Search

குளிர்காலம் வந்தாலே பல் வலியும் வருமே.. இதை செய்யுங்க வலி வராம தடுக்கலாம்!

 

குளிர்காலம் வந்தாலே அழையா விருந்தாளியா பல் வலியும் வந்திடுமே என்று நினைப்பவர்கள் பல் வலி வராமல் தடுக்க கட்டுப்படுத்த என்ன செய்யலாம் என்பதற்கான குறிப்புகளை பார்க்கலாம்.


குளிர்காலத்தில் இயல்பாகவே வெப்பநிலை குறைவதால் பற்களில் விரிசல் அல்லது பல் உணர்திறன் அதாவது பல் கூச்சம் போன்ற பிரச்சனைகள் வரலாம். அதிலும் பல் வலியை அவ்வபோது அனுபவித்து வந்தவர்களுக்கு குளிர்காலம் முடியும் வரை பற்கள் உபாதையை உண்டு செய்யும். குளிர்காலத்தில் பல் வலியை தவிர்க்க சில முன்னெச்சரிக்கை குறிப்புகள் உங்களுக்கு உதவும். அது என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

அதிக தண்ணீர் குடிப்பது பல் வலியை தடுக்குமா?

அதிகமாக தண்ணீர் குடிப்பது உண்மையில் குளிர்காலத்தில் பற்கள் பராமரிப்புக்கு சிறந்த வழியாக இருக்கும். நாள் முழுவதும் திரவம் எடுத்துகொள்வது வாயை ஈரமாக வைத்திருக்க உதவுகிறது. இது வெடிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும் வறட்சியை போக்கும்.

காற்றில் ஈரப்பதம் குறைவாக இருக்கும் போது வாய் வறட்சி இருக்கும் நிலையில் அதிக தண்ணீர் குடிப்பது உமிழ்நீர் அதிகரித்து இயற்கையாகவே வாயை சுத்தப்படுத்த செய்யும். பல் சிதைவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை குறைக்கும். தினமும் 3 லிட்டர் தண்ணீர் வாய் பகுதியை சுத்தம் செய்ய உதவுகிறது.

பற்களை சரியான முறையில் துலக்குகிறீர்களா?


பற்களில் உணர்திறன் அதாவது கூச்ச உணர்வு இருந்தால் நீங்கள் பல் துலக்கும் முறை சரியாக உள்ளதா என்பதை கவனியுங்கள். குளிர்காலத்தில் பல் துலக்கும் பிரஷ் மென்மையானதாக இருக்கட்டும். ஈறுகளை சுற்றி பற்களை மென்மையாக துலக்கவும். பல் தேய்க்க இயற்கை பற்பொடிகள் பயன்படுத்துவது பல் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அல்லது பொட்டாசியம் நைட்ரேட் மற்றும் ஸ்ட்ரோண்டியம் குளோரைடு கொண்ட பற்பசைகள் வலியை தடுக்கும். பல் வலி கொண்டிருப்பவர்கள் பல் மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் பற்பசை தேர்வு செய்யலாம்.

​குளிர்காலத்தில் பற்களுக்கு ஃப்ளோசிங் செய்யலாமா?​

பற்கள் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருக்க பற்களை காலை மாலை என இரண்டு வேளை துலக்குங்கள். நாள் ஒன்றுக்கு ஒருமுறை ஃப்ளோஸ் செய்யுங்கள். ஃப்ளோஸ் செய்வது வாயிலிருந்து பாக்டீரியா மற்றும் ப்ளேக் கட்டி அகற்ற செய்யும். இதனால் பல் சிதைவு மற்றும் பல் சேதம் தடுக்கப்படும்.

