Search

உங்கள் இதயத்தைப் பாதுகாக்க இந்த 6 பழங்கங்களை கடைபிடிங்க..!

 அதிக கொலஸ்ட்ராலை குறைப்பது எப்படி? கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதற்கான வழி இருந்தால் சொல்லுங்கள்? போன்ற கேள்விகளை இன்று அடிக்கடி நாம் கடந்து போக வேண்டி உள்ளது. அந்த அளவுக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை என்பது ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக விஸ்பரூபம் எடுத்துள்ளது. பெரும்பாலான நபர்கள் கெட்ட அல்லது அதிக கொலஸ்ட்ராலை குறைப்பதில் கவனம் செலுத்துகின்றனர்.

ஆனால் நல்ல கொலஸ்ட்ராலை முற்றிலுமாக தவிர்த்து விடுகின்றனர். கெட்ட கொலஸ்ட்ரால் இதயத்திற்கு எவ்வளவு கேடு விளைவிக்குமோ, நல்ல கொலஸ்ட்ரால் இதயத்திற்கு அவ்வளவு நன்மை தரக்கூடியதாக அமையும் என்பது பலருக்கு தெரிவதில்லை.

கொலஸ்ட்ரால் என்பது கொரோனரி தமனிகளில் படிந்து இருக்கக்கூடிய பிளேக் போன்ற ஒரு பொருளாகும். இது ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தம் இதய தசைகளுக்கு செல்வதை தடுக்கிறது. நமது செல்களில் காணப்படும் மெழுகு போன்ற ஒரு பொருளே கொலஸ்ட்ரால். கொலஸ்ட்ரால் என்றாலே அது கெட்டது தான் என்ற முடிவுக்கு பலர் வந்து விடுகின்றனர். ஆனால் உண்மையில் இரண்டு வகையான கொலஸ்ட்ரால் உள்ளன - ஒன்று நல்ல கொலஸ்ட்ரால் (HDL) மற்றொன்று கெட்ட கொலஸ்ட்ரால் (LDL).

ஹை டென்சிட்டி லிப்போ புரோட்டீன் அல்லது HDL தமனிகளில் இருக்கக்கூடிய அதிகப்படியான கொலஸ்ட்ராலை வெளியேற்றுவதற்கு உதவக்கூடியது நல்ல கொலஸ்ட்ரால் ஆகும். அதுவே லோ டென்சிட்டி லிப்போ புரோட்டீன் அல்லது கெட்ட கொலஸ்ட்ரால் என்பது தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தக்கூடிய மெழுகு போன்ற பொருள். இவை இதயத்திற்கு செல்ல வேண்டிய ஆக்சிஜன் மற்றும் ரத்த ஓட்டத்தை தடுத்து, ஹார்ட் அட்டாக் போன்ற மோசமான உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும் சைலன்ட் கில்லர். கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பது எவ்வளவு முக்கியமோ, நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிப்பதும் சமமாக முக்கியமானதாக கருதப்படுகிறது.

நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க உதவும் சில வழிகள்:-

ஆரோக்கியமான உணவு: கொலஸ்ட்ரால் அளவை அதிகரிப்பதில் உணவு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அன்சாச்சுரேட்டட் ஃபேட், ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட், உணவு நார்ச்சத்து மற்றும் பலவற்றை அன்றாட உணவில் சேர்ப்பது நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க உதவும் ஆரோக்கியமான வழிகள்.

உடல் செயல்பாடு: உடல் செயல்பாடுகள் மிகக் குறைந்த அளவில் இருக்கக்கூடிய, உட்கார்ந்த வாழ்க்கை முறை கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கான ஒரு முக்கியமான காரணமாக அமைகிறது. நல்ல கொலஸ்ட்ரால் அதாவது HDL அளவை அதிகரிப்பதற்கு உடற்பயிற்சி ஒரு அற்புதமான வழியாகும். கலோரிகளை எரிப்பது கெட்ட கொலஸ்ட்ரால் அளவுகளை குறைப்பதற்கு உதவும். அதுமட்டுமல்லாமல் தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிப்பதற்கும் உதவக் கூடும்.

