Search

IFCI Ltd நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – B.Tech./B.E முடித்தவர்கள் விண்ணப்பிக்க விரையுங்கள்!

 

IFCI Ltd நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – B.Tech./B.E முடித்தவர்கள் விண்ணப்பிக்க விரையுங்கள்!

IFCI Ltd ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் Associate Director, Sr Associate பணிகளுக்கென 05 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. பதிவு செய்ய ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


IFCI Ltd காலிப்பணியிடங்கள்:

IFCI Ltd ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் Associate Director, Sr Associate பணிகளுக்கென 05 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

IFCI Ltd வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது 35 முதல் 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

IFCI Ltd கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Chartered Accountant (CA) or B.Tech./B.E, MBA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

IFCI Ltd ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு நிறுவன விதிமுறைப்படி மாதம் சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

IFCI Ltd தேர்வு செய்யப்படும் முறை :

திறமையுள்ள விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

IFCI Ltd விண்ணப்பிக்கும் முறை :

பதிவு செய்யும் நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, போதிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் மூலம் (12.10.2023) இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

 Click here to join WhatsApp group for Daily employment news

TCS நிறுவனத்தில் B.Sc படித்தவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே!

 

TCS நிறுவனத்தில் B.Sc படித்தவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே!

TATA கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் (TCS) என்பது மிகப்பெரிய இந்திய பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப (IT) சேவை மற்றும் ஆலோசனை நிறுவனமாகும். இந்நிறுவனம் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. B.Sc தேர்ச்சி பெற்று வேலை தேடும் நபர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. Property and Casualty Insurance பதவிக்கான தகுதி, அனுபவம், வயது வரம்பு மற்றும் விண்ணப்பங்களை செலுத்தும் செயல்முறைகள் குறித்த விவரங்களை விரிவாக காணலாம்.

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் இருந்து BACHELOR OF ARTS படித்த மாணவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

பணி அனுபவம்:

1 முதல் 10 ஆண்டுகள் வரை முன் பணி அனுபவம் உள்ள மாணவர்கள் TCS பணியமர்த்தல் செயல்முறைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.

தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் செப் 30 ஆம் தேதி நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

தமிழகத்தில் உள்ள ESIC மருத்துவமனையில் வேலை – சம்பளம்: ரூ.81100//-

 

தமிழகத்தில் உள்ள ESIC மருத்துவமனையில் வேலை – சம்பளம்: ரூ.81100//-

தமிழ்நாடு பிராந்தியத்தில் மருத்துவப் பணிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 56 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து தங்களின் பதிவுகளை 30.10.2023 க்குள் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழக ESIC மருத்துவமனை காலிப்பணியிடங்கள்:
  • ECG Technician – 6 பணியிடங்கள்
  • Junior Radiographer – 17 பணியிடங்கள்
  • Junior Medical Laboratory Technologist – 15 பணியிடங்கள்
  • OT Assistant – 10 பணியிடங்கள்
  • Pharmacist (Allopathic) – 4 பணியிடங்கள்
  • Pharmacist (Ayurveda) – 2 பணியிடங்கள்
  • Radiographer – 2 பணியிடங்கள்
ESIC கல்வி தகுதி:

ESIC TN அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் Diploma/ Degree in pharmacy முடித்திருக்க வேண்டும்.

Pharmacist வயது வரம்பு:

பணியாளர்களின் மாநில காப்பீட்டுக் கழக தமிழ்நாடு ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:
  • ECG Technician – ரூ. 25500- 81100
  • Junior Radiographer – ரூ.21,700- 69,100
  • Junior Medical Laboratory Technologist – ரூ.21,700- 69,100
  • OT Assistant – ரூ.29200- 92300
  • Pharmacist (Allopathic) – ரூ.29200- 92300
  • Pharmacist (Ayurveda) – ரூ.29200- 92300
  • Radiographer -ரூ. 29200- 92300
விண்ணப்பக் கட்டணம்:

SC/ ST/ PWD/ முன்னாள் ராணுவத்தினர்/ பெண் விண்ணப்பதாரர்கள் : ரூ.250/-
மற்ற அனைத்து வேட்பாளர்களும்: ரூ. 500/-

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் Phase-I Written Examination மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தமிழ்நாட்டில் வேலை தேடும் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.esic.gov.in/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் 30.10.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 Download Notification 2023 Pdf
Apply Online 

உலக இதய தினம் 2023: தண்ணீர் குடிப்பது இருதய நோய்களைத் தடுக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

 நம்  உடலில் உயிர் எங்கே இருக்கிறது என்று அதிகாரபூர்வமாக அறிவியல்பூர்வமாக இன்னும் எந்த முடிவையும் யாராலும் சொல்ல முடியவில்லை. ஆனால், இதயம் என்பது  உயிர் வாழ்வதற்கு முக்கியமான ஒன்று என்பது மட்டும் அனைவருக்கும் தெரியும். இதயம் துடிப்பதை நிறுத்திவிட்டால், நம் உடலின் இயக்கம் நின்றுவிடும். அந்த இதயத்தை பாதுகாக்கும் முக்கியத்துவத்தை சொல்லும் தினம் தான் இன்று.

