக்கனி:

நெல்லிகனி சாப்பிடுவதால் நமது முடி நன்றாக வளர்வதோடு, முடி உதிர்வும் தடுக்கப்படும்

கொய்யாப்பழம் 

கொய்யாப்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் பொடுகுப்பிரச்சினையை தீர்ப்பதோடு, நமது முடி வளர்ச்சிக்கும் நன்றாக உதவுகிறது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

கடுமையான முதுகு வலியா? இந்த உணவுகளை ட்ரை பண்ணுங்க!

 

உடலில் புரதம் இல்லாததால் அடிக்கடி வலி ஏற்படுகிறது. எனவே உணவில் புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

பலர் முதுகு வலியால் அவதிப்படுகின்றனர். சில உணவு பொருட்கள் உங்கள் முதுகுவலி பிரச்சனையை குறைக்கலாம்.

இன்று முதுகு வலி ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. இந்த நாட்களில் பெரும்பாலான மக்கள் முதுகுவலியால் பாதிக்கப்படுகின்றனர். மணிக்கணக்கில் அமர்ந்திருப்பதால் இந்த பிரச்னை மக்களிடையே அதிகரித்து வருகிறது. இது தவிர ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு போன்றவையும் சில காரணங்கள்.

முதுகு வலியிலிருந்து நிவாரணம் பெற வல்லுநர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்குகிறார்கள். அதில் உடற்பயிற்சியும் ஒன்று. இது தசைகளை தளர்த்துவது மட்டுமல்லாமல், உடலின் பல்வேறு பகுதிகளில் வலியைக் குறைக்கும்.

இருப்பினும், உடற்பயிற்சியுடன், உங்கள் உணவைப் பார்ப்பது மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது இந்த சிக்கலைக் குறைக்கும். எந்த வகையான உணவை சாப்பிட்டால் இந்த பிரச்சனையை கொஞ்சம் குறைக்கலாம் என பார்க்கலாம்.

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்தவை:

நீங்கள் அடிக்கடி முதுகுவலியால் அவதிப்பட்டால், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். பாதாம், அக்ரூட் பருப்புகள், சியா விதைகள், ஆளி விதைகள் மற்றும் மீன்களை அதிகம் சாப்பிடுங்கள். ஏனெனில் இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது. கடுகு எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெயை சமையலில் பயன்படுத்தலாம்.

அழற்சி எதிர்ப்பு உணவுகள்:

அழற்சி எதிர்ப்பு உணவுகளும் வலியைக் குறைக்க உதவும். உங்கள் சமையலறையில் பல மசாலாப் பொருட்களில் அழற்சி எதிர்ப்பு பண்புகளை காணலாம். எடுத்துக்காட்டாக இலவங்கப்பட்டை, மிளகு மற்றும் இஞ்சி போன்றவை. மேலும், மஞ்சள் மூட்டு வலியைக் குறைக்க உதவும் ஒரு மசாலாப் பொருளாகும்.

புரத உள்ளடக்கம்:

உடலில் புரதம் இல்லாததால் அடிக்கடி வலி ஏற்படுகிறது. எனவே உணவில் புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

பச்சை காய்கறிகள்:

வலியில் இருந்து நிவாரணம் பெற காலிஃபிளவர், ப்ரோக்கோலி, கீரை மற்றும் முட்டைக்கோஸ் போன்ற பச்சை காய்கறிகளையும் சாப்பிடலாம். இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் குறைந்த அளவு வைட்டமின்கள் உள்ளன. வலி நிவாரணியாக செயல்படும் சல்போராபேன் என்ற கலவையும் இதில் உள்ளது.

வேர் காய்கறிகள்:

வலியிலிருந்து நிவாரணம் பெற நீங்கள் வேர் காய்கறிகளையும் சாப்பிடலாம். இதில் பீட்ரூட், கேரட் போன்றவை அடங்கும். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இது வலியைக் குறைக்க உதவுகிறது.