உடல் எடை மேலாண்மை: உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ரால் அளவை பராமரிப்பதற்கு நமது உடல் எடையை சரியான முறையில் மெயின்டைன் செய்வது அவசியம். உடல் பருவனாக இருப்பது அதிக கொலஸ்ட்ராலை ஏற்படுத்தி அதன் காரணமாக ஹார்ட் அட்டாக் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும். எனவே தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை சீராக பராமரிப்பது மிக மிக முக்கியம்.

புகைப்பிடிப்பதை தவிர்க்கவும்: புகை பிடிப்பது நல்ல கொலஸ்ட்ரால் அளவை குறைத்து வேறு சில உடல் நல பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். எனவே உங்களுக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் அதனை உடனடியாக கைவிடுவது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

மது அருந்துவதை குறைக்கவும்: மது அருந்துவது ட்ரை கிளிசரைடுகள் மற்றும் கொலஸ்ட்ராலை உடைப்பதற்கு வழிவகுக்கும். எனவே மது அருந்துவதை குறைப்பது கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் படிவதையும் குறைக்கும்.

புரோட்டீன் நிறைந்த உணவு, நார்ச்சத்து மிகுந்த உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவற்றை ஒன்று சேர பின்பற்றுவது நல்ல கொலஸ்ட்ரால் அளவுகளை இயற்கையான முறையில் அதிகரிக்க உதவும் வழிகள். நம் உடலில் நல்ல கொலஸ்ட்ரால் இருப்பது நமது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.

🔻 🔻 🔻 

JIPMER நிறுவனத்தில் மாதம் ரூ.60,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

 

JIPMER நிறுவனத்தில் மாதம் ரூ.60,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

ஜிப்மர் தடுப்பு மற்றும் சமூக மருத்துவத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் ஜூனியர் மெடிக்கல் ஆபீசர் பதவிக்கு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் 26.10.2023 அன்றுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

JIPMER காலிப்பணியிடங்கள்:

Junior Medical Officer பதவிக்கு என 1 பணியிடம் காலியாக உள்ளது.

Officer வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

கல்வித் தகுதி:
  • MCI அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/கல்லூரியில் இருந்து MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • ஒரு பெரிய அரசாங்கத்தில் மருத்துவம்/குழந்தை மருத்துவம் பிரிவில் ஜூனியர் ரெசிடென்டாக ஓராண்டு அனுபவம் இருக்க வேண்டும்.
  • மருத்துவ ஆராய்ச்சி முறைகள் மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்குவதில் அனுபவம் இருக்க வேண்டும்.
  • கணினி பயன்பாடுகள் மற்றும் புள்ளிவிவர மென்பொருள் பற்றி தெரிந்திருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் தமிழில் புலமை வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாத சம்பளம்:

ஒப்பந்த அடிப்படையில் ஜூனியர் மெடிக்கல் ஆபீசர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.60,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை:

ஜிப்மர் மருத்துவமனை பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 26.10.2023 க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ரூ.95,910/- ஊதியத்தில் Supervisor வேலைவாய்ப்பு – 110+ காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்!

 

ரூ.95,910/- ஊதியத்தில் Supervisor வேலைவாய்ப்பு – 110+ காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்!

இந்திய ரூபாய் அச்சகத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Supervisor, Artist, Secretariat Asst, Jr Technician பணிக்கென காலியாக உள்ள 117 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு / Typing Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

CNP பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Supervisor, Artist, Secretariat Asst, Jr Technician பணிக்கென மொத்தம் 117 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Supervisor கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree / Master Degree / Diploma / ITI from NCVT/ SCVT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CNP வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Supervisor ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.18,780/- முதல் ரூ.95,910/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CNP தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு / Typing Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 18.11.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

Exim வங்கியில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்பு 2023 – ரூ. 63840/- வரை சம்பளம் || விண்ணப்பிக்க நவம்பர் 11 கடைசி நாள்!

 Exim வங்கியில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்பு 2023 – ரூ. 63840/- வரை சம்பளம் || விண்ணப்பிக்க நவம்பர் 10 கடைசி நாள்!

அகில இந்திய அளவில் Export Import Bank of India (Exim Bank) வங்கியில் காலியாக உள்ள Management Trainee (MT) பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 45 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 21.10.2023 முதல் 10.11.2023 வரை இப்பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Exim வங்கி காலிப்பணியிடங்கள்:
  • Management Trainee (MT) (Banking Operations) – 35 பணியிடங்கள்
  • Management Trainee (MT) (Digital Technology) – 7 பணியிடங்கள்
  • Management Trainee (MT) (Rajbhasha) – 2 பணியிடங்கள்
  • Management Trainee (MT) (Administration) – 1 பணியிடம்

என மொத்தம் 45 பணியிடங்கள் காலியாக உள்ளன.