அதேபோல   நாம் உயிர்வாழ்வதற்கு தண்ணீர் மிகவும் அவசியமானது, ஏனெனில் நமது ஆரோக்கியத்தின் பல்வேறு அம்சங்களுக்காக நீரேற்றமாக இருப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி நாம்  கேள்விப்படுகிறோம். ஆனால் உங்கள் தினசரி தண்ணீர் உட்கொள்ளல் உங்கள் இதய ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா ? தண்ணீரால் இதய நலன் மேம்படும் வழிகளை சொல்கிறோம்.

போதுமான அளவு நீரேற்றமாக இருப்பது சரியான இரத்த அளவை ஊக்குவிப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது மற்றும் இதயத்தின் இயக்க அழுத்தத்தை குறைக்கிறது. தண்ணீர் குடிப்பது இரத்த நாளங்களின் தளர்வு மற்றும் விரிவாக்கத்தை ஆதரிக்கிறது, இதனால் இதயம் உடல் முழுவதும் இரத்தத்தை பம்ப் செய்வதை எளிதாக்குகிறது.

நீரிழப்பு உண்மையில் மன அழுத்தத்தைத் தூண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா? நீரிழப்பு தசைகளில் உள்ள நீர்த்தன்மை மட்டும் மல்லாமல் ரத்தத்தின் நீர்ம அளவையும் பாதிக்கும். அப்போது குறைந்த அளவிலான ரத்தத்தை உடல் முக்க பம்ப் செய்ய இதயம் போராடும். இது இதயத் துடிப்பு அதிகரிப்பதற்கும் இருதய அமைப்பில் கூடுதல் அழுத்தத்திற்கும் வழிவகுக்கும். நிறைய தண்ணீர் குடிப்பது தான் இதற்கான எளிய தீர்வு.

நீரிழப்பு இரத்தத்தை தடிமனாக்குகிறது. அதாவது நீர்சத்து குறைவதால் குறைந்த நீரில் ரத்த அணுக்கள் தேங்கி அடர்த்தியாகும். மேலும் அது உறைவதற்கு அதிக வாய்ப்புள்ளது. மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படக்கூடிய வாய்ப்புகளும் அதிகம். போதுமான தண்ணீர் குடிப்பதன் மூலம், உங்கள் இரத்தத்தின் திரவத்தன்மையை பராமரிக்க முடியும்.  இரத்த உறைவு அபாயத்தை குறைக்கலாம்

சரியான சத்தான உணவு என்பது அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒன்று. அதனுடன், தண்ணீரிலிருந்து வரும் ஊட்டச்சத்துக்கள் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களுக்கான கேரியராகவும் செயல்படுகின்றன, அவை இதயம் மற்றும் பிற முக்கிய உறுப்புகளை திறம்பட சென்றடைவதை உறுதி செய்கின்றன. இதயத்தின் சரியான செயல்பாட்டிற்கு இந்த ஊட்டச்சத்து முக்கியமானது.

போதுமான நீரேற்றம் இரத்தத்தில் உள்ள கழிவுப்பொருட்களை திறம்பட அகற்றுவதில் சிறுநீரகங்களை ஆதரிக்கிறது. இரத்த ஓட்டத்தில் கழிவுகள் சேரும்போது, ​​​​அது இதயத்தில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும். சரியான நீர் உட்கொள்ளல் ஆரோக்கியமான சமநிலையை பராமரிக்கவும் இந்த மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.


பிங்க் உப்பு, கருப்பு உப்பு, கல் உப்பு, கடல் உப்பு... நீங்கள் உணவில் எந்த வகை உப்பை சேர்க்க வேண்டும்..?

 உப்பில்லாத உணவு குப்பையிலே என்ற பழமொழிக்கு ஏற்ப, சரியான அளவில் உப்பு இல்லாத உணவு சுவை குறைவாக இருக்கும். இனிப்புச் சுவை உணவுகளுக்குக் கூட உப்பை கொஞ்சம் சேர்ப்பது சுவையை பல மடங்கு அதிகரிக்கும். உப்பில் பல வகைகள உள்ளன என்பது சிலருக்கு தெரிந்திருக்கலாம். இயற்கையாகவே சில சத்துக்கள் மற்றும் குணமாக்கும் பண்புகள் கொண்ட பல வகையில் உப்பு இருக்கிறது. இதில் இந்துப்பு என்று கூறப்படும் பிங்க் நிற உப்பு, கருப்பு உப்பு, கடல் உப்பு, தூள் உப்பு என்று பல வகைகளில் எதை உணவில் சேர்க்கலாம் என்பது பற்றி பார்க்கலாம்.

