Search

அதிகமாக ஏப்பம் விடுவது கூட புற்றுநோய் அறிகுறியா..? உடனே செக் பண்ணுங்க..!

 ஏப்பம் விடுவது சாதாரன உடலியல் செயல்பாடு. வயிற்றில் நிரம்பியுள்ள காற்றை வாய் வழியாக வெளியேற்றுவதே ஏப்பம் விடுதல். செரிமானம் நடைபெறும் போது, நம் உடலில் இருக்கும் தேவையற்ற காற்று வெளியேறுகிறது. இந்தக் காற்றில் ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைட், நைட்ரஜன் ஆகியவை கலந்திருக்கும்.

எனினும், வழக்கத்தை விட அதிகமான ஏப்பம் உங்களுக்கு வந்தாலோ அல்லது ஒழுங்காக சாப்பிட முடியாமல் இருந்தாலோ அதை நாம் கொஞ்சம் தீவிரமான பிரச்சனையாக கருத வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். ஒருசில நேரங்களில் இது புற்றுநோயாக கூட இருக்க வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஏப்பம் எதனால் ஏற்படுகிறது?

நீங்கள் வேகமாக சாபிடும்போதோ அல்லது ஏதாவது குடிக்கும் போதோ காற்று உடலுக்குள் போய்விடும் அல்லது குளிர்பானங்கள் அருந்தும் பழக்கம் உங்களுக்கு இருந்தாலோ அல்லது புகைபிடிக்கும் பழக்கம் மற்றும் நிறைய சூயிங்கம் சுவைக்கும் பழக்கம் இருந்தால் ஏப்பம் அடிக்கடி வரும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். மேலும் ஏப்பம் விடும்போது சத்தமும் வயிற்று வலியும் வரும்.

News18

ஏப்பம் விடுவது புற்றுநோய்க்கான அறிகுறியா?

வெறுமனே ஏப்பம் விடுவது மட்டுமே புற்றுநோயின் அறிகுறி ஆகாது. இவற்றோடு வலியும் வீக்கமும் இருந்தால் தான் அது குறிப்பிட்ட இரைப்பை குடல் புற்றுநோயாக இருப்பதற்கான வாய்புள்ளது என பல அய்வுகள் தெரிவிக்கின்றன.

பல வகையான புற்றுநோய்கள் ஒருவரின் செரிமானப் பாதையை தடுக்கிறது. இதன் காரணமாக அவருக்கு வாய்வுத் தொல்லையும் அஜீரணக் கோளாறும் ஏற்படுகிறது. அதிகமாக ஏப்பம் விடுவதும் இதில் அடங்கும்.

மற்ற அறிகுறிகள்

-காரணமில்லாமல் உடல் எடை குறைதல்
- நாள்பட்ட காய்ச்சல்
- ரத்தக்கசிவு
- அடிவயிற்றில் வலி
- வயிற்றுப்போக்கு
- மலச்சிக்கல்

எந்த வகையான புற்றுநோய்க்கு ஏப்பம் அறிகுறியாக இருக்கும்?

கீழ்கண்ட புற்றுநோய்கள் முற்றிய தருவாயில் இருக்கும் நபர்களுக்கு அடிக்கடி ஏப்பம் வரும்:

  1. வயிறு அல்லது இரைப்பை புற்றுநோய்

  2. உணவுகுழாய் புற்றுநோய்

  3. கணைய புற்றுநோய்

அஜீரணம் மற்றும் உணவை விழுங்குவதில் சிரமம் இருப்பவர்களுக்கு கூடுதலாக ஏப்பம் விடும் பழக்கமும் இருக்கும். இந்த அறிகுறிகள் இருக்கும் நபர்கள் உணவுக்குழாய் அல்லது கணைய புற்றுநோயால் பாதிக்கபட்டிருப்பார்கள். மேலும் எச். பைலோரி தொற்றினால் நாள்பட்ட வீக்கம் உண்டாகி அல்சரையும் இரைப்பை புற்றுநோயையும் உருவாக்கும். எச். பைலோரி இருக்கும் நபர்களில் 10 சதவிகிதத்தினருக்கு வயிற்றுப் புண் நோயும் 1-3 சதவிகித நபர்களுக்கு இரைப்பை புற்றுநோயும் ஏற்படுகிறது.

ஏப்பம் விடுவதை எப்படி தவிர்ப்பது?

