Search

அதிகமாக சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து கொள்வதால் நேரடியாக பாதிக்கப்படும் இதய ஆரோக்கியம்... எப்படி தெரியுமா..?

 

நாம் தினசரி உண்ணும் உணவுகளில் கட்டாயம் சேர்க்கப்படும் இரண்டு வெள்ளை நிற பொருட்கள் உப்பு மற்றும் சர்க்கரை. பார்ப்பதற்கு வெண்மையாக மற்றும் பாதிப்பில்லாததாக இருக்கும் உப்பு மாற்று சர்க்கரை இரண்டுமே சாப்பிடும் பொருட்களை சுவை மிகுந்ததாக மாற்றுகின்றன.

எனவே 3 வேளையும் செய்யும் சமையல் முதல் ஸ்னாக்ஸாக சாப்பிடும் பதார்த்தங்கள் வரை நம்முடைய தினசரி கிச்சன் பயன்பாட்டில் இவை இரண்டுமே முக்கிய பங்கு வகிக்கின்றன. நாம் சாப்பிடும் பெரும்பாலான பொருட்களுக்கு உப்பு மற்றும் சர்க்கரை இரண்டும் மிகவும் அடிப்படையானவையாக, அவசியமானவையாக இருக்கின்றன. ஆனால் உணவுகளின் வழியே இவற்றை அளவுக்கு அதிகமாக சேர்த்து கொள்வது அமைதியாக ஒரு சுகாதார நெருக்கடியை தூண்டுகிறது என்பது பலருக்கும் புரிவதில்லை. குறிப்பாக உப்பு, சர்க்கரை இரண்டின் அளவுக்கு அதிகமான நுகர்வு நேரடியாக இதய ஆரோக்கியத்தை பாதிக்கிறது. அதிகப்படியான சர்க்கரை மற்றும் உப்பு நுகர்வால் நமது இதயத்திற்கு ஏற்பட கூடிய ஆபத்துகளை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம், வாருங்கள்.

சர்க்கரை:

பல நூற்றாண்டுகளாக நம் நாட்டு கலாச்சாரம், மரபுகள் மற்றும் மத சடங்குகளில் சர்க்கரை முக்கியமான சுவையூட்டியாக இருக்கிறது. சமீபத்திய ஆண்டுகளில் நம் நாட்டின் சர்க்கரை நுகர்வு கணிசமாக உயர்ந்துள்ளது. ஆய்வு ஒன்றின்படி கடந்த 2019-2020 ஆம் ஆண்டில் 35 மில்லியன் மெட்ரிக் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டதில் இருந்து நிலையான அதிகரிப்பு பதிவாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த 2022-2023-ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு சர்க்கரை நுகர்வின் அளவு இந்தியாவில் 29 மில்லியன் மெட்ரிக் டன்களை எட்டி இருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன் இந்தியர்களிடம் காணப்பட்ட வாழ்க்கைமுறை முற்றிலும் மாறி வாழ்க்கைமுறை மாற்றங்கள் சார்ந்த நோய்களின் அதிகரிப்பிற்கு மத்தியில் இந்த அதிகரித்த சர்க்கரை நுகர்வு மிகவும் ஆபத்தானதாக பார்க்கப்படுகிறது. மேலும் ஒவ்வொருவரும் தங்களது சர்க்கரை நுகர்வு அளவை கண்காணிப்பது மேலும் அவசியமாகிறது. நாடு முழுவதும் அதிகரித்து வரும் டைப் 2 நீரிழிவு மற்றும் இதய நோய்களுக்கு அடித்தளமாக அதிகரித்த சர்க்கரை பயன்பாடு காரணமாக இருக்கிறது.

சர்க்கரைக்கும் இதய ஆரோக்கியத்திற்குமான தொடர்பு...

பிரபல இதயநோய் நிபுணர் ஆயுஷி அகர்வால் பேசுகையில், அதிக சர்க்கரை நுகர்வு நம் இதய ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கும். நாம் அதிக சர்க்கரையை எடுக்கும்போது அதை சரியாக ப்ராசஸ் செய்து முடிக்க நம் உடல் போராடும். இதுவே தொடர்கதையாக இருந்தால் காலப்போக்கில் இன்சுலின் ரெசிடென்ஸ் ஏற்பட வழிவகுக்கும். இன்சுலின் ரெசிடென்ஸ் என்பது ரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்தும் ஹார்மோனான இன்சுலினுக்கு நமது செல்கள் குறைவாக ரெஸ்பான்ஸ் செய்யும் நிலையாகும்.

Insulin resistance காரணமாக உடல் பருமன் மற்றும் அடிவயிற்றை சுற்றி கொழுப்பு குவிவது (Abdominal fat) உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். அடிவயிற்றில் குவியும் கொழுப்பானது தொப்பையை ஏற்படுத்தி உங்கள் அழகை கெடுப்பது மட்டுமல்ல, இதய நோய்களின் வளர்ச்சிக்கும் முக்கிய காரணமாக அமைய கூடும்.

எப்படி என்றால் Abdominal fat-ஆனது நம் ரத்த ஓட்டத்தில் தீங்கு விளைவிக்கும் பொருட்களை வெளியிடுகிறது. தவிர ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் லெவல்ஸ் மற்றும் ரத்த உறைவு உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்தும் பல ஹார்மோன்களின் பேலன்ஸை பாதிக்கிறது. இவை அனைத்தும் சேர்ந்து இதய நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கின்றன. இதய பாதிப்புகளை தவிர அதிகப்படியான சர்க்கரை நுகர்வு fatty liver சிக்கலையும் ஏற்படுத்த கூடும்.