MT பதவிக்கான கல்வி தகுதி:

எக்ஸிம் வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் இருந்து MBA/PGDBA/ B.E/B. Tech Degree in Computer Science/ Information Technology/ Electronics/ Master’s degree ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Export Import Bank of India ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, 01-10-2023 தேதியின்படி விண்ணப்பதாரரின் குறைந்தபட்சம் வயது 21 முதல் அதிகபட்ச வயது 25 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம்:
  • பொது மற்றும் OBC விண்ணப்பதாரர்கள்: ரூ. 600/-
  • SC/ ST/ PWD/ EWS மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள்: ரூ. 100/-

பணம் செலுத்தும் முறை: ஆன்லைன்

தேர்வு செயல் முறை:
  1. Online Test
  2. Interview
சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.36000 – 1490 – 46430 -1740 – 499910 – 1990 – 63840/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் Exim Bank அதிகாரப்பூர்வ இணையதளமான eximbankindia.in இல் ஆன்லைனில் 21.10.2023 முதல் 10.11.2023 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2023 Pdf
Apply Online Starts on 21.10.2023

🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

டீ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுமா..? ஆயுர்வேத நிபுணர் கூறும் நன்மைகளும்... தீமைகளும்...

 நம் நாட்டில் பலருக்கு டீ குடிக்கவில்லை என்றால் அன்றைய நாளே நகராது. அப்படிப்பட்ட டீ பிரியர்கள் இருக்கும் இன்றைய நிலையில், டீ குடிப்பது உண்மையாகவே ஆரோக்கியமானதா என்றால் முழுவதுமாக ஆம் என்று சொல்லி விட முடியாது.

நம்முடைய நாட்டில் மட்டும் டீக்கென்று தனி மரியாதை உண்டு. காபி பிரியர்கள் போல இந்த டீக்கு அடிமையான தனி கூட்டமே உண்டு. இதை வெறும் பானமாக இல்லாமல் இந்தியர்களின் வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாகவே மாறி இருக்கிறது. டீயை பொறுத்தவரை அதன் முக்கிய சிறப்பே நாம் விரும்பும் சுவைக்கு ஏற்றார் போல விதம் விதமாக தயாரிக்க முடியும் என்பது தான்.

சாதாரண டீ, எலுமிச்சை டீ, பிளாக் டீ, ஏலக்காய் டீ, தந்தூரி டீ போன்ற பலவிதமான வகைகளில் தயாரிக்க முடியும். இவை எல்லாவற்றையும் தாண்டி ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அல்லது ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று நான்கு முறையாவது டீ குடித்தே ஆக வேண்டும் என்று இருப்பவர்களும் உண்டு. ஆனால் இப்படி அடிக்கடி டீ குடிப்பது உடலுக்கு ஆரோக்கியமானது இல்லை! டீ குடிப்பதால் இருக்கும் நன்மைகள் போல, தீமைகள் உள்ளன.


பிரபல ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் டிம்பிள் ஜன்க்டா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தேநீரைப் பற்றி ஒரு பெரும் விழிப்புணர்வு ஏற்படும் அளவுக்கு பதிவிட்டு இருக்கிறார்.

News18

டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:

டாக்டர் டிம்பிளின் இன்ஸ்டாகிராம் பதிவில், டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். அதில் தேநீரில் உள்ள பாலிபெனால்ஸ் எனும் வேதி பொருள் சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்துவதில் மிகவும் உதவியாக இருக்கிறது. மேலும் சரியான செரிமானத்திற்கும் கார்டியோவாஸ்குலர் என்ற நோய் ஏற்படுாமல் தடுக்கவும் உதவுகிறது. உடல் எடையை சரியான அளவில் வைத்து கொள்ளவும் உதவுகிறது.