ஏப்பம் எதனால் ஏற்படுகிறது என சரியான காரணத்தை தெரிந்து கொண்டால் இதை தடுக்க முடியும் என ஆய்வுகள் கூறுகின்றன. ஏப்பம் விடுவது தீவிரமான பிரச்சனையாக இல்லாதபட்சத்தில் நமது வாழ்க்கைமுறையை மாற்றினாலே போதுமானது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது…

  • சாப்பிட்டதும் சிறிய நடை செல்லுங்கள். குறிப்பாக இரவில் -

  • சாப்பிட்டதும் கட்டாயம் இதை கடைபிடியுங்கள்.

  • கார்பனேட்டட் குளிர்பானங்கள் அருந்தும் பழக்கத்தை நிறுத்துங்கள். அதேப்போல் சூயிங்கம்மையும் அடிக்கடி சுவைக்காதீர்கள்.

  • எதையும் மெதுவாக சாப்பிடுங்கள், குடியுங்கள்

  • புகைபிடிப்பதை நிறுத்துங்கள்

  • புற்றுநோய் காரணமாக அதிகப்படியான ஏப்பம் வந்தால் கிழ்கண்ட

  • சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்.

  • கீமோதெரபி

  • அறுவை சிகிச்சை

  • கதிர்வீச்சு சிகிச்சை

  • மருந்துகள் 🔻 🔻 

Degree முடித்துவிட்டு வேலை தேடுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான BOBCAPS நிறுவன வேலைவாய்ப்பு!

 

Degree முடித்துவிட்டு வேலை தேடுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான BOBCAPS நிறுவன வேலைவாய்ப்பு!

IT Programmer பணிக்கென BOBCAPS நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு டிகிரி தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

BOBCAPS பணியிடங்கள்:

BOBCAPS நிறுவனத்தில் காலியாக உள்ள IT Programmer பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

IT Programmer கல்வி விவரம்:

IT Programmer பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் Computer Science, Computer Engineering பாடப்பிரிவில் Bachelor’s Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

IT Programmer அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் 04 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

IT Programmer சம்பள விவரம்:

இந்த BOBCAPS நிறுவன பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளம் பெறுவார்கள்.

BOBCAPS தேர்வு முறை:

IT Programmer பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

BOBCAPS விண்ணப்பிக்கும் முறை:

இந்த BOBCAPS நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தை careers@bobcaps.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 25.10.2023 அன்றுக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.

Download Notification Link

🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ICSI Consultant வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

 

ICSI Consultant வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

ICSI – ஸ்மார்ட் அரசாங்கத்திற்கான தேசிய நிறுவனம் ஆனது Junior Consultant, Consultant & Senior Consultant ஆகிய பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 9 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 31.10.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ICSI காலிப்பணியிடங்கள்:
  • Junior Consultant – 4 பணியிடங்கள்
  • Consultant – 4 பணியிடங்கள்
  • Senior Consultant – 1 பணியிடம்
கல்வி தகுதி:

இப்பணிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Master Degree in Economics/Statistics/Commerce/MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அனுபவ விவரம்:

10+ ஆண்டுகள் தொழில்முறை அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பள விவரம் (ஆண்டுக்கு):
  • Junior Consultant – 6.50 LPA to 7.00 LPA
  • Consultant – upto 14.00 LPA
  • Senior Consultant – upto 20.00 LPA
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://www.icsi.in/recruitmentcrc/ என்ற இணைய முகவரியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்து 31.10.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Apply Online


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – சம்பளம்: ரூ.32,000/- || நேர்காணல் மட்டுமே!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – சம்பளம்: ரூ.32,000/- || நேர்காணல் மட்டுமே!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது Research Assistant, Field Investigator பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


பாண்டிச்சேரி பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Research Assistant, Field Investigator பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Research Assistant கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Post graduate / M.Phil./ Ph.D.தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Research Assistant ஊதிய விவரம்:

தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.32,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாண்டிச்சேரி பல்கலைக்கழக தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 30.10.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

டிப்ளமோ தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? உங்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு இதோ!

 

டிப்ளமோ தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? உங்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு இதோ!

Mishra Dhatu Nigam Limited எனப்படும் MIDHANI ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Junior Operative Trainee, Senior Operative Trainee பணிக்கென காலியாக உள்ள 54 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு, ITI / Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

MIDHANI காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Junior Operative Trainee, Senior Operative Trainee பணிக்கென காலியாக உள்ள 54 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Trainee கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு, ITI / Diploma தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

MIDHANI வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 மற்றும் 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Trainee ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.21,900/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MIDHANI தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 01.11.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

HCL நிறுவனத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || முழு விவரங்களுடன்!

 

HCL நிறுவனத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || முழு விவரங்களுடன்!