புதிய பழங்கள்:

வலியைக் குறைப்பதோடு, உங்கள் ஆரோக்கியத்திற்காக தினமும் புதிய பழங்களை சாப்பிடுங்கள். அன்னாசி, ஆப்பிள், செர்ரி, பெர்ரி, சிட்ரஸ் பழங்கள், திராட்சை போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

Book Reading Tips| ஒரு புத்தகத்தை விரைவில் வாசிக்க தேவையான டாப் 10 டிப்ஸ்கள் இதோ!

 

ஒரு புத்தகத்தைப் படிக்க ஒரு "அறிவியல் முறை" இல்லை என்றாலும், உங்கள் புரிதலையும், பொருளைத் தக்கவைத்துக்கொள்ளவும் பல்வேறு உத்திகள் மற்றும் நுட்பங்களைப் பயன்படுத்தலாம்.

ஒரு புத்தகத்தை உள்வாங்குதல் மற்றும் படிப்பது என்பது உளவியல், நரம்பியல் மற்றும் கல்வி தொடர்பான பல அறிவியல் கோட்பாடுகளை உள்ளடக்கிய ஒரு சிக்கலான அறிவாற்றல் செயல்முறையாகும். 

அமைதியான சூழல்

புத்தகம் படிக்க குறைந்த கவனச்சிதறல்கள் கொண்ட அமைதியான, நன்கு வெளிச்சம் உள்ள சூழலைத் தேர்வு செய்யவும். ஒரு இனிமையான வாசிப்புச் சூழலானது வாசிப்பின் செறிவு மற்றும் புரிதலை கணிசமாக மேம்படுத்தும்

தெளிவான இலக்குகளை அமைக்கவும்

புத்தகத்தைப் படிப்பதற்கான உங்கள் நோக்கத்தைத் தீர்மானிக்கவும். நீங்கள் படிப்பது பொழுதுபோக்குக்காகவா அல்லது அறிவை பெறுவதற்காக அல்லது கல்வி நோக்கங்களுக்காகவா என்பதை தீர்மானத்து அதற்கு ஏற்றார் போல் தெளிவான இலக்குகளைக் கொண்டிருப்பது உங்கள் கவனத்தை ஒருமுகப்படுத்த உதவுகிறது.

புத்தகத்தின் முன்னோட்டம்

புத்தகத்தின் உள்ளடக்க அட்டவணை, அறிமுகம் மற்றும் அத்தியாயத் தலைப்புகளை முதலில் படிப்பதன் மூலம் புத்தகத்தின் அமைப்பு மற்றும் புத்தகத்தின் மேலோட்டமான புரிதலை முதலில் அளிக்கிறது.

குறிப்பு எடுத்தல்

புத்தகத்தின் முக்கியமான பத்திகளை அடிக்கோடிடுவடு வாசித்தல் அனுபவத்தை மேம்படுத்த உதவும். புத்தகத்தில் முக்கிய குறிப்புகள் பற்றிய தகவல்களை பக்கத்தின் விளிம்புகளில் குறிப்புகளை எழுதவும். இந்த செயல்முறை முக்கிய தகவல்களை ஒருங்கிணைக்கவும் நினைவில் கொள்ளவும் உதவுகிறது.

ஆழ்ந்த வாசிப்புப் பயிற்சி

வனமும் மெதுவாக உள்வாங்கி படிப்பதும் ஆழ்ந்த வாசிப்புக்கு அவசியமாக சொல்லப்படுகிறது. சிக்கலான அல்லது அறிமுகமில்லாத விஷயங்களைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும்போது வேக வாசிப்பு நுட்பங்களைத் தவிர்க்கவும். நரம்பியல் ஆராய்ச்சி, ஆழமான வாசிப்பு, புரிதல் மற்றும் நினைவாற்றலுடன் தொடர்புடைய பல்வேறு மூளைப் பகுதிகளை ஈடுபடுத்துகிறது.