உப்பு:

நம் நாட்டில் 1 நபர் தினசரி 11 கிராம் உப்பை சேர்த்து கொள்வதாக தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் நிபுணர்களின் பரிந்துரை என்பது நாளொன்றுக்கு 5 கிராம் உப்பு மட்டுமே சேர்த்து கொள்ள வேண்டும் என்பதாக இருக்கிறது. பரிந்துரைக்கப்பட்டதை விட தினசரி இரட்டிப்பாக சேர்த்து கொள்ளப்படும் இந்த அதிகப்படியான உப்பு நுகர்வு முக்கியமாக உயர் ரத்த அழுத்தத்திற்கு காரணமாகிறது.

உப்பு மற்றும் ஹைப்பர் டென்ஷனுக்கு இருக்கும் தொடர்பு...

ஹைப்பர் டென்ஷன் எனப்படும் உயர் ரத்த அழுத்தம் எளிதாக ஒருவருக்கு இதய பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும் என்பதால் சைலன்ட் கில்லர் என குறிப்பிடப்படுகிறது. ஒருவர் அதிகமாக உப்பு எடுத்து கொள்ளும் போது அவரது உடலில் இருக்கும் கூடுதல் திரவம் (fluid) வெளியேற்றப்படாமல் தக்க வைக்கப்படுகிறது. ரத்தத்தில் கூடுதல் நீர் இருப்பது ரத்த அளவை அதிகரிப்பதோடு மற்றும் arteries-களில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து arteries-களில் ஏற்படும் இந்த அழுத்தம் அவற்றை சேதப்படுத்துவதோடு, கொலஸ்ட்ரால் மற்றும் plaque வரின் சுவர்களில் எளிதாக டெபாசிட்டாகிறது. இறுதியில் இது atherosclerosis ஏற்படுவதற்கு வழிவகுக்கும். atherosclerosis என்பது தமனிகள் (arteries) குறுகி, கடினமாகி நம் இதயத்திற்கான ரத்த ஓட்டம் குறைந்து போக கூடிய ஒருநிலையாகும்.

இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க டிப்ஸ்:

சர்க்கரை சேர்க்கப்பட்ட தின்பண்டங்கள், பானங்கள் மற்றும் இனிப்புகளை குறைக்க முயற்சித்து பழங்கள் போன்ற ஆரோக்கியமானவற்றை டயட்டில் சேர்க்கவும்.
பெரும்பாலும் சர்க்கரை சுக்ரோஸ், பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் போன்ற வெவ்வேறு பெயர்களால் உணவு லேபிள்களில் அச்சிடப்பட்டிருக்கும் என்பதால் பேக்கிங் உணவுகளை வாங்கும் முன் லேபிள்களை சரிபாருங்கள்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. சமையலின் போதும், சாப்பிடும் போதும் உப்பைக் குறைவாக பயன்படுத்துங்கள்.
ஆரோக்கியமான எடையை பராமரிக்க தினசரி ஒர்கவுட்ஸ்களில் ஈடுபடுங்கள். இதன் மூலம் இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் மற்றும் அடிவயிற்றில் கொழுப்பு குவியும் அபாயத்தை குறைக்கலாம்.

சீரான இடைவெளியில் உங்களின் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் லெவல் மற்றும் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை பரிசோதித்து கொள்ளுங்கள்.


தினமும் லேட்டா தூங்குவதால் உடலில் என்னென்ன பாதிப்புகள் வரும் தெரியுமா..?

 இரவு முழுவதும் தூங்காமல் இருப்பது இன்றைய காலத்தில் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. நான் இரவெல்லாம் தூங்கமாட்டேன், நான் இரவு முழுவதும் வேலை செய்து கொண்டிருப்பேன். நான் இரவில் பயணம் செய்வேன்; எனக்கு இரவில் ஊர்சுற்றுவது பிடிக்கும் என்றெல்லாம் பலரும் பெருமையுடன் சொல்லி வருகிறார்கள். எனவே இரவு நேரத்தில் தூங்குவது எவ்வளவு முக்கியம் என்பதையே பலரும் மறந்து இருக்கிறார்கள். இரவில் தூங்காமல் இருப்பவர்களுக்கு பகல் நேரத்தில் கூடுதலாக நிறைய நேரம் பணியாற்ற வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது. இதன் மூலம் உடல் நலம் பல வகைகளில் பாதிக்கப்படும். எனவே தினமும் இரவில் தாமதமாக தூங்குவதை வழக்கமாக கொண்டிருப்பவர்கள் அதில் இருக்கும் ஆபத்துகள் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.

தென்கொரியாவில் நடத்தப்பட்ட ஆய்வு : லான்சென்ட் ஹெல்த் ஸ்டடி நடத்திய ஒரு ஆய்வில் தென்கொரியாவில் இருந்து 3757 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். கிட்டத்தட்ட 16.7 ஆண்டுகளுக்கு நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 40 வயது முதல் 69 வயது வரை இருப்பவர்களில் தூங்குவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்பவர்கள் அல்லது மிகவும் தாமதமாக தூங்குபவர்கள் வழக்கமான ஆயுள்காலத்தை விட, இளம் வயதிலேயே இறந்து விடுகிறார்கள் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஒரு நபரின் ஆரோக்கியத்திற்கு தூக்கம் எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றிய ஆதாரங்களும் வெளியாகி உள்ளது.