உப்பு என்பது சுவைக்காக மட்டுமல்லாமல் உடலில் இருக்கும் நீர்ச்சத்தை சரியான அளவில் வைப்பதிலும், உடல் ரீதியான ஒரு சில செயல்பாடுகள் சீராக இருப்பதற்கும் உதவியாக இருக்கிறது

உப்பு எந்த அளவுக்கு ஆரோக்கியமானதோ, உணவின் சுவைக்கு எவ்வளவு முக்கியமானதோ அதே அளவுக்கு அதிக உப்பு என்பது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடிய தன்மையையும் கொண்டுள்ளது. அதிகமாக உப்பு சேர்க்கப்படும் உணவுகளை சாப்பிடும் பொழுது எலெக்ட்ரோலைட் இம்பேலன்ஸ் ஏற்படும்; நரம்புகள் அனுப்பும் சமிக்ஞைகள் பாதிக்கப்படும்; தசைகளில் இருக்கும் ஊட்டச்சத்து குறையும்; உடலில் இருக்கும் நீர்ச்சத்து வற்றும் அபாயம் ஏற்படும்; இதுமட்டும் அல்லாமல் இன்றைய கால கட்டத்தில் உயிர் கொல்லியாக அறியப்படும் ஹைபர்டென்ஷன் என்று சொல்லப்படும் உயர் இரத்த அழுத்தத்திற்கு அதிக உப்பு காரணமாக கூறப்படுகிறது. எனவே எந்த வகை உப்பை உணவில் பயன்படுத்தலாம் என்பதை தெரிந்துகொண்டு பயன்படுத்துவது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

கடல் உப்பு : கடல் உப்பு என்பது இயற்கையாகவே கனிமச்சத்துக்கள் நிறைந்த கடலில் இருந்து நேரடியாக எடுக்கப்படும் ஒரு உப்பு வகையைக் குறிக்கிறது. பொதுவாக நம் சமையலறையில் கல்லுப்பு என்று சொல்லப்படும் சின்ன சின்ன கற்கள் போல வெள்ளை நிறத்தில் இருக்கும் உப்புதான் கடலுப்பு. ஆனால் இந்த கடல் உப்பு, வெண்மை நிறம் பெறுவதற்காக பல விதமான ரசாயனங்கள் மற்றும் கெமிக்கல் பிராசஸ்களுக்கு உட்படுத்தப்படுகின்றது. கடல் நீரை ஆவியாக்கி, அதிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் உப்பில் பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் கால்சியம் ஆகிய மூன்று முக்கிய கனிமங்களும் இருக்கின்றன. கடல் உப்பு, டேபிள் சால்ட் என்று கூறப்படும் தூள் உப்பை விட மிகவும் ஆரோக்கியமானது.

பிங்க் சால்ட் (இந்துப்பு) : வெளிர் பிங்க் நிறத்தில் காணப்படும் பிங்க் சால்ட் என்று அழைக்கப்படும் இந்துப்பு, இமாலய மலைப் பிரதேசங்களில் கிடைக்கிறது. மலைகளில் இது பாறைகளாக வெட்டி எடுக்கப்பட்டு சந்தைகளில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. எந்த விதமான ரசாயனங்கள் அல்லது கெமிக்கல் ப்ராஸசிங்கிற்குக்கு உட்படுத்தப்படவில்லை என்பதால், இதில் அதிக சத்துக்கள் உள்ளன மற்றும் உடலுக்கு பல நன்மைகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. வழக்கமாக நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் டேபிள் சால்ட் மற்றும் கல் உப்பை விட, இதை தினசரி உணவில் சேர்த்தால் உடலுக்கு தேவையான சோடியம் மற்றும் இயற்கையான கனிமச் சத்துக்கள் போதுமான அளவு கிடைக்கும். அது மட்டுமல்லாமல் குறைவாக உப்பு சாப்பிட வேண்டும் என்று விரும்புபவர்கள், பிங்க் சால்ட்டை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

கருப்பு உப்பு : பிங்க் சாட்டை போலவே ஒரு சில மலைப்பாங்கான இடங்களில் பழுப்பு முதல் கருப்பு நிறங்களில் கனிமங்கள் நிறைந்த, கருப்பு உப்பு கிடைக்கும். இதுவும் ஒருசில மலைப்பிரதேசங்களில் கிடைக்கக்கூடிய உப்பு வகைகளில் ஒன்று. கருப்பு உப்பு ஒரு விதமான வித்தியாசமான வாசனையை கொண்டிருப்பதால் ஒரு சிலருக்கு பிடிக்காமல் போகலாம். அதேபோல ஒரு சிலருக்கு இதை சாப்பிடும் பொழுது ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.

டேபிள் சால்ட்: டேபிள் சால்ட் என்பதை நாம் தினசரி சமையலில் பயன்படுத்தக்கூடிய மற்றும் பொதுவாக பலவிதமான பாக்கெட்டில் வரும் உணவுகளில் அதிகமாக பயன்படுத்தக்கூடிய தூள் உப்பை குறிக்கிறது. இது வெள்ளை நிறமாக இருப்பதற்காக பலவித ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. எனவே டேபிள் சால்ட்டை குறைவாக பயன்படுத்த வேண்டும்.

உணவில் உப்பு சேர்ப்பதை தவிர்க்கவே முடியாது. ஆனால் எந்த அளவு சேர்க்கிறோம் என்பது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அமெரிக்காவில் வெளியான டயட்டரி கைடுலைன்கள் அடிப்படையில், ஒரு நாளைக்கு ஒரு நபர் 2300 மில்லி கிராம் அளவிற்கு மேல் உப்பை உட்கொள்ளகூடாது என்று கூறப்படுகிறது. ஆனால் சராசரியாக ஒரு நபர் ஒரு நாளைக்கு 3393 மில்லி கிராம் அளவுக்கு சோடியம் உட்கொள்கிறார்கள். தூள் உப்பில், சின்ன சின்ன துகள்களில் சோடியம் அதிகமாக இருக்கிறதுல் எனவே இதற்கு பதிலாக கிரிஸ்டல்களாகவும் கற்கள் போல இருக்கும் உப்பை பயன்படுத்தலாம்.