தனியார் நிறுவனங்களில் முன்னணி வகிக்கும் HCL Tech நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Technical Specialist பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் BE/B.Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

HCL Tech காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Technical Specialist பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளது.

Technical Specialist கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

HCL வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Technical Specialist முன் அனுபவம்:

2.5 முதல் 5 ஆண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் பணி புரிந்த முன் அனுபவம் கொண்டவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

HCL ஊதிய விவரம்:

தேர்வு செய்யபடும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

Technical Specialist தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாள் முடிவதற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

TNPSC Analyst வேலைவாய்ப்பு 2023 – ரூ. 1,15,700/- சம்பளம் || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

 

TNPSC Analyst வேலைவாய்ப்பு 2023 – ரூ. 1,15,700/- சம்பளம் || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

இளநிலை ஆய்வாளர் பதவிக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த தமிழக அரசு பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNPSC வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Junior Analyst in the Drugs Testing Laboratory பதவிக்கு என 7 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆகும். SCs, SC(A)s, STs, MBC விண்ணப்பத்தார்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. மற்ற விண்ணப்பத்தார்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 32 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Graduate in Pharmacy or Chemistry or Pharmaceutical Chemistry தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் Computer Based Test (CBT) மற்றும் Certificate Verification மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  • Junior Analyst பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு ரூ.36,400 – 1,15,700/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் 20.10.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சம்பள விவரம்:

Junior Analyst – ரூ.36,400 – 1,15,700/-

TNPSC Analyst விண்ணப்பிக்க கட்டணம்:

ஒரு முறை பதிவு கட்டணம் ரூ. 150/- (5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்). ஏற்கனவே பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள் மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் 20.10.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Apply Online



🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் Accounts Officer வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: 2,09,200/- || விண்ணப்பித்து பயனடையவும்!

 

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் Accounts Officer வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: 2,09,200/- || விண்ணப்பித்து பயனடையவும்!

Senior Administrative Officer, Accounts Officer, Assistant Accounts Officer மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை Central Pollution Control Board (CPCB) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 11 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

CPCB காலிப்பணியிடங்கள்:

Senior Administrative Officer, Accounts Officer, Assistant Accounts Officer மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 11 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Accounts Officer கல்வி தகுதி:

மத்திய அல்லது மாநில அரசு அதிகாரியாக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

CPCB வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Accounts Officer ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.35,400/- முதல் ரூ.2,09,200/- வரை ஊதியம் வழங்கப்படும்.

CPCB தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 27.11.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

தமிழகத்தில் அக்.28 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

 

தமிழகத்தில் அக்.28 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் பல மாவட்டங்களில் உள்ள வேலையில்லா இளைஞர்களுக்காக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அக்.28 ஆம் தேதி புதுக்கோட்டையில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது.

வேலைவாய்ப்பு முகாம்

தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் வருகிற அக். 28 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு நடைபெற இருக்கிறது. இந்த முகாம் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற இருக்கிறது.

இதில் 150க்கு மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்புகளை வழங்கவுள்ளனர். மேலும் அயல்நாட்டு வேலைவாய்ப்பிற்கான பதிவு வழிகாட்டல், சுயதொழில், வங்கிக்கடன் உதவிகள் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து பிரத்யேக அரங்கம் அமைத்து ஆலோசனை வழங்கப்பட இருக்கிறது. அத்துடன் மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இந்த முகாமில் 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் ஐடிடி, டிப்ளமோ, பிஇ, நர்சிங் படிப்பு படித்த அனைவரும் கலந்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ளவிருப்பவர்கள் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை, பாஸ்போட் அளவு புகைப்படம் மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் நேரில் வர வேண்டும். வேலை தேடும் இளைஞர்கள் (Tamil Nadu Private Job Portal) www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ரூ.69,920/- ஊதியத்தில் Assistant Manager காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க ||முழு விவரங்களுடன்!

 

ரூ.69,920/- ஊதியத்தில் Assistant Manager காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க ||முழு விவரங்களுடன்!

TNUIFSL ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Assistant Manager, Officer பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

TNUIFSL காலிப்பணியிடங்கள்:

Assistant Manager, Officer பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Assistant Manager கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் CA/CMA, MBA, ME/M.Tech என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

TNUIFSL வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 மற்றும் 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Assistant Manager ஊதிய விவரம்:

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.69,920/- ஊதியம் வழங்கப்படும்.