தேநீரில் சுவையூட்டும் மணமூட்டும் பொருட்களான ஏலக்காய், கிராம்பு, லவங்கப்பட்டை, கருப்பு மிளகு ஆகியவை இயற்கையாகவே மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இவற்றை தேநீர் தயாரித்து கலந்து குடிக்கும் போது அவை பாக்டீரியாக்களை கொல்வதோடு மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

டீ குடிப்பதால் ஏற்படும் கெடுதல்கள்:

டீயில் கலக்கப்படும் அதிகப்படியான சர்க்கரை உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். காபியை விட, தேநீரில் சர்க்கரை தூக்கலாக குடிப்பது பலருக்கும் பிடிக்கும். அதிக சர்க்கரை ஆபத்தானது என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்! ஒத்து, ரத்தத்தில் கலக்கும் போது உடல் சக்தியை முழுவதுமாக உறிஞ்சுவதுடன் மேலும் டீ குடிக்க வேண்டும் என்று ஆவலையும் உண்டாக்குகிறது. இது கிட்டத்தட்ட அடிமையாவது போன்ற மனநிலையை உண்டாக்கும்.

இதனால் நீங்கள் எப்போதெல்லாம் மன அழுத்தத்துடனும் சோர்வாகவோ, தலைவலி அல்லது சக்தி குறைவாக இருப்பதாக உணர்கிறேர்களோ அப்பொழுதெல்லாம் டீ குடித்தால் சரியாகிவிடும் என்ற எண்ணம் இயற்கையாகவே உங்களுக்கு ஏற்பட்டு விடும்.


டீ பற்றிய கசப்பான உண்மை:

தேநீர் தயாரிக்க தரம் குறைந்த தேயிலைகளை பயன்படுத்தும் போது, டானின்ஸ்கள் என்னும் வேதிப்பொருளை அதிக அளவில் வெளியிடுகிறது. இவை வயிற்றில் அமிலம் சுரப்பதை அதிகரித்து அசிடிட்டிக்கு வழிவகுக்கிறது.


🔻 🔻 🔻 

நம் வாழ்வையே மாற்றக்கூடிய 7 ஜப்பானிய தத்துவங்கள்.. இதை பின்பற்றினால் மகிழ்ச்சியான வாழ்க்கை உறுதி..!

 ஜப்பான் தன்னுடைய பாரம்பரியத்திற்கும் தனித்துவமான தத்துவங்களுக்கும் மிகவும் பெயர் போன ஒரு நாடாகும். அதிலும் குறிப்பாக சில ஜப்பானிய தத்துவங்களை நாம் சரியாகப் புரிந்து கொண்டு நம் வாழ்வில் செயல்படுத்தினால் அதனால் நம்முடைய வாழ்க்கையையே நம்மால் சிறப்பாக மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். சரியாக சிந்திப்பதற்கும் தனிப்பட்ட வளர்ச்சிக்கும் வாழ்வில் நாம் முன்னேறுவதற்கும் இந்த ஜப்பானிய தத்துவங்கள் வழிகாட்டியாக உள்ளன. பல காலத்திற்கு முன் கூறப்பட்ட இத்தத்துவங்கள் இப்போதும், இன்றைய நவீன வாழ்விற்கும் உகந்ததாக உள்ளன. அந்த வகையில் நம் வாழ்வை மாற்றி அமைக்கும் வல்லமை படைத்த 7 ஜப்பானிய தத்துவங்களை பற்றி இப்போது பார்ப்போம்.

இகிகாய் :

இகிகாய் என கூறப்படும் இந்த ஜப்பானிய தத்துவம் “ஒரு கருப்பொருள் இருப்பதற்கான காரணம்” அல்லது “காலையில் கண் விழிப்பதற்கான காரணம்” என இரு பொருள் தருகிறது. இத்தத்துவம் 4 கருப்பொருட்களை குறிக்கிறது. நீங்கள் எதை விரும்புகிறீர்கள், நீங்கள் எதில் சிறப்பாக இருக்கிறீர்கள், இந்த உலகத்திற்கு என்ன தேவை, உங்களுக்கு அதனால் என்ன கிடைக்கும் என்ற நான்கு கருப்பொருட்களையும் இந்த தத்துவம் உள்ளடக்கியுள்ளது.

உங்களுக்குள் உள்ள இகிகாய்கையை கண்டறிவது என்பது உங்களுடைய திறமை, ஆர்வம், அதை கொண்டு சமுதாயத்திற்கு நீங்கள் என்ன செய்ய முடியும், மற்றும் அதனால் உங்களது நிதி நிலைமையை எவ்வாறு உயர்த்திக் கொள்ள முடியும் என்பதனை பொறுத்தது. 