பணியிடத்தில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பணியாளர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கும்.. தீர்வுகளும்..!

 ஒரு நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், ஊழியர்கள் அர்ப்பணிப்போடு கடினமாக உழைக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அளவுக்கு அதிகமான பணிச்சுமை மற்றும் ஸ்ட்ரெஸ் ஆகியவை இன்றைய ஊழியர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளாக இருக்கின்றன.

குறிப்பாக பணியாளர்கள் உடல் ரீதியாக களைப்படைவது மட்டுமல்லாமல், மனரீதியாகவும் மிகுந்த நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். இரவு நேர பணியால் ஊழியர்களுக்கு கவலை, ஸ்ட்ரெஸ், மன அழுத்தம் போன்றவை உண்டாகின்றன.

உலக அளவில் மூன்றில் ஒரு ஊழியர் உடல் ரீதியாக மிகுந்த களைப்பு அடைகின்றனர் என்று உலக சுகாதார ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது. அதிலும் அமெரிக்காவில் பணியாற்றும் 77 சதவீத ஊழியர்கள் இந்த பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் ஊழியர்கள் தங்களுக்கான அறிகுறிகளை உணர்வதே கிடையாது.

இது குறித்து வசுதா அகர்வால் கூறுகையில், “பணிச்சுமை காரணமாக உடல் களைப்படையும்போது மிகுந்த சோர்வு, தலைவலி மற்றும் தூக்கமின்மை பிரச்சனைகள் போன்றவை ஏற்படும். கவலை, சோகம், எரிச்சல் உணர்வு போன்ற உளவியல் சார்ந்த பிரச்சினைகளையும் எதிர்கொள்ள நேரிடும். கவனம் செலுத்துதல் மற்றும் முடிவு எடுத்தல் ஆகிய திறன்களில் பிரச்சனை ஏற்படலாம். சிலர் நிலையற்ற தன்மையுடன் காணப்படுவார்கள்.

அதிகமான நேரம் பணி செய்வதை காட்டிலும், தரமான வகையில் பணி செய்ய முன்னுரிமை கொடுப்பது, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது, உடற்பயிற்சி போன்றவை மூலமாக ஊழியர்கள் புத்துணர்ச்சி அடைய முயற்சி செய்யலாம். தியானம், யோகாசனம் போன்ற பயிற்சிகளை செய்வது நல்ல பலனை தரும்.

வேலைப்பளு மற்றும் அலுவலக நெருக்கடி சார்ந்த விஷயங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் குடும்பத்தினருடன் விவாதித்தல் போன்றவை அதிலிருந்து விடுபடுவதற்கு உதவியாக அமையும். இல்லையென்றால் தொழில்முறை மருத்துவ நிபுணர்களை அணுகி இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்” என்று தெரிவித்தார்.

மன அழுத்த பிரச்சனைக்கு தீர்வு என்ன?

வேலைப்பளு காரணமாக ஏற்படுகின்ற மன அழுத்த பிரச்சனைக்கு பல வகைகளில் தீர்வு காண முயற்சி செய்யலாம். மனதிற்கு பிடித்தமான இசையை ரசிப்பது, புத்தகம் வாசிப்பது, இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை பார்வையிடுவது, தொலைதூரப் பகுதிகளுக்கு நண்பர்களுடன் சுற்றுலா செல்வது போன்ற நடவடிக்கைகள் மூலமாக மனதில் உள்ள பாரம் குறையும்.

வேலைப்பளு மற்றும் குறுகிய கால அளவிலான இலக்குகள், மிகுந்த நெருக்கடி போன்றவை நீடித்த பிரச்சினைகளாக இருக்கும் அலுவலகங்களில் இருந்து விலகி வேறொரு நல்ல நிறுவனத்தில் சேர்வதற்கு முயற்சி செய்யலாம்.

TNPL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.1,05,760/- ஊதியம் !

 

TNPL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.1,05,760/- ஊதியம் !

TNPL ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Officer, Assistant Manager (Accounts) பணிகளுக்கென 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TNPL காலிப்பணியிடங்கள்:

TNPL தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் Officer,Assistant Manager (Accounts) பணிகளுக்கு என 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPL வயது வரம்பு:

விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது 29 முதல் 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNPL கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் CA (or) CMA, பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

TNPL ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.1,05,760/- முதல் ரூ.1,27,651/- வரை ஊதியமாக பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPL தேர்வு செய்யப்படும் முறை :

திறமையுள்ள விண்ணப்பதாரர்கள் Deputation மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPL விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF
Application Form Link


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

Indian Army வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.56,100/- உதவித்தொகை !

 

Indian Army வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.56,100/- உதவித்தொகை !