TNUIFSL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 06.11.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news



பெற்றோர் செய்யும் 4 தவறுகள்.. சில குழந்தைகள் அம்மா அப்பாவை சார்ந்தே இருக்க காரணம் இதுதான்..!

 குழந்தைகள் எப்போதுமே பெற்றோர்கள் அல்லது பெரியவர்கள் யாராவது ஒருவரைச் சார்ந்தே இருக்கும் குறிப்பாக. குழந்தைப்பருவம் முதல் டாட்லர் என்று கூறும் பருவம் வரை, பெரும்பாலும் அம்மாவைச் சார்ந்து தான் குழந்தைகள் இயங்கும். ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு தானாக செயல்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் பெற்றோரையோ அல்லது வேறு யாரையும் சார்ந்து இருக்கக்கூடாது.

குழந்தைகள் வளர்ந்த பிறகு, குறிப்பாக, 2-3 ஆண்டுகளுக்குப்பிறகு, எல்லா விஷயத்துக்குமே மற்றவரை இன்னொருவரை சார்ந்து இருப்பது என்பது பிரச்னைக்குரிய அறிகுறியாகும். ஏன் குழந்தைகள் மற்றவர்களை சார்ந்து இருக்கிறார்கள் என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. இதில் முக்கியமானது, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எப்படி வளர்கிறார்கள் என்பது தான்!

குறிப்பாக, பெற்றோர்கள் செய்யும் இந்த நான்கு தவறுகள் தான் குழந்தைகள் அப்பா அம்மாவை சார்ந்தே இருக்கிறது. அவை என்னவென்று இங்கே பார்க்கலாம்.

குழந்தைகளை பொத்தி பொத்தி பாதுகாப்பது :

ஒரு அம்மாவாக அல்லது அப்பாவாக குழந்தைகளை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என்பது முக்கியம் தான்; ஆனால் குழந்தைக்கு எப்போதும் ஏதாவது ஆகிவிடுமோ, பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற அதீதமான ஒரு பாதுகாப்பு உணர்வு அவர்களை பொத்தி பொத்தி வளர்ப்பதாக முடியும். நீங்கள் அந்த அளவுக்கு ஓவர் ப்ரொடக்ட்திவாக இருக்கும் பொழுது, ஒரு சின்ன விஷயம் வேண்டும் என்றால் கூட குழந்தை உங்களைத்தான் தேடி வரும். தானாக எதையாவது கற்றுக் கொள்வதற்கோ அல்லது கடினமான சூழ்நிலைகளை கையாள்வதற்கு, முடிவு எடுப்பதற்கு குழந்தைக்கு தெரியாமல் போகும்.

News18

அத்தகைய சூழ்நிலையில் நேரடியாக உங்களிடம் ஓடிவந்து என்ன செய்வது என்று குழந்தைகள் கேட்கும். அதுமட்டுமில்லாமல், இது என்ன ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டால் அது என்ன என்று புரிந்து கொள்வதற்குள்ளேயே பெற்றோரிடம் ஓடி வந்து அழத் துவங்கி விடுவார்கள். எந்த விஷயமாக இருந்தாலும் சரி, ஆதரவாக, துணையாக பெற்றோர் இருப்பது மிகவும் நல்லதாக இருந்தாலும், குழந்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களுடைய பிரச்சனைகள், தங்களுடைய சூழலை தானாகவே கையாள வேண்டும் என்பதை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.

எல்லைகள் இல்லாமல் போவது :

எல்லா விஷயத்திற்கும் எல்லா உறவுகளுக்குமே எல்லைகள் தேவை. இந்த எல்லையைத் தாண்டி மற்றவருடைய விஷயங்களில் தானாக தலையிடக் கூடாது என்பது மிகவும் முக்கியம். அந்த விதத்தில், பெற்றோர்கள் பலவீனமான எல்லைகளை வைத்திருக்கும் பொழுது குழந்தைகள் தங்களை தாங்களே வளர்த்துக் கொள்ள மிகவும் சிரமப்படுவார்கள்.

உதாரணமாக, குழந்தைகள் செய்ய வேண்டிய சின்ன விஷயத்தை கூட, ‘நீ இதை செய்ய வேண்டும், என்னிடம் கொடுக்கக் கூடாது’ என்று ஒரு வரைமுறை இல்லாமல் பெற்றோர்கள் எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கும் பொழுது அது சுயமாக குழந்தைகள் இயங்குவதற்கு மிகப்பெரிய தடையாக அமைகிறது! எனவே பெற்றோரைச் சார்ந்து தான் ஒரு குழந்தை முழுக்க முழுக்க இயங்கும்.