எனவே இந்த இகிகாய் தத்துவத்தை பின்பற்ற வேண்டும் எனில் நீங்கள் உண்மையாகவே நீங்கள் எதை நேசிக்கிறீர்கள் என்பதை கண்டறிய வேண்டும். உங்களுக்குள் இயற்கையாக இருக்கும் திறமையை கண்டறிய வேண்டும். அதனைக் கொண்டு நாம் எவ்வாறு மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதையும், அதன் மூலம் எவ்வாறு நம் நிதிநிலைமையை வலுவாக்க முடியும் என்பதையும் நாம் கண்டறிய வேண்டும்.

வாபி-சாபி : 

வாபி-சாவி எனப்படும் இந்த பண்டைய கால தத்துவமானது ஒழுங்கற்ற தன்மையில் உள்ள அழகை கண்டறிவதை ஊக்குவிக்கிறது. உடைந்த பொருட்களிலும் பழையவற்றிலும் அனைத்திலும் ஓர் கலைநயம் மிக்க அழகு உள்ளது என்பதை உணர்ந்து அவற்றை முழுமையாக ஏற்றுக் கொள்வதை இத்தத்துவம் விளக்குகிறது. குறிப்பாக இன்றைய கால இளைஞர்கள் அனைத்திலும் மிகவும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று அதிகம் மெனக்கெடுகிறார்கள். இந்த வாபி-சாபி என்பது ஒரு பொருள் அல்லது ஒருவர் எப்படி இருந்தாலும் அவை இயற்கையானது என்பதை உணர்ந்து கொண்டு, அதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துகிறது.

உங்கள் வாழ்க்கையிலும் நீங்கள் வாபி-சாபி சாவியை கொண்டு வர வேண்டும் எனில், ஒழுங்கற்ற தன்மைகளை ஏற்றுக் கொள்ள கற்று கொள்ள வேண்டும் உங்களுக்குள் உள்ள குறைபாடுகளையும் உங்களை சுற்றியுள்ள உலகில் இருக்கும் குறைபாடுகளையும் முழுமையாக ஏற்றுக் கொள்வதன் மூலம் உங்கள் வாழ்வில் தத்துவத்தை நீங்கள் கடைப்பிடிக்க முடியும். குறிப்பாக பொருட்களும் மனிதர்களும் காலம் கடக்க கடக்க அவர்கள் ஏற்படும் குறைபாடுகளை கண்டு அவர்களை குற்றம் சொல்லாமலும், ஒதுக்காமல் முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். நிகழ் காலத்தில் எவ்வாறு முழுமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பது என்பதை கற்றுக் கொள்ள வேண்டும்.

கைசென் : 

கைசென் என்பதற்கு தொடர்ச்சியான முன்னேற்றம் என்று பொருள். நீங்கள் செய்யும் செயலில் நீங்கள் மேற்கொள்ளும் சிறிய அளவிலான முயற்சி மற்றும் மாற்றங்கள் கூட வாழ்வில் முன்னேற உதவும் என்ற உண்மையை இது உணர்த்துகிறது. நாம் செய்யும் செயல்களில் நாம் மேற்கொள்ளும் மிக மிகச் சிறிய அளவிலான நேர்மறை மாற்றங்கள் கூட ஒட்டுமொத்த நிகழ்வையே மாற்றி அமைக்க வல்லமை கொண்டது என்பதை இது கூறுகிறது.

News18

கைசெனை உங்கள் வாழ்வில் நீங்கள் கடைப்பிடிக்க முதலில் சிறிய அளவிலான குறிக்கோள்களை மனதில் கொண்டு அவற்றை நோக்கி வேலை செய்ய வேண்டும். அதன் பிறகு பெரிய குறிக்கோள்களை மனதில் வைத்து அதனை நோக்கி முன்னேற வேண்டும். உங்களது உடல் நலனை பேணிக்காப்பது, புதிய விஷயங்களை கற்றுக் கொள்வது அல்லது உறவுகளை மேம்படுத்துவது போன்ற அனைத்து விஷயங்களுக்கும் இந்த கைசென் உதவும்.