Indian Army ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அவ்வங்கியில் Technical Graduate பணிக்கு என 30 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளது. இப்பணிக்கு திருமணமாகாத ஆண்களிடம் இருந்து தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


Indian Army காலிப்பணியிடங்கள்:

Indian Army ஆனது தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி Technical Graduate பணிக்கு என 30 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indian Army வயது வரம்பு:

விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது 20 முதல் 27 ஆக இருக்க வேண்டும், வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Indian Army கல்வித் தகுதி:

பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் BE/B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Indian Army ஊதிய விவரம் :

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.56,100/- உதவித்தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

Indian Army பணிக்கான தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Short listing, Medical Examination, Merit List மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Indian Army விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைனில் இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

Avinashilingam பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.10,000/- ஊதியம்!

 

Avinashilingam பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.10,000/- ஊதியம்!

அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் Research Assistant பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Avinashilingam University காலிப்பணியிடங்கள்:

Avinashilingam University ஆனது தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Research Assistant பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Avinashilingam University கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் M.Sc, MA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Avinashilingam University ஊதிய விவரம்:

தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.10,000/- ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Avinashilingam University தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான நபர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Avinashilingam University விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க திறமையுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி விண்ணப்ப படிவம் பெற்று ,பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் மூலம் இறுதி நாளுக்குள் (02.10.2023) அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ICICI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – முழு விவரங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

 

ICICI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – முழு விவரங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

Area Credit Manager பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ICICI வங்கியானது திட்டமிட்டுள்ளது. இப்பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் CA / MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ICICI காலிப்பணியிடங்கள்:

ICICI வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Area Credit Manager பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Area Credit Manager கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Chartered Accountant, MBA in Finance தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ICICI வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Area Credit Manager முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 5 முதல் 8 ஆண்டு வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

ICICI ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ICICI-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

Area Credit Manager தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

தினமும் இரவு 7 மணிக்கு மேல் இதை செய்தால் உங்க வாழ்க்கையே மாறிடும்..!

 தினசரி உங்கள் நாள் பரபரப்பாக அல்லாமல் நிலையாக இருக்க வேண்டுமெனில் திட்டமிடுதல் அவசியம். அவ்வாறு திட்டமிட்டு உங்கள் அன்றாட வேலைகளை செய்கிறீர்கள் எனில் தேவையற்ற டென்ஷன்களை தவிர்க்கலாம். இதனால் மன நிம்மதி இருக்கும். அன்றைய நாளும் சீராக இருக்கும். அப்படி உங்கள் வேலை முடிந்து வீட்டிற்கு சென்றதும் தினமும் 7 மணிக்கு மேல் இந்த விஷயங்களை செய்கிறீர்கள் எனில் மறுநாள் என்பது நிம்மதியான மகிழ்ச்சியான நாளாக இருக்கும். அதுமட்டுமன்றி உங்கள் வேலையில் முன்னேற்றமும் கிடைக்கும். அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.

அன்றைய நாளை ரீவைண்ட் செய்யுங்கள் : தூங்குவதற்கு முன் உங்களுடைய அன்றைய நாளை ஒரு முறை ஓட்டிப் பாருங்கள். நடந்த நல்ல விஷயங்கள், கெட்ட விஷயங்கள், உங்களை சிரிக்க வைத்த விஷயங்கள் என அனைத்தையும் ஓட்டிப்பாருங்கள். இதனால் மறுநாள் நீங்கள் என்னென்ன விஷயங்களை தவிர்க்க வேண்டும். எப்படி அந்த தருணத்தை கையாண்டிருக்கலாம் என்பன போன்ற யோசனைகள் உதிர்க்கும். இதனால் மீண்டும் அதே தவறு நிகழாமல் பார்த்துக்கொள்ளலாம். தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வதுதானே வெற்றி...

வேலை மற்றும் திரைகளிலிருந்து விலகியிருங்கள் : வீட்டிற்கு சென்றதும் சமூகவலைதளங்களை பார்ப்பது, ஓடிடி தளங்களில் படம் பார்ப்பது, மிச்சம் இருக்கும் அலுவலக வேலைகளை வீட்டிற்கு வந்து செய்வது போன்ற விஷயங்களை தவிர்த்துவிட வேண்டும். அதற்கு பதிலாக புத்தகம் படிக்கலாம். வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். இதையெல்லாம் செய்தாலே உங்களுக்கு தூக்கம் தானாக வரும். உடலுக்கும் இது ஆரோக்கியம்.

நாளைக்கான திட்டமிடல் : தூங்கும் முன் நாளை செய்ய வேண்டிய வேலைகள் , மீட்டிங் இருப்பின் அதற்கு குறிப்புகளை தயார் செய்வது என உங்கள் மறுநாளையை திட்டமிடலோடு தொடங்க குறிப்பெழுதி வைத்துக்கொள்வது நல்லது.

மூச்சுப் பயிற்சி : தினமும் தூங்கும் முன் மூக்கு வழியாக மூச்சை உள்ளே இழுத்து வாய் வழியாக வெளியே விடும் மூச்சுப்பயிற்சியை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் எந்த மன அழுத்தமும் நீங்கி ஒருவித நிம்மதி கிடைக்கும். தூக்கமும் வரும். உங்களுக்கு ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.