​குளிர்காலத்தில் இனிப்பு கட்டுப்படுத்த வேண்டும் ஏன் தெரியுமா?​


சர்க்கரை உட்கொள்வதை கண்டிப்பாக கட்டுப்படுத்த வேண்டும். குளிர்காலத்தில் டீ அல்லது காஃபி போன்ற சூடான பானங்கள் சுவையை கூட்டும். ஆனால் அதில் சர்க்கரை அளவை கண்காணிக்க வேண்டும். ஈறு அழற்சி மற்றும் ஈறு நோயை உண்டு செய்ய இதில் உள்ள சர்க்கரை கூட போதுமானது. ஏனெனில் சர்க்கரை சிறிய பாக்டீரியாக்களை ஈர்க்கிறது. வாய் ஆரோக்கியத்தை பராமரிக்க அதிகப்படியான சர்க்கரை, இனிப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும்

​அமிலம் நிறைந்த உணவுகள் மற்றும் திரவ பானங்கள் குளிர்காலத்தில் தவிர்க்க வேண்டும்​

அமில உணவுகள் மற்றும் பானங்கள் பற்களின் வெளிப்புற அடுக்கை (எனாமல்) மென்மையாக்குகின்றன. இதனால் பல் சிதைவு மற்றும் அரிப்புக்கு ஆளாகின்றன. அமிலம் நிறைந்த உணாவை கட்டுப்படுத்துவது அவசியம் என்பதோடு அமில உணவுகள் எடுத்துகொண்டால் உடனடியாக தண்ணீர் அல்லது மவுத்வாஷ் மூலம் வாய் கொப்புளிப்பது பல் பாதிப்பை தடுக்க செய்யும்.

குளிர்காலத்தில் வாய்ப்புண்கள் வந்தால் அலட்சியம் வேண்டாம்

குளிர்காலத்தில் ஹெர்பஸ் என்னும் புண்கள் அதிகரிக்க வாய்ப்புண்டு. அதை தவிர்க்க உதடுகளை ஈரப்பதத்துடன் வைத்திருங்கள். லிப் பாம் பயன்படுத்தலாம். குளிர் புண்களின் அபாயத்தை குறைக்க, சளி மற்றும் இருமல் வரும்போதே உரியசிகிச்சை எடுத்துவிடுவது இந்த வாய்ப்புண் உருவாவதை தடுக்கும்.

​குளிர்காலத்தில் பல் ஆரோக்கியம் பரிசோதனை அவசியமா?​

வருடந்தோறும் மருத்துவ பரிசோதனை செய்வது போன்று ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவமனைக்கு செல்வது அவசியம். பல் பிரச்சனைகள் இதய நோய், நீரிழிவு குறிப்பாக ஈறுநோய்களை உருவாக்கும் அபாயத்தை கொண்டுள்ளன. மேலும் பற்களில் சொத்தை, ஈறுகளில் வீக்கம், பற்களில் இரத்தக்கசிவு போன்ற பிரச்சனைக்கு ஆளாகுபவர்கள் குளிர்காலம் தொடங்குவதற்கு முன்பே பல் மருத்துவரை அணுகுவது பாதுகாப்பானது.



IIITDM காஞ்சிபுரம் நிறுவனத்தில் ரூ.35,000/- மாத ஊதியத்தில் வேலை – விரைந்து விண்ணப்பியுங்கள்!

 

IIITDM காஞ்சிபுரம் நிறுவனத்தில் ரூ.35,000/- மாத ஊதியத்தில் வேலை – விரைந்து விண்ணப்பியுங்கள்!

காஞ்சிபுரம் மாவட்ட இந்திய தகவல் தொழில்நுட்பம், வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனத்தில் (IIITDM Kancheepuram) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் Junior Research Fellow பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

IIITDM காலிப்பணியிடங்கள்:

Junior Research Fellow பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே IIITDM Kancheepuram நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Junior Research Fellow கல்வி:

CSE, ECE பாடப்பிரிவில் BE, B.Tech, ME, M.Tech டிகிரியை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் முடித்தவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கு என ஏற்றுக் கொள்ளப்படும்.

Junior Research Fellow வயது:

இந்த IIITDM Kancheepuram நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 30 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.

Junior Research Fellow சம்பளம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.31,000/- முதல் ரூ.35,000/- வரை மாத சம்பளமாக தரப்படும்.