குழந்தை பெற்றோரின் ஒப்புதலையும் அங்கீகரிப்பையும் எப்போதும் எதிர்பார்க்கும் :  

குழந்தைகளை பாராட்டுவது அவசியம் தான்! குழந்தைகள் சின்ன சின்ன விஷயங்களை முயற்சி செய்தால் கூட நிச்சயமாக அவர்களை பாராட்ட வேண்டும், அது அவர்களுக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமையும். ஆனால், குழந்தைகள் தாமாக வந்து தான் செய்யும் ஒவ்வொரு விஷயமும் சரியா இது அம்மாவுக்கு ஓகே வா, அப்பாவிற்கு இது சரியாக இருக்கிறதா என்று அங்கீகாரமும் ஒப்புதலும் கேட்கும் பொழுது அம்மா அப்பாவை சார்ந்து இருக்கும் நிலையை ஏற்படுத்தும்.

அவர்களைக் கேட்காமல் எந்த ஒரு விஷயத்தையுமே குழந்தைகளால் செய்யவே முடியாது என்ற ஒரு நிலை ஏற்பட்டு விடும். இது அவர்களுடைய தன்னம்பிக்கையை மிகப்பெரிய அளவில் பாதித்து, தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்தாது. குழந்தைகள் நன்றாக ரேன்க் வாங்கவில்லை, போட்டியில் வெற்றி பெற வில்லை அல்லது அவர்களுக்கு பிடித்ததை கூட அவர்களால் சரியாக செய்ய முடியவில்லை என்றால் அது பெரிய விஷயம் இல்லை என்பதை குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும்.

News18

சார்ந்து இருப்பதை கவனிக்காமல் இருப்பது:

ஏதாவது ஒரு சிக்கல் நடக்கும் பொழுது அல்லது வீட்டில் சூழல் சரியில்லாதபோது குழந்தைகள் பெற்றோரை சார்ந்தே இருப்பது இயல்பானதுதான். அதேபோல குழந்தைக்கு உடல் நல பிரச்சனை இருந்தால் அம்மாவிடம் தான் முழுவதுமாக இருக்கும்; சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட அம்மாவிடம் அனுமதி கேட்கும். ஆனால் பொதுவாக எல்லாவற்றுக்குமே இதுபோல பெற்றோரின் அனுமதியை, அவர்களை சார்ந்து நடப்பதை பெற்றோர்கள் கவனித்தாலும் குழந்தைதானே அதற்கு என்ன தெரிந்துவிடப் போகிறது என்று அதனை இயல்பாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

பெற்றோர்கள் அந்த குறிப்பிட்ட சூழலை சரியாக புரிந்து கொள்ள முடியாமல் அல்லது தாமதப்படுத்துவதால், குழந்தைகள் அதையே வழக்கமாக்கிக் கொள்கிறார்கள். இது குழந்தைகளின் ஆளுமைத்தன்மையை பெரிதாக பாதிக்கிறது. எந்த அளவுக்கு சார்ந்து இருப்பது நல்லது, எவற்றிலெல்லாம் குழந்தைகள் தனியாக இயங்க வேண்டும் என்பதை பெற்றோர்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் குழந்தை நல மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறலாம்.

இதை எப்படி சரி செய்யலாம்?

  1. குழந்தைகள் தன்னிச்சையாக இயங்குவதை பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும்

  2. அந்தந்த வயது சார்ந்த முடிவுகளை குழந்தைகள் எடுக்க அனுமதிக்க வேண்டும்

  3. குழந்தைகளுக்கான எல்லைகளை வரையறுக்க வேண்டும்

  4. குழந்தை சுயமாகக் கற்றுக்கொள்ள வாய்ப்புகள் வழங்க வேண்டும்

  5. வெளிப்புற பாராட்டுக்கள் மட்டுமல்லாமல், குழந்தை சுயத்தை வளர்க்க உதவி செய்ய வேண்டும்

News18

இதை சரி செய்யவில்லை என்றால் என்னென்ன பிரச்சனைகள் ஏறபடும்?

  • உணர்வு ரீதியாக தான் என்ன நினைக்கிறோம், உணர்கிறோம் என்பது சரியா தவறா என்று அனுமதி கேட்பார்கள்

  • தனியாக எதையும் செய்யும் அல்லது முடிவெடுக்கும் திறனை இழப்பார்கள்

  • யாரும் இல்லாமை இவர்களால் எந்த வேலையையும் செய்ய முடியாது

  • தன்னம்பிக்கை மிகவும் குறைவாகும்

  • நிராகரிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது

  • தனக்கென்று அடையாளம் இல்லாமல் போகும்