சுய பராமரிப்பு : ஒவ்வொருவருக்கும் சுய ஆரோக்கியம் , சுய பராமரிப்பு அவசியம். சருமத்தை பராமரித்தலும் ஆரோக்கியத்தின் ஒரு அங்கமாகும். எனவே சருமத்தை ஹீல் செய்வதற்கான தினசரி வேலைகளை செய்வது அவசியம்.


குழந்தைகளிடம் நாம் கேட்க வேண்டிய 8 கேள்விகள்... பெற்றோர்களுக்கான சில ஆலோசனைகள்..!

 பெற்றெடுத்த நாள் முதல் நம் கூடவே இருக்கின்ற நம் குழந்தைகள் குறித்து நமக்கு மிக நன்றாகவே தெரியும். ஆனால், குழந்தைகள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அடிப்படையான விஷயங்களை தெரிந்து வைத்திருக்கின்றனவா என்பதை நாம் சிந்தித்துப் பார்த்துள்ளோமா? குழந்தைகள் அதன் வயதுக்குரிய அறிவையும், பக்குவத்தையும் தெரிந்து வைத்துள்ளதா என்பதை நாம் தெரிந்து கொண்டாக வேண்டும்.

உங்களைப் பற்றி குழந்தைகளுக்கு தெரியுமா? பெற்றோரை பற்றி அடிப்படையான விஷயங்களை குழந்தைகள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்படி தெரிந்திருந்தால் மட்டுமே இருவருக்கும் இடையிலான பந்தம் பலப்படும். குழந்தைகளுடன் வெளிப்படையாக பேசுவதுடன், உங்களைப் பற்றிய அடிப்படையான கேள்விகளை கேட்பது நல்ல பலனை தரும்.

நான் என்ன வேலை செய்கிறேன் தெரியுமா? தாய், தந்தை என்ன வேலை செய்கிறார்கள் என்ற அடிப்படையான கேள்விக்கு குழந்தைகளுக்கு பதில் தெரிந்திருக்க வேண்டும். இந்த கேள்விகளை குழந்தைகளிடம் கேட்கும்போது குழப்பம் மிகுந்த பதில் அவர்களிடம் இருந்து வெளிப்படுவதை பார்க்கலாம். இருப்பினும் அதை தெளிவுப்படுத்த வேண்டியது உங்கள் கடமை.

தாத்தா, பாட்டியின் பெயர் என்ன? குழந்தைகளை கொஞ்சி மகிழுவதில் தாத்தா, பாட்டிகளை மிஞ்சுவதற்கு யாராலும் முடியாது. பெற்றோராகிய நாம் கூட, குழந்தைகள் சொல் பேச்சை கேட்காத சமயங்களில் சட்டென்று கோபம் கொண்டு அவர்களை அடித்து விடுவோம். ஆனால், எந்த சமயத்திலும் குழந்தைகள் மீது கோபம் கொள்ளாதவர்கள் தாத்தா, பாட்டி மட்டுமே. அவர்களுடைய பெயர்கள் குழந்தைகளுக்கு தெரியும் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அத்துடன் பெற்றோர், மாமா, அத்தை, பெரியப்பா, சித்தப்பா, சித்தி என அனைத்து உறவுகளின் பெயர்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

மறக்க முடியாத நினைவு எது? உங்கள் குழந்தைகள் உங்களுடன் எந்த அளவுக்கு பின்னி பிணைந்துள்ளன என்பதை தெரிந்து கொள்ள இந்தக் கேள்வி உதவும். ஏனென்றால், உங்களுடன் இருந்த பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு குழந்தைகள் பக்குவம் அடைந்துள்ளன என்றால் அவர்களுடைய மனதில் நீங்கள் நீங்காத இடம் பிடித்துள்ளீர்கள் என்று அர்த்தம்.

நான் கவலையாக இருக்கும்போது….. பெற்றோர்களுக்கு கடினமான சூழல் வருகிறபோது, பெற்றோராகிய நாம் கவலைகளை எதிர்கொள்கிறபோது, குழந்தைகள் அதை எப்படி கடந்து செல்கின்றனர் என்பதை நாம் கவனிக்க வேண்டும். பெற்றோரின் கவலை குழந்தைகளை பாதிக்கக் கூடாது என்றாலும், அவர்களிடம் தன்னம்பிக்கை உணர்வு இருக்கிறதா என்பதை பரிசோதிக்க வேண்டும்.

நான் உன்னை கவனிக்கிறேன்…. குழந்தைகளை நீங்கள் எப்போதும் கவனித்துக் கொண்டே இருக்கிறீர்கள், குழந்தைகளின் எண்ணங்களை மிகச் சரியாக புரிந்து வைத்துள்ளீர்கள் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக உங்கள் கேள்விகள் அமைய வேண்டும். பெற்றோர் மீது மிகுந்த நம்பிக்கை ஏற்பட இது உதவும்.