IIITDM தேர்வு செய்யும் விதம்:

Junior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

IIITDM விண்ணப்பிக்கும் விதம்:

இந்த IIITDM Kancheepuram நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் 01.12.2023 அன்றுக்குள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் உள்ள Google Form-யை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification Link
Online Application Form Link

ரூ.55,000/- மாத ஊதியத்தில் தமிழக அரசு வேலை – டிகிரி முடித்தவர்கள் விரைந்து விண்ணப்பியுங்கள்!

 

ரூ.55,000/- மாத ஊதியத்தில் தமிழக அரசு வேலை – டிகிரி முடித்தவர்கள் விரைந்து விண்ணப்பியுங்கள்!

வட்டார ஒருங்கிணைப்பாளர் (Aspirational Block Fellow) பணிக்கு என சிவகங்கை மாவட்ட திருப்பத்தூர் வட்டாரத்தில் இலட்சிய இலக்கு வட்டார திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.55,000/- ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தமிழக அரசு பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, Aspirational Block Fellow பணிக்கு என 01 பணியிடம் மட்டுமே சிவகங்கை மாவட்ட District Planning Office-ல் காலியாக உள்ளது.

Aspirational Block Fellow கல்வி தகுதி:

Aspirational Block Fellow பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் / கல்லூரிகளில் ஏதேனும் ஒரு Post Graduate Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Aspirational Block Fellow வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

Aspirational Block Fellow மாத சம்பளம்:

Aspirational Block Fellow பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.55,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

Aspirational Block Fellow தேர்வு முறை:

இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Aspirational Block Fellow விண்ணப்பிக்கும் முறை:

Aspirational Block Fellow பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலுடன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்ட திட்ட அலுவலக முகவரிக்கு 04.12.2023 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.

Download Notification Link
Download Application Form Link


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

புலனாய்வுப் பணியகத்தில் ACIO பணிக்கு 990+ காலியிடங்கள் – ரூ.1,42,400/- மாத ஊதியம் || டிகிரி தேர்ச்சி போதும்!

 

புலனாய்வுப் பணியகத்தில் ACIO பணிக்கு 990+ காலியிடங்கள் – ரூ.1,42,400/- மாத ஊதியம் || டிகிரி தேர்ச்சி போதும்!

புலனாய்வுப் பணியகம் (IB) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. Assistant Central Intelligence Officer II / Executive (ACIO-II / Executive) பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 995 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் 25.11.2023 அன்று முதல் ஆன்லைன் மூலம் பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புலனாய்வுப் பணியக பணியிடங்கள்:

Assistant Central Intelligence Officer II / Executive (ACIO-II / Executive) பணிக்கு என 995 பணியிடங்கள் புலனாய்வுப் பணியகத்தில் (IB) காலியாக உள்ளது.

ACIO-II / Executive 2023 கல்வி விவரம்:

இந்த புலனாய்வுப் பணியகம் சார்ந்த பணிக்கு அரசு / அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ACIO-II / Executive 2023 வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயது முதல் 27 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

ACIO-II / Executive 2023 வயது தளர்வுகள்:
  • SC / ST – 05 ஆண்டுகள்
  • OBC – 03 ஆண்டுகள்
ACIO-II / Executive 2023 ஊதிய விவரம்:

ACIO-II / Executive பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் Level – 07 படி, ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

Intelligence Bureau தேர்வு செய்யும் முறை:

இந்த புலனாய்வுப் பணியகம் சார்ந்த பணிக்கு தகுதியான நபர்கள் Written Test (Tier – I / II), Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intelligence Bureau விண்ணப்ப கட்டணம்:
  • UR / Male / EWS / OBC – ரூ.550/-
  • மற்ற நபர்கள் – ரூ.100/-
Intelligence Bureau விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே 25.11.2023 அன்று முதல் 15.12.2023 அன்று வரை https://www.mha.gov.in/ அல்லது https://www.ncs.gov.in/ என்ற இணையதள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification Link
Online Application Link