காக்னிட்டிவ் செயல்பாடுகள் பாதிப்பு : இரவு முழுவதும் விழித்திருப்பது அல்லது இரவு நேரத்தில் தினசரி தாமதமாக தூங்குவதால் காக்னிட்டிவ் செயல்பாடுகள் என்று கூறப்படும் நினைவாற்றல், முடிவெடுக்கும் திறன் மற்றும் சிக்கலை தீர்க்கும் திறன் ஆகியவற்றில் குறைபாடு அல்லது பாதிப்பு ஏற்படும். அதுமட்டுமில்லாமல் கவனச்சிதறல் மற்றும் சாதாரண செயல்பாடுகளில் கூட எதிர்மறையான பிரச்சனை ஏற்படும் என்று ஆய்வு தெரிவித்துள்ளது. எனவே உடலுக்கு ஓய்வு என்பது மட்டுமல்லாமல் மன ஆரோக்கியத்திற்கும் மன நலத்திற்கும் தூக்கம் மிகவும் அவசியம். நீண்ட காலத்திற்கு சரியாக தூங்காமல் இருந்தால் மனநலம், காக்னிட்டிவ் செயல்பாடுகள் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் தீவிரமாக பாதிக்கப்படும்.

எடை அதிகரிப்பு : இரவு நேரத்தில் சரியாக தூங்காமல் இருப்பது அல்லது தூங்கும் நேரம் மாறி மாறி இருப்பது உள்ளிட்டவை உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வை கட்டாயமாக உண்டாக்கும். அதுமட்டும் இல்லாமல் இது பசி மற்றும் உடலின் வளர்சிதை மாற்றத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த மாற்றங்கள் உடல் பருமனுக்கு வழிவகுத்து, உடல் எடையையும் அதிகரிக்கும். தூக்கம் சரியில்லாத பொழுது, அடிக்கடி பசி எடுப்பது போன்ற உணர்வு தோன்றும். லெப்டின் மட்டும் க்ரேலின் என்று கூறப்படும் ஹார்மோன்களின் இம்பேலன்ஸ் அடிக்கடி பசிப்பது போல உணர வைக்கும் அல்லது பசியின்மையையும் ஏற்படுத்தும். எனவே ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற உணர்வு தோன்றும். வழக்கத்தை விட அதிகமாக உணவு உட்கொள்வீர்கள். எனவே உடல் எடை ஆரோக்கியமாக இருப்பதற்கு உடல் பருமனை தவிர்ப்பதற்கு சரியான நேரத்தில் போதுமான அளவு தூங்குவது மிகவும் அவசியம்.

பலவீனமான நோய் எதிர்ப்பு மண்டலம் : நீண்ட கால தூக்கமின்மையால் பாதிக்கப்படுபவர்களுக்கு நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாகவே காணப்படும். உடலுக்கு போதிய அளவு ஓய்வே இல்லை என்றாலே, உடல் சக்தியை இழக்கும். இதனால், நோய்தொற்றுகளை எதிர்த்து போராடும் திறனும் பாதிக்கப்படும். உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தில், நோய் எதிர்ப்பு செல்கள் உருவாக்கும் தன்மை குறைந்து, ஆன்டிபாடீஸ் எண்ணிக்கையும் குறையும். இதனால், சின்ன சின்ன விஷயங்களுக்கு உடல் பாதிக்கப்படும்.


ரிழிவு ஏற்படும் அபாயம் : திடீரென்று உடலில் ஏற்பட கூடிய பலவிதமான குறைபாடுகள் மற்றும் நோய்களுக்கு போதிய அளவு தூக்கமின்மை முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது. இதில் நீரிழிவு நோயும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் கூற்றுப்படி தினசரி 7 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு நீரிழிவு நோயை சரியாக நிர்வகிக்க முடியாத அளவுக்கு பாதிக்கப்படுவார்கள். அதுமட்டுமல்லாமல் தூக்கமின்மை என்பது இன்சுலின் ரெசிஸ்டென்ஸை அதிகரித்து, உடல் சர்க்கரை அளவை சரியாக பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளும். எனவே உடலில் இருக்கும் பலவிதமான ஹார்மோன்களுக்கும் தூக்கமின்மை ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும். இதனால் நீரிழிவு நோயால் ஏற்படக்கூடிய அபாயம் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் ஏற்கனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதை கட்டுக்குள் வைப்பதற்கு சிரமப்படுவார்கள்


ஏதேனும் ஒரு டிகிரி போதும்.. இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க!

 இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமை அலுவலகத்திலும், கிளை அலுவலகங்களிலும்  காலியாக உள்ள 450 (Recruitment for the Post of Assistant - 2023) உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிக்கையை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் எதிர்வரும் அக்டோபர் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலியிடங்கள் எண்ணிக்கை: 450 உதவியாளர் பதவி

இதில், பொதுப் பிரிவினருக்கு 241 இடங்களும் , ஓபிசி பிரிவினருக்கு 71 இடங்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவருக்கு 37 இடங்களும் , 48 இடங்கள் பட்டியல் இனத்தை சேர்ந்தவருக்கும், 64 இடங்கள் பட்டியல் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

சென்னையில் உள்ள ஆர்பிஐ அலுவலகத்தில் மட்டும் 13 இடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வித் தகுதி : இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர், ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கத் தகுதி: 01‐09‐2023  அன்று, விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 20 ஆகவும், அதிகபட்ச வயது 28 ஆகவும் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டின் படி, வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 15 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.