நான் ஏதேனும் வித்தியாசமாக செய்கிறேனா? பெற்றோர் குறித்த விமர்சனங்களை, தன்னுடைய கருத்துக்களை குழந்தைகள் முன்வைப்பதற்கு இடமளிக்க வேண்டும். ஏனென்றால் பெற்றோர் மீதான அதிருப்தியை குழந்தைகள் பூட்டி வைத்துக் கொண்டிருந்தால் நாளடைவில் மிகுந்த கோபமும், வன்மமும் உண்டாகும்.

என்னுடைய பலம் என்ன? தாய், தந்தைதான் ஒரு குழந்தையின் சிறந்த வழிகாட்டி ஆவார்கள். உங்களுடைய பலம் எதுவென்று தெரிந்து குழந்தைகள் அதை நோக்கி ஈர்க்கப்பட வேண்டும். அடிப்படையில் அதை குழந்தைகள் தெரிந்து வைத்துள்ளார்களா என்பதை கேள்விகள் மூலமாக உறுதி செய்து கொள்ள வேண்டும்.

உனக்கான கனவுகள் : குழந்தைகளுக்காக உங்கள் மனதில் என்னென்ன கனவுகள் இருக்கிறது என்பதை தெரியப்படுத்துங்கள். அதை நோக்கி உங்கள் கேள்விகள் அமையும்போது குழந்தைகளின் மனதில் அவை ஆழமாக பதியும். எதிர்காலத்தில் அந்த கனவை நிறைவேற்றுவதே குழந்தைகளின் விருப்பமாக அமையும்.



ஒருவருக்கு மாரடைப்பு அறிகுறி தெரிந்தால் அருகில் இருப்பவர் உடனே என்ன செய்ய வேண்டும்..?

 ஒட்டுமொத்த உடல் இயக்கத்திற்கும் இதயம்தான் உயிர். அப்படி இருக்கையில் அதற்கு ஏதேனும் சிறு கோளாறு இருந்தாலும் ஒட்டுமொத்த உடலையும் பாதிக்கும். அது உயிருக்கே கூட ஆபத்தாக முடியலாம். அப்படி பலரும் சமீப நாட்களாக இதய நோய்களால் பாதித்து வருகின்றனர். நேற்று நன்றாக பேசிக்கொண்டிருந்தவர் திடீரென மறுநாள் மாரடைப்பால் இறந்துவிட்ட செய்தியை தினமும் கேட்க முடிகிறது. இதற்கு ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறையும் காரணம் என்று கூறப்படுகிறது. அப்படி ஒருவேளை உங்கள் அருகில் இருக்கும் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால் உடனே நீங்கள் விரைந்து செய்ய வேண்டிய விஷயங்களை தெரிந்துகொள்ளுங்கள். இதனால் அவரின் உயிரை காப்பாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அவருக்கு மாரடைப்புதான் என்பதை உறுதி செய்யக்கூடிய அறிகுறிகள் : 10 நிமிடங்களுக்கு மேல் கடுமையான அழுத்தம் அல்லது நெஞ்சு வலி இருக்கும். அசௌகரியமான உணர்வு, நெஞ்சை கசக்கி பிழிவது போன்ற உணர்வு, அளவுக்கு அதிகமான வியர்வை வெளியேறுதல், மூச்சு விடுவதில் சிரமம், உடலின் இயக்கம் நின்றது போன்ற உணர்வு போன்ற அறிகுறிகள் இருக்கும். அதுமட்டுமன்றி இரண்டு தோள்பட்டை மற்றும் கைகளில் வலி, கழுத்து, முதுகு, வயிறு, தாடை ஆகிய இடங்களிலும் கடுமையான வலி இருக்கும். இப்படியான அறிகுறிகளை ஒருவர் அனுபவிக்கிறார் எனில் அவருக்கு மாரடைப்பு வந்திருப்பது உறுதி என்கிறால் ஏசியன் மருத்துவமனையின் இதய நோய் நிபுணர் சுப்ரத் அகோரி.

நாடித்துடிப்பை கவனியுங்கள் : உங்கள் அருகில் இருக்கும் ஒருவர் மூச்சு விட சிரமப்படுகிறார் எனில் முதலில் அவருடைய நாடித்துடிப்பை பரிசோதனை செய்யுங்கள். இதற்கு அவருடைய கையின் மணிக்கட்டு பகுதி அல்லது கழுத்தின் இடையில் இரண்டு விரல்களை வையுங்கள். அதன் துடிப்பு நிலையாக மற்றும் சீரான இடைவெளியில் துடிக்கிறதா என கவனியுங்கள். இல்லையெனில் அவரின் நெஞ்சருகில் காதை வைத்து இதயத்துடிப்பை கவனியுங்கள். அவருக்கு துடிப்பு இல்லை எனில் உடனே சிபிஆர் சிகிச்சை கொடுக்க வேண்டும். அதாவது நெஞ்சில் இரு கைகளை வைத்து அழுத்த வேண்டும்.