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ICMR நிறுவனத்தில் Degree தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை – சம்பளம்: ரூ.56,000/-

 

ICMR நிறுவனத்தில் Degree தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை – சம்பளம்: ரூ.56,000/-

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் (ICMR) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Project Research Scientist-I பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ICMR காலிப்பணியிடங்கள்:

ICMR நிறுவனத்தில் காலியாக உள்ள Project Research Scientist-I பணிக்கு என 03 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Project Research Scientist-I கல்வி:

இப்பணிக்கு பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, Graduate Degree, Post Graduate Degree ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி / பல்கலைக்கழகங்களில் முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

Project Research Scientist-I வயது:

Project Research Scientist-I பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பானது அதிகபட்சம் 35 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Project Research Scientist-I ஊதியம்:

இந்த ICMR நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.56,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

ICMR தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து secretariat.ncaht@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் (7.12.2023) அனுப்ப வேண்டும்.

Download Notification Link
Download Application Form Link


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

Tangedco வின் புதிய செயலி அறிமுகம் – டிச. முதல் அமல்!

 

Tangedco வின் புதிய செயலி அறிமுகம் – டிச. முதல் அமல்!

தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் ஓய்வூதியதாரர்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்காக புதிய செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய செயலி அறிமுகம்:

ஓய்வூதியம் பெறும் நபர்கள் ஆண்டுதோறும் தங்கள் வாழ்க்கைச் சான்றிதழை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும். இந்த ஆவணத்தை சமர்ப்பிப்பதன் மூலமாக ஓய்வூதியதாரர் உயிருடன் உள்ளார் என்பதையும் இதில் முறைகேடுகள் ஏதும் நடைபெறவில்லை என்பதும் உறுதிப்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் மென்பொருள் பொறியாளர்கள் தற்போது வாழ்க்கை சான்றிதழை சமர்ப்பிப்பதற்காக ஓய்வூதியதாரர்களுக்கு புதிய செயலி ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

இதன் மூலமாக ஓய்வூதியதாரர்கள் ஆவணங்களை நேரடியாக சென்று வழங்க வேண்டிய அவசியம் இல்லை. மொபைல் செயலி மூலமாகவே தங்களது வாழ்க்கை சான்றிதழ்களை சமர்ப்பித்து கொள்ளலாம். இதற்கான மொபைல் செயலி வரும் டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பயோமெட்ரிக் முறை மூலம் ஓய்வூதியதாரர்கள் தங்களின் விவரங்களை அங்கீகரிக்க வேண்டும்.

🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news


MISSION I'MPOSSIBLE | Day 10 | Chemistry | Elements & Compounds | Part 1 |

 

MISSION I'MPOSSIBLE | Day 10 | Chemistry | Elements & Compounds | Part 1 | 

Click here to download pdf file




MISSION I'MPOSSIBLE | Day 10 | Early Uprising against British Rule | Part 1 | INM |

 MISSION I'MPOSSIBLE | Day 10 | Early Uprising against British Rule | Part 1 | INM |


Click her to download pdf file




MISSION I'MPOSSIBLE | Day 10 | பொதுத்தமிழ் | எழுத்து இலக்கணம் | பகுதி 2 |

 MISSION I'MPOSSIBLE | Day 10 | பொதுத்தமிழ் | எழுத்து இலக்கணம் | பகுதி 2 |

Click here to download pdf file








மத்திய அரசின் THDC நிறுவனத்தில் ரூ.3,40,000/- சம்பளத்தில் வேலை – விரைந்து விண்ணப்பியுங்கள்!

 

மத்திய அரசின் THDC நிறுவனத்தில் ரூ.3,40,000/- சம்பளத்தில் வேலை – விரைந்து விண்ணப்பியுங்கள்!

PESB நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் THDC India Limited-ல் காலியாக உள்ள Director (Finance) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

THDC India Limited காலிப்பணியிடங்கள்:

Director (Finance) பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் THDC India Limited-ல் காலியாக உள்ளது.