தேர்வுமுறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: 

Sr. No.வகைகட்டணம்தொகை *
1.பட்டியல்/பழங்குடியினர்/ மாற்றுத் திறனாளி வகுப்பினர்அறிவிப்புக் கட்டணம்ரூ.50/-
2.பொதுப் பிரிவினர் / இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / பொருளாதார ரீதியாக பின்தங்கியவகுப்பினர் (EWS)விண்ணப்பக் கட்டணம் + அறிவிப்புக் கட்டணம்ரூ.600/-
3.ஆர்பிஐ பணியாளர்கள்விலக்குவிலக்கு

விண்ணப்பதாரர்கள் www.rbi.org.in.  மூலம் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி அக்டோபர் 04, 2023.

வயது வரம்பு, தேவையான கல்வித்தகுதி, கட்டணம், தேர்வு விவரம், பதவிகளின் விவரம், எவ்வாறு விண்ணப்பிப்பது என்பன போன்ற விவரங்கள் ஆட்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

DRDO பணிக்கான அறிவிப்பு... 204 காலிப்பணியிடங்கள்!

 பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவான டிஆர்டிஓ , வேலை தேடுபவர்களுக்கு நற்செய்தியை வழங்கியுள்ளது. இதன் மூலம் விஞ்ஞானி-பி வகைப் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு நடக்கிறது. தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.drdo.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த காலக்கெடு செப்டம்பர் 29 வரை மட்டுமே உள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) முக்கியமாக DST, ADA, CME போன்ற துறைகளில் Scientist-B பதவிகளை நிரப்புகிறது.

காலி பணியிடங்கள் 204

தகுதிகள்

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் முதல் வகுப்பு பொறியியல் முடித்திருக்க வேண்டும். கிராஜுவேட் ஆப்டிட்யூட் டெஸ்ட் (கேட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தகவல் விண்ணப்ப படிவத்தில் வழங்கப்பட வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்களின் வயது 18 வயது முதல் 40 வயது வரை இருக்க வேண்டும். பட்டியல் பிரிவினருக்கு மத்திய அரசின் விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு முறை

தனிப்பட்ட நேர்காணலின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். நேர்காணல் தேதி மற்றும் இடம் பற்றிய விவரங்கள் தனி அழைப்புக் கடிதம் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.

சம்பளம்

DRDO Scientist-B ஆட்சேர்ப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் சம்பளம் மாதம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை. இதற்கிடையில், தேசிய பாதுகாப்புத் துறையில் டிஆர்டிஓ-வின் பங்கு முக்கியமானது. நாட்டிற்கு பாதுகாப்பு தொழில்நுட்பத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், மேம்பட்ட ஆயுதங்கள் தயாரிப்பிலும் தன்னிறைவு அடைந்துள்ளது. DRDO நாடு முழுவதும் 51 ஆராய்ச்சி மையங்களைக் கொண்டுள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான ஆயுதங்கள், மின்னணுவியல், ஏவுகணைகள், போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் போன்றவைகளில் இந்த மையங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எப்படி அப்ளை செய்வது?

படி 1: முதலில் DRDO அதிகாரப்பூர்வ இணையதளமான www.drdo.gov.in பக்கத்திற்குச் செல்லவும். முகப்புப் பக்கத்திற்குச் சென்று, விளம்பர எண் 145-ஐ கிளிக் செய்து, விஞ்ஞானி-பி வேலைக்கான அறிவிப்பு விவரங்களைச் சரிபார்க்கவும்.

படி 2: அதன் பிறகு 'Apply Now' என்பதை கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். முதலில் பெயர், பிறந்த தேதி போன்ற விவரங்களை உள்ளிட்டு பதிவு செய்துக் கொள்ளவும். அதன் பிறகு பதிவு ஐடி மற்றும் கடவுச்சொல் உதவியுடன் உள்நுழைந்து விண்ணப்பப் படிவத்தை ஓபன் செய்யவும்.

படி 3: அதில் அனைத்து விவரங்களையும் உள்ளிடவும். விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.

படி 4: தேவையான ஆவணங்களைப் பதிவேற்றி இறுதியாக விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

இளைஞர்கள் தொழில் துவங்க மானியத்துடன் கடன்.. எப்படி வாங்க வேண்டும் தெரியுமா?

 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை கொள்கை 2008ன் கீழ் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கும், சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கும் வேலை வாய்ப்பு உருவாக்கும் நோக்குடன் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மாவட்டத் தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். 18 - 45 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மேலும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், முன்னாள் இராணவத்தினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோருக்கு 55 வயதுக்கு மிகாமலும் இருக்கவேண்டும். விண்ணப்பதாரரின் ஆண்டு குடும்ப வருமானம் 5லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்கவேண்டும்.

விண்ணப்பதாரர் திருவாரூர் மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு குறையாமல் வசிப்பவராக இருத்தல் வேண்டும். இத்திட்டத்தின் கீழ் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு அதிகபட்சமாகரூ.15 இலட்சம் வரை வங்கிகள் மூலமாக வழங்கப்படும் கடன் உதவிக்கு 25 சதவீதம் அல்லது அதிகபட்சமானியம் ரூ.3.75 இலட்சம் மானியமாக பெற்று பயன் பெறலாம்.

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் தொழில் துவங்க www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட பெருந்திட்ட வளாகம், விளமல், திருவாரூர் 610004 (தொலைபேசி எண்: 04366-224402) என்ற முகவரியில் உள்ள மாவட்ட தொழில் மைய அலுவலகத்தினை தொடர்பு கொள்ளுமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஶ்ரீ தெரிவித்துள்ளார்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news



SBI வங்கியில் வேலைக்கு சேர சூப்பர் வாய்ப்பு… உடனே விண்ணப்பியுங்கள்.. விவரங்கள் இதோ!

 ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வேலை அனைத்து மையப்படுத்தப்பட்ட வங்கி வேலைகளிலும் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இந்த வங்கியில் ப்ரோபேஷனரி ஆபீசர் வேலை கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் இளைஞர்கள் மத்தியில் எப்போதும் இருந்து வருகிறது.

தற்போது, எஸ்பிஐ வங்கியானது 2,000 PO பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளன. இதுவரை விண்ணப்பிக்காத விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் செப்டம்பர் 27 அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்கலாம்.

இந்தப் பதவிகளுக்கான இறுதித் தேர்வு, இரண்டாம் கட்டம் (முதன்மைத் தேர்வு) மற்றும் மூன்றாம் கட்டம் (நேர்காணல் மற்றும் குழுப் பயிற்சி) சுற்றுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் இருக்கும். தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் 36000-1490/7-46430-1740/2-49910-1990/7-63840 என்ற அளவில் ரூ.41,960 சம்பளத்தில் புரொபேஷனரி அதிகாரி அல்லது மேனேஜ்மெண்ட் டிரெய்னி ஆக சேர்க்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்க வேண்டிய தகுதிகள் என்ன?

எஸ்பிஐ பிஓ பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டதாரி பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பின் இறுதியாண்டு படிப்பவர்களும், டிசம்பர் 31, 2023க்குள் பட்டப்படிப்பை முடித்ததற்கான சான்றிதழை சமர்ப்பித்தால், தற்காலிகமாக விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு

எஸ்பிஐ-யில் பிஓ ஆக விண்ணப்பிப்பவர்கள் ஏப்ரல் 1, 2023 அன்று 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் விவரம்

SBI PO Recruitment 2023 Notification

SBI PO Recruitment 2023 link to apply

SBI PO க்கு செலுத்த வேண்டிய விண்ணப்பக் கட்டணம்:

பொது பிரிவு/EWS/OBC பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். SC/ST/PWBD விண்ணப்பதாரர்களுக்கு எந்தவொரு விண்ணப்பக் கட்டணமும் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ஒருமுறை செலுத்திய விண்ணப்பக் கட்டணம் எந்தக் கணக்கிற்கும் திருப்பித் தரப்படாது அல்லது வேறு எந்தத் தேர்வுக்கும் ஒதுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

8ம் வகுப்பு தேர்ச்சி போதும்: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரூ.62,000 வரை சம்பளம் - உடனே அப்ளை பண்ணுங்க!

கோயம்புத்தூா் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி அலகு, மதுக்கரை ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் ஊதியம் வழங்கப்படும் பணியிடங்களில் காலியாக உள்ள ஜீப்  ஓட்டுநா் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் 9.10.2023 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பதவியின் பெயா்ஜீப் ஓட்டுநா்
சம்பளம்ரூ.19500 – 62000 (Level-8)என்ற ஊதிய விகிதத்தில் இதர படிகளுடன்.
வயது வரம்பு 01.07.2023 அன்று 18 வயது பூா்த்தி அடைந்திருக்க வேண்டும்.அதிகபட்ச வயது வரம்பு (01.07.2023 அன்று உள்ளவாறு ) 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி மற்றும் பிற தகுதிகள்”எட்டாம் வகுப்பு” தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவம்இப்பணியிடத்திற்கான விண்ணப்பப் படிவத்தினை https://coimbatore.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் சமா்ப்பிக்க கடைசி நாள்09.10.2023 பிற்பகல் 5.45 மணிக்குள் அலுவலகத்திற்கு வந்தடைதல் வேண்டும்

நிபந்தனைகள்:

  • தகுதியான விண்ணப்பதாரா்கள் தங்களது விண்ணப்பத்தினை https://coimbatore.nic.in இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கும் செய்து பூா்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
  • இனசுழற்சி அடிப்படையில் ஆதிதிராவிடா் (முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினா் ) இந்த பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டும். பெண்கள் – ஆதரவற்ற விதவை இதற்கு விண்ணப்பிக்கலாம்.
  • இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை ஆணையாளா், ஊராட்சி ஒன்றியம், மதுக்கரை என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 09.10.2023 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் அலுவலகத்திற்கு வந்தடையும் வகையில் அனுப்ப வேண்டும்.
  • இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தில் உள்ளவாறு விபரங்கள் முழுமையாக பூா்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
  • முழுமையாக பூா்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
  • தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது.
  • எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. நெல்லையில் ஊர்க்காவல் படை வேலை!

 திருநெல்வேலி மாவட்ட ஊர்க்காவல் படைப்பிரிவில் சேர்ந்து சேவை செய்வதற்காக திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். ஊர்க்காவல் படைப்பிரிவில் சேர்ந்து சேவை செய்ய விரும்பும் நபர்கள் 18 வயது முடிந்தவராகவும் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். குறைந்தபட்ச கல்வி தகுதி 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். அரசு துறைகளில் பணிபுரிவர்களாகவோ அல்லது சுயதொழில் செய்பவர்களாகவோ இருக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் ஊர்க் காவல்படை ஆளிநர்களுக்கு காவல்துறையினரால் 45 வேலை நாட்கள் அடிப்படை பயிற்சி வழங்கப்படும். அதன் பின்னர் சேவைபுரியும் காலத்தில் அழைப்பு பணி ஒன்றுக்கு ரூபாய் 280/- மட்டுமே சன்மானமாக வழங்கப்படும். அதிகபட்சமாக மாதத்திற்கு 10 அழைப்பு பணிகள் மட்டும் தான்.