அருகில் இருக்கும் மருத்துவமனையை தொடர்பு கொள்ளுங்கள் : அருகில் இருப்பவர் மாரடைப்பு அறிகுறிகளை அனுபவிக்கிறார் எனில் உடனே ஆம்புலன்ஸுக்கு தொடர்பு கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லுங்கள். நீங்கள் கழிக்கும் ஒவ்வொரு நொடியும் முக்கியமானது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். அதற்கு ஏற்ப விரைந்து செயல்பட வேண்டும். ஒருவேளை ஆம்புலன்ஸ் வர தாமதமாகும் என நினைத்தால் உடனே வேறு ஏதேனும் வாகனத்தை தயார் செய்து அருகில் உள்ள மருத்துமனைக்கு கொண்டு செல்ல முயற்சி செய்யுங்கள்.

Automated External Defibrillator கருவியை பயன்படுத்தலாம் : இது திடீர் கார்டியாக் அரெஸ்ட் பாதிப்பின்போது பயன்படுத்தினால் அவரின் உயிரையே காப்பாற்றும் கருவியாகும். Automated External Defibrillator என்று சொல்லப்படும் இந்த கருவியை இதயத்தில் வைத்து ஷாக் கொடுப்பதாகும். இதை பல படங்களிலும் பார்த்திருக்கக் கூடும். இதயத்திற்கு ஷாக் கொடுக்கும்போது உடனே நின்றுபோன இதயம் துடிக்க ஆரம்பிக்கும். பின் மற்ற சிகிச்சைகளை மருத்துவர்கள் மேற்கொள்வார்கள்.

தொடர்ச்சியான சிபிஆர் சிகிச்சை : அவரின் இதயத்துடிப்பு சரியாக துடிக்கவில்லை அல்லது துடிப்பது நின்றுவிட்டது எனில் ஆம்புலன்ஸ் அல்லது மருத்துவர் வரும் வரை அவருக்கு சிபிஆர் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். தொடர்ச்சியாக உங்கள் முயற்சியை செய்துகொண்டே இருக்க வேண்டும். இதனால் அவரின் இதயம் மீண்டும் இயங்க தொடங்கலாம் அல்லது மருத்துவர் வந்து சிகிச்சை கொடுக்கும்போது இதய செயல்பாட்டில் நல்ல முன்னேற்றம் கிடைக்கலாம்.

மேலே கொடுக்கப்பட்ட இந்த 4 குறிப்புகள் ஒருவரின் உயிரை காப்பாற்றுமேயானால் துரிதமாக விரைந்து செயல்படுங்கள். இந்த சூழ்நிலையில் உடனே நீங்களும் பதட்டமடையாமல் இருப்பதும் அவசியம். அவர் இயல்புநிலைக்கு திரும்பும் வரை அவருக்கான மருத்துவ உதவிகளை செய்துகொண்டே இருங்கள்.


எந்தெந்த உடல் உறுப்புகள் தானம் செய்யலாம் தெரியுமா?

 மூளைச்சாவு அடைந்து உயிரிழந்த வடிவேலின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ள நிலையில், வடிவேலின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த மதுரை அப்பல்லோ மருத்துவமனை முதன்மை செயல் அலுவலர் உடல் உறுப்பு தானம் பற்றியும் , எந்தெந்த உடல் உறுப்புகள் தானம் செய்யலாம் என்பது பற்றியும் விளக்கமாக கூறியுள்ளார் .

உடல் உறுப்பு தானம் :

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்திருந்தவர் வடிவேலு. இவர் கடந்த 23ஆம் தேதி அன்று சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த வடிவேலு மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் வடிவேலின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள காந்தி காலனி பகுதியில் அவரது வீட்டில் வடிவேலின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது . வடிவேலின் உடலுக்கு மதுரை மண்டல அப்பல்லோ மருத்துவமனையில் முதன்மைச் செயலாளர் நீலகண்னன் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

வடிவேலின் உடலில் இருந்து கல்லீரல், இரண்டு கிட்னி , தோல் , ஆகிய உறுப்புகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், எடுக்கப்பட்ட உறுப்புகள், வேறு ஒருவருக்கு உறுப்பு மாற்ற அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தார் . மேலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை குறித்தும் எந்தெந்த உறுப்புகள் தானம் செய்வதற்கு தகுதியான உறுப்புகள் என்பது பற்றி விளக்கமாக கூறியுள்ளார் .

இதுகுறித்து நீலகண்னன் கூறுகையில், " வடிவேலின் உயிரிழப்புக்கு மருத்துவமனை சார்பில் அஞ்சலி செலுத்துவதற்காக வருகை தந்திருந்தோம். உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்த வடிவேலின் குடும்பத்தாருக்கு மருத்துவமனை சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் . இதுபோன்ற அறிவிப்புகளால் உடல் உறுப்பு தானம் இன்னும் வரும் காலங்களில் அதிகரிக்க கூடும் என தெரிவித்தார்.

உடல் உறுப்புகள் தானம் செய்வதன் மூலம் பல மனிதர்களுக்கு வாழ்வு கிடைக்கும் எனவும் , கண்கள் நுரையீரல் கல்லீரல் கிட்னி தோல் போன்ற உறுப்புகள் உடலில் இருந்து எடுத்து மற்றொரு நபருக்கு பொருத்தலாம் எனவும் , ஒவ்வொரு உறுப்புக்கும் குறிப்பிட்ட கால இடைவெளி இருக்கிறது.அந்த இடைவெளிக்கு உள்ளாகவே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென கூறினார்.

Click here for more Health Tip