இடைவெளி விட்டு படித்தல்

தகவல்களை உள்வாங்கித் தக்கவைத்துக்கொள்ளும் மூளையின் திறன் காலப்போக்கில் குறைகிறது. வாசிப்பின் போது வழக்கமான இடைவெளிகளை எடுப்பது உங்கள் அறிவாற்றல் வளங்களைப் புதுப்பிக்க உதவுகிறது. 25 நிமிட கவனம் செலுத்திய வேலை அமர்வுகள் மற்றும் 5 நிமிட இடைவெளிகளை உள்ளடக்கிய Pomodoro டெக்னிக் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

படித்ததை வைத்து சிந்தித்தல்

புத்தகத்தின் ஒரு பகுதி அல்லது அத்தியாயத்தை முடித்த பிறகு, நீங்கள் படித்ததைப் பற்றி சிந்திக்க இடைநிறுத்தவும். முக்கிய குறிப்புகளை உங்கள் சொந்த வார்த்தைகளில் சுருக்கவும். இந்த பிரதிபலிப்பு நடைமுறை புரிதல் மற்றும் நீண்ட கால தக்கவைப்பை மேம்படுத்துகிறது.

கலந்துரையாடல்

புத்தகத்தில் நீங்கள் படித்தது குறித்த விவாதங்களில் ஈடுபடுவது அல்லது நீங்கள் கற்றுக்கொண்டதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது, பொருள் பற்றிய உங்கள் புரிதலை வலுப்படுத்தும். கருத்துகளை வேறொருவருக்கு விளக்கும் செயல்முறை வெவ்வேறு அறிவாற்றல் செயல்முறைகளை செயல்படுத்துகிறது.

செல்போனிடம் இருந்து விலகி இருங்கள்

வாசிப்பின் போது கவனச்சிதறல்களை ஏற்படுத்தும் கருவிகளில் இருந்து விலகி இருப்பது மிக முக்கியம். உங்கள் கவனத்தை சிதறடிக்ககூடியதாக நீங்கள் நினைக்கும் செல்போன், டிவி, லேப்டாப் மற்றும் இதரவற்றில் இருந்து முடிந்தவரை விலகி இருக்க உறுதி எடுங்கள்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

Time Management: மொபைல் பயன்பாட்டை தவிர்க்க டாப் 10 டிப்ஸ்கள் இதோ…!

 

”இன்றைய இளைஞர்கள் ஒரு நாளில் பெரும்பகுதியை செல்போன் திரையில் நேரத்தை செலவிடுவதை காண முடிகிறது. செல்போனில் நேரத்தை குறைத்து ஆக்கபூர்வமான வேலைகளை செய்யும் டிப்ஸ் இதோ”

தெளிவான இலக்குகள் பட்டியல் இடுங்கள்

வேலை, பொழுதுபோக்கு, உடற்பயிற்சி, அன்புக்குரியவர்களுடன் நேரத்தைச் செலவிடுவது அல்லது வெறுமனே ஓய்வெடுப்பது போன்ற செயல்பாடுகள் உங்களை செல்போன் மீதான சிந்தனையில் இருந்து உங்களை விலக்கி வைக்கும். இதற்கு ஏற்றார்போல் நேரத்தை ஒதுக்கி அதனை செய்யத் தொடங்குங்கள்.

செல்போனுடன் செயல்படும் நேரத்தை கண்காணிக்கவும்

உங்கள் செல்போனின் திரை நேரத்தைக் கண்காணிக்கவும் நிர்வகிக்கவும் உதவும் பல பயன்பாடுகள் உள்ளன. இந்த ஆப்ஸ் அடிக்கடி உங்கள் ஃபோன் உபயோக முறைகள் பற்றிய நுண்ணறிவுகளை வழங்குவதோடு, குறிப்பிட்ட ஆப்ஸ் அல்லது வகைகளில் வரம்புகளை அமைக்க உங்களை அனுமதிக்கும்.

அத்தியாவசியம் அல்லாத அறிவிப்புகளை முடக்கு

உங்கள் செல்போனில் முக்கியம் இல்லாத பயன்பாடுகளுக்கான அறிவிப்புகளை முடக்கவும். முக்கியமான அழைப்புகள், செய்திகள் மற்றும் அத்தியாவசிய பயன்பாடுகளுக்கான அறிவிப்புகளை மட்டும் அனுமதிக்கவும். இது தொடர்ச்சியான குறுக்கீட்டைக் குறைக்கும்.