Director (Finance) கல்வி விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் CA, MBA, PGDM தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.

Director (Finance) வயது விவரம்:

இந்த THDC நிறுவனம் சார்ந்த பணிக்கு 45 வயது பூர்த்தி அடையாத நபர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Director (Finance) சம்பள விவரம்:

Director (Finance) பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.1,80,000/- முதல் ரூ.3,40,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.


THDC India Limited தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

THDC India Limited விண்ணப்பிக்கும் முறை:
  • இந்த THDC நிறுவனம் சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.
  • 21.11.2023 என்ற கடைசி நாளுக்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
Download Notification Link



🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

சென்னை NIEPMD நிறுவனத்தில் ரூ.20,000/- சம்பளத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே!

 

சென்னை NIEPMD நிறுவனத்தில் ரூ.20,000/- சம்பளத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே!

NIEPMD நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை இன்று (21.11.2023) வெளியிட்டுள்ளது. Special Teacher பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.20,000/- ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு ஆவலுடன் உள்ள நபர்கள் இப்பணிக்கான Walk-in Interview-ல் கலந்து கொண்டு கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


NIEPMD பணியிடங்கள்:

NIEPMD நிறுவனத்தில் Special Teacher பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

Special Teacher கல்வி:

Special Teacher பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் D.Ed.SE, B.Ed.SE ஆகிய பட்டங்களில் ஏதேனும் ஒன்றை பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Special Teacher வயது:

இந்த NIEPMD நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

Special Teacher சம்பளம்:

Special Teacher பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ஒரு வருகைக்கு ரூ.250/- வீதம் ஒரு மாதத்திற்கு ரூ.20,000/- சம்பளமாக பெறுவார்கள்.


NIEPMD தேர்வு செய்யும் விதம்:

இந்த NIEPMD நிறுவன பணிக்கு தகுதியான நபர்கள் 30.11.2023 அன்று காலை 11.00 மணிக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

NIEPMD விண்ணப்பிக்கும் விதம்:

Special Teacher பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தரப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification & Application Form Link


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

MISSION I'MPOSSIBLE | Day 9 | Percentage 2 | Profit & Loss, Discount, GST | Aptitude

MISSION I'MPOSSIBLE | Day 9 | Percentage 2 | Profit & Loss, Discount, GST | Aptitude 

Click here to download this studymaterial  

c


🔻🔻🔻


உணவில் கட்டாயம் சேர்க்கவேண்டியது இந்த வாழைப்பூ... ஏன் தெரியுமா ?

 வாழைப்பூவில் துவர்ப்புச் சத்து இருப்பது அனைவரும் அறிந்த விசையம் தான் அந்தத் துவர்ப்பைத் தண்ணீர் விட்டுப் பல தடவை கசக்கிப் பிழிந்து எடுத்து விடுகிறார்கள் நம்மில் பலர்.

துவர்ப்பு இருந்தால், சுவையிருக்காது என்று நினைத்து விடுகின்றனர்.

நம் உடலுக்கு நன்மையளிக்கும் பொருட்களில் வாழைப்பூவும் ஒன்றாகும். பெண்களின் கர்ப்பப்பைக்கு நல்ல பலமளிக்க இது உகந்தது. பூவினை ஆய்ந்து கள்ளனை எடுப்பது சற்று வேலை அதிகம் வாங்கும் சமாச்சாரம் என்றாலும் மாதத்தில் இரண்டு-மூன்று நாள்களாவது உணவில் இதை சேர்த்துக் கொண்டால் நல்லது

அந்தத் துவர்ப்பு இருந்தால் ஊட்டச் சத்து வீணாகாமல் உடம்புக்கு 'பி' விற்றமின் கிடைக்கிறது. பல வியாதிகளும் இதனால் நிவர்த்தி அடைகிறது என்பதே நிதர்சன உண்மை.