இப்பிரிவில் வேலை செய்ய விருப்பமுள்ளவர்கள் (BIODATA) பயோடேட்டா கல்வி மற்றும் வயது சான்றின் நகல்கள், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் சுயமுகவரி குறிப்பிட்ட அஞ்சல் அட்டையுடன் விருப்ப மனுவினையும் 27.09.2023 ஆம் தேதிக்குள் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களது அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்குமாறு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

லட்சத்தில் சம்பளம்.. எஸ்பிஐ வங்கி வெளியிட்ட மாஸ் வேலைவாய்ப்பு அறிவிப்பு.. இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு

 நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கி தனது மும்பை அலுவலகத்தில் காலியாக  உள்ள  பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம்  439 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில், பொதுப் பிரிவினருக்கு 240 இடங்களும் , ஓபிசி பிரிவினருக்கு 94 இடங்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவருக்கு 30 இடங்களும் , 53 இடங்கள் பட்டியல் இனத்தை சேர்ந்தவருக்கும், 22 இடங்கள் பட்டியல் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

கல்வித் தகுதி: கணினி அறிவியல்/  தகவல் தொழில்நுட்பம் / மின்னணுவியல்/ மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல்/ மென்பொருட் பொறியியல் அல்லது அதற்கு சமமான துறைகளில் பி.இ. / பி.டெக் அல்லது எம்சிஏ. அல்லது எம்.டெக்/எம்.எஸ்சி பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

மொத்த 45 பதவி வகைமையின் கீழ் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஒவ்வொரு காலியிடங்களுக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, பதவி முன்னனுபவம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பணியாளர் தேர்வு அறிவிப்பில் (ரெக்ரூட்மெண்ட் நோட்டிஸ்) தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன.   எனவே, விண்ணப்பிக்க விரும்புவோர், ஆள்சேர்க்கை அறிவிக்கையை பதிவிறக்கம் செய்து கவனமாக வாசிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.     

முக்கியமான தேதிகள் : ஆன்லைன் எழுத்துத் தேர்வானது  2023 டிசம்பர்/ 2024 ஜனவரி மாதத்திலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தகுதி பெறும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வுக்கு 70 சதவிகித விழுக்காடு மதிப்பெண்களும், நேர்காணல் தேர்வுக்கு 30 சதவிகித விழுக்காடு மதிப்பெண்களும் எடுத்துக் கொண்டு இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் : இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ .750/- ஆகும். பட்டியலின, பழங்குடியின, மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் செய்வது எப்படி : இதற்கான விண்ணப்பங்களை பாரத ஸ்டேட் வங்கியின் https://bank.sbi/web/careers/current-openings OR https://www.sbi.co.in/web/careers/current-openings என்ற அதிகாரப்பூர்வ   இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும்

அடுத்து நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியை தேர்ந்தெடுத்து பதிவு செய்யவும். பிறகு விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும். விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திய பிறகு, அந்த பக்கத்தை சமர்ப்பிக்கவும். எதிர்கால பயன்பாட்டிற்காக இந்த படிவத்தின் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

தமிழில் எழுத படிக்கத் தெரிந்தால் போதும்.... ரூ.50,000 வரை சம்பளம் - இந்து அறநிலையத் துறையில் சூப்பர் வேலை

 தமிழ்நாட்டில் உள்ள இந்து திருக்கோயில்களை அறநிலையத் துறை நிர்வகித்து வருகிறது. அற நிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் 46,020 இந்து சமய மற்றும் சமண சமய திருக்கோயில்கள் உள்ளன. இந்த திருக்கோயில்களில் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு அவ்வப்போது ஆட்சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

அந்த வகையில்,  திருச்சி நகரிலிருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ள  சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுளளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவஞ்சல் மூலம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 25.10.2023 மாலை 05.45 மணி வரை ஆகும்.

பணியிடத்தின் பெயர்ஊதிய விகிதம்காலிப் பணியிடங்களின் எண்ணிக்கைகல்வித் தகுதி
காவலர்15,900-50,40025தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்
காவலர் (தொகுப்பூதியம்)10,00025தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழ்காணும் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்:

விண்ணப்பதாரர்கள் இந்து மதத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்;

விண்ணப்பதாரர் 01.07.2023-ம் தேதி அன்று, 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்;

ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், அந்தந்த பதவிக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்;

விண்ணப்பத்துடன் முகவரிச் சான்று, பிறந்தநாள் குறித்த சான்று, சாதிச் சான்று நகல், கல்வித் தகுதிக்கான சான்றிதல்களின் நகல், அரசு மருத்துவரிடமிருந்த பெறப்பட்ட உடற்தகுதி சான்றிதழ், குற்றவழக்கு ஏதும் இல்லை என்பதற்கான காவல்துறை சான்றிதழ், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை போன்ற பிற ஆவணங்களையும் சேர்த்து அனுப்பப்பட வேண்டும்;

திருக்கோயிலால் வெளியிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதர நிபந்தனைகளை திருக்கோயில் அலுவலகத்திலும் அல்லது www.tnhrce.gov.in மற்றும் samayapurammariamman.hrce.tn.gov.in என்ற இணையதளங்களிலும் அறிந்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பங்களை மேற்படி இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் அஞ்சல் உறையில், விண்ணப்பிக்கும் பதவியைத் தெளிவாக குறிப்பிட்டு உதவி ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம், மண்ணச்சநல்லூர் வட்டம்,   திருச்சிராப்பள்ளி மாவட்டம், 621- 112. தொலைபேசி எண் : 04312670460 என்ற முகவரிக்கு நேரிலோ அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும். மேலும் ரூ.25/- மதிப்புள்ள தபால் தலை ஒட்டி அனுப்ப வேண்டும். வேலைவாய்ப்பு அறிக்கையை பதிவிறக்கம் செய்ய இந்தஇணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

10ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு.. உடனே அப்ளை பண்ணுங்க!

 விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள பல் மருத்துவர்/பல்மருத்துவ உதவியாளர்/திட்ட மற்றும் நிர்வாக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலியிடங்கள் விவரங்கள்:

பதவியின் பெயர்எண்ணிக்கைமாத ஊதியம்தகுதி
பல் மருத்துவர் (Dental Surgeon)134,000இளங்கலை பல் மருத்துவ படிப்பு (பிடிஎஸ் )
பல் மறுத்துவ உதவியாளர் (Dental Assistant)113,80010ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
திட்ட மற்றும் நிர்வாக உதவியாளர் (Programe Cum Administrative Assistant)112,000ஏதேனும் துறைகளில்  பட்டம் பெற்றிருக்க வேண்டும். எம்எஸ் ஆபிஸ் மென்பொருள் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். அலுவலக மேலாண்மை பணிகளில் ஓராண்டு முன்னனுபவம் கொண்டிருக்க வேண்டும்

நிபந்தனைகள்:

1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.

2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.

3. பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் (Under Taking) அளிக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

நிர்வாக செயலாளர்/துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் மாவட்ட நலவாழ்வு சங்கம்,

துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்,

மாவட்ட ஆட்சியர் வாளகம்,

விருதுநகர் மாவட்டம்-626001.

இதர விவரங்கள்:

1. விண்ணப்பங்கள் நேரிலோ/விரைவு தபால் (SpeedPost) மின்னஞ்சல் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன

2. விண்ணப்ப படிவங்கள் http://virudhunagar.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், அருகிலுள்ள மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம் மற்றும் வட்டார சுகாதார நிலைங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.

2. இதற்கான, மின்னஞ்சல் முகவரி vnrnhm@gmail.com

4. மேற்குறிப்பிட்ட பதவிகளின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது.

5.திட்ட மற்றும் நிர்வாக உதவியாளர்(Program, cum Administrative Assistants) பதவிக்கு வயது வரம்பு 45 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ரூ.1,00,000 மேல் மாத சம்பளம்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு


தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணிகளில் அடங்கிய மருந்து சோதனை ஆய்வுக் கூடத்தில் இளநிலை பகுப்பாய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் அக்டோபர் மாதம் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பதவியின் பெயர்:  இளநிலை பகுப்பாய்வாளர் (Junior Analyst)

காலியிடங்களின் எண்ணிக்கை: 7

முக்கியமான நாட்கள்:

அறிவிக்கை நாள்: 21.09.2023

இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய இறுதி நாள் : 20.10.2023

கணினி வழித்தேர்வு நடைபெறும் நாட்கள் மற்றும் நேரம்:-

எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களை கொண்டது.

தாள் -1  : 05.12.2023  முற்பகல் 09.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை.(பட்டப்படிப்பு தரம்) தாள் I-ல் மருந்தாக்கம், மருந்தியல் அறிவியல் மற்றும் வேதியியல் என ஏதேனும் ஒரு பாடப்பிரிவினை தேர்வு செய்து எழுதலால். 3 மணி நேரத்தில் 200 வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டும்.

தாள் -2 : 05.12.2023 பிற்பகல் 02.30 மணி முதல் பிற்பகல் 05.30 வரை

தாள் 2 இரண்டு பகுதிகளைக் கொண்டது.

பகுதி -அ: கட்டாய தமிழ்மொழி தகுதித் தேர்வு(10ம் வகுப்புத் தரம்)

பகுதி -ஆ: பொது அறிவு (பட்டப்படிப்புத் தரம்)

தாள் II-ல் பகுதி 'அ' வில் குறைந்தபட்ச மதிப்பெண் பெறாத தேர்வர்களின் தாள்-I மற்றும் தாள்-II-பகுதி 'ஆ' வின் வினாத்தாட்கள் மதிப்பீடு செய்யப்படாது.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Graduate in Pharmacy or Chemistry or Pharmaceutical Chemistry முடித்திருக்க வேண்டும். மருந்து சோதனை துறையில் குறைந்தது 2 ஆண்டுகள் முன்னனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 36,400 – 1,15,700

வயதுத் தகுதி: மீன்துறை ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியினர், பட்டியல் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதரவற்ற விதவைகள் பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது. ஏனையோர் 1.07.2023 அன்று, 32 வயதினை பூர்த்தி அடைந்திருக்க கூடாது.

தேர்வு முறை: தேர்வு முறை ஒற்றை நிலையினைக் கொண்டது. கணினி வழியிலான எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் :  இதற்கான கட்டணம் ரூ.100/ ஆகும். பட்டியல்/பழங்குடியினர்/ மாற்றுத் திறனாளி வகுப்பினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் செய்வது எப்படி:  இணையவழி விண்ணப்பத்தை 20.10.2023 அன்று இரவு 11:59 மணி வரை விண்ணப்பிக்க இயலும், பின்னர் அச்சேவை நிறுத்தப்படும். விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in/, www.tnpscexams.inஆகிய இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.



Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news 

பெருங்குடலை சுத்தப்படுத்தி நச்சுக்களை வெளியேற்றுவது நல்லதா..? அடிக்கடி செய்யலாமா..?