Do Not Disturb

அர்ப்பணிப்பு வேலை அல்லது ஃபோகஸ் அமர்வுகளின் போது உங்கள் தொலைபேசியின் "Do Not Disturb" பயன்முறையைப் பயன்படுத்தவும். குறிப்பிட்ட தொடர்புகள் அல்லது அவசரநிலைகளின் போது அழைப்புகளை அனுமதிக்க நீங்கள் தனிப்பயனாக்கலாம்.

போன் இல்லாத மண்டலங்கள் மற்றும் நேரங்களை உருவாக்கவும்

தொலைபேசி பயன்பாடு அனுமதிக்கப்படாத குறிப்பிட்ட பகுதிகள் அல்லது நேரங்களைக் குறிப்பிடவும். எடுத்துக்காட்டாக, உணவு உண்ணும் போது, குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடும் போது அல்லது தூங்கும் முன் படுக்கையறையில் தொலைபேசி வேண்டாம் என்ற விதியை பின்பற்றுங்கள்.

சுய விழிப்புணர்வை பயிற்சி செய்யுங்கள் 

உங்கள் தொலைபேசி உபயோகப் பழக்கங்களை கவனத்தில் கொள்ளுங்கள். உங்கள் தொலைபேசியை ஏன் எடுக்கிறீர்கள் என்று நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். இந்த பழக்கம் சுய விழிப்புணர்வை அதிகரித்து உங்கள் நோக்கத்தை அடைய உதவும்.

மாற்று செயல்பாடுகளைக் கண்டறியவும்

செல்போனுக்கு மாற்றான பொழுதுபோக்கு செயல்பாடுகளில் கவனம் செலுதவும். புத்தகம் படிப்பது, நடைப்பயிற்சி செய்வது உள்ளிட்ட செயல்பாடுகள் இதில் இருந்து விரைவில் மீட்க உதவும்.

பயன்பாட்டு வரம்புகள் மற்றும் திரை நேர கண்காணிப்பைப் பயன்படுத்தவும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip


TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- ஆன்லைனில் விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!

 

TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- ஆன்லைனில் விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!

TCS நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள BIDT & Controllership பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ள நபர்கள் இறுதி நாள்(31.10.2023) முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TCS காலிப்பணியிடங்கள்:

TCS iBegin நிறுவனத்தில் தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி BIDT & Controllership பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TCS கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Bachelor Degree பெற்றிருக்க வேண்டும்.

TCS அனுபவ விவரம் :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 01-08 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

TCS ஊதிய விவரம்:

தேர்வாகும் பணியாளருக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாதம் ஊதியம் வழங்கப்படும்.

TCS தேர்வு செய்யப்படும் முறை :

திறமையுள்ள நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TCS விண்ணப்பிக்கும் முறை :

பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification & Apply Online Link  

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

BDL மத்திய அரசு வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.39,000/-

 

BDL மத்திய அரசு வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.39,000/-

இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மினிரத்னா வகை I பொதுத்துறை நிறுவனமான பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் Project Engineer பணியிடங்களுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 16.09.2023 மற்றும் 17.09.2023 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

BDL மத்திய அரசு காலிப்பணியிடங்கள்:

Project Engineer பதவிக்கு என 34 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து BE/ B.Tech/ B.Sc Engg.(4 years) / Integrated M.E. / M.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Engineer வயது வரம்பு:

நேர்காணல் தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:
  • 1st Year – ரூ.30,000/-
  • 2nd Year – ரூ.33,000/-
  • 3rd Year – ரூ.36,000/-
  • 4 th Year – ரூ. 39,000/-
விண்ணப்பிக்கும் முறை:

www.bdl-india.in என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப்ப் படிவத்தை பூர்த்தி செய்து 16.09.2023 & 17.09.2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download Notification 2023

Official Website