வாழைத் தண்டை பொரியல், கூட்டு, சாம்பாராகச் செய்து சாப்பிடுவது வரைக்கும் தான் நமக்குத் தெரியும். அது எந்த வகையில் நமக்கு மருந்தாக உதவுகிறது என்பதையும் தெரிந்து கொள்வோம். வாழைத் தண்டு குடலில் சிக்கிய மணல் கற்களை விடுவிக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரியும். மலச் சிக்கலைப் போக்கும். நரம்புச் சோர்வையும் நீக்கும். வாழைத் தண்டுச் சாற்றை இரண்டு அல்லது மூன்று அவுன்சு வீதம் தினமும் குடித்து வந்தால், வறட்டு இருமல் நீங்கும்...

* வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால், ரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, ரத்தம் வேகமாகச் செல்லும்.

*அதேபோல், கை, கால் எரிச்சலால் அவதிப்படுபவர்கள் வாழைப்பூவை இடித்து, அதனுடன் சிற்றாமணக்கு எண்ணெய் சேர்த்து வதக்கி எரிச்சல் உள்ள பகுதிகளில் ஒத்தடம் கொடுத்து வந்தால், குணம் கிடைக்கும். வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்து வந்தால், உடல் பலம் பெறும்.

* ரத்தநாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து ரத்தத்தை சுத்தப்படுத்தும். இதனால் ரத்தமானது அதிக ஆக்ஸிஜனை உட்கிரகித்து தேவையான இரும்பு சத்தையும் உட்கிரகிப்பதுடன், ரத்த அழுத்தம், ரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் காக்கும்.

* சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது. இதனால், ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது. மேலும், கணையம் வலிமை பெற்று உடலுக்கு தேவையான இன்சுலினை சுரக்கிறது.

* வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், வயிற்றுப்புண்கள் ஆறும்.செரிமானத்தன்மை அதிகரிக்கும். வாய்ப்புண், வாய் துர்நாற்றத்தை நீக்கும் ஆற்றலும் வாழைப் பூவிற்கு உண்டு.

* மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் ரத்தம் வெளியேறுதல், உள் மூலம், வெளிமூலப் புண்கள் இவற்றுக்கு சிறந்த மருந்தாக வாழைப் பூவைப் பயன்படுத்தலாம். வாழைப்பூ மூலக்கடுப்பு, ரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது.

*வாழைப்பூவின் உள்ளே இருக்கும் வெண்மையான பாகத்தைப் பாதியளவு எடுத்து நசுக்கிச் சாறு பிழிந்து, அதனுடன் சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்துக் கொதிக்க வைத்து, அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால், ரத்தப்போக்கு கட்டுப்படும். அதோடு, உடல் அசதி, வயிற்றுவலி, சூதக வலி குறையும். நாளடைவில் மறையும்.

* வாழைப் பூவிற்கு மலச்சிக்கலைப் போக்கும் தன்மையுள்ளது. சீதபேதியையும் கட்டுப்படுத்தும்.

* பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள், மாதவிலக்கு காலங்களில் அதிக ரத்தப்போக்கு அல்லது ரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் மாதவிடாய் பிரச்னைகள் விரைவில் குணமாகும்.

* வாழைப்பூவை சாப்பிட்டு வந்தால் கண் ஆரோக்கியம் மேம்படும். ஏனெனில் வாழைப்பூவில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது விழிப்படலம், கருவிழி ஆகியவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, கண்களில் கண்புரை ஏற்படுவதை தடுக்கிறது.

* உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் வாழைப்பூவை சமைத்து சாப்பிடலாம். இதில் கொழுப்பு சத்து வளமான அளவில் இருப்பதால் இது ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.

'வாழையடி வாழையாக வாழ வேண்டும்' என்பது பழமொழி. நம் ஆயுளையும் வாழையடி வாழையாக அதிகரிக்கச் செய்யும் வாழைப்பூ நமக்கு கிடைத்த அதிசயமே!


🔻 🔻 🔻