 பெருங்குடல் புற்றுநோய் ஆண்கள் மற்றும் பெண்களில் பொதுவாக கண்டறியப்படும் புற்றுநோய்களில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா ? நமது பெருங்குடலில் தங்கும் உணவுகள் கழிவுகள் தான் அது. வாயை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்வோம். பெருங்குடலை எப்படி சுத்தம் செய்வது என்று யோசிக்கலாம். அதே போல அது ஆரோக்கியமானதா என்றும் சிந்திக்கலாம். அதற்கான பதில்களை சொல்கிறோம்.

நாம் வாய் வழியாக சாப்பிடும் உணவு தொண்டையைத் தாண்டியதுமே செரிமான வேலை என்பது தொடங்கிவிடும். அதன் முக்கியப் பணி  பெருங்குடலில் நடக்கும். நாம் உட்கொள்ளும் தண்ணீரை உறிஞ்சுவதற்கும் கழிவுகளை அகற்றுவதற்கும் இறுதி கட்ட பொறுப்பு  பெருங்குடலுடையது. உங்கள் பெருங்குடலை நன்கு கவனித்துக்கொள்வது முக்கியம்.

ஆனால் எப்படி?

பெருங்குடல் சிகிச்சை, ஹைட்ரோ பெருங்குடல் சிகிச்சை, பெருங்குடல் நீர்  அல்லது பெருங்குடல் நச்சுத்தன்மை நீக்குதல்  என்றும் அழைக்கப்படும் பெருங்குடல் சுத்திகரிப்பு பற்றி நீங்கள் யோசித்துக்கொண்டிருக்கலாம். இந்த வகையான சிகிச்சைகள் பெரும்பாலும் நல்ல பெருங்குடல் ஆரோக்கியத்திற்கான ஒரு செயலாக்கமான அணுகுமுறையாக விளம்பரப்படுத்தப்படுகின்றன, ஆனால் உண்மையில் இதில் மருத்துவப் பயன்கள் உள்ளதா?

பெருங்குடல் சுத்திகரிப்பு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னாள் இருந்து பழக்கத்தில் இருப்பது தான். முதலில் உணவு பொருட்கள் வழியாக செய்யப்பட்டு வந்தது இப்போது கொஞ்சம் ரசாயனம் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கொண்டு செய்யப்படுகிறது. தவறான மறுத்து அல்லது விஷம் குடித்தவர்களுக்கு எனிமா கொடுத்து வெளியே எடுப்பது ஒரு வகை.

இன்னொரு முறை:  மலக்குடலுக்குள் ஒரு குழாயைச் செருகி அதிக அளவு நீர் குழாய் வழியாக தள்ளுவர். அது பெருங்குடலில் உள்ளதை அள்ளி வெளியே இறைத்துவிடும். இதுவும் பெருங்குடலை முழுமையாக சுத்தப்படுத்த உதவும். இதை மருத்துவத்தில் சிறந்தவர்கள் தான் செய்வர்.

இதனால் நன்மைகள் என்ன?

உடலில் இருந்து நச்சுகளை அகற்றுதல், நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துதல், எடை இழப்புக்கு உதவுதல், செரிமானத்தை மேம்படுத்துதல், மனநிலையை மேம்படுத்துதல் மற்றும் பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை இது தரும் என்கின்றனர்.

ஆனால் இந்த கூற்றுகளில் ஏதேனும் உண்மை உள்ளதா?

இந்த சிகிச்சையின் ஆரோக்கிய நன்மைகள் தரும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்று சில மருத்துவர்கள் கூறுகின்றனர். அதனால் சிலருக்கு நன்மைகள் நடந்துள்ளது. ஆனால் இது எல்லோருக்கும் பொருந்துவதில்லை. உண்மையில், மருத்துவம் அல்லாத அமைப்பில் இந்த சிகிச்சைகளைச் செய்யும்போது உண்மையில் ஆபத்து உள்ளது.

பெருங்குடல் சுத்திகரிப்பு அபாயங்கள் என்ன?

  • நீங்கள் பெருங்குடல் சுத்தப்படுத்த முயற்சிக்கும் முன் பல அபாயங்கள் உள்ளன என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
  • நீரிழப்பு: பெருங்குடலில் இருக்கும் அனைத்தையும் வெளியே எடுக்கும்போது, பெருங்குடலில் எலக்ட்ரோலைட் சமநிலையின்மை ஏற்படும். அதனால் நீரிழப்பு ஏற்படும்.
  • அதே போல அசுத்தமான கருவிகள் உள்ளே சென்றால் அதன் மூலம் நோய்த்  தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இதனால் குடல் புண் அல்லது குடல் தொற்றுகள் ஏற்படலாம்.
  • பெருங்குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில நிரூபிக்கப்பட்ட வழிகள் :

    ஆல்கஹால் மற்றும் சிவப்பு இறைச்சி என்று சொல்லப்படும் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, ஆட்டு இறைச்சி உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துங்கள். புகையிலையைத் தவிர்க்கவும், வாரத்திற்கு குறைந்தது 3 முறை உடற்பயிற்சி செய்யவும், 45 வயதில் தொடங்கும் கொலோனோஸ்கோபிகளுக்கு உங்கள் மருத்துவரை தவறாமல் பார்க்கவும்.

  • பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கவும், பெருங்குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நீங்கள் அதிக நார்ச்சத்து உள்ள உணவுகளை சாப்பிடலாம். பல ஆய்வுகள் நார்ச்சத்து நிறைந்த உணவை பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும்.என்று கூறியுள்ளது.