ஷின்ரின்–யோகு : 

ஷின்ரின்-யோகு எனும் தத்துவமானது ஆங்கிலத்தில் “ஃபாரஸ்ட் பாத்திங்” என பொருள் படுகிறது. அதாவது ஒரு மனிதர் எப்போதும் இயற்கையுடன் ஒன்றி இருந்து அதனை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்பதையும், அதிலிருந்து நம்மை குணப்படுத்திக் கொள்ளும் கலையை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதையும் தத்துவம் கூறுகிறது. இதன் மூலம் மன அழுத்தம் குறைவது, மனநலனில் மேம்பாடு மற்றும் நமது ஒட்டுமொத்த இயக்கத்திலும் நேர்மறையான மாற்றங்கள் காணப்படும்.

News18

ஷின்ரின்-யோகு உங்கள் வாழ்வில் நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடிந்த அளவு இயற்கையான சூழலில் நேரத்தை செலவிட வேண்டும். காடுகளில் தனியாக இருப்பது அல்லது மரம், செடி, கொடிகள் நிறைந்த பூங்காவிற்கு செல்வது ஆகியவையும், அனைத்தையும் உன்னிப்பாக கவனிப்பது, சத்தங்கள், காட்சிகள். வாசனைகள் போன்ற அனைத்தையும் கவனித்து உள்வாங்கிக் கொள்வது போன்ற அனைத்தும் இதில் அடங்கும்.


இதை சரியாக பயிற்சி செய்யும்போது ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் குறைவாக சுரக்கின்றன. மேலும் நமது கற்பனைத் திறனும் அதிகரிக்கிறது. இவற்றைத் தவிர மனதிற்கு அமைதியான ஒரு சூழலை உண்டாக்கி தருகிறது. இதனால் நமது உடல் மற்றும் மனம் என இரண்டிலுமே சம நிலையான தன்மையும் நாம் ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

கிண்ட்சுகி : 

கிண்ட்சுகி எனும் இந்த வார்த்தையானது உடைந்த மண்பாண்டங்களை தங்கம், வெள்ளி அல்லது பிளாட்டினம் கலந்த பொடிகளுடன் சேர்த்து சரி செய்யும் ஒரு கலையை குறிக்கிறது. அதாவது உடைந்த விஷயங்களைப் பற்றி கவலை கொள்ளாமல் முன்னிலும் சிறப்பாக அவற்றை எவ்வாறு சரி செய்வது என்பதையும், அதனை எவ்வாறு நாம் பயன்படுத்திக் கொள்வது என்பதையும் இத்தத்துவம் கூறுகிறது. இதன் மூலம் வாழ்வில் நமக்கு இருக்கும் ஒழுங்கற்ற தன்மைகள் மற்றும் நமது காயங்கள் கூட நமது அழகுக்கும் மனவலிமைக்கும் காரணமாக இருக்கும் என்பதை இது குறிக்கிறது.

News18

உங்கள் வாழ்வில் இத்தத்துவத்தை பயன்படுத்திக் கொள்ள, முதலில் உங்களது கடந்த கால அனுபவங்களை நன்றாக சிந்தித்து எடை போட்டு பார்த்துக்கொள்ள வேண்டும். அதில் நீங்கள் செய்த தவறுகள் மற்றும் உங்களுக்கு ஏற்பட்ட காயங்களை நினைத்து வருந்துவதற்கு பதிலாக, உங்கள் வாழ்வில் அவற்றின் தனித்தன்மையை நினைத்து நீங்கள் பெருமைப்பட வேண்டும். அதனை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் அதுவே உங்களது பலமாக மாறி உங்களது வாழ்வை முன்னேற்ற உதவும்.

மோனோ நோ அவேர் : 

இந்த வார்த்தை நிலையற்ற தன்மையின் அழகை குறிக்கிறது. இதன் மூலம் வாழ்வில் நடக்கும் அனைத்து சம்பவங்களையும் முழுமையாக ஏற்றுக் கொண்டு அவற்றை அனுபவிக்க வேண்டும் என்பதையும், அனைத்துமே மாறக்கூடியது என்பதையும் நாம் உணர வேண்டும். இத்தத்துவத்தை உங்கள் வாழ்வில் கடைப்பிடிக்க முதலில் நிகழ் காலத்தில் முழுமையாக மனதை செலுத்தி வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.

News18

சூரிய அஸ்தமனத்தை ரசிப்பது, பூக்களின் அழகை கண்டு மகிழ்ச்சியடைவது, நமக்கு பிடித்தவர்களின் சந்தோஷத்தை பார்த்து நாமும் மகிழ்ச்சி அடைவது போன்ற பல்வேறு விஷயங்களை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் காரணமாக நமது வாழ்வை நன்றி உணர்வுடனும் முழுமையாகவும் வாழ முடியும்.

ஓமோடெனாஷி : 

ஒமோடெனாஷி என்னும் இந்த தத்துவமானது சுயநலமின்றி மற்றவர்களுக்கு உதவக்கூடிய தன்மையை உணர்த்துகிறது. முழு மனதோடு எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி மற்றவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதனை இது உணர்த்துகிறது. இத்தத்துவம் மூலம் உங்கள் வாழ்வில் நீங்கள் மாற்றத்தை கொண்டு வர முதலில் சுயநலமற்ற தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் மற்றவர்களுடன் பழகும் போது அன்பாகவும் பண்பாகவும் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி பழக வேண்டும். இதன் மூலம் உறவுகளில் முன்னேற்றம் ஏற்படுவது மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கு உதவுவதனால் கிடைக்கும் அளப்பரிய சந்தோஷத்தையும் நீங்கள் உணர்வீர்கள்.

🔻 🔻 🔻 

இடது கை பழக்கம் உடையவரா நீங்கள்? அப்படியென்றால் உங்களிடம் இந்த திறமைகள் இருக்கும்!!

 ஒவ்வொரு நபரின் பழக்கவழக்கங்களும் மற்றொரு நபரிடமிருந்து வேறுபட்டவை. அதே நேரத்தில், அவரை கூட்டத்திலிருந்து வேறுபடுத்தவும் இது உதவுகிறது. நம்மில் பெரும்பாலானோர் வலது கை பழக்கம் உடையவர்களாக இருப்பார்கள். அதே நேரம் இடது கை பழக்கம் உடையவர்களிடம் சில விசேஷ திறமைகள் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

ஒருவருடைய இயல்பும் வாழ்க்கை முறையும் மற்றொருவரிடமிருந்து வேறுபட்டது. ஒருவர் மற்றவர்களிடம் எப்படிப் பேசுகிறார், பேசும்போது அவருடைய வெளிப்பாடுகள் என்ன, இவை அனைத்தும் அவரது ஆளுமையைப் பற்றிய பல விஷயங்களை வெளிப்படுத்துகின்றன. உங்களில் பலர் உங்கள் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் இடது கை பழக்கம் உள்ளவர்களை சந்தித்திருக்கலாம்.

இடது கை பழக்கம் உடையவர்களாக இருப்பவர்கள் பெரும்பாலும் தங்கள் எல்லா வேலைகளுக்கும் இடது கையைப் பயன்படுத்துகிறார்கள். எழுதுவது, எதையாவது தூக்குவது, விளையாடுவது, சாப்பிடுவது என எல்லாவற்றுக்கும் இடது கையைப் பயன்படுத்துவதைக் காணலாம். அப்படிப்பட்டவர்களின் ஆளுமையை நாம் அறிந்து கொள்ளலாம்.

இடது கையைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வது என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியுமாம். அவர்கள் எதிர் வரும் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் மனதளவில் தயாராக இருக்கிறார்கள்.

படைப்பாற்றல்

இடது கை பழக்கம் உள்ளவர்களின் மூளை வலது கையில் ஆதிக்கம் செலுத்துகிறது. இதன் காரணமாக, அவர்கள் அறிவை எளிதில் பெறுகிறார்கள். படைப்பாற்றலும் அவர்களிடம் அதிகம் இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

போட்டிகள்

போட்டியைப் பொறுத்தவரை இவர்களின் திறன் மிகவும் நன்றாக இருக்கிறது. அவர்கள் டென்னிஸ் அல்லது கோல்ஃப் போன்ற விளையாட்டுகளை விளையாடினால், அவர்கள் எப்போதும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

வாழ்க்கை மேம்பாடு

இடது கை பழக்கம் உடையவர்கள் தங்கள் வாழ்க்கையை எவ்வாறு சிறந்த முறையில் மேம்படுத்துவது என்பதைப் பற்றி தெரிந்து வைத்துள்ளார்கள். அவர்களின் பயணத்தில் நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும், அது அவர்களை எதிர்காலத்தில் பிரபலமாக்கும். அவர்களின் ஆளுமை கவர்ச்சியானது.

மல்டி டாஸ்க்

மல்டி டாஸ்க் எனப்படும் எல்லா வேலைகளையும் செய்து முடிப்பதில் இடது கை பழக்கம் உடையவர்கள் வல்லவர்கள். அவர்கள் தைரியமானவர்கள் மற்றும் சூழ்நிலைகளை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர்கள்.

🔻 🔻 🔻 

மாதம் ரூ.18,000/- சம்பளத்துடன் இந்திய ஸ்டீல் ஆணைய வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்கலாம் வாங்க!

 

மாதம் ரூ.18,000/- சம்பளத்துடன் இந்திய ஸ்டீல் ஆணைய வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்தியாவின் முன்னணி எஃகு தயாரிப்பு நிறுவனமான இந்திய ஸ்டீல் ஆணையத்தில் (The Steel Authority of India Limited (SAIL)) காலியாக உள்ள Coach பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 1 பணியிடம் காலியாக உள்ளது. தகுதியானவர்கள் இப்பணிக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே இந்த வாய்ப்பை பயன்படுத்தி வேலைவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்திய ஸ்டீல் ஆணைய காலிப்பணியிடங்கள்:

Coach பதவிக்கு என 1 பணியிடம் காலியாக உள்ளது.

SAIL வயது வரம்பு:

16.10.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 64 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

தேசிய விளையாட்டு நிறுவனம் (NIS), இந்திய விளையாட்டு ஆணையத்தால் (SA) வழங்கப்பட்டுள்ள வில்வித்தை பயிற்சியில் டிப்ளமோ அல்லது வில்வித்தையில் ஆறு வார சான்றிதழ் படிப்பு உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.18,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 30/10/2023 அன்று நடைபெற உள்ளது.

SAIL விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 30/10/2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

  Download Notification 2023 Pdf

🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

TMB வங்கி Probationary Clerks வேலைவாய்ப்பு 2023 – 72 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

 

TMB வங்கி Probationary Clerks வேலைவாய்ப்பு 2023 – 72 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட், (TMB) Probationary Clerks பதவிக்கு இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் அனைத்து வழிமுறைகளையும் கவனமாகப் படித்து, பதவிக்கான அனைத்து தகுதித் தகுதிகளையும் அவர்கள் பூர்த்தி செய்வதை உறுதிசெய்ய வேண்டும். அதன் பின் ஆர்வமுள்ளவர்கள் 16.10.2023 முதல் 06.11.2023 வரை ஆன்லைனில் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

TMB வங்கி காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட் நிறுவனத்தில் Probationary Clerks பதவிக்கு என மொத்தம் 72 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடத்தில் இளங்கலை பட்டப்படிப்பை குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.

TMB வங்கி ஆட்சேர்ப்பு 2023 வயது வரம்பு:

Graduate விண்ணப்பதாரர்கள் 24 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்; 31.08.2023 இன் படி Post-graduates 26 ஆண்டுகள். மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (எம்பிசி) / பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பிசி) இரண்டு ஆண்டுகள் மற்றும் SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி Clerk சம்பளம்:
ComponentPer YearPer Month
Salary3,24,000.0027,000.00
Other Allowance (25% of salary)81,000.006,750.00
Gross4,05,000.0033,750.00
NPS Bank Contribution (14% of salary)45,360.003,780.00
Gratuity (6% of salary)19,440.001,620.00
Medical Insurance20,016.001,668.00
Fixed CTC4,89,816.0040,818.00
Variable Pay (Based on performance appraisal (payable annually) – at present maximum 40% of salary)1,29,600.0010,800.00
CTC6,19,416.0051,618.00
தேர்வு செயல்முறை:

எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

TMB வங்கி பணிக்கான விண்ணப்ப கட்டணம்:

Probationary Clerk பதவிக்கு ரூ.600/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும்முறை:

https://ibpsonline.ibps.in/tmblposep23/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு வரும் 06.11.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification for Recruitment of Probationary Clerks
Apply Online – Click Here

🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news